Home Blog Page 61

மம்தா பானர்ஜி அறிவித்த ரூபாய் 28 கோடி துர்கா பூஜை மானியத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு ?

மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி மத சார்பற்றவர் என்று சொல்லிக் கொள்பவர்.

அதனால் பாஜக-வை மிகவும் தீவிரமாக விமர்சிப்பவர்.

காங்கிரசுக்கும் எதிரி. முப்பது ஆண்டு காலம் பதவியில் இருந்த இடது கம்யுனிஸ்டுகளுக்கும் எதிரி.

ஆனால் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்றால் மாநிலத்தில் இருக்கும் 28 % முஸ்லிம்களை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர்.

அதனால்தான் அவரது அரசு 2012-லேயே முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் விதமாக இமாம்களுக்கும் முவெசின்களுக்கும் மாதாந்திர உதவித்துகையாக மாநில அரசுக்கு ஆண்டுக்கு  128 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டத்தை அறிவித்தார்.

அதை உயர் நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்த நிலையிலும் அந்த துகையை வக்பு போர்டுக்கு வேறு வகையில் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்தார் மம்தா பானர்ஜி.

இப்போது அந்த மானியத்தை வக்பு போர்டு கொடுத்தாலும் உண்மையில் அது மாநில அரசின் பணம்தான்.

இப்போது இந்துக்களை வசீகரிக்கும் எண்ணத்தில் மாநிலம் முழுதும் இருக்கும் சுமார்  28000   துர்கா பூஜை கமிட்டிகளுக்கு தலா ரூபாய் 10000 வீதம் 28 கோடி ரூபாய் மானியம் அறிவித்தார். அதற்கு சமுதாய வளர்ச்சி திட்டம் என்றும் பெயர் சூட்டினார்.

முன்பு முஸ்லிம்களுக்கு மாத ஊதியம் அளித்ததை சட்ட விரோதம் என்று அறிவித்த உயர்நீதிமன்றம்   முதலில் இடைக்கால தடை விதித்து விட்டு இப்போது அதை விலக்கி கொண்டு பணம் சம்பத்தப் பட்ட முடிவுகளை சட்டப் பேரவை யே முடிவு செய்யட்டும் என்று தீர்ப்பளித்து மம்தாவிற்கு நிம்மதி அளித்திருக்கிறது.

மேற்கு வங்கத்தை பொறுத்த வரை அது கம்யுனிஸ்ட்களாக இருந்தாலும் சரி காங்கிரஸாக இருதாலும் சரி பாஜக வாக இருந்தாலும் சரி திரிணமூல் ஆக இருந்தாலும் சரி உச்ச பட்ச பதவிகளில் பார்ப்பனர்கள் தான் இருக்கிறார்கள்.

மம்தாவின் பலம் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது. ரத்த சொந்தங்களை மேலே கொண்டு வராமல் இருப்பது.  தனக்கென சொத்து  சேர்க்காமல் இருப்பது.    மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவராக காட்டிகொள்வதுதான்.

ஆனால் எல்லா கட்சிகளிலும் பார்ப்பனர்களே தலைமை இடத்தில் அமர்ந்து  ஆட்சி செய்வது எப்படி. ?

அதுதான் வங்கம். மற்றவர்களை  ஒன்று சேர்க்க  அங்கு இயக்கம் இல்லை.

இடது கம்யுனிஸ்ட் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தான் ஒரு பிராமணர் என்பதில் பெருமை கொள்வதாக சொன்னாரே?   கேள்வி கேட்க முடியாத தலைவராக ஜோதி பாசு கொலோச்சினாரே 28 ஆண்டுகள்?

எந்த சமுதாய சீர்திருத்தத்தை இவர்கள் அமுல்படுத்தி இருக்கிறார்கள்.?

எப்படியோ மம்தாவின் இந்த சமரசம் அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை  தேடி தருகிறதா என்று  பார்ப்போம்?

தமிழக மீனவர்கள் 8 பேருக்கு இலங்கை நீதிமன்றத்தால் தலா ரூபாய் 60 லட்சம் அபராதம் ?

தமிழக மீனவர்கள் 8 பேருக்கு இலங்கை நீதிமன்றத்தால் தலா ரூபாய் 60 லட்சம் அபராதம் விதித்து தீர்பளிக்கப் பட்டிருக்கிறது ?!

