Home Blog Page 43

நாங்கள் சொல்வதை கேட்க வைப்போம்; அதிமுகவை மிரட்டிய பியுஷ் கோயல்?

நீட் தேர்வு பிரச்னையில் நாங்கள் சொல்வதை கேட்க வைப்போம் என்று  பாஜக-வின் அமைச்சர் பியுஷ் கோயல் சென்னையில் பேட்டி கொடுக்கிறார்.

மறுத்து பேசத்தான் அதிமுக-வில் ஆள் இல்லை.

தேர்தல் நேரத்திலேயே இப்படி மிரட்டுகிறார்களே? சாதாரண காலத்தில் எப்படி மிரட்டுவார்கள்.!

அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் விலக்கு வாங்கிக் தருவோம் என்று உறுதியளித்திருந்தது.

சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்ட மசோதா என்னவாயிற்று என்று சொல்லக் கூட அதிமுக அமைச்சர்களுக்கு முடிய வில்லை.

நீட் தேர்வு என்பது எத்தனை பேர் தேர்வாகிறார்கள் என்பது முக்கியம் அல்ல.

என்ன பாடத் திட்டத்தில் தேர்வு நடத்தப் படுகிறது என்பதுதான் முக்கியம்.

என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, சிஒபீஸ்இ மற்றும் மாநில பாடத் திட்டங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் கலந்து நீட் பாடத்திட்டம் என்று ஒன்றை அறிவித்தாலும் அதை எப்போது அறிவிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். 

              ஆண்டு முழுதும் பயிலும் பாடத் திட்டம் ஒன்று.  நீட்டில்கேட்கப்படும் பாடத்திட்டம் வேறொன்று என்றால் அது அயோக்கியத்தனம் இல்லையா?

அத்தகைய அகில இந்திய தேர்வு நமக்கு எதற்கு?

கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தால் இந்த கொடுமை  நிகழாதல்லவா?

இப்படி காட்டிக் கொடுக்கும் ஆட்சியாளர்கள் இருந்தால் நமது உரிமைகளை எப்படி பாதுகாக்க முடியும்?

மாநில உரிமைகளை உயர்த்திப் பிடித்த ராகுல் காந்தி??!!

கிருஷ்ணகிரியில் சேலத்தில், தேனியில் மதுரையில் என நான்கு இடங்களில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.

மாநில உரிமைகளை அடக்கி வைக்க முனையும் பாஜக எங்கே? மாநில உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் ராகுல் எங்கே என்று மக்கள் வியக்கும் வண்ணம் அவரது பேச்சு இருந்தது.

ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்பதே பாஜகவின் கொள்கை.

இதற்கு மாறாக இந்தியா பலவித கலாச்சாரங்களை கொண்ட அற்புதமான நாடு என்றார் ராகுல். அதுதானே உண்மை. ஆனால் அதை ஒப்புக்கொள்ள பாஜக என்றுமே தயாராக இருந்ததில்லை.

பாஜக அதிமுகவை அடிமைப் படுத்தி வைத்திருப்பதை சுட்டிக் காட்டி தமிழக மக்களை ஒருபோதும் அடிமைப்படுத்திவிட முடியாது என்றார்.

ஜிஎஸ்டி-யால் தொழில்கள் அழிந்ததை சுட்டிக்காட்டி அதை மறு சீரமைப்பு செய்வோம் என்றார். விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் ரயில்வேக்கு தனி பட்ஜெட், என்று உறுதியளித்த ராகுல் தமிழ்நாட்டை நாக்பூரில் இருந்து ஆள அனுமதிக்க மாட்டோம் என்றார்.

நீட் தேவையா என்பதை அந்தந்த மாநில மக்களே முடிவு செய்து கொள்வார்கள் என்று உறுதியளித்தார்.

