Home Blog Page 53

வைகோ- திருமாவளவன் மோதல் பின்னணிகள்!!!

வைகோ -திருமாவளவன் மோதல்

வைகோவுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கும் மோதல் பின்னணிகள் எதுவாக இருந்தாலும் அது திமுக  கூட்டணி வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என்பதே கேள்வி!

விடுதலை சிறுத்தைகளின் வன்னியரசு திராவிட கட்சிகள் தலித்துகள் முன்னேற்றதுக்கு என்ன செய்தன என்று கேள்வி எழுப்பினால் அதற்கு வைகோவுக்கு மட்டும் கோபம வருவதில் பொருள் இல்லை.

அது திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் இடப்பட்ட கேள்வியாகவே பார்க்க வேண்டுமே அல்லாமல் அது வைகோவை நோக்கி வீசப் பட்ட கேள்வியாக கொள்ளக்கூடாது.

அதற்கு வைகோ கொஞ்சம் அதிகமாகவே பதில் கொடுத்து விட்டார். வன்னியரசுவின் கேள்வி தன்னை நோக்கி வீசப்பட்ட கேள்வி ஆகவே எடுத்துக் கொண்டு பதில் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

தலித் ஒருவரை தன் உதவியாளராக வைத்திருப்பதை ஒரு சாதனை ஆக வைகோ பார்க்க அதை சாதி ஆணவமாக வன்னியரசு பார்த்தார்.

பிறகு திருமாவளவன் தலையீட்டில் வன்னியரசு தன் பதிவை நீக்கிய பிறகும் வைகோ  ஏன் அதை பெரிதாக்கினார் என்பது புரியவில்லை.

எல்லாவற்றையும் விட தான் திருமாவளவனுக்கு ரூபாய் ஐம்பது லட்சம் தேர்தல் நிதியாக கொடுத்ததை வைகோ இப்போது வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு விடை இல்லை.

விடுதலை சிறுத்தைகளை அவமானப்படுத்திய இந்த செயல் இப்போதைக்கு இருவரையும் சமாதனப்படுத்தும் என்று தோன்றவில்லை.

வைகோவை திமுக அணியில் இருந்து வெளியேற்ற தீட்டப்பட்ட சதியின் வெளிப்பாடு இது என்றால் இதில் பலி ஆனவர் யார்.?

வன்னியரசு பதிவின் கீழே யார் இருந்தார் என்ற வைகோவின் கேள்விக்கு என்ன பொருள்? திருமா தூண்டித்தான் வன்னியரசு  இந்த பதிவை ஏற்றினார் என்று பொருள் ஆகிறது. இனி எப்படி இருவரும் ஓரணியில் இருந்து தேர்தலை எதிர் கொள்ள முடியும்?

இடையில் இந்த மோதலுக்கு முதல்வர் எடப்பாடி பழநிசாமியும் அமைச்சர் வேலுமணியும்தான் காரணம் என்று செய்திகள் வருகின்றன. அதாவது  திமுக கூட்டணியை  உடைத்து அதன் ஒரு பகுதியை தங்கள் கூட்டணியில் சேர்க்க முயற்சி.  அதில் பலியானவர் யார் எனது  இனிதான் தெரியும்.

வைகோவின் கடந்த கால வரலாறு அவர் எதற்கும் தயாரானவர் என்பதுதான்.

நிலையில்லா நிலைப்பாடுகளின் முதல்வர் அவர். உணர்ச்சி மிக்கவர் அல்லது  உணர்ச்சிகளை பயன்படுத்துபவர்.

இப்படி ஒரு நம்பிக்கை இல்லாத ஒருவரை நம்பி எந்த கூட்டணி தான் நிம்மதியாக போராட முடியும்?

வைகோ தன் வாதத் திறமையை தன் கூட்டணி கட்சிகளிடம் காட்டாமல் இருந்தால் போதும்.

மொத்தத்தில், மத்தியில் மத வாத மோடி அரசை வீழ்த்துவதற்கும் தமிழ்நாட்டில் எடப்பாடியின் ஊழல் அரசை வீழ்த்துவதற்கும் உறுதுணையாக இல்லாமல் எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கும் வேலைகளில் யார் ஈடு பட்டாலும் அவர்களை அடையாளம் கண்டு தமிழ் மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

மத மறுப்பு கடவுள் நம்பிக்கை இயக்கமே இன்றையத் தேவை !!!

உலகலாவிய அளவில் இன்று நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் அடிப்படையாக மதமே இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

பின் ஏன் மதத்தை கட்டி அழுகிறார்கள் மனிதர்கள்?

