Home Blog Page 109

ஏழை ரஜினி பத்து லட்சம் கொடுத்தா நூறு கோடியா பாவிக்கும் ரசிகர்கள்?!

ராகவா லாரன்சும் முத்தையா முரளிதரனும் தலா ஒரு கோடி, டோனி 75 லட்சம் சுரேஷ் ரைனா 50 லட்சம் அல்லு அர்ஜுனும் சூர்யாவும் 25 லட்சம் , தெலுகு நட்சத்திரங்கள் பிரபாஸ் நம்ம தனுஷ் ,விஷால் ,சிவகார்த்திகேயன் விக்ரம் பிரபு சத்யராஜ் சானியா மிர்சா , என்று பலரும் 15 முதல் 2 லட்சம் வரை மழை நிவாரண நிதி கொடுத்திருக்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் 10 லட்சம் கொடுத்து தனது நன்றியை வெளிப் படுத் தியிருக் கிறார். .

நம்ம ஜெயலலிதா முதல்வரா இருக்கிற நிலையில் நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று அத்தனை முதலாளிகளும் சேர்ந்து வந்து முதல் நாளிலேயே 22 கோடி கொண்டு வந்து கொடுத்து அசத்தி இருக்கிறர்கள்.
ஒருவரது நன்கொடையை வைத்து மட்டுமே அவரது குணத்தை மதிப்பிட்டு விட முடியாது .

கொடுத்தவர்கள் எல்லாரும் கொடுக்காதவர்களை விட மேலானவர்கள் என்றும் பொருள் அல்ல.

ரஜினி திருமண மண்டபத்தில் பாதிக்கப் பட்டவர்களை தங்க வைத்து பராமரித்து ஐந்து கோடி பெறுமான பொருள்களை விநியோகம் செய்ததாக வரும் தகவல்கள் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த செய்தி எல்லாம் ரஜினி மீது தமிழ் மக்கள் கொண்ட நேசத்தை தக்க வைக்கும் என்று நம்புவோமாக.

ஜெயலலிதாவுக்கு தண்ணில கண்டம் ! ( டாஸ்மாக் /பேய்மழை )

ஜெயலலிதாவுக்கு தண்ணீர் ராசி உண்டு என்று அவரே சொன்னதாக தினத்தந்தி தலையங்கம் எழுதியிருக்கிறது.
லட்சோப லட்சம் தொண்டர்கள் ‘அம்மா ‘ என்று கொண்டாடும் ஜெயலலிதா ஆயிரம் தவறுகளை செய்து விட்டு கோடிகளை குவித்து வைத்துக் கொண்டு, “இத்தனையும் யாருக்காக” என்ற ஒரே கேள்வியை கேட்டு , தப்பித்துக் கொண்டிருக்கிறார்.

சசிகலாவும் இளவரசியும் ரத்த பந்தம் உள்ளவர்கள் அல்ல என்பதால் , பிராமணர்கள் அல்ல என்பதால் , இதில் ஜெயலலிதாவின் சுயநலன் என்பது குடும்பம் சம்பந்தப் பட்டது அல்ல அவரது தனிப்பட்ட நலன் மட்டுமே என்பது தொண்டர்களின் முடிவு.

ஆனால் பொதுமக்களின் முடிவு மெல்ல மெல்ல மாறிவருகிறது.
டாஸ்மாக் வருமானம் 30 000 கோடி தான் எல்லா இலவசங்களுக்கும் தாய் என்பதோடு அதில் மிடாஸ் கம்பெனிக்கு
கிடைக்கும் கோடிகள் அடுத்த தேர்தலை வெல்ல தாராளமாக போதும் என்ற கணக்கு ஜெயலலிதாவுக்கு அசாதாரணமான துணிச்சலை கொடுத்திருக்கிறது. .

எல்லா கணக்குகளையும் மீறி டாஸ்மாக் ஜெயலலிதாவுக்கு அடுத்த தேர்தலில் தோல்வியைத் தான் தரும் என்பது பல கள ஆய்வுகளில் தெரிய வருகிறது.

