Home Blog Page 64

பாம்பன் சுவாமிகள் கருவறை சமாதி; வழக்கு நடந்தால் சமாதியை மூட வேண்டுமா?

திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கருவறை சமாதி கடந்த
33 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்தது என்பது வருத்தற்குரிய செய்தி.\
அதற்கு நீதிமன்ற வழக்குகள் காரணம் என்பது கூடுதல் வருத்தம்.
காரணம் அதை நிறுவியவர் ஒரு தமிழர்- முருக பக்தர்
பாம்பன் கிராமத்தில் பிறந்ததால் அவர் பாம்பன் சுவாமிகள்
1850 ல் பிறந்து 1929 ல் சித்தியடைந்த அவர் இயற் பெயர் அப்பாவு
தந்தை பெயர் சாத்தப்ப பிள்ளை – மானசீக குருவாக
அருணகிரி நாதரை ஏற்றுக் கொண்டதால் – சேதுமாதவ அய்யர்
அவருக்கு முருகனின் சடாக்ஷர மந்திரம் கற்பிக்கிறார்

திருமணமாகி ஒரு மகன் இரண்டு மகள்கள்
1895 ல் சன்யாசம் பெற்று சென்னை வருகிறார்
குமரகுருதாச சுவாமியாகிறார்
6666 பாடல்கள் 1000 முருகன் பெயர்கள்
சண்முக கவசம்- பஞ்சாமிர்த வர்ணம் என்று
அவரது படைப்புகள் புகழ் பெறுகின்றன
வேலும் மயிலும் துணை என்பது மந்திரம் ஆகிறது
மகா தேஜோ மண்டலம் என்ற சபை துவக்கம்
அவரது சமாதி அவர் நிர்மாணித்த இரண்டரை ஏக்கர்
நிலத்திலேயே அமைகிறது.

அவரது சமாதி கடந்த 33 ஆண்டுகளாக
இந்து அறநிலையத்துறை வசம் இருந்தது.
இப்போது தீர்ப்பு வந்து கருவறை திறந்து
பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து விடப் பட்டிருக்கிறது.
தனி நீதிபதி ஒருவரின் தீர்ப்பால் திறந்துவிடப் பட்ட
சமாதியை இரண்டு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை
போட்டதால் மீண்டும் மூடம் சூழ்நிலை உருவாகி உள்ளது.
பிரச்னை பக்தர் சங்கம் வசம் சமாதி இருக்க வேண்டுமா?
அல்லது அறநிலையத் துறை வசம் இருக்க வேண்டுமா? என்பதே
யார் வசம் இருந்தாலும் சமாதி திறக்கப்பட்டு
பக்தர்கள் வழிபட மரியாதை செய்ய என்ன தடை?

சிலரின் நோக்கம் பாம்பன் சுவாமிகளின் சமாதி
வழிபடும் தலமாக ஆகி விடக் கூடாது என்பதாக இருந்தால்
அதற்கு நீதிமன்றம் ஒத்துப் போக வேண்டுமா ?
விரைவில் இது தொடர்பாக நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம்
முருகனின் புகழ் பாடும் எவரும் அருள் பெற்றவர் ஆவர்
மீண்டும் அறநிலையத்துறை வம்புக்கு வராமல்
பக்தர்களை வழிபட அனுமதிக்கட்டும்.
பக்தர் சபை வெளிப்படையான ஊழலற்ற
நிர்வாகத்துடன் பக்தியை பரப்பட்டும்.
சுவாமிகள் ஓரிறையை நம்பியவர்
அந்த ஓரிறை சிவன் – சிவன் அம்சம் முருகன்
வேறு சாதி பாகுபாட்டு கொள்கைகளை அவர்
பரப்பியதாக தெரியவில்லை. அதனாலேயே
அவர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் வழிபாட்டிற்கும் உரியவர் ஆகிறார்.

தமிழ்ச் சமுதாயங்களுக்குள் உரசல் உண்டாக்கும் கருணாஸ் போன்றவர்கள் திருந்த வேண்டும்?!