கடவுளை நம்பி வழிபடுவதில் எந்த மனிதர்களுக்கும் இடையே  எந்த கருத்து வேறுபாடும் பிரச்னையும் இல்லை. கடவுளை நம்பாதவர்கள் நம்பாமல் செயல்படுவதில் நம்பிக்கையாளர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

என் மதத்தை நீ நம்பு உன் மதம் உண்மையில்லை என்பதில்தான் பிரச்னை.

எந்த மதத்தையும் அதுவே சரி என்று நிரூப்பிப்பதில்தான் பிரச்னை.

யாரும் யாரையும் திருப்திப் படுத்த முடியாது. யாரும் தங்கள் நம்பிக்கையே உண்மை என்று நிரூபிக்கவும் முடியாது. வேண்டுமானால் அது தங்கள் அனுபவம் என்று சொல்லிக் கொள்ளலாம். அதை மற்றவர் நம்ப  வேண்டும் என்பது என்ன கட்டாயம்.?

ஆக நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையைப் பொறுத்தது என்பது  இறுதியானது.

இதில் ஏன் மற்றவனை ஒருவன் கட்டாயப்படுத்த வேண்டும்?

மதத்தை பரப்பும் உரிமையை கட்டுப்படுத்தினால் எல்லா பிரச்னை களுக்கும் ஒரு விடிவு ஏற்படும்.

அதற்குத் தேவை அரசியல் சட்டத்திருத்தம்.

நம் அரசியல் சட்டம் மதத்தை பரப்பும் உரிமையை வழங்கி இருக்கிறது. அதற்கு எந்த கட்டுப் பாடும் இல்லை. அதனால் எவர் வேண்டுமானாலும் தன் செல்வாக்கு அல்லது பண பலத்தை பயன்படுத்தி எவரை வேண்டுமானாலும் மதம் மாற்றலாம். ஆனால் அவர்கள் தங்கள் பலத்தை பயன்படுத்தி மற்றவரை தாங்களாகவே விரும்பி மதம் மாறுவதை போல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தலாம்.

இங்கேதான் பிரச்னை. மதம் மாறுவது விருப்பத்தின் பேராலா அல்லது புற காரணிகளின் அடிப்படையிலா என்பது விவாதத்துக்கு உரியதாகிறது.

ஒரு  கிறிஸ்தவன் ஒருபோதும் முஸ்லிம் ஆக மாட்டான். ஒரு முஸ்லிம் ஒரு போதும் கிறிஸ்தவன் ஆக மாட்டான். ஒரு பௌத்தன் ஒரு போதும் முஸ்லிம் ஆக மாட்டான்.  ஒரு ஜைனன் ஒரு  போதும் முஸ்லிம் ஆக மாட்டான். ஒரு சீக்கியன் ஒரு போதும் கிறிஸ்தவன் ஆக மாட்டான். ஒரு  இந்து  வேறு மதத்துக்கு மாற மாறமாட்டான்.

மதங்கள் எல்லாமே கடவுளை அடிப்படையாக் கொண்டிருந்தாலும் யார் அந்த கடவுள் என்பதில் தான் பிரச்னை.

நாம் கேட்கும் கேள்வி. கடவுள்  நம்பிக்கைக்கு மதம் தேவையா ?

மத அடையாளம் இல்லாமலேயே ஒருவன் கடவுள் நம்பிக்கையாளன் ஆக வாழ முடியாதா?

எல்லாக் கடவுளர்களையும் ஒரே சக்திதான் என்று நம்புபவன் ஏன் தன்னை நம்பிக்கையாளன் மதமற்றவன் என்று சொல்லிக் கொள்ள முடியாது என்பதுதான் பொது மேடை இன்று வைக்கும் கேள்வி?

விடை தேடுவோம் !!!

பெரிய கோவில் வளாகத்தை வணிக மையமாக்கிய ரவிசங்கர் கும்பல்?!

தஞ்சை பெரிய கோவில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப் படும் கோவில்.

யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரிய மையமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

அங்கே வாழும் கலை அமைப்பை நடத்தி  வரும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பெரியகோவில் வளாகத்தில்  ஆன்மிக பயிற்சி வகுப்பு நடத்தப் போவதாகவும் அதற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 3000  கட்டணம் என்றும் நிர்ணயித்து  சுமார்  300  பேர் பயன்படுத்துகிற வகையில் ஒரு பெரிய தடுப்பு பந்தல் அமைக்கப் பட்டுள்ளது.

