Home Blog Page 110

வைரமுத்து நீதிமன்றத்தை அவமதித்தாரா? அறிவிப்பு அனுப்பிய நீதிபதிகள் தமிழ் அறிந்தவர்கள் அல்ல ? மனு கொடுத்தவரும் தமிழர் அல்ல. தவறாக பயன்படுத்தப் படும் நீதிமன்ற அவமதிப்பு சட்டம்???!!!

   vairamuthu நீதிபதி  கைலாசம் நினைவு நூற்றாண்டு விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து நீதித்துறையில்  நீதிபதிகள் தவறுகள் செய்தால் நாடு என்னாகும் என்று கேட்டார்.    அதுவும் ஓய்வு பெறும் ஆறு மாதம் முன்பு தவறு செய்தால் நாடு என்னாகும் என்று கேட்டார்?

         தலைமை நீதிபதி கவுல், ரஜினிகாந்த்,ப சிதம்பரம் என முக்கிய பிரமுகர்கள் வந்திருந்த அவையில் தனது கவலையை கொட்டி விட்டார் கவிஞர்.     யாரையும் குறித்தோ வழக்கைச் சொல்லியோ பேசவில்லை.
                நீதிபதி கைலாசம் நினைவு விழாவில் நீதிபதிகளை பற்றி பேசாமல் யாரைப்பற்றி பேசுவது. ?
                கைலாசத்தைப்போல் நீதிபதிகள் ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தால்தான் நாடு காப்பாற்றப் படும் என்று பேசினால் என்ன தவறு?
            ஆனால் முகுந்த்சந்த் போதரா என்பவருக்கு கவிஞர் ஜெயலலிதா  வழக்கில் தீர்ப்பு  சொன்ன குமாரசாமி நினைவு வந்திருக்கும்போல் தெரிகிறது.
                உடனே நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் போட்டு அதில் நீதிபதிகள் அறிவிப்பும்  அனுப்பி இருக்கிறார்கள்.
              ஏன் அவர்கள் விழாவில் கலந்து கொண்ட தலைமை நீதிபதியை கலந்து கொள்ளவில்லை. ?
              எவரோ சொல்லியா நீதிமன்றம் தனது மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
               சட்டமே ஒரு அர்த்தமற்ற சட்டம்.    அவதூறு செய்யும் நோக்கம் இல்லாமல் சொல்லப்படும் எந்த குற்றச்சாட்டும் விசாரணைக்கு உகந்ததுவே.
             திருத்தும் நோக்கில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.
யாரையும் இழிவு படுத்தும் நோக்கம் யாருக்குமில்லை.
                 வைரமுத்து கலைஞரோடு நட்போடிருப்பவர்.   அரசியல்வாதியல்ல .
                   அவருக்கு ஜெயலலிதா எதிரியுமல்ல.
             நீதிபதி கர்ணன் சக நீதிபதிகள் மீதும் தலைமை நீதிபதி மீதும் குற்றம் சுமத்தினாரே?
              தத்து முன்பு ஜாமீன் வழங்கிய வழியில் கோடிகணக்கில் ஊழல் என்று குற்றம் சுமத்தியவர்கள் மீது அவதூறு வழக்கு போட ஏன் அவர் மறுத்தார்.?
              பல நீதிபதிகள் ஊழல் செய்தவர்கள் என பட்டியலை நீட்டிய வக்கீல் பிரஷாந்த பூஷன் மீது ஏன் வழக்கு பாயவில்லை.?
               சும்மா இருந்த வைரமுத்துவை சீண்டி இருக்கிறார்கள்!
 இனி அவர் ஏன் சும்மா இருக்க வேண்டும்?

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன்!!!! விஜயகாந்த் சபதம்!!!! உறுதியாக இருந்தால் ஆட்சி மாற்றம் உறுதி!!!!

                  தனது ரிஷிவந்தியம் தொகுதியில் மண லூர்பேட்டையில்

பேசிய விஜயகாந்த் தமிழகத்தில் பிரச்சினைகள் குவிந்து கிடக்கும்போது முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருப்பது பற்றி பேசிவிட்டு எதிர் வரும் தேர்தலில் எந்த காரணத்தைகொண்டும்  மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க அனுமதிக்க கூடாது என்றும் அதற்காக தான் எந்த தியாகத்திற்கும் தயார் என்றும் பேசினார்.

