Home Blog Page 30

தனியார் துறையில் உள்ளூர் வாசிகளுக்கே 75% வேலை; ஜெகன்மோகன் ரெட்டி சட்டம்?!

தனியார் துறையில் உள்ளூர் வாசிகளுக்கே 75% வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்  என்று நாட்டிலேயே முதன் முறையாக சட்டம் இயற்றி ஜெகன்மோகன் ரெட்டி சாதனை புரிந்துள்ளார்.

தகுதி பெற்ற ஆட்கள் கிடைக்கவில்லை என்றெல்லாம் தப்பிக்க முடியாது. ஆந்திர அரசே அவர்களுக்கு தேவையான தகுதி பயிர்ச்சியை அளித்து வேலை கிடைக்க செய்துவிடும்.

மத்திய பிரதேச அரசு இதுபோல் ஒரு சட்டத்தை இயற்ற போவதாக அறிவித்து இருந்தது. அது 70% ஆக இருந்தது. இதே கோரிக்கை கர்நாடக குஜராத் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் இருந்து வருகிறது.

ஆனால் ஜெகன் கொண்டு வந்துள்ள Andhra Pradesh Employment of Local Candidates in Industries/Factories Act, 2019 வித்தியாசமாக சிந்தித்து உள்ளூர் ஆட்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு மாநில அரசு உதவி செய்யும் ஏற்பாட்டை செய்துள்ளது.

அத்துடன் அப்படிப்பட்ட வேலை வாய்ப்பை பெறுபவர்களுக்கு மாநில அரசு ஊக்கதுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவே படையெடுப்பு நடந்து வரும் நிலையில் ஆந்திர அரசின் வழியில் தமிழக அரசும் உள்ளூர் வாசிகளுக்கு தனியார் துறையில் 80% இடஒதுக்கீட்டை உறுதிசெய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பதே போதுமேடையின் எதிர்பார்ப்பு.

பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் தேர்வில் இட ஒதுக்கீட்டில் மோசடி?!

பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கு தேர்வுகள் பலகட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அதில் தேறுபவர்களுக்கு என குறைந்த மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

அதில் எஸ்சி, ஓபிசி, பொது பிரிவினருக்கு 100 மார்க்குகளுக்கு 61.25ம் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கு 28.5ம் குறைந்தபட்ச மதிப்பெண்கள் ஆக நிர்ணயிக்கப் பட்டிருக்கின்றன.

இப்போது தெரிகிறதா ஏன் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்குஉயர் சாதியினருக்கு பத்து சத இட ஒதுக்கீட்டை பாஜக அரசு தீவிரமாக முன்னெடுத்தது என்று ?

எஸ்சி வகுப்பினர் ஓபிசி வகுப்பினர் பொதுபிரிவினர் தேர்வாக 61.25 மார்க் எடுக்க வேண்டும் என்பதும் உயர்சாதி வகுப்பினர் மட்டும் 28.5 மார்க் எடுத்தால் போதும் என்றால் அவர்கள் அனைவருமே தேர்வாகிவிடுவார்கள் என்பதுதானே பொருள்?

இதில் பாதிக்கப்படுபவர்கள் பிற்பட்டோரும் மற்றவர்களும்தான்.

ஆக பொருளாதார அடிப்படையில் உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி கோட்பாட்டின் அடித்தளத்தையே நொறுக்கிவிடும் என்பது கண்கூடு .

பாஜக அரசு செய்யும் காரியங்கள் சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அமைதியின்மைக்கு வழிகோலி வருகிறது.

இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும்?!

சூர்யா சொல்வதில் என்ன தவறு? தரமான கல்வி ஏழைகளுக்கு கிடைக்கக் கூடாதா?

நடிகர் சூர்யா ஒரு விழாவில் புதிய கல்வித் திட்டத்தை பற்றி பேசியது ஆதரவு அலைகளை உருவாக்கி விட்டது.

ஏழைகளுக்கு தரமான கல்வி கிடைக்கக் கூடாதா என்ற கேள்வி எல்லாராலும் எழுப்பப் படுகிறது.

இதுவரை பணக்காரார்களுக்கு மட்டுமே உயர்தர கல்வி கிடைத்துக் கொண்டு இருக்கிறது.

அரசின் கடமை எல்லாருக்கும் தரமான கல்வியும் தேவையான மருத்துவமும் கிடைக்கச் செய்வது.