அதேபோல் நூறாண்டுக்கு ஒருமுறை வந்த பேய்மழை தேர்தல் ஆண்டிலா வரவேண்டும்?
அரசின் புள்ளி விபரங்கள் பாதிக்கப் பட்டோறை திருப்திப்படுத்தும் என்பது நிச்சயமில்லா நிலை. மாநிலம் முழுதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாநூறை தாண்டும். மொத்த இழப்பு பல லட்சம் கோடிகள். எல்லா இழப்பையும் அரசு ஈடு கட்ட முடியாது. ஆனால் இழந்தவர்கள் அரசின் செயல்படா நிலையை எண்ணிப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.

அரசு யந்திரம் செயல் பட வில்லை என்பது நிச்சயம் அடுத்த தேர்தலில் ஒரு பிரச்னையாக உருவெடுக்கும். அரசுக்கு பாதிப்பு தான் என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
ஜெயலலிதாவுக்கு தண்ணி, கண்டமா ராசியா என்பதை தெரிந்து கொள்ள நாம் அடுத்த தேர்தல் முடிவு வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

மாவீரர் நாள்! தமிழர் நெஞ்சங்களில் வாழும் பிரபாகரன் வழியில் உரையாற்றும் நாள் வருமா?

ஆண்டிற்கொருமுறை உலக மக்களுக்கு மாவீரர் தினத்தன்று பிரபாகரன் உரையாற்றுவார்.
தெளிவான கொள்கை முழக்க உரையாக அது அமையும்
அவருக்கு உரிய மரியாதையை தமிழுலகம் தரவில்லையே என்ற ஏக்கம்தான் மேலிடுகிறது.
தமிழ்த்தாயின் தீர மகன்!
பொன் பொருள் பதவி செல்வம் சுற்றம் ஏதும் அவரது
விடுதலை வேட்கையை இறுதிவரை குலைத்ததில்லை .
அவரது படம் சுபாஷ் சந்திர போஸ் போன்று ஏன் அதைவிட மேலாக கூட எ ல்லா தமிழர் இல்லங்களையும் அலங்கரிக்க வேண்டும்.
வருங்கால தலைமுறைக்கு சமுதாயத்துக்கு உழைக்க வருகிறவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் வாழ்க்கையாகவே வாழ்ந்து காட்டி விட்டார்.
அவருடைய லட்சியம் என்பது இன்று உலகத்தமிழர்
லட்சியம்.
விவாதத்துக்கே இடமில்லாத வகையில் மரியாதைக்கு உரிய தமிழ்த்தாயின் தீர மகனுக்கு வீர வணக்கங்கள்.

அண்ணா கொண்டுவந்து அமுலில் இருக்கிற சுயமரியாதை திருமண முறைகளை செல்லாதது என அறிவிக்க கோரிய வழக்கு தள்ளுபடி??!!! ஆரிய ஆதிக்க திமிர் அடங்க மறுக்கிறது!!!

47 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் மட்டுமே சுயமரியாதை திருமண முறை சட்டப்படி அங்கீகரிக்க பட்டிருக்கிறது . அறிஞர் அண்ணா முதல்வராக பதவியேற்றவுடன் 1968 ல் இந்து திருமண சட்டத்தில் திருத்தம் செய்து சுயமரியாதை திருமணங்களை செல்லும் என்று அறிவித்தார்.

நாட்டில் எங்குமே இல்லாத அளவில் தமிழ் நாட்டில் மட்டும் இந்த சீர்திருத்தம் அமுலில் இருப்பது பார்ப்பனர்களை உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. அதனால்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் . அசுவத்தாமன் என்ற வக்கீல் மூலம் ஒரு பொது நல வழக்கு தொடுத்து ‘சப்தபதி போன்ற முக்கியமான சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் ஒரு அரசியல் கட்சியின் சித்தாந்தத்தை புகுத்த முடியாது என்றும் வாதிட்டார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சிவஞானம் கொண்ட அமர்வு இந்து மதமே பன்முகத்தன்மையை கொண்டது என்றும் அது காலம் காலமாக பலவிதமான சம்பிரதாயங்களை உள்ளடக்கிய திருமண முறைகளை ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறது என்றும் எனவே அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.

