Home Blog Page 17

நாதுராம் கோட்சே தேசபக்தர்.. பாஜக எம் பி பிரக்யா சிங்

மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று இரண்டாம் முறையாக பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரக்ய சிங் தாகூர் பேசியது நாடு முழுதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

ஏன் பிரக்ய சிங் குறுக்கிட்டு பேச வேண்டும்?

இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று பாஜக என்றாலே வன்முறையாளர்கள் என்ற வரையறையை நிரூபிக்கும் வகையில் அவரது கூற்று அமைந்துள்ளது.

போபால்  மக்கள் அவரை தங்கள் உறுப்பினராக தேர்ந்து எடுத்தது எதற்காக?

கட்சி பாகுபாடு பார்க்காமல் எல்லா மக்களையும் சந்தித்து அவர்கள் பிரச்னைகளை அறிந்து கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் .

இந்த  நிலையில் பாராளுமன்றத்தில் திமுக உறுப்பினர் ஆ ராசா பேசும்போது மகாத்மாவையே சுட்டுக் கொல்லும் அளவு யார் அவர்மீது கோபம கொண்டிருந்தனர் என்பதை சான்றுகளோடு நிரூபிக்க முயன்று கொண்டிருந்தார்.

திடீர் என்று உத்தவ் தாக்கரே முதல்வர் ஆவார் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை.

பிரக்ஞாவை பாராளுமன்ற பாதுகாப்பு குழுவில் இருந்து நீக்கி இருக்கிறது பாஜக. போதுமா?

2008 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவரை நன்னடத்தை காரணமாக அவரை வெளியில் விட்டி வைத்திருக்கிறோம் என்று ஆட்சியாளர்கள் சொன்னாலும் உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

தகுதி இருக்கிறதோ இல்லையோ நம்மை ஆளுவது பார்ப்பனீயம் தான்.

இந்த நினைவை எப்போதும் நினைவில் கொண்டிருக்கும் யாரையும் ஏமாற்ற முடியாது.

இனி உலகை ஆள நாம்தான்.

இட ஒதுக்கீட்டில் மோசடி செய்யும் அதிகாரிகளை பணி நீக்க செய்ய வேண்டும்?!

இட ஒதுக்கீடு என்பது போராடிப் பெற்ற சமூக நீதி உரிமை.

ஆனால் அதை முழுவதுமாக நிறைவேற்ற விடாமல் அவ்வப போது பதவியில் இருக்கும் முற்பட்ட சமூகத்தவர்கள் தடுத்து வருகிறார்கள்.

அவர்கள் யார் என்று  இனங்கண்டு கொள்வது  கடினம். ஏன் எனில் அந்த பணியில் பல அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பார்கள். அவர்களால் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாத வகையில் விதிகள் இருக்கும். அதில் முறைகேடு என்றால் பலர் கூடித்தான் செய்ய வேண்டும்.

ஆக இடஒதுக்கீட்டை  மறுக்கும் வேலையை பலர் கூட்டாக சேர்ந்துதான் செய்ய வேண்டும். அப்படி என்றால் அந்த பணியில் எல்லாரும் முற்பட்ட சமூகத்தவர் ஆக இருந்தாக வேண்டும். பிற்பட்டோர் யாராவது இருந்தால்  அவர் முட்டுக்கட்டை போடக்கூடும்.

இப்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பட்டியலில்  குளறுபடி செய்யப்பட்டிருக்கிறது.

தரவரிசை பட்டியலில் முன்னணியில் உள்ளவர்களை பொது பட்டியலில்தான் சேர்க்க வேண்டும். அப்போதுதான் இட ஒதுக்கீட்டுப் பிரிவில்  உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அவர்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்து அவர்கள் இடங்கள் அதே பிரிவை சேர்ந்தவர்களுக்கு கிடைக்காமல் செய்யும் சதியை செய்திருக்கிறார்கள். இதை தெரியாமல் செய்ய வாய்ப்பு இல்லை.