தமிழ் சமுதாயம் பல சாதிகளாகப் பிளவு பட்டு கிடப்பதாலேயே
தமிழர் ஒற்றுமை கானல் நீராய் கிடக்கிறது.
இந்நிலையில் நடிகர் கருணாஸ் போன்றவர்கள் இருக்கும் ஒற்றுமையையும்
சிதைத்து விடுவார்கள் போலிருக்கிறது.
சமீபத்தில் அவர் உதிர்த்ததாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட
வார்த்தைகள் எவரும் ஏற்றுக் கொள்ளமுடியாதது
ஒரு காவல் துறை துணை கண்காணிப்பாளரை
நீ சட்டையை கழற்றி விட்டு வா என்கிறார்.

பத்திரிகைகளை நாடாரும் பார்ப்பனர்களும் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கிறார்கள் என்று பேசுகிறார்
நீங்களாவது உங்களை சேர்ந்தவர்களாவது
பத்திரிகை நடத்த வேண்டாம் என்று யாராவது தடுத்தார்களா?
மருத்துவர் ராமதாஸ் சொல்லுவதுபோல்
பெரும்பான்மை வன்னியர்கள் இல்லை
முக்குலத்தோர் தான் பெரும்பான்மை என்கிறார்.

எப்போது இந்த சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினார்கள்
அவரவரும் சொல்லிக் கொள்வதற்கு என்ன ஆதாரம்?
கவுண்டர் ஒருவர் முதல் அமைச்சர் ஆனது
சின்னம்மா போட்டது என்கிறார் – ஏன் இதுவரை
அவரிடம் இவர் ஒட்டிகொண்டிருக்கிறார்
இந்த பேச்செல்லாம் எந்த வகையில் இப்போதைய தேவை
என்ன சொல்ல வருகிறார் கருணாஸ் ?
எல்லாம் சொல்லி விட்டு எச் ராஜாவைப் போல்
இதனால் எல்லாம் யார் மனதாவது புண்பட்டிருந்தால்
அதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார்.

தமிழ் சமுகத்தின் சாபக்கேடு தகுதி இல்லாதவர்கள்
எல்லாம் தலைவர்களாக பாவித்துக்கொண்டு பேசுவதுதான்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சேர்த்து வைத்த
நல்ல பெயரை எல்லாம் அவருக்குப் பின் வந்த
எவரும் தக்க வைக்க வில்லை
சட்ட மன்ற உறுப்பினர் என்ற ஒரு தகுதியை தவிர
வேறு தகுதி ஏதும் கருனாசுக்கு இருப்பதாக தெரியவில்லை
அடுத்து வருவாரா என்பது நிச்சயமில்லை
இவரது பேச்சுக்கு மற்றவர் எவரும் பதில் கூறி
இருக்கும் ஒற்றுமையை கெடுக்க வேண்டாம்
பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க இன்னும்
யாரார் எல்லாம் என்னென்ன பேசுவார்களோ?

சிலை காணாமல் போனால் அர்ச்சகர்கள் புகார் தரவில்லையே ஏன்? நீதிமன்றம் கேள்வி!!!

மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் ஒரு மயில் தன் அலகுகளில்
ஒரு மலரை கௌவிக் கொண்டு காட்சி தருவதுதான் கதை.
ஆனால் இப்போது இருப்பதோ மயிலின் அலகுகளில் ஒரு பாம்பு.
எனவே இது திருடப் பட்ட சிலையின் மாற்று என்றும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி
புகார் கொடுக்கப் பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாகத்தான் டி வி எஸ் சுந்தரம் அய்யங்காரின் பேரன்
வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரி மனுப் போட்டதை நாம் எழுதியிருக்கிறோம்.
இப்போது ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கோர்ட்டில் வழக்கு போட்டு
அறங்காவலர்கள் செயல் அதிகாரிகளை நீக்கி விட்டு
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆகம வல்லுனர்களையும் சட்ட வல்லுனர்களையும் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் என்றும் கோரினார்.
நீதிபதிகள் மகாதேவன் ஆதிகேசவலு கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் போது கேட்டார்கள்
‘ ஏன் சிலை மாயமானது சிலை மாறிவிட்டது என்று
அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்ல?
அது அர்ச்சகர்களின் கடமை இல்லையா?
இப்போது எல்லாம் அர்ச்சகர்கள் எந்திரத் தனமாக செயல் படுகின்றார்களே தவிர
தெய்வீக பணி ஆற்றுவதில்லை . வேதனையாக இருக்கிறது ‘
என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.

