Home Blog Page 42

13% மட்டுமே வாக்களித்த ஸ்ரீநகர் தொகுதி இந்தியாவின் ஒரு பகுதி ??!!

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக சட்டப்படி நீடிக்கிறது. ஆனால் உணர்வு பூர்வமாக காஷ்மீரிகள் இந்தியர்கள் ஆனார்களா?

ஆறு பாராளுமன்ற தொகுதிகள் கொண்ட மாநிலம் இரண்டு முஸ்லிம் குடும்பங்களால் ஏமாற்றப்பட்டு வந்திருப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.    அப்துல்லா குடும்பத்தையும் முப்தி குடும்பத்தையும் குறித்தே அவர் பேசினார்.

இந்து முஸ்லிம் பௌத்த மதங்களால் பிரிக்கப்பட்ட பூமியாக அந்த மாநிலம் விளங்குகிறது.

நேற்று நடந்த தேர்தலில் வெறும் 13% மட்டுமே ஸ்ரீநகர் தொகுதியில் பதிவானது.

அதேநேரம் இந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் 68% வாக்கு பதிவானது.

இவ்வளவு குறைந்த அளவு மக்கள் பங்கேற்று உள்ள இந்த தேர்தல் எப்படி மக்கள் ஆட்சியை பாதுகாக்கும்.?

செல்லுபடியாகும் தேர்தலுக்கு குறைந்தபட்சம் எத்தனை சதம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு ஒரு விதி வேண்டும்.

இல்லாவிடில் தேர்தல் ஒரு கேலிக்கூத்து ஆகிவிடும்.

நேற்று வரை பாஜக வுடன் கூட்டு வைத்து இருந்த பிடிபி கட்சி இன்று எதிரியாகி விட்டது. ஆக நான்குமுனை போட்டி நிலவுகிறது.

யார் வென்றாலும் குறைந்த சத ஆதரவே இருக்கும்.

கேள்விக்குறியாகவே நீடிக்கும் காஷ்மீர் பிரச்னை எப்போது முடிவுக்கு  வரும் ? 

பணத்தை பதுக்கிக் கொண்ட ஆளும் கட்சி நிர்வாகிகளால் காப்பாற்றப்பட்ட ஜனநாயகம்??!!

கொள்ளையடித்தவர்கள் இந்த தேர்தலில் பணத்தை இறக்கி மீண்டும் பதவிக்கு வந்து மீண்டும் பணத்தை கொள்ளையடிக்கலாம் என்ற திட்டத்தை அந்தந்த கட்சி நிர்வாகிகளே தோற்கடித்திருக்கிறார்கள்.

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரூபாய் 4000 வீதம் ஆளும் கட்சி வேட்பாளர் ஒதுக்க அதை நிர்வாகிகள் 2000 என சில இடங்களிலும் 1000 என பல இடங்களிலும் விநியோகித்திருக்கிறார்கள்.

ஒரு சட்டமன்ற தொகுதியின் சராசரி வாக்குகள் இரண்டு லட்சம் என்றால் நாலாயிரம் ரூபாய் வீதம் கொடுத்தால் எண்பது கோடி வேண்டும். பாதிப்பேருக்கு இரண்டாயிரம் என்றால் கூட இருபது கோடி. 18 தொகுதிகளிலும் சுமார்  300-400  கோடிகள் ஆளும் கட்சி செலவழித்திருக்கலாம். அதையும் மீறி யாரும் வெற்றி பெற்றால் அதுதான் மக்கள் சக்தி. 

டிடிவி கட்சி பல இடங்களில் ரூபாய் 500 எனவும் சில இடங்களில் 1000 எனவும் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் யாருமே எல்லாருக்கும் கொடுக்கவில்லை. பணக்காரர்கள் யார் என்று பார்த்து அவர்களை தவிர்த்தே விநியோகம். நூறு சதம் திட்டமிட்டு கடைசியில் விநியோகம் செய்தது சுமார் ஐம்பது அல்லது அறுபது சதம் பேருக்குத்தான். மீதியை கட்சி நிர்வாகிகள் பங்கு போட்டுக்கொண்டுவிட்டனர். அதனால் கட்சிக்கு வர வேண்டிய முழு வாக்குகளும் வந்தன என்று சொல்ல முடியாத நிலையை உருவாக்கி விட்டனர்.