மொத்தத்தில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை தந்த மகிழ்ச்சியை தமிழ்நாடு வந்த ராகுலின் பேச்சு இன்னும் உயர்த்திப் பிடித்து தமிழ் மக்களுக்கு ஒரு புது தெம்பையே அளித்து விட்டது.

Unity in Diversity -பன்முகத் தன்மையில் ஒற்றுமை என்பதன் உண்மையான பொருளை ராகுல் காந்தியின் பேச்சு வெளிப் படுத்தி விட்டது.

வலிமையான மாநிலங்கள் மட்டுமே வளமான பாரதத்தை உருவாக்க முடியும் என்ற உண்மையை பிரதி பலித்த ராகுல் காந்தியின் பேச்சு உண்மையிலேயே வரலாற்று சிறப்பு வாய்ந்ததுதான் !!!

ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வாய்ப்புள்ள 22 தொகுதி இடைத்தேர்தல்கள்??!

எடப்பாடி ஆட்சி தொடர, முடிந்த மட்டும் தேர்தல் கமிஷன் முயன்றது.

மார்ச் 10 தேதி தேர்தல் அறிவிப்பு கொடுத்தபோதே அப்போது காலியாக இருந்த 21 தொகுதிகளுக்கு பதிலாக 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தலை அறிவித்தது தேர்தல் கமிஷன்.

வழக்கு நிலுவையில் இருக்கிறது என்ற சொத்தை வாதத்தை வைத்து மற்ற மூன்று தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவிக்கவில்லை.

முன் உதாரணங்களாக பல தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே தேர்தலை நடத்தியதை கண்டுகொள்ளவில்லை.

திமுக தேர்தல் கமிஷனில் மனு கொடுத்து பயனில்லாமல் போகவே உச்ச நீதிமன்றத்தை அணுகியதும் நடத்துகிறோம் என்று பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது தேர்தல் கமிஷன்.

மார்ச் 21ம் தேதி சூலூர் கனகராஜ் இறந்ததும் வேறு வழியில்லாமல் இப்போது நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவித்துள்ளது .

இப்போதும் கூட மே 19 ம் தேதி என்பதால் அந்த நான்கு தொகுதிகளிலும் அமைச்சர் படை அங்கே வேலை செய்யும் வாய்ப்பை  அதிமுகவுக்கு  தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

திமுக அணிக்கு இப்போது 97 உறுப்பினர் ஆதரவு இருக்கிறது. இந்த 22 லும் வென்றுவிட்டால் ஆதரவு எண்ணிக்கை 119 ஆகி ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.

தினகரன் வேறு தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாறும் என்று ஆரூடம் கூறி வருகிறார். அது என்ன கணக்கில் என்று அவருக்குத்தான் தெரியும்.

இரண்டு அணிகளும் ஒன்று சேரப் போகிறார்களா?

கருத்துக் கணிப்பில் எல்லா தொகுதிகளிலும் தினகரன் மூன்றாவது இடத்தை பெறுவார் என்று சொல்கிறார்கள். அவரால் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்றால் அதிமுக வினர்தான். ஆர்கே நகர் ஒரு விதிவிலக்கு. அது ஒருபோதும் விதியாக முடியாது.

அதிக பட்சம் விஜயகாந்த்தை போல் தனித்து போட்டியிட்டு 8.33 % -10.1% வாக்குகளை வாங்கி தன்னை அசைக்க முடியாத சக்தியாக ஒருவேளை உருவாக்கிக்  கொள்ளலாம். அதற்கு மேல் வாங்கினால் ஒருவேளை அதிமுக அணிகள் இணைப்பிற்கு அது வழி கோலலாம்.

பெரும்பான்மை பெற தேவையான தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வில்லை என்றால் என்ன செய்யப் போகிறார்கள்.? தினகரனுடன் ஒட்டிக கொள்வார்களா?    சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா?

பாஜகவுடன் இரண்டற கலந்துவிட்ட இபிஎஸ் – ஒபிஎஸ் எங்கே? தன் வாழ்நாளில் பாஜக-வுடன் இனி ஒட்டுறவு இல்லை என அறிவித்து விட்ட தினகரன் எங்கே?

