Home Blog Page 119

எல்லை தாண்டி வந்தால் இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வோம் !!! ரணில் விக்கிரம சிங்கேவின் ஆணவப் பேச்சு???

              தந்தி டி.வி. பேட்டியில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே  சொன்ன கருத்துக்கள் அவரது ஆணவத்தை வெளிப்படுத்துகிறதா ?
தமிழர்கள் இனப்படுகொலையில் இந்திய அரசின் பங்கை காட்டிக் கொடுக்கிறதா?   இந்திய அரசின் தமிழர் விரோத கொள்கையை வெளிச்சமிடுகிறதா?
              ரணில் என்ன சொன்னார்?    
      ”   ஒருவர் ஏன் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றால் நான் அவரை சுடலாம்.    சட்டம் அதை அனுமதிக்கிறது. ”  
        ” போரில்  வெல்ல இந்தியா நிச்சயமாக உதவி செய்தது. ”   
         ” இந்தியா இதை தொடர்ந்து மறுத்து வருகிறதே என்று கேட்கிறீர்கள்?  மறதி என்பது அரசியல்வாதிகளுக்கு மிக சாதாரணம்.”
         ”    கச்சத்தீவை நாங்கள் விட்டுத் தரப் போவதுமில்லை. ஒப்பந்தத்தில் கொடுக்கப் போவதுமில்லை. இந்தியா இதை எழுப்பப் போவதுமில்லை. இந்தியா இதை எழுப்பாது.”   
              ரணில் பேசியது இலங்கையின் குரலா இந்தியாவின் குரலா என்ற சந்தேகம் தேவை இல்லை.     ஏனென்றால் அவர் பேசிய எதையும் இந்தியா மறுக்கவுமில்லை மறுக்கப் போவதுமில்லை.  
            தமிழர்களின் எந்தக் கோரிக்கையையும் பரிசீலிக்கக் கூட இந்திய அரசு தயாராக இல்லை. 
           பிரதமர் மோடி அங்கே சென்று என்ன  செய்ய போகிறார்? 
       1987 ல் தமிழர்கள்  சார்பில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்து செய்த ஒப்பந்தத்தை அமுல் படுத்தப் போகிறோம் என்று சென்ற இந்திய அமைதிப் படை புலிகளோடு சண்டையிட்டதால்   மடிந்த  1140 வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்.   
          அமைதிப் படையாலும் சிங்கள ராணுவத்தாலும் அழிக்கப் பட்ட லட்சக்கணக்கான தமிழர்கள்தான் மனிதர்கள் என்ற கணக்கில் வர மாட்டார்களே? 
        சிறிசேநாவின் புதிய அரசு வந்தும் இந்திய தமிழ் மீனவர்கள் தாக்கப் படுவது நின்ற பாடில்லை.    சிங்கள கடற்படை தாக்கியது என்றால் இந்தியக் கடற்படை எங்கே போனது என்ற கேட்க இங்கே யார் இருக்கிறார்கள்?
         புலம் பெயர்ந்தவர்கள் திரும்ப வாருங்கள் என்று அழைத்து அவர்கள் வந்தால் கைது என்ற வஞ்சகம் தொடர்கிறதே?
         வீடுகள் கட்டிகொடுக்கிறோம் , ரயில் விடுகிறோம், கலாச்சார மையம் திறக்கிறோம் , என்றெல்லாம் அறிவுப்புகள் செய்து உலக நாடுகளை திசை திருப்பி இனப்படுகொலை , போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கையை காப்பாற்ற மட்டுமே இந்தியா தொடர்ந்து முயற்சிக்கும்.     அதற்கு இந்திய முதலாளிகள் துணை நிற்பார்கள்.  அவர்களுக்கு இலங்கையில் இந்திய வணிக ஆதிக்கம் முக்கியம். 
       ஆட்சிகள் மாறலாம் , .   சிங்கள இனவெறி தொடரும்!     
  இதுதான் இன்றைய நிலவரம். 
       அதிகாரப் பகிர்வு , அரசியல் தீர்வு ,இவைகளை தமிழர்களுக்கு சிங்களர்கள் தருவார்கள் என்று யாரேனும் நம்பினால் ஒன்று அவர்கள் வரலாறு தெரியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது நான் முட்டாள் என்று பெருமை பேசிக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். 
       ஜனநாயக வழியில் போராடியவர்களை சிங்களர்கள் கொன்றார்கள். 
      ஆயுதமெடுத்துப் போராடியவர்களையும்  இந்தியா சீனா உதவியோடு சிங்களர்கள் ஒழித்தார்கள். 
       வாழ வேண்டுமென்றால் போராடித்தான் ஆக வேண்டும்!     இந்த முறை காந்திய வழியில் !!!!
       சிங்களர்களை எதிர்த்து மட்டுமல்ல.    அந்த நரிகளிடம் காந்தியமே தோற்று விடலாம்.
      சிங்கள இனவெறியை ஊக்குவிக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கையை எதிர்த்து,    ஆயுதங்கள்  வழங்கும் சீனாவை எதிர்த்து, தமிழ் அகதிகளை அலைக்கழிக்கும் அனைத்து நாடுகளையும் எதிர்த்து , உலகமெங்கும் பரவிக் கிடக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் காந்திய வழியில் ஒன்று பட்டு போராட முன்வர வேண்டும். 
       வாய்மையே வெல்லும்!!!!!! 
              

