Home Blog Page 116

கோகுல்ராஜை கொன்றது சாதி வெறியர்கள்? கவுரவக் கொலைகளை தடுக்கக்கூடிய தனிச்சட்டம் தேவை!!!!

               ஓமலூர் என்ஜினியர் கோகுல்ராஜ்  என்பவர்பின் உடல் ரெயில் தண்டவாளத்தில் கிடந்தது.    அவர் தாழ்த்தப் பட்ட வகுப்பை சேர்ந்தவர்.   அவருக்கும் கவுண்டர் வகுப்பை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் இருந்ததாகவும் அதனால் பெண்ணின் வகுப்பை சேர்ந்தவர்கள் அந்தப் பையனைக் கொன்று தண்டவாளத்தில் போட்டு விட்டதாக கூறி சில நாட்களாக பல போராட்டங்கள் நடந்தன. 
                    இப்போது இந்த வழக்கு சம்பந்தமாக ஆறு பேர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.  
—               விசாரணையில் கோவிலுக்கு வந்த காதல் ஜோடியை  சின்னமலை பேரவையை சேர்ந்தவர்கள் விசாரித்து இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்று  தெரிய  வந்து பெண்ணை மட்டும் அனுப்பி விட்டு இந்த பையனை மட்டும் அழைத்து சென்று கொன்று வீசியிரு;கிறார்கள். 
                 தனிப்பட்ட விரோதம்  ஏதுமில்லாமலே  மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே கொன்றிருக்கிறார்கள். 
                 தர்மபுரி இளவரசன் -தொடர்ந்து இப்போது ஓமலூர் கோகுல்ராஜ்.   கேள்விக்குறியாகி நிற்கிறது தமிழ்ச் சமுதாய ஒற்றுமை. 

சட்டமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஜெயலலிதா அரசு தயங்குவது ஏன் ? மக்களுக்கு உண்மை தெரியாமல் மறைப்பது குற்றமல்லவா?

            சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெகதீஸ்வரன் என்பவர் தொடுத்த வழக்கில் சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு ஆட்சேபணை தெரிவித்துள்ளது.. 
             கேரளா, கர்நாடகா , ஆந்திர ,டெல்லி அரசுகள் ஒளிபரப்ப தயங்காத போது தமிழ்நாடு மட்டும் தயங்குவது ஏன்/   
             அரசியல் சட்டத்தின் பிரிவு 118 மக்கள் மன்றங்கள் தங்களுக்கு தாங்களே விதிகளை வகுத்துக் கொள்ள உரிமை வழங்குகிறது. அதன்படி வகுக்க பட்ட விதிகளின் படி சபாநாயகருக்கு ஒளிபரப்ப உரிமை கொடுக்க அதிகாரம் இருக்கிறது.     
              2004 ல் இருந்து  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேரடி ஒளிபரப்பு நடக்கிறது.  மய்யமண்டப்பதில் எம்பிக்கள் கூடுவது மசோதாக்களை கிழித்து எறிவது போன்றவை நடக்கின்றன.   அதை பொதுமக்கள் பார்க்கின்றனர்.    எடை போடுகின்றனர்.   என்ன கேட்டு விட்டது. 
               நிதி வசதி இல்லை என்கிறார்கள்.   தனியார் சேனல்களுக்கு உரிமை கொடுத்தால் என்ன?    எல்லா நாடுகளிலும் நடக்கின்ற நடைமுறை தானே? 
                 அம்மா தாயே என்று மூச்சுக்கு முன்னூறு தடவை துதி பாடுவது, யாராவது எழுந்தால் அமைச்சர்கள் எழுந்து ஒரு மணி நேரம் விளக்கம் என்ற பெயரால் பேசிக்கொண்டே அவர்களை பேச விடாமல் தடுப்பது, தடதடவென்று மேசையில் தட்டிக்கொண்டே இருப்பது , கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்களை திட்டுவது, கடுமையான தண்டனைகளை கொடுத்து வெளியேற்றும்போது மறுத்தால் காவலர்களை வைத்து வெளியேற்றுவது என்று ஜனநாயகத்துக்கு புறம்பான அனைத்தையும் செய்வதால் அவை மக்களுக்கு தெரியாமல் மறைக்க வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சிக்கு இருக்கிறது என்பதைத்தான் அரசின் ஆட்சேபணை காட்டுகிறது. 
                   சமீபத்தில் மத்திய தகவல் ஆணையம் கொடுத்த உத்தரவின் பேரில் டெல்லி அரசு சட்டமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொடங்கியது. அதேபோல் உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தால்தான் அரசு ஒளிபரப்பும் என்றால் மக்களுக்கு இறுதி நம்பிக்கை நீதிமன்றம்தான். 
                  ஆட்சியின் அந்திம காலத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு நீதிமன்றம் தரும் உத்தரவுகளை நிறைவேற்றும் கடமையையாவது செய்ய மனம் வருமா? 
                  இல்லை சட்டத்தின் பொந்துகளில் ஒளிந்து கொள்வார்களா/ 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

நேர்மையற்ற வெற்றி நிலைக்குமா? ஆர் கே நகரில் ஜெயலலிதா பெற்ற வெற்றி பெருமைப்படத்தக்கதா ?

