Home Blog Page 31

உச்சநீதி மன்ற தீர்ப்பு யாருக்கு சாதகம்? குமாரசாமிக்கா, எடியூரப்பாவுக்கா?

சபாநாயகருக்கு எப்போது முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது- ராஜினாமா செய்தவர்கள் சட்ட மன்றத்திற்கு போகலாம் போகாமலும் இருக்கலாம்.-இப்படி ஒரு இடைக்கால தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ளது.

இதன்மூலம் சபாநாயகர் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்ளலாம் மறுக்கவும் செய்யலாம். தகுதி நீக்கம் செய்ய முடியுமா என்பது வேறு?

இதில் எதை செய்தாலும் நாளை நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்த  பாதிப்பையும் அது ஏற்படுத்தாது.

ஆளும் கட்சியின் வலு 101 ஆகவும் பாஜகவின் வலு 107 ஆகவும் இருக்கும். எனவே வெறும் எண்ணிக்கை அடிப்படையில் குமாரசாமி ஆட்சி கவிழும் என்பதுதான் இன்றைய எதார்த்த நிலை.

வேறு ஏதாவது அதிசயம் நடந்தால் தவிர குமாரசாமி ஆட்சியை காப்பாற்றுவது கடினம்.

                        ஆனால் கட்சி தாவல் பாதுகாப்பு சட்டம் ஏதாவது கொண்டு வர வேண்டும் என்று பாஜக திட்டமிடலாம். அது ஒரு சட்ட மன்ற உறுப்பினரின் அடிப்படை உரிமை என்று கூட வாதிடலாம். 

ஆட்சியை பிடிக்க எந்த எல்லைக்கும் பாஜக போகும் என்பதற்கு கர்நாடகமே உதாரணம்.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக இல்லை ?!

உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் கேட்டு மாநில தேர்தல் கமிஷன் கொடுத்த மனுவை  நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதாவது வரும் அக்டோபர் மாதம் கடைசிவாரத்தில் தேர்தல் எப்போது நடக்கும் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.

அப்படி அறிவிப்பை வெளியிடாவிட்டால் என்ன நடக்கும்.? நீதி மன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். அவ்வளவுதானே? எதிர்கொண்டால் போயிற்று. இதுதான் அதிமுக அரசின் அணுகுமுறையாக இருக்கிறது.

சட்ட மன்ற தேர்தலுக்கு முன்னாள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி தனக்கு செல்வாக்கு இல்லை என்பதை வெளிக்காட்ட எந்த அரசுதான் விரும்பும்?

அதற்கு தமிழகம் கொடுக்கும் விலைதான் அதிகம்.

உள்ளாட்சி நிதி பங்காக தமிழகத்திற்கு வர வேண்டிய சுமார் நான்காயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் நிதியை விடுவிக்க முடியாது என்றார்.

தேர்தலுக்கும் நிதிக்கும் தொடர்பில்லை. கொடுக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நிலை.

ஆனால் மத்திய அரசு தேர்தல் நடத்தாதயை சாக்காக வைத்து நிதியை நிறுத்தி வைக்கலாம்.

ஆக தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டும். அதாவது அப்போதும் மாநில அரசு மனது வைத்தால்தான்.

அஞ்சல் துறை தேர்வை ரத்து செய்து பணிந்த மத்திய அரசு?!

அஞ்சல் துறை தேர்வுகளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்வித்தாள்களை வழங்கி நடத்தியது மத்திய அரசு.

திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தன.

ஆச்சரியமாக திமுகவுடன் சேர்ந்து அதிமுக எம்பிக்களும் மேலவையில் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தினர்.

வழக்கும் தாக்கலாகி முடிவுகளை அறிவிக்க தடை ஏற்பட்டது.

இந்நிலையில் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாராளுமன்றத்தில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப் படுவதாகவும் இனி தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் தேர்வுகள் நடத்தப் படும் என்றும் அறிவித்தார்.