அதிலும் பாராளுமன்ற தொகுதிகளில் யாருமே எல்லாருக்கும் கொடுக்கவில்லை என்பது நல்ல செய்தி. இல்லை என்று சொல்லாமல் நூறு இருநூறு என்று  கொடுத்திருக்கிறார்கள்.

பல இடங்களில் அதிமுகவிடம்  பணம் வாங்கிக் கொண்டு தினகரனுக்கு வாக்களித்த  கதையும் அரங்கேறி இருகிறது.

பணம் பல விதமாக விளையாடினாலும் தேர்தலை மாற்றியமைக்கும் விதத்தில் அது அமையவில்லை.

மக்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்தான் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாம். சில இடங்களில் வாக்கு சாவடிகளை கைப்பற்றும் முயற்சிகளை ஆளும் கட்சி மேற்கொண்டது.

அன்புமணி ராமதாஸ் சொன்னது போல் வாக்கு சாவடியில் நாம்தான் இருப்போம் என்று தொண்டர்களை உசுப்பேற்றி வைத்திருந்தாலும் அவர்களால் முழுமையாக அதை செய்ய முடியவில்லை.

நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.  தேடிக்கண்டுபிடித்து வாக்களித்தவர்கள் சொன்னார்கள்.

பெரிதும் பேசப்பட்ட தினகரன் கட்சி எங்கும் வெல்லமுடியாது என்றாலும் பல இடங்களில் கணிசமாக வாக்குகளை பெறலாம். பரிசுப் பெட்டகத்தில் எதையாவது வைத்து கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த வர்களுக்கு ஏமாற்றம்தான்.

            அதிலும் பாராளுமன்ற தொகுதிகளில் யாரும் அதிக அக்கறை காட்டி பணம் செலவழிக்கவில்லை. பெருந்தொகை முதலீடு 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில்தான். ஆட்சி நீடிக்க வேண்டுமே??!! 

பணத்தைப் பதுக்கிக் கொண்ட ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் மொத்தமாக வெற்றி பெற்று ஊழலை சட்ட பூர்வமாக ஆக்கி விடுவார்கள்.

பண மழையில் கேலிக்கூத்தாகும் பொதுத்தேர்தல் ??!! நிமிர்ந்து நிற்குமா மக்கள் சக்தி!!??

ஜனநாயகம் சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது.

இரண்டு நாளாக பொழியும் பண மழை வாக்காளர்களை முற்றிலும் நனைத்து வருகிறது.

வரும் செய்திகள் நன்றாக இல்லை.

பணம் கொடுப்பது கொள்ளையடித்தவர்கள் என்றால் அது ஏன் இன்னும் எனக்கு வரவில்லை என்று கேட்பவர்கள் கொள்ளையில் பங்கு கேட்பவர்கள் அல்லவா?   

எங்கும் பணம் கொடுக்க வந்தவர்களை மக்கள் விரட்டி அடித்தார்கள் என்ற செய்தி வரவில்லையே?

அந்த நல்ல செய்தி வந்தால்தான் ஜனநாயகம் பிழைக்கும்.

தேர்தல் ஆணையம் ஓரணியில் நின்றுவிட்டது. அவர்களை இனி மாற்ற முடியாது.

உயர் நீதிமன்றம் கைவிரித்து விட்டது. அதிகாரமில்லை தேர்தலை நிறுத்த.

கடைசி நம்பிக்கை மக்கள் சக்தி. அது விழித்து எழுகிறதா என்பது மட்டுமே ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பு.

பல்லில்லை என்ற தேர்தல் ஆணையத்தை கண்டித்த உச்ச நீதிமன்றம்??!!

சாதி, மதம் காரணமாக வெறுப்பு அரசியல் செய்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு அதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் கமிஷன் அளித்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

ஏன் என்றால் இதற்கு முன் எந்த தேர்தல் கமிஷனும் தவறுகளை தடுத்தது இல்லை.    எல்லாம் முடிந்த பின் எங்களால் தடுக்க முடியவில்லை என்று ஒரு அறிக்கை கொடுப்பார்கள். அவ்வளவுதான்.