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

+91-91766-46041

கற்பழிப்புக் குற்றவாளியை அடித்துக் கொன்ற பொதுமக்கள் !நாகாலாந்தில் நிலவும் கலவர சூழ்நிலை !!!!

                   அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சையத் பரித் கான் என்பவர் மீது நாகாலாந்து பெண் ஒருவரை கற்பழிப்பு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு திமாபூர்  சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.   
                  சிறைக்குள் புகுந்த ஐந்தாயிரம் பொதுமக்கள் அவனை வெளியே இழுத்து வந்து நிர்வாணமாக்கி பொது இடத்தில அடித்தே கொன்றிருக்கிறார்கள்.
                 துப்பாக்கி சூடு நடந்ததில் ஒருவர் இறந்திருக்கிறார்.   .அதிகாரிகள்  சஸ்பெண்டு ,விசாரணை, எல்லாம் நடந்து வருகிறது. 
               இந்த நிகழ்வு காட்டும் உண்மைகள் என்ன?
               கற்பழிப்பு நடத்தியவன் முஸ்லிம் என்பதாலும் வெளி மாநிலத்தவன் என்பதாலும் மக்கள் சட்டத்தை தங்கள் கையிலே எடுத்துக் கொண்டார்களா?
               எவ்வளவு பெரிய குற்றம் என்றாலும் மக்கள் தண்டனை  தருவது சரிதானா?
                டெல்லியிலே வட கிழக்கு மாநில இளைஞன் ஒருவன் ஒரு சிறிய சண்டையிலே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இதற்கு தொடர்பு உடையதா?
                மத்திய மாநில அரசுகள் விழித்துக் கொண்டு சட்டத்தை நிலை நிறுத்தா விட்டால் – மக்களே நீதி வழங்கும் இந்த காட்டுமிராண்டித்தனம் பரவ வாய்ப்புகள் அதிகம்!!!
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

+91-91766-46041

அரியானா முன்னாள் முதல்வருக்கு பத்து ஆண்டு சிறையை உறுதி செய்தது உயர் நீதி மன்றம் !!!

               ஓம் பிரகாஷ் சவுதாலா –   ஐந்து முறை முதல்வர் – ஜாட் இனத்தின் தனிப்பெரும் தலைவர். அவர் மகன் அஜய் சவுதாலா – ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஞ்சீவ குமார் மற்றும் ஒருவர் -அனைவருக்கும்  சி.பி.ஐ. நீதிமன்றம் அளித்த பத்து ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதி மன்றம் உறுதி செய்ததுடன் மற்ற ஐம்பது பேர்களுக்கு மட்டும் தண்டனையை இரண்டு ஆண்டுகளாக குறைத்தது.  