இது தொடர்பாக எண்ணற்ற வழக்குகள் நடைபெற்று தீர்ப்புகளும் வழங்கப்பட்டு இருந்தாலும் இந்த தவறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இது தொடர்பாக எல்லா கட்சி தலைவர்களும் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதுதான் தெரியவில்லை.

கொடுத்துப் பறிக்கிற வேலையை முற்பட்டோர் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு அதிகாரத்தில் உள்ள பிற்பட்டோர் ஏன் இடம் கொடுக்க வேண்டும்?

அதிகாரம் கிடைத்தும் உரிமைகளை காப்பாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதற்கு நாம் தகுதி யானவர்கள் அல்ல என்று பொருள்படும்.

ஆட்சியாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

மோடியை இழிவுபடுத்திய மராட்டிய பாஜக? பார்ப்பனீயத்தை வென்ற மராத்தாக்கள்

ஒருவழியாக நான்குநாள் முதல்வராக இருந்த பட்னாவிஸ் ராஜினாமா செய்து விட்டார்.

இறுதிவரை பார்ப்பனர் ஆட்சியை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போய் மராத்தாக்கள் ஆட்சியை பிடித்து விட்டார்கள்.

மேலெழுந்த வாரியாக பார்த்தால் இதில் சாதி எங்கே வரும் என்றுதான் தோன்றும். ஆனால் பட்னாவிஸ் தலைமையை மீண்டும் கொண்டு வர சங்கப் பரிவாரங்கள் நடத்திய சூழ்ச்சியை கணக்கில் எடுத்துக் கொண்டால் இதில் சாதி எந்த அளவு  பங்கு வகித்தது என்று புரியும்.

சரத் பவாரிடம் இருந்து அஜித்தை பிரிக்க திட்டமிட்டதை என்னவென்று அழைப்பது ?

கடைசியில் தனி மரமாக அஜித் நின்றபோதுதான் இனி முடியாது என்ற  உண்மை உரைத்தது பட்னாவிசுக்கு.

இதில் ஏன் பிரதமரை இழிவுபடுத்தினார்கள் என்பதுதான் அவர்கள் யார் என்பதை புரிய வைக்கும். பதவிக்கு வருவதற்காக யாரை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். அவர்கள் மரியாதை பறிபோகும் என்பதை பற்றிக் கூட கவலைப் படமாட்டார்கள்.

நள்ளிரவில் எடுத்த முடிவை அதிகாலையில் அமுல்படுத்த அமைச்சரவை கூடி எடுக்க வேண்டிய குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக்கொள்வது என்ற முடிவை ஏன் பிரதமரின் தனி அதிகாரத்தை பயன்படுத்தி அமுல்படுதினார்கள்?

ஆராயாமல் எடுத்த முடிவால் இன்று பிரதமர், ஆளுநர், குடியரசுத் தலைவர் என்று எல்லாருக்கும் அவமானம். மோடியின் பெயர் கெட்டால் பரவாயில்லை என்பதால் தானே?

இப்படியா அவர்களை அவமானப்படுத்துவது ?

உச்சநீதிமன்றம் நாளை வாக்கெடுப்பு என்று அறிவித்த உடனேயே கலகலத்து விட்டது  பாஜக .

சிவசேனாவை குற்றம் சாட்டுகிற பாஜக தேர்தலுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்வதைப் பற்றி பேசி முடிவெடுத்தோம் என்று உத்தவ் தாக்கரே சொன்னபோது உடனேயே ஏன் மறுக்கவில்லை? 

இந்துத்துவத்தை பாஜக வுக்கு முன்பே மராட்டியத்தில் முழங்கியது சிவசேனா. பெரிய கட்சியாக இருந்த சிவசேனாவுடன் கைகோர்த்து ஜூனியர் பார்ட்னராக சேர்ந்து ஒரு கட்டத்தில் அவர்களை மைனாரிட்டி பார்ட்னர் ஆக்கிய பாஜக பதவியை பங்கிட்டுக் கொள்ள தயங்கியதுதான் இருபத்து ஐந்து ஆண்டு கூட்டு உடையக் காரணம். இனி ஒட்டாது?