ஒருவேளை இடைதேர்தல் வெற்றிகள் பலருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டால் கூட மாற்றம் வரும் வாய்ப்பு குறையப் போவதில்லை. 

மக்கள்  தீர்ப்பு இபிஎஸ் – ஒபிஎஸ் அணிக்கு முழுவதும் சாதகமாக இல்லாமல் தினகரன் அறுபது லட்சம் ஓட்டுகளுக்கு மேல் பெற்று விட்டாலே அந்த அணியில் பிளவு தவிர்க்க முடியாதது ஆகிவிடும். அதைத்தான் தினகரன் எதிர்பார்க்கிறார்.  அப்போதும் காட்சி  மாற்றம் ஏற்படும். அது என்ன என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகுதான் தெரிய வரும்.

எல்லாற்றுக்கும் மேலாக மத்தியில் மோடி இல்லை என்றாலே இங்கே இபிஎஸ் -ஒபிஎஸ் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள தயங்க மாட்டார்கள்.

அதற்கும் எண்ணிக்கை வேண்டுமே? மத்தியில் ஆதரவு இருந்து இங்கே பெரும்பான்மை இல்லை என்றாலும் மத்தியில் ஆதரவு இருந்து இங்கே இழுபறி என்றாலும் ஆட்சி தொடர்வது முடியாதது ஆகிவிடும்.

குறைந்த பட்சம் பத்து தொகுதிகளில் அதிமுக வென்றால் மட்டுமே ஆட்சி நீடிக்க முடியும்.

அதற்கு வாய்ப்பே இல்லை.

அம்பேத்கர் பெயரில் பல்கலைக்கழகம் – 72 ஆண்டுகளாக இட ஒதுக்கீடுதான் இல்லை??!

சட்ட மேதை அம்பேத்கரின் பெயரில் சட்ட பல்கலைகழகம் இயங்கி வருகிறது.

ஆனால் இங்கு கடந்த 72 ஆண்டுகளாக ஒரு மலைவாழ் மக்கள் கூட உதவி பேராசிரியர் ஆக நியமிக்கப்பட்டதில்லை என்ற உண்மை சென்னை உயர் நீதிமன்ற வழக்கின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிற்பட்ட, மிக பிற்பட்ட, பட்டியல் வகுப்பு பிரிவினருக்கு இட இதுக்கீடு தந்து 186 உதவி பேராசிரியர் இடங்களுக்கு ஆசிரியர் பயிற்சி கழகம் வெளியிட்ட அறிவிப்பை, மலைவாழ் மக்களுக்கு இடம் தராத காரணத்தால், உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

எப்படி இந்த முறைகேடு இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளப் பட வில்லை?

இத்தனைக்கும் தேசிய பட்டியல் வகுப்பினர் கமிஷன் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு இதனை எல்லாம் ஆராய நேரம் இல்லை.

ஆக இதனால் என்ன தெரிகிறது என்றால் எந்த சட்டமும் அதற்கு உருவகம் கொடுக்கப்படவில்லை என்றால் அது இருப்பதில் பயன் இல்லை. வெறும் ஏட்டில் இருந்து என்ன பயன்.?

ஏதோ அப்போதைக்கப்போது நீதி மன்றங்கள் இந்த தவறுகளை சுட்டிக் காட்டுவதால் தவறுகள் நிவர்த்தி  செய்யப் படுகின்றன.

இன்னும் பல அநியாயங்கள் நீதிமன்றங்களின் கடைக்கண் பார்வைக்காக காத்துக் கிடக்கின்றன.

குருமூர்த்தி வலையில் வீரமணி விழலாமா??!!

பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தமிழ் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்திய சம்பவங்கள்.

கடுமையான தண்டனை மட்டுமே இந்த இழிவை போக்கும்.

