Home Blog Page 69

பெரியார் -கலைஞர் கனவு நனவானது; முதல் பிராமணர் அல்லாதார் அர்ச்சகர் ஆக நியமனம்?

அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என பெரியார்  1969  ல் தொடங்கிய போராட்டம்

கலைஞர் ஆட்சிக்கு வந்தபிறகு  அவரால் 1970 ம் கொண்டு வரப்பட்ட சட்டம் உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு

மீண்டும்  அவரால்  2006 ல் சட்டம்  கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் எல்லாரையும் நியமிக்கலாம் என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு ,

கலைஞர் ஆட்சியில் அர்ச்சகர்  பயிற்சி  பெற்ற 206  பேரில் ஒருவருக்கு

2018ல் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள மதுரை தல்லாகுளத்தில் உள்ள ஐயப்பன் கோவில் அர்ச்சகராக பார்ப்பனர் அல்லாத ஒரு மிகவும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டு

ஒருவழியாக வெற்றி பெற்றுள்ளது.

அ தி மு க அரசுக்கு இந்த அளவாவது கொள்கை பிடிப்பு இருப்பது வரவேற்கத்தக்கது.

ஏன் இன்னும் மிச்சம் உள்ள 205  பேருக்கு வேலை வழங்க வில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

கேரளாவில் பணி காலியாக இருந்த இடங்களில்  ஐம்பது சதம்  இடங்களுக்கு பார்ப்பனர் அல்லாதாரை அர்ச்சகர் களாக நியமித்து இடது சாரி அரசு சாதனை புரிந்துள்ளது.

மதுரையில் நியமிக்கப்பட்ட அந்த அர்ச்சகர்    யார் அவர் பெயர் என்ன என்பதையெல்லாம் அரசு சொல்லவில்லை.

அதனால் பிரச்னை வரலாம் என்ற பயமாம்.

இவர்கள் எப்படி இந்த முற்போக்கான நடவடிக்கையை தொடர்வார்கள்?

யாரோ பக்தர் போர்வையில் சிலர்  செயற்கையாக ஆட்சேபிக்க இந்த திட்டத்தையே முடக்க சதியா என்ற சந்தேகமும் எழுகிறது.?

இல்லையேல் கேரளாவைப்போல் பணி காலியாக உள்ள இடங்களில் எல்லாம் பயிற்சி பெற்றவர்களை நியமித்து இருக்கலாமே?

ஏன் இந்த ஒற்றை நியமனம்?

எல்லா பெரிய கோவில்களிலும் அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக பணி நியமனம் பெற உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு பக்தர் பேரவைகள் முன் முயற்சி எடுக்க வேண்டும்.

நடிகை ஸ்ரீ ரெட்டியின் பாலியல் புகார்கள் சட்டப்படி செல்லுமா?

தெலுகு நடிகை ஸ்ரீ ரெட்டி சிலகாலமாக தெலுகு தமிழ் நடிகர் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி வருகிறார்.

தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு தராமல் ஏமாற்றிய நடிகர்கள் இயக்குனர்கள் பட்டியலையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இவர் மீது செக்ஸ் புகார் கூறி பணம் பறிக்க முயற்சிப்பதாக நடிகர் இயக்குனர் வாராகி புகார் கொடுக்க அவர் மீது இவர் என்னை விலைமாது என்று கூறியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்திருக்கிறார்.

அறைக்குள் நடப்பதை அம்பலத்துக்கு கொண்டு வந்தவர் என்று வேண்டுமானால் ஸ்ரீ ரெட்டி  மீது பாராட்டு தெரிவிக்கலாமே தவிர அவரது குற்றச்சாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தக்கதுதானா ?

தன்னை கற்பழித்தார்கள் என்று அவர் புகார் கொடுக்க வில்லை.   ஏனென்றால் அது இந்திய தண்டனை சட்டம் பிரிவு  375  ல் சொல்லப்பட்ட விளக்கங்களுக்குள் இவர் குறிப்பிடும் சம்பவங்கள் வராது என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது.

விருப்பத்துக்கு மாறாக , சம்மதம் இல்லாமல், அச்சத்தில் ஆழ்த்தி சம்மதம் பெறல், கணவன் இல்லையென்று தெரிந்தே ஆனால் தான்தான் கணவன் என்று நம்பசெய்து பெற்ற சம்மதம் மனநிலை சரியில்லாதபோதோ மயக்க மருந்துகள் செலுத்தியோ பெற்ற சம்மதம், பதினாறு வயதுக்குள் இருக்கும்போது பெற்ற சம்மதம் ஆகிய விதி விலக்குகள் சம்பவத்தை குற்றம் என வரையறைப் படுத்தாது.

பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார்கள் என்றால் ஏன் அப்போதே நடவடிக்கை எடுக்க வில்லை. ?

எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் இவர் ஏமாறுவார்  சட்டம் தானாக வந்து காப்பாற்றுமா?

ஒன்று தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை கோர வேண்டும். அதாவது  பட வாய்ப்பு வேண்டாம் தண்டனை பெற்று தருவேன் என்று நடவடிக்கை கோரவேண்டும்.    இதுவரை அவர் எவர் மீது தண்டனை கோரி புகார் கொடுத்திருக்கிறார் ?

இல்லையென்றால் இனிமேல் ஆவது எச்சரிக்கை ஆக இருக்க வேண்டும்.

பாரதிராஜா சொல்வதுபோல் ஊசி  இடங்கொடாமல் நூல் நுழைய முடியாது அல்லவா?

பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது ஸ்ரீ ரெட்டி கையில்தான் இருக்கிறது.

ஒருமுறை நடந்தால் விபத்து! தொடர்ந்து நடந்தால் கொலைகள்!! யார் பொறுப்பு?

பத்து நாளில் ஏழு பேர் மரணம்- மூன்று சம்பவங்களில்??!!

சென்னை மின்சார ரயிலில்  நடந்த இறப்புகள்

வெறும் விபத்துக்கள் தானா அதற்கும் மேலா?

ரயிலுக்கும் கட்டுமானத் திற்கும் ஏழடி இடைவெளி  இருந்தால் போதும்

என்றாலும் முதல் சம்பவத்தில் ஒருவர் இறந்தவுடன்

கண்டிப்பு காட்டியிருக்க வேண்டாமா ரயில் நிர்வாகம்?

தொத்திக்கொண்டு செல்வது தடை செய்யப் பட்டதாயிருந்தலும்

ஏன் கதவுகள் அமைக்க வில்லை என்ற கேள்விக்கு என்ன விடை?

வேறு வழியில்லாமல் தானே ரயிலில் செல்கிறார்கள்

அதற்காக நீங்கள் விதி மீறினால் நாங்கள் பொறுப்பல்ல என்பீர்களா?

மனசாட்சியே இல்லாதவர்கள் நிர்வாகிகளா?

முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் யாருக்கு என்ன நிவாரணம் தரும்?

உயிரைப் பறித்த கட்டுமானம் ஏன் இன்னும் அகற்றப் படவில்லை?

விபத்துகளை தடுக்கத் தவறியவர்கள் தண்டிக்கப் பட்டால் தான்

விபத்துகள் குறையும்.

நிர்மலாவிடம் அவமானப் பட்டு திரும்பிய ஓ பி எஸ் ?!

தமிழகத்தின்  துணை முதல்வர்  ஓ பி எஸ் – நேரம் கொடுக்கப்படாமல்

சந்திக்க சென்றதாகவே இருக்கட்டும்

அறை வாசல்  வரை அனுமதித்து காக்க வைத்துவிட்டு

நேரத்தில் மைத்ரேயனை மட்டும் உள்ளே  அழைத்துக் கொண்டு

ஓ பி எஸ் ஐ சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பினாரே நிர்மலா

என்ன காரணமாக இருக்கும்?

மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தெரியாமலா இது  நடக்கும்?

நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பில்

கேட்காமலேயே ஆதரித்து வாக்களித்ததற்கு இப்படியா தண்டிப்பது?

தனிப்பட்ட முறையில் ஏர் ஆம்புலன்ஸ் கொடுத்து சகோதரருக்கு

உதவிதற்கு  நன்றி சொல்ல என்று உண்மையை உடைத்து விட்டாரே

என்ற கோபமா?

சொத்துக் குவிப்பு வழக்கில் ஏன் சி பி ஐ விசாரணைக்கு

உத்தரவிடக் கூடாது  என்று உயர் நீதி மன்றம் கேள்வி கேட்ட

நிலையில் ஏன் நமக்கு இந்த ஆள் சகவாசம் என்ற அச்சமா?

மோடி சொன்னதால் இணைந்தேன் என்று மார் தட்டியவருக்கு

ஏன் இந்த சோதனை?

கே பி  முனுசாமி மனோஜ்  பாண்டியன் மைத்ரேயன் என்று

தன் அணியை மட்டும் கூட்டிச் சென்றது அவர்களுக்கு பிடிக்கவில்லையா?

