Home Blog Page 111

தமிழ் நாட்டில் ஒரு அசிங்கம்! தலை குனிவு? வெளிச்சத்துக்கு வந்த மானத்தின் மறுபக்கம். தண்டணை எப்போது? எப்படி?

      17  வயதுப் பெண்ணை அவளது தந்தை, சகோதரன், நெருங்கிய உறவினர்கள் , வக்கீல்கள், காவல் துறை அதிகாரிகள்  ஆட்டோ ஓட்டுனர்கள், பேருந்து ஓட்டுனர் என்று சகலரும் கடந்த பல ஆண்டுகளாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கொடுமை நிகழ்ந்து இருக்கிறது. சிவகங்கை நகர சப் இன்ஸ்பெக்டர் மற்றும் மூவர்  கைது செய்யப் பட்டு இருக்கிறார்கள். . 
        சென்னை உயர்நீதி மன்றத்தில் வின்சென்ட் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த பொது நல வழக்கில் இந்த  அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி தமிழ் நாட்டில் கூட இந்த மாதிரி நடக்குமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. 
          சமுதாயம் புரையோடி இருக்கிறது.    உடனடியாக வைத்தியம் செய்தால் தவிர மேலும் பாதிப்பு பெருகும் ஆபத்து இருக்கிறது. 
            தமிழ் நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் இனி யாரும் இம்மாதிரி சமூக குற்றங்களை செய்யும் எண்ணத்தையே தடுக்கும் வலிமை கொண்டதாக இருக்க வேண்டும்.

பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய சிவசேனா!!! நாட்டுப்பற்றா? ஆதிக்க உணர்வா?

       எல்லையில் பாகிஸ்தான் அடிக்கடி  துப்பாக்கி சூடு நடத்துகிறதாம், . எனவே அந்த நாட்டிலிருந்து வரும் பாடகர்கள் இசை நிகழ்ச்சி நடத்துவது தேவையில்லை.  இதுதான் சிவசேனா நிலைப்பாடு. 
            கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிக்கு குலாம் அலியை அழைத்து ஏற்பாடு செய்தவர்கள் சிவசேனா எச்சரிக்கைக்கு பின் நிகழ்ச்சியைரத்து செய்து விட்டார்கள். 
             சேனா ‘வெளிப்படையாக எதிர்ப்போம்’ என்று அறிவித்தால் தெருக்களில் ரகளை செய்வோம் என்று  பொருள்.   எனவே ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை . 
              தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நீதிதான் இப்போது அரசாட்சி செய்கிறது .  
              இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்தியாவின் பாரம்பரிய பன்முகத் தன்மையையும் சகிப்புத் தன்மையையும் ஒருபோதும் விட்டு விடக் கூடாது என்று உபதேசம் செய்திருக்கிறார்.    
            ஆட்சியாளர்கள் காதில் இது விழுமா?  

உத்தமரா அன்புமணி ராமதாஸ்? சி பி ஐ வழக்கில் சிக்கியவர் மற்றவர்களை குற்றம் சாட்ட முடியுமா? பா ஜ க அரசியலுக்காக சி பி ஐ யை பயன்படுத்துகிறதா?

               குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை வழங்கப் பட்ட ஜெயலலிதா மேன்முறைஈட்டில் இருந்த சட்ட ஒட்டையால் பதவியில் தொடர்கிறார்.
              இதுவரை எந்த வழக்கிலும் தண்டிக்கப்படாத தி மு க தலைவர்  கலைஞரையும் விசாரணையில் இருக்கும் கனிமொழியையும் ஊழல் குற்றச்சாட்டு கூறி பிரசாரம் செய்வது சரி என்றால் இப்போது அன்புமணி மீதும் சி பி ஐ வழக்கில் குற்றச்சாட்டு புனையப்பட்டிருக்கும் நிலையில் அவரும் குற்றம் இழைத்தவர் தானே?
             2004′-2009 ல் மத்திய அமைச்சராக இருந்தபோது மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு.    இது ஊழல் வழக்கு இல்லை என்கிறார் அன்புமணி .  ஒரு பைசா கூட வாங்கியதாக வழக்கு இல்லையாம்.   வழக்கே ஊழல் தடுப்பு சட்டதின்படிதான்.  பின்பு எப்படி  ஊழல் வழக்கு இல்லை என்றாகிவிடும்?
               வெறும் நிர்வாக குறைபாடு என்பதெல்லாம் வெளியில் சொல்லலாம்.   விசாரணையில் தீர்ப்பில் அது வெளிப்பட வேண்டும்.
             தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவையும் விசாரணையில் இருக்கிற மற்றவர்களையும் ஒரே தட்டில்  வைத்துப் பார்க்கத் கூடாது என்ற உண்மையை மறக்கலாகாது .
             வழிக்கு கொண்டுவர அன்புமணிக்கு மத்திய அரசு வைக்கும் செக் ஆக இது இருக்குமானால் அது வரும் நாட்களில் மருத்துவர் ராமதாஸ் வெளியிடும் அறிக்கைகளில் வெளிப்படும்..
              கடைசி வரை மத்திய அமைச்சரவையில் நீடித்த அன்புமணி ஈழப் பிரச்சினையிலும் தி மு க வை எந்த வகையிலும் விமர்சிக்க முடியாத நிலையில் இருக்கிறார்.
                வாய் நீளம் காட்டுபவர்கள் இனி எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

ஜெயலலிதாவின் கைப்பாவையா வைகோ ? எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்க கூட்டியக்கமா ? நரியின் தலைமையில் வேட்டைக்கு செல்லும் ஆடுகளின் கதி என்ன ஆகும்? திருமாவும் காம்ரேடுகளும் சிந்திப்பார்களா?

              தேர்தல் நெருங்க நெருங்க ஆளும் கட்சியின் சதிராட்டங்கள்  தொடங்கி விட்டன.   
                 சட்ட மன்ற தேர்தல் என்றால் ஒரு நிலைப்பாடு பாராளுமன்ற தேர்தல் என்றால் வேறொரு நிலைப்பாடு என்பது வைகோவுக்கு கை வந்த கலை. 
                1996 ல் மார்க்சிச்டுகளோடு கூட்டணி.  2001 ல் தனித்து போட்டி. தி மு க வின் வெற்றியை நிறைய தொகுதிகளில் வாக்குகளை பிரித்து பறித்தார்.  2006  ல் அ தி மு க வோடு கூட்டு . 35  இடங்களில் போட்டியிட்டார். 2011 ல் அ தி மு க கைவிட்டதால் போட்டியிடவே இல்லை. 
ஆனால் அனைத்து தேர்தல்களிலும் தி மு க வை எதிர்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். 
             இப்போது மக்கள் நல கூட்டியக்கம் என்ற பெயரில் இரண்டு கம்யுனிஸ்டுகள் தொல் திருமா ஆகிய நால்வரும் கூட்டணியாம்.   
              நிற்கும்போதே  தோற்போம் என்று தெரிந்தே நிற்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு மட்டும் அல்ல இந்த கூட்டியக்கம் என்று வேறு பேட்டி தரு;கிறார் வைகோ. 
              ஆறு கட்சியாக ஆரம்பித்து தமிழருவி மணியனும் ஜவஹரில்லாவும் கழன்று கொள்ள நாலு கட்சி கூட்டணியாக மாறியது .
                   இவர்கள் ஆட்சியை விட்டு அகற்றப்பட வேண்டிய அதிமுகவையும் , ஆட்சியிலேயே இல்லாத தி மு க வையும் ஒன்றாக உருவகப் படுத்தி கேலிச்சித்திரங்கள்  வருவதைப் பார்த்து வைகோவின் சுயரூபம் அம்பலமாகி வருகிறது.
              இவரோடு கூட்டு சேர்ந்திருக்கிற அனைவரும் தேர்தல் வரை கூட்டணியில் நீடிப் பார்களா.?