இதை விட்டு விட்டு நாங்கள் அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று மார் தட்டுவதில் பயனில்லை.

இலவசங்கள் பெரும்பாலானவை தேவை இல்லாதவைகள் ஆகிவிடும் இந்த இரண்டும் எல்லாருக்கும் கிடைத்து விட்டால்.

தனது அகரம் பௌண்டேஷனில் இதுவரை 54 மாணவர்கள் மருத்துவ கல்வியை பெற்றிருந்திருக்கிறார்கள் என்றும் அதாவது நீட் வருவதற்கு முன்பு, இப்போது நீட் வந்துவிட்ட பிறகு ஒரு கிராமப் புற மாணவர் கூட மருத்துவக் கல்வி பெறமுடியவில்லை என்றும் கூறுகிறார்.

புதிய கல்வத் திட்டத்தின் பல பகுதிகள் ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்களை கல்வியில் இருந்து அப்புறப் படுத்தும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்தனை நுழைவுத் தேர்வுகளை நடத்தினால் பள்ளியில் கல்லூரியில் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள். அங்கே படிப்பதெல்லாம் வேஸ்ட்  தகுதி தேர்வுக்கு தயார் செய்வத்துதான் படிப்பு என்றால் ஏன் பள்ளிகள் கல்லூரிகள்?

ஐயாயிரம் ஆண்டுகளாக பின்தங்கியோரை தாழ்த்தப்பட்டோரை கல்வியில் இருந்து ஒதுக்கி வந்தே அடக்கி ஆண்டவர்கள் இப்போதும் வேறு வகையில் எல்லாம் அதே நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்போம்.

பணக்காரர்கள் கையில் இருந்து கல்வி மையங்களை பறித்து அரசிடம் சேர்ப்போம்.  கல்வி ஒருபோதும் வணிக மயமாவதை அனுமதியோம்.

அனைவருக்கும் தரமான கல்வியை தருபவர்க்கே இனி ஆட்சி அதிகாரம் என்ற நிலை யை ஏற்படுத்துவோம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில்; தாமதிக்கப்பட்ட நீதி?!

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் முக்கியமான தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஓடியா, வங்காளம், இந்தி உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று அறிவித்தது.

அதில் தமிழ் விடுபட்டுப்போக பிரச்னை ஆனது. தொடக்கத்திலேயே எல்லா மொழிகளிலும் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தால் பிரச்னை எழுந்திருக்காது.

பிரச்னை எழுந்தபிறகு இப்போது தமிழில் முக்கிய தீர்ப்புகள் வெளியாகி இருக்கின்றன.

இதை முன்பே செய்திருந்தால் என்ன அல்லது அறிவிப்பு மட்டுமாவது செய்திருந்தால் என்ன என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

மொழிப் பிரச்னைக்கு தீர்வு மொழி மாற்றமே?!

மொழிபெயர்ப்பு செய்துவிட்டால் யார் என்ன மொழியில் பேசினாலும் பிரச்னை இல்லை.

பாராளுமன்றத்தில் தமிழில் பேசினால் உடனே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொடுத்து விடுகிறார்கள். எனவே யார் எந்த மொழியில் பேசினாலும் மற்றவர்களுக்கு அந்த மொழி தெரியாவிட்டாலும் உடனே புரிந்து கொள்ள முடிகிறது.

மொழிபெயர்ப்பை தீர்வாக ஏற்றுக் கொண்டால் நீ மூன்று மொழி படி  என்று சொல்ல வேண்டிய அவசியமே எழாதே ?

அத்திவரதர் தரிசன நெரிசலில் சிக்கி 4 பேர் பலி ?!

அத்திவரதரை தரிசனம் செய்ய தினமும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் பேர் வருகிறார்களாம். இத்தனை பேர் வருவார்கள் என எதிர்பார்க்க வில்லை என்று முதல்வர் பழனிசாமி சட்ட மன்றத்தில் கூறுகிறார்.

திருப்பதியில் கூட தினமும் 75000 பேர்தான் தரிசனம் செய்ய முடியும். ஆனால் இங்கே தினமும் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பேர் எப்படி தரிசனம் செய்ய முடியும்?

கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். எல்லாம் வயதானவர்கள்.

தலா ஒரு லட்சம் நிவாரணம் அறிவித்து விட்டார் முதல்வர். போதுமா? கவனக்குறைவுக்கு யார் பொறுப்பு?

அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. இனியாவது இத்தகைய கொடுமைகள் நிகழாமல் தடுக்க வேண்டும்.

சாய்ந்தால் சாய்கிற பக்கம் சாய்கிறவர்கள் பக்தர்கள். பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும் கொடுக்கும் விளம்பரத்தில் மயங்கி ஒருமுறையாவது தரிசனம் செய்து விட வேண்டும் என்ற ஆவலில் குழுமுகின்றனர்.

அதை பயன்படுத்திக் கொண்டு வணிகம் செய்பவர்கள் முதற்கொண்டு பக்தர்களை வதைக்கிறார்கள்.

நம்பிக்கை உள்ளோர் கூடும்போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பை கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

இதுவரை முப்பது லட்சம் பேர் கூடினார்கள் என்று சொல்கிறார்கள். எந்த பக்தரும் தரிசனம் செய்து விட்டு சும்மா திரும்புவதில்லை. அவர்கள் தரும் காணிக்கைகள் எப்படி பாதுகாக்கப்படுகின்றன. இந்து அறநிலையத் துறை தன் கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கிறதா? அதில் ஏதும் முறைகேடு நடைபெற வழியில்லையா என்பதையெல்லாம் அறிய பொதுமக்களுக்கு உரிமை உள்ளது.

ஏன் என்றால் தாத்தாச்சாரியார் ஒருவர் தாங்கள்தான் அத்திவரதர் இருப்பதை  கண்டுபிடித்து சொன்னோம் என்று தனி உரிமை கோருவதாக செய்திகள் வருகின்றன. அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதையும் அறநிலையத்துறை விளக்க வேண்டும்.

உயிரை பலி கொள்ளும் அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்திருக்கின்றன என்பதால் தமிழக அரசே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

உயிர்ப்பலி வரதனுக்கே அடுக்காது??!!

ஜோதிடத்தால் வீழ்ந்த ‘சரவணபவன்’ ராஜகோபால்??!!

சாமானியர் கூட உழைப்பால் உயர் முடியும் என நிருபித்தவர் சரவணபவன் ‘ அண்ணாச்சி’ ராஜகோபால்.

1981ல் மிகச் சிறிய அளவில் ஓட்டல் தொழிலை தொடங்கிய அவர் குறுகிய காலத்திலேயே வியப்பூட்டும் அளவு தொழிலை விரிவுபடுத்தினார்.

ஜோதிடம் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகம் கொண்டவர் ராஜகோபால். திருமுருக கிருபாநந்த வாரியார் சுவாமிகளின் சீடராகவும் இருந்திருக்கிறார்.

இரண்டு மனைவிகளும் குழந்தைகளும் இருக்கும்போது மூன்றாவது திருமணம் செய்தால் மேலும் உச்சத்துக்கு செய்வீர்கள் என்று ஜோதிடர் ஒருவர் சொன்ன ஆலோசனை தான் அவர் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டதாக சொல்கிறார்கள்.

அதற்காக திருமணம் ஆன பெண்ணை அடைய ஆசைப்பட்டு அவர் மறுக்கவே அவரது கணவரை கொலை செய்யும் அளவுக்கு செல்ல வைத்து ஆயுள் தண்டனை பெற வைத்து கடைசியில் அவரது ஆயுள் சிறைக் கைதியாகவே முடிந்துவிட்டது.

ஆன்மிகம் என்பதற்கு உண்மைப் பொருள் என்ன வென்று ஆதிகாலத் தமிழருக்கு தெரிந்திருக்கிறது.

அதில் ஜோதிடம் எல்லாம் இல்லை.

உள்ளே புகுந்து ஆக்கிரமித்துவிட்ட சனாதன தர்மத்தின் குழந்தைகள்தான் மூட நம்பிக்கைகள்.

சரவணபவன் ராஜகோபாலின் மரணம் ஆன்மிகத் தமிழர்களுக்கு ஒரு எச்சரிக்கை  மணி ?!!

ராகுல் கொக்கைன் போதை மருந்து எடுப்பது உண்மையா? சு. சாமிக்கு என்ன தன்டனை

சுப்பிரமணிய சாமி அதிரடியாக பலர் மீது அவதூறு குற்றம் சாட்டுவதை வழக்கமாகவே வைதிருக்கிறார் .