மனுப் போட்டவருக்கு கடுமையான அபராதம் விதித்து இருக்க வேண்டும்.
தந்தை பெரியார் பார்ப்பனர் முறை திருமணம் பற்றி மிக விளக்கமாக பேசியும் எழுதியும் வந்தார். சூத்திரர்களுக்கு திருமணம் செய்யும் உரிமை கிடையாது என்றும் மீறி செய்து கொண்டால் அவர்கள் வைப்பாட்டிகளாக இருக்கலாமே தவிர மனைவியாக இருக்க முடியாது என்று பார்ப்பனர் எழுதி வைத்திருந்ததை நிரூபித்தார்.
புரியாத மொழியில் சுலோகங்களை சொல்லி என்ன சொல்கிறார்கள் என்றே புரிய வைக்காமல் திருமணம் செய்யும் உரிமைக்காக தற்காலிகமாக பூணூல் அணிவித்து திருமணம் செய்வித்து யாரையும் சிந்திக்க விடாமல் தங்களது அடிமைகளாக வைத்திருந்த முறையை மாற்றி அண்ணா தமிழர்களை தன்மானமுள்ள வர்களாக மாற்றினார்.

இந்தியா முழுமைக்கும் இது போன்ற சட்டங்களை அமுல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு மெளனமாக இருப்பதால் பார்ப்பனர்களுக்கு இது உறுத்தலாக இருக்க வேண்டும். எனவேதான் இந்த வழக்கு.
தமிழ் முறைத் திருமணங்களில் இன்னும் திருத்தப் பட வேண்டியது ஏராளம். அதையும் ஒழிக்க வேண்டும் என்று இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் புறப்பட்டிருக் கிறார்களே அவர்களுக்கு இருக்கும் தைரியத்தை என்னவென்று சொல்வது. ?

ஜெயலலிதா தலைமைப் பொறுப்பில் இருப்பதால் இந்த முயற்சியா? எந்த மடம் இதன் பின்னணியில் இருக்கிறது. ?
சுயமரியாதைத் திருமண முறையை அகில இந்திய ரீதியில் இந்து திருமண சட்டத்தில் , தமிழகத்தில் அண்ணா காட்டிய வழியில் ,தகுந்த திருத்தம் கொண்டுவந்து அமுல் படுத்தினால்தான் இவர்கள் கொட்டம் அடங்கும்.

நல்லபெயரை கெடுத்துக்கொண்ட விஷால்!!! தமிழ் மக்களுடைய பிரச்னைகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் அவர்களிடம் வசூல் மட்டும் செய்வோம் என்று சொல்லும் துணிச்சல் எப்படி வந்தது. ???

விஷால் நல்ல நடிகர்.    நியாயத்துக்காக போராடும் குணம் படைத்தவர் என்பதால்தான் சங்க கட்டடத்தை ஊழல் ஒப்பந்தத்துக்கு உள்ளாக்கிய  சரத்-ராதாரவி தூக்கியெறியப் பட்டார்கள்.அவர் ரெட்டி என்பது எல்லாருக்கும் தெரியும்.   நடிகர்களுக்கு சாதி இல்லை மொழி இல்லை என்பதை தமிழர்கள் உணர்ந்ததால் ராதிகா அவரை சாதி சொல்லி திட்டியபோது யாரும் அவருக்கு ஆதரவாக இல்லை.வெற்றி பெற்றதும் நடிகர்களுக்கு நல்லது செய்ய அவர்கள் திட்டமிட்டு வருவது பாராட்டத் தக்கது.    ஆனால் விஷால் காவிரிப் பிரச்னைகெல்லாம் சங்கம் போராடாது என்று சொல்லியது எல்லாரையும் தவறு செய்து விட்டோமோ என்று சிந்திக்க வைத்து விட்டது. தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயரை மாற்றாமல் தொடர்ந்து தென்னிந்திய அடைமொழியோடு செயல்படுவது வெறுப்பையும் எதிர்மாறான விளைவுகளையும்தான் ஏற்படுத்தும் என்பதை எல்லா நிர்வாகிகளும் புரிந்து கொண்டால் நல்லது. யாரும் நடிகர்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் தலியிடவேண்டும் என்று எப்போதும் எதிர்பார்க்க மாட்டார்கள். அடிப்படை வாழ்வாதாரம் போன்ற உணர்வு மிக்க பிரச்சினைகள் பெரிதாகும்போது , அதில் எங்களுக்கு பங்கில்லை என்று அறிவித்தால் எதிர்மாறான விளைவுகள் உண்டாகும் என்பதை நடிகர் சங்கம் குறிப்பாக விஷால்  மனதில் கொண்டால் நல்லது. எனவே மொழி,  இனம் , வாழ்வாதாரம் போன்ற பிரச்சினைகளில் நடிகர்கள் எச்சரிக்கையுடன் பேசவேண்டும். நல்லது கெட்டதுகளில் எங்களுக்கு பங்கில்லை என்று யாரும் சொன்னால் உனக்கென்ன இங்கே வேலை என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

