Home Blog Page 28

வெங்கையா நாயுடு பேசுவது நடக்குமா? பின் பேசுவது யாரை ஏமாற்ற??!!

சென்னையில் வெங்கையா நாயுடு தன் புத்தக வெளியீட்டு விழாவில் சில நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

ஆனால் அவைகளை எல்லாம் நடக்க விடாமல் செய்வது மத்தியில் ஆளும் கட்சிதான்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிட அனுமதிக்க வேண்டும் என்றார். பல ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் என்று சாக்கு சொல்லி மறுத்து வருகிறது மத்திய அரசு.

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். சென்னை, மும்பை, கொல்கத்தா என்று மூன்று கிளைகளாவது  வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். தவிர்த்துக் கொண்டிருப்பது மத்திய அரசு.

அதேபோல் கட்சி தாவல் சட்டத்தை கடமையாக்க வேண்டும் என்றும் ஒபிஎஸ்ஐ மேடையில் வைத்துக்கொண்டே பேசியிருக்கிறார். ஊக்கமளித்தது மத்திய அரசு.

வெங்கையா பேசுவது தமிழர்களை ஈர்க்க. செய்யும் இடத்தில இருக்கும் அமித் ஷா ஒன்றும் சொல்ல வில்லை.

ஏதாவது சொல்லி தமிழர்களை ஏமாற்றும் நோக்கில் வெங்கையா பேசியிருப்பார் என்று தோன்ற வில்லை. அவர் இனி தான் அரசியலில் இல்லை என்றாலும் கடைசி  வரை சங்க தொண்டராகத்தான் இருப்பார். அவரது வலையில் தமிழர்கள் விழ தயாராக இல்லை.

மோடி, எடப்பாடி, ரஜினி கூட்டணி வெற்றி பெறுமா??!!

வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீடு சென்னையில் நடந்தது. அதில் அடுத்த தமிழக தேர்தலை மனதில் கொண்டு பேச்சாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பாஜக பிடியில் எடப்பாடியும் ஒபிஎஸ்சும் இருப்பது எல்லாருக்கும் தெரியும். அது மட்டுமே தேர்தலில் வெற்றி பெற உதவாது என்பதும் தெரியும்.

எனவேதான் ரஜினியை சேர்க்கப் பார்க்கிறார்கள்.

எப்போதுமே வலதுசாரி சிந்தனை உடைய ரஜினி இதுவரை எதிலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்.

2021 சட்ட மன்ற தேர்தலில் வந்தே விடுவார் என்று மணியன், கராத்தே தியாகராஜன் , போன்றோர் காத்திருக்கிறார்கள். அவர் மாட்டவே போவதில்லை.

சிலருக்கு வந்து அவர் மூக்கறு பட வேண்டும் என்ற ஆசை.

குருமூர்த்தியும், கஸ்தூரிரங்கனும் எம் எஸ் சாமிநாதனும் மேடையில் இருந்து இந்தக் கூட்டணி யார் சார்பானது என்று அறிவித்தனர்.

ரஜினி பாதி பார்ப்பனர் என்பது அவர்கள் எண்ணம்.

அதிமுக முழுதும் ரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்வார்களா?

வேலூரில் ஏ சி சண்முகம் பெற்ற வாக்குகள் அவர்களுக்கு இந்த தைரியத்தை கொடுத்திருக்கலாம்.

இந்த கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் வேண்டுமானால் சேரலாம். மருத்துவர் ராமதாஸ் சேருவாரா என்பது கூட சந்தேகம்தான்.

மோடி -அமித் ஷா இருவரும் கிருஷ்ணர்-அர்ஜுனன் போன்றவர்கள் என்றார் ரஜினி. துரியோதனன்-சகுனி போன்றவர்கள் என்று காங்கிரசின் கே எஸ் அழகிரி ஒப்பிடுகிறார்.

காஷ்மீர் நடவடிக்கையை துணிச்சலான நடவடிக்கை என்று பாராட்டிய ரஜினி அதில் இருக்கும் சிக்கல்களை பற்றி குறிப்பிடவில்லை .