அரசு வழக்கறிஞர் இது தொடர்பாக விசாரித்துக் கொண்டு இருக்கிறோம்
என்று சொன்னதால் அறநிலையத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு
விசாரணை தேதியை மாற்றி இருக்கிறார்கள்.
நீதிபதிகள் கேட்ட இந்த கேள்விகளை இந்த வழக்குக்கு மட்டும் அல்ல
சிலை கடத்தல் புகார் நிலுவையில் இருக்கிற
அத்துணை வழக்குகளிலும் கேட்கப் பட வேண்டும்.
வழிபாடு செய்வோர் கோவிலுக்கு செல்கிறார்களோ இல்லையோ
அர்ச்சகர்கள் அனுதினமும் கோவிலுக்கு சென்று
தொண்டு செய்கிறவர்கள். வேறு பணி இல்லாதவர்கள்.
அவர்களுக்கு மட்டுமே கோவிலின் அத்துணை அம்சங்களும் அத்துபடி.
இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குத் தெரியாமல்
\ கோவிலில் அணுவும் அசைய முடியாது.

அப்படி இருக்கும்போது கோவிலில் சிலைகளோ ஆபரணங்களோ
காணாமல் போனால் அவர்களுக்கு தெரியாமல் எப்படி இருக்கும். ?
அதுவும் அல்லாமல் இதை சாக்காக வைத்து எப்படியாவது
கோவில் நிர்வாகத்தை கைப்பற்றுவது மட்டுமே அவர்களின்
நோக்கமாக இருக்கிறது. இவர்களின் நோக்கத்தைத் தான்
மனுப் போட்ட ஸ்ரீரங்கம் நரசிம்மன் பிரதிபலிக்கிறார்.
கோவில் சிலைகளுக்கும் ஆபரணங்களுக்கும் கோவில் அர்ச்சகர்களும்
சேர்ந்து பொறுப்பேற்க வேண்டும் என்று சட்ட திருத்தம் செய்வதை
ஆலோசிக்க வேண்டும். எப்போது நகைகள் பயன்படுத்த வேண்டும்
என்பதை அவர்கள் தானே தீர்மானிக்கிறார்கள்.
அதுவே சரியான தீர்வு.

பெரியார் பிறந்த நாள் விழாவை சீர்குலைக்க சங்கப் பரிவாரங்கள் சூழ்ச்சி ??!!

தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாள் இன்று.
பகுத்தறிவுப் பகலவன் என்னும் ஈ வே ரா தமிழ் மண்ணில் தோன்றியிராவிட்டால்
தமிழர்கள் இன்னும் பலகாலம் அடிமைகளாகவே வீழ்ந்து கிடந்திருப்பர்கள்.
அகில இந்தியாவிலும் பகுத்தறிவு சுடர் ஒளிவிட பெரியார் தான் காரணம்
எந்த பகுத்தறிவாளரும் பெரியாரை குறிப்பிடாமல் சிந்திக்கவோ செயல்படவோ முடியாது.

பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோர் இந்த மண்ணில் கொண்டாடப் படும்வரை
தாங்கள் கால் பதிக்க முடியாது என்பதை
சங்கப் பரிவாரங்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
அதனால்தான் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்
அவர்களை இழிவு படுத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
பா ஜ க வின் எச் ராஜா பலமுறை மேடைகளில் பெரியாரை இழிவாக பேசியிருக்கிறார்.

பெரியார் தான் வாழ்நாளில் பல செருப்பு வீச்சுக்களை எதிர் கொண்டவர்
ஒரு செருப்பு வீசப்பட்டவுடன் எங்கே மறு செருப்பு என்று தேடியவர் அவர்
அதனால் தான் அவரை இன்று பட்டி தொட்டியெங்கும் சிலைகளை வைத்து
தமிழ் சமூகம் நினைவு கூர்கிறது.
புத்தக கண்காட்சிகளில் பெரியார் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன.