              அவரத்து பேச்சு தமிழகத்தில் ஒரு வலுவான எதிர் அணி உருவாகுமா என்ற கேள்விக்கு சரியான பதிலாக அமைந்திருக்கிறது. 
             இடையில் வைகோ தனது மக்கள் நல கூட்டமைப்புக்கு விஜயகாந்த் வருவார் என்று  நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். .
                  நாலு கட்சிக்கும் நாலு சதவீத வாக்கு.  இதை வைத்துக்கொண்டு நாங்கள்தான் அதிமுக- திமுகவுக்கு மாற்று என்று சொன்னால் சிரிக்கத்தான் செய்வார்கள். 
              நாலு கட்சி கூட்டணி அ தி மு க வுக்கு சாதகமானது என்பதை சின்னப் பிள்ளைகள் கூட சொல்லும்.  பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை  
               தான் தலைவன் ஆவதற்கு நாலுபேரை பலி கொடுக்க தயங்காதவர் வைகோ.     நாம் நிற்பதால் ஜெயலலிதா வந்து விடுவார் என்று கேட்டதற்கு வரட்டுமே ,ஸ்டாலின் வரக்கூடாது என்றார் வைகோ என்ற குற்றச்சாட்டிற்கு இன்று வரை மறுத்து எதுவும் வைகோ சொல்ல வில்லை. 
               தடுக்கப் பட வேண்டியது ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சி என்பதை ஒப்புக் கொள்பவர்கள் தி மு க வின் குறைகள் பேசித் தீர்த்துகொள்ளத் தக்கவை உண்பதை உணர மாட்டார்களா?
            எல்லாவற்றையும்  மீறி தனியாக நிற்போம் என்று  பா  ம க  சொல்லுமானால் அவர்களது இலக்கு 2021 தேர்தலாக இருக்கலாம். 
தனித்து நின்று  8 – 10 சத வீத வாக்கை வாங்கி விட்டால் தங்களது பேரம் பேசும் திறனை நிரூபித்து அடுத்த தேர்தலில் ஆட்சியில் பங்கு பெறலாம் என்பது அவர்களது திட்டமாக இருக்கலாம்.; 
            இது எதுவும் இல்லாமல் நான்கைந்து சத வீத வாக்குகளை பிரித்தே தீருவோம் என்பவர்கள் அ தி மு க வின் கூலிகள் என்ற முடிவுக்கே மக்கள் வருவார்கள்.     இருக்கும் மதிப்பும் இல்லாமல் போய் மக்களை சந்திக்கும் உரிமையையும் இழப்பார்கள். 
             இந்த சூழ்நிலையில் விஜயகாந்தின் இந்த அறிவிப்பு  முக்கியத்துவம் பெறுகிறது.    
             அ தி மு க ஆட்சியை அகற்ற தி மு க இல்லாமல் முடியாது என்ற நிலையில் நியாயமான பேச்சு வார்த்தை நடத்தி இறுதிக் கட்டத்தில் வெற்றி பெறும் அணியை உருவாக்குவதில் விஜயகாந்தின் பங்கு பெரும்பங்காக இருக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. 
               அப்படி ஒரு அணி அமையும் பட்சத்தில் பா ம க வின் வாக்குப் பிரிப்பையும் மீறி  அதிமுக தோல்வியைத் தழுவும் என்பது உறுதி. 

இரண்டு தலித் குழந்தைகள் உயிருடன் எரிக்கப் பட்டது பற்றி கேட்டதற்கு நாய்கள் மீது கல்லெரிந்தால்கூட அரசு பொறுப்பேற்க வேண்டுமா எனக்கேட்ட மத்திய ராணுவ அமைச்சர் வி கே சிங் – ஒரு கண்டனம் கூட இல்லாமல் நீடிப்பது எப்படி?

               காஜியாபாதில்  இரண்டு தலித் குழந்தைகள் உயிருடன் எரிக்கப் பட்டர்கள்.