மாட்டுக்கறி சாப்பிட்டதாக வதந்தி பரப்பப்பட்டு கொல்லப்பட்ட அக்லக்;’ துப்பட்டாவை நழுவ விட்ட 4 வயது மகளை அடித்துக் கொன்ற முஸ்லிம் அப்பா; ; கிணற்றில் விழுந்த பசுவை காக்க க்ரேனுடன் கிணற்றில் குதித்த முகமது சகி ; மூன்றும் நடந்தது உ.பி.யில்;- விநோதமா? விபரீதமா?


        உ.பி.யின் பிசொதா கிராமத்தில் வசிக்கும்  6000   இந்துக்களுடன்  50 முஸ்லிம் குடும்பங்கள் சுமுகமாகத்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். 
             ஒருநாள் கோவிலில் அக்லக் வீட்டில் மாட்டுக்கறி சமைத்து வைத்து இருப்பதாக தகவல் சொல்லப் படுகிறது. ஒரு கூட்டம் சேர்ந்து கொண்டு அக் லக்கை அடித்தே கொன்றிருக்கிறார்கள்.   அவரது மகனும் காட்டுத்தனமாக தாக்கப் பட்டிருக்கிறார்.   இறக்கும் முன் தன் இந்து நண்பருக்கு போன் செய்து போலீஸ் உதவி கோரியிருக்கிறார்.   
             போஜ்புரா தாலுகா வை சேர்ந்த சந்த் பாபு ,  வீட்டில் சாப்பிடும்போது  4  வயது மகள் தனது துப்பட்டாவை நழுவ விட்டதில்  இஸ்லாத்துக்கு விரோதமாக ஷரியத் துக்கு எதிராக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி மகளின் தலையை தரையில் பலமுறை மோதியதில் மகள் இறந்தார்.   மகள் நாகரிக  மோகத்தில் சம்பிரதாயத்தை கடைப் பிடிப்பதில்லை என்று வேறு சொல்லி இருக்கிறார்.
       

       

               பாலிகேடா பகுதியில் மசூதியில் தொழுகையை முடித்துக் கொண்டு திரும்பிய முகமது சகி , கிணற்றில் தவறி விழுந்த பசுவைக் காப்பாற்ற கிரேன்  இறக்கப்பட்டபோது அதனுடன்  தானும் இறங்கி பசுவைக் காப்பாற்ற உதவியிருக்கிறார்.   
                மூன்று சம்பவங்களும் உ/பி.யில் .    ஆனால் மூன்றும் வெவ்வேறு உண்மைகளை உலகத்துக்கு  வெளிச்சம் போட்டு
 காட்டியிருகிறது. .  
                   மதவெறியை கிளப்பிவிட்டு ஆதாயம் அடையும் கூட்டம் திட்டமிட்டு மதக் கலவரத்தை உருவாக்கி வருகிறது. 
                     குழந்தையைக் கொல்லும் அளவு மதம் மனிதனை மிருகமாக்கி விடும்..
                   நேய உணர்வு மதம் சாராதது. 
           சுயமரியாதை இயக்கம் அகில இந்திய அளவில் விரிவடையும் நாளே பொன்னாள். 

இலங்கையை காப்பாற்ற இந்திய அமெரிக்க கூட்டுச்சதி நிறைவேறியது??? போர்க்குற்றம்- இனப்படுகொலை குற்றச்சாட்டு எல்லாம் இனி ஓராண்டு கழித்து காணாமல் போய் விடும்!!! தமிழர் கூட்டமைப்பு வரவேற்ற மர்மம???