எல்லா கட்சியினரும் நன்றி தெரிவித்தனர்.

இந்த முடிவுக்கு தமிழ் நாட்டில் எழுந்த எதிர்ப்பே முக்கிய காரணம். ஆக இதர மாநிலங்களின் உரிமைகளையும் தமிழ்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்கள்தான் பாதுகாக்கின்றன.

ஏதோ இப்போதைக்கு ரத்து செய்து விட்டார்களே என்று நினைக்கக் கூடாது. உண்மையில் அந்த முடிவை எடுத்து அமுல்படுத்திய யார் மீதாவது பொறுப்பை சுமத்தி உரிய தண்டனை வழங்கி இருந்தால் மட்டும்தான் அவர்கள் இதில்  உண்மையில் அக்கறை காட்டுவதாக ஏற்றுக் கொள்ள முடியும்.

அதில்லாமல் வெறுமனே ரத்து மட்டும் செய்திருப்பதால் மீண்டும் அடுத்த முயற்சியை எப்போது வேண்டுமானாலும் கையில் எடுப்பார்கள் என்றுதான் பொருள்

கர்நாடகத்தில் பாஜக நடத்தும் கட்சித்தாவல் அசிங்கங்கள் ??!!

கர்நாடகத்தில் மத சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது.

அதை கவிழ்த்து தான் ஆட்சியில் அமர பாஜக எல்லாவித அரசியல் அசிங்கங்களையும் அரங்கேற்றி வருகிறது.

பலியாவது கட்சித் தாவல் தடை சட்டம்.

இப்போது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இருந்தால்தான் ஒரு கட்சியில் பிளவை ஏற்படுத்த முடியும்.

அதை முறியடிக்கும் நோக்கில் பாஜக திட்டமிட்டு இருப்பது தான் ராஜினாமா நாடகம்.

இன்று ராஜினாமா செய்திருக்கும் 16 எம் எல் ஏக்களும் ராஜினாமா செய்யாமல் கட்சிகளை எதிர்த்து பேசியிருந்தால் அவர்களை கட்சி தாவல் தடை சட்டப்படி  தகுதி இழப்பு செய்ய முடியும்.

நாங்களாகவே ராஜினாமா செய்கிறோம் என்றால் ஆளும் கட்சியின் பலம் குறைகிறது அல்லவா.

ராஜினாமா செய்பவர்கள் ஒன்றும் பலன் இல்லாமலா ராஜினாமா செய்வார்கள்?  ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றம் சென்றவர்கள் என்ன பலனை எதிபார்த்து அதை செய்திருப்பார்கள்?

இது ஜனநாயக மோசடி அல்லாமல் வேறு என்ன?

நாளை குமாரசாமி நம்பிக்கை ஓட்டில் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பது  வேறு.

ராஜினாமா செய்தவர்கள் இதுவரை ஏற்றுக் கொள்ளத்தக்க என்ன காரணத்தை சொல்லி இருக்கிறார்கள்?

இதுமாதிரி சட்டத்தை இழிவு படுத்து வதை விட பேசாமல் கட்சி தாவல் தடை சட்டத்தையே ரத்து செய்து விடலாம்.

வேலூரில் அதிமுகவுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு; மௌனம் கலைப்பாரா ரஜினி??!

அதிமுகவுக்கு நன்றாக தெரிந்து விட்டது. மோடி ஆதரவு என்று சொன்னால் இங்கே மதிக்க ஆளிருக்காது என்று.

எனவே தேடிபிடித்து ரஜினி ரசிகர் மன்ற ஆட்களை வேலூரில் ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக களம் இறக்கி விட்டிருக்கிறார்கள்.

எப்போதும் எல்லாத அளவுக்கு  மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பின்னும் மோடிக்கு எதிர்ப்பு அலை அதிகமாக அடிக்கத் துவங்கி இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான்.

எல்லா மாநிலங்களிலும் ஜனநாயக நெறிமுறைகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு  மற்ற கட்சிகளை உடைத்து ஆட்சியை பிடிக்கும் வேலையை வெட்கமின்றி செய்து வருகிறது பாஜக.