பாஜகவின் உண்மை முகம் மராட்டியத்தில் வெளிப்பட்டு விட்டதுதான் இந்திய அரசியலில் திருப்பு முனை.

இனி யாரும் அவர்களுடன் சேர யோசிப்பார்கள். அதிமுகவுக்கே பயம் வந்துவிட்டதே?

ஒருவகையில் சிவசேனை என்ற மாநில கட்சி மாநிலத் தலைமை வகிப்பது நல்ல முன்னேற்றம். 

மாவீரன் பிரபாகரன் புகழ் நிலைக்கும்! ஏங்க வைக்கும் நினைவுகள்?

மாவீரன் பிரபாகரனின் மாவீரர் தின உரைக்காக உலகமே காத்திருந்த காலம் ஒன்று உண்டு.

அந்த எழுச்சி உரை ஆண்டு முழுதும் வீரர்களுக்கு உணர்வு கூட்டும் உரையாக விளங்கும்.

புலிகளின் ஆட்சிக் காலம் இலங்கைத் தமிழர் வாழ்வில் வசந்த காலம். நம்மால் முடியு என்று உலகுக்கு உணர்த்திய காலம். நேர்மையான போரைத்தான் இறுதி வரை புலிகள் நிகழ்த்தினார்கள். ஒருபோதும் சிங்கள பொதுமக்களை தொட்டதே இல்லை. மாறாக சிங்கள வெறியர்கள்தான் தமிழ் குடிமக்களை சாமானியர்களை பெண்களை குழந்தைகளை கொன்று ஒழித்தார்கள்.

அஞ்சலி செலுத்துவோம். உலகம் காணா உண்மை வீரன். குடும்பத்தையே போரில் ஈடுபடுத்திய தன்னலம் கருதா தன்னிகரில்லா தலைவன்.

விமர்சனங்கள் எல்லாம் ஒருதலைப் பட்சமானவை. எப்படி இவர்களால் முடிந்தது என்ற வெறுப்பினால் விளைந்த வசைகள்.

ஆனால் தமிழ்க் குடிமக்கள் ஒருபோதும் விமர்சனங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதில்லை. தங்களுடன் வாழ்ந்து கொண்டே போரிட்ட தலைவனை அவர்கள் அறிவார்கள் தானே.

இன்று கொலைகாரர்கள் கையில் ஆட்சி வந்து விட்டது.

கோத்தபாய இந்தியாவுடன்  நாங்கள் நடுநிலை வகிப்போம் என்கிறார். நாம்தான் நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அறவழி போராட்டம் ஒரு போதும் தோற்றதில்லை.

அறக்கடவுள் தமிழர்களுக்கு நியாயம் வழங்கியே தீரும்.

அந்த நம்பிக்கையில்

தமிழர்களின் குல தெய்வமாக வாழும்

மாவீரன் பிரபாகரனுக்கு தமிழினத்தின் இதய அஞ்சலி.

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை நியமனம் செய்ய மறுக்கும் அதிமுக அரசு?!

பாஜகவினருக்கு பயந்து பயிற்சி கொடுத்தும் கூட பணியில் அனைத்து சாதியினரையும் அமர வைக்காமல் தவிர்க்கிறது அதிமுக அரசு.

தவிக்கிறார்கள் அனைத்து சாதியினரும்.

பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் கண்ட கனவு கனவாகவே இருக்கிறது.

கேரளாவில் கூட அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்பட்டு விட்டார்கள்.  எண்ணிக்கை முக்கியமல்ல. இன்று இருநூறு பேர். நாளை இரண்டு ஆயிரம் பேர். எதிர்காலத்தில் பூணூல் போடாதவரும் அர்ச்சனை செய்யாத கோவிலே இல்லை என்னும் நிலை உருவாகும். 

