Home Blog Page 24

டி என் பி எஸ் சி குரூப் 2 தேர்வில் தமிழ்ப் பாடம் அகற்றம் ??!!

தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வில் முதல் நிலை தேர்வில் மொழித்தாளுக்குப் பதிலாக பொதுஅறிவு கேள்விகள் சேர்க்கப் பட்டிருக்கின்றன.

ஆங்கிலமும் தமிழும் இருந்ததால் தமிழே தெரியாமல் ஆங்கிலத்தில் எழுதி தேர்ச்சி பெறும் நிலை இருந்ததால் அந்த முறை நீக்கப்பட்டு உள்ளதாக ஆணைய செயலாளர் விளக்கம் தருகிறார்.

தமிழ் தெரியாமல் அரசு வேலைக்கு செல்ல முடியாது என்றும் அவர் கூறுகிறார். அப்படியானால் ஏன் மொழித் தேர்வை தமிழில் மட்டுமே நடத்தக் கூடாது.?

விளக்கம் பல சந்தேகங்களை எழுப்பிவுள்ளது.

6500 பணியிடங்களுக்கு 15 லட்சம் பேர் தேர்வு எழுதும் நிலைதான் இன்று இருக்கிறது.

இதில் தமிழ் தேர்வை தவிர்த்து பணிக்கு செல்ல முடியும் என்ற நிலை வராமல் தடுக்க வேண்டிய கடமை  தேர்வானையத்துக்கு இருக்கிறது.

ஆணையம் தந்து முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

தமிழ்ப் பாடத்திட்டத்தில் படித்தால் இனி வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு உறுதி; உயர் நீதிமன்றம்

ஓர் நல்ல செய்தி.

சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

தமிழ்ப் பாடத்திட்டத்தில் படித்தால் வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் தமிழகத்தில் அமுலில் உள்ளது.

ஆனால் இதை பயன்படுத்தி நாங்கள் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்றதால் எங்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகையை பெற உரிமை உண்டு என்று சிலர் கோரியதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இந்த கேள்விக்கு விடை காண வேண்டி வந்தது.

நீதிபதிகள் சுப்பையா, சி வி கார்த்திகேயன், சி எஸ் சரவணன் கொண்ட அமர்வு தெளிவாக பள்ளி முதல் கல்லூரி வரை முழுமையாக தமிழ் வழியிலேயே பயின்றவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு பெற உரிமை உண்டு என தீர்ப்பளித்திருக்கிறது.

அதற்கு அந்த கல்வி நிறுவனங்கள் அந்த மாணவர் தமிழ் வழியில்தான் படித்தார் என்று சான்று வழங்க வேண்டும். இதனால் இனி வேறு மாநிலங்களில் இருந்து நாங்கள் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்று விட்டோம் என்றோ ஆங்கில வழியில்  படித்தவர்கள் நாங்கள் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்று விட்டோம் என்றோ இட ஒதுக்கீடு கோர முடியாது .

இதனால் தமிழில் பாடத்திட்டத்தில் சேரலாம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை பெருகும்.

கடந்த ஆண்டு 320 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் தாங்கள் தமிழில் தேர்வு எழுதியதாக 3 பேர் உரிமை கோரி மறுக்கப்பட்டதால் அவர்கள் தொடர்ந்த வழக்கில்தான் இந்த தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

எந்த சமூக நீதி திட்டத்தையும் யாராவது நாலுபேர் கெடுக்க முனைவதை இது காட்டுகிறது.

இந்த இட ஒதுக்கீட்டை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

தமிழ்ப் பாடத்திட்டத்தில் படிப்போர்க்கு இன்னும் என்னென்ன சலுகைகளை அளிக்கலாம் என்று ஆராய்ந்து பார்த்து அவற்றை வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.

இந்தி திணிப்பையும் எதிர்ப்போம். தமிழ் வழிக் கல்வியையும் ஊக்குவிப்போம் என்பதே சரியான பாதை.

அண்ணா பல்கலையில் சமஸ்கிருத திணிப்பு; குவியும் கண்டனங்கள்??!!

என்ன எதிர்ப்பு வந்தாலும் சமஸ்க்ரிதத்தை திணித்தே தீருவது என்று மத்திய பாஜக அரசு கங்கணம் கட்டி வேலை செய்து வருகிறது.