துணை முதல்வரை பார்க்க விருப்பமில்லை

எம் பி சத்யபாமா அன்றே பார்க்கிறார்  நிர்மலாவை .

நாளை தங்கமணியும் வேலுமணியும் பியுஷ் கோயலை பார்க்கிறார்கள்

இது என்ன புதுவித கண்ணாமூச்சி விளையாட்டு

புலம்ப வைத்து  விட்டாரே நிர்மலா

விமான நிலையத்தில் சொன்னாரே ஓ பி எஸ் அண்ணா சொன்னதை

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று

அது இப்படி அவமானப் படுத்தப் பட்டதற்கா சொன்னார் ?

கொள்கைப்போரில் எதிர்கொள்ளும் தோல்விகளுக்கு

சொன்னதை  இப்படி கொள்ளையடித்து தப்பிக்க  முயலும்போது

எதிர்கொள்ளும் அவமானங்களையும் சேர்க்கலாமா ?

இனி ஓரங்கட்டப் படுவார் ஓ பி எஸ் என்பது

நிதர்சனமாகி விட்டது.   ஓரங்கட்டுவது இ பி எஸ் ஆ

மத்திய அரசும் சேர்ந்தா என்பது விரைவில்

வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

இன்னும்  வண்ண வண்ண வேடிக்கை காட்சிகள்

அ தி முகவில் அரங்கேறும் என்பது மட்டும் நிச்சயம்.

எப்படி அடித்தாலும் அழ மாட்டோம் என்று

அடிமை சேவகம் செய்தோருக்கு இதுதான் பரிசு

என்றாலும்

ஒரு தமிழ் நாட்டு துணை முதல்வருக்கு  இழைக்கப் பட்ட

அவமானம் கொஞ்சம் சுடத்தான் செய்கிறது.

சூழ்ச்சி வலை விரிக்கும் பா ஜ க தமிழ் சமுதாயத்தின்

மீது தொடுக்கப் போகும் அடுத்த காட்ட தாக்குதல்

என்ன யார்  யாரெல்லாம் கோடரிக்காம்புகள்

ஆக்கப்  படுவார்கள்?

சகிக்க முடியாதது ; அமைச்சர் ஓ பி  எஸ் ஐ சந்திக்கவில்லை’

என டிவிட்டர் போட்டதுதான்

இ பி எஸ் வாய் திறக்க வில்லையே

மெளனமாக மகிழ்கிறாரா?

தேர்தல் நெருங்க நெருங்க

அடிமைகளுக்கு சோதனைகள் தான் !!!

 

 

 

 

மத சார்பற்ற, தனி நபர் உரிமையை மதிக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றிருக்கின்றன- ஆய்வில் முடிவு!

பிரிஸ்டல் பல்கலைக்கழகம் டேமியன் ரக் தலைமையில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சிக்கு எந்தெந்த அம்சங்கள் ஒரு நாட்டிற்கு உதவி இருக்கின்றன?

எல்லா நாடுகளின் மத நம்பிக்கைகள் அவற்றின் உள்நாட்டு மொத்த உற்பத்தி ஆகியவை அளவு கோள்களாக எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள் .

மதத்திற்கும் வளத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தார்கள்.  ஒன்று தெரிந்தது.

ஆம்.  மிகவும் வறுமையில் உள்ள நாடுகள் தான் மிகவும் மதம் சார்ந்த நாடுகளாக இருக்கின்றன.

பொருளாதார வளம் மத சார்பின்மைக்கு இட்டு  செல்லவில்லை.   மாறாக மத சார்பின்மைதான் பொருளாதார வளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது .

அதே சமயம் வெறும் மத சார்பின்மை மட்டும் போதாது.

அதோடு கூட தனி நபர் உரிமைக்கு தரப்படும் மரியாதையும்  இணைந்து கொள்ள வேண்டும்.

எதனால் இது ஏற்பட்டது என்பதை அரிதியிட்டு கூற முடியாவிட்டாலும்  ஒன்றை உறுதியாக கூறுகிறார்கள். அதுதான் சமீப காலத்தில் ஏற்பட்ட மதசார்பின்மைக்கு பொருளாதார வளர்ச்சி மட்டுமே  காரணம் என்று கூறமுடியாது என்பதே.   வேறு பல காரணங்களும் இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

அதே நேரத்தில் தனி நபர் சுதந்திரத்திற்கும் சகிப்புத் தன்மைக்கும் கொடுக்கப் படும் முக்கியத்துவம்தான் , மத சார்பின்மையை விட, பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருந்துள்ளது என்பது உண்மை.