எல்லாரும் சேர்ந்து ஒரு தீர்வை காண வேண்டிய நேரத்தில் அதை அரசியலாக்குவதோ சந்தடி சாக்கில் எதிரிகளை குறிவைத்து பேசுவதோ மிக மட்டமான செயல்.

அதைத்தான் ஆடிட்டர் குருமூர்த்தி செய்திருக்கிறார்.

தனது துக்ளக் இதழில் அதற்கான சதியை அரங்கேற்றுகிறார்.

“தமிழகத்தில் பெண்கள் இழிவு படுத்தப் படுவதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். பெரியார்தான் காரணம். எனவே அவரது கருத்தாக்கத்தை தமிழ்நாட்டில் அகற்றினால்தான் இங்கே பெண்கள் புனர் வாழ்வு பெற முடியும்” என்ற கருத்தில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

அதில் பெரியார் படத்தையும் போட்டிருக்கிறார்.

இது தேர்தல் நேரம். பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. திமுக அணி வெற்றி பெறும் சூழல் நிலவுகிறது.

இதை சகித்துக் கொள்ள முடியாமல் குருமூர்த்தி கும்பல் சாதி மத சண்டையை தூண்டி விடும் நோக்கில் பெண்கள் இழிவு படுத்தப்பட திராவிட இயக்கங்கள் தான் காரணம் என்றால் திராவிட இயக்கங்கள் இந்து மதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் அதை வைத்து இந்து மத வெறியை தூண்டி அரசியல் ஆதாயம் காணலாம் என்பதுதான் குருமூர்த்தியின் திட்டமாக இருக்க வேண்டும்.

பெரியாரை குருமூர்த்தி இழிவு படுத்திய காரணத்தால் கி.வீரமணி அவர்கள் பதில் சொல்லும் விதத்தில் பெரியார் என்னென்ன சொன்னார் என்பதை பட்டியல் இட்டு யார் பெண்களை இழிவு படுத்துகிறவர்கள் என்பதை மக்களே முடிவு செய்யுங்கள் என்று பேட்டி கொடுக்கிறார்.

கி .வீரமணி சொன்னதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இந்து மத வெறியர்கள்  பெரியாரையும் வீரமணியையும் திராவிட இயக்கத்தையும் தாக்கி மிக மோசமாக பேட்டி கொடுக்கிறார்கள். பதிவு இடுகிறார்கள். அதில் வீரமணியை சாரங்கபாணி கோனார் என்றும் ராமசாமி நாயக்கர், என்றும் அவன் இவன் என்றும் தங்க ள்  தகுதியை வெளிக்காட்டு கிறார்கள்.

இப்படி பேசுகிறவர்கள் மீது வழக்கில்லை. வீரமணி மீது மட்டும் வழக்கு பதிவு செய்கிறது காவல் துறை.

நாடெங்கும் இருக்கும் பெரியார் சிலைகள் அவர்கள் கண்களை உறுத்துகின்றன.

தமிழ்நாட்டில் நிலவும் விழிப்புணர்வு அவர்களை எரிச்சல் அடைய செய்கிறது.

அதனால் எல்லா பார்ப்பனர்களும் ஒன்று  சேர்ந்து அதிகாரத்தை பயன்படுத்தி சுய மரியாதை இயக்கத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

வீரமணி மேற்கொள் காட்டியிருக்கும் ஆபாசமான புராண கதைகளில் உள்ளவற்றை படித்துதான் இளைஞர்கள் கெட்டுப் போய் விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்வதில் என்ன தவறு? புராணங்களில் ஆபாசம் இருக்கிறதா இல்லையா?

அவற்றை பிறகு பார்ப்போம்.

ஆனாலும் திரு.கி. வீரமணி அவர்கள் இந்த விளக்கத்தை ஒரு பதினைந்து நாட்கள் தள்ளிப் போட்டிருக்கக் கூடாதா? பிறகு வட்டியும் முதலுமாக திருப்பி பிரச்சாரம் செய்திருக்கலாமே?

