Home Blog Page 113

28.7 லட்சம் மக்கள் இந்தியாவில் மதமற்றோர்!! கணக்கெடுப்பில் தகவல். ! முறையாக கணக்கெடுத்தால் எண்ணிக்கை உயரும்!!??

                  இந்தியாவில்   28.7  லட்சம் மக்களும்  தமிழ் நாட்டில்  1  லட்சம் மக்களும் தாங்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவர் இல்லை என்று பதிவு செய்திருக்கிறார்கள். 
                 இவர்கள் அனைவரும் நாத்திகர்கள் , பகுத்தறிவாளர்கள், மற்றும்  எந்த  குறிப்பிட்ட மதத்தையும் சாராத ஏதோ ஒரு  அடையாளம் தெரியாத சக்தியை நம்புபவர்களாக இருக்கிறார்கள். 
                 உ.பி யில் ஆறு லட்சம்  பேரும் பீகார் மே.வங்கம் , ஆந்திர , தெலங்கானா கர்நாடகா  தமிழ் நாட்டிலும் தலா  ஒரு லட்சம் பேர் மதமற்றவர்களாக பதிவு செய்திருக்கிறார்கள். 
                தமிழ் நாட்டில்தான் பெரியார்  1879 -1973  ல் சுமரியாதை பிரசாரம் செய்தார் என்றால் மற்ற மாநிலங்களில் யார் செய்தார்கள். ?
சரியான முறையில் பதிவு செய்தால் இந்த எண்ணிக்கை உயரும். 
              WIN – Gallup – 2012 லிருந்து செய்த பதிவில் இந்தியாவில் 3%  மக்கள் நாத்திகர்களாகவும் 3%  எதுவும் சொல்ல விரும்பாமலும் இருகிறார்கள்.      81 %  இந்தியர்கள் மத  நம்பிக்கை 
உள்ளவர்களாகவும்  13 %  இந்தியர்கள் எந்த மதத்தையும் சேராதவர் களாகவும் இருக் கிறார்கள். 
              மதமற்ற ஆனால் இறை நம்பிக்கை உள்ளவர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக  மதச்சன்டைகள் ஒழியும் போட்டிகள் மறையும் நாடு நலம்பெரும் !!!!

இடஒதுக்கீட்டு கொள்கையை ஒழித்துக்கட்ட பா ஜ க – ஆர் எஸ் எஸ் கூட்டு சதி!!?? குஜராத்தில் படேல் சமூகத்தின் போராட்ட பின்னணி என்ன?? மறைந்திருக்கும் உண்மைகள் !!!????