முழுப்பூசணிக்காயை சோற்றில்  மறைக்க முடியமா?
                     முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜெயலலிதா!
              நாடே விழித்திருக்கையில் இத்தனை அக்கிரமங்களை பட்டப் பகலில் நிகழ்த்த முடியுமா? 
                முடியும் என்றும் நிரூபித்திருக்கிறார்!
               சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவுடன் ;உச்சநீதி மன்றத்தில் பிணை பெற்ற வேகம், மூன்று மாதத்துக்குள் மேல்முறையீட்டை முடிக்க சொல்லி உத்தரவு சொல்லிவைத்தாற்போல் விடுதலை  தீர்ப்பில் கண்ட தவறுகளை பல நாளேடுகளும் சுட்டிக் காட்டிய பின்பும் கவலையே படாமல் தேர்தல் ஆணையம் மூலம் குறிப்பிட்ட தேதியில் இடைத்தேர்தல் ,அதில் ரஜ கஜ துரக பதாதிகளை இறக்கி எல்லாரையும் முடக்கி வெற்றி அறிவிப்பு ,மீண்டும் சட்ட மன்ற உறுப்பினர்.    உச்சநீதி மன்ற மேல்முறையீடு கர்நாடக அரசுக்கு வெற்றி கொடுத்தால் அல்லது உச்சநீதி மன்றம் ஏதாவது இடைக்கால உத்தரவு இட்டால் எல்லாம் இல்லாமல் போய் விடுமே  என்ற எந்த கவலையும் இல்லாமல் அதற்கும் ஒரு விலை இல்லாமலா போகும் என்ற நம்பிக்கை!!!   
              ஒண்ணரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் ஜெயலலிதா?  கம்யூனிஸ்டு மகேந்திரன் வாங்கிய ஒன்பதாயிரத்து எழுநூறு வாக்குகளும் டிராபிக் ராமசாமி வாங்கிய இரண்டாயிரத்து அறுநூறு வாக்குகளும் விலை மதிப்பற்றவை . 
                துணிச்சலை பாராட்டலாம் !     தவறு செய்கிறவர்களுக்கு இருக்கும் துணிச்சல் பாராட்ட தக்கது தானா? 
               அது தவறை ஊக்குவிப்பது ஆகாதா?    தவறுக்கு ஊதியம் அளிப்பது ஆகாதா?   
                   யார் செய்தாலும் தவறு தவறுதான்.   திருமங்கலத்தில் தி.மு.கவுக்கு அப்படி ஒரு பெயர் சூட்டினார்கள்.   அதற்குரிய தண்டனையை மக்கள் அவர்களுக்கு வழங்கி விட்டார்கள். 
                 ஆணவப் போக்கையும் அதிகார துஷ் பிரயோகத்தையும் தனது ஆட்சி முறையாக்கி கொண்டுள்ள ஜெயலலிதா அதற்குரிய பலனையும் இனி எதிர்பார்த்தே இருக்க வேண்டும். 
              இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது
 அஹ்தொப்பது இல் என்றார் வள்ளுவர். 
                 அதாவது துன்பம் வரும்போது கலங்காதே அடுத்து வருவது மகிழ்ச்சி தரும்  என்று பொருள்.   
                 அதன் இன்னொரு பொருள்.    முறையற்ற இன்பம் வரும்போது அதிகம் ஆடாதே . ஏனெனில் அடுத்து வருவது வருத்தம் தரும் ???   
               

கருத்து சுதந்திரம் காக்கப்படவும் வேண்டும் , வெறுப்பை உமிழும் அரசியல்வாதிகள் தண்டிக்கப் படவும் வேண்டும் – அரசுகளின் கடமை என்ன ?

                 ‘ எங்களை விமர்சிப்பவர்களின் கண்களை தோண்டி எடுத்து வீசுவோம்  கைகளை வெட்டி எறிவோம்,’ என்றெல்லாம் பேசி இருப்பவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற  உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி .    
                 ஆளுவது மமதா பானர்ஜி.   எப்படி நடவடிக்கை எடுப்பார். /   
               பேச்சுரிமை கொடுத்திருக்கும் அரசியல் சட்டம் நியாயமான கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது.  எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதல்ல சட்டம்.