மதுவிலக்கு கோரி உண்ணா நோன்பிருந்து ஜெய்ப்பூரில் உயிர் துறந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். !!!! மதுவிலக்கு பற்றி பா ஜ கவினர் இனி எப்படி பேசுவார்கள்???

முன்னாள்  சட்ட மன்ற உறுப்பினர் குருஷரன் சாப்பிரியா என்ற  66 வயதுக்காரர் இரண்டு கோரிக்கைகைளை முன் வைத்தார். ஒன்று மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டும் இரண்டாவது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப படவேண்டும். 33  நாட்களுக்கு பிறகு அவரது உடல்நிலை சீர்கெட்டு சிகிச்சை பலன் இல்லாமல் உயிர்  இழந்திருக்கிறார். அந்த முதியவரின் போராட்டத்தை முடிவுக்கு  கொண்டு வர மாநில அரசு எந்த உறுப்படியான நடவடிக்கையும் எடுக்க வில்லை. அவரது மகன் சொல்லும்போது மாநில அரசு கொஞ்சம் உணர்வு பூர்வமாக நடந்திருந்தால் என் தந்தை இறந்திருக்க மாட்டார் என்று சொல்கிறார். மதுவிலக்கு அமுல் படுதுத்துகிரார்களோ இல்லையோ மனிதாபிமானம் கூடவா இல்லாமல் போய் விட்டது.??? பா ஜ க அரசின் உண்மை முகம் இதுதானோ?

ஜல்லிக்கட்டு தடை நீங்குமா? பா ஜ க சட்டத் திருத்தம் கொண்டு வருமா அல்லது நாடகமாடி கைவிடுமா?

16TH_JALLIKATTU7_894661gசென்னை வந்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்ற ஜுன் மாதம் 17  ம் தேதி சட்டத் திருத்தம் கொண்டு வந்தாவது தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று உறுதி கூறினார்.    இதுவரையில் எந்த நடவடிக்கையும் காணோம்.    தை மாதம் வரப போகிறது.   உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு கூடாது என்று தடை விதித்த போது அதற்கு காரணம் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில்  ‘ காளை ‘ என்பது காட்சிப் படுத்தப் படக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்ததுதான்.       அது இருக்கும் வரை தடை இருந்துதான் தீரும். ஒரே வழி பட்டியலில் இருந்து காளைகளை நீக்குவதுதான்.            செய்யும் மனம் இருந்தால் இதற்குள் சட்ட திருத்தம் கொண்டு வந்திருக்கலாமே?   அதை செய்யாமல்  உச்ச நீதிமன்றம் செல்வதிலும் பயன் ஏதும் இல்லை.         எந்த ஜல்லிகட்டிலும் காளைகள் இறந்ததாக வரலாறு இல்லை. மனிதர்கள் தான் தங்கள் பாதுகாப்பை பணயம் வைக்கிறார்கள். ஏறு தழுவுதல் நிகழ்ச்சியில் காளைகளுக்கு துன்பம் தருவதாக சொல்பவர்கள் நோக்கம் தமிழர்களின் நாகரிக அடையாளங்களை அழிக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் ஒருபோதும் இதில் ஈடுபட்டவர்கள் அல்ல. மற்றவர்கள்  இதில் ஈடுபட கூடாது என்றுதான் போராடுகிறார்கள்.              மத்திய அரசை அனைவரும் சேர்ந்து வலியுறுத்தினால்தான் இது சாத்தியம் .