                  இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினாலும் குஜராத்தின் படேல் சமூகத்தினர் ஹர்திக் படேல் தலைமையில் நடத்தும் போராட்டத்தின் உண்மை நோக்கம் இட ஒதுக்கீடு கொள்கையை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பதே!
                படேல் சமூகத்தினர் வசதி மிக்கவர்கள்.   முற்பட்ட சமூகத்தினர் என்று வகைப் படுத்தப்பட்டவர்கள் . 
               திடீரென்று பத்து லட்சம் பேரைக் கூட்டி ஒன்று இட ஒதுக்கீட்டிலிருந்து நாட்டை விடுவிப்போம் ! அல்லது எல்லாரையும் இட ஒதுக்கீட்டின் அடிமைகள் ஆக்குவோம் ! என்று குரல் கொடுப்பதன் நோக்கம் வெளிப்படையாக தெரிகிறது. யாருக்கும் கிடைக்கக் கூடாது இட ஒதுக்கீடு சலுகை!!
               தனக்கு தொடர்பு இல்லாதது போல் காட்டிக் கொள்ள ஆர்.எஸ் எஸ் முயற்சித்தாலும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.   மூன்றில் ஒரு பங்கு  பா ஜ க சட்ட மன்ற உறுப்பினர்கள்  பட்டிதார்கள்  என்கிற படேல்கள் .   .பா ஜ க விற்கு எதிரான போராட்டமாக இதை எடுத்துக்கொள்ள முடியாது.    
                 பொது கோட்டாவிலும் இடம் பெறுகிற வர்களுக்கு தனியிடம் ஏன் ??? இதுதான் அவர்கள் வைக்கிற வாதம். 
பொது கோட்டா என்று ஒன்றில்லை.      பொதுப்போட்டி என்றுதான் இருக்கிறது.     பொதுபோட்டியில் தாழ்த்தப்பட்டோர் பிற்பட்டோர் போட்டியிட என்ன தடை?      தகுதி படைத்தவன் போட்டியிடுகிறான் .    தகுதி மறுக்கப் பட்ட இதர பிரிவினர் சலுகை  கோருகிறார்கள் ..
இதில் என்ன முரண்பாடு? 
                தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்தில் உள்ளது.  மாற்ற முடியாது.      மற்றவர் இட ஒதுக்கீடு பின்னால் வந்தது.       ஆனால் அடிப்படை ஒன்றுதான் .       சமூக , கல்வி ஆகிய இரண்டின் அடிப்படையில் பிற்பட்ட தன்மை. ஆம்.   நீ தாழ்த்தப்பட்டவன் , நீ பிற்பட்டவன்  , உன்னுடைய இடம் இது , மற்றவர்களுடைய இடம் அது என்றெல்லாம் சமுதாயத்தையே பிரித்துப்போட்ட வேத விதிகளை சட்டமாக வைத்திருந்த  காலம்.   நீ படிக்கக் கூடாது , படித்தால் நாக்கை அறுப்பேன்  வேதத்தை கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவேன் என்றெல்லாம் எழுதி வைத்து அடக்கி ஒடுக்கி வைத்திருந்த காலம். எனவேதான்   சமூக கல்வி தன்மையை மட்டும் அடிப்படையாக அரசியல் சட்டம் வகுத்து ஒதுக்கீடு வழங்கியத. 
                              பொருளாதார ரீதியில் அல்ல. இருந்தாலும் உச்சநீதி மன்றம் கிரீமிலேயர் என்கிற பசையுள்ளவர்கள் என்ற அடிப்படையில் பிற்பட்டோரில் உள்ளவர்களே கூட ஒதுக்கீடு உரிமை இல்லாதவர்கள் என்று தீர்ப்பு அளித்தது..     
                         ஐம்பது சதத்துக்கு மேல் ஒதுக்கீடு கூடாது என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பு  கூட தமிழ் நாட்டில்   69  % என்ற அளவில் ஆண்டாண்டு இடங்களை அதிகப் படுத்தி அமுல்படுத்தப் பட்டு வருகிறது. 
                     வி. பி. சிங் மண்டல கமிஷன் பரிந்துரைப்படி  27 % ஒதுக்கீடு செய்ய முனைந்த போதும் இதே போல்தான் போராட்டம் வெடித்தது என்பது மறக்க முடியாது. 
                    மருத்துவர் ராமதாஸ் போன்றவர்கள் கூட எல்லாருக்குமே அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்து விடலாம் என்கிறார்கள். 
                   இதில் மறைந்திருக்கும் சூழ்ச்சியை அவர்கள் . கவனிக்க தவறுகிறார்கள்.
                    சாதியை உறுதி செய்ய எல்லா  சாதிகளும் வேற்றுமை மறந்து  ஒன்றுபடுவதை  தடுக்க எல்லாருக்கும்  சாதி அடிப்படையில் ஒதுக்கீடு தவிர வேறு ஆயுதம் அவர்களுக்கு கிடைக்காது.    நம் கையை வைத்து நம் கண்ணை குத்தும் கலை இது என்பதை தவிர வேறு என்ன?. 
                    ஒர்வேளை   சாதி நீடிக்க வேண்டும் என்று ஆசைபடுபவர்கள் வேண்டுமானால் எல்லாருக்குமே சாதி அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க விரும்பலாம். 
                     ஹர்திக் படேல் குஜ்ஜார் இனத்தவரையும் சேர்த்துக் கொண்டு போராட திட்டமிடுகிறார்.   எல்லா முற்பட்ட சமூகத்தவரையும் இணைத்து ஒதுக்கீட்டுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணை க்கிறார்.     இதற்கு ஆர் எஸ்  எஸ் துணை போகிறது.   
                ஏனென்றால் அப்போதுதானே தலையில் பிறந்தவர்கள் முதல் நிலையில் நீடித்து குருவாக கோலோச்சி ஆன்மிக பீடங்களை அலங்கரிக்க முடியும்.   கீழே இருப்பதற்கு யார் போட்டியிட்டால் அவர்களுக்கு என்ன/ ?
                    
