Home Blog Page 108

ஜீன்ஸ் ,அரை டவுசர் அணிந்து கோவிலுக்கு வரக்கூடாதாம்??!! நிலைக்காத கட்டுப்பாடு !!! அறிவற்ற அடக்குமுறை???!!!

உயர் நீதி மன்ற நீதிபதி வைத்தியநாதன் கோவிலுக்கு வருபவர்களுக்கு கண்ணியமாக உடை உடுத்தும் படி நிபந்தனை விதிக்க அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தி இருந்தார்.
அதை பின்பற்றி இந்து சமய அறநிலையத் துறை அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கோவில்களில் ஜீன்ஸ், லெகின்ஸ்,குட்டைப்பாவாடை , மிடி போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என்று கூறியிருக்கிறது.

இது எந்த வகையில் செல்லுபடியாகும் என்று தெரியவில்லை.
பொதுவாக கேரளா கோவில்களில் ஆண்கள் மேலாடை அணிவதில்லை. கன்னியாகுமரி கோவில்களில் பேன்ட் அணிவது கூட அனுமதிக்கப் படுவதில்லை.
இந்த சம்பிரதாயங்களில் ஏதேனும் பொருள் இருக்கிறதா என்று எந்த பக்தனும் கேள்வி கேட்பதில்லை.

மேலே பா ஜ க இங்கே அ தி மு க இடையே இருக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு என்பது அடுத்த ஆண் டு வரும் பொதுத் தேர்தலில் தெரியும் என்றாலும் அதற்குள் பக்தர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என்பதே இப்போதைய மக்களின் எதிர்பார்ப்பு. ???!!

கோடிக்கணக்கில் செலவு செய்து சண்டி யாகம் நடத்தும் தெலுங்கான முதல்வர்? அரசியல் சட்டப்படி சரியா?

1500 புரோகிதர்கள் 500 உதவியாளர்கள் தினமும் ஐம்பதாயிரம் பேருக்கு உணவு என்று ஐந்து நாட்கள் சண்டி யாகத்தை நடத்துகிறார் தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர ராவ் .
எல்லாம் தன் சொந்த செலவு என்று சொன்னாலும் சுபிட்சம் வேண்டி அரசர்களை கொள்ளையடித்த கும்பல் இந்த காலத்திலும் இப்படி நம்ப வைத்து கொள்ளையடிக்கிரார்களே என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

பா ஜ க கூட தங்கள் யாகத்துக்கு எதிரிகள் இல்லை என்று சொல்லிவிட்டு தங்கள் எத்திர்ப்பை மட்டும் பதீவு செய்திருகிரர்கள்.

சி பி எம் மட்டும்தான் தங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்திருக் கிறார்கள்.
பக்தி ஆன்மிகம் எல்லாம் அவரவர் தனி உரிமை. ஆனால் பொது வாழ்வில் இருப்பவர்கள் அதுவும் பதவியில் இருக்கும்போது கோடிக்கணக்கில் செலவு செய்ய நேரும்போது அதிகார அத்து மீறல் குற்றசாட்டிற்கு ஆளாகி விடக்கூடாது.

ஜல்லிக்கட்டு நடக்க என்ன செய்ய வேண்டும்?

பொன் ராதாகிருஷ்ணன் ,மத்திய அமைச்சர் என்ற முறையில் எப்படியும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்று விடுவோம் என்று சொன்னதை வைத்து ஸ்டாலின் நடத்த இருந்த உண்ணாவிரதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதி மன்ற தீர்ப்பு 07.05.2014 ல் வந்த பிறகு சீராய்வு மனு செய்த தமிழக அரசு அதை விரைவு படுத்த ஏதும் செய்யாமல் மத்திய அரசை நோக்கி அவசர சட்டம் கொண்டு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. உச்சநீதி மன்ற தீர்ப்பு உச்ச பட்ச அபத்தம் . ஆனால் எல்லாரையும் கட்டுப் படுத்தும் என்பதால் அதை மாற்றினால் அல்லது திருத்தினால் தவிர ஜல்லிக்கட்டு நடத்துவது சிரமம்.

காட்சிபடுத்தும் விலங்குகள் பட்டியலில் சிங்கம், புலி கரடி யோடு காளையை சேர்த்த தால் தான் உச்சநீதி மன்றம் அப்படி ஒரு தீர்ப்பு சொல்ல வேண்டி வந்தது.
சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகார் ஜல்லிக்கட்டு நடத்த உறுதி அளித்துள்ளார்.

