Home Blog Page 14

ரஜினியின் காமெடி தொடர்கிறது? போராட்டங்கள் பிரச்னைகளை தீர்க்காதாம்?

குடிஉரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள். கலவரத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அரசுகள் அடக்கு முறையில் ஈடுபடுவதால் கலவரம் தொடர்கிறது.

பல இடங்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டு காவல்துறை தடி அடி துப்பாக்கி சூடு  வரை போக வேண்டிய சூழ்நிலை.

கமல்காசன் இரண்டு திராவிட இயக்கங்களுக்கு மாற்று அரசியல் என்று முன்னெடுத்தவர் இன்று திமுக நடத்தும் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி பேசாமல் சூட்டிங்கில் தொடர்ந்து வேலையை பார்த்துக்கொண்டிருக்க  வேண்டியதுதானே.

வாயைத்திறந்து ஏதாவது ஒரிரண்டு வார்த்தைகள் சொல்லி  தன்னை அரசியலில் இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

இப்போது வன்முறை போராட்டத்திற்கு தீர்வாகாது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

ஏம்ப்பா யார் வன்முறை தீர்வு என்று சொன்னது? நீ அதை மறுப்பதற்கு.

அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படும் போது மக்கள் கொதித்து எழுகிறார்கள்.  அதைக் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு வரை போகிறது அரசு. இதற்கு  யார் காரணம்?

கருத்து சொல்ல வந்தவர் முதலில் இந்த சட்டம் பற்றிய தனது கருத்தை சொல்ல வேண்டுமா வேண்டாமா?

சொன்னால் நீ யார் பக்கம் என்று தெரிந்து விடும்.

அதை சொல்லாமல் தர்மோபதேசம் மட்டும் செய்தால் போப்பா வேலையை பாத்துட்டு என்று தான் மக்கள் உமிழ்வார்கள்.

தமிழ்நாடு பாஜகவின் அரசியல் கூத்து? போராட்டம் நடத்துவதற்கு எதிராக போராட்டமா?

போராட்டம் நடத்துவதற்கு எதிராக போராட்டமா?

அரசை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்துவதுதான் இயல்பு. அந்த வகையில் மத்திய அரசின் குடி உரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள்.

அதனால் மக்கள் மனம் மத்திய அரசுக்கு எதிராக கூர் சீவப்படுகிறது.

பாஜக என்ன செய்ய வேண்டும். இந்த எதிர்ப்பில் பொருள் இல்லை. கொண்டு வந்த சட்டம் நேர்மையானது என்று பிரச்சாரம் செய்யலாம். அவ்வளவுதானே.

ஆனால் சட்டத்துக்கு எதிராக போராடுவதை கண்டித்து ஒரு போராட்டம் அறிவித்து நடத்தியிருக்கிறது பாஜக.

நாளை ஒரு அரசு இதுமாதிரி ஒரு சட்டத்தை அமுல்படுத்தினால் மக்கள் மத்தியில் பாஜக பிரச்சாரம் செய்யாதா?

எவ்வளவு கேவலமான சிந்தனை?

முதலில் திமுகவை எதிர்த்து போராட்டம் என்று அறிவித்தார்கள். பிறகு என்ன சிந்தனையோ. மாற்றிக்கொண்டு போராடும் கட்சிகளுக்கு எதிராக என்று அறிவித்து விட்டார்கள்.

சிந்தனை வறட்சி!

எதிர்ப்பு கட்டுக் கடங்காமல் வளர்ந்து கொண்டே போவது அவர்களுக்கு  கவலை அளிக்கலாம்.

இவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. பிரச்னைகள உருவாக்குவது மத்திய பாஜக அரசு. அதன் பலன்களை அனுபவித்துத் தானே  தீர வேண்டும்.

இன்னும் கடும் தாக்குதல்களை தனது திட்டத்தில் வைத்திருக்கிறது அமித் ஷா –மோடி கூட்டணி.

அவற்றை எல்லாம் மக்கள் பெருமளவில் எதிர்க்கத்தான் போகிறார்கள். அது எந்த வடிவம் எடுக்கும் என்று இப்போது சொல்ல முடியாது.

அது அமுல் படுத்தப்படும் போது தான் தெரிய வரும்.

நாட்டை நாசகார பாதையில் கொண்டு செல்வது என்று இருவரும் முடிவெடுத்த பிறகு தடுப்பது உச்ச நீதி மன்றம் தான் என்ற நிலை கூட இப்போது மாறத் தொடங்கி இருக்கிறது. அதுதான் கவலை அளிக்கிறது.