                 இவ்வளவு பேசுகிறார்களே ஒதுக்கீடு என்ன விளைவுகளை ஏற்படுத்தியி ருக்கிறது  என்று ஏன் இவர்கள் ஆய்வு செய்து முடிவை வெளியிட மறுக்கிறார்கள்.    அரசியல் சட்டத்தில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறதே?
               வர்ணாசிரம தர்மம்  நிலைக்க பாடுபடும் யுத்தத்தின் ஒரு பகுதிதான் படேல்களின் போராட்டம்.     அதை வெற்றி பெற அனுமதிக்க கூடாது.  
                 ஜனநாயக நெறிமுறைகளின் படி நடக்கும் போராட்டம் அல்ல இது.            இருந்தால் பேச்சு வார்த்தைக்கு 
உடன் பட்டிருப்பார்களே? 
                 காங்கிரஸ் அல்லாத அரசுகள் மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் ஒதுக்கீடு பிரச்சினை முன்னுக்கு வருவது முதலில்  வி பி சிங் ஆட்சிக்காலத்திலும் இப்போது நரேந்திர மோடி ஆட்சிக்காலத்திலும் தொடர்கிறது..    
                சதியின் ஆணிவேரை கண்டறிந்து களைவோம்??!!!!

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் காப்பாற்றப்பட்டது !!! மருத்துவ மனையாக மாற்றும் ஜெ. அரசின் உத்தரவு ரத்து?! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு??!!!

               ஜெயலலிதா அரசு பதவியேற்றவுடன்  கலைஞர் திறந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவ மனையாக மாற்ற உத்தரவிட்டிருந்தார்.   அதை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்து வைத்திருந்தது. 
                   5.4   லட்சம் புத்தகங்களுடன் மிகப் பெரிய நூலகத்தை வேண்டுமென்றே மருத்துவ மனையாக மாற்ற முயற்சித்ததே  கண்டிக்கத்தக்கது.   உடனடியாக  ஆணையர் அமைத்து பார்வையிட்டு அரசு செய்த அலங்கோலங்களை தெரிந்த பின் ஆணையர்கள் தெரிவித்து இருந்த கருத்துகளை நிறைவேற்றிட உத்தரவிட்ட நீதிபதிகள் அமுல்படுத்திய அறிக்கையை அடுத்த மாதம் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர் . 
                  கடந்த நான்கு ஆண்டுகளாக பராமரிப்பு எதுவும் இன்றி நூலகமே பாழ் பட்டு போய் இருக்கும் நிலையில் இனியாவது   அரசு கடமையை செய்யுமா ?  அல்லது மேல்முறையீடு செய்து தனது மக்கள் நலன் காணா வெறுப்பை உமிழுமா என்பதை இனிதான் பார்க்க வேண்டும். 
                   தேர்தல் வரும் காலம் என்பதால் மேல்முறையீடு செய்யாது  என்பதை எதிபார்க்கலாம்.
                      ஜெயலலிதா இனியாவது தன் போக்கை மாற்றிக் கொள்வாரா?
                    நீதிமன்றத்தின்  குட்டு வாங்குவது இந்த அரசுக்கு வழக்கமான ஒன்றாகி விட்டதே?!!!!

போராட்டம் போதும் ! ஜெயலலிதா அறிவிப்பு! இதுவரையில் நடந்த அராஜகம் ஜெயலலிதா சொல்லித்தானா???? சட்ட ஒழுங்கை சீர்குலைத்தது தமிழக அரசே ???!!!