பணக்கார்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் மட்டுமே ஆன்மிக தொண்டு செய்து வருபவர் ரவிசங்கர். சாமானியர் பக்கமே இவர் செல்ல மாட்டார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இதற்கு முன் பல இடங்களில் இது போன்று வகுப்புகள் நடத்தி சுற்றுச்சூழல் பாதிக்கக் கூடிய சம்பவங்களை  நடத்தியவர் என்று  பெயர் பெற்றவர்.  உச்ச நீதி மன்றம் இவருக்கு  சுற்று சூழலை கெடுத்ததற்காக ஆறு கோடி ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத் தக்கது.

இதற்கு மத்திய அரசின் தொல்லியல் துறை எப்படி அனுமதி  அளித்தது?

ரவிசங்கருக்கு தஞ்சாவூர் சொந்த ஊர் என்பதால் இங்கு நடத்த முடிவெடுத்ததாக மாவட்ட வளர்ச்சி குழு உறுப்பினர் கஸ்துரிரங்கன் கூறுகிறார். ஏன் அதை வேறு எங்கும் நடத்தக் கூடாதா?   கோவிலுக்குள் தான் நடத்த வேண்டுமா?

ravishankar-peria-kovil-1
ravishankar-peria-kovil

இதற்கு ஆட்சேபணை தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

பார்ப்பனர்கள் கோவில்களை தங்கள் விரும்பியவாறு பயன்படுத்துவார்கள். ஆனால் அதே உரிமையை மற்றவர்கள் பயன்படுத்த விட மாட்டார்கள்.

தனி நபர் ஒருவர் நடத்தும் நிகழ்ச்சி ஆன்மிகம் சம்பத்தப் பட்ட ஒன்றாகவே இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத ஒருவர் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தி விட அனுமதிப்பார்களா?

பெரிய கோவிலில் இன்னும் முழுவதுமாக எல்லா சிற்பங்களும் கண்டறியப் படவில்லை. எல்லா எழுத்துக்களும் முற்றாக எடுத்து எழுதப் படவில்லை.

தனியாரை உள்ளே அனுமதித்தால் அவர்கள் என்னென்ன செய்வார்கள் என்பதை கண்காணிக்க கூட போதுமான அலுவலர்கள் இல்லை.  ஏன் போதுமான பாதுகாப்பில்லாமல் தனியாரை உள்ளே அனுமதிக்க வேண்டும்?

இது தொடர்பான வழக்கு  பதியப் பட்டு மதுரைகிளை உயர்நீதிமன்றம் இன்று நிகழ்ச்சிக்கு  இடைக்கால தடை விதித்து அங்கே அமைக்கப் பட்ட பந்தல்களை பிரிக்க உத்தரவிட்டிருக்கிறது.

இந்து அறநிலையத் துறையும் சேர்ந்து கொண்டு இந்த அத்துமீறிய அனுமதியை வழங்கி இருப்பது  மிகவும் கண்டிக்கத் தக்கது.

174 வகை நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மறைவு ??!!

வேளாண்  விஞ்ஞானி நம்மாழ்வார் உடன் ஏற்பட்ட தொடர்பால் அவரது ஆணைக்கிணங்க தன்னை  மறைந்த நெல் ரகங்களை மீட்டெடுக்கும் வேலைகளிலும் இயற்கை விவசாய பண்ணைகளை அமைக்கும் பணிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டு 174 நெல் ரகங்களை மீட்டு எடுத்ததுடன்  2006 லிருந்து ஆண்டுதோறும் நெல் திருவிழாக்களை தொடர்ந்து நடத்தி சாதனை படைத்து திடீர்  மரணம் எய்திய நெல் ஜெயராமன் விவசாயிகள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்.

குறிப்பாக நெல் நெல் திருவிழாவிற்கு வரும் விவசாயிகளுக்கு ஒரு  கிலோ மீட்டெடுத்த விதைகளை கொடுத்து அடுத்த ஆண்டு வரும்போது இரண்டு கிலோவாக திருப்பி கொடுக்கும் முறையை ஏற்படுத்தி நெல் ரகங்கள் மறையாவண்ணம் திட்டம் ஏற்படுத்தியவர்.