தேர்தல் நடத்தை விதிகள் எல்லாம் பெயரளவுக்குத்தான் .

தேர்தல் நடைமுறைகளை யோகி ஆதித்யநாத்தும் மாயாவதியும் பாழ் படுத்தி விட்டார்கள் என்று தேர்தல் கமிஷன் சொல்கிறது.

அதிக பட்சம் எங்களால் ஒரு அறிவிப்பு அனுப்பி விளக்கம் கேட்டு அதில் தவறு இருந்தால் அறிவுரை கூற முடியும் என்று தேர்தல் ஆணையம் பதில் சொன்னது.

அறிவுரை சொல்வதால் என்ன ஆகிவிடப் போகிறது? அதை அவர்கள் கேட்க வில்லை என்றால் யார் தண்டிப்பது?

உச்ச நீதி மன்றம் தானே முன்வந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவுகள் 123(3) மற்றும் 125ன் படி யாராவது வேட்பாளரோ அவரது பிரதிநிதியோ மதத்தின் பேரால் வேண்டுகோள் விடுத்தாலோ வெறுப்பை தூண்டும் வகையில் பேசினாலோ அவரை தகுதி நீக்கம் செய்யம் முடியும் என்பதை சுட்டிக் காட்டி தேர்தல் கமிஷன் ஏன் அதன்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

அப்படிப்பார்த்தால் முதலில் பிரதமர் மோடி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரைத்தான் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். செய்யுமா தேர்தல் ஆணையம்?

“நான் சாமியார். நான் ஒட்டு கேட்கிறேன். கொடுக்கவில்லையென்றால் உங்களுக்கு பாவம் சம்பவிக்கும். நான் என்ன உங்கள் சொத்தையா கேட்கிறேன்” என்று மதத்தின் பேரால் ஒட்டுக் கேட்கும் சாக்ஷி மகராஜ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னும் சபரிமலை பாரம்பரியத்தை காப்பாற்றியே தீருவேன் என்கிறார் மோடி. அதற்கு அரசியல் சாசன பாதுகாப்பை தேடித் தருவேன் என்கிறார். அரசியல் சாசனத்தை திருத்தப் போகிறாரா? எப்படி திருத்தப் போகிறார்? என்ன திருத்தம்? முற்று முழுதும் மத பிரச்னைகளை பரியே பேசி வாக்குக் கேட்கிறது பாஜக. என்ன நடவடிக்கை எடுக்க முடியும்.?

கடந்த 30 ஆண்டுகளாக ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட குஜராத்தில் இருந்து தேர்தெடுக்கப்படாமல் பார்த்தக் கொள்கிறது பாஜக. அது எப்படி அனைத்து மக்களுக்குமான கட்சியாகும்?

சூழ்ச்சியும் வஞ்சகமும் செய்வதற்குதானா தேர்தல் ஆணையம்? பாஜக – அதிமுக – தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து இந்த தேர்தலை சந்திக்கிறார்கள் என்ற முத்திரை வலுவாக விழுந்து விட்டது.

பாஜக சுட்டிக் காட்டும் நபர்கள் மீது வருமான வரித்துறை ஏவப்படுகிறது. ஏதோ ஆளும் கட்சிகாரர்கள் மட்டும் புனிதர்கள் போல. எல்லாருக்கும் ரூபாய் 2000 கொடுத்து விட்டார்கள் ஆளும் கட்சிக்காரர்கள். எல்லா மக்களுக்கும் இந்த உண்மை தெரியும். ஆனால் எதிர்கட்சிக்காரன் ரூபாய் 300 கொடுக்க முயற்சித்தான் என்று வழக்கு? யார் எவ்வளவு கொடுத்தாலும் தவறுதான். அதாவது நடவடிக்கை இரண்டு பேர் மீதும் எடுக்கப்பட்டால்.

தன் மீது பழி வந்து விட அனுமதிக்கக் கூடாது என்ற உணர்வு தேர்தல் ஆணையத்துக்கு இல்லவே இல்லை.

வேலூரில் மட்டும் பாராளுமன்ற தேர்தலை நிறுத்தி வைத்திருக்கிறதே தேர்தல் ஆணையம் யார் சொல்லி?