              குற்றம் 2000 ம் ஆண்டில் 3206  இளநிலை பயிற்சி பெற்ற ஆசிரியர் நியமனங்களை முறைகேடாக செய்தார்கள் என்பதுதான்.    
             ” மாநிலத்தில் நிலவும் முதுகு எலும்பை சில்லிடச் செய்யும் அதிர்ச்சி அளிக்கும் நிலவரம் ” என்று ஊழலின் தன்மையை நீதிபதி மிருதுல் தனது நானூறு பக்க தீர்ப்பில் விமர்சிக்கிறார். 
             அவரை ஒருமுறையாவது தமிழ் நாட்டுப் பக்கம் வரச் சொன்னால் எப்படியெல்லாம் விமர்சிப்பார் என்பதை நாம் கற்பனைதான் செய்து கொள்ள வேண்டும்.   
             கூடவே இருந்து காட்டிக் கொடுக்க முயற்சித்து தானும் மாட்டிக் கொண்ட அதிகாரி சஞ்சீவ் குமார் யார் , அவர் பின்புலம் என்ன என்பதெல்லாம் ஆய்வுக்குரியது.   
             உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கும் இந்த வழக்கின் முடிவு ஜெயலலிதா வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

சட்டம்- குழந்தை திருமண தடை சட்டம் முஸ்லிம்களுக்கும் பொருந்தும்- உயர் நீதி மன்றம்

ஷரியத் சட்டம் 1937 ன்படி பெண் பருவம் அடைந்தபின் திருமணம் செய்ய உரிமை உண்டு என்று மனு செய்தார் பெண்ணின் தந்தை.     முஸ்லிம்   பெண்ணுக்கு உரிய வயது வரவில்லை என்பதால்      குழந்தை திருமண தடை சட்டத்தை அமுல் படுத்த கோரி பெரம்பலூர் மாவட்ட அதிகாரி கொடுத்த மனுவை கீழ் நீதிமன்றம் ஏற்றது.

             உயர் நீதி மன்றம் சென்றார் தந்தை.    நீதிபதி சி .டி. செல்வம் வழக்கை விசாரித்து குழந்தை திருமண தடை சட்டம் அமுலில் இருக்கும்போது குழந்தை தாய்மார் உருவாக இந்த நீதிமன்றம் அனுமதிக்காது என்று தீர்பளித்த நீதிபதி கீழ் நீதி மன்றம் கொடுத்த ஆணையை உறுதி செய்தார்.

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

அ.தி மு.க. அரசில் -முட்டை கொள்முதலில் கோடிக்கணக்கில் ஊழல்~ குற்றம் சாட்டும் ஒப்பந்தக்காரர்!!

             வேலூர் மாவட்ட முட்டை ஒப்பந்தக்காரர் எம்.ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுத்துள்ள மனு பல முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

             தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டியால் நிர்ணயிக்கப் படும் விலைக்கு மாறாக தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்ட விதிகளுக்கு மாறாக நிபந்தனைகளை திருத்தி அனுபவம் இல்லாத முன்பே கர்நாடகா அரசால் கருப்பு பட்டியலில் வைக்கப் பட்ட இரண்டு நிறுவங்களுக்கு , உள் நோக்கத்தோடு , உரிமம் வழங்கப் பட்டிருப்பதால் அவைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனால் ஒரு முட்டைக்கு 98  -Rs. 1.75  வரை  அதிக விலை கொடுத்ததால்  பத்து கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை மார்ச் 24 ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
            ஜெயலலிதா மக்கள் முதல்வராக இருந்து ஆட்சி செய்யும் அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் குவிய துவங்கி இருப்பது எதைக் காட்டுகிறது?
          ஆட்சியின் அந்திம காலத்தில் இருக்கும் நேரத்தில் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் முடிவிற்கு ஆட்சியாளர்கள் வந்து விட்டார்களா?
         ஊழல் வழக்கு வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு தலைவியே வந்த பிறகு தொண்டர்கள் என்ன சளைத்தவர்களா?
அதுவும் அமைச்சர் வளர்மதி தைரியத்துக்கு பேர் போனவர்!!!

மாட்டு மாமிசம் வைத்திருந்தால் ஐந்து ஆண்டு ஜெயில் ! 19 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகாராஷ்டிரா அரசு சட்டத்துக்கு பிரணாப் முகர்ஜி ஒப்புதல்! நிலைக்குமா சட்டம்?

         ஒன்றரைகோடி  பேர் வேலை செய்யும் தொழிலை ஒரே கையெழுத்தில் மாற்றி விட்டார் பிரணாப் முகர்ஜி.