எதிரிகளும் வியக்கும் பெரியார் மதிக்கப் பட காரணம்
தன்னை எவரும் கண்மூடித்தனமாக பின்பற்றுவதை அவர் விரும்பவில்லை.
நான் சொல்கிறேன் நீ சிந்தித்து முடிவெடு என்பதுதான் அவர் விரும்பியது
இன்று ஒரு பா ஜ க ஆதரவு வக்கீல் ஒருவன் பெரியார் சிலை மீது
காலணி வீசியிருக்கிறான் . அருகில் இருந்த வி சி க தொண்டர்கள்
அவனை அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

திருப்பூர் தாராபுரத்தில் பெரியார் சிலை மீது காலணிகளை வைத்திருக்கிறார்கள்
நேற்றுத்தான் காவல்துறையும் நீதிமன்றத்தையும் அவதூறாக பேசிய வழக்கில்
எச் ராஜா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப் பட்டிருக்கிறது.
அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவாகி இருக்கிறது.
கலவரத்தை தூண்டும் வகையில் அவர்கள் பேசுவதால் தான் இப்படி
பெரியார் அவமதிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இப்போது இருக்கும் ஆட்சி நம் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்
என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் எவ்வளவுதான் பதவி போட்டி இருந்தாலும்
திராவிட இயக்கங்கள் பெரியாரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்
என்பதையும் இந்த சம்பவங்கள் நிருபித்திருகின்றன
அ தி மு க அமைச்சர் ஜெயக்குமார் பெரியாரை இழிவுபடுத்துவதை
சகித்துக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி நடவடிக்கை உறுதி என்றிருக்கிறார்.
பெரியாரியம் நிச்சயம் வெல்லும்.
மதவாதம் மண் கவ்வும்

உயர்நீதி மன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்பிட 15 ஆண்டுகள் ஆகும்

இந்தியாவில் மொத்தம் 24 உயர் நீதிமன்றங்கள்
மொத்த நீதிபதிகள் 1079
இப்பொது இருப்பவர்கள் 652
காலியிடங்கள் 427 அதாவது 40%
இவர்களை நியமிக்கத்தான் 15 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டிருக்கின்றது .
முந்தைய காங்கிரஸ் அரசு நியமித்தது 250 கூடுதல் நீதிபதிகளாம்
இப்போதைய அரசு நியமித்தது 313 நீதிபதிகளாம்

உயர் நீதி மன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் 39.52லட்சம்
22% வழக்குகள் பத்தாண்டுகளுக்கும் மேலானவை
நீதிபதிகள் நியமனங்களை உச்சநீதி மன்றம் தன் அதிகாரத்திலேயே வைத்திருக்கிறது.

கொலிஜியம் எனப்படும் மூத்த நீதிபதிகள் முடிவெடுக்கிறார்கள்
மத்திய அரசுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு பனிப்போர் நடந்து வருகிறது.
மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை உச்சநீதி மன்றம் நிராகரித்து விட்டது.
சமுதாயத்தின் பல தரப்பினரும் அதிகாரம் பெற வழி வகை செய்யும்
நீதிபதிகள் நியமனம் தாமதிக்கப் படுவதில் நியாயமே இல்லை.

அதுவும் உச்சநீதி மன்றம் தன் கையில் வைத்திருக்கும் அதிகாரம்
பயன் படுத்தப் படுவதில் வேண்டுமென்றே தாமதம் ஏற்படுத்தப் பட்டாலும்
அதுவும் ஒருவித அநீதியே அரசும் நீதிபதிகளும் முட்டி மோதிக்கொள்ளும்
இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டு அனைத்து நீதிபதி பணியிடங்களும் உடனடியாக நிரப்பப் பட வேண்டும். மக்கள் சக்தி இதற்கு அழுத்தம் தந்தால்தான் இது சாத்தியமாகும் மக்கள் பிரதிநிதிகள் இதில் கட்சி சார்ந்து பராமுகமாக இருப்பார்கள்
கட்சி சாராத அமைப்புகள் தான் இந்த அழுத்தத்தை தர வேண்டும்.

ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவரா  இல்லையா?

 ஆளுநர் மாளிகை ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் ஏழு பேர் விடுதலை குறித்து தவறான தகவல் கொண்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக  அனுப்பி வைக்கப்படுகிறது என்ற ஒரு செய்தி வருகிறது. அடுத்த நாளே அந்த செய்தி மறுக்கப்பட்டு ஆளுநர் படித்துக் கொண்டிருக்கிறார் என்று வருகிறது. பத்திரிகைகள் எப்படி அந்த தவறான செய்தியை வெளியிட்டன? அதற்கு காரணமானவர்கள் யார்?