பூணூல் போட்டவர் இறைத்தொண்டுதானே செய்கிறார். அதில்தான் மற்றவர்கள் பங்கு கேட்கிறார்கள். கொடுத்து விட்டுப் போகவேண்டியதுதானே.

குறிப்பாக சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் அட்டூழியம் இன்னும் எத்தனை ஆண்டுகள் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதே தெரியவில்லை.

கோவிலுக்கு சென்று முக்குறுணி கணபதிக்கு அர்ச்சனை செய்ய கோரியபோது லதா என்ற பெண்ணை அர்ச்சகர் தர்ஷன் என்பவர் தரக்குறைவாக பேசியதோடு கன்னத்திலும் அறைந்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப் ப்ட்டிருக்கிரரர் தர்ஷன்.

கோவில் மீட்பு போராட்டம் வெற்றி  பெறும் நிலையில் இருந்ததை சுப்பிரமணியன் சாமி தனது உச்சநீதி மன்ற தொடர்புகளை வைத்து ரத்து செய்ய வைத்தார்.

அது அவர்களால் முடிகிறது. இன்று கோவிலை தங்கள் சொந்த சொத்து போலவே அவர்களால் கொள்ளை அடிக்க முடிகிறது.

பாவம் பக்தன். அவனுக்கு இதையெல்லாம் பரிசீலிக்க நேரம் இல்லை. அவனுக்கு அவன் பிரச்னை. அதை இறைவன் தீர்க்க வேண்டும் என்று முறையிடுவதை தவிர வேறு ஒன்றும் தெரியாது.

இந்த அப்பாவி பக்தர்கள் தான் அவர்களின் பலம. பக்தன் விழித்துக் கொண்டால்  எல்லாம் சரியாகி விடும்.

இறைவனுக்கும் எனக்கும் இடையில் ஏன் ஒருவன் என்ற கேள்வியை பக்தன் கேட்க ஆரம்பித்து  விட்டால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும்.

சட்டம் தடை போடாத நிலையிலும் ஆட்சியில் அமர்ந்து கொண்டு அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பாஜக வுக்கு பயந்து கொண்டு அனைத்து தரப்பினரையும் அர்ச்சகர் ஆக்காமல் வைத்திருக்கும் அதிமுக ஆட்சி வீட்டுக்குப்  போனால்தான் அடுத்த ஆட்சியாவது அந்த வரலாற்று கடமையை செய்யும்.

ஒபிஎஸ் ஐ நீங்க ஆம்பளைங்களா என்று ஏன் கேட்டார் குருமூர்த்தி?

நான்தான் ஒபிஎஸ் ஐ ஜெயலலிதா சமாதியில் தர்ம யுத்தம் செய்ய சொன்னேன்.    அதனால்தான் இரண்டு அதிமுக பிரிவுகளும் ஒன்றாகின. ஒபிஎஸ் என்னை சந்தித்தபோது நீங்களெல்லாம் என்ன ஆம்பளைங்களா என்று கேட்டேன். என்று பேசியிருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் விழாவில்.

சசிகலா முதல்வர் பதவி ஏற்பதை தடுக்கும் எண்ணத்தில் மத்திய பாஜக ஆட்சியாளர்கள் திட்டமிட்டு செயல்பட்டார்கள்.

குருமூர்த்தி இப்படி பேசுவது புதிதல்ல. ஆர் கே நகர் தேர்தலில் தினகரன் வெக்ற்றி பெற்றபோது அதிமுகவினரை “a bunch of impotents” என்று வர்ணித்தார். அதிமுகவினரை பார்த்து  இப்படி விமர்சித்தால் அவர்களிடம் இருந்து கடுமையான எதிர்வினை வராது என்ற நம்பிக்கை குருமூர்த்திக்கு .

இப்போது ஒபிஎஸ் தன்னை சந்தித்த போதும் அப்படியே அழைத்ததாக கூறுகிறார். இப்போதும் ஒபிஎஸ் நேரடியாக மறுக்கவில்லை.