சகிப்புத் தன்மைதான் சமுதாயத்தின் வெற்றிக்குத் துணை என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது.

மத தீவிர வாதிகள்தான் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கிரண் பேடியீன் அராஜகம்! நிபந்தனை விதித்து நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க உரிமை உண்டா?

புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடியின் அராஜகம் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் மூன்று பா ஜ க பிரமுகர்களை சட்ட மன்ற உறுப்பினர்களாக நியமித்தார்.

அவர்களின் தகுதி பற்றி கேள்வி எழுப்பிய மாற்றுக் கட்சியினர் தொடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து நியமனம் செல்லும் என தீர்ப்பளித்தது.

சட்ட மன்றம் நடந்து கொண்டிருந்தபோது அவர்களை அனுமதிக்க சபாநாயகர் மறுத்தார்.

அவரது நடவடிக்கை சரியா சரி இல்லையா என்பது வேறு .    ஆனால் அவர்களை அனுமதிக்க கூடாது என்பதற்காகவே சட்ட மன்றம் ஒத்தி வைக்கப் பட்டது.

யார் செய்யும் அரசியல் சரி என்பது இருக்கட்டும்.

பிரச்னை உச்ச நீதி மன்றம் சென்றது.   அங்கு உச்ச நீதி மன்றம் ஏன் அவர்களை அனுமதிக்க கூடாது என்று கேள்வி கேட்டு விட்டு அவர்களை அனுமதிக்கலாம் என்று ஒரு கருத்தை மட்டும் வெளியிட்டு விட்டு விசாரணைக்கு வழக்கை  ஒத்தி  வைத்தது.

ஆக பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு சென்று விட்டது.    உச்ச நீதி மன்றத்தின் கருத்தை சபாநாயகர் மதிக்க கடமைப் பட்டிருக்கிறாரா என்பது அடுத்து வர இருக்கும் விசாரணையில் உச்ச நீதி மன்றமே தீர்மானிக்கும்.

விசாரணை முடியும் வரை உச்சநீதி மன்றம் தெரிவிக்கும் கருத்து எந்த அளவு கட்டுப் படுத்தும் என்பதையும் உச்ச நீதி மன்றமே தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்நிலையில் துணை நிலை ஆளுநர் பேடி நிதி மசோதாவுக்கு தர வேண்டிய ஒப்புதலை தராமல் இழுத்தடித்தார்.   அதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூட போட முடியாத நிலையை தோற்றுவித்திருக்கிறார் .

பிரச்சினை பெரிதானவுடன் உடனே ஒரு ஒப்புதலை கொடுத்து விட்டு அதனோடு ஒரு நிபந்தனையும் விதித்திருக்கிறார்.   அதாவது நியமன உறுப்பினர்களை சட்ட மன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனை தான் அது.

இது அராஜகம் இல்லையா?     உச்ச நீதிமன்ற கருத்தை தன் நிபந்தனை உத்தரவுக்கு ஆதாரமாக குறிப்பிட்ட கிரண் பேடி அது தன் வேலை இல்லை என்பதை ஏன் உணரவில்லை?.

உச்ச நீதி மன்ற உத்தரவை அமல் படுத்த மறுத்தால் , அது குற்றம் என்றால்   , உச்ச நீதி மன்றம் நடவடிக்கை எடுத்து விட்டு போகட்டுமே?

இவரே நிபந்தனை விதிப்பது எந்த வகையில் நியாயம்?

இதை உச்ச நீதி மன்றம் அனுமதிக்குமா என்பது தெரியவில்லை.

ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் இன்றைய நீதியா என்பதையும் உச்ச நீதி மன்றம் விளக்கினால் நல்லது.

நாடாளுமன்றத்தில் ராகுல் மோடிக்கு செய்த கட்டிப்புடி வைத்தியம்??!!

நாடாளுமன்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான  விவாதத்தில் உறுப்பினர்கள் பேசிய விவாதங்கள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு ராகுல் மோடிக்கு செய்த கட்டிப்புடி வைத்தியம் பேசுபொருளாகி விட்டது.

தெலுகு தேசம் கட்சி தங்களுக்கு மோடி அரசு மாநில பிரிவினையின் பொது  அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை  என்று நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தது.

அதில் ராகுல் ஆவேசமாக மோடி அரசின் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

பதிலுக்கு மோடியும் ஆவேசமாக பேச இறுதியில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோற்றுப் போனது.