                 ஈ வி கே எஸ் இளங்கோவன்  கொடும்பாவி எரிப்பு காங்கிரஸ் அலுவலகங்கள்  மீது  தாக்குதல் , என்று கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும்  ரணகளம் ஆனது. 
                மோடி- ஜெயலலிதா சந்திப்பு பற்றி இளங்கோவன் சொல்லியது ஆட்சேபகரமானது என்றே வைத்துக் கொள்வோம்!!!       50  நிமிடங்கள் என்ன பேசினார்கள் என்று கேட்பது வேறு.    தனிமையில் என்ன செய்தார்கள் என்று கேட்பது வேறு!   
                  அதற்குத்தான் அரசை விட்டு அவதூறு வழக்கு தாக்கல் செய்தாகி விட்டதே!   பிறகு ஏன் தமிழகம் ஸ்தம்பிக்க வேண்டும்?   
               தேசீய அளவில் இந்த ஆர்பாட்ட செய்திகள் பிரபலம்!   சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசே ஆர்ப்பாட்டங்களை தூண்டலாமா? 
               தொடங்கிய உடனே முதல்வர் அறிக்கை விட்டிருக்க வேண்டும்!    ஆனால் பத்து நாட்களுக்கும் மேலாக எல்லா நகரங்களிலும் அ தி மு க வி னர்  அராஜகங்களை நிறைவேற்றிய பின்னர் இன்று அறிக்கை விடுகிறார் ‘ போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் ??!!!     அப்படியானால் இதுவரை நடந்தது எல்லாம் நீங்கள் சொல்லித்தானா? 
              இதுவரை மௌனம் காத்து வேலை முடியட்டும் என்று 
காத்திருந்தீர்களா?
                 சாதனை என்று ஏதாவது இருந்தால் எல்லாரையும் பயத்தில் வைத்திருந்தது தானோ? 

சாதியத்திடம் தோற்றுகொண்டிருக்கும் இந்துத்துவம்! தலித்துகளின் தேரை எரித்த சாதி வெறி! மௌனம் காக்கும் இந்து அமைப்புகள்!!!????


               விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் சேஷசமுத்திரம்  கிராமத்தில் தலித்துகள் தாங்கள் பகுதியில் அம்மன் சிலையை மாட்டு வண்டியில் கொண்டு சென்று வந்தததற்கு பதிலாக தேர் ஒன்று செய்து அதில் ஊர்வலம் நடத்த முடிவு செய்தார்கள்.       சாதி இந்துக்கள் நடத்தும் திருவிழாவில் தங்களுக்கு தகுந்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் அவர்கள் எடுத்த இந்த முயற்சிக்கும் சாதி இந்துக்கள் தடை விதிக்கவே காவல் துறையின் அனுமதியோடு  திருவிழா நடத்த துணிந்திருக்கிறார்கள்.
                    பௌத்த மதம் மாறப்போவதாக அவர்கள் அறிவித்த பிறகு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு கொடுக்க முனைந்திருகிறது.     அதையும் மீறி தேரையும்  தலித்துகளின் வீடுகளையும் பெட்ரோல் குண்டுகள் வீசி தீக்கிரையாக்கி இருக்கிறர்கள் சாதி வெறியர்கள். 
                     முடிவில்லாமல் தொடரும் இது போன்ற வக்கிர சம்பவங்கள் காட்டும் உண்மை என்ன???  
                      இந்து மதம் என்று சொல்லப் படுகின்ற சனாதன மதம் என்கிற வர்ண தர்ம மதத்தில் சாதி ஒற்றுமை என்பது கானல் நீரே என்பதுதானா ?
                   இதைப் பற்றிப் பேசி ஒற்றுமை ஏற்படுத்தவோ தவறு செய்கிறவர்களை கண்டிக்கவோ மதத் தலைவர்களோ சாதித் தலைவர்களோ எந்த அரசியல் தலைவர்களுமோ யாரும் தீவிரமாக  இல்லை என்பது தான் உண்மை. 
                      ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பை சந்திக்க யாருமே தயாராக இல்லை. 
                    அரசுகளும் பாராமுகமாகவே செயல் படுகின்றன . சென்னை உயர்நீதிமன்றம் கூட சாதி ஒற்றுமையை ஏற்படுத்த முடியாவிட்டால் திருவிழா நடத்த அனுமதி தராதீர்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறது என்றால் நிலைமை எவ்வளவு கேவலம்.. 
                     ஆதிக்க சக்திகளின் இடமும் இந்து மதத்தில் கேவலம்தான். . இவர்களுக்கு பிராமணர்கள்  பூசை செய்யும் கோவில்களில் பூசை செய்ய அனுமதி கிடையாது. வன்னியர்கள் தங்களை அக்னி குண்டத்தில் இருந்து பிறந்தவர்கள் என்று இந்து புராணங்களைத்தான்  துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். 
               இந்து என்று அழைத்துக் கொள்கிறவர்கள்  சாதிக்கு தாங்கள் மதத்தில் அல்லது வழிமுறையில்  என்ன இடம் என்று விவாதித்து விடை காண முயற்சிக்க வேண்டும்.    கண்டும் காணாமலும் இருக்கிற இந்த பிரச்சினையை  விரைவில் தீர்க்கா விட்டால் தமிழர் ஒற்றுமையும் நிரந்தரமாக பாதிக்கப் படும் .    என்ன செய்யப் போகிறோம்????