ஜெயக்குமார் ஒரு ஆம்பிளை மற்றவரை ஆம்பிளையா என்று கேட்க மாட்டார் என்கிறார். தரங்கெட்ட செயல் என்கிறார். செல்லூர் ராஜு குருமூர்த்தி ஒரு உதிர்ந்த சருகு என்கிறார். மூன்றாம் தர ஆள் என்கிறார்.

முதல்வர் வாய் திறக்கவில்லை.

ஒபிஎஸ் ஏன் குருமூர்த்தியை சந்திக்க வேண்டும்? பெரிய அரசியல் ஞானி என்பதாலா? பத்திரிகை ஆசிரியர் என்பதாலா? எப்போதும் அரசியல் ஆலோசனை சொல்பவர் என்பதாலா? எதுவும் இல்லை.!

மத்திய பாஜக  அரசில் செல்வாக்கு மிக்கவர். ரிசர்வ் வங்கியின் இயக்குனராக பாஜக அரசு நியமித்து அவரது முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறது. அவரிடம் பேசினால் மத்திய பாஜகவிடம் பேசுவது போல. அந்த நிலையில்தான் குருமூர்த்தியிடம் சென்று ஒபிஎஸ் ஆலோசனை கேட்டு தர்மயுத்தம் -சமாதியில் தியானம் என்று கலகத்தை தொடங்கினார். 

எனவே குருமூர்த்தியிடம் ஆலோசனை என்பது பாஜகவிடம் அடங்கிப் போவதற்குத் தயார் என்பதன் அடையாளம். 

குருமூர்த்தி ஏன் இப்படி அதிமுகவை சீண்ட வேண்டும்.?

இரண்டு காரணங்களுக்காக. ஒன்று ரஜினியை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு எதிர்காலத்தில் பாஜக திட்டமிடும் வியூகங்களுக்கு தாளம் போட வேண்டும்.   

எனவே ரஜினி எனக்கு காவி சாயம் பூச வேண்டாம் என்பதெல்லாம் வேடம்.

அந்த ஸ்க்ரிப்டை எழுதியதும் பாஜகவாகத்தான் இருக்கும்.

மீண்டும் சசிகலாவை உள்ளே விட மாட்டோம் என்பதற்குத்தான் ஐந்தாண்டு கால உறுப்பினர் நிபந்தனையை புகுத்தி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது அதிமுக பொதுக்குழு.

மேயர் தேர்தலில் கேட்ட இடம் கொடுக்காமல் மறைமுக தேர்தலை புகுத்தி பாஜக வின் கோபத்துக்கு ஆளானது அதிமுக.

அதேபோல் இன்னமும் முழுவதும் பாஜகவின் திட்டங்களுக்கு தலை ஆட்டாமல் போக்குக் காட்டி வருகிறது எடப்பாடி அரசு. எனவேதான் குருமூர்த்தி மூலம் ஒரு மறைமுகமான எச்சரிக்கையை மத்திய அரசு விடுத்திருக்கிறது என்றுதான் தெரிகிறது.

பார்க்கலாம் அதிமுக பாஜகவின் பிடியில் அகப்படப் போகிறதா விடுபடப் போகிறதா என்பதை?

ஆட்சிக்கு வர மந்திரம் வைத்திருக்கும் அன்புமணி ராமதாஸ்?!

அதிசயம் நடக்கும் என்று ரஜினி காட்டிய பூச்சாண்டி காட்சிகள் மறையும் முன்பே அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்து விட்டார்.

“தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சி நடைபெறும். யார் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி. என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது. அது என்ன மந்திரம் என்று இப்போது சொல்ல மாட்டேன். நேரம் வரும்போது சொல்லுவேன்.” இதுதான் அன்புமணி பாமக இளைஞரணி கூட்டத்தில் பேசியது.

தமிழத்தின் மாற்றம் முன்னேற்றத்தை கொண்டு வருவோம் என்று யாரும் சொல்வதில் தவறில்லை. ஆனால் அது மந்திரத்தால் முடியும் என்னும்போதுதான் கவலையாக இருக்கிறது.