                  ஐ நா வின் மனித உரிமை கவுன்சிலால் நியமிக்கப் பட்ட குழுவே தனது அறிக்கையை தாக்கல் செய்தது;
                அதில் அதன் தலைவர்  குறிப்பிட்டு இருக்கும் கருத்து தெளிவானது.                      ஒன்று போர்க்குற்றம் குறித்து சர்வதேசிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.  இரண்டு, போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை உகந்தது அல்ல. 
         ஆனால் இலங்கை இதை ஒப்புக்கொள்ள முடியாது என்ற பிறகு அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொண்டு உள்நாட்டு விசாரணையில் காமன்வெல்த் நாட்டு நீதிபதிகள் ஆலோசனை சொல்லலாம் என்று புதிய தீர்மானத்தை வடிவமைத்து அது  
30  ம் தேதி வந்தது.   
            அதன் தலைப்பே சுமுக உறவையும் பொறுப்பேற்கும் தன்மையையும் மனித உரிமைகளையும் இலங்கையில் வளர்ப்பது  என்பதுதான்.   
           ஆக போர் க் குற்றமும் இன அழிப்புக்குற்றமும்  தீர்மானத்திலேயே இல்லை. 
              இந்தியா அமெரிக்கா சீனா உள்ளிட்ட 47  நாடுகளும் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை இலங்கையும் சேர்ந்து முன் மொழிந்தது.    
            விவாதமின்றி நிறைவேறிய இந்த தீர்மானம் மூலம் போர்க்குற்ற தண்டணை அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.  
              இலங்கை அரசே விசாரிக்கும் நிலையில் அந்நிய நீதி பதிகள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும்? 
                  தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தீர்மானத்தை வரவேற்று  இருந்தாலும் அதன் முக்கிய  உறுபினர்கள் இந்த தீர்மானத்தால் எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை என்றே கருத்து கூறி இருக் கிறார்கள். .
               அநீதி மீண்டும் அரியணை ஏறி இருக்கிறது.    

ஸ்டாலின் கோயிலுக்கு சென்றது தவறா? கட்சிக்கு விரோதமானதா? அ தி மு க வின் விமர்சனத்தில் நேர்மையில்லை!!!

                நமக்கு நாமே என்ற திட்டத்தில் மக்களை நாடு முழுவதும் சந்திக்க திட்டமிட்டு பயணம் வருகிறார் ஸ்டாலின்.   அதில் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் திருகோஷ்டியூர் கோயிலுக்கு மனைவி துர்காவுடன் சென்றிருக்கிறார்.   மனைவி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க ஸ்டாலின் கோவிலின் சரித்திர பூர்வ ஆதாரங்களை  பார்வை இட்டிருக்கிறார் .  
               இந்தக் கோயிலின் தான் ஸ்ரீ ராமானுஜர் தனது குருவின் கட்டளையை மீறி கோபுரத்தில் அமர்ந்து கொண்டு ‘ ஓம் நோ நாராயணா’ மந்திரத்தை அனைவருக்கும் உபதேசித்தார் என்பது வரலாறு. அதைத்தான் கலைஞரும் ஸ்ரீ ராமானுஜர் என்ற பெயரில் கலைஞர் தொலைகாட்சியில் தொடராக வசனம் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.    மதத்ல் புரட்சி செய்த மகானாக ராமானுஜர் பாராட்டப் படுகிறார் என்பது உண்மை. 
               உண்மையில் வைணவம் சாதிகளை அங்கீகரிப்பதில்லை. . சாதிகளை அங்கீகரிக்காத வைணவத்தில்தான் சாதி தனி  உரிமைகள் கோலோச்சி வருகிறது என்பதும்  உண்மை. 
              ஸ்டாலின் மனைவி துர்கா தனது பக்தியை மறைத்ததில்லை.   அது அவரின் தனிப்பட்ட உரிமை.  அதற்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு.? 
               நாத்திகரின் மனைவிக்கு நம்பிக்கை இருந்தால் தவறா?  எல்லோரையும் மதிப்பது ஸ்டாலின் குணம்.    அந்த ரீதியில்தான் கோவில் வருகையும் இருந்திருக்கிறது. 
                ஒருவகையில் ஸ்டாலின்  இந்துகளின் எதிரியல்ல என்பதை இந்த கோயில் வருகை உணர்த்தியிருக்கிறது.  
                இதில் அ தி  மு க வருந்த என்ன இருக்கிறது? 