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041
vaithiyalingamv@gmail.com

மக்கள் நல கூட்டணி; நோக்கம் ஜெயலலிதா எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதா? மாற்று என்பது ஏமாற்றுவதா? நிலைக்குமா? சந்திக்கு வந்த முரண்பாடுகள்?

 

 77984366_114139690தி மு க – அ தி மு க விற்கு மாற்றாக என்று சொல்லிக்கொண்டு எத்தனை பேர் கிளம்பியிருக்கிறார்கள் ?
மக்கள் நல கூட்டணியில் வைகோ, வலது இடது கம்யுனிஸ்டுகள் ,விடுதலை சிறுத்தைகள். இன்று குறைந்த பட்ச செயல் திட்டத்தை வெளியிட்டு சில நிலைப்பாடுகளை அறிவித்திருக்கிறார்கள் .                தேர்தலுக்கு பிறகும் இந்த நான்கு கட்சிகள் மட்டுமே இயக்கமாக நீடிக்கும்.   முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பிறகு அறிவிப்போம். ஜி கே வாசனும் விஜயகாந்தும் எதிர்பார்க்கப் படுகிறார்கள்.காங்கிரஸ், பா ஜ க , திமுக அதிமு;க வோடு இப்போது பா ம க வோடும் சேருவதில்லை.
முரண்பாடு 1;  மதுவிலக்கு கொண்டுவருவேன் என்ற திமு;கவையும் மதுவிலக்கு பற்றி எந்த உத்தரவாதமும் தர தயாராக இல்லாத அ தி மு க வையும் இவர்கள் எப்படி ஒன்றாக பார்க்கிறார்கள்.?.
முரண்பாடு 2; ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி , வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கில் பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடித்து கடைசியில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தியது முதல் டான்சி வழக்கில் உச்சமீதிமன்றம் ஜெயா செய்த குற்றத்தை உண்மை என்று தீர்ப்பளித்து தண்டனையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்றது முதல் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்டு மேன்முறைஈட்டில் கேள்விக்குறிய வகையில் விடுதலை செய்யப் பட்டு இப்போது உச்சநீதி மன்றத்தில் மேன்முறையீட்டை சந்தித்துக் கொண்டிருக்கிற நிலையில் ஜெயலலிதாவையும், 2G  வழக்கில் விசாரணையை எதிர்கொண்டிருந்தாலும் கலைஞர் டி வி பணப பரிவர்த்தனை வழக்கில் விசாரணையை எதிர் கொண்டு இருந்தாலும் இதுவரை தண்டிக்கப் படாமல் இருக்கிற திமுகவையும் ஒரே தட்டில் வைத்து இருவரையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம் என்பதில் நியாயம் இருக்கிறதா ?
முரண்பாடு 3;    அவரவர் கொள்கையை விட்டுகொடுக்காமல் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவோம் என்றால் அவரவர் தனித் தனியே சிலபிரசினைகளில் செயல்படுவோம் என்பது நாட்டுக்கு உகந்ததா?
முரண்பாடு 4;  இந்த நால்வருக்கும் மொத்தமே ஐந்து சத வீத வாக்குகள் தான் தேறும் என்ற நிலையில்  திமுக , பாமக தவிர்த்து அதிமுக வை ஆட்சியை விட்டு அகற்ற முடியுமா?
முரண்பாடு 5 ; அகற்றப்பட வேண்டிய ஆட்சியா அதி மு க அரசு என்றால் ஆம் என்று கூறுபவர்கள் அதை அகற்ற வேண்டி அனைத்து கட்சிகளையும் ஒருங்கினைக்காமல் அ தி மு க எதிர்ப்பு வாக்குகளை பிரித்தால் ஜெயலலிதா மீண்டும் வந்து விடுவாரே என்று வைகோவோடு நீண்ட காலம் பயணித்தவர்கள் சொன்னபோது வந்தால் வரட்டும் ஸ்டாலின் வரக்கூடாது என்று வைகோ பேசினார் என்று புகார் வந்தபோது இதுநாள் வரை வைகோ அதை மறுத்து அறிக்கை விட வில்லையே ஏன் ?
கடைசி  வரையில் இவர்கள் நீடிப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இலை.          ஒருவேளை, தனித்து பேரம் பேசினால் குறைத்து கொடுப்பார்கள் என்பதால் கூட்டணியாக பேரம் பேசினால் கூடுதல் இடம் கிடைக்கும் என்று அணி  சேருகிறார்களோ என்னவோ?
ஜெயலலிதா வராமல் தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என்று முழங்கிய விஜயகாந்த் இன்று தி மு க – அதி மு க இருவரையும் வர விட மாட்டேன் என்று சுருதி மாறி பேசுகிறார்.   அவரை இந்த கூட்டணி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் என்று நம்புகிறாரோ ?
 தமிழர்களின் தலை விதியை நினைத்து நொந்து கொள்வதா? நம்பிக்கையோடு காத்திருப்பதா? ஒன்று மட்டும் நிச்சயம் இவர்களோடு சேர்ந்து வாசனும் விஜயகாந்தும் அரசியல் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் என்பதுதான் இன்றைய நிலை.