         மகாராஷ்ட்ராவில் பசுக்களையும் கன்றுகளையும் கொல்ல தடை சட்டம் 1976  முதலே அமுலில் இருக்கிறது.  அப்போதே காளைமாடுகளையும் கொல்ல தடை சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி விட்டு காத்திருந்தது அரசு.    இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு திடீரென பிரணாப் முகர்ஜி ஒப்புதல் தெரிவித்து கையெழுத்து இட்டதால் உடனே சட்டமாகிவிட்டது.
       900  க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற  மற்றும் ஏராளமான உரிமம் பெறாத மாட்டிறைச்சிக் கடைகள் இனி என்ன ஆகும் என்பது பெரிய கேள்வி. 
       வாழ்வாதாரம், ,உணவுப் பழக்கம் மத நம்பிக்கைகள், போன்ற பல பிரச்சினைகள் இந்த சட்டத்தில் உள்ளன.     இவைகளை பொது விவாதங்கள் நடத்தி அனைத்து தரப்பினரையும் இணங்கச் செய்து சட்டமாக்குவது நல்லதா?       எங்களிடம் ஆட்சி இருக்கிறது. எனவே நாங்கள் சொல்வதுதான் சட்டம்.     எல்லாரும் பணிந்துகொண்டு தான் ஆக வேண்டும்  என்ற அணுகுமுறை சரியா? 
       மகாராஷ்டிரா முதல்வரும்  குடியரசு தலைவரும் ஒரே சமுதாயத்தினர் என்பதுகூட  சந்தேக விதைகளை  தூவும்!
      ஆந்திரா, குஜராத் , ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, டெல்லி மற்றும் பல்வேறு வட கிழக்கு மாநிலங்கள் பசுவதைக்கு தடையும் மாட்டு மாமிசத்தை பயன்படுத்த பல்வேறு நிபந்தனைகளையும் கொண்டுள்ளன.     தமிழ் நாட்டிலும் சான்று பெற்று உரிமம் பெற்ற இடத்தில  மாட்டு மாமிசம் பயன் படுத்தும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. 
        ஜெயலலிதா முன்பு ஒருமுறை ஆடு கோழி பலி கொடுக்க தடை சட்டம் கொண்டு வந்து பின்பு அதை அமுல் படுத்த முடியாது என்பதை புரிந்து கொண்டும் எதிர்ப்புக்கு அஞ்சியும் சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார் என்பது வரலாறு. 
      புலால் உண்ணாமையை வலியுறுத்தி திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தையே அர்ப்பணித்திருக்கிறார். 
     வள்ளலாரும் ஜீவகாருண்யத்தை உபதேசிக்கிறார்.
      வங்காளம் உள்பட பல பகுதிகளில் பிராமணர்கள் மீன்களை கடல் புஷ்பம் என்று உண்கிறார்கள். 
       கோழிகளும் ஆடுகளும் மட்டும் எந்த ஆட்சேபணையும் இன்றி கோடிக்கணக்கில் தினமும் கொல்லப் படுகின்றனவே  அவைகளை தடுக்க முடியுமா? 
      எந்த உரிமைக்கும் நியாயமான கட்டுப்பாடுகள் உண்டு.    அதை அரசியல் சட்டம் அங்கீகரிக்கும்.  இந்தத் தடை நியாயமான கட்டுப் பாட்டில் வருமா? 
     ஆட்சி செய்யுங்கள் என்று அதிகாரத்தை கொடுத்தால்  மிரட்டப் பார்க்கிறார்களே?    
   

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

அ.தி.மு.க. அரசில் அதிகாரி தற்கொலைக்கு அமைச்சர் காரணமா? விசாரணை தாமதம் ஏன் ?

           நெல்லை மாவட்ட வேளாண துறை அதிகாரி முத்துகுமாரசாமி நேர்மையானவர் என்று பெயர் எடுத்தவர்.  