வரும் 23 ம் தேதி பிரமாண்டமான கண்டன பேரணியை திமுக கூட்டணி கட்சிகள் மட்டும் அல்லாது எல்லாரும் சேர்ந்து நடத்த இருக்கிறார்கள். மாணவர்கள் இந்த பிரச்னையை கையில் எடுத்த பிறகு மத்திய அரசு ஏதாவது செய்து பிரச்னையின் தாக்கத்தை குறைத்தால் தவிர போராட்டம் ஓயும் என்று தோன்றவில்லை.

நியாயமான போராட்டத்தை கூட தூண்டிவிடப்படும் போராட்டம் என்று ஒரு பெயரிட்டு அலட்சியப்படுத்தினால் அதன் விளைவுகள் ஏற்படுத்தும் இழப்புகள் ஆளும் கட்சியை மட்டுமே சேரும்.

ஈழத் தமிழர்க்கு இரட்டை குடி உரிமை சாத்தியமா? அதிமுகவின் ஏமாற்று வேலை?

இரட்டை குடிஉரிமை பெறுவதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை.

பிறகு எப்படி இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடிஉரிமை பெற்றுத் தருவதே எங்கள் இலக்கு என்று அதிமுக சொல்கிறது?

குடிஉரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக தனது 11 வாக்குகளை போடாமல் இருந்திருந்தால் எதிர்த்து வாக்களித்து இருந்தால் 116-114  என்ற விகிதத்தில் மசோதா நிராகரிக்கப்பட்டிருக்கும்.

இன்று இந்த பிரச்னையே வந்திருக்காது.

சென்ற ஆட்சிக் காலத்திலும் பாஜக முயன்று முடியாமல் போன முயற்சி இது ..

இன்று அதிமுக துணை போனதால் நிறைவேறி இருக்கிறது. இந்த துரோகத்தை முஸ்லிம்கள் மன்னிக்க மாட்டார்கள். அதிமுக வில் உள்ள எந்த முஸ்லிமும் இன்னும் சட்டத்தை ஆதரித்து பேசவில்லை. முகம்மது ஜான் என்ற அதிமுக எம்பி ஜமாஅத் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதுதான் நிலைமை.

இங்கே அகதிகளாக அடைபட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடிஉரிமை தர வேண்டுமா என்பதை பரிசீலிக்கவே பாஜக அரசு தயாராக இல்லை. அவர்களை இந்துக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் தமிழர்கள்.

இந்தியா அயல்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு குடிஉரிமை தர வேறு வழியை பயன்படுத்துகிறது.

\அவர்களுக்கு அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் என்ற ( Overseas Citizenship of India )  உரிமையை வழங்குகிறது. அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. வாக்குரிமை கிடையாது. அதனால் அவர்களுக்கு வேறு எந்த சிறப்பு உரிமையும் கிடையாது.

எனவே ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குட உரிமை தர இயலாது என்கிறது பாஜக அரசு.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இங்கே வாழ்ந்து வருபவர்கள் எங்கே போவார்கள்?

எப்போது இலங்கை இனப்பிரச்னை முடியும்? எப்போது தமிழர்களுக்கு அரசியல்  தீர்வு கிடைக்கும்? யாராலும் விடை தர இயலாத கேள்வி இது.

இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை முக்கியம். அதனால் அவர்கள் இலங்கை போவகே நல்லது என்ற கருத்தும் உள்ளது. ஆனால் அங்கே நிலைமை சீராகி விட்டதா?

அதை முடிவு செய்ய வேண்டியவர்கள் அவர்கள்.

அங்கே தங்களுக்கு ஆபத்து என்று அவர்கள் கருதினால் இங்கே குடிஉரிமை தர வேண்டியது நமது கடமை. ஆனால் பாஜக அரசுக்கு மட்டும் அவர்கள் மீது எந்த  கவலையும் கிடையாது.

உலகம் முழுவதிலும் இலங்கை தமிழர்கள் பரவிக் கிடக்கிறார்கள்.

எப்போது ஈழத்தில் அமைதி திரும்பி அரசியல் உரிமைகள் திரும்ப கிடைக்கிறதோ அன்று அவர்கள் திரும்ப வருவார்கள். அப்போது இவர்களும் விரும்பினால் அங்கே செல்ல என்ன தடை?

அதுவரை நாடற்றவர்களாக இங்கே அடைக்கப்பட்டுக் கிடைக்க வேண்டுமா?

அகதிகள் முகாம்களில் அடைபட்டுக் கிடப்பவர்கள் விரும்பினால் அவர்களுக்கு இந்தியக் குடி உரிமை தர வேண்டும்.