சமீபத்தில் ராகுல் காந்தி கொக்கைன் என்ற போதை மருந்து உட்கொள்வதாக கூறியிருந்தார். அதற்காக அவர் மீது வழக்கு பதியப் பட்டு விசாரணை நடந்து  வருகிறது. இது எப்போது முடியும் என தெரியவில்லை.

ஆனால் இந்த குற்றச்சாட்டு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்  இந்தக்குற்றசாட்டைக் கூறியவர் யார் என்பதும்.

சேற்றை வாரி இறைப்பது மட்டுமே ஒரு ஆயுதமாக இந்த நாட்டில் இருந்து வருகிறது. விசாரணை முடிந்து நிரபராதி என்று தீர்ப்பு வந்தாலும் அதற்குள் அவர் மீது கெட்ட பெயர் பரவி எதிர்காலத்தை நாசமாக்கி விடும். எனவே பொய் குற்றச்சாட்டை விட ஒரு மோசமான ஆயுதம் இருக்க முடியாது.

ஒன்று ராகுல் கொக்கைன் எடுப்பவராக இருந்தால் அவர் அரசியலில் இருக்க தகுதி இல்லாதவர். அல்லது நிரபராதியாக இருந்தால் சுப்பிரமணியசாமி பொய் குற்றச்சாட்டு சுமத்தியதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அதுவும் விரைவில் நடைபெற வேண்டும். கால தாமதம் ஆனால் குற்றவாளிகளின் எண்ணம் ஈடேறி விடும். அதற்குப் பிறகு தீர்ப்பு வந்தால் என்ன வராவிட்டால் என்ன?

காங்கிரஸ் இதில் தீவிரம் காட்டி உண்மையை வெளிக் கொணர தவறினால் சுப்பிரமணிய சாமி கூறுவது போல் ராகுல் dope test என்கிற போதை மருந்து  பரிசோதனையில் தோற்பார் என்பது உறுதியாகிவிடும்.

அத்திவரதர் பக்தர் கூட்டம் காட்டும் உண்மைகள்?!

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமியும் அத்திவரதரும் வேறு வேறு சுவாமிகள் அல்ல.

ஒருவர் எப்போதும் இருப்பவர். அத்தியில் ஆனவர் நாற்பது ஆண்டுகள் குளத்தில் வைக்கப்பட்டு பக்தர்களால் வெளியே எடுக்கப்பட்டு தரிசிக்கபடுபவர்.

                     எப்போதும் இருப்பவரை காண கூட்டம் கூடுவதில்லை. ஆனால் அவரே நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வருகிறார் என்றால், அவரை பார்க்க லட்சக்கணக்கில் மக்கள் திரள் கூட்டப் படுகிறது. கூடுகிறார்கள். 

பத்திரிகைகள் பக்கம் பக்கமாக புராணக் கதைகளை எழுதி நிரப்பி விற்கிறார்கள் .    படிப்பவர்கள் பரவசமாகி கூட்டத்தில் கலக்க போகிறார்கள்.

செல்பவர்களை யாராவது புராணக் கதையை பற்றி தெரியுமா அதை நம்புகிறீர்களா என்று கேட்டு யாரும் பிரசுரிப்பதில்லை.

எல்லாரும் செல்கிறார்கள். நானும் செல்கிறேன். இதுதானே மனநிலை. அதில் அவர்களுக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைத்தால் எல்லார்க்கும் நல்லதே.

குடியரசுத் தலைவர் துணை குடியரசுத் தலைவர், என்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை வரச் செய்ய அவர்களால் முடிகிறது. அந்த நெட்வொர்க் அவர்களிடம் இருக்கிறது. அந்த விளம்பரத்தில் பாமரன் மூழ்கி விடுகிறான்.

விவிஐபி அந்தஸ்தில் பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் பாதுகாப்போடு அத்திவரதரை தரிசிக்க முடிகிறது. மாவட்ட ஆட்சியர் கையெழுத்தை போலியாக போட்டு டோனர் பாஸ் தயாரித்து பயன்படுத்தப்படுகிறது.

சிலர் ஆயிரக்கணக்கில் மோசடி செய்து தரிசனம் செய்ய வைக்கின்றனர்.

இதில்  ஆதாயம் அடைந்தவர்கள் பட்டியல் மற்றும் அளவை இந்து அறநிலையத்துறை வெளியிடுமா?