உயர் நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

மக்களின் நம்பிக்கையை சுத்தமாக இழந்து விட்டது தேர்தல் ஆணையம்.   

அத்தகைய அமைப்பு நடத்தும் தேர்தல் மீது மக்களுக்கு எந்த அளவு நம்பிக்கை வரும்??

ஓட்டுக்கு ரூபாய் 1000, 2000, 5000 என எகிறிக்கொண்டிருக்கும் விலைவாசி ??!

முந்தைய நாள் தான் ஓட்டுக்கு ரூபாய் 300 விநியோகம் தொடங்கிவிட்டதாக எழுதியிருந்தோம்.

இப்போது வந்து கொண்டிருக்கும் செய்திகள் நம்ப முடியாமல் அதிர்ச்சி தந்து கொண்டிருக்கின்றன.

அங்கே ஓட்டுக்கு 1000 தந்து விட்டார்கள் என்றும் இங்கே ஓட்டுக்கு 2000 தந்து விட்டார்கள் என்றும் செய்திகள் வருகின்றன. அதோடு கூட சில இடங்களில் ஓட்டுக்கு ரு 5000 தந்து விட்டார்கள் என்றும் தருவதாக உததரவாதம் தந்திருக்கிறார்கள் என்றும் செய்திகள். உத்தரவாதம்  தந்தவர்கள்  ஆர் கே நகரில் இருபது ரூபாய் டோக்கன் தந்தவர்கள். எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் பாருங்கள்.

       இதற்கிடையில் பலரும் பணமும் வாங்கிக் கொண்டு தங்கள் விருப்பப் படிதான் வாக்களிக்க முடிவு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். 

ஜனநாயகத்திற்கு வந்திருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் இந்த பண ஆதிக்கம்.

சென்ற தேர்தலில் ஒரு நிறுவனம் மூலம் 650  கோடி கொடுத்து ஜெயலலிதா வெற்றி பெற்றார் என்று இப்போது ஒரு ஆங்கில பத்திரிகை எழுதுகிறது.

எங்கள் வாக்குகள் விற்பனைக்கல்ல – என்ற அறிவிப்புகள் எத்தனை ஊர்களில் இருக்கின்றன? 

ஏன் எங்களுக்கு வரவில்லை என்றுதானே கேட்கிறார்கள்!!

இந்த பண ஆதிக்கத்தையும் மீறி  மக்களாட்சி வெற்றி பெற்றால் அதிசயம்தான்.

63 வயது மாயாவதிக்காக ஷூ வை கழற்றிய 80 வயது அஜித்சிங்; திரும்பும் வரலாறு??!!

இன்னமும் நாட்டில் பல பாகங்களில் மேல்சாதி என்று சொல்லிக் கொள்ளும் மக்களுக்கு முன்னால் தலித்துகள் செருப்பு அணிய அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் உபி யில் வரலாற்றை திருப்பிக் கொண்டிருக்கிறார் மகர் சமூகத்தின் தலைவி மாயாவதி. பகுஜன் சமாஜ் கட்சி தலித் மக்களை ஒருங்கிணைத்து அதிகாரத்தை ருசித்த பிறகு எல்லா சமுதாய மக்களையும் பணிய வைக்கும் பணியை மிகவும் லாகவமாக செய்து வருகிறார்.

முதலில் தலித், பார்ப்பனர் முஸ்லிம் கூட்டணியை வெற்றிகரமாக உருவாக்கி ஆட்சியை பிடித்தார். பதவிக்காக பார்ப்பனர்களும் முஸ்லிம்களும் மாயாவதியிடம் அடங்கி போனார்கள். 

இன்று தலித் ஆதரவு இல்லாமல் யாறும் ஆட்சியை  பிடிக்க முடியாது என்ற சூழ்நிலையில் அந்த உண்மையை உணர்ந்து பிற்பட்ட யாதவ் மக்களின் தலைவர் அகிலேஷ் யாதவும் ஜாட் மக்களின் தலைவர் அஜித் சிங்கும் இன்று மாயாவதியுடன் உடன்பாடு செய்து கொண்டு தேர்தலை சந்திக்கிறார்கள். இது மகா கூட்டணி என்று அழைக்கப் படுகிறது.