குறிப்பாக மாப்பிளை சம்பா , யானைகவுனி, கருப்பு கவுனி, சீரக சம்பா, தூயமல்லி, குள்ளக்கார் , கிச்சடி சம்பா, உள்ளிட்ட ரகங்கள்,  தம்பதிகள் இல்லறம் நடத்த, குழந்தை நன்றாக வளர, சுக பிரசவம் பெற , தாய் பால் சுரக்க, சர்க்கரை நோய்க்கு மட்டுமல்லாமல் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற நோய்கள் குணமாக என்று பலவிதமான உடல் நலம் காக்கும் தன்மை வாய்ந்தவை என்பது நாம் தலை முறை தலைமுறையாக பேணி பாது காக்க வேண்டிய பணியாகும்.

இத்தகைய பணிகள் தொடர்ந்து  நடைபெற அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

ஏனென்றால் தனி மனிதர் பணிகள் ஏற்படுத்தும் பலன்கள் பரவலாக எல்லாரையும் சென்றடைய முடியாது.   அது  அரசால் தான் முடியும்.  அரசில் அத்தகைய நோக்கம் கொண்டோர் அமர வேண்டும்.

கட்டவே முடியாத அணைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது ஏன்?

மேகதாது அல்லது மெக்கேதாட்டு என்ற இடத்தில் காவிரி ஆற்றில் அணை கட்ட கர்நாடக அரசு அனுமதி கேட்டு அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய நீர்வள குழுமம் 22.11.2018 ல்  அனுமதி அளித்துள்ளது.

இது பச்சை அயோக்கியத்தனம்.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை அதன் தொடர்சியான உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு இரண்டும் அமுலில் இருக்கும் நிலையில்,

தமிழ்நாட்டு அரசுக்கு  காவிரியில் மேகதாதுவில் அணை கட்ட ஒப்புதல் இல்லை என்று அதன் சட்ட மன்றத்தில் 05.12.2014 , 27.03.2015  ஆகிய தேதிகளில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கின்ற நிலையில்  ,

மத்திய அரசிடம் கர்நாடக அரசு காவிரியில் இரண்டு  அணைகள் கட்ட அனுமதி  கேட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்து அது நிலுவையில்  இருக்கும் நிலையில் ,

மத்திய நீர்வள குழுமம் கர்நாடகத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க   அனுமதியளிக்க  உரிமை இருக்கிறதா என்பதே கேள்விக்கு உரியது என்ற நிலையில் ,

மத்திய அரசின் முடிவை வேறு எப்படி  விமர்சிப்பது?

காவிரி நடுவர் மன்ற ஆணையத்திற்கும் நீர் வள குழுமத்திற்கும்  ஹுசைன் ஒருவரே தலைவர்.   ஏன் ஆணையத்திற்கு ஆறுமாதமாக தலைவர் நியமிக்காமல் இருக்கிறீர்கள்?

அவர் குழுமத்தின் தலைவராக அனுமதி அளிக்கிறார் அவரே தான் தான் ஆணையத்தின் தலைவராக இறுதி முடிவு எடுப்பேன் என்கிறார்.   ஏன் இந்த கேலிக்கூத்து?

தெரிந்தே செய்பவர்கள் எப்படி திருந்துவார்கள்?   கர்நாடகத்தில் வெற்றிபெற வாய்ப்பு தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் மத்திய அரசின் இந்த பாரபட்ச முடிவுக்கு காரணம் .

சட்ட மன்ற தீர்மானம் பிரதமரை சந்திப்பது எல்லாம் பயன் தரும் என்று தோன்றவில்லை.

உச்ச நீதிமன்றம் ஒன்றே ஒரே நம்பிக்கை.

அதுவும் திட்ட அறிக்கைதானே தயாரிக்கிறார்கள் . அணை கட்டும் வேலையில் இறங்க வில்லையே பிறகு ஏன் ஆட்சேபிக்கிறீர்கள்  என்று கேட்டு விட்டால் நமக்கு போக்கிடம் இல்லை.   அப்படி கேட்குமா என்பது அமையும் அமர்வை பொறுத்து இருக்கிறது.

பொறுத்திருந்து  பார்ப்போம் ?

பாடத்திட்டத்தில் நாடார் சமூக இழிவை நீக்காத பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ராஜினாமா செய்வார்களா?!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நாடார் சமுதாயம் பற்றிய  சர்ச்சைக்குரிய பாடத்தை பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே தடை செய்து விட்டதாகவும் எனவே அது குறித்த போராட்டம் தேவையில்லை எனவும் டாக்டர் தமிழிசை சொல்கிறார்.

