முருகன் ,சாந்தன்,பேரறிவாளன் விடுதலை தாமதமாவது ஏன் ? காங்கிரசின் அடிச்சுவட்டில் பா.ஜ.க.?/
அப்துல் கலாமுக்கு வரலாறு காணாத அஞ்சலி!!! யாகுப் மேமனுக்கு தூக்கு!!! இதுதான் இந்தியா !!!!
ராகுல் தவறவிட்ட வாய்ப்பு ! சென்னை வந்தும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பேசாதது ஏன்? குற்ற உணர்வா???
அவசரநிலையை பிரகடனப்படுத்தி ய தற்காக சென்னைக் கூட்டத்தில் மன்னிப்புக் கேட்டவர் இந்திராகாந்தி.
இந்துக்களுக்கு எதிரான இந்து முன்னணியின் கோரிக்கை..?? நுழைவுக் கட்டணத்தை ரத்து செய் என்பது அர்ச்சகர்களுக்கு ஆதரவானது தானே..!!
நாக்கை வெட்டுவாராம் எம். பி.சுந்தரம்!!! ஜெயலலிதா உடல்நிலை பற்றி பேசினால்? நாடு எங்கே போகிறது????
கூட்டணி வைக்க அமைச்சரவையில் இடம் கேட்கும் கட்சிகள்!! நிபந்தனைகளின் உள்நோக்கம் என்ன?
ஏரிகளை ஆக்ரமிக்கும் குற்றம் தொடர யார் காரணம்? போரூர் ஏரி நடுவில் ரோடு போடும் பொதுப் பணித்துறை ? பசுமை தீர்பாயம் தடை????
முதல்வர் அலுவலகம் வருவதற்கு போஸ்டர் பேனர்களா ? ஜெயலலிதாவுக்கு நடக்கும் கூத்து தெரியாதா? தடுக்காவிட்டால் நடத்துபவரே அவர்தான் என்றே பொருள்/!!!!!!
மெட்ரோ ரயில் சென்னையில் துவக்கம்!!! ஜெயலலிதா தடுக்க முடியாத கலைஞர் துவங்கிய திட்டம்!!!! விரிவு படுத்தினால் நெரிசல் குறையும்!!!!!!
2006 ல் திமுகவின் தமிழக அமைச்சரவை விவாதித்து திட்ட அறிக்கை தயாரிக்க டெல்லி மெட் ரோவிடம் பொறுப்பை ஒப்படைத்து அந்த அறிக்கைக்கு 07.11.2007 ல் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து , 03.12.2007 ல் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் பதிவு செய்து, 21.11.2008 ல் மத்திய அரசும் ஜப்பான் அரசும் டோக்கியோவில் ஒப்பந்தம் போட்டு அதற்கு 28.01.2009 ல் மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் கொடுத்து 10.06.2009 ல் மு.க. ஸ்டாலினால் திட்டப் பணிகள் துவங்கி வைக்கப் பட்டு 15.02.2011 ல் மத்திய அரசு , மாநில அரசு, மற்றும் மெட்ரோ கம்பனிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இறுதியாக 29.06.2015 ல் ஜெயலலிதாவால் துவங்கி வைக்கப் பட்டது.
கலைஞர் காலத்தில் துவங்கி ஜெயலலிதா காலத்தில் முதல் கட்ட போக்குவரத்து தொடங்கியது என்றால் சரிதான். அதே சமயத்தில் கலைஞர் காலத்தில் தொடங்கிய சமச்சீர் கல்வி, தலைமை செயலக கட்டடம், அண்ணா நூற்றாண்டு நூலகம் செம்மொழிப் பூங்கா போன்றவற்றை நிறுத்த முயற்சிததைப் போல் மேட்ரோவிற்கு மாற்றாக மோனோ ரயில் திட்டத்தை ஜெயலலிதா முன்னெடுத்தார். ஆனால் எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்க வில்லை. காலத்தின் கட்டாயம் மெட்ரோ ரயில் வந்தே விட்டது. அதில் கட்டண குறைப்பு விரிவாக்கம் போன்ற நிறைய பணிகள் காத்துக் கிடக்கின்றன. இந்நிலையில் திமுகவிற்கும் இந்த திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா அறிக்கை விட வேண்டிய அவசியம் என்ன<????
பெருந்தன்மை ஆட்சியாளர்களுக்கு அவசியம். மற்றவருக்கு உரிய பங்கை அளிப்பதில் அரசியல் செய்வது,தன் மதிப்பை தானே குறைத்துக்கொள்ள முற்படுவது போலாகும். முதலீட்டளவில் மற்ற மெட்ரோக்களை விட சென்னை மெட்ரோ அதிக முதலீடு செய்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அதிக கட்டணம் கொடுக்க சென்னை வாசிகள் கடமைப் பட்டவர்கள் அல்ல.
பங்குதார் என்ற அடிப்படையில் கட்டண சமத்துவம் நிலவ செய்வதில் அரசுக்கு உரிய பொறுப்பை எடுத்துரைத்து கட்டண குறைப்பு செய்து முதல் வகுப்பை ஒழித்து அவசியமான சீர்திருத்தங்களை செய்தால் சென்னை மக்கள் நன்றி சொல்வார்கள்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
vaithiyalingamv@gmail.com