பின்னால் இருந்து இயக்கும் ஆர்எஸ்எஸ் இதுதான் தக்க தருணம் என்று கணித்து  காங்கிரசை இல்லாமல் செய்துவிட முயற்சித்து வருகிறது.

சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்ற ரஜினி தன் ரசிகர் மன்ற ஆட்களை உள்ளே விட்டு ஆழம் பார்க்கிறாரா?

வருங்கால கூட்டணி அமைய இப்போதே அச்சாரம் போடுகிறாரா?

ரஜினியை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று மாபா பாண்டியராஜன் சொல்லியிருப்பது அவர்களுக்கு உள்ளே இருக்கும் மோதலை காட்டுகிறது.

மொத்த அமைச்சரவையும் வேலூரில் களம் இறக்கி விடப்பட்டு இருக்கிறது.

இதற்கெல்லாமா மக்கள் மயங்கி விடுவார்கள்?

அஞ்சல் துறையில் இனி வடவர்களுக்கே வேலை?! தொடரும் வஞ்சகம்?!!

இன்று நடைபெறும் அஞ்சல் துறை கிளை போஸ்ட் மாஸ்டர், உதவிகிளை போஸ்ட் மாஸ்டர், தபால் டெலிவரி செய்பவர்கள் போன்ற பல் வேறு பணிகளுக்கு நடைபெறும் தேர்வில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்விகள் இருக்கும் என அதிர்ச்சி தகவலை ஒருநாள் முன்னதாக அறிவித்து எல்லாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது அஞ்சல் துறை.

இதுவரை எல்லா மொழிகளிலும் கேட்கப்பட்டு வந்த கேள்விகள் ஏன் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வது?

உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை தேர்வுகளை நடத்தி கொள்ளுங்கள் ஆனால் முடிவுகளை மட்டும் வெளியிடாதீர்கள் என்று உத்தரவிட்டு இருக்கிறது.

இந்த அநியாயத்தை யார் கேட்பது?

நாங்கள் செய்து கொண்டே இருப்போம். விழித்துக் கொண்டால் இல்லை என்போம்.  மீண்டும் சீண்டுவோம். விழித்தால் மீண்டும் மறுப்போம் என்று தொடர்ந்து கொண்டே  இருக்கும் இந்த நாடகத்துக்கு முடிவு ஏது?

இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே நடத்தினால் பிரச்னை வரும் என்று தெரியாமலா இந்த முடிவை எடுத்திருப்பார்கள்? அடிப்படை அறிவு இல்லாத எவரும் இந்த முடிவை எடுத்திருக்க முடியாது. எனவே தெரிந்தே தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தேர்வு நடத்தி அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இத்தனை பேர் தேர்ந்து  எடுக்கப்பட்டு அவர்கள் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு அனுப்பபட இருக்கிறார்கள். அது நல்ல முன்னேற்றம் இல்லையா என்பார்கள்? பிறகு ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தேர்வு என்பது நிலைப் பட்டு விடுமல்லவா?

ஏனப்பா இந்த வேலையை ஏன் வேறு மாநிலத்துக்கு சென்று பார்க்க வேண்டும்.   இங்கே காலியாக இருக்கும் இடத்தில் நான் பணி செய்வதில் உனக்கு என்ன பிரச்னை என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வது?

எல்லாரும் கண்டித்து அறிக்கை விட்டு விட்டார்கள். அதற்கு நீதி மன்றம் சென்று நீதி பெற வேண்டும்.

எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால் நடப்பது நமது அரசல்ல என்றுதானே ஆகும். ?

தவறுகளை தெரிந்தே அடுக்கிக் கொண்டே போகிறது பாஜக அரசு. இது எங்கு கொண்டு போய்விடுமோ?

தேசதுரோக வழக்கில் வைகோ தண்டிக்கப்பட்டது வரலாற்று பிழை ?!