” மூடு டாஸ்மாக்கை ” பாடலை பாடிய பாடகர் கோவன் மீது தேசதுரோக வழக்கு? ஜெயலலிதா அரசின் அடக்குமுறை எல்லை மீறுகிறது! விமர்சனங்கள் இல்லாமல் ஜனநாயகம் முழுமை பெறுமா?

       kovanan   ” ஊருக்கு ஊரு சாராயம் ! தள்ளாடுது தமிழகம்!   ” என்ற பாடல் மூலம் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் நிகழ்ச்சி பிரபலமாகி  வருகிறது.    அதில் வரும் ”   ஊத்திகொடுத்த உத்தமிக்கு போயஸ்ல உல்லாசம்” என்று ஒரு வரி வரும் அது ஆட்சியாளர்களை கோபப்  படுத்தியிருக்கும் போல் தெரிகிறது.

          பாடகர் மீது இ த ச 124 A, 153A 505 (1) ஆகிய பிரிவுகளின் மீது தேசதுரோகம், இரு பிரிவினரிடையே சண்டை மூட்டுவது, குற்றம் செய்ய தூண்டுவது என குற்றம் சாட்டி கைது செய்து சிறைக்கு அனுப்பியிருக்கிறது ஜெயா அரசு.
             இதில் தேசதுரோகம் எங்கே வந்தது.?  குடியை வளர்ப்பவர் தேச பக்தர்  . குடியை ஒழிக்கப் போராடுபவர் தேசதுரோகியா???
             வழக்கம்போல மான நஷ்ட வழக்கு போட்டிருக்கலாமே?   அதுகூட எந்த நீதிமன்றத்திலும் நிற்காது. அதிலும் தனது மானம் எப்படி பறிபோனது என்பதை ஜெயலலிதா நிரூபிக்க வேண்டிவரும்.
              நிற்காது என்பது தெரிந்தே அதிகாரத்தை பயன் படுத்தி அலைக்கழித்து துன்புறுத்தும் கொக்கம் கொண்டதே இந்த வழக்குகள்.   பதவி போகும் முன்பு வாபஸ் பெறுவதை வழக்கமாக கொண்டிருகிறார்கள்.
               மகஇக வினர் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு ஊழல் எதிர்ப்பு மூட நம்பிக்கை எதிர்ப்பு என்று எல்லா சமூக அவலங்களையும் எதிர்த்து போராடி வருபவர்கள்.    அது ஓர் கலை இலக்கிய அமைப்பு.    அவர்கள் ஆயுதம் ஏந்துபவர்கள் அல்ல.   கருத்துப் போராளிகள்.
               அவர்கள் மீது அரசின் அடக்கு முறையை ஏவி விடுவது கோழைத்தனம்.
                பொதுவாழ்வில் சொத்துக் குவித்தவர்கள் மீதும் ஊழல் செய்தவர்கள் மீதும் தண்டிக்கப் பட்டவர்கள் மீதும் விமர்சனங்கள் எழுவது எதிர்பார்க்கப்  படுவதே..   என்னை யாரும் விமர்சிக்க கூடாது என்றால் நீ அரசியலுக்கு வந்திருக்க கூடாது.
                  விமர்சனங்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொள்ளக் கூடாது.   ஒட்டுமொத்தமாக என்ன சொல்ல வருகிறார் என்று தான் பார்க்க வேண்டும்.
              டாஸ்மாக்கை   மூடவேண்டும் என்பது கோரிக்கை.   திறந்து வைத்திருப்பவரை ஊத்திக் கொடுப்பவர் என்றும் அவர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை உல்லாசம் என்றும் சொல்கிறார் என்றே பொருள் கொள்ள வேண்டுமே தவிர வேறு  பொருள் எடுத்துக் கொண்டு தண்டிக்க முனைவது அக்கிரமம்.
                டாஸ்மாக்கை திறந்து வைத்திருப்பதும் மக்களை குடியில் ஆழ்த்தியிருப்பதும் மாபாதகம் என்றால் மூடசொல்பவர்களை சிறையில் அடைப்பது பெரும்பாவம்???!!!