                அதற்கு விளக்கம் கூற வந்த வி கே சிங் அது இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடந்த பகைமையின் விளைவு என்று கூறிவிட்டு நாயின் மீது கல்லெறிந்தால் கூட அரசு பொறுப்பேற்க வேண்டுமா என்று கேட்டது நாடு தழுவிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 
                            சம்பவம் கொடுமையானது என்பது உண்மை.    அதற்கான காரணம் எ துவாக இருந்தாலும் அது சமூகத்தின் நோயின் அடையாளம்.   தண்டிக்கப் பட வேண்டிய குற்றம். அதைப் போக்க கடைபிடிக்க வேண்டிய மருத்துவம் என்ன என்பதை விவாதித்தால் அது வரவேற்கலாம். 
                      ஆனால் பிரச்சினையின் தன்மையை உணராமல் கொலையை நாயின் மீது கல்லெறிவதுடன் ஒப்பிட்ட ஒருவர் நாட்டின் ராணுவ அமைச்சர் என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத அச்சம் கலந்த திகில் உணர்வு தான் உண்டாகிறது.

                       இத்தகைய மனோநிலை கொண்ட ஒருவர் கையில் இந்த நாட்டின் பாதுகாப்பு உள்ளது நல்லதா?       தவறிப்போய் சொல்வதற்கு இது ஒன்றும் சாதாரணமான பிரச்சினை இல்லையே?      
                      அவரது உள்மனதில் உள்ளதுதான் வார்த்தைகளாக வெளி வந்திருப்பதுதானே உண்மை. 
                     அவரது   விளக்கம்  யாரையும் அமைதிப்படுத்தாது.  ராஜ்நாத் சிங்  சமாதானம் சொல்லி பிரச்சினை தீர்ந்து விட்டது என்கிறார்.   
                ஏற்கனேவே மோடி குஜராத் கோத்ரா சம்பவத்தின்போது தன் மனம் வருந்தியதாக சொல்லிவிட்டு காரில் நாய்குட்டி அடிபட்டால் மனம் வருந்த மாட்டோமோ  என்று கேட்டார்.   அவரது வழியில் இப்பொது வி கே சிங் தலித் குழந்தைகளின் மரணம் நாய்கள் மீது கல்லெரிவதற்கு சமமானது என்று ஒப்பிட்டு பேசியிருக்கிறார். 
                    மக்கள் இதையும் மறந்து விடுவார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை. 
                 மக்கள் இவர்களின் குற்றங்களை எண்ணிக்கொண்டு இருகிறார்கள் என்பதையும் நேரம் வரும்போது தண்டிப்பார்கள் என்பதையும் வரலாறு சொல்லும். 

வனச் சட்டத்தின் கீழ் கூலிகளான அப்பாவி தமிழர் களை சிறையில் தள்ளி ஆனந்தப் படும் ஆந்திர அரசு காண்டிராக்டர்கள் மீதும் கடத்தல்காரர்கள் மீதும் வழக்கு தொடுக்காதது ஏன் ?? ஜெயலலிதா கடிதத்துக்கு பதில் அளிக்காத ஆந்திர முதல்வர் !!!

        jeyalalitha சந்தன மரம் வெட்டியதாக 20   அப்பாவி தமிழ் கூலித் தொழிலாளர்களை சுட்டுக் கொலை செய்த ஆந்திர அரசு ஒரு காண்டிராக்டர்கள் மீது கூட ஒரு வழக்கு பதியவில்லை.
              பணபலமும் ஆள்பலமும் இருக்கும் கொடியவர்களை விட்டு விட்டு அப்பாவி தொழிலாளர்கள் மீது குண்டுகளை  பாய்ச்சியது நியாயம்தானா?
              அந்தக் கொடுமை தொடர்பாக தமிழக அரசு நியாயமான நடவடிக்கை எதையும் எடுக்க வில்லை.
               இப்போது 516   அப்பாவி தமிழர்கள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில் ஆந்திர சிறைகளில் வாடுவதாக ஜெயலலிதா சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
               ஒரு பதிலுமில்லை . ஜாமீனில் வேலி வர உதவத்தான் கேட்டுகொண்டிருகிறார்.
                   காண்டிராக்டர்களால் அழைத்துச்செல்லப் பட்டவர்கள் மீது வழக்கு என்றால் காண்ட்ராக்டர்கள் மீதும் வழக்கு பதியப் பட வேண்டும் அல்லவா?
                இல்லை என்றால் தொழிலாளர்களையும் விடுதலை செய்வது தானே நியாயம்.
               எல்லாவற்றுக்குமா  நீதிமன்றம் செல்ல வேண்டும்???