ஆங்கிலேய ஆட்சிகால மனநிலையில் இருந்து நாம் வெளி வரவில்லையோ என தோன்றுகிறது.

வைகோ மீதான வழக்கில் நீதிபதி கேட்டதாக சொல்லப்படும் கேள்வி நீங்கள் பிரபாகரன் மீதான ஆதரவை நீங்கள் அதிகரிக்கும் விதத்தில் பேசினீர்களா என்பது.

பிரபாகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்வது தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகும் இப்படி ஒரு தீர்ப்பு வர முடியும் என்பதை கற்பனை செய்யவே முடியவில்லை. பிரபாகரன் தீவிரவாதியல்ல அவர் ஒரு இனத்தின் விடுதலைப் போராளி என்னும் கருத்தில் உறுதியாக இருப்போர் கோடானு கோடி. எல்லாரையும் தண்டித்து விடமுடியுமா?

உச்சநீதி மன்ற தீர்ப்பிற்கு என்னதான் பொருள்.?

தவறான புரிதல்தான் இந்த தவறான தீர்ப்பிற்கு அடித்தளம் இட்டிருக்க வேண்டும்.

மேல்முறையீட்டில் இந்த தண்டனை உறுதியாக நிற்காது என்பதே நமது கணிப்பு.

தற்காலிகமாக சில சிரமங்களை வைகோவிற்கு இது அளிக்கலாம். அவைகள் நிரந்தரம் அல்ல.

மேன்முறையீட்டு நீதிமன்றம் நிச்சயம் தடை கொடுக்கும் என்றும் வைகோ ராஜ்ய சபைக்கு போவது தடை படாது என்றும் நம்புகிறோம்.

இதில் திமுகவிற்கு ஒரு நிரடலும் இல்லை. திமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வழக்கு என்பதால் அதில் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதோ வைகோ குற்றவாளி என்பதோ திமுகவின் நிலைப்பாடு அல்ல. அது காவல்துறையின் நிலைப்பாடு.நீதிமன்றம் அதுபற்றி தீர்ப்பு சொல்லும். அதில் நீதி நிச்சயம் வெல்லும்.  வைகோ புடம் போட்ட தங்கம் போல் வெளிவருவார்.

ஆயுதம் தாங்கி விடுதலைக்கு போராடிய சுபாஷ் சந்திர போஸ்

இந்திய போராளிகளின் பெருமிதம்.

பிரபாகரன் தமிழர்களின் குல சாமி !

தமிழ்ப்போராளிகளின் பெருமிதம்.!

அந்தப் பெருமையை தட்டிப் பறிக்க எவராலும் முடியாது!

ராகுல் இனி காங்கிரஸ் தலைவர் இல்லை!! பிரதமர் வேட்பாளரும் இல்லையா??!!

நான் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டேன். இனி புதிய தலைவரை தேர்ந்துஎடுப்பது கட்சியின் கடமை என்று அறிவித்திருக்கிறார் ராகுல் காந்தி.

தனி ஒருவனாக நின்று போராடியதாவும் சொல்வதைத்தான் ஏற்க முடியவில்லை. வேறு காங்கிரஸ் தலைவர்களே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

சரி. இப்போது தலைவர் இல்லை. நாளை பிரதமர் வேட்பாளராக போட்டியிடமாட்டரா என்ற கேள்வியும் எழுகிறது.

அதிகாரத்தில் இருக்கும்போது பதவிவிலகுவதுதான் பெருமை சேர்க்கும். அதிகாரம் இழந்த போது பதவி விலகுவதில் என்ன பெருமை?

நேரு குடும்பத்தை விட்டால் தலைமை தாங்க வேறு தலைவர்களே இல்லை என்பது ஒரு தேசியக்கட்சிக்கு இழுக்குத்தான்.

ஏன் அப்படி ஒரு தலைவர் தோன்றவில்லை.? ஏன் என்றால் அது காங்கிரஸ்!