மொத்தத்தில் இந்த மூவரும் சேர வேண்டும் என்ற திட்டம் பாதியிலேயே உடைந்து விடும் வாய்ப்புகள் தான் அதிகம்.

காங்கிரசை விமர்சித்து தன் வேலையைக் காட்டிய வைகோ??!!

வைகோவின் மாநிலங்கள் அவை பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

காஷ்மீரை துண்டாடிய பாஜகவை கடுமையாக தாக்கிய வைகோ காங்கிரசை அதிகம் தாக்கியதுதான் விமர்சனத்துக்கு உள்ளானது.

பேசியதில் தவறு ஒன்றும் இல்லை. காங்கிரஸ் செய்ததைத்தான் வைகோ சுட்டிக்காட்டினர். இப்போது அவர்கள் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருக்கும் பாஜக தனது கோர முகத்தை காட்டும்போது அதை மட்டும் கண்டிக்காமல் காங்கிரசையும் விமர்சிப்பது இருவரையும் சம தூரத்தில் வைப்பது போன்றது.

காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்கிறது. இது அவர்களுக்குள் புகைச்சலை ஏற்படுத்தாதா?

பாஜகவை திருப்திபடுத்த வைகோ முயற்சிக்கிறார் என்ற பழி வராதா?

இலங்கை தமிழர்களை பழி வாங்கிய காங்கிரஸ் இதுவரை அதற்கு பிராயச்சித்தம் செய்ய முன்வரவில்லை.

இந்திராகாந்தியை கொலைசெய்த சீக்கியர்களை மன்னித்து மன் மோகன் சிங்கை கொண்டாடுகிற காங்கிரஸ் இலங்கையில் தமிழர்கள் சம உரிமை பெறுவதற்கு என்ன முயற்சி செய்திருக்கிறது? ஏழு பேர் விடுதலையிலும் காங்கிரஸ் நியாயம் செய்யவில்லை.

ஒருவேளை அந்த கோபம்தான் வைகோவை காங்கிரசுக்கு எதிராக பேச வைத்ததோ என்னவோ?

எப்படி இருந்தாலும் பாஜக எதிரணியில் எழுந்துள்ள புகைச்சல் பாஜகவை மகிழ்ச்சி அடையத்தான் செய்யும்.

கேஎஸ் அழகிரியும் ஈவிகேஎஸ் இளங்கோவனும் வைகோவை விமர்சிக்க வைகோ சூடாக பதில் கொடுக்க இது எங்கோ கொண்டு போய் விடுமோ என்ற அச்சம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

திமுக  கூட்டணி முறியும் என்பதற்கு அறிகுறியாக இதை நிச்சயம் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

எதிர்வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கு வியூகம் வகுப்பதில் இது நிச்சயம் சிக்கலை ஏற்படுத்தும்.

வைகோ கொஞ்சம் நிதானிப்பது நல்லது.

தமிழ்நாட்டை துண்டாடி கைப்பற்ற முயற்சிக்குமா பாஜக ??!!

தமிழ்நாட்டில் மட்டுமே பாஜகவால் காலூன்ற முடியவில்லை.

எனவே அடுத்த குறி தமிழ்நாடு என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

என்ன செய்யும் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டை ஒன்றாக வைத்திருக்கும் வரை தமிழ் இன உணர்வு மத ஆதிக்கத்தை வளர விடாது.

எனவே அவர்களை பலவீனப்படுத்த ஒரே வழி அவர்களைப் பிரிப்பதுதான். ஏற்கெனெவே மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார்.

அப்படி இரண்டு பேரை தயார் செய்து இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் ஆக பிரிக்க கோரிக்கை வைக்க தயார் செய்வதில் பாஜகவுக்கு பிரச்னை ஒன்றுமில்லை.

அதை வைத்து கோரிக்கையை நிறைவேற்றுகிற வகையில் தமிழகத்தை பிரிக்க பாஜக திட்டமிடலாம்.