கொடநாட்டில் ஜெயலலிதா ! மகாராணியா மக்களின் சேவகரா? மக்களுக்காக நான் என்றால் மக்களுடன்தானே இருக்க வேண்டும்? மக்களின் குரல் தேர்தலில்தான் வெடிக்கும் !!


                       முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் செயல்பாடுகள் மக்களுக்கு ஆறுதலை தந்திருக்கிறதா  வேதனையை தந்திருக்கிறதா என்ற கேள்விக்கு வேண்டுமானால் பலர் பல விதமான பதில்களை தரலாம்.
                      ஆனால் அவர் மக்களின் சேவகராக செயல்படுகிறாரா மகாராணியாக செயல் படுகிறாரா என்ற கேள்விக்கு ஒரே பதில்தான் . மகாராணி! மகாராணி!!!!!

இதற்கா அவரை தேர்ந்தெடுத்தோம் ?
மேற்கு ஜெர்மனியின் அதிபர் மெர்கேல ஏஞ்செல் தன் அலுவலகத்துக்கு ரயிலில் வருகிறாராம்!. மக்களோடு மக்களாக!
 அது ஜனநாயகமா?
                     போயஸ் கார்டனில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அலுவலகம்  வந்தால் பிளக்ஸ் போர்டு வைத்து வரவேற்பு   அதுவும் அரை மணி ஒரு மணி நேரம் இருப்பதற்கு!
                     சட்டமன்றம் என்றால் எந்த அமைச்சர்களுக்கும் வேலை இல்லாமல்  110  விதியின் கீழ் அறிக்கை படித்துவிட்டு கிளம்பி விடுவது.
                     கொஞ்சம் நேரம் கிடைத்தால் சிறுதாவூர் சென்று ஓய்வு !   அதிக நேரம் கிடைத்தால் கொடநாடு!!!
                    மொத்த தலைமை செயலகமும் நீலகிரி மாவட்டம் சென்று திரும்பி ஒரு மாதத்திற்கும் மேலாக அலைய வேண்டும்.
                       எங்கு தங்கி செயல்பட வேண்டும் என்று தீர்மானிப்பது அவரது உரிமையாக இருக்கலாம்..
                       அதில் அதிகாரிகள் , பொது மக்கள்  வசதியை அவர் கவனிக்க வேண்டாமா?
                    ஒருவேளை அவரது உடல்நிலை அதற்கு காரணமாக இருந்தால் வெளிப்படையாக சொல்லலாம்.      ஒன்றும்  தவறில்லை..
           அப்துல் கலாம் மறைவிற்கு நேரில் செல்ல முடியாததற்கு உடல் நலக குறைவைதானே காரணம் காட்டினார்.
                 தான் மக்களுக்காகவே வாழ்வதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.   தனக்கு யாரும் ரத்த சொந்தங்கள் இல்லாததை தான் அவர் அப்படி குறிப்பிட்டிருக்க வேண்டும்.    ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் அவர் நலம் விரும்பிகள்தானே!   அவருக்காக எதையும் செய்யும் மன  நிலையில் உள்ளவர்கள்தானே
 அதற்காகத் தானே சொத்துக் குவிப்பு வழக்கிலும் அவரோடு தோளோடு தோள் கொடுத்து நின்று கொண்டிருக்கிறார்கள்..
               தனது  style of functioning  ஐ  , எல்லோரையும் நடத்தும் போக்கை எப்படி அவர் நியாயப்படுத்த முயற்சிக்கிறார்?
              ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் அவர் நடத்தியது இல்லை.  அதாவது ஆட்சியில் இருக்கும்போது. .   பொதுமக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியதும் கிடையாது.    அதாவது யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடிகிற முதல்வர் இல்லை அவர்.
                 அமைச்சர்களை  தனது மாவட்ட செயலாளர்களை போல் பந்தாடுவது மட்டும்தான் சாதனை என்று சொல்ல முடியுமா?
                அச்சத்தில் ஆழ்த்தி ஆளும் காலம் நெடுங்காலமாக இருக்காது.
                இப்படிப்பட்ட முதல்வர் நமக்கு தேவையா?              இந்த ஒரே கேள்விதான் மக்கள் மனதில் இப்போது.!
              ஆள்பவர் நல்லவராக இருந்தால் மட்டும்  போதாது! வல்லவராகவும் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு !!
              அதற்கும் மேல் போய் எந்த விதிமுறைக்கும் கட்டுப்படாத எதேச்சாதிகார ராணியாக அமைந்து விட்டால்?
              விதியை நொந்து கொண்டு விடுபடும் வாய்ப்புக்காக காத்திருக்கும் மனோநிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள். .