இப்போது தேவையில்லாமல் மூளைகெட்டுப்போன சில தமிழர்களை வைத்து தமிழர்களுக்குள் பேதம் ஏற்படுத்த ஒரு வாய்ப்பு தந்திருக்க வேண்டாமே?

இதை எதிர்பார்த்து தானே அவர்கள் இந்த ஆயுதத்தை கையில் எடுத்தார்கள்?  தேர்தலுக்காக மெளனமாக இருக்க வேண்டியதில்லை. தகுந்த முறையில் மறுப்பை வெளியிட்டு விட்டு விளக்க கூட்டங்களுக்கு தயார் ஆகி இருக்கலாமே?

புராண கதைகளில் ஆபாசம் உள்ளதா இல்லையா என்பதை அடுத்து பார்ப்போம்??!!

நீதி மன்றத்தில் போலி அறிக்கை தாக்கல் செய்த தேர்வாணைய ஆலோசகர்??!!

ஊழல் செய்வதற்கும் எல்லை இல்லை என்றாகிவிட்டது.

படித்தவர்கள் கூட நீதிமன்றத்தை மதிப்பதில்லை என்பது மட்டுமல்ல கொஞ்சம் கூட பயமே இல்லாமல் நீதிமன்றத்தில் போலி அறிக்கை தாக்கல் செய்த தேர்வாணைய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தமிழக விரல் ரேகை பிரிவு துணை ஆய்வாளர் பணிக்காக தமிழ்நாடு சீருடை  பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. அதில் கலந்து கொண்ட ஒருவர் கணிதம் தொடர்பான கேள்விக்கு மதிப்பெண் வழங்கவில்லை என்பதற்காக வழக்கு தொடர்கிறார். பதில் தவறு என்பது தேர்வாணையத்தின் நிலை.

நீதிமன்றத்தில் ஐஐடி யில் பணியாற்றும் டி மூர்த்தி என்பவரிடம் பதில் தவறு என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதின் அடிப்படையில் வழக்கை தள்ளுபடி செய்கிறது நீதிமன்றம்.

supreme courtமேல்முறையீட்டில் டி மூர்த்தி என்பவர் ஐஐடி யில் பணியாற்றவே இல்லை என்று வாதிடப்பட்டது. விசாரணையில் தேர்வாணையத்தின் ஆலோசகர் ஜிவி குமார்  என்பவர் டி மூர்த்தி என்பவருடன் சேர்ந்து கொண்டு தேர்வானையத்தை ஏமாற்றியது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு குமார் கைதாகி மூர்த்தி தேடப்பட்டு வருகிறார்.

படித்தவர்கள் செய்த வேலையை பார்த்தீர்களா??!! இப்படிப்பட்டவர்கள் செய்யும் மோசடிகளால் எத்தனை தகுதி பெற்றவர்கள் வாய்ப்புகளை இழந்தார்களோ ?

மிகக் கடுமையான தண்டனை மட்டுமே இத்தகைய குற்றங்களை தடுக்கும்.

முதல் அமைச்சர் வாகன அணிவகுப்பில் பறிமுதல் செய்யப்பட்ட 1.8 கோடி ரூபாய்??!!

பிரதமர் மோடி அருணாச்சல் பிரதேசத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய செல்கிறார்.

அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்க அந்த மாநில முதல் அமைச்சர் பீமா காண்டு ஒரு வாகன அணிவகுப்பில் செல்கிறார். ஒரு காரில் செய்யப்பட்ட சோதனையில் ரூபாய் 1.8 கோடி பறிமுதல் செய்யப்படுகிறது.

காரில் வந்தவர்கள் தங்கள் உறவினர்கள் ஒரு வேலைக்காக இந்த பணத்தை கொடுத்ததாக கூறினார்கள்.