ஏற்கெனெவே தெலுங்கு சமுதாயத்தை ஆந்திரா தெலுங்கானா என்று இரண்டாக பிரித்து வைத்த அனுபவம் இருக்கிறதே?

முன்பே சாதி வாரியாக கட்சிகளை பிரித்து அரவணைக்க பாஜக முயற்சித்தது. அது நிறைவேரவில்லை.

இப்போது முக்குலத்தோர், தேவேந்திரர் சமுதாயங்களுக்கு எனவும், கவுண்டர் சமுதாயத்துக்கு எனவும், வன்னியர் பட்டியல் வகுப்பினருக்கு எனவும், தமிழகத்தை மூன்றாக பிரிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக செய்திகள் வருகின்றன. 

அந்த முயற்சியை தமிழர் கட்சிகள் சாதி கடந்து ஒன்றுபட்டு எதிர்த்து நிற்காவிட்டால் தமிழ்நாடு உடைவது உறுதி!!

தங்கள் சொற்படி நடக்கும் கட்சிகள் ஆட்சி நடக்கா விட்டால் தமிழ்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாஜக தமிழ்நாட்டை பிரிக்க தயங்காது. அதற்கு இன்னும் ஓரிரு வருடங்கள் தேவைப்படலாம்.

அதற்குள் அதிமுகவின் ஒரு பகுதி பாஜகவில் இணைந்தால் அந்த முடிவு தள்ளிப் போகலாம்.

காஷ்மீரை பிரித்து பந்தாடிய அமித் ஷா ?! அவசர நிலை அடுத்து வருமா?

ஒருவழியாக தனது அறுபது ஆண்டு திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டது பாஜக.

அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 35A & 370 இரண்டையும் அகற்றிவிட்டு காஷ்மீரை இரண்டாக பிரித்து அவற்றையும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக அறிவித்ததன் மூலம் மொத்த மாநிலத்தையும் தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்து விட்டது பாஜக.

அதுவும் ஜம்மு காஷ்மீர் சட்ட மன்றம் உள்ளதாகவும் லடாக் சட்டமன்றம் இல்லாததாகவும் இயங்கும்.

நாடு முழுதும் மாநில சுயாட்சி கோரிக்கை கள் வலுவாகி வரும் நிலையில் இந்து மத ஒற்றுமை என்ற பிம்பத்தில் தனது மாநில உரிமை ஒழிப்பு திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது பாஜக. 

மெகபூபா, உமர் அப்துல்லா இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பரூக் அப்துல்லா எங்கே என்று தெரியவில்லை.

இந்து வெறியை பலப்படுத்த இந்த நடவடிக்கை பாஜகவுக்கு  உதவியிருக்கிறது.

பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தெலுகுதேசம், டிஆர்எஸ். ஒய்எஸ்ஆர் கட்சி, பிஜேடி அதிமுக போன்ற கட்சிகள் ஆதரவளித்திருக்கின்றன .

இந்த நடவடிக்கை மேலும் இந்து வாக்கு வங்கியை பாஜக வலுப்படுத்திக் கொள்ள உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் நாட்டுக்கு நல்லதா என்பதை வரலாறுதான் சொல்ல வேண்டும்.

அறிவிக்கப்படாத அவசர நிலை என்று டிஆர்பாலு பேசியிருக்கிறார்.

அவசர நிலையை அறிவிக்காமலேயே தனது திட்டங்களை அமைக்க அதிகாரங்களை வைத்துக் கொண்டே சாதிக்கும் வழிகளைத் தான் பாஜக செயல்படுத்தும்.

மதசார்பற்ற சக்திகள் வலுவிழந்து வருவதைப்போன்ற ஒரு தோற்றத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தினாலும் அவர்கள் தங்களை ஒன்றுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துகிறது.

எல்லாவற்றையும் விட இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்ற ஆய்வுக்கு நிற்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் இந்த பிரச்னை வேறு வடிவங்களை எடுத்திருக்கும். அப்போது தீர்ப்பு பயனில்லாமல் போகலாம்.