ஒரு காலத்தின் யாதவ் மக்களும் ஜாட் மக்களும் தான் தலித்துகளை அடக்கி வைத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இன்று கூட முழுதும் தலித்துகள் அடக்கு முறையில் இருந்து விடுபட்டு விட்டார்கள் என்று கூற முடியாது. ஆனாலும் மாயாவதி தலித்துகளுக்கு வேண்டியது கௌரவம்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

தன் ஆட்சி காலத்தில் கட்சி சின்னமான யானையை மாநிலம் எங்கும் பிரமாண்டமாக உருவாக்கினார்.

தன் உடையிலேயே தான் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்று நிரூபிக்க ஆரம்பித்தார். விலை உயர்ந்த ஆடைகளை அணிய ஆரம்பித்தார். விலை உயர்ந்த நகைகளை அணிய ஆரம்பித்தார். ஏன் மேல் குடிமக்கள் தான் அவற்றை அணிய வேண்டுமா? நாங்கள் அணியக் கூடாதா  என்ற கேள்வி அதில் மறைந்து இருந்தது.

இன்று எல்லா கட்சிகளையும் விட பகுஜன் சமாஜ் கட்சிதான் 650 கோடி ரூபாய் வங்கி டிபாசிட் வைத்திருக்கிறது. அடுத்துதான் சமாஜ்வாதி கட்சியும் தெலுகு தேசம் , காங்கிரஸ், பாஜக கட்சிகள்.

இந்நிலையில் சஹ்ரான்புரில் நடந்த மெகா கூட்டணி கூட்டத்தில் மாயாவதியும் அஜித்சிங்கும் அகிலேஷ் யாதவும் வருகை தந்தார்கள். அப்போது மாயாவதி மேடையில் ஏறியபின் பின்னால் வந்த அஜித்சிங்கை ஷூ வை கழற்றும் படி பிஎஸ்பி கட்சியின் நிர்வாகி ஒருவர் கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் தன் ஷூவை கழற்றினார் அஜித்சிங். இதுபற்றி லோக் தள கட்சியின் நிர்வாகி கூறும்போது மேடையை அஜீத்சிங் புனிதமாக கருதுவதால் ஷூவை கழற்றியதாக சொன்னார்.

உபி யில் மரியாதை தருவதற்காக ஷூவை கழற்றுவது வழக்கம்.

தான் முதல் அமைச்சராக இருந்த போது மாயாவதி தன்னை சந்திக்க வரும் அதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் ஷூ அணிந்து வந்து சந்திக்க அனுமதித்த தில்லை என்பது வரலாறு. யாரும் அதை பிரச்னை ஆக்கியது இல்லை என்பதும் வரலாறு.   

அதற்கு அவர் சொன்ன காரணம் தனக்கு தூசு அலெர்ஜி என்பது. அதற்காக மற்றவர் ஷூ அணிந்து வருவது எப்படி தூசு பரப்புவது ஆகும் என்பதை யாரும் ஆராய்ந்ததில்லை.

வரலாறு திரும்புகிறது.

குட்கா தடையை ஒவ்வொரு ஆண்டும் நீடிக்கும் மர்மம் என்ன??!!

குட்கா பான் மசாலா பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அந்த ஆணை ஒவ்வொரு ஆண்டும் நீடிக்கப்படுவது குறித்து நிரந்தர தடை பிறப்பிக்க நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் ஒருவர்.

பேரம் பேசுவதற்கு அல்லாமல் வேறு எதற்கு இந்த ஒவ்வொரு ஆண்டு தடை?

இதற்கெல்லாம் கூட நீதிமன்றம் சென்றுதான் தீர்வு  காண வேண்டுமா?

அரசு தானாக செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. ஒரு வேண்டுகோள் வந்தபிறகு கூட சரி நிரந்தரமாக தடை செய்கிறோம்  என்று உத்தரவிட் என்ன தயக்கம்.?

அரசு மக்களின் கோரிக்கைகளை மனிதாபிமானத்துடன் பரிசீலித்து நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் பாதி வழக்குகள் முடிவுக்கு வந்து விடும். 