           நான்கு ஓட்டுனர்கள் பதவிக்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை நியமிக்க முடியாமல் , மேலிடம் கோரிய ஊழல் பணத்தை தர முடியாமல் , மன  உளைச்சலுக்கு ஆளாகி , ரெயிலில் பாய்ந்து உயிரை விட்டார் என்பதும் அதற்கு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமுர்த்தி தான் காரணம் என்றும் சந்தேக வலைகள் எழுவதாக ஜூனியர் விகடன் எழுதியது. 
         பல கட்சிகளும் அரசு ஊழியர் சங்கங்களும்  சி.பி.ஐ.விசாரணை கோரி போஸ்டர்கள் ஒட்டினார்கள். 
        குடும்ப பிரச்சினை தான் காரணம் என்று அமைச்சர் பேட்டி கொடுக்கிறார். 
       அரசு நிர்வாகத்தில் புரையோடிப் போயிருக்கும் அவல நிலைக்கு இதைவிட உதாரணம் இருக்க முடியாது. 
       திடீரென அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து ஜெயலலிதா உத்தரவிடுகிறார். 
     அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என 
ஈ .வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கை விடுக்கிறார். 
      மௌனம காக்கிறார் முதல்வர்.    மடியில் கனம இருந்தால்தானே வழியில் பயம். 
      சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடாதவரை சந்தேகம் வலுத்துக் கொண்டே போகும்.      எச்சரிக்கை! எச்சரிக்கை!!


வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

நாங்கள் கற்பழித்த போது அவள் போராடியிருக்ககூடாது – நிர்பயா கொலைகாரனின் வாக்குமூலம்!!!

                    டெல்லியில் கற்பழிக்கப் பட்டு கொடூரமாக கொலை

செய்யப்பட்ட மாணவி நிர்பயாவின் கொலைகாரன் முகேஷ் சிறையில் இருந்து கொண்டே அளித்த பேட்டியில் , ”   நாங்கள் அவளை கற்பழித்தபோது  அவள் எதிர்த்துப் போராடியிருக்க கூடாது.   அவள் அமைதியாக இருந்து எங்களை கற்பழிக்க விட்டிருக்க வேண்டும்”    என்று கூறியிருப்பது இந்தியாவில் சில   இளைஞர்கள் இடையே நிலவும் கொடூர மனத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது .

              சிறைத் தண்டனையோ மரண தண்டனையோ குற்றவாளிகள் மனதில் எந்தவித குற்ற உணர்வையும் தூண்டவில்லை. 
               அவர்கள் வருத்தப் பட்டதாகவும் தெரியவில்லை.       கற்பழிப்பது எங்கள் உரிமை என்று கூட இவர்கள் கூறலாம்.
               பேட்டி கொடுக்க அனுமதித்தது அதை பி பி சி ஒளிபரப்பியது மத்திய அரசு அதை தடுக்க முயற்சிப்பது இவைகள் எல்லாம் ஒருபுறம இருக்க     குற்றவாளிகளின் மனோபாவம்தான் மக்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினை. 
                 காந்திஜியா அல்லது வேறு யாருமா என்பது நினைவில்லை.    ஆனால் ” கற்பழிப்பை சமாளிப்பது அதை அனுமதித்து விடுவதே” என்ற , குற்றங்களை எதிர் கொள்ளும் வாதம் நினைவுக்கு வருகிறது. 
               கடுமையான தண்டனைகள் குற்றங்களை குறைக்கும் என்பதும் கேள்விக் குறியாகி இருக்கிறது. 
                டெல்லியில் ஒரு வெளிநாட்டுப் பயணி தான் ஒரு சாதுவால் கற்பழிக்கப் பட்டதாக நேற்றுதான் புகார் கூறினார். 
             ”    ‘இந்தியாவின் மகள்  ” என்பது ஆவணப் படத்தின் தலைப்பு. ” “இந்தியாவின் மானம் ” என்று போட்டிருக்கலாம். 
                 

       

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

சினிமா – ஆமிர், ஷாருக் ,சல்மான் கான் பட போஸ்டர்களை கிழியுங்கள்! பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் சாத்வி பிராச்சி தூண்டுதல்!

              இந்து சக்திகள் மோடியை தூங்க விட மாட்டார்கள் என்பது நிச்சயம்.

                கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி தனது அரசின் மதம் முதலில் இந்தியா என்பதே என்றும் மத நூல் அரசியல் சாசனம் என்றும் பேசினார்.     மத துவேஷத்தை சகித்துக்கொள்ள மாட்டோம் என்றும் முழங்கினார்..