மாதம் 2 லட்சம் பென்ஷன் வேண்டாம் என மறுத்த அமிதாப் பச்சன் குடும்பம்!!! இல்லாதவர்களுக்கு கொடுங்கள் என வேண்டுகோள் !!!


 

 உ.பி. அரசு இந்த ஆண்டு 56  கலைஞர் களுக்கு மாதம் ரூபாய்  50000 பென்சன் அறிவித்தது.    இதன்படி அமிதாப் குடும்பத்தில் நான்கு பேர் தலா மாதம் ரூபாய் ஐம்பதாயிரம் வீதம் ரூபாய் இரண்டு லட்சம் மாதம் பெற்றுக்கொள்ள உரிமை பெற்றவர்கள். 

       அவர் குடும்பத்தில் அனைவரும் கோடிகணக்கில் சம்பாதிப்பவர்கள்.    கோடிக்கணக்கில் வருமான வரி கட்டுபவர்கள் .    
               நலிந்த கலைஞர்களுக்கு உதவித் துகை என்பது வேறு.  கோடிகணக்கில் வருமான வரி கட்டுபவர்கள் அந்த கணக்கில் வரமாட்டார்கள்.       
                  அந்த வகையில் அரசு தருகிறது. நாங்கள் பெற்றுகொள்கிறோம் என்று சொல்லாமல் தகுதி படைத்த  மற்றவர்களுக்கு தந்து விடுங்கள் என்று நல்ல மனதுடன் சொன்ன அமிதாப் பாராட்டுக்கு உரியவர். 

பண்டிகையை பட்டாசு வெடித்துதான் கொண்டாட வேண்டுமா? வெடி பொருட்களை தடை செய்ய கோரும் மனுவில் உச்சநீதிமன்றம் விசாரணை! சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்ய உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன?

     வெடிபொருட்களை தடை செய்ய கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பட்டாசுகளின் தீமைகளை பிரச்சாரம் செய்யவும் உத்தரவிட்டது.

           தீமை என்பதை ஒப்புக்கொண்ட பிறகும் முழுவதும் தடை செய்ய முடியாமல் உச்சநீதி மன்றம் திணறுவது எதனால்?    மத நம்பிக்கைகளில்  குறுக்கிடுவதாக கூக்குரல் கிளம்பும் என்பதால்தான். .
             இத்தனைக்கும் தீபாவளி பண்டிகைக்கும் பட்டாசு வெடிப் பதற்கும் என்ன சம்பந்தம் ?    வெடிப்பது  கொண்டாட்டத் தின் ஒரு  பகுதியாக நெடுங்காலமாக நடைமுறையில் இருந்து விட்டது.
              ஒரு தீமை எப்படியோ சமூக வழக்கமாக புகுந்து விட்டது.   தீமை  என்று தெரிந்தும் விடாபிடியாக தொடர்வது அறிவுடைமை ஆகாது.
            அதே நேரத்தில் சீன பட்டாசு கோடிக்கணக்கில் நாட்டின் உள்ளே புகுந்து விட்டது.  அதிகாரிகளின் துணை இல்லாமல் இவ்வளவு பெரிய அளவில் சரக்குகள் துறைமுகங்கள் வழியாக உள்ளே புகுவது என்பது நடக்காது.
             தனிப்படை கொண்டு சீனப் பட்டாசுகளை அழிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதி  மன்றம் இந்த கள்ளத்தனமான இறக்குமதிக்கு உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். 