இப்போது பிரச்னை வெடித்திருப்பது அண்ணா பல்கலைக் கழகத்தில்.    மூன்றாமாண்டு பி டெக் மாணவர்கள் மூன்றாவது செமஸ்டரில் பகவத் கீதையை ஒரு பாடமாக படித்து தேர்வு எழுதுவதை கட்டாயமாக்கி வெளியிட்ட அறிவிப்புதான் பிரச்சனை ஆகியிருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் கண்டித்து அறிக்கை வெளியிட்டபின் துணை வேந்தர் சூரப்பா தலையிட்டு கட்டாயம் என்பது நீக்கப்படுகிறது என்றும் மாணவர்கள் கொடுக்கப்பட்டிருக்கிற 12 பாடங்களில் தாங்களாகவே மூன்றை தேர்ந்தெடுத்து எழுதலாம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அவரது தெளிவில்தான் பல தகவல்கள் தெரிய வருகின்றன.

இந்த திணிப்பு என்பது அகில இந்திய தொழில் நுட்ப கல்வி இயக்ககம் (AICTE) தனது விதிமுறைகளில் இந்த  திணிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள்தான் சமஸ்கிருதத்தை 32 பாடங்களில் ஒன்றாக திணிக்கிறார்கள். தொழில் நுட்ப படிப்புக்கும் சமஸ்கிரிததுக்கும் என்ன தொடர்பு என்பதை அவர்கள் விளக்கவில்லை.

அந்த 32 பாடத்திட்டத்தில் 12 பாடத்திட்டத்தை அண்ணா பல்கலை தேர்ந்தெடுக்கிறது. நாங்கள் சமஸ்கிரிததை தேர்ந்தெடுக்க வில்லை என்கிறார் சூரப்பா. எனவே நாங்கள் சமஸ்கிருதத்தை திணிக்கவில்லை என்கிறார்.

ஏ ஐ சி டி இ தொகுத்த பாடங்களில் கீதை, உபநிஷத்துகள், பிளேட்டோவின் தத்துவங்கள், கிரேக்க தத்துவங்கள், என்று பட்டியல் நீளுகிறது. ஆனால் இவை தொழில்நுட்ப படிப்புக்கு எப்படி உதவும் என்பதுதான் கேள்வி.

பகவத் கீதையை படிப்பதால் ஒருவனின் பர்சனாலிடி வளர்கிறது என்றும் வாழ்வின் இலக்கை சாதிக்க வேண்டும் என்ற சக்தி பிறக்கும் என்றும் காரணம் சொல்கிறார்கள்.

அகில இந்திய அமைப்பு பரிந்துரைத்திருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்வது அந்தந்த பல்கலைக் கழகங்களின் தனியுரிமை. எனவே அப்படியே அவற்றை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்கிறார் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி.

சூரப்பா நியமனத்தின் காரணம் புரிந்து விட்டது.

55 ஆண்டுகளில் முதன் முதலாக சரத் பவார் மீது வழக்குப் பதிவு செய்தது அமலாக்கப் பிரிவு??!!

மராட்டியத்தின் முதுபெரும் தலைவர் சரத் பவார். முதல் அமைச்சராகவும் மத்திய அமைச்சராகவும் கடந்த 55 ஆண்டுக்காலமாக கோலோச்சியவர்.

காங்கிரசோடு முரண் பட்டு தனிக் கட்சி கண்ட இவர் இப்போது அதே காங்கிரசோடு கூட்டு கண்டு பாஜக -சிவசேனா அணியை எதிர்க்கிறார்.

இவரது கட்சியில் இருந்து பலரும் விலகி பாஜக -சிவசேனாவில்  இணைந்து வருகையில் இப்போது இவரது சக்தியை முற்றிலும் முடக்க திட்டமிட்டு மத்திய அரசு அமலாக்கத் துறையை பயன்படுத்தி இவர் மீதும் குடும்பத்தினர் மீதும் ஆதரவாளர்கள் மீதும் கூட்டுறவு சங்க ஊழல் என்று ஒரு புகாரை சுரீந்தர் அரோரா என்பவர் கொடுத்த புகாரை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்திருக்கிறது.