இசைப்பரியா படுகொலை தொடர்பான சினிமா ஐ நா வில் திரையிடப்பட்டது. இந்தியாவில் தடை ஏன்?


               
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச்சேர்ந்த
 இசைப்ரியா என்ற இளம்பெண் இறுதிகட்ட போரின்போது இலங்கை ராணுவத்தால் பிடித்துச்  செல்லப் பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்ட இந்த சினிமா படத்தை ஐ நா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் ” போர்களத்தில் ஒரு பூ ” என்று திரையிடப்பட்டது.   
             இந்தியாவின் இரட்டை வேடம்  காட்டப் பட்டு விட்டது. 
     
         இந்தியாவில் இந்த சினிமாவுக்கு தடை விதிக்கப் பட்டிருக்கிறது.  அவ்வளவு பயமா?   அல்லது நட்பு நாட்டை காட்டிக் கொடுக்க தயக்கமா?  போரில் தானும கூட்டாளி என்பது தெரிந்து விடுமே என்ற நாணமா?  

அமெரிக்காவின் துரோகத்துக்கு துணை போகிறதா இந்தியா? ஐ.நா. மதிப்பிழந்து போகிறது. !!! ஈழத்தின் அவலம் தொடரப் போகிறதா?

0
       போர்க்குற்ற விசாரணையை ஐ.நா. குழு துவங்கி  இலங்கையீன் ஒத்துழைப்பு இல்லாமலேயே அதன் தலைவர்  அல் ஹுசைன் இறுதி அறிக்கை தாக்கல் செய்து விட்டார்.    
      அதில் அவர் குறிப்பிட்டு இருக்கும் கருத்து தெளிவானது. ஒன்று போர்க்குற்றம் குறித்து சர்வதேசிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.  இரண்டு, போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை உகந்தது அல்ல. 
         ஆனால் இலங்கை இதை ஒப்புக்கொள்ள முடியாது என்ற பிறகு அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொண்டு உள்நாட்டு விசாரணையில் காமன்வெல்த் நாட்டு நீதிபதிகள் ஆலோசனை சொல்லலாம் என்று புதிய தீர்மானத்தை வடிவமைத்து அது வருகிற  
30  ம் தேதி விவாதத்துக்கு வருகிறது.  
             இதைவிட பச்சைத் துரோகம் இருக்க முடியாது.   இலங்கை நாட்டிலேயே விசாரணை நடத்துவதற்கு விசாரணையே தேவை இல்லை என்ற முடிவுக்கு தமிழர்கள் வரலாம்.    ஏனெனில் எந்த நியாயமும் உள்நாட்டு விசாரணையில் கிடைக்கப் போவதில்லை. 
              கலைஞர் சர்வதேச விசாரணையை உறுதி படுத்த கோரி மத்திய அரசை வேண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேபோல் எல்லா கட்சிகளும் சர்வதேச விசாரணை வேண்டு;ம் என்றும் கோருகிறார்கள்.   அதுதான் இலங்கைத் தமிழர்களுக்கும் உடன்பாடானது.   ஆனால் தமிழர்கள்  எதிர் பார்க்கும் எதையும் செய்ய இலங்கை ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. 
             காங்கிரஸ் கொண்ட கொள்கையை விட மிக மோசமான கொள்கையை பா.ஜ. க அரசு கொண்டிருக்கிறது.    தன் நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிற தமிழர்களுக்கு இலங்கை பகை நாடு. ஆனால் இந்தியாவுக்கு நட்பு நாடு என்ற  முரண்பட்டு நிற்பதை இந்தியா உணரவில்லை. 
             தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு சாலை அமைக்கும் திட்டம் எதற்காக?   சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தும் உபாயம் தானே? 
            போர்க்குற்ற விசாரணை நடந்தால் சிங்களர்களுக்கு உலக சமுதாயம் மீது அச்சம் வரும்.   தமிழர்களுக்கு  உரிய அரசியல் தீர்வை அளிப்பது பற்றி சிந்திப்பார்கள்..  
            தண்டணை இல்லை என்றால் தமிழர்களுக்கு உரிமை கொடுப்பது பற்றி  சிந்திக்க வேண்டிய அவசியம் சிங்களர்களுக்கு எழாது.  
             ஐ நா வும் அநியாயத்துக்கு துணை போனால் எப்படி நீதி நிலை  பெறும்?  
              அநியாயம் நிலைக்காது!!!!!