                 இந்துப் பெண்கள் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று  பேசிய அதே சாத்வி பிராச்சிதான்  மீண்டும் தனது  மத வெறிபேச்சை தொடர்ந்திருக்கிறார்..
                யாரோ ஒரு குழந்தை தான் ஹ்ரித்திக் ரோஷன், சல்மான் கான் ,ஆமிர் கான் , ஷாருக் கான் போல் வர வேண்டும் ஏனென்றால் அவர்கள் நன்றாக சண்டை போடுகிறார்கள் என்று சொன்னதாம்.    எனவே இவர்கள் வன்முறையை தூண்டுகிறார்கள் என்றும் எனவே இவர்கள் பட போஸ்டர்களை கிழியுங்கள் என்றும் பேசியிருக்கிறார்.    ஹ்ரித்திக் இந்து என்பதால் அவரை மட்டும் விட்டு விட்டார். 
                இப்படிப் பட்டவர்கள் பாராளு மன்ற உறுப்பினர்களாக இருந்தால் நாடு என்னாகும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடிய வில்லை. 
                இதுவரை அவர்கள் மீது எந்த விதமான வகுப்பு வாத குற்றச்சாட்டும் எழாத கலைஞர்களாக மட்டுமே அவர்கள் பார்க்கப் படுகிறார்கள். 
                 ஷாருக் கான் , ஆமிர் கான் இருவரும் இந்துப் பெண்களை  திருமணம் செய்து கொண்டு அவர்களை இந்துக்களாகவே வாழ அனுமதித் திருக்கிறார்கள். 
                  எப்படி இருந்தாலும் மதம் என்பது கலை உலகை பொறுத்த வரையில் தனிப்பட்ட ஒன்றாகவே இதுவரை இருக்கிறது. 
                 சமீபத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியை பெற்ற பி.கே. என்ற ஆமிர் கானின் படம் சில இந்து சக்திகளால் மோசமாக விமர்சிக்கப் பட்டது. .  இத்தனைக்கும்  அந்த படத்தை பார்த்து எல்.கே. அத்வானி அவர்கள் மிகப் பிரமாதம் என்று பாராட்டுரை வழங்கி இருந்தார்.     ஏனென்றால் அந்த படத்தில் கடவுள் எந்த மதமும் இல்லை என்பதை மனதில் படும்படி காட்சிப் படுத்தி இருந்தார்கள். 
                மோடி அவர்களே ,சாத்விகளை கட்டுப் படுத்துங்கள். . தவறினால் அவர்கள் உங்களை தோற்கடித்து விடுவார்கள். 
                 அரவிந்த் கேஜ்ரிவால்கள் டெல்லியில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் காத்திருக்கிறார்கள். 

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

கிரிக்கெட்- ஊழல் குற்றச்சாட்டுகளில் சம்பத்தப்பட்ட டால்மியாவையும் சீனிவாசனையும் விட்டால் வேறு ஆளே இல்லையா? மாறட்டும் தேர்வு முறை!

                கிரிக்கெட்- இந்தியாவின் பணம் கொழிக்கும் விளையாட்டு. 
       ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ஜக மோகன் டால்மியா மற்றும் சீனிவாசன் இருவருமே பல்வேறு வகைகளில் குற்றம் சாட்டப் பட்டு நீதி மன்றங்களால் தகுதி  நீக்கம் செய்யப் பட்டவர்கள்.

       இந்திய கிரிக்கெட் வாரிய அமைப்பு முறைகள் முற்றிலும் சாதிய ஆதிக்கத்துக்கு வழி கோலும் வகையில் இருப்பதாக பல காலமாக குற்றம் சாட்டப் பட்டு வந்தாலும் அவைகளை மாற்றும் முயற்சிகளில் யாரும் தீவிரம் காட்டாததால் சாதிய ஆதிக்கம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 
        மக்களின் பிரதிநிதிகளான மாநில அரசுகளின் பங்கு கிரிக்கெட் வாரிய அமைப்பில் என்ன இருக்கிறது. ? 
       வெளிப்படையான, சுதந்திரமான ,, அனைத்து தரப்பு மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் ,தேர்வு முறை ஒன்றை உருவாக்கும்போது மட்டுமே இந்திய கிரிக்கெட் குழு உண்மையில் இந்தியாவை  பிரதிபலிக்கும் .  
     ஊழல்தான் கிரிக்கெட் என்றால் அந்த விளையாட்டுக்கு எதிராகவே ஒரு இயக்கம் உருவாக வேண்டும். 
    

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)