விஜயபாஸ்கரும் ராஜேந்திரனும் எந்த அளவு இதில் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பது இன்னும் விசாரணை முடியவில்லை.

யார் பதில் சொல்வார்கள்?

ராமதாசை வைத்துக்கொண்டே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற நிதின் கட்கரி??!!

சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து எல்லாருடனுடம் சேர்ந்து வழக்குப் போட்டவர் அன்புமணி ராமதாஸ்.

சென்னை உயர் நீதிமன்றம் அந்த திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியதும் உச்ச நீதிமன்றம் சென்று மேன்முறையீடு செய்தால் எனைக் கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என்று கேவியட் போட்டவர் அன்புமணி.

எங்களால் தான் எட்டு வழி சாலை திட்டம் ரத்தானது என்று விவசாயிகளிடம் தம்பட்டம் அடித்துக் கொண்டது பாமக.

ஏன் முதல்வர் பழனிசாமி கூட சாலை வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து ஆனால் உயர்நீதி மன்றம் வேண்டாம் என்று சொல்லி விட்டால் நாங்கள் நீதிமன்ற உத்தரவை மதித்து நடப்போம் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் சேலம் வந்த மத்திய மந்திரி நிதின் கட்கரி விவசாயிகளுடன் கலந்து பேசி சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டம் நிறைவேற்றப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

அப்போது பக்கத்தில் இருந்த மருத்துவர் ராமதாசோ முதல்வர் எடப்பாடியோ  எந்தவித மறுப்பும் சொல்லவில்லை விளக்கமும் சொல்லவில்லை.

இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் பாஜக கூட்டணி என்பது முன்பே தெரியும்தான் என்றாலும் மருத்துவர் ராமதாஸ் காட்டிய மௌனம் அவரது இமேஜை ரொம்பவே டேமேஜ் செய்து விட்டது.

ஓட்டுக்கு ரூபாய் 300 விநியோகம் தொடங்கியது? தடுக்குமா தேர்தல் ஆணையம்?

எதிர்பார்த்ததை போலவே தமிழ்நாட்டின் பல இடங்களிலும் ஓட்டுக்கு ரூபாய் 300  விநியோகம் தொடங்கி விட்டதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன.

இதில் எந்த அளவு உண்மை என்பதை தேர்தல் ஆணையம்தான் உறுதிபடுத்த வேண்டும்.

எல்லாம் முடிந்தபிறகு எங்களால் பண விநியோகக்தை தடுக்க முடியவில்லை என்று அறிக்கை வெளியிடுவதால் எந்த பயனும் இல்லை.

ஜெயலலிதா பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதை நிரூபிக்க முடியவில்லை.

ஆனால் 2016ல் திமுகவினரிடம் இருந்து 1% வித்தியாசத்தில் வெற்றியை தட்டிப் பறிக்க தமிழ்நாடு முழுதும் அதிமுக வேட்பாளர்களுக்கு 650 கோடிக்கும் மேலான ஊழல் பணத்தை எஸ் ஆர் எஸ் மைனிங் என்ற கம்பெனி மூலம் விநியோகம் செய்துள்ளதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் வருமான வரித்துரையிடம் கிடைத்துள்ளதாக இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஆதாரமாக ஆங்கில இதழ் ஒன்று வெளியிட்டிருக்கும் தகவல்களை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

எல்லா தகவல்களையும் 9.5.2017 அன்றே வருமான வரித்துறையின் முதன்மை இயக்குனர் அத்துறையின் டைரக்டர் ஜெனரலுக்கு அனுப்பி அதை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி கேட்டிருக்கிறார்.

ஆனால் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதெல்லாம் இதுவரை வெளிவராத மர்மங்களாகவே இருக்கின்றன.

எனவே இப்போது வெளிவரும் செய்திகளை வெறும் வதந்திகள் என்று புறந்தள்ளி விடமுடியாது.

பொதுமக்கள் கண்காணிப்பும் வேண்டும். அதிகாரிகளின் கண்டிப்பான நடவடிக்கையும் வேண்டும் .