வழக்கறிஞர்களை மிரட்டுகிறார்களா நீதிபதிகள்? எல்லை மீறி போராடுகிரார்களா வக்கீல்கள்? உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாவதை தடுக்கும் சக்தி எது?

0
நீதித்துறையே இன்று முகம் வெளிறிப் போய் கிடக்கிறது. 
          ஊழல் நீதிபதிகளை பட்டியலிட்ட வக்கீல்கள் செய்தது சரியா ? அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதிகள் மீது எந்த விசாரணையும் இல்லையே என்பது சரியா;?
              போராடுகிறோம் என்று நீதிமன்றத்துக்குள் நுழைந்தது தவறு என்றால் அவர்கள் குறையை கேட்பதற்கு கூட நீதிபதிகள் தயாராக இல்லையே ஏன்?  
             சங்க அறையை காலி செய்யுங்கள் என்றும் பனிரெண்டு பேரை சஸ்பெண்டு செய்கிறோம் என்றும் நீதிபதிகளும் பார் கவுன்சிலும் முண்டா  தட்டுகின்றன.   
              நீதிமன்ற புறக்கணிப்பு தவறு என்றால் எப்படி கவனத்தை ஈர்ப்பது ?    எது செய்தாலும்  விளக்கம் தர மாட்டோம் என்றால் எப்படி பிரச்சினை தீரும்? 
             எல்லாம் போகட்டும்!    அரசியல் சட்ட பிரிவு  348 ( 1 )   ன் படி உச்ச நீதிமன்றத்திலும் உயர்நீதி மன்றதிலும் நீதிமன்ற மொழி ஆங்கிலம்.   பிரிவு  348 ( 2 ) ன் படி குடியரசுத் தலைவரின் முன் அனுமதியோடு ஆளுநர்  அந்தந்த மாநில மொழிகளை நீதிமன்ற  மொழியாக அனுமதிக்கலாம் . 
             இந்த பிரிவின் படி உத்தரபிரதேசம் மத்தியபிரதேசம் பீகார் , ராஜஸ்தான்  ஆகிய மாநிலங்களில் அனுமதி பெற்று உயர்நீதி மன்ற மொழியாக இந்தி பயன்பாட்டுக்கு வந்து விட்டது. 
             இதே உரிமை தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளுக்கு உண்டா இல்லையா?    
               இந்த வேறுபாட்டை களைய வேண்டிய கடமை தமிழக அமைச்சரவைக்கும் உண்டல்லவா?   
               ஆனால் அமைச்சர் வேலுமணி உச்ச நீதி மன்ற இசைவை பெறுவதற்காக நீதிபதிகள் கொண்ட முழு அமர்வில் வைக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம்  08.09.2015  தேதிய கடிதம் மூலம் தெரிவித்திருப்பதாக  சட்ட மன்றத்தில் கூறினார். 
             ஆனால் அரசியல் சட்டம் அதிகாரத்தை குடி அரசுத் தலைவருக்குதான் கொடுத்திருக்கிறது.   இதில் உச்ச நீதிமன்றம் முழு அமர்வில் கூடி மாற்று கருத்தை தெரிவித்தால் அது சட்ட பூரவமாக இருக்குமா?  
               இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு  மாநில அரசு  ஆளுநரிடம் பேசி குடியரசு தலைவரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் இல்லையேல் வெளியேறவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். 
              நீதித்துறை தன்னை சுத்தப் படுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இது. 
             மாநில அரசு மத்திய அரசிடம் பாரத்தை போட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ள முடியாது. 
              உயர் நீதி மன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாக ஆகும் நாளே   கூட்டாட்சி  உண்மையாக மலரும் நாள். !!!!