எந்த வேலையாக இருந்தாலும் அவர்கள் ஏன் நள்ளிரவில் அந்த பணத்தை முதல்வரின் வாகன அணிவகுப்பில் எடுத்து செல்ல வேண்டும்? அதுவும் தேர்தல் நேரத்தில்!!

தமிழகத்தில் காவல் துறையின் பாதுகாப்போடு அதிமுக வினரின் தேர்தல் செலவுப் பணம் கடத்தப் படுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார்.

பாஜக கூட்டணியில்  இருந்தால் எதையும் செய்யலாம் என்பதை அருணாச்சல பிரதேச சம்பவம் நிருபித்து இருக்கிறது.

காங்கிரஸ் புகார் செய்ய இருக்கிறது. என்ன செய்யப் போகிறது தேர்தல் கமிஷன் ???!!

சுப்பிரமணிய சாமி மகள் சுகாசினி ஹைதர் இந்துவா முஸ்லிமா??!!

சுப்பிரமணிய சாமிக்கு கீதாஞ்சலி சுவாமி என்றும் சுகாசினி ஹைதர் என்றும் இரு மகள்கள் உள்ளனர்.

இதில் சுகாசினி ஹைதர் என்ற முஸ்லிமை திருமணம் செய்து கொண்டு உள்ளார். அவர் இந்து பத்திரிகையில் நீண்ட காலமாக பணி புரிந்து வருவது தெரிந்ததே.

சமீபத்தில் சுகாசினி நரேந்திர மோடிக்கு யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மிக உயர்ந்த சிவில் விருதான ‘சயீத்’ என்ற பரிசை வழங்கி கவுரவித்திருக்கிறது.

அங்கே ஒரு இந்து கோவிலுக்கு அவர் அடிக்கல் நாட்டப்போவதாகவும் தகவல்.

இதற்கிடையே மோடி அப்படி என்ன செய்து விட்டார் என சுகாசினி பதிவு  இட்டதாகவும் அதற்கு பதில் அடியாக மற்றொருவர் ‘இந்த மதம் மாறிய பெண்ணுக்கு ஏன் இந்த இந்து விரோதம்?’ என்று பதிவிட்டார்.

அதற்கு பதில் கொடுத்து சுப்பிரமணிய சாமி ‘என் மகள் மதம் மாறவில்லை. ஒன்று உனக்கு புத்தி பேதலித்து இருக்க வேண்டும். அல்லது முட்டாளாக இருக்க வேண்டும் ‘ என்று பதிவிட்டுள்ளார்.

மகள் முஸ்லிமை திருமணம் செய்ததை  மறுக்காத சுப்பிரமணிய சாமி மதம் மாற வில்லை என்கிறார். உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் எது செய்தாலும் தப்பில்லை. 

தமிழர் வரலாற்றை மறைக்க முயன்ற மத்திய அரசின் சதி நீதிமன்ற தலையீட்டில் வெளிவந்தது??!!

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுத்த பொருள் கி மு.. 905ம் ஆண்டை சேர்ந்தது என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு தகவல் தந்தது.

இது எப்படி மத்திய அரசு செய்த சதியாகும் ?

கீழடி அகழாய்வில் சிறப்பாக பணி செய்து உண்மைகளை வெளிக்கொணர காரணமாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாமுக்கு மாற்றிய மத்திய அரசு என்ன காரணம் கூறியது? அப்போதே இது பற்றி எல்லா இதழ்களும் எழுதின.

இப்போதும் கூட மத்திய அரசு தானாக இந்த உண்மையை வெளியிட்டதா?