11.07.2011 தேதிய உத்தரவில் காளையை நீக்கிவிட்டால் போதுமா என்ற கேள்வி எழுகிறது. நிர்வாக உத்தரவு போதுமா என்ற கேள்வியும் எழுகிறது. சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்றால் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப் பட்ட நிலையில் அவசர சட்டம் வேண்டும் என்று மாநில அரசு கருதுகிறது.

உச்சநீதிமன்ற அவமதிப்பு வந்துவிடாமல் வேறு பார்த்து கொள்ள வேண்டும்..
மத்திய அரசு நிர்வாக உத்தரவு மூலம் காளையை காட்சிபடுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி விட்டு தமிழக அரசே பழைய தி மு க அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு நெறி முறைபடுத்தும் சட்டத்தை அவசர சட்டம் மூலம் கொண்டு வர முடியுமா என்றும் பார்க்க வேண்டும் .

தமிழர்களுக்கு என்று தனி பண்பாடு எதுவும் இல்லை என்று நிரூபிக்க ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல் படுகிறது.
எல்லா சதிகளும் ஒருபோதும் நிறைவேற போவதில்லை.
நாங்கள்தான் சாதித்தோம் என்று வாக்கு வாங்க
பா ஜ க திட்ட மிட்டாலும் சரி ஜல்லிக்கட்டு வரவேண்டும்.

வாட்ஸ் அப்பில் ஜெயலலிதா செய்த அலப்பறை??!!!

வெள்ள நிவாரணப் பணிகள் பற்றி ஜெயலலிதா பேசிய பேச்சு வாட்ஸ் அப்பில் பரவியது.
” தொடர் மழை ஏற்படுத்திய சேதங்களால் நினைத்து வருந்துகிறாராம். மக்களோடு எப்போதும் இருப்பாராம் ? மக்களை மீட்டு புது மலர்ச்சி அடையச் செய்வாராம் ? நிவாரணப் பணிகளை முழு வீச்சில் முடுக்கி விட்டிரிக்கிறாராம். மக்கள் துனபங்களை எல்லாம் இவரே சுமக்கிறாராம். தனி வாழ்க்கை கிடையாது உறவினர் கிடையாது .இல்லமும் உள்ளமும் தமிழகம்தானாம் ? எத்துயர் வரினும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்று முடித்திருக்கிறார்.

எல்லாவற்றையும் இழந்து பரிதவிக்கும் மக்கள் இந்த புலம்பலை கேட்டு மேலும் புண் பட்டுப் போயிருக்கிறார்கள்.
யாருக்கு வேண்டும் இந்த சுய புராணம்? யாரும் இல்லாமலா இத்தனை கோடி சொத்துக்களை குவித்தீர்கள்?
மூன்று முறை நீதி மன்றத்தால் தண்டிக்கப் பட்டும் இன்னும் மக்களை ஏமாற்ற முடியும் என்று நம்புகிறாரே என்ற கோபத்தைத்தவிர இந்த அறிக்கையால் யாரும் சமாதானம் அடையப் போவதில்லை.

நிவாரண நிதியை தவறாக பயன் படுத்தி அதிலும் கொள்ளை அடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியை தவறான முறையில் நிர்வகித்து நீரை தேவையில்லாமல் தேக்கியதால்தான் வெள்ள அபாயம் ஏற்பட்டது என்ற குற்றச் சாட்டு மக்கள் மனதில் நிலைத்து விட்டது.

உருப்படியான நிவாரண நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே மக்களை ஓரளவு சமாதானப் படுத்தலாம். இதுபோல் அலப்பறை அறிக்கைகள் கோபத்தை அதிகப் படுத்தவே செய்யும்.

தமிழிசையை கரகாட்டக்காரி என்று வர்ணித்து கேவலப்பட்ட இளங்கோவன்?!!!

ஏற்கனவே ஜெயலலிதா -மோடி சந்திப்பை ‘கள்ள உறவு’ என்று வர்ணித்து வாங்கிக் கட்டிகொண்டவர் ஈ வி கே எஸ் இளங்கோவன்.
தன் கட்சி எம் எல் ஏ விஜயதரனியையும் கேவலமாக பேசி காவல் துறை புகார் வரை போய் தலைமை தலையிட்டு வாபஸ் பெற வைத்தது.