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041
vaithiyalingamv@gmail.com

கோட்சே தூக்கிலிடப்பட்ட நவம்பர் 15 ம் நாளை தியாகிகள் தினமாக கொண்டாட திட்டமிடும் இந்து மகாசபை மீது நடவடிக்கை என்ன? காந்தியை மீண்டும் மீண்டும் கொலை செய்ய அனுமதிக்குமா மோடி அரசு?

                தேசத்தின் அடையாளம் காந்தி .    அதனால்தான் ருபாய் நோட்டுகளில் அவர் மட்டுமே இருக்கிறார்.   அவரோடு ஒத்துப் போகாதவர்கள் கூட அவரை நேசிக்கத் தவறியதில்லை. 

               ஆனால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவரை அவமதிப்பதில்  கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் இந்து இயக்கங்கள். 
 அவர்கள் என்ன பெயரில் இயங்கினாலும் எத்தனை குரலில் பேசினாலும் கருத்தில் ஒன்று பட்டே இருப்பார்கள். 
              இந்த நிலையில் ஏற்கனவே பல பிரச்சினைகளில் பா ஜ க அரசு மாட்டிக்கொண்டு அவதிபடுகையில் இந்து மகா சபை தலைவர் சந்திர பிரகாஷ் கௌசிக் இந்த அறிவிப்பை வெளியிட்டி ருப்பது நாடு முழுதும் எதிர்ப்பு அலைகளை எழுப்பும் என்பதில் சந்தேகமில்லை. 
               நடவடிக்கை எடுத்தால் பா ஜ க தப்பிக்கும் .    மறுத்தாலோ தாமதித்தாலோ பழியிலிருந்தும் விளைவிலிருந்தும்  தப்பிக்கவே முடியாது. 

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

பருப்பு விலை உயர யார் காரணம்? மத்திய அரசா? மாநில அரசா?


      கிலோ 85   ரூபாயாக இருந்த துவரம் பருப்பின் விலை 250  அளவுக்கு உயர்ந்து நிற்க யார் காரணம்.? 
                 
         ஆண்டு தோறும சுமார்  45  லட்சம் டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா!.     இந்த ஆண்டு விளைச்சல் சரியில்லை  , ஊக வணிகம் காரணமாக வியாபாரிகள் பதுக்கி விப்டார்கள் என்றெல்லாம் அரசு  காரணம் காட்டி விலை உயர்வுக்கு தாங்கள் காரணமில்லை என்பது போல காட்டிகொள்ள  விரும்பினாலும் யாரும் அதை நம்பவில்லை. 
             ஓராண்டுக்கு முன்பே கொள்முதல் செய்து இனி தக்க கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப் படும் என்று இப்போதுதான் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி  தெரிவித்துள்ளார்
              இதை சொல்ல ஓராண்டு தேவைப்படிருகிறது..   
     மத்திய அரசிடம் இருந்து  500  ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதா ல்
நவம்பர் மாதத்தில்  i இருந்து கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலை பருப்பு விநியோகம் செய்யப்படும் என்று ஜெ ஜெயலலிதா  அறிவித்துள்ளார். 
               வெங்காயத்ததால் ஒருமுறை வீழ்ந்தது வாஜ்பாய் அரசு. இம்முறை நிலையை சரி செய்யவில்லை என்றால் மோடி அரசும் விழும் என்பதில் சந்தேகம்  இல்லை. 

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

நடிகர் சங்க தேர்தலால் முடியுமா பிரச்சினைகள்? பெயர் மாற்றம் வரும்! ,ஒப்பந்தம் ரத்துஆகுமா? வேறு சங்கம் உருவாகுமா?,

      Vishal  இன்னும் சில நிமிடங்களில் நடிகர் சங்க தேர்தல் முடிவுகள்  வெளியாக இருக்கின்றன.