அடுத்து பாஜக என்ன செய்யும் என்பதே பொதுமக்களின் கவலை.?

காஷ்மீரில் சிறப்பு அதிகாரங்கள் பறிக்கப்பட்டால் என்ன நடக்கும்??!

அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 35A மற்றும் 370 பிரிவுகள் காஷ்மீர் மாநிலத்திற்கு என்று சிறப்பு அதிகாரங்களை அளிக்கிறது.

மகாராஜா ஹரிசிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தபோது விதித்த நிபந்தனைகளை இந்தியா ஏற்றுக்கொண்டு தனது அரசியல் சட்டத்தில் அதற்கென சில பிரிவுகளை வகுத்தது.

அவைகளின் படி ராணுவம், தகவல் தொடர்பு, தவிர பிற துறைகள் தொடர்பாக இந்திய பாராளுமன்றம் இயற்றும் சட்டங்கள் காஷிமிரின் சம்மதம் இல்லாமல் காஷ்மீருக்கு பொருந்தாது. இந்திய சட்டங்கள் அனைத்திலும் அவை காஷ்மீர் தவிர இதர பகுதிகளுக்கு இது பொருந்தும் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

பிற மாநிலத்தவர் காஷ்மீரில் நிலங்கள் வாங்க முடியாது. ஆனால் அவரால் எங்கும் வாங்கலாம். காஷ்மீர் ஆண், வெளி மாநில பெண்ணை மணந்தால் அங்கே சொத்து வாங்கலாம் ஆனால் ஒரு காஷ்மீரியை மணந்த பெண் அங்கே சொத்துக்கள் வாங்க முடியாது. முக்கியமாக காஷ்மீர் மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ கூட்டவோ கூடாது.

அதேபோல் யார் நிரந்தர குடியிருப்பாளர் என்பதையும் அவர்களுக்கு மட்டுமே காஷ்மீரில் அரசு வேலை உதவி சலுகைகள் உண்டு என்பதையும் இந்த பிரிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

இதைஎல்லாம் இப்போது மோடி அரசு மாற்றப் போகிறது என்ற அச்சம் எல்லார மனதிலும் எழுந்திருக்கிறது.

யாத்ரீகர்களை திரும்புங்கள் என்றும் சுற்றுலா பயணிகளை வெளியேறுங்கள் என்றும் கெடுபிடிகள் செய்து வரும் மத்திய அரசு காஷ்மீரில் மத்திய அரசு என்னவோ  செய்யப்போகிறது என்ற அச்சத்தை மக்கள் மனதில் விதைத்துவிட்டது.

பாராளுமன்றம் ஆகஸ்டு ஏழாம் தேதி நிறைவுறும்போது செய்யப் போகிறதா இல்லை சில நாட்கள் கழித்து செய்யப் போகிறதா என்பது தெரியவில்லை.

உடனடியாக வேறு எந்த நாடும் இந்த பிரச்னையில் தலையிடாது என்றாலும் பிரச்னை முற்றினால் ஐநா தலையிடும் வாய்ப்பை தள்ள முடியாது.

எதுவாக இருந்தாலும் தீர்வு என்பது சம்பந்தப்பட்டோர் ஒத்துழைப்புடன் ஏற்பட்டால்தான் நிலைக்கும்.    

வலுவில் எந்த தீர்வையில் நிலைக்க வைத்து விட முடியாது.

அதை நினைவில்  கொண்டு இந்திய அரசு செயல்பட வேண்டும் என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பும்.

வேலூரில் அதிமுக வென்று என்ன ஆகப்போகிறது?!

இருக்கும் ஒரு உறுப்பினரும் பாஜகவின் செல்லப் பிள்ளையாக இருக்கிறார்.

ரவிந்திரநாத் குமார் தன் பெயரை இனி வந்தேமாதரம் குமார் என்று மாற்றிக்கொள்ளலாம்.

அந்த அளவு தன் பாஜக பாசத்தை காட்டிவிட்டார்.