ஆனால் இன்று நாடார் சமுதாயம் பற்றிய பாடத்தை நீக்க வேண்டும் என்று கோரி  நாடார் சமுதாயம்  போராட்டம் நடத்துகிறது. அதில் எல்லாக் கட்சித் தலைவர்களும் பேசுகிறார்கள். உண்மை என்ன என்பதை நாடார் சமுதாய மக்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் தெளிவுபடுத்த வேண்டும்.

ஏன் என்றால்  போராட்டம் நடத்தியவர்களும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் மத்திய அரசுக்கு  எதிராக இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள். அரசியல் ரீதியாகவோ வேறு வகையிலோ ஆதாயம் அடையும் நோக்கில் இந்த போராட்டம் நடக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி தான் சொல்லி அதை செய்யவில்லை என்பதுதான் பிரச்சினையின்  அடித்தளம்.

tnpsc-question-paper-in-tamil
question-paper-in-tamil

அதை ஒப்புக் கொள்கிற மனோநிலை வேண்டுமானால் தமிழிசைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உலகத்திற்கு உண்மை தெரிய வேண்டும். அடுத்த ஆண்டு புதிதாக தயாரிக்கப்படும்  புத்தகத்தில் நாடார் சமுதாயத்தினர் ஆடை உடுத்தல் குறித்த பாடம் நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரை வருகிற 11-ஆம் தேதி டெல்லியில் சந்திக்க உள்ளதாக தமிழிசை சொல்லுகிறார். அப்படியானால் இதுவரை சர்ச்சைக்குரிய பாடம் நீக்கப்படாமல் தானே இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார் சமுதாயத்தினர் தோள் சேலை அணிவதற்கு தடை இருந்தது. அதை ரத்து செய்வதற்கு போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருந்தது. சமுதாயத்தில் இருந்த அந்த அவலம் தற்கால சமுதாயத்திற்கு தெரியக்கூடாது என்று நினைக்கிறார்களா? எது எப்படி இருந்தாலும் உண்மை வரலாறை மறைக்காமல் திரிக்காமல் எந்த சமுதாயத்தையும் இழிவு படுத்தாமல்  தெளிவுபடுத்தும் வகையில் பாடப்புத்தகம் அமைய வேண்டும். அல்லது சர்ச்சை இருந்தால் அது நீக்கப்பட வேண்டும்.

2012-ம் ஆண்டு முதல் இந்த பிரச்னை இருந்து வருகிறது. நாடார்களை குடியேறிவர்கள் என்று தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கீழ் சாதி என்று சிலரை ஒதுக்கி வைத்து கேவலப்படுத்திய செயலை இந்திய நாட்டில் எந்த மாநிலத்திலும் கேரளாவைப்போல் செய்ததில்லை. குறிப்பிட்ட சாதிப் பெண்கள் திறந்த மார்போடு தான் இருக்க வேண்டும், மீறி அணிந்தால் அதற்கு மார்புப் பகுதியின் அளவுக்கேற்ப வரி கட்ட வேண்டும் என்று எந்த மாநிலத்திலும் சட்டம் இருந்ததில்லை. கிறிஸ்தவராக மாறினால் அவர்கள் மட்டும் குப்பாயம் என்ற மேலாடை அணியலாம் என்று விதித்ததால் பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள்.  இதெல்லாம் வரலாறுகள். அதனால் தான் சுவாமி  விவேகானந்தர் இத்தகைய சட்டத்தை வைத்திருந்த கேரளாவை இந்தியாவின் பைத்தியக்கார விடுதி என்றார்.

எது எப்படியோ இன்று பொன்ராதாகிருஷ்ணனும் தமிழிசை சவுந்தரராஜனும் பாஜக வில் மத்திய அமைச்சராகவும் மாநில தலைவராகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தங்கள் சமூக இழிவை தங்கள் கட்சி  ஆட்சியில் இருக்கும்போது அகற்ற முடியாதவர்கள் வேறு என்ன சாதிக்க முடியும்.?

ஒன்று பாடப்புத்தகத்தில் இருந்து சமூக இழிவை நீக்கட்டும். அல்லது பொறுப்புகளை ராஜினாமா செய்யட்டும். செய்வார்களா?

சிலை கடத்தல்; அரசு -உயர் நீதிமன்ற மோதல் முற்றுமா முடிவுக்கு வருமா??

சிலை கடத்தல்

ரயில்வே ஐ.ஜி அந்தஸ்தில் இருந்த பொன்.மாணிக்கவேலை சிலை கடத்தல் பிரிவுக்கு உயர் நீதிமன்ற உத்தரவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியத்தை தொடர்ந்து அவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணி புரிந்து ஓய்வும் பெற்றுவிட்டார்.