சென்ற ஆகஸ்ட் மாதம் பாம்பனில் இருந்து இவர்கள் இருபது கடல் மைல் களுக்கு உள்ளே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கைது  செய்திருக்கிறது.

4.8 கோடி அபராதம் செலுத்தும் நிலையில் மீனவர்கள் இல்லை. அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

சுப்பிரமணிய சாமி சொன்னது நடந்து கொண்டிருக்கிறது.

அவர்தான் சொன்னார். படகுகளை கைப்பற்றிக் கொண்டு மீனவர்களை விட்டு விடுங்கள் என்று. இலங்கை அரசு அபராதமும் விதித்து தண்டிக்கிறது.

இந்திய அரசும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிக்காதீர்கள் என்கிறது.

மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும் கடமை இந்திய  அரசுக்கு இருக்கிறதா இல்லையா?

பாகிஸ்தான் மீனவர்கள் இந்தியாவிலும் இந்திய மீனவர்கள் பாகிஸ்தானிலும் சிறைகளில் இருந்து மீள்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆனால் இந்திய அரசு தமிழக மீனவர்களை கண்டு கொள்வதே இல்லை.

மீன் பிடித்தொழிலில் இருந்து மீனவர்கள் விலகி கடற்பரப்பை வியாபாரிகளுக்கு விட்டு விட்டு வேறு தொழிலுக்கு மாறினால்தான் இவர்களுக்கு மகிழ்ச்சி. அதுவே இவர்களின் இலக்கு என்பதாகத்தான் தோன்றுகிறது இவர்கள் தமிழக மீனவர்களை அணுகும் விதம்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.

இந்திய அரசு என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்த்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறார்கள் மீனவர்கள்.

கச்சதீவை மீட்காமல் மீனவர்கள் பிரச்னை தீரப்போவது இல்லை.

கச்சத்தீவை இந்திய அரசு மீட்கப் போவதுமில்லை.

உச்சநீதிமன்றம் ஏதாவது செய்தால் தான் உண்டு.

தினம் 300 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தவர்கள் மீது அறுபது லட்சம் அபராதம் விதித்து அவர்களை தொழில் செய்யவிடாமல் முடக்கி விட்டது இலங்கை அரசு.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.

எதிர்காலம் ஒரு கேள்விக்குறியை மாட்டி காத்துக் கொண்டிருக்கிறது.

‘மீ டூ’ பாலியல் புகார்கள் சட்ட ஆய்வுக்கு உட்பட்டதா இல்லையா?

பெண்கள் பலவீனமானவர்கள்.

எனவே பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள் கூட இப்போது சொல்லப் படலாம். அப்போது எனக்கு தைரியம் இல்லை. இப்போது கூறுகிறேன். எனவே எல்லாரும் நம்புங்கள் என்று சொல்வதை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

எம் ஜெ அக்பர் மூத்த பத்திரிகையாளர். இந்தியாவின் முதல் அரசியல் வார இதழை தொடங்கி நடத்தியவர்.

பல பத்திரிகை நிறுவனங்களிடம் அவர் பணி யாற்றி  இருக்கிறார்.

பாஜக வின் ஒரே முஸ்லிம் அமைச்சர். அவர் மீது ப்ரியாரமணி , கசலா வஹாப், சூமா ரகா, அஞ்சு பாரதி உட்பட  பத்துக்கும்  மேற்பட்ட பிரபல பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் கூரியிருகிரார்கள்.

அதில் ப்ரியா ரமணி  மீது கோர்ட்டில் தனி நபர் குற்ற அவதூறு  வழக்கு தொடர்ந்து இருக்கிறார் அக்பர்.

அக்பர் குற்றமற்றவர் என்பது யாருடைய கட்சியும் இல்லை. எல்லாரும் குற்றம் நிரூபிக்கப் படும் வரை நிரபராதிகளே என்ற பொது சட்டம் தான் இங்கு பார்க்க வேண்டும்.

புகார் கொடுக்கட்டும். விசாரணை நடத்தட்டும். தண்டிக்கட்டும்.

அதற்கு முன்னரே புகார் கொடுத்தவுடனேயே அவர் குற்றவாளியாக கருதப் பட்டு தண்டனை வழங்கப்  பட வேண்டும் என்று சிலர் போராடுவது தான்  அநியாயம்.

இதில் காங்கிரஸ் அரசியல் செய்து அக்பர் பதவி விலக வேண்டி போராட்டல்  நடத்தி  இருக்கிறது.