இப்படிப்பட்டவர்கள் கையில்  தமிழகம் சிக்கினால் என்னவாகும் என்ற கவலை பிறக்கிறதா இல்லையா?

பொறுப்புள்ள தலைவர் என்றால் மக்களுக்கு புரியும் மொழியில் பேசவேண்டும்.

ஒருவர் அதிசயம் நடக்கும் என்கிறார். மற்றொருவர் மந்திரம் இருக்கிறது என்கிறார்.

மராட்டியத்தில் பாஜக நடத்திய ஆட்சி மாற்றத்தை பாமக தேமுதிக போன்ற கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவிக்கின்றன.

ஆளும் அதிமுக ஆட்சி மீது அன்று  ஊழல் குற்றச்சாற்று சுமத்திய பாமக இன்று கூட்டணி ஆட்சிக்குவேட்டு வைக்கவும் தயாராகி விட்டது.

தமிழர்களை மேலும் ஒடுக்க ராணுவ ரோந்து; கோத்தபயவின் கோர முகம்?

போருக்குப்பின் தமிழர்கள் வாழ்க்கை இலங்கையில் முடங்கிப் போய்விட்டது.

உரிமைக்குரல் எதையும் எழுப்பும் நிலையில் யாருமே இல்லை. அடங்கிப் போய்தான் வாழவேண்டும். சாதாரண மனித உரிமைகள் கூட அங்கே கேள்விக் குறிதான்.

இந்த நிலையில் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட கோத்தபய ராஜபக்சே அதிபராகவும் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே பிரதமராகவும் பதவி ஏற்ற பின் நிலைமை படுமோசம்.

இரண்டே இரண்டு தமிழர் பிரதிநிதிகள். அதிலும் ஒருவர் எப்போதுமே ஆட்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் மலையக தொண்டைமான் மற்றொருவர் டக்லஸ் தேவானந்தா .                              .

இந்தியாவில் எப்படி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்படாமல் பாஜக ஆட்சி அமைத்ததோ அதேபோல் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் கூட இல்லாமல் சிங்கள அமைச்சரவை அமைக்கப்பட்டிருக்கிறது.

இன்னிலையில் இலங்கை முழுதும் ராணுவம் ரோந்து பணி ஆற்றும் என்று புதிய அதிபர் ஆணையிட்டிருக்கிறார். இதன் பொருள் தமிழர் வாழும் பகுதிகளில் இனி தமிழர்கள் ராணுவ கண்காணிப்பில் தான் நடமாட முடியும்.  சந்தேகப்படும் யாரையும் ராணுவம் சுட்டு வீழ்த்தும். யாரும் கேள்வி கேட்க முடியாது. ஏற்கெனெவே யாழ் பகுதியில் ராணுவ கட்டுப்பாட்டில்தான் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பிறகு ஏன் இன்னும் ராணுவ ரோந்து?

தமிழர்கள் யாரும் கூடி செயல்படக் கூடாது. உரிமைக்குரல் எழுப்பக் கூடாது. கூடினால் சுட்டு வீழ்த்துவோம். இதுதான் இன்று புதிய அதிபர் விடுக்கும் செய்தி.

இதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் இந்திய அரசு புதிய அதிபருக்கு அழைப்பு விடுத்தது அவரும் இந்தியாவுக்கு வரப்போகிறார். சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும். பின் எதற்கு அவர் தமிழர்களைப் பற்றி கவலைப் பட வேண்டும்.?

கண்டும் காணாமலும் இருக்கும் இந்திய அரசே

உனது கண்கள் என்று திறக்கும்?!

வஞ்சகம், துரோகம்; மராட்டியத்தில் மீண்டும் பேஷ்வா பட்னாவிஸ் ஆட்சி?

முன்பே பொதுமேடையில் எழுதி இருந்தோம். மராட்டியத்தில் நடப்பது பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதோர் போராட்டம் என்று.

இன்று அதுதான் நடந்து இருக்கிறது.