பூமிக்கடியில் ஓடும சரஸ்வதி நதியைக் கண்டெடுக்க பா ஜ க அரசுகள் முனைப்பு!!! மூடநம்பிக்கைக்கு கஜானாவை காலி செய்வதா? நீதிமன்றங்கள் தலையிட வழி உண்டா???

            புராண இதிகாசங்களில் குறுப்பிடப்படும் சரஸ்வதி நதிக்கு புத்துயிர் கொடுக்க பா ஜ க ஆளும் ராஜஸ்தான் அரியானா அரசுகள் முனைப்புக் காட்டுகின்றன. 
               ராஜஸ்தான் மாநில நதிக்கரை மற்றும் நீர் வளத்திட்ட ஆணையத் தலைவர் ஸ்ரீராம் வேதிரே  இந்த தகவலை கூறினார். 
             ராஜஸ்தான் மாநில அரசு சரஸ்வதி நதிக்கு புத்துயிர் அளிக்கும் பணியை நதிக்கரை மற்றும் நீர் வளத்திட்ட ஆணையத்திடம் ஒப்படைதுள்ளதாம்.   இஸ்ரோ, மத்திய நீர்  வள வாரியம் மாநில நிலத்தடி வாரியம் தேசீய நீரியல் மையம் ஆகியவற்றுடன் சரஸ்வதி நதி குறித்து மேற்கொள்ளப் போகும் ஆணையம் இணைந்து செயல் படுமாம். 
                  சரஸ்வதி நதியை கண்டறிவதற்கான பணியை அரியானா அரசு சரஸ்வதி நதி பாரம்பரிய வளர்ச்சி வாரியம் என்ற அமைப்பை ஏற்படுத்தி யுள்ளது. தற்போதும் நிறைந்து ஓடும சிந்து நதிக்கு இணையாக உள்ள பாலைவனப் பகுதி முற்காலத்தில் சரஸ்வதி நதியாக ஓடி அரபிக்கடலில் கலந்ததாக நம்பப் படுகிறது என்றும் வேதிரே  தெரிவித்தார். 
                     ஓடும நதிகளை கவனிக்க  மத்திய அரசுக்கு நேரம் இல்லை.   இதில் இல்லாத  நதியை தேடி எத்தனை கோடிகளை செலவழிக்கப் போகிறார்களோ?   
                      இதை மூட நம்பிக்கை என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது. ?        அரசு பணம் விரயம் ஆவதை தடுக்க நீதி மன்றம் தலையிட முடியாதா? 
                    மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நதி நீர் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு விட்டு எதையாவது செய்து கொள்ளுங்கள் என்று யார் சொல்வது?   
                 பெரும்பான்மை இருந்தால் இப்படி அறிவுக்கு பொருத்தமில்லாத காரியங்களை செய்வதற்கு அதிகாரம் உண்டா?   
                ரொம்ப தப்பான  வழியில் போகிறது பா ஜ க.!!!!   
              எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!!!!!

தாதுமணல் கொள்ளையில் அரசு காட்டும் மெத்தனம் காட்டும் உண்மை என்ன??? பிரமிக்க வைக்கும் தகவல்கள் !!!!

                                தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் சட்ட விரோதமாக அபூர்வ ரக தாதுக்களான கார்னெட் , சிர்கான், ருடைல், மாக்னசைட் போன்ற ஆயிரக்கணக்கான கோடிகள் பெருமானமுள்ள தாது மணலை வி வி மினரல்ஸ் மற்றும் டிரான்ஸ் வேர்ல்ட் கார்ணட் இந்தியா கம்பெனி இரண்டும் தோண்டுவதை ஆய்வு செய்ய ககன் தீப் சிங் பேடி ஐ ஏ எஸ் தலைமையில் ஒரு விசாரணை கமிட்டியை  2013  செப்டம்பரில் அரசு அமைத்தது.   