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பாலியல்  துன்புறுத்தல் கள் மேல்நாட்டில் விசாரணைக்கு வருவது வழக்கம்.   ஆனால் இங்கு இது புதிது.   வரவேற்க வேண்டிய தொடக்கம்.

ஆனால் விசாரணைக்கு முன்னரே பதவி விலக வேண்டும் என்று  கோருவது என்ன நியாயம்?

அதேபோல் மும்பையில்  நடிகர் அலோக்நாத் தன் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண் டைரக்டர் விண்டா நந்தா மீது ஒரு ரூபாய் நட்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுத்திருக்கிறார். அலோக் நாத்தின் மனைவி யும் கூட  மனுதார்.   இந்த புகார் காரணமாக வீட்டை விட்டு  வெளியில் வர முடியாமல் தவிப்பதாக கூறியுள்ளனர்.  மன்னிப்பு கோர வேண்டும் என்பதும் கோரிக்கை.     வழக்கு நடக்கட்டும். உண்மை வெளி வரட்டும்.

தினமும் புது புது பெயர்கள் மீ டூ வில் குவிகின்றன.

டைரக்டர் சுபாஷ் கை மீது நடிகை கேட் சர்மா தன்னை மிரட்டி படுக்கைக்கு அழைத்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். டிராக்டர் சுசி கணேசன் மீது பெண் இயக்குனர் லீனா மணிமேகலை பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார். ஏன்  மூத்த நடிகர் அமிதாப் பச்சனும் இந்த புகாருக்கு தப்ப வில்லை.

நடிகை ஷில்பா ஷிண்டே அதெல்லாம் இல்லை. பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன் தான் நடக்கின்றன என்கிறார்.

இது எங்கே போய் முடியும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் இது நல்லதற்குத்தான். அடங்கி கிடந்த பெண்கள் வெளியே வர துவங்கி விட்டார்கள் என்ற அளவில் வரவேற்போம். அதே நேரத்தில்  எச்சரிக்கையும் வேண்டும்.

இது  நிச்சயம் ஒரு கட்டத்தில் நீதி மன்றம் சென்றுதான் ஆக வேண்டும். இறுதியில் உச்ச நீதி மன்றம் வரை செல்லும்.  அப்போதுதான் இதற்கு  ஒரு விடை கிடைக்கும்.

ஒன்று மட்டும்  உறுதி. என்னதான் நியாயம் இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக  தண்டனை என்று ஒன்று  இருக்க முடியாது.

“மீ டூ” விற்கு போட்டியாக “வீ டூ ” ஆண்கள் இயக்கம்?

பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக ” வீ டூ ” என்ற இயக்கம்  சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

இது  தொடர்பாக பத்திரிகையாளர் வாராகி கூறுகையில் இது வரை ஐம்பதாயிரம் பேர் சேர்ந்துள்ளனர் என்றார்.

சேர்ந்து பழகி விட்டு மனக்கசப்பு ஏற்பட்டதும் பாலியல் புகார் கொடுப்பது என்றும் சில பெண்கள் பணம் பறிக்கும் நோக்கிலும் செயல்படுகின்றனர்.

இதில் ஆண்களுக்கு என்ன பாதுகாப்பு  இருக்கிறது?

வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது என்பது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை என்ற  உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இது போன்ற புகார்களை விசாரிக்க என்று தனி வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பது உண்மைதான். அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

இந்த சந்தேகம் வலுவடைய சின்மயிதான் காரணம்.

2013 ல் ஒரு முகநூல் பக்கத்தில் தன்னை தொந்தரவு செய்ததாக கூறி ஒரு பேராசிரியர் அரசு ஊழியர் மற்றும் சில நபர்கள் மீது புகார் கொடுத்து அவர்களை கைது செய்ய வைத்த சின்மயி எப்படி பலவீனமானவர் ஆவார்? அந்த வழக்கு என்னவாயிற்று? ஏன் கிடப்பில் போட்டார்கள்? இதையும் பத்திரிகைகள் விசாரித்து எழுத வேண்டும்.

அதுவும் மேல்சாதி பெண்கள் புகார் கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். அவர்கள் பலவீனமானவர்கள் அல்லவே அல்ல. ஏனெனில் அவர்களுக்கு சமுதாய பலம் உண்டு. எதையும் சமாளிக்க ஆலோசனைகள் சொல்ல ஆட்கள் உண்டு.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது மேல்சாதி மக்கள் தாங்கள் அதிகாரத்தில் இருப்பதை உணர்ந்தார்களா இல்லையா? அப்போதுதான் சின்மயி புகார் கொடுத்திருக்கிறார்.  இப்போது  கொடுப்பது பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதாலா? இங்கே அடிமை ஆட்சி இருப்பதாலா?