               நரேந்திர மோடி என்னதான் கட்டுப் பாடுகளை விதித்தாலும் பா. ஜ.கவின் பல தலைவர்கள் தாறுமாராகத்தான் பேசி வருகிறார்கள். குறிப்பாக சாக்ஷி மகராஜ், நிரஞ்சன் ஜோதி போன்றவர்கள் முஸ்லிம்களை குறி வைத்து பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்றும் முறை தவறி பிறந்தவர்கள் என்றும் வன்முறைக்கு வித்திடும் வண்ணம் பேசி வருவதை வழக்கப் படுத்தி விட்டார்கள்.

             தமிழ் நாட்டில் எச் .ராஜா முஸ்லிம் பெண்கள் பர்தா அணியக் கூடாது என்று பேசியிருப்பதும்  ஒருவித பயங்கரவாதம்தான்.. 
            இந்த வகை வெறுப்பு பேச்சுக்களை கட்டுப் படுத்தும் வரை முறைகளை வகுக்க வேண்டி தாக்கல் செய்யப் பட்டிருக்கும் போது நல வழக்கு ஒன்று உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிர வீன் தொகாடியா,, அக்பருதீன் ஒவைசி , ராஜ்தாக்கரே போன்றவர்களின் வெறுப்பு பேச்சுக்களை எப்படி கட்டுப் படுத்தப் போகிறீர்கள் என்று உச்ச நீதி மன்றம் கேட்டுள்ளது. 
             அதே நேரத்தில் தனக்கு எதிரான கருத்து உடையவர்களை வழக்குப் போட்டு அலைக்கழிக்கும் அரசுகளின் பிடியில் இருந்தும் பேசுபவர்களை காக்கும் பொறுப்பும் நீதி மன்றங்களுக்கு இருக்கிறது.

            சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்து அதில் இந்திய தண்டணை சட்டத்தின் பிரிவுகள்   153, 153-A, 153-B, 295, 295A, 298 ,505  போன்ற பிரிவுகளின் மீது அரசுகள் வழக்கு தொடுக்க நிபந்தனைகள் விதித்து நெறிப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார் .    அது வரும் ஜூலை மாதம் விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப் படுகிறது. 
             நூற்றுகணக்கான வழக்குகளில்  நீதிமன்றங்கள் வன்முறை பேசியவர்களை தண்டித்திருக்கிறது.    ஆனாலும் வன்முறைப் பேச்சுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  

             மதம்  இனம் , மொழி தொடர்பான பல பிரச்னைகளில் மாறுதல்கள் அவசியம் தேவை. மாற்றங்களை வலியுறுத்தி பேசும்போது ஒருசிலரின் ஆதிக்கத்தின் ஆழம பற்றி பேசத்தான் வேண்டும்.   அதைக்கூட கொள்கை வழி நின்றுதான் பேச வேண்டுமே தவிர தனிப பட்ட முறையில் தாக்கிப் பேச யாருக்கும் உரிமை இல்லை.

         கொடுமை என்னவென்றால் எந்த ஆதிக்கத்தை எதிர்த்து போராடுகிரார்களோ அவர்கள் மீதே ஆதிக்க சக்திகள் நீதி மன்றங்கள் துணை கொண்டே தடை யாணை பெறுவதுதான். .   
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

தனக்கு வந்த ஆபத்தை நாட்டுக்கு வந்ததாக மாற்றிய இந்திரா கொண்டு வந்த அவசர நிலை எதிர்காலத்தில் வருமா?


தேர்தல் முறைகேடு காரணமாக அதாவது தேர்தல் பணியில் அரசு அதிகாரியை ஈடு படுத்தியதால் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப் பட்ட இந்திரா உச்ச நீதிமன்றத்தில் தடை கிடைக்காததால் அவசர நிலையை பிரகடன படுத்தி பதவியில் நீடித்தார். 
        சட்டத்திற்கு புறம்பான கட்டளை களுக்கு பணியாதீர் என்று ஜெயப்ரகாஷ் நாராயணன் முழுப் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார். 
        இன்று ஜெயலலிதா தனக்கு வந்த பதவி இழப்பு சதியால் என்று கூறுகிறார்.   சொத்து  வாங்க குவிக்க சொல்லி யார் சதி செய்தார்கள். 
          தானே தனக்கு குழி வெட்டிக் கொண்டு பழியை பிறர மீது சுமத்துவது என்ன நியாயம்?   
           அவசர நிலை பிரச்சினை மத்தியில்  ஆளுபவர்கள் மட்டும் சம்பத்தப் பட்டது அல்ல.   ஆட்சியில் இருக்கும் எல்லோருக்கும் அது பொருந்தும். 
         எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மக்கள்தான். 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

வையத் தலைமை கொள் -பாரதியின் கனவு நனவாகிறது. !!! சர்வதேச யோகா தினம் 192 நாடுகளில் கொண்டாட்டம் !!! மத , கட்சி சாயம் பூச முனைவோரிடம் எச்சரிக்கை அவசியம்!!!!