ஒவ்வொரு மசோதா வரும்போதும் தன் எதிர்ப்பை காட்டிக் கொண்டதில்லை.

முத்தலாக் மசோதாவில் மக்களவையில் ரவீந்திரநாத் ஆதரவு தெரிவிக்க நவநீதகிருஷ்ணன் மேலவையில் எதிர்ப்பு தெரிவிக்க ஒபிஎஸ்-இபிஎஸ் கோஷ்டி பாராளுமன்றம் வரை சென்று விட்டதை நாடு பார்த்தது.

எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் என் கருத்து வேறு தன் கட்சி கருத்து வேறு  என்று கூறி தனக்கும் கட்சிக்கும் இடையே உள்ள இடைவெளியை காரணம் காட்டி மோடியிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சிக்கிறாரே தவிர திராவிட இயக்க உறுப்பினராகவே அவர் செயல்பட வில்லை.

ஏ சி சண்முகம் இருவர் கோஷ்டியிலும் இல்லாமல் தான் மோடி கட்சிதான் என்று வெளிப்படையாகவே காட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஏ சி சண்முகம் போய் புதிதாக என்ன செய்து விட முடியும்.

ஏற்கெனெவே தன்னை மோடியின் செல்லபிள்ளை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு அடிமையை அனுப்புவதில் பயன் இல்லை என்று தீர்மானித்து 37 பேரோடு 38வது உறுப்பினராக சென்று உரிமைக்கு குரல் எழுப்புங்கள் என்று திமுக வேட்பாளரை மக்களவைக்கு வேலூர் தொகுதி மக்கள் அனுப்புவார்கள் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும்.

இடையில் ஆளும்கட்சிப் பணம் தண்ணீராக பாய்கிறது என்கிறார்கள். என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு விரும்புகிறவருக்கு முன்பு வாக்களிததைப் போலவே இப்போதும் வாக்களிப்பார்கள்  .

எல்லாரும் பார்க்க வேண்டிய சீர்திருத்த சினிமா ‘கொளஞ்சி” !!!

எப்போதாவதுதான் நல்ல சினிமா வரும்.

அதையும் சதி செய்து விரட்டி விடுவார்கள். அதுதான் கொளஞ்சி சினிமாவுக்கும் நேர்ந்திருக்கிறது.

அப்பா மகன் உறவு-பிள்ளைகளை ஏன் அடிக்காமல் வளர்க்க வேண்டும். பிள்ளைகளின் முற்போக்கு சிந்தனைகள் எல்லாம் இந்த சினிமாவில் பேசப்படுகிறது.

மூடநம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறது.

அர்ச்சகரை எங்களை கருவறையில் உள்ளே விடுவீர்களா என்று கேட்டு அவரும் அது எப்படி என்று மறுப்பதை காட்டியிருப்பார்கள் .

பெரியார் – முருகன் படத்தை வீட்டில் வைத்திருப்பதை காட்டியிருப்பார்கள். அது பாஜகவின் எச். ராஜா கண்ணை உறுத்தி இருக்கும் போல. யாரும் கொளஞ்சி படத்தை பார்க்காதீர்கள் என்று அறிக்கை விடுகிறார். 

அதற்குப் பிறகுதான் எல்லாருக்கும் அதை பார்க்க வேண்டும் என்று தோன்றி இருக்கும்.

மூட நம்பிக்கை  ஒழிப்பு, சாதி ஒழிப்பு என்று படம் முழுக்க சீர்திருத்த கருத்துக்களை தூவி இருப்பார்கள்.

சமுத்திரகனி மட்டும்தான் பெயர் தெரிந்த நடிகர். ஒருவேளை ஸ்டார் வேல்யு இல்லாததால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வில்லையோ என்று எண்ணத்  தோன்றுகிறது.

தமிழ் மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் – பாடம்.

ஆபரேஷன் காஷ்மீர் என்ன ஆகப்போகிறது?!