இப்போது பா ஜ க தலைவர் தமிழிசையை ‘ ‘கரகாட்டக்காரி’ ‘பொய்க்கால்குதிரை ஆட்டக்காரி’ என்று பேசி மீண்டும் தன் வக்கிர புத்தியை காட்டியிருக்கிறார்.
எதிர்ப்பு வலுத்ததும் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
குமரிஅனந்தன் மகள் என்றாலும் வசந்தகுமார் ப சிதம்பரத்தோடு சென்று சோனியாவிடம் புகார் சொன்னதில் அவருக்கு வருத்தம் இருக்கலாம்.

அதற்காக சக தலைவர் என்ற உணர்வு கூட இல்லாமல் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்துவது தன்னையே தாழ்த்திக் கொண்ட கதையாகி விட்டது.
வயதில் குறைந்தாலும் தான் பண் பட்டவர் என்பதை நிருபித்த தமிழிசை பாராட்டத்தக்கவர் . பெண்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி இளங்கோவன் தலையில் குட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.
இளங்கோவன் இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும்.

…..ன்னிப் பயல்கள் சிம்புவுக்கும் அநிரிதுக்கும் சிறையில் பாட்டெழுதி இசையமைக்க வாய்ப்பு ???!!!!!

வெள்ளத்தில் மூழ்கி நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரம்!
வடக்கு தெற்கு என்றில்லாமல் நடிகர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பன்னிப்பயல்கள் சிம்புவும் அனிருதும் ஒரு ஆபாச பாட்டை வெளியிட்டு அது ஊர் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியும் அளவுக்கு போய்  இருக்கிறது. அநேகமாக கைது செய்யப் படலாம் அல்லது அவர்கள் முன்ஜாமீன் பெறலாம். யு டுபிலும் த்விட்டேரிலும் இவர்கள் செய்த நாசம் நாறிக்கொண்டிருக்கிறது.

விளைவு தெரியாமல் அவர்கள் நடந்திருப்பார்கள் என்று நினைக்கவே வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் தாங்கள் செய்யும் செயல் குற்றம் என்று தெரிந்தே செய்திருக்கிரர்கள்.
இது வெறும் ரிகர்சல்தான் வெளியீடு அல்ல என்றும் சொல்ல முடியாது.

என்னா ……..க்கு லவ் பண்றோம் ? என்ற பாடலில் இசையால் மறைக்கப் படும் வார்த்தையை நன்றாகவே கேட்க முடிகிறது. அந்த ஆபாச வார்த்தையை சாதாரணமாக வசை பாடும்போதோ சண்டையிலோ கீழ்த்தர மனிதர்கள் பயன் படுத்தும் நிலையை பார்க்கிறோம்.

ஆனால் அதை எழுத்து வடிவில் இசை வடிவில் சமூகத்தில் சாதாரணமாக ஆக்கிவிட வேண்டும் தமிழ் சமுதாயத்தில் இது வழக்கம்தான் என்று தரம் குறைக்க வேண்டும் என்ற சதி தெளிவாக தெரிகிறது. யார் சதி செய்தது யார் விழுந்தது என்பது விசாரணைக்கு உரியது.
டி ஆர் மகன் இப்படியா பெயர் வாங்க வேண்டும்?

தனுஷுக்கு போட்டியாக எதாவது செய்ய வேண்டும் என்றால்

” கொலவெறி’ மாதிரி யோசித்திருக்க வேண்டும். அதைவிட்டு குப்பையில் விழுந்து புரள வேண்டுமா?

குறைந்த பட்ச தண்டனை கூட இல்லாமல் இவர்கள் தப்பித்தால் நாளைக்கு இன்னொருவன் இதைவிட மோசமாக எழுதி இசையமைப்பான் ???!!!

சோனியா – ராகுல் காந்தி 2000 கோடி சொத்துக்களை அபகரித்தார்களா? சந்திக்கு வந்த நேஷனல் ஹெரால்டு மோசடி!

1937 ல் நேருவால் துவங்கப் பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. 2008 ல் நிறுத்தப்பட்டது. உரிமை அசொசியாட்டேட் ஜர்னல் , 2000 கோடி நிலங்கள் பல நகரங்களில். இதற்கு காங்கிரஸ் 90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது . இந்தக் கடன்களோடு சோனியாவும் ராகுலும் பெரும்பங்கு வகிக்கும் தனியார் டிரஸ்ட் ஆன யங் இந்தியன் வெறும் 50 லட்சம் கொடுத்து அசோ.ஜ.கம்பனியை வாங்குகிறது. அ.சொ. வுக்கு கொடுத்த 90 லட்ச ரூபாய் கடனை காங்கிரஸ் தள்ளுபடி செய்து விடுகிறது. ஆக வெறும் 50 லட்ச ரூபாய் செலவில் சோனியாவும் ராகுலும் 2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை த் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

இதில் ஏமாற்றப்பட்டது காங்கிரஸ் மற்றும் , பொதுத்துறை கம்பனியான அசோ.ஜ.வின் பங்குதார்கள்.