அவரை உயர் நீதிமன்றம் மேலும் ஓராண்டுக்கு சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அமைச்சர்கள் சிலரை காப்பாற்றவே சிலை கடத்தல் விசாரணைகளை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட அதையும் உயர்நீதி  மன்றம் ரத்து செய்து விட்டது.

ஐ ஜி அந்தஸ்திலிருந்த பதவியை டிஜிபி அந்தஸ்த்துக்கு உயர்த்தி அபய் குமார் சிங் என்பவரை சிலை கடத்தல் பிரிவுக்கு ஏடிஜிபி-ஆக அரசு நியமித்தது. ஒருவேளை உயர்நீதிமன்றம் பொன். மாணிக்கவேலு-வுக்கு பதவி  நீடிப்பு வழங்கும் என்று ஊகித்தார்களோ என்னவோ?

இப்போது சிலை கடத்தல் பிரிவுக்கு இரண்டு தலைவர்கள். ஒருவர் உயர் நீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல். மற்றொருவர் அரசால் ஏடிஜிபி அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட அபய் குமார் சிங். இருவரும் இணைந்து பணியாற்ற முடியாது. யாராவது ஒருவர்தான் முடிவெடுக்க முடியும். யார் அவர் ?

அரசு உயர் நீதிமன்றத்தின் நியமனத்தை ஏற்றுக் கொண்டால் அரசு நியமனம் செல்லாது அல்லது செயல்படாதது என்றாகிவிடும்.

ஏற்கெனவே பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக சம்பளம் பெறவில்லை  என்றும் ரயில்வே ஐ ஜி சம்பளம் மட்டுமே பெற்று வந்ததாகவும் கூறுகிறார்.

சிலை கடத்தல் பிரிவு தொடங்கி 28 ஆண்டுகளில் செய்யாததை பொன் மாணிக்கவேல் இந்த ஓராண்டில் மட்டும் சாதித்ததாக உயர் நீதிமன்றம் பதிவு செய்கிறது.

250 க்கும் மேற்பட்டு சிலைகளை பறிமுதல் செய்தது 10-க்கும் மேற்பட்டு ஐம்பொன் சிலைகளை ஆஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து மீட்டு 47 பேரை கைது செய்தது என்று பொன் மாணிக்கவேல் ஆற்றிய சாதனைகள் பேசப் படுபவைதான் என்றாலும் தமிழக அரசு இதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பதுதான் கேள்வி?

சிபிஐ-க்கு விசாரணைகளை மாற்றியதை அரசு ஒப்புக் கொள்ளவில்லையே? நீதி மன்றம்தான் ரத்து செய்தது.

உயர் நீதிமன்றம் அபய் குமார் சிங் நியமனத்தை ரத்து செய்யவில்லை. ரத்து செய்யாமல் அதே பொறுப்பிற்கு உயர் நீதி மன்றம் ஓய்வு பெற்ற அதிகாரியை  சிறப்பு அதிகாரியாக நியமித்ததை அரசு ஏற்றுக் கொள்ளுமா அல்லது உச்ச நீதி மன்றம் செல்லுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

எது எப்படியோ சிலை கடத்தல் பிரிவு சிறப்பாக செயல் பட்டு குற்றவாளிகளை நீதியின் கூண்டில் நிற்க வைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

டெல்லியைக் குலுக்கிய விவசாயிகள் பேரணியை கண்டுகொள்ளாத மோடி அரசு?!

207 விவசாய சங்கங்களை சேர்ந்த அகில இந்தியாவிலும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தினர்.

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் என்று ஒரு ஒருங்கிணைப்புக் குழு உருவாகப் பட்டுள்ளது.

பாஜக அரசு கண்டுகொள்ளவே இல்லை.

தென் இந்தியாவில் இருந்து அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மண்டை ஓடு மட்டும் எலும்புகளுடன் ஊர்வலம் சென்றனர். எப்போதும் வித்தியாசமாக போராட்டம் நடத்தும் அய்யாக்கண்ணு இப்போதும் அதேபோல் போராட்டம் நடத்தி இருக்கிறார்.

அதை நம்மூர் பொன். ராதாகிருஷ்ணன் தமிழர்களுக்கே அவமானம் என்று வர்ணித்திருப்பது அவருக்குத்தான் அவமானம். இப்படி விமர்சிப்பதை விட்டு மத்திய அமைச்சர்கள் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம்.