அது ஒருபுறம் இருக்கட்டும் ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவரா  இல்லையா? அரசியல் சட்டப் பிரிவு 161 மாநில அரசின் தனி உரிமையா  இல்லையா? ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் ஏதேனும் இருக்கிறதா? உச்ச நீதிமன்றம்   ஆளுநர் தீர்மானிக்கட்டும் என்று சொன்னது தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தை குறித்ததாக இல்லையா?

நாளை ஆளுநர் இதர எல்லா பிரச்சனைகளிலும் மாநில அமைச்சரவை முடிவுகளை இதேபோல நான் மத்திய அரசை கேட்டு முடிவெடுக்கிறேன் என்று சொன்னால்  குழப்பம் வராதா? அரசியல் சட்ட பிரிவுகள் 161  32 72 எல்லாம் தனித்தனி அதிகாரம் உள்ளது. ஒன்றை சார்ந்து மற்றொன்று இல்லை

நாளையே ஆளுநர் மாநில அரசின் பரிந்துரையை ஏற்கவில்லை என்றோ இந்தியர்களுக்கு ஒரு முடிவாகவும் இலங்கை தமிழர்களுக்கு ஒரு முடிவாகவும் எடுத்தாலும் எதிர்காலத்தில் அது புதிய பிரச்சனைகளுக்கு வித்திடும் ராஜீவ் காந்தியோடு கொல்லப்பட்ட இதர தமிழர்கள் இதுதொடர்பாக ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்து சொல்ல முனைவது இப்போதைய பிரச்சினைக்கு தேவையற்றது.

குற்றவாளிகளா தண்டிக்கப்பட வேண்டியவர்களா என்பதை தாண்டி குற்றவாளிகள்தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் என ஒப்புக்கொண்டு அவர்களும் 27 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த பிறகு ஆயுள் தண்டனை என்பது குறிப்பிட்ட காலம் வரையிலுமா அல்லது இறக்கும் வரையிலுமா என்பதையும் தாண்டி இப்போதைய ஒரே கேள்வி தண்டனையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா இல்லையா என்பது மட்டுமே.

அரசியல் சட்டம் மாநில அரசுக்கு தந்திருக்கும்  உரிமையை விவாத பொருள்  ஆக்குபவர்கள் நாட்டுக்கு நல்லது செய்பவர்கள் ஆக மாட்டார்கள் ஆளுநர் அலுவலக குறிப்பு கவலை அளிக்கக் கூடியது இந்த பிரச்சனை சிக்கலான ஒன்று என்பது எப்படி சரியாகும்? இதில் இனிமேல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் என்ன? தேவைப்படும் ஆலோசனைகள் பெறப்படும் என்று சொல்லியிருப்பது பற்றி யாருடைய ஆலோசனை என்று தெளிவுபடுத்தப்பட வேண்டாமா ? நியாயமான முடிவு எடுக்கப்படும் என்றால் அமைச்சரவை பரிந்துரை நியாயமானது இல்லையா?

ஆளுநர் மாளிகை அறிவிப்பு குழப்பங்களைத் தான் அதிகப்படுத்துகின்றது. ஆளுனர் அவர்களே தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பில்லாதது தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எச் ராஜா மீது பாயுமா?

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா
தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில்
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில்
காவல் துறையை அவமதிக்கும் வகையில்
மிகக் கடுமையாக பேசியிருக்கிறார்.
என்ன செய்யப்போகிறது காவல்துறை என்று
தமிழகமே மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதையில்
பல முறை அவர் இப்படி பேசியிருக்கிறார்.
இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்
துணிவு அதிகமாகிவிட்டது.

நம் மீது நடவடிக்கை யார் எடுக்க முடியும்
என்ற அகந்தை தான் இதற்கு காரணம் .
எஸ்வி சேகர் , எச் ராஜா போன்றவர்களுக்கு
சட்டம் இங்கே வேற மாதிரி.
மற்றவர்களுக்கு சட்டம் வேறாகத்தான் இருக்கும்
என்பது தமிழ்நாட்டில் பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
உயர் நீதிமன்றம் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்களை
கலவரங்கள் ஏற்படாத வண்ணம் நெறிப்படுத்தி
நிபந்தனைகளை விதித்து உள்ளது .