பெண்களில் பாதிப்புக்கு உள்ளாகும்போது மேல்சாதி கீழ்சாதி என்றெல்லாம் யாரும்  பார்ப்பது இல்லை. ஆனால்  கீழ் சாதி பெண்கள் பாதிக்கு உள்ளாகும்போது இப்படித்தான் எல்லாரும் சேர்ந்து குரல் கொடுக்கிறார்களா? ஏன் கொடுப்பதில்லை.

மேல்நாட்டு நாகரிகம் பற்றி பேசுகிறார்கள். அங்கு இருக்கும் விழிப்புணர்வு  இங்கு இருக்கிறதா?

இங்கு ஒரு கூட்டம் மதத்தை காட்டி மூட நம்பிக்கைகளில் ஆழ்த்தி ஒரு பெரும் சமூக கூட்டத்தையே அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதே அது அங்கே முடியுமா? சாதி அவலங்கள் அங்கே உண்டா? கல்வியை நாங்களே கொள்ளையடித்து வாழ்வோம் என்று அங்கே இருக்கிறதா?

மும்பையில் சச்சின் மிட்காரி என்ற திருமணமான வாலிபரை ஒரு பெண் பாலியல்  உறவுக்கு துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  கொடுமை என்னவென்றால் சம்மதிக்க மறுத்தால் அவர் மீது பொய் புகார் கொடுப்பதாக ப்ளாக் மெயில் செய்து இருக்கிறார். இப்படியும் நடக்கிறதே?

இப்படியும் ஒரு இயக்கம் இருக்கட்டுமே?

வழக்கு வரட்டும்; தண்டனை சின்மயிக்கா வைரமுத்துவுக்கா என தீர்மானிக்கட்டும்?

” 2004-ல் சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து என்னை ஓட்டல் அறைக்கு  தனியாக வருமாறு அழைத்தார். நான் மறுத்து விட்டேன் . இது போன்ற பாலியல் தொல்லை கொடுப்போர்கள் மீது பாதிக்கப் பட்டோர் குரல் எழுப்ப வேண்டும் ” இது பாடகி சின்மயி குற்றச்சாட்டு.

“அறியப் பட்டவர்கள் மீது அவதூறு பரப்புவது எனும் அநாகரிக கலாசாரம் பெருகி விட்டது. நான் அண்மைக்காலமாக அவமானப் படுத்தப் பட்டு வருகிறேன். உண்மைக்கு புறம்பானது எதையும் நான் பொருட்படுத்துவதில்லை” இது வைரமுத்துவின் பதில்

பொய்யர் என்று சின்மயி மீண்டும் கூற வழக்கு போட்டால் சந்திக்கத்  தயாராக இருக்கிறேன் என்று வைரமுத்து மீண்டும் பதில் தர வழக்கு போடுவதை சின்மயி ஆலோசிக்கிறாராம்.

வழக்கு வரும் முன்னே வைரமுத்து தண்டனை அனுபவித்தாகி விட்டது.

வழக்கு பதிவில்லை. விசாரணை இல்லை. சாட்சியம் இல்லை. தீர்ப்பு  இல்லை. ஆனால் விளைவு வைரமுத்து தண்டனை பெற்று விட்டார். இதுதானே எதார்த்த நிலைமை.

நாளை வழக்கு நடந்து வைரமுத்துவின் மீது எந்த தவறும் இல்லை என்று தீர்ப்பு  வந்தால் கூட இன்று அவர் இழந்த மரியாதையை மீண்டும் பெற முடியுமா என்பது சந்தேகமே?

சின்மயி வழக்கு தொடராமலே கூட போகலாம். அப்போது எது உண்மை என்று உலகிற்கு எப்படி தெரியும்?

சாட்சி என்னிடம் இல்லை. நான் சொல்வதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் என்று  சின்மயி சொல்வதை ஏற்றுக் கொண்டால் நாளை எல்லாப் பெண்களும் சொல்வதை அப்படியே நம்பித்தான் ஆக  வேண்டுமா?