பாஜகவில் அந்த நிலை ஒரு போதும் எழாது. ஏன் என்றால் அது ஒரு மதவாத கட்சி.    அதுவும் சாதியம் ஆட்சி செய்யும் மதவாதம். அதுவும் பார்ப்பனீயம் தனக்கொரு நீதி மற்றவர்க்கு ஒரு நீதி என்பதை எல்லாரையும் ஏற்றுக் கொள்ள வைக்கும் மதவாதம்.    அங்கு தலைவர்கள் முக்கியம் இல்லை. இன்று மோடி. நாளை ஒரு கட்கரி. இவர்களை எல்லாம் இயக்கும் ஆர்எஸ்எஸ் தன்னை  முன்னிலைப்படுத்தியதே இல்லை. ஆனால் அவர்கள் தீர்மானிக்கும் சக்தியாக என்றுமே நிலைப்பார்கள்.

மேலாகப் பார்க்கும்போது ராகுல் செய்வது நல்லது போல்தான் தோன்றும்.

நேரு குடும்பத்தை விட்டு வேறு ஒருவர் காங்கிரசின் தலைவராக மிளிர வேண்டிய வாய்ப்பை ராஜீவ் காந்தி கெடுத்தார். வி பி சிங்கிற்கு அந்த வாய்ப்பை கொடுத்திருக்கலாம். ஆனால் போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு அந்த வாய்ப்பை கொடுக்க தகுந்த தருணமாக அமையவில்லை.

மாநில உரிமைகளை மதிக்கும் தேசிய கட்சியாக காங்கிரஸ் இருப்பதால் அது வலுப் பெற அவசியம் இருக்கிறது.

மாற்றாக ஒரு இளைஞரை நியமிக்க வேண்டும். வயதானவரை பெயருக்கு போட்டால் எந்த மாறுதலும் விளையப்போவதில்லை.

காங்கிரசில் மாற்றங்கள் வரவேற்கப் பட வேண்டியவையே.

தமிழில் தீர்ப்புகள் இனி வருமா?? மாநில நீதித்துறைகளை சிதைக்க பாஜக அரசு திட்டம்!

இந்தியன் ரெவின்யு சர்விஸ், இந்தியன் போலிஸ் சர்விஸ், போல இந்தியன் ஜுடிசியல் சர்விஸ் ஒன்றைக் கொண்டு வர பாஜக வின் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இப்போதுதான் மாவட்ட அளவில் தமிழில் தீர்ப்புகள் வருகின்றன. வழக்கு நடத்துவது சாட்சியம் விசாரிப்பது ஆவணங்கள் தாக்கல் செய்வது என்று அனைத்தும் தமிழில் நடப்பதால் பொதுமக்கள் ஓரளவு வழக்கின் தன்மைகளை புரிந்து கொண்டு வருகிறார்கள்.

உயர்நீதிமன்றத்திலும் தமிழில் எல்லாம் வரவேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தியன் ஜுடிசியல் சர்விஸ் என்ற ஒன்றை உருவாகி மாவட்ட நீதிபதிகள் முதற்கொண்டு நியமனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிடுகிறது பாஜக அரசு. முன்பே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2009, 2013ல் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு மாநிலங்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட திட்டம் அது.

இப்போது மீண்டும் அதை கொண்டுவர அவசியம் என்ன?

மாநில உரிமைகளை தட்டிப் பறிக்கும் வேலைகளில் தொடர்ந்து இறங்கி வருகிறது  பாஜக அரசு.

மாநில அரசுகள் வசம் உள்ள அதிகாரத்தை மத்திய அரசு தட்டிப் பறிக்க நினைக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி களுக்கும் மத்திய அரசுக்கும் இருக்கும் அதிகார சண்டையை  முதலில் தீர்த்துக் கொள்ளட்டும்.

மிகக் கொடிய அதிகார பறிப்பு திட்டம் இது.