மாறாக அவர்களுக்கு  இரட்டை குடி உரிமை பெற்றுத் தருவோம் என்று பசப்புவது ஏமாற்று வேலை?

திமுக பேரணியில் கமல்ஹாசன் கட்சி! சங்கடம் ஏற்படுத்தவா சங்கமம் ஆகவா?

வரும் 23ம் தேதி திமுக தலைமையில் ஆன எதிர்க்கட்சிகள் குடி உரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் கண்டனப்  பேரணி நடத்த தீர்மானித்தன.

ஏற்கெனெவே மாணவர்கள் இந்த சட்டத்துக்கு எதிராக எல்லா மாநிலங்களிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.

அங்கே போக முடியாமல் உள் துறை அமைச்சர் நிகழ்ச்சிகளை ரத்து செய்கிறார்.   வெளிநாட்டு அமைச்சர்கள் பயணங்களை ரத்து செய்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் கட்சி இதுவரை இரண்டு கழகங்களுக்கு மாற்றாக செயல்படுவோம் என்று சொல்லி வந்தது.

இன்று போராட்டம் நடத்திய மாணவர்களை சந்தித்த கமல்ஹாசன் இந்த சட்டம் மாணவர்களையும் அகதிகள் ஆக்குகிறது என்றார்.

திமுக நடத்த இருக்கிற எதிர்ப்பு பேரணியில் எதிர்க்கட்சி என்ற அளவில் கமல்ஹாசன் கட்சியும் கலந்து கொள்ளும் என்று.

இவர் வருவது எதிர்கட்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவதற்கு என்றால் வரவேற்க வேண்டியதே.

ஆனால் நான் திமுகவிற்கு எதிரானவன். ஆனால் நானும் எதிர்க்கட்சி என்ற அளவில் மட்டுமே அது நடத்துகிற போராட்டத்தில் பங்கேற்பேன் என்றால் அதில் கொஞ்சம் சந்தேகம் வருகிறது. எல்லாரும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள்.

நாளை கூட்டணியில் நானும் சேர்வேன் என்றால் இப்போது பங்கேற்பதில் தவறில்லை.

இவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூடி திமுகவில் எம்ஜியாருக்கு இருந்த செல்வாக்கைப் போல் எனக்கும் இருக்கிறது என்பதை காட்டுவதற்கு கலந்து கொள்கிறாரா என்பதும் தெரியவில்லை.

ரஜினியை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு கமல்ஹாசன் வந்திருக்கக் கூடும்.

எப்படியோ நடப்பது நல்லதாக  இருக்கட்டும்.

குஷியில் சின்மயி! சின்மயிக்கு புதுக் கதாநாயகர்கள் இயக்குனர் மித்ரனும் தயாரிப்பாளரும்?

டப்பிங் சங்கத்துக்கும் பாடகி சின்மயிக்கும் நடந்த மோதலில் ஒரு வருடமாக டப்பிங் பேசாமல் இருந்தார் சின்மயி.

செல்வாக்கு மிக்க பார்ப்பன வகுப்பில் இருந்த வந்தவர் என்பதால் ஊடக வெளிச்சம் சின்மயிக்கு அதிகம். அவர் விரும்புவதை அடிக்கடி எழுதிக் கொண்டிருப்பார்கள்.  மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைத்து எல்லாரும் இவர் மீது பயப்படும்படி செய்து விடுவார்.

ராதாரவிக்கு சின்மயி ஒத்துழைக்காததால் இருவர்க்கும் இடையே உரசல்.

நடிகர் ராதாரவி சின்மயிக்கு நெருங்கிய பாஜகவில் ஐக்கியமானவுடன் சின்மயி காண்டாகி இதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று பாஜக தலைமையை கேள்வி  கேட்டார்.

இடையில் என்ன நடந்ததோ சமரசம் ஆகி விட்டார்கள் போல.

ஹீரோ படத்தின் கதாநாயகி பிரியதர்ஷனுக்கு சின்மயி டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார்.

‘ஒரு வருடம் மற்றும் சில நாட்களுக்குப் பிறகு நான் தமிழ் படத்தில் டப்பிங் பேசி உள்ளேன். இதற்காக இயக்குனர் மித்ரனுக்கு நன்றி. மித்ரனும் தயாரிப்பாளரும் எனது கதாநாயகர்கள்‘ என்று பதிவிட்டுள்ளர் சின்மயி.

ஆண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் பெண்கள் மீதும் மீ டூ பாயுமா?