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்

“ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடம்.  அங்கிருந்து 15 கி மீ தூரத்தில்தான் பாண்டிய நாட்டின் தலைநகரம் கொற்கை அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. இதனால் 2004 ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான பழங்கால பொருட்களும் கண்டு எடுக்கப்பட்டன.  அங்கு இதுவரை 4 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. அதன் அறிக்கை தற்போது வரை வெளியிடப் பட வில்லை. எனவே ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிடவும் அங்கு மீண்டும் அகழாய்வு நடத்தவும் கண்டெடுக்கப் பட்ட பழங்கால பொருட்களை அங்கேயே காட்சிப் படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அகழாய்வில் கண்டடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பும் படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பேரில் அந்த பொருட்களின் மாதிரி தொல்லியல் துறை சார்பில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போதுதான் மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராகி,

“பரிசோதனை முடிவுகள் படி ஒரு பொருள் கி.மு. 905ம் ஆண்டையும் மற்றொன்று கி.மு.791 ம் ஆண்டையும் சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை தயாரித்து வழங்க கால அவகாசம் வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.

அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கி மு.395ம் ஆண்டு காலத்தை சேர்ந்தவை என்றும் தெரிவித்தார்.

அப்போது மனுதாரின் வழக்கறிஞர் திண்டுக்கல் பாடியூரில் தொல்லியல் துறைக்கு  சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் பள்ளியாக உள்ளது. பழனி ரவிமங்கலத்தில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் உள்ளன. இது பற்றியும் ஆய்வு நடத்த வேண்டும் என்றார்.

இதுபற்றி ஆய்வு மேற்கொள்ள வேண்டியது  மாநில அரசா மத்திய அரசா என்று  கேட்டு வழக்கை உயர்நீதி மன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.

கொடுமை என்னவென்றால் மத்திய தொல்லியல் துறை தனக்கு இந்த தடயங்கள்/சான்றுகள் கிடைத்து பல ஆண்டுகளாக ஏன் கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப வில்லை  என்பதையும் அதற்காக பல அறிவுஜீவிகளும் வரலாற்று ஆய்வாளர்களும் முயற்சித்தும் அது நடை பெற வில்லை  என்பதையும் நீதி மன்றம் பதிவு செய்தது.

2003ல் எடுக்கப்பட்ட சான்றுகள் இரண்டு. அவற்றில் ஒன்று கி.மு.696-540  ஆண்டுகளுக்கு முற்பட்டவை அதாவது சுமார் 2645-2489  ஆண்டுகளுக்கு முந்தியவை  மற்றொன்று கி.மு. 791-701 ஆண்டுகளுக்கு முற்பட்டவை அதாவது சுமார் 2740-2650 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

பதினாறு ஆண்டுகளாக பரிசோதனைக்கு உட்படுத்தப் படாததற்கு பெயர் சதி இல்லாமல் வேறென்ன? 

ராணுவத்தை மோடியின் சேனை என்பவர்கள் துரோகிகள்; பாஜக வேட்பாளர் வி கே சிங் ??!!

சில நாட்களுக்கு முன்பே உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று பேசியிருந்தார்.

அது தொடர்பாக அவருக்கு தேர்தல் ஆணையமும் அறிவிப்பு அனுப்பி விளக்கம் கோரியிருக்கிறது.

இந்நிலையில் காசியாபாத் தொகுதி பாஜக வேட்பாளரும் முன்னாள் ராணுவ தலைவரும் மத்திய அமைச்சருமான வி கே சிங் ” இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று சொல்லுவது தவறு மட்டுமல்ல சொல்பவர்கள் நாட்டுக்கு விரோதிகள் ” என்று சொல்லியிருக்கிறார்.

இது ஆதித்ய நாத்துக்கும் சிங்குக்கும் இடையே உள்ள பிளவை காட்டுகிறதா என்பது இனிமேல்தான் தெரியும்.

” ராணுவம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. எந்த சார்பும் இல்லாதது. யார் எப்படி பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் சிலர் மோடியின் பா ஜக தொண்டர்களை படையாக நினைத்து பேசியிருக்கலாம்.

ராணுவ வெற்றிகளை தன் வெற்றியாக பதிவு  செய்ய நினைத்த மோடிக்கும் இது சரியான பதிலடி.