அவர்தான் உன்னை  கூப்பிட்டாரே  ஏன் அவரை உன் திருமணத்திற்கு  அழைத்தாய் என்றால் அது மேனேஜர்கள் செய்த வேலை  என்கிறார்.

ஏன் அவருடன் மணமக்களாக  ஆசி வாங்கினாய் என்றால் பதில் இல்லை.

அதற்கு பிறகு ஏன் உன் தாய் அடிக்கடி அவர்க்கு வாழ்த்து சொல்ல வேண்டும்.? தவறு இழைக்கப் பட்டவர்கள் போலவா நடந்து கொண்டீர்கள்?

எச் ராசா சொல்கிறார். ஆண்டாள்  மீது அவதூறு சொன்னதற்கு அனுபவிக்கிறார் வைரமுத்து என்று. ஏன் நீங்கள் செய்த சதியாக அது இருக்க கூடாது என்று எண்ணத் தோன்றுகிறதா இல்லையா?

நீ உண்மையைத்தான் சொல்கிறாய் என்று எதை வைத்து நம்பசொல்கிறாய்?

சின்மயி பலர் மீது பாலியல் புகார் சொல்கிறார். ஒரு நடிகர் ஓட்டல் அறையில் தன் மீது  படர்ந்து கொண்டதாகவும் தான் கண்ணையும் உதட்டையும் மூடிக் கொண்டதாகவும் அவர் தன் முகத்தை எடுத்துக்கொண்டு விட்டதாகவும் சொல்கிறார்.

ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்பதற்கு எந்த பதிலும் இல்லை.

” மீ டூ ” இயக்கத்தின் விளைவாக பெண்கள் பேசத் துவங்கி விட்டார்கள் என்பது வரவேற்க வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.

அடங்கிக் கிடந்தவர்கள் என்ற நிலை மாறி இன்று சம உரிமை பெற்ற உயிருள்ள ஜீவன்கள் என்ற நிலை வந்திருப்பதற்கு நாகரிக வளர்ச்சியும் கல்வியும் நீதி மன்றங்களும் தந்த பாதுகாப்பும் முக்கிய காரணங்கள்.

மீ டூ இயக்கம் தந்திருக்கும் விளைவு சட்டப் படியானதா என்பதை ஆராய வேண்டும்?

ஒருவர் மீது பாலியல் புகார் கொடுத்த உடனேயே அவர் அவமரியாதை என்னும்  தண்டனையை பெற்று விடுகிறார்.

வேண்டுமானால் அவதூறு வழக்கு தொடரலாம். அதன் தீர்ப்பு வருவதற்குள் யார் உயிருடன் இருப்பார்கள் என்பது தெரியாது. மக்கள் மனதில் அதற்குள் இந்த குற்றச்சாட்டு மறைந்தே போயிருக்கும்.

இன்றைக்கு அவதூறு பரப்புவது மட்டுமே நோக்கம் என்று இருந்தால் அதற்கு மாற்று தீர்வு என்ன?

பிரச்சனை இப்போதுதான் சூடு பிடித்திருக்கிறது.

விரைவில் தீர்வு வரும். அது பாதிக்கப் பட்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமாகவே இருக்கும்.

சபரிமலை; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறதா பாஜக?

அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் அய்யபனை தரிசன செய்யலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு தீர்ப்பு அமுல்படுத்த விடாமல் செய்ய அத்தனை சதிகளையும் அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறது பாஜக வும் சங்க பரிவார அமைப்புகளும்.

மத வெறியை தூண்டி மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டில் பாஜக மாறவில்லை.

தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு போட இடது சாரி அரசு கட்டாயப் படுத்தப் படுகிறது. மண்டியிடப் போகிறதா அல்லது சட்டத்தை அமுல்படுத்தப் போகிறதா இடது சாரி அரசு என்பதை நாடு எதிர்ப்பார்த்து இருக்கிறது.

இதற்கிடையில் மலையாள நடிகர் கொல்லம் துளசி பேசிய பேச்சு அநாகரிகத்தின் உச்சம்.

உச்சநீதி மன்ற தீர்ப்பை நம்பி யாராவது பத்து வயதுக்கு மேல் ஐம்பது வயதுக்குள் உள்ள பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு வருகை தந்தால் அவர்களை இரு கூறாக வெட்டி எறிவோம் என்று பேசியிருக்கிறார்.

பின்னர் அரைகுறையாக உணர்ச்சி வசப் பட்டு பேசியதாக விளக்கம் கொடுத்தார்.