                              இந்த விசாரணையைதான்   உயர் நீதி மன்ற நீதிபதி டி.ராஜா தள்ளுபடி செய்ததுடன் இந்த விசாரணையை வினோத் குமார் சர்மா என்ற ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு நடத்தவும் உத்தரவு இட்டிருந்தார். 
                            இதற்கு முன்பு நீதிபதி சி. எஸ் கர்ணன் , இந்திய சுரங்க மையத்தின்  (  Indian bureau of Mines )  இரண்டு கம்பனிகளின் உரிம  ரத்து ஆணைகளை தனது  32  தீர்ப்புகளில் ரத்து செய்திருந்தார். 
அதுவும் மத்திய அரசின் வாதங்களை கேட்காமலும்   மத்திய அரசின்  மையம் தனது எதிர் வாதுரையை தாக்கல் செய்யும் முன்பும். 
                           இந்த இரண்டு உத்தரவுகளையும் உயர்நீதிமன்ற பெஞ்ச் நிறுத்தி வைத்தது. பல்வேறு இலகாக்களில் இருந்து  230  பேர் பணியாற்றும் வேலையில் விசாரணையின் தலைமை அதிகாரி மட்டும் ஏதும் செய்து விட முடியாது என்று வாதிட்ட அரசின் நிலைபாட்டை பெஞ்ச் ஏற்றுக்கொண்டது. 
                        30,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்றும் ஏறத்தாழ ஆண்டுக்கு 30,000  கோடி வருவாய் பாதிக்கப் படும் என்றும் வி வி மினரல்சின் இயக்குனர் சுப்ரமணியன்  கூறியிருக்கிறார்.   
                     ஜெயலலிதா அரசு  பொறுப்பேற்ற உடனே தாது மணலை ஏன் அரசே ஏற்றுமதி செய்யக் கூடாது என ஆய்வு செய்யப் போகிறோம் என்ற அறிவிப்பின் இறுதி நிலை என்ன என்பது தெரியவில்லை. 
                      இந்த தாதுக்கள் தான் கடல் அரிப்பை தடுக்கும் சக்தி வாய்ந்தவை என்றும் இந்த மணல் அள்ளும்நடவடிக்கைகளால் கடல் நீர் கிராமங்களில் புகுந்து குடிநீரை பாழ் படுத்தி விடுகின்றன என்றும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
               வேலை வாய்ப்பு இழப்பு  ,   ஆயிரக்கனக்கான கோடிகளில் லாபம் என்கிறார்களே அதை  அரசுக்கு கொண்டு  வர ஏன் முயற்சிக்கவில்லை?    
                டாஸ்மாக் மூலம் மக்களின் எதிர்காலத்தை   பாழாக்கி விலையில்லா பொருட்கள் வழங்கி விலையில்லா அறியாமையை வளர்க்கும் தமிழக அரசு தாது மணல் கொள்ளைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். 
                     கொடுமை என்னவென்றால் நீதிமன்ற தடையையும் மீறி தாது மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுவதுதான் !!!!    
                        அப்படிஎன்றால் உண்மைக் குற்றவாளிகள் யார்???

சிலை திருட்டு வழக்கில் இயக்குனர் சேகர் கைது??? உறுதிப்படுத்த பட வேண்டிய தகவல்கள் ! அதிர்ச்சி தரும் உண்மைகள்!!!


                    குடும்பப் பாங்கான படங்களை எடுத்துப் புகழ் பெற்ற ஒரு நல்ல இயக்குனர் சிலை திருட்டு வழக்கில் கைதாவார் என யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். 
                  அவரே கூட தன்னை சந்தித்த சினிமா துறையினரிடம் தான் குற்றவாளியல்ல என்றே கூறியிருக்கிறார். 
                  பிணை மனு அனுமதிக்கப்படும் பட்சத்தில் வெளியே வந்துதான் அவரது வாக்குமூலம் உலகுக்கு தெரியும். 
              ஓரளவு நல்ல நிலையில் வாழும் இயக்குனர் சேகரைப் போன்றவர்கள் தகாத நபர்களுடன் வைத்திருந்த தொடர்பு அவரை இந்த வழக்கில் சிக்க வைத்து விட்டதா?   அவரது கலைக்கூடத்தில் குற்றாளிகள் கூடி சதி செய்து பல கோயில்களில் உள்ள சிலைகளை திருட சதி செய்தார்கள் என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. 
               கலைச்சின்னங்களை  திருடும் கும்பலோடு அவர் தொடர்பு வைத்திருந்தார் என்பதை உறுதிப்படுத்த  முயற்சித்து வருகிறோம் என டி ஜி பி பிலிப் கூறியிருக்கிறார்.   உறுதிப்படுத்தாமலா கைது செய்திருக்கிறார்கள்???
             மும்பையை சேர்ந்த வியாபாரிகள் மூலமாகவேதான் புராதன சிவ ஆலயங்கள் பற்றிய விபரங்களை சேகரித்த தாக சேகர் வாக்குமூலம் அளித்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். 
               இப்போதைக்கு பிடிபட்ட ஒரு குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பது தெரிகிறது. 
                