யோகக் கலை இந்தியாவில் தோன்றி உலக நாடுகளில் வளர்ந்திருக்கிற , உடலையும் மனதையும் பக்குவப் படுத்தும் கலை .  
       பிரதமர் மோடி ஐ.நாவில் பேசி அந்த அவையும் ஒப்புக் கொண்டு ஜூன் 21  ம் தேதியை உலக யோகா தினமாக அறிவித்து இருப்பது நமக்கு பெருமை அளிக்கும் ஒன்றுதான். இதில் 47 முஸ்லிம் நாடுகளும் அடக்கம். 
        மூச்சுப் பயிற்சியும் உடற்பயிற்சியும் மதம் கடவுள் சம்பத்தப் தட்டது அல்ல. 
         இதனால் ஏதோ பா.ஜ.க  வளர்ந்து விடும் என்ற பயம் தேவை இல்லை. 
         அமெரிக்காவில் இது ஆன்மிகம் மட்டுமல்ல. பல லட்சம் டாலர் சம்பத்தப் பட்ட வணிகமும் ஆகும். 
          கம்யுனிஸ்டுகளும் நாத்திகர்களும் இதை கண் மூடித் தனமாக எதிர்ப்பது தேவை அற்றது. 
           யாராவது இதை அரசியல் ஆக்க முனைந்தால் தோல்வி உறுதி. 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

சரத்குமார்- ராதாரவி மோசடி முயற்சி வெற்றி பெறுமா? அரசியலில்தான் பகல் கொள்ளை என்றால் நடிகர் சங்கத்திலுமா ?

                                      சென்னை மாநகரத்தின் நடுவில் 68 ஆயிரம் சதுர அடி இடத்தில் ஒரு கட்டடம் கட்டக் கூட முடியாமல் நடிகர் சங்கம் யாரோ ஒருவரிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு வெறும்  24  லட்சம்  மாதம் வருமானம் என்றும் தனக்கு என கொஞ்சம் இடம் மட்டும் போதும் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை எல்லாரும் ஏன் என்று கூட கேட்காமல் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அதுவும் வழக்கை வாபஸ் பெற்றால்தான் எதுவும் பேச முடியும் என்றும் பட்டப் பகலில் விதண்டா வாதம் செய்யும் சரத் குமார் ஒரு அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். 
              நடிகர்கள் பொதுமக்களுக்கு சொந்தமானவர்கள்.   இது சங்கத்தின் பிரச்சினை என்று ஒதுக்கி விட முடியாது. பொது மக்கள் கருத்து சங்கத்தில் பிரதிபலிக்க வேண்டும்.     நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதன் விபரங்கள் பொதுமக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்.
                    கட்டடம் கட்ட நடிகர்களே நிதி தர , திரட்ட தயாராக இருக்கும்போது ஏன் வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கேள்விக்கு சரத் குமாரும் ராதாரவியும் பதில் சொல்லத்தான் வேண்டும்.       
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

ஜெயலலிதா ரூ 2.22 கோடி சொத்து குவித்தது உண்மை ! எனவே விடுதலை?!!! நீதியரசர் குமாரசாமியின் தாறுமாறு தீர்ப்பு!!!!!