முன்பே நிலை கொண்டுள்ள ராணுவ வீரர்கள் 35000 பேருடன் இப்போது அனுப்பப்பட்டுள்ள 35000 ராணுவ வீரர்கள் மற்றும் 26000 துணை நிலை ராணுவத்தினர் எல்லாம் சேர்த்து ஏறத்தாழ 96000 வீரர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை பாதுகாக்கப் போகிறார்கள்.

உங்கள் பையன்கள் கல் எறியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏன் என்றால் அவர்கள்தான் நாளை பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்று எச்சரிக்கிறார் நமது ராணுவ தளபதி. கடந்த கால புள்ளி விபரங்களையும் தெரிவிக்கிறார்.

அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திடீர் என்று மேகபூபாவும் பாரூக் அப்துல்லாவும் அமித் ஷாவை சந்திக்கிறார்கள். காஷ்மீரை காஷ்மீர், ஜம்மு, லடாக் என்று மூன்று மாநிலங்களாக பிரிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.   

அமித் ஷா ஸ்ரீநகர் போனபோது எந்த தீவிரவாத அமைப்பும் கடை அடைப்பை அறிவிக்கவில்லை.

என்ன நடக்கிறது காஷிமிரில்?

அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 35A, 370 களை நீக்கப்போகிறார்கள் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்புமாக இருக்கிறது.

அதனால் கலவரம் வெடிக்கும். அதை அடக்க தேவையான முன் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதனால்தான் இதை மோப்பம் பிடித்து தான் சமரசம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிக்கிறார். ஒதுங்கி இருங்கள் என்று இந்தியா கூறுகிறது.

ஆக தனது நெடுநாள் திட்டத்தை நிறைவேற்ற பாஜக முனைந்துவிட்டது என்பது உறுதியாக தெரிகிறது.

அதன் விளைவுகள்தான் இனிமேல் தெரிய வேண்டும்.

காத்திருப்போம் கவலையுடன் ?!

செலவு செய்ய தெரியாமல் 3676 கோடி நிதியை திருப்பி அனுப்பிய அதிமுக அரசு?!

ஒருபக்கம் மத்திய அரசு நிதி ஒதுக்க தவறுகிறது என்ற குற்றச்சாட்டு.

மறுபுறம் கொடுத்த நிதியை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பும் தமிழக அரசு.

இந்திய அரசின் தலைமை தணிக்கையாளர் கொடுத்த அறிக்கையில் மத்திய அரசு கொடுத்த 3676.55 கோடி நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பிய விபரம் தெரிய வந்திருக்கிறது.

2017-2018ம் நிதி ஆண்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய மொத்த நிதி 5920.39 கோடியில்  தான் மேற்கண்ட துகையை திருப்பி அனுப்பி இருக்கிறது தமிழக அரசு.

நூறு நாள் வேலைத்திட்ட நிதியை கூட திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டோர் வீடு கட்டும் திட்ட நிதியில் மத்திய அரசு 60% மத்திய அரசும் மீதி  40% நிதியை தமிழக அரசும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மத்திய அரசு நிதி திருப்பி அனுப்பப்படுகிறது. தமிழக அரசு தர வேண்டிய பங்கு நிதியை தர முடியாததால் திருப்பி அனுப்பப் பட்டதா என்பதும் தெரியவில்லை.

கிராமப்புற வேலை வாய்ப்பை பெருக்கும் திட்ட நிதியும் திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறது.

பல் திட்டங்கள் பயனாளிகளை அடையாளம் காண முடியாததால் திருப்பி அனுப்பப் பட்டது.

அதிமுக வினருக்கு ஆளத்தெரியவில்லை என்று குற்றம் சாட்ட முடியாது. தெரியும்.  ஆனால் செய்யவில்லை என்றால் என்ன காரணம். நிறைவேற்றி தங்களுக்கு என்ன பயன் என்பதுதான்.

தமிழக அரசு விளக்கம் தருமா?

கமிஷன் இல்லையேல் ஒமிஷன்தான் என்பதுதான் அதிமுக அரசின் கொள்கையா ?!