                          குற்றம் செய்தார் என்பது இறுதியில் நிரூபணம் ஆனால் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட ஏழ்மைதான் காரணம் என்பது அடிபட்டுப் போகும்.         சமுதாயத்தின் கேடுகளை ஆய்வு செய்பவர்கள் கூட கேடுகள் செய்யத் துணிய தயங்க மாட்டார்கள் என்பதற்கு சேகர் கைது சான்றும்  ஆகிவிடும். மாறாக கைதுக்கு காரணம் வெறும் சந்தேகமே என்பது உறுதிப் படுத்தப் பட்டால் காவல் துறையின் நடைமுறைகள் மறு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் !!! 

உழைக்காமலேயே பிழைக்கும் கலையை கற்றவர்கள் ராகுல்காந்தி குடும்பம்?!!! அருண் ஜெட்லி தாக்கு!!!! பரஸ்பர குற்றச்சாட்டுகளால் நாற்றமெடுத்த பாராளுமன்றம் !!!!!!!


                       பாராளுமன்ற மக்களவை ஒதுக்கபட்ட நேரத்தில்  48% மும் மேலவை 9 % மும் மட்டுமே வேலை செய்திருக்கிறது. 
                        பாராளுமன்றம் நடத்த ஒரு நிமிடத்துக்கு  Rs. 30,000  செலவாகிறது. கடந்த  19 வருடங்களில் 2,163  மணி நேரம் வீணடிக்கப் பட்டிருக்கிறது. எனவே தடங்கல் இல்லாமல் பாராளுமன்றம் இயங்க ஒரு வழிகாட்டு முறைகளை வகுத்து தர கோரி  உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தக்கலாகி இருக்கிறது. 
                        குழாயடிச் சண்டை அளவுக்கு பாராளுமன்ற விவாதம் இருந்திருக்கிறது.    
                       லலித் மோடிக்கு சிபாரிசு செய்ததில் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்று ராகுல் நேரடியாக சுஷ்மா ஸ்வராசைப் பார்த்துக் கேட்க ‘ போய் உங்கம்மாவிடம் கேள். எவ்வளவு பணம் குவாத்ரோசியிடம் இருந்து வந்தது என்று ” என சுஷ்மா பதிலுக்கு முழங்க வாரன் அன்டர்சன் என்ற போபால் விஷ வாயு வழக்கில் சம்பத்தப்பட்டவரை திருட்டுத்தனமாக அமெரிக்க அனுப்பி விட்டு அதற்கு பதிலாக நேரு குடும்பத்துக்கு வேண்டிய முகமது யூனுஸ் மகன் அடில் ஷா என்பவரை அமெரிக்காவில் இருந்து கொண்டு வரவில்லையா எனவும் பதில் கேள்வி எழுப்ப சபை விவாத மன்றமாக இல்லாமல் வசைபாடும் மன்றமாக மாறிப் போனது . 
                   ஒரு கட்டத்தில் காங்கிரஸ் விவாதங்களை அனுமதிக்க மறுப்பதில் தனிமைப் பட்டு போனது.
                     பாராளுமன்றத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது.    இந்த அளவு தரம் தாழ்ந்து தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டும் சம்பவங்கள் இதுவரையில் நடந்தது இல்லை .   
                    எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக  அருண் ஜெட்லி  சொன்னார் ,  ‘ இன்னமும் நாணயமான பல மனிதர்களின் குழந்தைகள் வாழ்வதற்கு என வேலை செய்துதான் பிழைக்கிரார்கள். 
ஆனால் பல தலைமுறைகளாக இந்த நாட்டின் அரசியலில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பம் மட்டும் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்ததே இல்லை. வேலை செய்யாமலேயே எல்லா வசதிகளுடனும் வாழ்வதை ஒரு கலையாகவே அவர்கள் கற்றிருக்கிறார்கள்.   நமக்கு அது தெரியவில்லை. ”   என்று நேரடியாகவே ராகுல் சோனியா குடும்பத்தை குற்றம் சாட்டினார். 
                     இவர்கள் போட்ட சண்டையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப் பட்டதும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறுவது தள்ளிப் போனதும் தான் நடந்தது. 