சுப்ரமணியன் சுவாமி தொடுத்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் போதிய முகாந்திரம் இருப்பதாக கூறி ஆஜராக உத்தரவிட்டிருப்பதுதான் பிரச்னை.

கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி எட்டுக்கும் மேற்பட்ட காரணங்களை கூறி அளித்த தீர்ப்புதான் காங்கிரசை எரிச்சலை அடைய வைத்திருக்கிறது.

உண்மையில் சம்பந்தப் பட்ட மூன்று பேருமே ,சோனியா ,ராகுல் கட்டுபாட்டில் இருப்பதுதான். அவர்கள் தங்களுக்கு தாங்களே இப்படி உரிமை மாற்றம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது. ?

சரி. இதற்கும் நாடாளுமன்றம் நடப்பதற்கும் என்ன சம்பந்தம்? காரணமே சொல்லாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் காங்கிரஸ் முடக்கி வைத்திருக்கிறது.

வெளிப்படையாக விவாதத்துக்கு வரவும் மறுக்கிறது காங்கிரஸ்.

சுப்ரமணியன் சுவாமி நல்லவறல்ல. ஆனால் அவர் எழுப்பிய பிரச்சினை என்பதால் பதில் சொல்ல மாட்டோம் விசாரணையை எதிர் கொள்ள மாட்டோம் என்பதும் ஜனநாயகத்துக்கு எதிரானது.

நான் இந்திரா மருமகள் – பயப்பட மாட்டேன் என்பதும் இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று எதிர் குற்றம் சாட்டுவதும் எந்த வகையிலும் பயனளிக்காது.
நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் நிரபராதித் தன்மையை இருவரும் நிரூபிக்கட்டும்.
சரக்கு வரி மசோதா நிறைவேற்றப் பட மோடி எடுத்த சுமுக நடவடிக்கைகள் பலன் தருவது சந்தேகமே???

ராகுல் பிரிட்டிஷ் பிரஜையா? சுப்ரமணியன் சுவாமி பொய் சொல்கிறாரா???

பிரிட்டனின் கம்பெனி சட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ராகுல் காந்தி தன்னை பிரிட்டிஷ் பிரஜை என்று குறி ப்பிட்டிருப்பதாக சுப்ரமணியன் சுவாமி ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்து அதனால் ராகுல் இந்திய அரசியல் சட்ட விதிகளை மீறி விட்டதாக குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பாக பிரதமருக்கு ஒரு புகார் கடிதத்தையும்
எழுதியிருக்கிறார்.

பிறந்தது முதல் ராகுல் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய குடிமகன் என்றும் குற்றச்சாட்டு முழுவதும் பொய் என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரண்டீப் சுர்ஜெவாலா மறுத்திருக்கிறார். .

இருவரில் யார் சொல்வது பொய்? பிரிட்டிஷ் ஆவணங்கள் பொய்யா? பொய் என்றால் அதை பயன்படுத்தி குற்றம் சுமத்திய சுப்ரமணியன் சுவாமி மீது என்ன நடவடிக்கை. ?

உண்மை என்றால் ராகுல் தரும் விளக்கம் என்ன? விளக்கம் சரி இல்லை என்றால் அவர் மீது என்ன நடவடிக்கை.?

ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவதும் குற்றம்! ஆதாரம் இருந்தால் விளக்கம் அளிக்காமல் தவிர்க்க அனுமதிப்பதும் குற்றம்?
இரண்டையும் கேட்டுக் கொண்டு பொதுமக்கள் விடை கிடைக்காமல் தவிப்பது ஜனநாயக கொடுமை??!!

கமலஹாசன்-ஒ பன்னீர்செல்வம் அறிக்கை போர் யாரை ஏமாற்ற?

பெருமழையால் மக்கள் படும் துயரங்கள் போதாது என்று கமலஹாசனும் ஒ பன்னீர்செல்வமும் அறிக்கை விட்டுக் கொண்டு பிரச்சினையை திசை திருப்ப முயற்சிப்பது படு கேவலம்?!