ஒரு பக்கம் முஸ்லிம் பெண்களின் உரிமை பாதுகாப்புக்காக முத்தலாக் சட்டம்.   மறுபுறம் பெண்கள் ஆலய நுழைவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை தூண்டுவது.

பாஜக வின் இந்த இரட்டை வேடம் எடுபடாது.

இதற்கிடையில் திருப்தி தேசாய் போன்ற பெண் உரிமை ஆர்வலர்கள் உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்தும் விதமாக விரதம் இருந்து சபரிமலை கோவிலுக்கு வரப் போவதாக அறிவித்திருக்கிறார்.

கொல்லம் தேசாய் போன்ற வெறியர்களால் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கும் இருக்கும். சட்ட ஒழுங்கு பிரச்னை எழும்.

மறுஆய்வு செய்ய போவதாக பந்தளம் அரச குடும்பமும்  அறிவித்திருக்கிறது. ஏன் நீதி மன்ற தீர்ப்புக்கு காத்திருக்காமல் போராட வேண்டும்.?

நாளையே தீர்ப்பு உறுதி படுத்தப் படுமானால் அப்போது என்ன செய்வார்கள்?

அதையும் எதிர்த்து போராடுவார்களா? ஏற்க மாட்டோம் என்பார்களா?

விபரீதமான போராட்டம் வெற்றியை தராது!!!

திறந்த வெளி சிறையை ஆக்ரமித்த சாஸ்த்ரா பல்கலை கழகம்? மௌனம் காக்கும் அரசு?

தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் உள்ளது சாஸ்த்ரா பல்கலைக்கழகம்.

தாளாளர்  ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். சங்க நிகழ்ச்சிகள் பலவும் இவரது ஆதரவில் நடப்பது வழக்கம்.

கல்வி நிறுவனம் என்ற அளவில் மிகவும் புகழ் பெற்றது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் இந்த நிறுவனம் எல்லா துறைகளிளிலும் வல்லமை பெற்று விளங்குகிறது.

இவர்கள்தான் திறந்த வெளி சிறைச்சாலைக்கு ஒதுக்கப்  பட்ட நிலம் 58 ஏக்கரை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது.

இன்று கூட திமுக தலைவர் முக ஸ்டாலின் சாஸ்திர பல்கலை ஆக்கிரமித்திருக்கும் 20.62 ஏக்கரை காலி செய்ய வேண்டும் என்றும் இதில் அரசு பாராமுகம் காட்டுவது ஏன் என்றும் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலம் சிறைத்துரைக்கு ஒதுக்கப் பட்டதாகவும் அதில் இருந்தே சாஸ்த்ரா அதை ஆக்ரமித்து விட்டதாகவும் குற்றச்சாட்டு.

வருவாய் கோட்டாட்சியர் விரைவில் ஆக்ரமிப்பு அகற்றப்படும் என்கிறார்.

எப்படி அகற்ற முடியும்? அதில் இருக்கும் கட்டிடங்களை எப்படி அகற்றுவார்?

இதில் வேறு அங்கே ஒரு சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது.

ஆக்கிரமிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பார்களா?

ஆக்ரமிப்பு முப்பது வருடம் முந்தையது என்றால் அது வருவாய் அதிகாரிகளின் கவனத்துக்கு வராமல் நடந்திருக்க முடியுமா?

சிறைத்துறை ஏன் தனக்கு ஒதுக்கப்  பட்ட நிலத்தை தன் அனுபோகத்தில் வைத்துக் கொள்ளவில்லை?    ஒரு அரசு நிலத்தை மற்றொரு அரசு துறைக்கு மாற்றும் போதுகூட அதில் தனியார் ஒருவர் ஆக்ரமிக்க முடியும் என்றால் அதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?   இதுதான் இப்போதைய கேள்வி?

இன்றைக்கு  எச் ராஜா தனக்கு  நீதி மன்ற அவமதிப்பு அறிவிப்பு அனுப்பிய நீதிபதி சி டி செல்வம் அடங்கிய பெஞ்ச் என்பதால் தான் இன்று தலைமை வழக்கறிஞர் முன்பு ஆஜராகவில்லை என்று அவர் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். ஆக நீதிமன்றத்தையே யார் நீதிபதி என்று பார்த்து தான் அவர் ஆஜராவாராம். அந்த பென்ச் அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என்றும் அதற்கு தலைமை நீதிபதி பெஞ்சுக்கு மட்டும்தான் உரிமை உண்டு என்றும் ராஜா கட்சியாடி வருகிறார். ஆக அவர்களுக்கு என்றால் தனி சட்டம். அதுவும் அவர்கள் ஆட்சி என்றால் கேட்கவே வேண்டாம்.