ஆனால் தான் பேசி முடித்த பின் ராகுல் செய்த காரியம் யாரும் எதிர்பாராதது .

நேராக மோடியிடம் போய் எழுந்திருங்கள் என்று சொல்ல அவர் எழுந்திருக்காமல் அமர்ந்தே இருக்க இவர் அவரை குனிந்து கட்டிப் பிடிக்க அசையாமல் இருந்த மோடி பின் ராகுலை அழைத்து சில வார்த்தைகள் பாராட்டி சொல்ல ராகுல் திரும்பி வந்து தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் கட்சி உறுப்பினர்களை பார்த்து கண் சிமிட்ட , எல்லாம் ஒரு நாடகம் போலவே அமைந்து விட்டது.

சிவசேனா கட்சி ராகுல் பேச்சை மிகவும் பாராட்டியது.    கால் பந்து போட்டியை ஒப்பிட்டு கோப்பையை பிரான்ஸ் வென்றிருந்தாலும் மனங்களை வென்றது குரோஷியா தான் என்றது.   அதைப்போல் நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி வென்றாலும் மக்கள் மனங்களை  வென்றது ராகுல்தான் என்றது.

ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ராகுலின் நடவடிக்கை ஏற்கத் தக்கது அல்ல என்றார்.

இதுவரையில் நாடாளுமன்றத்தில் இப்படி நடந்தது இல்லை.

ராகுல் நடந்து  கொண்டது கண்ணியமா இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

மோடிக்கு ஆதரவாக அதிமுக வாக்கு? 2019ல் கூட்டணிக்கு முன்னோட்டம்!

2019 ல் பா ஜ க தமிழ்நாட்டில்  அ தி  மு க வோடும் ரஜினியுடனும் கூட்டு வைத்து தான் தேர்தலை சந்திக்கும் என்ற நிலைமைதான் இன்று.

அதற்கு முன்னோட்டம் தான் நாடாளுமன்றத்தில்  தெலுகு தேசம் கட்சி யால்  கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் வேணுகோபால் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கையும் பாரபட்சத்தையும் கண்டித்து பேசிய பிறகு பிறகு நடந்த வாக்கெடுப்பில் மோடியின் அரசின் மீது நம்பிக்கை  இருப்பதாக ஆதரவு வாக்கை அளித்துள்ளது.

பல்கலை மானிய கமிஷனை நீக்கி உயர்கல்வி கமிஷனை கொண்டு வர அ தி மு க எதிர்ப்பு தெரிவித்தது.  அதேபோல் அணை பாதுகாப்பு மசோதாவையும் அதிமுக எதிர்த்தது.    நிதி ஒதுக்கீடில் பாரபட்சம் காட்டப் படுவதையும்  எதிர்த்தது.  இவ்வளவு கடுமையாக எதிர்த்துவிட்டு  ஏன் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்?

சிவசேனை பிஜுஜனதாதளம் கட்சிகளே வெளிநடப்பு செய்தன.

அமைச்சர் ஜெயகுமார் மகனும் அதிமுக எம்பியுமான ஜெயவர்தன் பேசும்போதும் மத்திய அரசு மாநில விவகாரங்களில் தலையிடுவதை கண்டித்து பேசினார்.

வருமான வரித்துறை சமீப நாட்களாக முதல்வரின் உறவினர் செய்யாதுரையின் வீட்டில் நடத்திய ரைடுகள்   120    கோடி பணம்    103  கிலோ தங்கம் பறிமுதல் வரை என்பதாக செய்திகள் வந்தன.   அதை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி படுத்தியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் எப்படி  எடப்பாடி மோடிக்கு எதிராக வாக்களிக்க ஒப்புக் கொள்வார்?

ரஜினியின் சமீப கால,  எட்டு வழி சாலைக்கு ஆதரவு பேச்சு செங்கோட்டையனுக்கு பாராட்டு போன்றவை அவரை அதிமுகவுக்கு அருகில் கொண்டு செல்கிறது.

ரஜினி பா  ஜ க வின் ஆள் என்பது எல்லாருக்கும் தெரியும்.

இந்த முக்கூட்டணி மக்களிடம் எடுபடுமா?

பாஜக வுடன் யார் சேர்ந்தாலும் அவர்கள் மக்களால் ஓரங்கட்டப் படுவார்கள்.

இது தமிழ்நாட்டு நீதி!

கர்நாடக சிரூர் மடாதிபதி விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது தம்பி புகார்?!