         முடிவுகள்  எப்படி இருந்தாலும் சில நல்லதுகள் நடக்கும் என்ற நம்பிக்கையை  இந்த தேர்தல் கொடுத்திருக்கிறது.
        தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர்  மாற்றம் செய்ய வேண்டும் என்று பாரதிராஜா  சீமான்  மற்றும்  பல தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்தன .

            ரஜினி பெயர் மாற்றத்திற்கு இன்று குரல் கொடுத்திருக்கிறார்.   இனிமேல் யார் வந்தாலும் பெயர் மாற்றத்தை ஒத்தி வைக்க முடியாத நிலைமையை அவரது குரல் உறுதி படுத்தியிருகிறது.   கமல் இந்திய நடிகர் சங்கம் என்றால் மகிழ்வேன் என்றது ஒரு ஜோக்.  இந்த கருத்தை மலையாள  கன்னட, தெலுகு நடிகர் சங்கங்களிடம் வைக்க அவருக்கு துணிவு இருக்குமா?
              பிரச்சினையின் மையமே நடிகர் சங்கத்துக்கு சொந்தமான  19  கிரௌண்ட் இடத்தில் சங்கமே சொந்தமாக கட்டடம் கட்டுவதா அல்லது மற்றவரிடம் கொடுத்து கட்ட சொல்லி மாதம்  25  லட்சம் வாடகை மட்டும் பெற்றுக் கொள்வதா என்பதுதான்.      1  1/2  கோடி ரூபாய் கடனை கட்ட முடிந்த சங்கத்துக்கு ஒரு கட்ட முடியாதா?   பிறர் கட்டி 25   லட்சம் வாடகை கொடுக்க முடியும் என்றால்அவருக்கு எவ்வளவு லாபம்  வரும்? .  அதை நடிகர் சங்கமே கட்டினால் அதை விட அதிகம் லாபம் வருமே அதை வைத்து நடிகர்களுக்கு அதிக
நன்மை செய்ய முடியுமே என்பதில் உண்மை இருக்கிறதா இல்லையா?
                மரியாதை வேண்டும் என்பவர்கள் சில ஆண்டுகளில் பதவியை விட்டு விலகி புதியவர்களுக்கு   இடம் கொடுப்பதுதானே முறை.    நாங்களே இருப்போம்  என்றால் இதை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என்றுதானே பொருள்?
               யார் வென்றாலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டால் பிரச்சினை இல்லை.    மாறாக அதை வலியுறுத்தினால் பிரச்சினை தீராது.
               சங்கம்  உடைந்து இரண்டாகும் வாய்ப்பும் இருக்கிறது. நடிகர்கள் சங்கத்தில் தமிழர்கள் ஆதிக்கம் இல்லை என்பது வரலாற்று கொடுமை.  அமுக்கி வைக்கப் பட்டவர்கள் இன்னும் எழுந்திருக்க வில்லை .  யார் வேண்டுமானாலும் வரலாம். ஆதிக்கம் செலுத்த நினைப்பதுதான் தவறு. கலைக்கு மொழி சாதி இல்லை என்று போதிப்பவர்கள் எல்லா மாநிலங்களிலும் இதை சொல்ல முடியுமா?
              கள்ள ஒட்டு, தபால் ஓட்டுகளில் குளறுபடி , வாக்காளர் பட்டியல் தவறுகள்  , 3139    சங்க உறுப்பினர்களுக்காக பொதுத்தேர்தல் போல பத்திரிகைகளில் லட்சகணக்கில் விளம்பரங்கள்  என்று எல்லா தேர்தல்களிலும் நடக்கும் தில்லு முல்லுகள் இதிலும் நடந்திருக்கின்றன .
..    நீதிபதி தலைமையில் நடந்திருபதால் எல்லாரும் முடிவை ஏற்றுகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருகிறார்கள்.
             எது எப்படியோ கடந்த கால தவறுகள்  திருத்தப் பட்டால் வரவேற்கலாம். எது நடந்தாலும் நன்மைக்கே!!!