உங்களை புரிந்து கொள்ள முடியாதவர்களா பொதுமக்கள்.?

கமல்ஹாசன் யாரோ ஒரு பத்திரிகையாளருக்கு எழுதிய மின் அஞ்சல் தமிழாக்கம் செய்யப் பட்டு அதில் அவர் கட்டிய வரிப்பணம் என்ன ஆயிற்று என்று கேட்டதாக செய்தி வெளியானது.

கமல்ஹாசன் சொல்லியதும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் அல்ல. பொத்தாம்பொதுவாக புலம்பியிருந்தார். அதை வைத்து யாரையும் அவர் குற்றம் சாட்டுவதாக நினைக்க இடம் இல்லை.

தங்களைத்தான் குற்றம் சாட்டுகிறார் என்று அனுமானித்துக் கொண்டு ஒ பன்னீர்செல்வம் ஒன்றரை பக்க அறிக்கை வெளியிட்டு பரிதவிப்பில் இருக்கும் மக்களை இன்னும் குழப்பி விட்டு விட்டார்.

கருத்து கந்தசாமி , குழப்ப பிசாசின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறார் பிதற்றி இருக்கிறார் , தீய சக்திக்கு விலை பொய் விட்டார், மலிவான விளம்பரம் தேடுகிறார் ,பிதற்றல் மொழி பேசுகிறார் என்று கமலா ஹாசனை வறுத்து எடுத்ததுடன் கும்பகோணம் தீ விபத்தில் 12 லட்ச ரூபாய் நிதி அறிவித்து ஏமாற்றியதை போலவும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் நன்கொடை தருவதாக பொய் சொல்லியதை போலவும் குற்றச்சாட்டுகளை அடுக்கி ஒ பி எஸ் அறிக்கை வெளியிட்டார்.

சரண்டர் ஆன கமல் ஹாசன் நான் சொன்ன வார்த்தை யார் மனதையாவது புண் படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்க கடமை பட்டு இருக்கிறேன் என்று பின்வாங்கி விட்டார்.

பெரிதாக்க எண்ணிய ஒ பி எஸ் , தன் அறிக்கை புஸ்வாணம் ஆனதே என்று புலம்பி இருப்பார்.
எப்போதும் போல், படம் பண்ணுவது காசு பார்ப்பது என்று காரியமாற்றிக் கொண்டு இதர பிரச்சினைகளில் மெளனமாக இருப்பதே கமலுக்கு நல்லது.

அல்லது தனக்கு வாரிசாக கமல் வரட்டுமே என்று ஜெயலலிதா நினைத்திருப்பாரா?
ஏனென்றால் எதிர் முகாமிலும் தங்கள் ஆட்களை நிறுத்துவதுதானே அவர்கள் வழக்கம்.

விடுதலை செய்யப்பட்ட செவிட்டூமைக்கு இறந்தபின் தண்டனை கொடுத்த உச்சநீதி மன்றம்??!!!

உச்சநீதி மன்றத்தில் நியாயம் கிடைக்குமா என்ற கேள்வியை சமீபத்தில் அதன் தீர்ப்பு எழுப்பியிருக்கிறது .

2006 ல் வாய்பேசாத காது கேட்காத ஒருவன் மீது ஒரு மைனர் பெண்ணை கற்பழித்ததாக புகார். அடையாள அணிவகுப்பு நடத்த வில்லை மற்றும் சந்தேகத்தின் பலன் அடிப்படையில் விசாரணை நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் அவனை விடுதலை செய்கின்றனர். .உச்சநீதிமன்றம் போனார் மைனர் பெண்.

” விசாரித்த ” உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளையும் 10.04.2015 அன்று ரத்து செய்து விட்டு அவனுக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை அளித்தது.

தண்டனையை நிறைவேற்ற சென்ற போலீஸ் அவன் 2012 லேயே அவனது சகோதரனாலேயே கொலை செய்யப் பட்டு விட்டதை உச்சநீதிமன்றத்துக்கு அறிக்கையாக அனுப்பியது.

அறிக்கையை பெற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் தனது தவறை உணர்ந்து தனது தீர்ப்பை திரும்ப பெற்றுக்கொண்டு வழக்கு காலாவதி ஆகி விட்டதாக ( abated ) அறிவித்தது.

அறிவித்த அமர்வில் நீதிபதிகள் பி சி கோஷ் மற்றும் ஆர் கே அகர்வால் இருந்தனர்.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேன்முறையீட்டு வழக்கில் இவர்கள் இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.