மராட்டிய மாநில கூட்டுறவு வங்கி சம்பந்தப்பட்ட ஊழல் 25000 கோடி ரூபாய் அளவுக்கு நடந்திருப்பதாக புகார் சொல்கிறது.

இந்த ஊழல் 2002 முதல் 2017 வரையிலான 15 ஆண்டுகளில் நடந்ததாம். எல்லாம் கூட்டுறவு சங்கங்களுக்கு வங்கி கொடுத்த கடன் பற்றியதாகும். இதை எல்லாம் ஆடிட் செய்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை.

இதுவரை சரத் பவார் எந்த வங்கியிலும் எந்த கால கட்டத்திலும் இயக்குனராகக் கூட இருந்ததில்லை. பின் எப்படி அவர் தவறுக்கு துணை போய் இருக்க முடியும்? இது அவரது மகள் சுப்ரியா சூலே யில் கேள்வி.

மேலோட்டமாக பார்த்தால் இது மோசமான பழி வாங்கும் அரசியல்.

நீதிமன்றங்கள் எப்படி எந்த நடவடிக்கையை அங்கீகரிக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த பழி வாங்கும் நடவடிக்கையால் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்காமல் இருக்க வேண்டும்.

இந்தியாவின் தந்தை மோடியாம் – இந்தியர்களின் ஒட்டுக்களுக்காக டிரம்ப் வர்ணனை?

நமது பிரதமரை வெளிநாட்டு அதிபர் ஒருவர் அதிலும் பலம் வாய்ந்த அமெரிக்க அதிபர் புகழ்ந்தால் எந்த இந்தியனுக்கும் பெருமைதான் வரும். ஆனால் அந்த பெருமை டொனால்ட் டிரம்ப் நரேந்திரமோடியை இந்தியாவின் தந்தை என்று புகழ்ந்த போது வந்ததா என்றால் அது கேள்விக்குறிதான்.

தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் டிரம்பிற்கு இந்தியர்களின் நாற்பது லட்சம் வாக்குகள் மிக முக்கியம்.

அதுவும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் ஹூஸ்டனில் அம்பதாயிரம் இந்தியர்கள் கலந்து கொண்டு மோடிக்கு தெரிவித்த ஆதரவை கண்டபிறகு டிரம்பிற்கு இந்தியர்களின் வாக்கு மோடியிடம் இருக்கிறது என்ற உணர்வு வந்தேவிட்டது.

அதனால்தான் மோடி பயங்கரவாதத்தை காஷ்மீர் பிரச்னையை வெற்றிகரமாக எதிர்கொள்வார் என்று டிரம்ப் சான்று அளித்தார்.

இந்தியாவுடன் ஆன வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று குறிப்பிட்ட டிரம்ப் இதுவரை பிளவு பட்டு கிடந்த இந்தியாவை ஒன்றுபடுத் தியவர் மோடி என்று புகழாரம் சூட்டினரர்.

எல்லாம் பெருமைதான். ஆனால் இந்தியாவின் தந்தை மோடி என்றதைத்தான்  சீரணிக்க முடியவில்லை.

தேசத்தின் தந்தை காந்திக்கு முன் மோடியை ஒப்பிடலாமா? அது அவருக்கு செய்யும் அவமரியாதை இல்லையா?

மோடியின் தனித்துவம் பற்றி வேறு எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து பேசலாம். தவறு இல்லை. பிரம்மச்சரியம் காப்பவர். ஒழுக்கம் பேணுபவர். சொத்து சேர்க்காதவர். குடும்ப அரசியல் செய்யாதவர். அரசியலுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர். சாதனைகளை செய்ய துடிப்பவர். இதெல்லாம் நல்ல விடயங்கள்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரக். சனாதன தர்மத்தை தூக்கிப்பிடிப்பவர்.  பிராமணியத்தின் வேலையாள். கிறிஸ்தவ முஸ்லிம்களின் எதிரி. பெருமுதலாளிகளின் ஏஜென்ட். எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவதில் மூர்க்கமாக நிற்பவர். மொத்தத்தில் இட்லர், முசோலினி பாணி அதிகார வெறி பிடித்த தலைவர். இது எதிர்கட்சிகளின் விமர்சனம்.