நெய்வேலி யில் மத்திய மாநில அரசுகள் காட்டி வரும் மெத்தனம் காரணமாக உற்பத்தி பாதிக்கும் அபாயம்! மின்வெட்டு வரும் ஆபத்து.!! தனியார் மயமாக்க சதியா???


              நெய்வேலியில் உற்பத்தியாகும்  1450  மெகவாட் மின்சாரத்தில் தமிழ்நாட்டின் பங்கு 40 %..     
              ஜூலை மாதம் 20 ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தில் நிரந்தர தொழிலாளர்கள்  12,000 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.    2012  ஜனவரியில் புதுப்பித்திருக்க வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் 30  முறை பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவேதும்  ஏற்படாமல்  போகவே அறிவிப்பு கொடுத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். 
                தி மு க ஆட்சிகாலத்தில்  1997 ல்  60 % ஊதிய உயர்வும்  2007 ல் 25 % ஊதிய உயர்வும் ஒப்பந்தமானது குறிப்பிடத்தக்கது.   
               இப்பொழுது பத்து சதத்துக்கு மேல் உயர்வு கிடையாது என்று நிர்வாகம் பிடிவாதம் பிடிப்பதால் பிரச்சினை வளர்ந்து கொண்டே போகிறது.        
                1500  கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் நிறுவனத்தில்
 தொழிலாளர்களுக்கு  ஒரு நீதி நிர்வாகத்துக்கு ஒரு நீதி என ஊதிய உயர்வில்  பாரபட்சம்  கடைபிடிக்கப் படுவது ஏன் ? 
                உயர்நீதிமன்றம் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என அறிவித்திருப்பது சரிஇல்லை என்பதோடு ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சினையிலும் நிர்வாகம் பாரபட்சம் காட்டுகிறது. 
                ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து நிர்வாகம் சமாளித்து வந்த நிலையில்   2013 ல் ஒப்பந்த தொழிலாளர்கள்  52   நாள் தொடர் வேலைநிறுத்தம் செய்ததற்கு தொ மு ச செயலாளர் திருமாவளவன் தான்   காரணம் என குற்றம் சுமத்தி  2015 ல் அவரை திடீரென பணி நீக்கம் செய்ததன் நோக்கம் என்பது புதிராக இருக்கிறது. 
              ஏற்கனவே  மோடியின் ஆட்சி தனியார் நிறுவனங்களின் ஏஜெண்டு போல் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் லாபம் தரும் நெய்வேலி அனல் மின் நிலையத்தையும் நட்டத்தில் வீழ்த்தி அதையே காரணம் காட்டி தனியார் மயமாக்கும் ரகசிய திட்டம் வேலை செய்கிறதோ என்ற அச்சத்தையும் அனைவர் மத்தியிலும் நிரவாகத்தின் போக்கு உருவாக்கியிருக்கிறது. 
             முதல்வர் ஜெயலலிதா சென்ற மாதம் 23 ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் உடனடியாக நிலக்கரித் துறை அமைச்சர் இதில் தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என கேட்டு கொண்டார்.   இதுவரை பதில் இல்லை. 
             பிரதமர் சென்னை வந்து ஜெயலலிதா வீட்டில் விருந்து உண்டபோது அளிக்கப் பட்ட  21   கோரிக்கைகள் அடங்கிய மனுவிலும் நெய்வேலி  பிரச்சினை இடம் பெற வில்லை. 
               இரண்டு நாட்களுக்கே நிலக்கரி  இருப்பு இருக்கும் நிலையில் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது. 
                 தமிழக அரசும் மத்திய அரசும் தீவிர கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டிய பிரச்சினையில் மெத்தனம் காட்டுவதும் தொழிலாளர் தலைவர்களை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் நிலைமையை மோசமாக்கவே உதவும். 
                ஒருவேளை அவர்கள் திட்டமிடுவதும் அதுதானோ?