அதைத்தான் காவல்துறை அமுல்படுத்த முயன்றிருக்கிறது.
அதை மீறி மேடை போடுவேன் பேசுவேன் என்று
எச் ராஜா முனைந்த போது தான் காவல்துறை தலையிட்டு தடுத்திருக்கிறது.
அப்போதுதான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி
எல்லாரையும் இழிவு படுத்தி இருக்கிறார் எச் ராஜா .
” ஹை கோர்ட் என்ன மயிரா”
” போலீஸ் எல்லாரும் ஊழல்வாதிகள்”
“கிறித்தவனிடமும் முஸ்லீமிடமும் லஞ்சம் வாங்கி இருக்கிறீர்கள்”
” நீங்கள் இந்து விரோதிகள் ”
“போலீஸின் ஈரல் அழுகிவிட்டது”
” யூனிஃபார்ம் போடஉங்களுக்கு தகுதி இல்லை”
” லஞ்சம் நான் தருகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் ”
” டிஜிபி வீட்டில் ரெய்டு வந்த பிறகு நீங்கள் யூனிபார்ம் போடலாமா”
இவைதான் ராஜா உதிர்த்த வார்த்தைகள்.

அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறை
கெஞ்சிக் கொண்டு இருந்ததையும் விடியோவில் பார்த்தோம்.
ஏன் அப்போதே நடவடிக்கை எடுத்து
அவரை கலவரம் ஏற்படுத்த முயற்சித்ததற்காக காவல்துறை கைது செய்யவில்லை?
தங்க தமிழ்ச்செல்வன் மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்த
தமிழக தலைமை அரசு வழக்கறிஞர் இப்போது அதே நடவடிக்கையை எடுப்பாரா?
தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் எச் ராஜா வை கண்டித்து கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
காவல்துறையின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்றால்
எச் ராஜா மீது நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டாக வேண்டும்.
காத்திருப்போம்.

சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுத்து புரோகிதப் பெண்களாக்கி அடிமைப்படுத்திய பார்ப்பனீயம்??!

மும்பையை அடுத்த மொஹோபதா என்ற கிராமத்தை சேர்ந்த
ராமேஷ்வர் கார்வே என்ற பார்ப்பனர்
பிராமணர் அல்லாத 150 பெண்களுக்கு சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுத்து
அவர்களுக்கு சான்றிதழ் பெற்றுத் தந்ததுடன் அவர்களை , தானே , நவி மும்பை பகுதிகளில் பிறப்பு இறப்பு மற்றும் இதர சனி சாந்தி பூஜை உட்பட எல்லா சடங்குகளையும் செய்ய வைத்திருக்கிறார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட காலம் சுமார் 18 ஆண்டுகள் இதை சீர்திருத்தம் என்பதா ? அடிமைப்படுத்தும் சூழ்ச்சி என்பதா ? செய்தது தனிமனிதர் – அவர் பார்ப்பனர்
இந்த முயற்சிக்கு பார்ப்பனீய இயக்கங்கள் ஆதரவு அளிக்கின்றனவா?
ஆம் என்றால் ஏன் அவர்களே எல்லா பார்ப்பனர் அல்லாத பெண்களுக்கும்
இந்த பயிற்சியை அளிக்கக் கூடாது?

இல்லை என்றால் இது சரியல்ல என்றாவது சொல்ல வேண்டும்.
அதையும் சொல்ல மாட்டார்கள் ஏன் என்றால் ஒருவகையில்
அந்த பெண்களை புரோகிதர் ஆக்கி
சனாதன தர்மத்துக்கு அடிமைகள் ஆக்கி விட்டாரே
அந்த வகையில் அவர்களுக்கு சம்மதமே
ஐந்து பள்ளிக்கூடங்களையும் கார்வே நடத்தி வருகிறார்.
கல்வி செல்வத்தை எல்லாருக்கும் வழங்க வேண்டும் என்ற
அவரது தொண்டு உண்மையில் பாராட்டப் பட வேண்டியது தான்.
ஆனால் இந்த சமய தொண்டை அவர் மராத்தி மொழியிலும்
செய்திருக்க வேண்டும்.