அயோத்தி வேண்டாம் விவசாயி வேண்டும் என்றும் கடன் இல்லாத விவசாயி தற்கொலை இல்லாத இந்தியா என்றும் முழங்கி தாங்கள் மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நிரூபித்திருக்கிரார்கள்.

” விவசாய விளைபொருளுக்கு கட்டுபடியாகக் கூடிய லாபகர விலை

அதுவரை கடன் நிவாரணம் ”

இந்த இரண்டு மட்டும் விவசாயிகள் கோரிக்கைகளின் அடித்தளம்.

இந்த இரண்டிற்குள் எல்லாம் அடங்கி விடும்.

நிதி ஆதாரம், விதை முதல் உரம் வரை தட்டுப்பாடில்லா விநியோகம், தடையில்லா மின்சாரம், தேவைக்கேற்ப தேவையான நீர் ஆதாரம் உறுதி படுத்தல், சந்தைப் படுத்தலில் சுலபமான வழிமுறைகள் இவையே அரசு தர வேண்டிய உதவிகள்.

ஆனால் விவசாயிகளை இரண்டாம் தர குடிமக்களாகவே எல்லா அரசுகளும் கருதி நடத்திவந்திருக்கின்றன .

தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடக அரசுகள் மூலதனத்தில் மானியம், மின்மய சந்தை, வணிகர் கூட்டணிகளை தகர்த்தல் போன்ற பிரச்னைகளில் பல விதமாக முயன்று வருகின்றன. ஆனால் தேசிய அளவில் ஒன்றிணைந்த முயற்சிகள் இல்லை.

பேரணியில் வந்தவர்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து பேச இருக்கிறார்கள்.   ஆளும் கட்சி பேசுமா?

அரசு அழைத்துப் பேசியிருக்கலாம். பிரதமர் மோடி குறைந்த பட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைக்கும் என மேடை தோறும் முழங்கி வருகிறார். ஆனால் நடைமுறை படுத்தல் என்று வரும்போது கண் துடைப்பாக சிறிதளவு விலையை  உயர்த்தி கொடுத்துவிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதுதான் வாடிக்கையாக இருக்கிறது.

மோடியின் பேச்சுக்கள் மட்டுமே வாக்குகளை பெற உதவாது.

கொஞ்சமாவது விவசாயிகளின் பிரச்னைகளையும் தீர்த்தால் தான்

மக்கள் உங்களை நம்புவார்கள்.

காடுவெட்டி குரு குடும்பம் பிளவுபட பாமக காரணமா? மருத்துவர் ராமதாஸ் விளக்கம் தர வேண்டாமா?

மாவீரன் என காடுவெட்டி குருவை உச்சியில் தூக்கி வைத்து கொண்டாடினர் மருத்துவர் ராமதாஸ்.

வன்னியர் சங்க தலைவராக குரு பரிமளிக்க ராமதாஸ்தான் காரணம்.

ஜெயலலிதாவையே மோசமாக அர்ச்சித்த குரு அதன் காரணமாக சிறை வாசம் அனுபவித்தார். அவர் செய்த தியாகங்கள்தான் இன்று பாமக வை உயரத்தில் நிறுத்தி  இருக்கிறது.

அப்படி ஒரு சமுதாய சங்கத் தலைவராக இருந்தவரின் குடும்பம் ஒன்றாக இருப்பதையும் ஒற்றுமையாக இருப்பதையும் ராமதாஸ் உறுதி செய்ய வேண்டாமா?

குருவின் சகோதரி மகனை அவர் மகள் திருமணம் செய்து கொள்வதில் பாமக வுக்கு என்ன ஆட்சேபணை ?

குருவின் மனைவி சொர்ணலதா ஒரு பக்கமும் குருவின் மகன் கனல் அரசன் மகள் விருத்தாம்பிகை மாப்பிள்ள மனோஜ் கிரண் மறுபக்கமும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன் மாமா பெயரில் சுமார் ரூ300 கோடி வன்னியர் சங்க அறக்கட்டளை சொத்துக்கள் இருப்பதாகவும் அதை மாற்ற குடும்பத்தினர் ஒப்புதல் வேண்டும் என்பதால் தங்களுக்கு விருப்பமான ஒருவருக்கு விருத்தாம்பிகையை திருமணம் செய்து வைக்க பாமக-வினர் முயன்று கடத்தி செல்ல முயன்றதால் தாங்கள் அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் மனோஜ்குமார் பேட்டி கொடுத்திருக்கிறார்.