இரவு வரை சிவசேனா முதல்வர்; தேசியவாத காங்கிஸ், காங்கிரஸ் துணை முதல்வர்கள், குறைந்த பட்ச செயல் திட்டம் கூட்டணி ஆட்சி என்று இருந்த நிலை மாறி நள்ளிரவு நேரத்தில் நடந்த பேரம்  முடிந்து அதிகாலை ஐந்து மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டு ஏழரை மணிக்கு தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும் அஜீத பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்கிறார்கள் என்றால் இந்திய நாட்டில் ஜனநாயகம் இனி நிலைக்குமா என்ற கேள்வி ஏழுகிறதா இல்லையா?

தேசியவாத காங்கிரசும் குடும்பமும் உடைந்து விட்டது என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே எழுதுகிறா. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார். எல்லா ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு நேற்றைய தினம் சரத் பவார் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என்று அறிவித்த போதுகூட கூட இருந்து நள்ளிரவில் திடீர் என்று பாஜகவுக்கு தாவி துணை முதல்வர் பதவி ஏற்கிறார் என்றால் திரை மறைவில் அதுவரை பேரம் நடத்திக் கொண்டு இருந்தார் அஜித் பவார் என்றுதான் பொருள்.

அஜித் பவார் மீது வழக்கு பதிவு செய்து மிரட்டிக் கொண்டிருந்தது மத்திய வருமான வரித்துறை. அதன் தொடர்ச்சியா இந்த முடிவு என்ற கேள்விக்கும் பதில் தெரிய வேண்டும்.

 மராட்டியத்தின் எட்டப்பன் என்ற பெயரை எடுத்து விட்டார் அஜித் பவார். 

இன்று மாலை நான்கரை மணிக்கு  நடக்கும் தேசியவாத காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு தெரிந்துவிடும்.   22 பேரை தன்னுடன் அஜித் வைத்திருப்பதாக சொல்லப் படுகிறது.

ஏற்கெனெவே பாஜக ஆட்சி அமைக்க முயற்சித்தபோது பிற கட்சி மற்றும் சுயேட்சைகள் 29 பேரில் 16 பேரை இழுத்து வைத்தும் எண்ணிக்கை 145 வராததால்தான் உரிமை கோரவே இல்லை பாஜக.

இன்றும் மோசடி செய்துதான் எண்ணிக்கையை காட்டி இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

ஆளுநர் ஆளும்கட்சி என்பதால் ஆட்டுவிக்கிற படி ஆடியிருக்கிறார். இல்லை என்றால் அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டுமா வேண்டாமா?

எல்லாருக்கும் ஒருநாள் மட்டுமே அவகாசம் கொடுத்த ஆளுநர் இப்போது பட்னாவிசுக்கு எத்தனை நாள் அவகாசம் வழங்கி இருக்கிறார்.?

வழக்கு உச்சநீதி மன்றத்தில்  இருக்கிறது. இருக்கும்போதே இத்தனை மோசடி என்றால் உச்சநீதி மன்றத்தை இவர்கள்  மதிப்பது இவ்வளவுதானா?

காங்கிரசும் இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவே இல்லை.

கிடைத்த  அரிய வாய்ப்பை நழுவ விட்டதில் காங்கிரசுக்கு  அதிக பங்கு  உண்டு. கூட்டணியை உறுதி செய்வதில் காங்கிரஸ் காட்டிப் மெத்தனத்திற்கு கிடைத்த பரிசு தான் ஆட்சி பறிபோனது. 

மராத்தா மக்களின் உரிமைக்கு சிவசேனாவும் தேசியவாத காங்கிரசும் முன்னுரிமை கொடுத்தாலும் சிவசேனாவின் இந்துத்துவ கொள்கைகள் தேசிய வாத  காங்கிரசுக்கு  உடன்பாடு  இல்லாதது.

25 ஆண்டுக்கால கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவிற்கு எதிராக் சிவசேனா வந்தது என்றால் அதற்கு பாஜகவின் வஞ்சகத்தை சிவசேனா புரிந்து கொண்டதுதான் காரணம்.