             எந்த தீர்ப்பாக இருந்தாலும் சட்டத்துக்கும் சாட்சியத்திற்கும் முரணாக இருப்பதாக சொல்லித்தான் மேன்முறையிடுகள் செய்யப் படுகின்றன.   
             குன்ஹா கொடுத்த தீர்ப்பில் என்னென்ன தவறுகள் இருப்பதாக குமாரசாமி கண்டு பிடித்து அவர் கொடுத்த தண்டனையை இவர் ரத்து செய்தார் என்பதை அப்புறம் பார்க்கலாம். 
             இவர் கொடுத்த தீர்ப்பிலேயே ஜெயலலிதா வாங்கிய கடன் கூட்டு தொகை  24.17  கோடி அல்ல 10.67  கோடிதான் என்றால் அதிக சொத்து 2.22  கோடிக்கான  8.12  சதவிகிதம்  அல்ல என்றும் அது  16.32 கோடிக்கான  76.32 சதவிகிதம் என்றும் ஆகிறதே அப்படி என்றால் அது காலாவதியாகிப்போன 1976 தீர்ப்பின் படியே கூட  தண்டனைக்குரிய குற்றம் ஆகிறதே இப்போது இந்த தவறி யார் சரி செய்வது. ? 
             ஒரு தவறை தெரிந்தே செய்து அது சரி செய்யப் படும் வரை பதவியில் இருந்து கொண்டு  அந்த தவறையும்  சரியாக்கி விட முயற்சி மேற்கொள்ள கொடுக்கப் பட்ட வாய்ப்பாக  ஜெயலலிதா  இந்த தீர்ப்பை பயன் படுத்தலாம். 
             தீர்ப்பை  தவறாக எழுதலாம்.  ஆனால் விமர்சிக்க முயன்றால் மிரட்டப் படும் சூழ்நிலை தமிழ் நாட்டில் நிலவுவது நல்லது அல்ல. 
              தப்பை சரியாக செய்தால் தப்பே இல்லை என்று ஒரு திரைப்பாடல் சமீபத்தில் வந்தது.   இவர்கள் தப்பையும் தப்பு தப்பாக செய்து விட்டு எல்லோரும் அதை சரி சரி என்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்களே ? 
               இவர்கள் கையில் தமிழகம் நீடித்தால் எதிர்காலம் என்ன ஆகும்? 

கல்யாணம் செய்யாமல் ” லிவிங் டுகெதர் ” வாழ்க்கையை அறிமுகப்படுத்திய மணிரத்னம்! ஓடி ஒளிந்த இந்து இயக்கங்கள்.???!!!!ஒ காதல் கண்மணி படம் காட்டிய பாடம்.???

        தாலி வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் பல நூற்றாண்டுகளாக தமிழ் நாட்டில் விவாதிக்கப்பட்டது.     அதையே புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதம் நடத்த முயன்றபோது டிபன் பாக்ஸ் குண்டு வெடிக்கப் பட்டது. 
      ராம கோபாலன் களும் இந்து இயக்கங்களும் என்னவெல்லாமோ பேசினார்கள்.    
        இத்தனைக்கும் விவாதத்தில் கலந்து கொள்ளப் போனவர்கள் அனைவரும் பெண்களே. 
         கலைஞர் தாலி அவரவர் விருப்பம் என்று சொல்லி விட்டார். 
       இப்போது மணிரத்தினம் ஒரு படம் எடுத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதில் கல்யாணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக வாழலாம் என்ற கருத்து முதல் முறையாக தமிழ் சினிமாவில் நுழைக்கப்பட்டுள்ளது.   கடைசியில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது வேறு. 
      இது இந்துக் கலாச்சாரத்தின் மீதான படை எடுப்பாக எந்த இந்து இயக்கமும் கருத வில்லை. 
        அவாள் செய்தால் எதுவும் தப்பில்லையே ,. ஒருவேளை அவாளே அந்த முறையை நோக்கிப் போறாளோ என்னவோ?     வாழ்ந்தால் சரி.!!!

சிறு குறு தொழில்களை காற்பரெட்டுகளுக்கு தாரை வார்க்க தயாராகும் மோடி அரசு. !! லட்சக் கணக்கில் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்?

ஊறுகாய் , மெழுகுவர்த்தி ,தீப்பெட்டிகள் ,சலவை சோப்பு  ஊதுவத்தி ,ரொட்டி  கண்ணாடி வளையல்கள், பட்டாசு புத்தகம் நோட்டு தயாரிப்பு போன்றவை இது வரை சிறு குறு தொழில்கள் என வரையறை செய்யப் பட்டு இருந்தது. 
             இது போன்ற  20  பொருட்களை சிறு குறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
              இவற்றை நம்பி இருக்கும் சுமார்  60  லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
             இவற்றை கார்பரேட்டு நிறுவனங்கள் பெரிய அளவில் தயாரிக்க ஆரம்பித்தால் சிறு குறு தொழில் முனைவோர் என்பவர்கள் தாக்குப் பிடிப்பார்களா? 
            தொழிலாளர்களை ஒழித்து விட்டு நீங்கள் எதை சாதிக்கப் போகிறீர்கள்/ ?
              மோடி அரசு சாமானியர்களுக்கு எதிரான அரசு! 
              மௌனம் காக்கிறது  மாநில அரசு. ?  மத்திய அரசை நோக்கி கண்டன கணைகள் பறக்கட்டும் !!!