பார்ப்பனர் அல்லாத ஆண்களுக்கும் செய்து கொடுத்து அவர்களை
கோவில் அர்ச்சகர்கள் ஆக உரிமை பெற்றுத் தர முயற்சித்திருக்க வேண்டும்.
அதுதான் உண்மையான தொண்டு
அம்பேத்கர் எல்லாருக்கும் அர்ச்சகர் ஆக உரிமை வேண்டும் என்று
போராடியது உண்மைதான்.

ஒருவகையில் பாராட்ட வேண்டிய முயற்சியாக இருந்தாலும்
மறுபுறம் பெண்களை பார்ப்பநீயத்துக்கு அடிமைகள்
ஆக்கும் முயற்சிக்கும் இரையாகக் கூடாது அல்லவா?
எனவே எச்சரிக்கையுடன் வரவேற்போம் இந்த முயற்சியை?!!

கன்னியாஸ்திரியை கற்பழித்தாரா ஆயர் பிராங்கோ முலக்கல் ??!!

கிறித்தவ மத நம்பிக்கை கொண்டோரை பதைக்கச் செய்யும் வகையில்
பாதிரிகள் மீதும் ஆயர்கள் மீதும் அவ்வப்போது பாலியல் குற்றச்சாட்டுகள்
இப்போது கொஞ்சம் அதிகம்தான்
ஜலந்தர் பிஷப் பிராங்கோ முலக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவர்
தன்னை பலமுறை கற்பழித்து விட்டதாக குற்றச்சாட்டு கூறி காவல் துறையில்
புகார் கொடுக்க பிரச்னை விஸ்வரூபமாகி நிற்கிறது
100 பள்ளிகள் 6 மருத்துவ மனைகள் 40 திருச்சபைகள் 800 கன்னியாஸ்திரிகள்
என்று முலக்கல் பணியாற்றும் இடம் பஞ்சாப் மற்றும் இமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் விரிந்து பரந்து கிடக்கிறது.

புகார் கொடுத்த வருக்கு ஆதரவாக கூட பணியாற்றும் கன்னியாஸ்திரிகள் திரள
இப்போது கேரளாவே கன்னியாஸ்திரி ஆதரவு பிஷப் ஆதாவு என்று பிரிந்து கிடக்கிறது.
பொதுமக்களும்கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக திரள
சட்ட மன்ற உறுப்பினர் பி சி ஜார்ஜ் புகார்கொடுத்தவரை ‘ தேவடியாள் ‘
என்றும் நடத்தை கெட்டவர் என்றும் திட்டி பேட்டி கொடுக்க
‘ வாயே மூடடா பி சி ‘ என்று இணைய தளத்தில் மீம்ஸ் பறக்க
என்னதான் நடக்கிறது திருச்சபையில் என்று அகில இந்தியாவே
கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. போப் வரைக்கும் இந்த புகார் சென்றும்
இன்னும் தீர்வு வந்தபாடில்லை.

இதற்கிடையில் திருச்சபை முலக்கல் உடன் அந்த கன்னியாஸ்திரி அமர்ந்து
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டது
சட்டப்படி குற்றமாக பார்க்கப் படுகிறது. அதற்கும் ஒரு புகார்.
கிறித்துவ சபைகள் போதனைகளை பிரச்சாரம் செய்வதை விட
பொதுத் தொண்டுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவை.
அங்கே கன்னியாஸ்திரிகள் எப்படி நடத்த ப்படுகிறார்கள்
என்று அறிய எல்லாருக்கும் உரிமை உண்டு.

கேரள உயர்நீதிமன்றம் பிஷப்பை கைது செய்வதா வேண்டாமா
என்பதை விசாரணை அதிகாரியே முடிவு செய்வர் என்றது.
முன்ஜாமீன் பெற பிஷப் ஆலோசித்து வருவதாக தகவல்
பாவ மன்னிப்பு கோரி பாதிரியிடம் குற்றத்தை ஒப்புக்கொண்ட
பெண்ணை கற்பழித்த பாதிரிக்கு என்ன தண்டனை கிடைத்தது?
பதனபுரம் என்ற இடத்தில் கன்னியாஸ்திரி சூசன்னா என்பவர்
தற்கொலை செய்து கொண்டு கிணற்றில் கண்டெடுக்கப் பட்டது
பதற்றத்தை கூட்டியுள்ளது.

ஆண்டவன் பேரால் அக்கிரமம் செய்வது
அவனுக்கே அடுக்காது.
காவல் துறை விசாரணைதான் இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

எஸ் பி வேலுமணி மீது இத்தனை புகார்களா?