            ஓட்டுக்குப் பணம் என்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விடும்.  வரும் மூன்று நாட்கள் தமிழர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நாட்கள் என்பதால் எச்சரிக்கை தேவை என்பதை பொதுமேடை கவலையுடன் பதிவு செய்கிறது.

தனக்கு தானே குழி தோண்டிக்கொண்ட பாஜக-வின் தேர்தல் அறிக்கை..

இவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையை சுத்தமாக துடைத்து விட்டது பாஜக வின் தேர்தல் அறிக்கை.

கூட்டுத் தலைமையை ஒழித்து விட்ட நரேந்திர மோடி இப்போது அதன் மீதான நம்பிக்கையையும் ஒழித்துவிட்டார்.

நடுநிலையாளர்கள் ஏற்றுக் கொள்ளவே முடியாத சனாதன கருத்துக்களை மீண்டும் உறுதிபடுத்தி இருக்கிறது பாஜக.

அரசியல் சட்டத்தின் 370 மற்றும் 35 A பிரிவுகள் மாற்றப்பட்டு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை பறிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது பாஜக. அதை மீண்டும் உறுதி படுத்தி இருக்கிறது தேர்தல் அறிக்கை.

பொதுசிவில்சட்டம் கொண்டு வருவோம் என்கிறது அறிக்கை. தனிவாழ்க்கையில் கூட தங்கள் மதப்படியான உரிமைகளை மக்கள்  இழக்க வேண்டும் என்கிறது. குழப்பத்தையும் எதிர்ப்பையும் தான் இது ஏற்படுத்தும்.

அனைத்து பள்ளிகளிலும் சமஸ்க்ரிதம் கற்பித்தல் விரிவாக்கம் செய்யப்படும் பிரபலப் படுத்தப் படும். சமஸ்கிருத ஆராய்ச்சியை வளர்த்தெடுக்கும் நோக்கில் ஆராய்சியாளர்கள் மற்றும் புலவர்கள் 100 பேருக்கு பாணினி பெயரில் பண நல்கையுடன் கூடிய அங்கீகாரம் வழங்கப்படும் என்கிறது அறிக்கை. என் மற்ற மொழிகள் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதி பயன்படுத்தப்பட கூடாதா அதற்கு உரிய தகுதி மற்ற மொழிகளுக்கு இல்லையா என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.    சமஸ்கிருதம் வழக்கொழிந்துபோய் மற்ற எல்லா மொழிகளிலும் இரண்டறக் கலந்து விட்டது. அதைத் தனிமைப் படுத்தி தனி உருவம் கொடுக்கும் வேலை வேண்டாத வேலை. அதில்  முனைப்பாக இருக்கிறது பாஜக. மற்ற மொழிக்காரர்கள் மத்தியில் வெறுப்பை வளர்க்கும் வேலை இது.

வேலை வாய்ப்புக்கு எந்த வாக்குறுதியும் இல்லை.

அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு விலக்கு, இந்தி மொழி திணிப்பு நிறுத்தம், கேபிள் கட்டண குறைப்பு, தமிழ் வளர்ச்சி திட்டங்கள் என இருந்தவற்றிற்கு மாறாக பாஜக தேர்தல் அறிக்கை இருப்பதை யாரும் விளக்குவதற்கு முன் வரவில்லை.

    இந்தியாவை ஒற்றைக் கலாச்சார நாடாக மாற்றிடத் துடிக்கும் வெறிதான் பாஜக வின் தேர்தல் அறிக்கையில் தெரிகிறது. 

இவர்கள் கையில் நாடு போனால் என்னவாகும் மாநில உரிமைகள் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

நல்லவேளை தேர்தலுக்கு முன்பாகவே தங்களை அடையாளப் படுத்திக் கொண்டார்களே.

ஆங்கிலதிலும் இந்தியிலும் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கை  மற்ற மாநில மக்களுக்கு அவரவர் மொழிகளில் தரப்பட தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து தங்களை நன்றாக மீண்டும் அடையாள படுத்திக்கொண்டிருகிறது பாஜக .

மொத்தத்தில் தனக்கு தானே குழி தோண்டிக் கொண்டு விட்டது பாஜக தனது தேர்தல் அறிக்கை மூலமாகவே??!!