இதில் எது சரி என்பதை இந்திய மக்கள் வாக்குப்போடும் சமயத்தில் தான் வெளிப்படுத்துவார்கள்.

இந்திய அரசியலில் டிரம்ப் தலையிடுவது சரிதானா?

உண்மையிலேயே மோடி இத்தகைய புகழ்ச்சிக்கு தகுதியானவராக வளர்ந்தால்  பொதுமேடை நிச்சயம் அகமகிழ்ந்து பாராட்டும். அந்த நாள் வருமா?

டிரம்ப் மீது எதிர்க்கட்சிகள் தேசத்துரோக குற்றச்சாட்டு வைத்திருக்கின்றன. (Impeachment) ஆம். தனது துணை அதிபரையே தேர்தலில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு. விசாரணை என்ன ஆகும் என்பது விரைவில் தெரியவரும்.

உண்மையிலேயே மோடி இந்தியாவின் தந்தை ஆகும் எண்ணம், தகுதி உள்ளவரா?

தேவைப்பட்டால் சங்கத்தை எதிர்ப்பாரா?

மகாத்மா காந்தி நல்ல இந்துவாக வாழ்ந்தார். ஒருபோதும் பிற மதங்களை வெறுத்ததில்லை. அதனாலேயே வெறி கொண்ட பார்ப்பனர் ஒருவர் அவரை கொலை செய்தார். அதை இன்றும்கூட பார்ப்பனர்கள் முழுவதுமாக கண்டிக்க வில்லை. இப்போது கூட காந்தியின் உருவபொம்மையை சுட்டு தங்கள் வெறியை காட்டிக் கொள்கிறார்களே?

அத்தகைய சக்திகளை மோடி கண்டிப்பாரா? அப்போது தெரியும்.

மோடி இந்தியாவின் தந்தையா? சங்கத்தின் வேலையாளா? என்பது.

தமிழகத்தில் சிறுபான்மையினர் பள்ளிகள் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டாமா?

தமிழகத்தில் சிறுபான்மையர் பள்ளிகள் 2022 வரை தமிழ்ப் பாடம் நடத்த வேண்டாம். அதற்குப் பிறகு நடத்தியாக வேண்டும். இதுதான் உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு.

இதையும் சிறுபான்மை நிருவனங்கள் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துமா என்பது அப்போதுதான் தெரியவரும்.

தமிழ்நாடு கற்றல் சட்டம் 2006 தமிழ் பாடத்தை கட்டாயமாக பத்தாம் வகுப்பு வரை கற்று தேர்வு நடத்த சொன்னது. ஆனால் அதை எதிர்த்து சிறுபான்மை நிறுவனங்கள் நீதிமன்றம் சென்றன. தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப் படாமல் எப்படி பாடம் நடத்துவது.

2006ல் சட்டம் இயற்றிய அரசு 2014ல் தான் சட்டத்தை அமுல்படுத்துகிறது. நீதிமன்றம் சென்ற பிறகுதான் அரசு தமிழ் ஆசிரியர்களை நியமிக்கிறது. அதுவரை ஆண்டுக்கு ஆண்டு விலக்கு அளித்துவந்த நீதிமன்றம் இப்போது 2022 வரை விலக்கு அளித்து அதன்பின் தமிழ் தேர்வு நடக்கும் என அறிவித்திருக்கிறது. சட்டத்தில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கவும் மறுத்துவிட்டது.

அரபு, உருது மொழிகளை  தாய் மொழியாக கொண்டிருந்தாலும் தமிழை ஒரு மொழியாக கற்று தேர்வது தமிழகத்தில் வாழ்பவர்கள் கடமை என்பதை சிறுபான்மையர் உணரவேண்டும். ஒப்புக் கொள்ளவேண்டும்.

நீதிபதிகள் நியமனத்தில் தலையீடுகள் நீதி பரிபாலனத்தை பாதிக்கின்றன?! தலைமை நீதிபதி புகார்?!

நீதி பரிபாலனம் நீதிபதிகள் நியமனத்தில் தலையிடுவதால் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவிக்கிறார் என்றால் நிலைமை எவ்வளவு தூரம் மோசமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கொலிஜியம் என்ற உச்சநீதி மன்ற சீனியர் நீதிபதிகளின் அமைப்பு நீதிபதிகளின் நியமனத்தில் அதிகாரம் செலுத்தி வருவது எந்த சட்டத்தின் அடிப்படையில் என்பதை  உச்ச நீதிமன்றம் தான் விளக்க வேண்டும்.

நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்ற கொலிஜியமும் மத்திய அரசும் முட்டி மோதிக் கொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி திரிபுராவுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ளாமல் ராஜினாமா செய்ததும் அதை தாமதித்து குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டதும் வழக்கறிஞர்கள் போராடியதும் இன்னும் ஈரம் காயவில்லை.

இப்போது குஜராத் தலைமை நீதிபதி குரேஷியை ம பி தலைமை நீதிபதியாக சிபாரிசு செய்து கொலிஜியம் தகவல் அனுப்புகிறது. அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாமல் பரிந்துரையை கிடப்பில் மூன்று மாதங்கள் போட்டுவிட்டு அவரை மும்பை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றுகிறது. பின் பல கடிதங்களுக்குப் பின் அவரை சிறிய நீதி மன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்து தகவல் கொடுக்கிறது. அதையும் கொலிஜியம் ஏற்றுக்கொண்டு குரேஷியை திரிபுரா நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கிறது.

ஆக குரைஷி நியமனத்தில் கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதில்தான் உச்ச நீதிமன்றம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இத்தகைய தலையீடுகள் நீதி பரிபாலனத்தை பாதிக்கும் என்றும் இது நீதிமன்றம் என்ற நிறுவனத்துக்கு நல்லதல்ல என்றும் தனது கருத்தை உச்சநீதி மன்றம் பதிவு செய்கிறது.

நீதிமன்றங்கள் அரசியல் வழக்குகளில் நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை இத்தகைய நிகழ்வுகள் பொடிப் பொடியாக்குகின்றன.

நீதிமன்றங்களை தங்கள்  கைப்பிடியில் வைத்திருக்க விரும்பும் அந்த சக்திகள் யார்?

அதிகாரிகளை விட்டு விட்டு ப சிதம்பரத்தை மட்டும் குற்றவாளி ஆக்குவது ஏன்?

நேற்றைய தினம் ப சிதம்பரத்தை சிறையில் சந்தித்து சோனியாவும் மன்மோகன் சிங்கும் ஆறுதல் கூறினர்.

அப்போது மன்மோகன் சிங் எழுப்பிய கேள்விகள் மிக முக்கியமானவை.

‘ப. சிதம்பரம் துறையில் ஒரு டஜன் அதிகாரிகள் ஆராய்ந்து செய்த பரிந்துரையை ப சிதம்பரம் இறுதியில் ஒப்புதல் அளித்து இறுதிக் கையெழுத்து இட்டிருக்கிறார். அதில் இறுதி ஒப்புதல் அளித்த சிதம்பரம் மட்டுமே தவறு இழைத்ததாக எப்படி கருத முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் மன்மோகன்சிங்.

அதிலும் ஆறு பேர் உயர் தகுதி  படைத்த செயலாளர்கள். அந்த செயலாளர்கள் ப.சிதம்பரம் சொல்லித்தான் தாங்கள் பரிந்துரை செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்களா?

அப்படியே ஒரு அமைச்சர் அழுத்தம் கொடுத்ததால் பரிந்துரை செய்தோம் என்றாலும் அதுவும் தவறாக போய் விடுமே? அப்போது யார் அழுத்தம் கொடுத்தாலும் இவர்கள் கேட்பார்கள் என்று ஆகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இப்போது யார் சொல்லி இப்படி சொல்கிறார்கள் என்ற கேள்வியும் எழுமே?

சிதம்பரமும் செயலாளர்கள் செய்த பரிந்துரை தவறு என்று சொல்லவில்லை.

பின்னர் தவறு எங்கே நிகழ்ந்திருக்கிறது.

நீதிமன்றங்கள் இந்தக் கேள்வியை கேட்காததுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் வெற்றி யாருக்கு?

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைதேர்தல் முடிவுகளால் ஆட்சி மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றாலும் அரசியல் காட்சிகள் நிச்சயம் மாறும்.

இனி அதிமுகவுக்கு அரசியல் எதிர்காலம் இருக்கிறதா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் தேர்தலாக இவை அமையும்.