மராட்டியத்தில் முன்பு சிவாஜி மகாராஜாவின் மகன்  களுக்குள்  எழுந்த வாரிசு  உரிமை சண்டையில் இடையில் புகுந்து பெயரளவுக்கு மராத்தா  மன்னன் அமைச்சராக இருந்த பேஷ்வாக்களின் கையில் உண்மையான அதிகாரம் என்ற நிலையை ஏற்படுத்தினார்கள் பார்ப்பனர்கள்.   

 அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. வரலாறு திரும்புகிறது. பாடம் படிக்க வேண்டிய  மராத்தாக்களில் ஒருவர்  காட்டிக்  கொடுத்து பதவியில்  பங்கு வாங்கி பார்ப்பனர் ஆட்சியில்  அமர்வதற்கு துணை போயிருக்கிறார்.

இந்திய துணை கண்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் என்னென்ன நிகழும் என்பதற்கு கட்டியம் கூறி இன்று மராட்டியத்தில் பார்ப்பனீயம் வென்று கொண்டிருக்கிறது. 

ஆனால்  அறம்தான் இறுதியில்  வெல்லும்

அதையும் வரலாறு எழுதும்.

நித்யானந்தா மீது வழக்குகள் பாயும் மர்மம்?

கர்நாடகத்தின் பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தா நிலை கொண்டு விட்டார்.

அவரை அங்கிருந்து துரத்த எத்தனையோ முயற்சிகள் நடந்தன. எல்லாவற்றையும் தாண்டி அவர் அங்கேதான் இருக்கிறார்.

ஆன்மிகவாதி என்பதை விட பிரச்னைகளின் நாயகன் என்பதே பிரபலம்.

ஆங்கிலப் பத்திரிகைகள் அவரை தானே சொல்லிக் கொள்ளும் சாமியார் என்றுதான் எழுதுகின்றன.

பார்ப்பனர் அல்லாதவர் என்பதால் மட்டும் அப்படி எழுதுவதாக சொல்ல முடியாது. 

ஆனால் அதுவும் ஒரு காரணமாக இருக்குமோ   என்று எண்ணத் தோன்றுவதற்கு  அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட எந்த பார்ப்பன சாமியாரை பற்றியும் அப்படி எழுதுவதில்லை.

இரண்டு குழந்தைகளை அடைத்து வைத்து இருக்கும் குற்றத்துக்காக அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.

புகார் கொடுத்தவர் தன் இரண்டு பெண்களையும் ஒரு மகனையும் அங்கே படிக்க வைக்க அனுப்பி வைத்த ஜனார்தன சர்மா என்ற பார்ப்பனர்.

காவல் துறை விசாரித்து குற்றம் நடந்து  இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய எதிர்ப்பார்ப்பும்.

ஆனால் நித்தியானந்தா வெளிநாடு தப்பி  சென்று விட்டார் என்று காவல் துறை சொல்கிறது. ஆனால் அன்று மாலையே தான் இமயமலையில் இருப்பதாக நித்தியானந்தா வீடியோவில் விளக்கம் சொல்கிறார். 

காவல்துறை இப்படி ஒரு தவறான தகவலை தந்தால் அதன் மீது எப்படி நம்பிக்கை வரும். ?

இந்தியாவில் நீதியை பெற நீண்ட காலமாகும்என்றும் இந்து மதத்தை வெறுப்பவர்களும் நாட்டை வெறுப்பவர்களும் தனக்கு எதிராக மிகப் பெரிய சதியில் இறங்கி இருப்பதாக நித்தியனந்தா கூறுகிறார்.

சாமியார் மடங்கள் என்றாலே வில்லங்கம் விவகாரம் என்று ஆகிவிட்டது.  

காவல் துறைதான் சரியான நடவடிக்கை மூலம் அந்த குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மையை கண்டு பிடிக்க வேண்டும்.