மடாதிபதிகள் என்றாலே சர்ச்சைதான்.

இவர்கள் மதம் வளர்க்கிறார்களோ இல்லையோ அவர்களை சுற்றி எதிரிகளை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏனென்றால் இவர்கள் கையில் ஏராளமான சொத்துக்கள் நிர்வாகத்தில் இருப்பதால் சொத்தாசை பிடித்தவர்கள் போட்டி  போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

சொத்துக்களை அவற்றின் வருமானங்களை வளைத்துப்போட கோஷ்டிகள் முயன்று கொண்டே இருப்பார்கள்.

உடுப்பி மாவட்டம் சிரூர் மடத்தின் 30 வது மடாதிபதி  54  வயதான லட்சுமி தீர்த்த சுவாமி.

சிரூர் மடாதிபதி லட்சுமி தீர்த்த சுவாமியின் வக்கீல் கூறுகையில் மடாதிபதி தன்னிடம் கடந்த மாதம் வந்து புத்திகே மடத்தை தவிர கிருஷ்ணா மடம் உட்பட ஆறு மடங்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என கோரியிருக்கிறார்.   அதற்கான ஏற்பாடுகளில் வக்கீல் இறங்கியிருந்த வேளையில் திடீர் என அவரது இறந்தது மர்மமாக உள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது.  காவல் துறையில் புகார் அளித்தவர் அவரது தம்பி லதாவியா ஆச்சார்யா.

அவரது உடல் அமர்ந்த கோலத்தில் வைக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

முதல்வர் குமாரசாமி தேவைப்பட்டால் உரிய விசாரணை நடத்தப் படும் என்று தெரிவித்தார்.

மடாதிபதிகளுக்கு ஏன் சொத்து நிர்வாகம்.?

இஸ்ரேல், யூத நாடு என நாடாளுமன்ற மசோதா நிறைவேறியது!!!

இஸ்ரேல் யூதர்களின் நாடு .

அதாவது பலவந்தமாக கட்டமைக்கப் பட்ட நாடு.

அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இஸ்ரேலிய அரபு உறுப்பினர்கள் உள்ளனர்.  இஸ்ரேலிய அரபு மக்கள் இருபது சதம் உள்ளனர்.

மொத்தமே  90 லட்சம் மக்கள் தொகையில் 20 %  அரபு மக்களை கொண்டிருக்கிற இஸ்ரேல் சட்டப்படி சம உரிமை பெற்றிருந்தாலும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப் படுகிறார்கள்.  அரபு மொழிக்கான அந்தஸ்தும் குறைந்து விட்டது.

யூத நாடாக ஆக்குவதா வேண்டாமா என்பதை எட்டு மணி நேரம் விவாதித்து கடைசியில் 62   எம்பிக்கள் ஆதரவுடன் மசோதா  நிறைவேறியது.    55  எம்பிக்கள் எதிர்த்து வாக்களித்தனர் என்பதே ஆச்சரியம்.

பிரதமர் நெதன்யாகு மசோதா நிறைவேற்றத்தை சிறப்பு வாய்ந்த தருணம் என புகழ்ந்துள்ளார்.

யூத மதம் ஏசு கிறிஸ்துவை கடவுள் என்றோ இறைவனின் தூதர் என்றோ ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனாலும் கிருஸ்தவர்கள் யூதர்களை எதிரிகளாக பார்ப்பதில்லை.   ஏனென்றால் ஏசு யூதர்தானே.

யூத மதம் கடவுளை பெயர் சொல்லி  அழைக்காமல்  மிகவும் மரியாதையுடன்

‘அவர்’ ‘அந்த பெயர்’ என்று அழைக்கின்றனர்.   நிச்சயம் வருவார் என்று கடவுளை  எதிர் பார்த்து காத்திருக்கும் யூதர்கள்  வித்தியாசமானவர்கள்.

பலம் ஒன்றே வாழவைக்கும் என்பதை இஸ்ரேலிக் காரர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுவும் ஜெருசலத்தை அவர்கள் கைப்பற்றி அதுவே தங்கள் தலைநகரம் என்று அறிவித்திருப்பது வலுவுள்ளவன் எதையும் செய்யலாம் என்பதை தற்காலத்தில் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

அஹமது டிபி என்ற அரபு எம் பி  மசோதா நிறைவேறியது ஜனநாயகம் செத்து விட்டது என்பதை காட்டுகிறது என்றார்.

ஜனநாயகம் இருந்திருந்தால் இஸ்ரேல் நாடே உருவாகி இருக்காதே!