மருத்துவருக்கு என்ன ஆச்சு? கூட்டணி தர்மத்துக்காக விலை போனோம் என்கிறாரே?

குடிஉரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார் பாமகவின் ஓரே நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்.

இதுவரை சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக பேசி வந்த மருத்துவர் ராமதாஸ் இந்த முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஏனென்றால் இந்த சட்ட திருத்தம் ஆறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு தரும் குடி உரிமையை முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கிறது.

வாக்களிக்காமல் வெளியேறி இருக்கலாம். ஆதரித்து வாக்குப் போட வேண்டிய அவசியம் இல்லை.

எல்லாவற்றையும் விட மருத்துவர் ராமதாஸ் சொன்ன விளக்கம் தான் அற்புதம்.

சட்டத்திருத்தத்தில் எங்களுக்கு உடன்பாடு அதனால் வாக்களித்தோம் என்றால் யாரும் கேட்கப் போவதில்லை.

ஆனால் சொன்னார் பாருங்கள் பதில்.!

“ கூட்டணி தர்மத்துக்காக ஆதரித்து வாக்களித்தோம்”

அதாவது உடன்பாடு இல்லாவிட்டாலும் ஆதரிப்பார்கள் இவர்கள்.

இனிமேல் ராமதாஸ் எதை சொன்னாலும் இது உங்கள் கருத்துத்தானா அல்லது கூட்டணி கருத்தா என்று தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.

மகனுக்கு மந்திரி பதவி கேட்டு ஆதரித்தீர்களா என்பார்கள் என்பதற்காக அமைச்சர் பதவி கொடுத்தாலும் வேண்டாம் என்போம் என்கிறார்.

மொத்தத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் அரசியல் தரம் பாதாளம் நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

ஆக, மருத்துவரின் விலை கூட்டணி தர்மம்!

ரேப் இன் இந்தியா ஆன மேக் இன் இந்தியா?

குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது நரேந்திர மோடி டெல்லி இந்தியாவின் ரேப் கேபிடல் என்று பிரசாரத்தின் பேசினார்.

இன்று ராகுல்காந்தி இந்தியாவில் மேக் இந்தியா இப்போது ரேப் இன் இந்தியா ஆகிவிட்டது என்று பேசி சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கற்பனைக்கு எட்டாத அளவில் அதிகரித்து விட்டது என்பதில் சந்தேகமில்லை.

அதைத்தான் ராகுல் காந்தி சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.

ராகுலை எதிர்த்து பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் அவையை நடத்த விடாமல் ரகளை செய்திருக்கிறார்கள்.

நான் என்ன ராகுல் சவர்க்கரா மன்னிப்புக் கேட்க. நான் ராகுல் காந்தி. மன்னிப்புக்  கேட்க மாட்டேன் என்று ராகுல் உறுதி காட்டுகிறார். உண்மையைத்தானே சொன்னேன் அதற்கு ஏன் மன்னிப்பு கேட்க  வேண்டும் என்பது அவரது வாதம்.

பாலியல் குற்றங்களை தடுக்க எல்லாரும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டிய கால கட்டத்தில் அதை அரசியலாக்கி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது ஆரோக்கியமான அரசியலாக இல்லை.

ஹைதராபாத்தில் நடந்த பெண் மருத்துவர் கொலைக்கு என்கவுன்ட்டர் செய்து நீதி வழங்கிய நிலையில் ஆந்திராவில் இத்தகைய குற்றங்களுக்கு 21 நாளில் விசாரணை முடித்து தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று ஜகன் மோகன் ரெட்டி அறிவித்திருக்கிறார்.

ஏதாவது உருப்படியாக செய்யுங்கப்பா?

மத்திய பாஜக அரசின் அடங்காத சமஸ்கிருத வெறி?

மூன்று சமஸ்கிருத நிகர் நிலை பல்கலை கழகங்களை மத்திய அரசின் பல்கலை கழகங்களாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது.

ஏன் சமஸ்கிரிததுக்கு மட்டும் மத்திய அரசு பரிவு காட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்?

எட்டாம் அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆதரிக்க வேண்டும். செம்மொழி என்றால் தமிழ் உள்ளிட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் நிதி ஒதுக்கி ஆதரிக்க வேண்டும்?

ஆட்சி உங்கள் கையில் இருப்பதால் மொழிகளுக்கு இடையே பாரபட்சம் காட்டும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா?

பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் கணேஷ் சிங் சமஸ்கிருதம் பேசினால் நீரிழிவு வராது என்று பேசுகிறார். ஆதாரம் கேட்டாம் அமெரிக்காவில் ஒரு கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப் பட்டுள்ளது என்கிறார். உலகின் சில இஸ்லாமிய மொழிகள் உள்பட 97 சதவீத மொழிகள் சமஸ்கிருத அடிப்படை கொண்டவைகள் என்கிறார்.

விவாதத்தில் அமைச்சர் பிரதாப சந்திர சாரங்கி சமஸ்கிரிததில் பேசுகிறார். இந்த வெறி எங்கு கொண்டு போய்விடும்?

கடைசியில் மத்திய சமஸ்கிருத பல்கலை கழகங்கள் அமைக்க வகை செய்யும் மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது.

சமஸ்கிருத மொழிக்கு ஊக்கம் கொடுப்பதை நியாயப் படுத்த வேண்டும்  என்றால் அனைத்து மொழிகளையும் சமமாக பாவித்து அனைத்துக்கும் அதே சலுகைகளை கொடுக்க வேண்டும்.

இப்படி பாரபட்சம் காட்டுவதன் மூலம் வெறுப்புதான் வளரும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் வெறுப்பு எங்களை என்ன செய்யும் என்று மமதையுடன் செயல்பட்டால் அதன் விளைவுகள் உங்களுக்கே ஊறு விளைவிப்பதா கத்தான் அமையும்.

தமிழகத்தில் 90% வேலை தமிழருக்கே? யார் உறுதி செய்வது?

சிவசேனை ஆட்சிக்கு வந்தவுடன் மகாராட்டிரத்தில் இனி உள்ளூர் மக்களுக்கே 80% வேலை என அறிவித்துள்ளது.

அதிமுக அரசு இதுபற்றி இன்னும் வாய் திறக்கவில்லை.

மத்திய பாஜக எஜமானர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.

ஆனால் நிலைமை கைமீறி போய்க்கொண்டிருக்கிறது. தமிழகத்தை வெளி மாநிலத்தவர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரியான தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

தமிழகத்தில் மட்டும் அல்ல. எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தவர்களுக்கே வேலையில் முன்னுரிமை என்பது அமுல் படுத்தப்பட்டால் பிரச்னையே வராது.

இந்நிலையில் தமிழகத்தில் வாழும் வெளி மாநிலத்தவர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும் அயல் மாநிலதவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கர்நாடகத்தில் வாட்டாள் நாகராஜ் மும்பையில் முன்பு சிவசேனா போன்றவர்கள் வைத்த பழைய கோரிக்கைதான் என்றாலும் இன்றைய மத்திய பாஜக அரசு இதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை.

வெறுப்பை வளர்க்காமல், மத்திய மாநில அரசுப் பணிகள் தனியார் நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் அதிகாரத்தில் உள்ளோர் மாநில மக்களின் உரிமைகளை  பாதுகாத்திட கவனத்துடன் உடனடியாக கவனிக்க வேண்டிய அவசர பிரச்னை இது.

பழ.கருப்பையா ஏன் விலகினார் திமுகவில் இருந்து?

பழ.கருப்பையா ஏன் விலகினார் திமுகவில் இருந்து?

திமுக கார்பரேட் நிறுவனம் போல் நடத்துகிற விதம் பணமே எல்லாம் என்று கருதுகிற தன்மை திமுகவில் இருப்பதாக கூறி பழ கருப்பையா திமுகவில் இருந்து விலகி இருக்கிறார். ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து விலக போவதை தெரிவித்து அவரும் உபசரித்து கைகுலுக்கி விடை கொடுத்தார் என்று சொல்லி இருக்கிறார்.

விலகுவது அவர் உரிமை. காரணம் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. கருணாநிதி அழைத்ததால் திமுகவில் சேர்ந்தேன் என்றவர் அப்போது திமுக எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறது. இதில் என்ன மாற்றத்தை கண்டுவிட்டார் அவர்.

ரஜினியிடம் போவதற்காக நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பட்டியலில் இவரும் சேருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் ரஜினியிடம் போவீர்கள என்று கேட்டதற்கு அவர் என்னை சந்திக்க விரும்புவாரா என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். அதாவது ரஜினி விரும்பினால் சந்திக்க தயார் என்று பொருள். .

ரஜினி என்ன சொல்லப் போகிறார் என்பது தெரியாமலேயே அவருடன் சேரத்தயார் என்போர் பட்டியலில் கருப்பையாவும் இணைந்து விட்டதாகவே தோன்றுகிறது.

பத்தோடு பதினொன்று.