முன்பு நடந்த இடைதேர்தல் களில் திமுக அதிமுகவிடம் இருந்து 12 இடங்களை கைப்பற்றியது.

பின்பு நடந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக வெறி பெற்றது. அதே வெற்றி தொடருமா என்பது கேள்விக்குறி?

ஆளும் கட்சியின் பண பலத்தை சாதாரணமாக ஒதுக்கித் தள்ளி விட முடியாது.

பாஜகவின் அதிரடி மொழி வெறி இந்தி திணிப்பு நடவடிக்கைகளால் தமிழக மக்கள் மத்திய மோடி ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல அதற்கு ஆலவட்டம் போடுகிற எடப்பாடி ஆட்சியின் மீதும் அந்தக் கோபம நிச்சயம் திரும்பும்.

இதுவரை மத்திய  அரசை கண்டித்து எடப்பாடி அரசு எதுவுமே சொன்னதில்லை. மாறாக ராஜேந்திர பாலாஜி மோடி போற்றத் தகுந்த தலைவர் என்று மோடியை  பாராட்டிக் கொண்டே இருக்கிறார்.

மோடி அரசின் மீதான கோபம் அதிமுக அரசின் மீதுதான் திரும்பும். பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் அனுதினமும் மத்திய அரசை குறை சொல்லி அறிக்கை விட்டுக் கொண்டே இருக்கிறார். எனவே பாமக தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில்தான் இருப்பார்கள். அவர்கள் எப்படி அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள்? ஏனென்றால் பாமக விக்கிரவாண்டி தொகுதியில் ஏறத்தாழ நாற்பதாயிரம் வாக்குகள் வாங்கி இருக்கிறது. அது அதிமுகவுக்கு  போனால் நிச்சயம் அதிமுக வெல்ல வேண்டும். ஆனால் அதுதான் கேள்விக் குறியாக இருக்கிறது.

பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்பார்கள். ஏனென்றால் பணபலம். அதிகார பலம். ஆனால் இப்போது மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

எனவே எல்லா கணக்குகளையும் மீறி ஆளும்கட்சி தோல்வியை சந்திக்கும் வாய்ப்புகள்தான் அதிகம்.

கற்பழிப்பு புகாரில உ பி பாஜக தலைவர் சின்மயானந்தா கைது??!!

உ பி மாநில பாஜக தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தா தன்னை கற்பழித்ததாக சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் புகார் கூறினார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் மீது சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்தி வருகிறது.

அந்த மாணவி ஒரு மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் கொடுத்த பின்பும் நடவடிக்கை இல்லை.

கடைசியில் அவரைக் கைது செய்யா விட்டால் தான் தீக்குளிப்பேன் என்று மிரட்டல் விடுத்தார் அந்த மாணவி.

மிரட்டலை தொடர்ந்து இன்று சின்மயானந்தா கைது செய்யப்பட்டு சிறைக் காவலுக்கு அனுப்பப் பட்டிருக்கிறார்.

இதுதான் இன்றைய பாஜக அரசின் நிலைமை. உச்ச நீதிமன்றம் உத்தரவிடாவிட்டால் இந்த நடவடிக்கை இருந்திருக்குமா என்பது தெரியவில்லை.

கல்லூரி முதலிய பல நிறுவனங்களை சின்மயானந்தா நடத்தி வருகிறாராம்.    இத்தனை செல்வாக்கு மிக்கவர் இன்று சிறையில்.

கொடுமை என்னவென்றால் காங்கிஸ் தலைவர் திக்விஜய் சிங் சில நாட்களுக்கு முன்பு ‘காவி உடுத்தியவர்கள் கோவிலுக்குள் கற்பழிக்கிறார்கள். சுரான் விற்கிறார்கள். இதுவா சனாதன் தர்மம்” என்று பேசியிருந்தார். அதற்காக அவர்மீது பாஜக எம் எல் ஏ வின் மகன் திரிபாதி என்பவர் புகார் கொடுக்க அவர் மீதி வழக்கு  பதிவாகி இருக்கிறது.

இப்போது பாஜக தலைவர் சின்மயானந்தா கைதாகி இருக்கிறார். திக்விஜய் சிங் பேசியதில் உண்மை இருக்கிறதா இல்லையா?