நகராட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது தி மு க அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் மற்றும் கண்காணிப்பு ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில் பல்வேறு குற்றச்சாட்டுகள்.
அவரது துறை சார்ந்த வேலைகளுக்கான டெண்டர்கள் அவரது பினாமிகளுக்கு சட்ட விதிகளை மீறி முறைகேடாக பல கோடி ருபாய்களுக்கு வழங்கப்பட்டன என்பது குற்றச்சாட்டு.

அதற்கான பல புள்ளி விபரங்களை அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அவருடைய சகோதரர் உறவினர்கள் நண்பர்கள் எல்லாருக்கும் பல கோடி ரூபாய் டெண்டர்களை வாரி வாரி வழங்கி இருக்கிறார் வேலுமணி என்பது குற்றச்சாட்டு.
ஆனால் அதை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அதற்கான முதல் தகவல் பதிவு எதையும் செய்யாமல் மேல் நடவடிக்கை எதையும் எடுக்காமல் தவிர்க்கிறார்கள் என்பது அடுத்த குற்றச்சாட்டு.
புகார் கொடுத்தால் ராஜினாமா செய்ய வேண்டுமா என்ன ? நீதிமன்றம் முடிவு செய்யும் வரை ராஜினாமா செய்ய மாட்டேன் என்பது முதல்வர் பழனிசாமி முதல் வேலுமணி வரை வாதம் செய்கிறார்கள்.

உண்மைதான். குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படும் வரை எல்லாரும் நிரபராதிகள்தான் .
கேள்வி என்னவென்றால் ஆதாரங்கள் கொடுக்கப் படும்போது , விசாரணை செய்ய வேண்டிய அமைப்பு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும்போது என்னதான் விடிவு?
அதற்கும் நீதிமன்றம் தலையிட்டு நேரடிக்கண்காணிப்பில் விசாரணை நடந்தால் தான் ஒப்புக் கொள்வார்களா?
DVAC மாநில அரசின் கீழ்செயல்படும் அமைப்பு. எப்படி மாநில அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்?

Tender Transparency Act ஏட்டில் மட்டுமே இருக்கும் ஒரு சட்டம். ஒரு துண்டுச்சீட்டு , அல்லது பென்சில் குறிப்பு போதும். டெண்டர் கிடைத்து விடும். இதுதான் நடைமுறை. இதை யார் மாற்றுவது?
இதற்கு என்னதான் விடிவு?
திமுக அமைச்சர்கள் மீது கொடுக்கும் நான்காவது ஊழல் புகார் இது.
அதிலும் அன்பழகன் என்ற ஒரு பத்திரிகையாளர் அமைச்சர் மீது ஊழல் புகார் கூறி மனு கொடுக்கிறார் ஏப்ரல் மாதம் 25 ம் தேதி. அதில் பார்த்திபன் என்பவர் அமைச்சரின் பலவீனங்களை பயன்படுத்தி தேன்வலை ( honey trapping ) முறையை பயன்படுத்தி சினிமா துணை நடிகைகளை பயன்படுத்தி அமைச்சரிடம் பணி மாறுதல் உத்தரவுகளை பெற்றார் என குறிப்பிடுகிறார். அதில் கோபமடைந்த பார்த்திபன் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி புகார் கொடுத்த அன்பழகனையே காவல் துறையை விட்டு முடக்குகிறார். பல பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் பதிவாகின்றன.

ஏன் இத்தனை அடாவடித்தனம்? குற்றம் செய்ய வில்லை என்றால் விசாரணைக்கு ஏன் தயங்க வேண்டும்?
முதல்வர், ஓ பி எஸ் , விஜயபாஸ்கர் வேலுமணி என்று அமைச்சர்கள் மீதுதொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப் படும் நிலையில் இந்த அரசு தொடர்வது என்ன நியாயம்.?
18 எம் எல் ஏக்கள் தகுதி இழப்பு வழக்கு முடிவுக்கு வந்தவுடன் இந்த அரசின் நாட்கள் எண்ணப்படும்.
அதுவரை இந்த குற்றச்சாட்டுகள் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப் பட்டு
நேரம் வரும்போது தீர்ப்பு சொல்ல பயன்படட்டுமே!!!