இப்போது நடந்து கொண்டிருப்பது பாஜக ஆட்சி தானே. எடப்பாடி பாவம் என்ன செய்வார்?

எதையும் சாஸ்திரம் சம்பிரதாயம் பார்த்து செய்வார்களோ என்னவோ? ஆக்ரமிப்பு உள்பட.

காந்திஜி பிறந்த நாளில் அவரைக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்க முயன்ற நால்வர் உபி யில் கைது?

மேல்சாதிக்காரன் அடங்கவே மாட்டான்.

ஒவ்வொரு ஆண்டும் காந்திஜி  பிறந்த  நாளில் அவரைக் கொன்ற நாதுராம் கோட்சே சிலையை வைக்க பல வழிகளிலும் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள் .

ராஷ்ட்ரீய சனாதன் தள் – உ பி யின் சித்திரகூட் மாவட்டத்தில் சக்வாரா கிராமத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாளில் அவரைக் கொன்ற நாதுராம் கோட்சே சிலையை வைக்க நால்வர் முயற்சி செய்திருக்கிறார்கள்.   தகவல் தெரிந்து காவல் துறை அதன் மண்டல தலைவர் பிரிஜேஷ் பாண்டே மற்றும் சிலரை விசாரணைக்காக அழைத்து சென்றிருக்கிறார்கள்.

ராமேந்திரா என்பவரின் தனி இடத்தில் அந்த  சிலையை வைக்க திட்டம்.

2015 லும்   2017 லும் இது போன்ற முயற்சி நடந்த பொது நாம் இது பற்றி எழுதியிருக்கிறோம் .

இந்து ராஷ்டிரம் அமைக்கும் முயற்சியை அவர்கள் கைவிடுவதாக தெரியவில்லை.

காந்திஜியை கொன்ற  வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப் பட்ட நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்செவை 14  ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்.

அவர்கள்தான் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை  27  ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகும் விடுதலை செய்தால் அது மோசமான  முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள்.

தேசிய கட்சிகள் தங்களுக் கென்று தனி விதிகள் வைத்திருக்கின்றன. அதனால்தான் மக்களிடம் இருந்து விலகியே இருக்கிறார்கள்.

பா ஜ க தனக்கு இதில்தொடர்பில்லை என்பது போல்தான் பேசி வருகிறார்கள்.

உண்மையானால் அந்த மாபாதகர்கள் மேல் குண்டர் சட்ட நடவடிக்கை எடுத்து தேச துரோக வழக்கு பதிய வேண்டும்.   இனி இது போன்ற சிந்தனை யாருக்கும் வரவே கூடாது  என்பதான நடவடிக்கையாக இது இருக்க வேண்டும்.

மாறாக விசாரித்து விட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் அந்த முயற்சியில் தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

தொடர்ந்து  கொண்டு இருக்க வேண்டும் என்பதே பா ஜ க வின் விருப்பமாகவும் இருந்தால்தான் அவர்கள் விட்டுக் கொண்டே இருப்பார்கள்.

கிரண்பேடியின் ஆணவம்? எம் எல் ஏ பேச்சை நிறுத்த மறுத்ததால் மைக்கை நிறுத்தினார்?

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி காவல் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்று விட்ட பின் பா ஜ க வில் சேர்ந்து டெல்லியில் தேர்தலில் தோற்று பா ஜ க ஆட்சிக்கு வந்தபின் இங்கே வந்தவர்.

அவருக்கும்  முதல்வர் நாராயணசாமிக்கும் நடக்கும் முட்டல் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மகாத்மா காந்தியின்  150   வது பிறந்த நாளை ஒட்டி புதுச்சேரியை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற பிரதேசமாக அறிவிக்க ஒரு கூட்டம்.   உள்ளாட்சி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்பாடாக இருந்தாலும் அங்கே விளம்பரத்தில் துணை நிலை ஆளுநர் படம் மட்டுமே இருந்தது. உள்ளூர் அமைச்சர் அதி மு க அன்பழகன் பெயர் இல்லை.