சாட்சி விசாரணை, ஆவண தாக்கல், வாக்குமூல பதிவுகள் போன்ற அனைத்து வகைகளிலும் மாநில மொழி குறிப்பிடத் தக்க பங்கு வகிக்கிறது. அதை மாற்றுவீர்களா?

வெளி மாநிலத்தவர் தேர்வு எழுதி இங்கு வந்து நீதி பரிபாலனம் செய்யப் போகிறார்களா?

ரயில்வேயில் நடந்த மோசடி போல அரியானா மாநிலத்தில் இருந்து தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்றதாக சான்று வாங்கி பணியில் சேர்ந்தார்களே அதைப் போன்ற மோசடிகள் தான் நடக்கும்.

உச்சநீதி மன்றங்கள் தவிர அனைத்து நீதி மன்றங்களும் பொதுப்பட்டியலில் உள்ளதால் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாநில அரசு தன் அதிகாரத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்கக் கூடாது. 

இன்னும் என்ன செய்வார்களோ என்று தினம் தினம் அச்சத்தை அதிகரித்துக் கொண்டே போகிறது பாஜக வின் மத்திய அரசு!!!

எங்கே கொண்டு போய் விடுமோ இந்த ஆதிக்க வெறி ?!

‘தமிழர்கள் கோழைகள்’ கிரண் பேடி தாக்குதலின் பின்னனி?!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒரு பாஜக காரர்.

தமிழகத்தில் ஒரு இடம் தவிர அத்தனை இடங்களையும் திமுக கூட்டணி கட்சிகள் கைப்பற்றியதை அவரால் சீரணித்துகொள்ள முடியவில்லை போலும்.

அதனால்தான் பொங்கி இருக்கிறார். தமிழத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து அவருக்கு அக்கறை இருந்தால் அதை அவர் வேறு விதமாக காட்டியிருக்கலாம் .

பிரச்னைக்கு என்ன காரணம் என்று கருத்துக் கூறும்போது ‘மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அக்கறையில்லாத அதிகார வர்க்கம், அத்துடன் மிக அதிகமாக சுயநலம் மற்றும் கோழைத்தனமான மனோபாவம் கொண்ட பொதுமக்கள்

ஆகியோர்தான் காரணம்” என்று பதில் அளித்துள்ளார்.

இவ்வளவு மோசமாக தமிழக மக்களை விமர்சிக்க இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

பாஜக ஆதரவு இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?

அதிமுக அரசு மீது மத்திய அரசுக்கு கோபம் இருக்கலாம். அதை பேடி வெளிப்படுதுகிறாரா?

வந்த நாள் முதல் இந்த நாள் வரை கிரண்பேடி பிரச்னைக்கு உரியவராகவே இருக்கிறார்.

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களில் தலையிடுவது போன்ற மோசமான  முன் உதாரணங்களால் பேடி அடையாளம் காட்டப் படுகிறார்.

இப்போது  உச்சநீதி மன்றத்தின் பரிசீலனையில்  இருக்கிறது அவரது தலையீடு  பற்றிய பிரச்னை.

விளம்பரம் இல்லாமல் ஒரு நாள் கூட பேடியால் காலம் தள்ள முடியாது என்கிறார் புதுவை முதல்வர் நாராயணசாமி.

ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் பேசாமல் இருந்தால் போதும் என்கிற அளவுக்கு ஆகி  விட்டது.

பா  ஜ க கட்சிக்காரர்களை நியமன சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆக்கியதால் எந்த விளைவையும்  அவர்களார் ஏற்படுத்த முடியவில்லை.

இத்தகைய  அத்துமீறல் களால் தான் புதுவை மக்கள் வெறுப்புற்று பா ஜ க வுக்கு எதிராக வாக்களித்தார்கள்.    இன்னும் திருந்தாமல் தமிழ்நாட்டு மக்களை கோழைத்தனமானவர்கள் என்றுப் ஏசும் அளவுக்கு சென்றுவிட்டார்.

”  மோடி டேக் பேக் பேடி ”   என்பதுதான் இன்றைய குரல். !!