                திருந்துமா ஜெயா அரசு?

ஜால்ரா போட்டும் ஜெயலலிதா அரசால் மண்டை உடைக்கப்பட்ட வேல்முருகன் கட்சியினர்!! ஆளும்கட்சியின் அடிமைத்தனம் !!!!


           velmurugan    ஜெயலலிதாவுக்கு ஜால்ரா போட்டால் மட்டும் போதாது!    எதிர்த்து குரல் கொடுத்தாலும் அடிப்போம் என்பதை காட்டி விட்டது அதிமுக அரசு.
                நெல்லையில் பெப்சிக்கு 36   ஏக்கர் அரசு நிலம் 99 ஆண்டுகளுக்கு  குத்தகை   Rs. 36,000/-     15    நாட்களில் அனுமதி.   சந்தை மதிப்பு  Rs.  15  கோடி.   இடையில் என்ன நடந்திருக்கும் என்பதை அறிய அதிக அறிவு தேவையில்லை .
             நாம் தமிழர் போராடியபோது ஒன்றும் நடக்க வில்லை. இப்போது வேல்முருகன் தலைமையில் முற்றுகை போராட்டம் அறிவித்தவுடன்     10   பேர் மண்டையை உடைத்து கூட்டத்தை கலைத்திருக்கிறது.     பொதுத்தேர்தலில் ஆளும் அ தி மு க வுடன் தான் கூட்டணி என்று ஏற்கனேவே வேல்முருகன் அறிவித்திருந்தார்.
          கூட்டணி கட்சி என்றால் விட்டு விடுவார்கள் என்று அவர் நம்பியிருக்கலாம்.
             அடித்து விரட்டியதன் மூலம் வேல்முருகன் தேவையில்லை என்ற முடிவுக்கு அதிமுக வந்து விட்டதாக கருத முடியாது.
              ஏனென்றால் அடித்தாலும்   வாங்குவதை  வாங்கிக்கொண்டு    காலில் விழுபவர்கள் யார்  என்பதை ஜெயலலிதா அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்/.
               ஒன்றரை ஆண்டு காலம்  பொடாவில் சிறையில் வைத்திருந்தவர் என்பதையும் மறந்து கூட்டுக்கு வந்தவர் வைகோ என்பதை ஜெயலலிதா மறந்திறக்க மாட்டாரே௧.
                 கோ கோ கோலா , பெப்சி என்று தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண் சாமரம் வீசும் தமிழர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு என்ன கவலை.?