எவருடைய  நம்பிக்கையையும் விமர்சிப்பதோ குறை சொல்வதோ நமது நோக்கமல்ல. ஆனால் நடைமுறையில் பக்தி தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

எங்கும் இருக்கும் இறைவன் எல்லா பிம்பங்களிலும் இருப்பான்தானே !!!

அந்த உண்மையை பிரச்சாரம் செய்வது நமது கடமை அல்லவா!!

“மைலார்டு” ஒழிகிறது ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் ?!

உயர்நீதி மன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகளை ‘மை லார்டு’ என்று அழைக்கும் வழக்கம் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கியது.

சுதந்திரம் அடைந்தும் இன்னும் மன்னர் காலத்து பழக்க வழக்கங்களை தொடர்ந்து கொண்டு இருப்பது கேவலம். அதுவும் மை லார்டு என்று நீதிபதிகளை அழைக்கும் வழக்கம் உயர் நீதிமன்றங்களில் சகஜம்.

சில வழக்கறிஞர்கள் மூச்சுக்கு மூன்று முறை மை லார்டு போட்டு பேசுவார்கள்.

வாதம் தொடங்கும்போதோ முடிக்கும்போதோ சொன்னால் போதும். ஆனால் விவாதித்துக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி மை லார்டு போட்டு பேசுவது கேட்பதற்கே என்னவோ போலிருக்கும். ஒரு சில நீதிபதிகள் அதை ரசிக்கலாம்.  பெரும்பாலானவர்கள் ரசிப்பதில்லை.

பழைமையை மதிப்பது வேறு. கண் மூடித்தனமாக எதையும் பின்பற்றுவது வேறு.

சட்டங்கள் எல்லாம் அடிக்கடி மறுபரிசீலனை செய்ய வேண்டியவை. எதுவும் நிலையானதில்லை. காலத்துக்கு காலம் மாறும். இன்னமும் தேசத்துரோக குற்ற பிரிவை பிடித்துக்கொண்டு தொங்குகிறோம் அல்லவா?

ஜெய்ப்பூரில் நீதிபதிகளே முன்வந்து இந்த வழக்கத்தை ஒழிக்க முன் மொழிந்திருப்பது பாராட்டத் தக்கது. சார் என்று அழைத்தாலே போதும் என்று அவர்கள் பரிந்துரைத்து  இருக்கிறார்கள்.

சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கறிஞர்கள் மை லார்டு ஒழிப்பு பற்றி  முடிவேடுக்க வேண்டும்.

நீட் மசோதா; பொய் அம்பலம்! பதவி விலகுவாரா சிவி சண்முகம்?

நீட் மசோதா பிரச்னையில் நடந்த மோசடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய உள் துறை துணைச்செயலர் ராஜிஸ் எஸ் வைத்யா தாக்கல் செய்த அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.

தமிழக அரசின் இரண்டு மசோதாக்களும் உள்துறை அமைச்சகத்துக்கு 20/02/2017 அன்றே கிடைத்ததாகவும் 11/09/2017ல் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் குடியரசுத் தலைவர் இந்த மசோதாக்களை நிறுத்தி வைத்தும் நிராகரித்தும் 18/09/2017ல் உத்தரவிட்டதாகவும் அவற்றை 22/09/2017லேயே தமிழக அரசுக்கு அதற்கான ஆவணங்களுடன் இணைத்து திருப்பி அனுப்பி விட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எல்லா கட்சிகளும் நீட் மசோதா என்ன ஆயிற்று என்று கேட்டுக்கொண்டே இருக்கையில் மத்திய மாநில அரசுகள் கனத்த மௌனம் காத்தன.

எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூட நிர்மலா சீதாராமன் கூறினார்.

பாராளுமன்ற தேர்தல் நடக்கும் போது சொல்ல வேண்டாம் என்று இருவரும் கள்ள மௌனம் காத்திருக்கிறார்கள்.

அதன் பலனை தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டன.

ஆனாலும் சட்டமன்றத்தில் கூசாமல் அப்படி எதுவும் எங்களுக்கு வரவில்லை என்று சட்ட அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். பச்சைப் பொய் அல்லவா?

ராஜினாமா செய்யச்சொல்லி திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதற்கு சொன்னது  பொய் என்றால் ராஜினாமா செய்ய தயார் என்று கூட அவர் கூறினார்.

இப்போது என்ன செய்ய போகிறார் சிவி சண்முகம்?