ஊருக்குள் வரக்கூடாது என்று குரு குடும்பத்தை மிரட்டி வைத்திருக்கிறார்கள் என்பது பாமக-வுக்கு தொடர்பில்லாத ஒன்றா?

நடப்பது குரு குடும்ப பிரச்னை மட்டும் என்றால் மற்றவர்களுக்கு இதில் எந்த கருத்தும் சொல்ல முகாந்திரம் இல்லை.

மாறாக அரசியலில் தூய்மையை வலியுறுத்தும் அரசியல்வாதிகளில் மருத்துவர் ராமதாஸ் முதன்மையானவர்.

தமிழகம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்னைகளிலும் மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் மற்றவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று அவரே பெருமைப்  பட்டுகொள்வார். அதில் உண்மையும் ஓரளவு இருக்கிறது.

இப்படி மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் மருத்துவர் ராமதாஸ் யாருக்கு சிலை எழுப்பி தன் மரியாதையை வெளிக்காட்டினாரோ அவரது குடும்பத்தில் நிலவும் குழப்பங்களை தீர்த்து வைக்கும் கடமையும் உண்டு என்பதை மற்றவர்கள் சொல்லியா அவருக்கு  தெரிய வேண்டும்?

மருத்துவர் ராமதாஸ் காடுவெட்டி குரு குடும்பத்தின் குழப்பங்களை தீர்ப்பாரா?

நடிகை ஸ்ரீ ரெட்டி கூறும் பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் கூட தண்டிக்கத் தக்க குற்றம் ஆகுமா?

நடிகை ஸ்ரீ ரெட்டி புதிதாக ஒரு நடிகர்  மீது  ஒரு புகார் கூறியிருக்கிறார்.

முன் அவர் ராகவா லாரன்ஸ்  ஸ்ரீ காந்த், சுந்தர் சி  என சிலர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.

மீ டூ இயக்கத்துக்கு அவர் வலிவு சேர்த்து வந்ததாக இருந்தது.

இப்போது அவர் கூறும் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால் கூட அது தண்டிக்கத் தக்க குற்றமாக ஆகுமா என்பது தெரியவில்லை.

தனது முகநூலில் அவர் கூறியதாக வந்த செய்தி இதுதான்;

‘ என்னை பொதுக் கழிப்பிடம் போல் பயன் படுத்தினார்.   அந்த வலியும் காயமும் இன்னமும் ஆறவில்லை.   மனரீதியாக  கடுமையான பாதிப்புக்கு ஆளானேன் .  எனக்குத் தெரியும். அது என்னுடைய சம்மதத்துடன் தான் நடந்தது என. ஆனால் பட வாய்ப்புக்காக நான் ஒரு பிணத்தைப் போலத்தான் நடந்து கொண்டேன்.   எதையும் நான் முழு மனதுடன் ஈடுபாட்டுடன் செய்ய வில்லை.  என்னை நம்புங்கள்.  அவை எல்லாமே என் வாழ்க்கையின் மிக பயங்கரமான தருணங்கள்.  வெளிப்படையாக பேசுவது என் வாழ்க்கையை கடுமையாக பாதித்தது/  இதில் இருந்து நான் எப்படி மீண்டு வருவேன்.  இப்போது ஒரு தமிழ் ஹீரோ  எனது திரை வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார். அவர்  தெலுங்கு திரை உலகத்தினருக்கு மிகுத நெருக்கமானவர்.   அவர் ஒரு மிகப் பெரிய பெண் பித்தர். இந்த பூமியில் வாழ நான் தகுதியற்றவளா என்ன? ‘

‘ அது ‘ தன் சம்மதத்துடன் நடந்தது என்று அவரே ஒப்புக் கொண்ட பின்னர் அது எப்படி தண்டிக்கத் தக்க குற்றம் ஆகும்?

பட வாய்ப்புக்காக சம்மதித்தேன் என்பதை  எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

ஒரு விதத்தில் அவர் மீது  அனுதாபம் தான் வருகிறது.

நல்ல மனநல மருத்துவரிடம் அவர் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

சினிமா மட்டுமே வாழ வாய்ப்பல்ல. அப்படி வேண்டும் என்றால் தன் ஒப்புதல் இல்லாத எதையும் செய்யக் கூடாது. அந்த மன உறுதியை தக்க வைத்துக் கொண்டால் தவறுக்கு  எது இடம்?

குஷ்பு சொன்னதுபோல் யாரும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட வில்லையே?

மீ டூ இயக்கத்திற்கு புது அர்த்தம் கொடுத்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.