இருந்தாலும் அவர் ஆஜராகி பிரச்னை எழுப்ப அமைச்சர் நமசிவாயம் சமாதானப் படுத்தி பேச அழைக்க அன்பழகன் தனது தொகுதி குறைகளை பட்டியல் இட்டு பேச ஆரம்பித்தார்.

துணை ஆளுநர் துண்டு சீட்டில் பேச்சை  முடிக்க எழுதி அனுப்ப அன்பழகன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் துணை நிலை ஆளுநர் எழுந்து பேசிகொண்டிருந்த அன்பழகனிடம் சென்று பேச்சை நிறுத்த சொல்ல அவர் மறுக்க அவர் நீ வெளியே போ என்று சொல்ல இவரும் திருப்பி நீ வெளியே போ என்று சொல்ல இருவரும் நடந்து கொண்ட விதம் அருவருப்பாக இருந்தது.

ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பேசிக் கொண்டிருந்தபோது  கிரண்பேடி இடை மறித்திருக்கக்  கூடாது.

நேரமில்லை என்றால் தனது பேச்சை  குறைத்திருக்கலாம்.  அல்லது வெளியேறிக் கூட இருக்கலாம்.  அதைவிட்டு விட்டு பொதுமக்கள் முன்னிலையில் தரக் குறைவாக நடந்து கொண்டிருக்கக் கூடாது.

கடைசியில் கிரண் பேடி விழாவில் பேசாமல் போனதுதான் மிச்சம். பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதால் துணை நிலை ஆளுநர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாமா?!

மேலும் ரசாபாசம் ஆகாமல் அத்துடன் விட்டார்களே என்று பொதுமக்கள் கலைந்து போனார்கள்.

தமிழ்நாடு சைத்தானின் ஆதிக்கத்தில்? கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு! வழக்கு பதிவு?

இருக்கும் மத மோதல்கள் போதாது என்று கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி  லாசரஸ் புதிதாக ஒரு பிரச்னைக்கு வித்திட்டிருகிறார் .

காலூன்ற காத்திருக்கும் பா ஜ க உள்ளிட்ட சங்கப் பரிவாரங்களுக்கு பிரசாரம் செய்ய மக்களை தூண்டி விட்டு கலவரம் விளைவிக்க ஒரு காரணியாக ஒரு கிறிஸ்தவ போதகரின் பேச்சு அமைந்தது வருந்தத் தக்கது.

ஜீசஸ் ரிடீம்ஸ்  என்ற அமைப்பின் தலைவரான அவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?

அவர் பேசுவதை தொலைகாட்சியில் காட்டினார்கள்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான இடங்கள் கோவில்கள் சாத்தானின் ஆதிக்கத்தில் உள்ளன.   நான் கும்பகோணம் போனேன். அதற்கு ஆண்டவர்  அனுக்ரகம் பண்ணினார்.   நான் பார்த்தபோது இரண்டு பேர் இருந்தார்கள். யாகம் செய்தார்கள் .  அதில் பட்டு வேட்டிகள் சேலைகளை போட்டார்கள். அங்கே சாமி சிலைகள் இருந்தாலும் அந்த மனிதர்களைத்தான் கும்பிடுகிறார்கள். ”

இந்த விமர்சனத்தை ஒரு கிறிஸ்தவ போதகர் பேசுவது எதற்காக?. என்ன நோக்கத்திற்காக பேசினார்?  நம்பாதீர்கள் என்பதற்காகவா? அவரை சுற்றி இருப்பவர்கள் நம்பாதவர்கள்தானே?

காத்துக்கொண்டிருக்கும் பாஜக வினர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கம் பேணிப் பாதுகாக்கப் பட வேண்டும். அதற்கு ஊறு விளைவிக்கும் யாராக இருந்தாலும் கண்டிக்கப் படவேண்டும். தண்டிக்கப் பட வேண்டும்.

ஒருவேளை தன் பேச்சுக்கு விளக்கம் கொடுத்து அல்லது வருத்தம் தெரிவித்து பிரச்னையை சுமுகமாக முடிக்க லாசரஸ் தயாராக இருப்பாரா?

அல்லது அரசியல்வாதிகள் போல நான் அப்படி பேசவில்லை என்றோ அல்லது படத்தில் இருப்பது நான்தான் ஆனால் குரல் என்னுடையது அல்ல  என்று வாதிடப் போகிறாரா?

எச் ராஜாக்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்களே?

என்ன செய்யப் போகிறது காவல் துறை?