Home Blog Page 73

சிபிஎஸ்இ- ன் மொழி வெறி முடிவுகளுக்கு எப்படி முடிவு கட்டுவது?

நீட் தேர்வு நடத்தும் போது சி பி எஸ் இ கடைப் பிடிக்கும் நடைமுறைகள் மாநில மொழி மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பது குறித்து கண்டனக் குரல்கள் எழுந்தபோதும் அது திருந்திய பாடில்லை.

சமீபத்தில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை தேசிய அளவில் தமிழ் ஆங்கிலம் தெலுங்கு உள்பட இருபது மொழிகளில் எழுதும் வசதியை,  ஏதோ ஒரு நீதிமன்றம் நான்கு மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் , 17  பிராந்திய மொழிகளை நீக்கி விட்டு இந்தி ஆங்கிலம் சமஸ்க்ரிதம் ஆகிய மொழிகளில் மட்டும் எழுத சி பி எஸ் இ உத்தரவிட்டது.

நாடெங்கும் பெருத்த எதிர்ப்பு எழுந்த சூழலில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலையிட்டு எப்போதும் போல் தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் தேர்வை எழுத உத்தரவிட்டுள்ளதாக விளக்கம் அளித்திருக்கிறார்.

எல்லாம் சரி.   இந்த முக்கிய முடிவை எடுக்கும் முன்பு அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று சி பி எஸ் இ அறிவிக்காதது ஏன்?

இதேபோல் தான் தோன்றித் தனமாக சி பி எஸ் இ எடுக்கும் முடிவுகள் நாடெங்கும் சிக்கல்களை உருவாக்கும் என்பது அவர்களுக்கு தெரியாதா?

இப்படி தவறான நடவடிக்கை எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டார்கள்.

இல்லையென்றால் இதற்கும் மத்திய அரசு உடந்தை என்றுதான் பொருள் கொள்ளப்படும்.

இவர்கள் மொழி வெறித் தாக்குதல் களை நிறுத்த மாட்டார்கள்.  இப்போதைக்கு பின் வாங்கியிருக்கிறார்கள்.  மீண்டும் மீண்டும் தாக்குதல்களை தொடர்வார்கள் என்பதே வெகுமக்களின் சந்தேகம்.

போக்குவது ஆட்சியாளர்களின் கடமை.

மிரட்டும் ஆளுநர், எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், துதி பாடும் ஆளும் கட்சி; என்னவாகும் மாநில சுயாட்சி?

ஆளுனரை பற்றி விவாதிக்கக்கூட விதிகளில் இடமில்லை என சபாநாயகர் அனுமதி அளிக்க சட்டமன்றத்தில் மறுக்கிறார்.

வேறு எங்குதான் விவாதிப்பது. ?

அதுவும் ஆளுநர் மிரட்டுகிறார்; பிரிவு 124  இ த ச படி என்னை செயல் பட விடாமல் தடுத்தால் ஏழு ஆண்டுகள் சிறை என்று மிரட்டுகிறார்.

ஆய்வு செய்ய ஆளுநருக்கு உரிமை உண்டா இல்லையா என்றால் இதுவரை இல்லை என்பதுவே பதிலாக இருந்தது. வேறு யாரும் இப்படி ஆய்வு செய்ய சென்றதில்லை.

வேறு எந்த மாநிலத்திலும் இது போல் நடக்க வில்லை. ஏன் பா ஜ க ஆளும் மாநிலங்களில் கூட இப்படி நடக்க வில்லை.  ஏன் இங்கு மட்டும் நடக்க வேண்டும்?

ஆளும் கட்சியில் போட்டி போட்டுக் கொண்டு இதில் ஒன்றும் தவறு இல்லை என்கிறார்கள்.    முதல் அமைச்சர், பான்டியாராஜன், வேலுமணி, செல்லூர் ராஜு , ஓ எஸ் மணியன், ஜெயக்குமார் என்று பட்டியல் நீள்கிறது.

இ த ச பிரிவு ஆளுநர் மீது தாக்குதல் நடத்துவதை பற்றி பேசுகிறது.   யார் இங்கு ஆளுனரை தாக்க முயற்சித்தது.?

இவர்தான் ஆய்வை தொடர்வேன் என்று மிரட்டுகிறார்.    தி மு  க வை பொறுத்த வரை நாங்கள் அவர் ஆய்வுக்கு சென்றால் நாங்கள் கண்டித்து ஆர்பாட்டம் செய்வோம் என்கிறார்கள்.

இது எங்கு போய் முடியும்?

ஏற்கெனெவே ஆர்ப்பாட்டம் நடத்திய 1111  திமுகவினர்  மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல் துறை.

வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் நடக்கவில்லை.  இங்கு மட்டும் ஏன் நடக்க வேண்டும்?

ஆளுனரைபோல் குடியரசுத் தலைவரும் நானும் மாநிலம் தோறும் ஆய்வு செய்யப் போகிறேன் என்றால் மோடி ஒத்துக் கொள்வாரா?     அத்தகைய குடியரசுத் இப்போது  இல்லை  என்பது வேறு.

மொத்தத்தில் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டிய முறையை ஆளுநர் தேர்ந்தெடுத்தது ஏன்  ?

தன் மீதான குற்றச்சாட்டு  பிரச்னையை திசை திருப்பவா?  நாளை பா ஜ க கூட்டணி அமைக்க அடித்தளம் போடுகிறாரா?   குடியரசுத் தலைவர்  ஆட்சிக்கு முன்னோடியா?

எப்படி இருந்தாலும் ஆளுநர் போக்கு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

அரசியல் செய்கிறாரா ஆளுநர் பன்வாரிலால் ?!

ஆளுநரைச் சொல்லி குற்றமில்லை.

அவர் பா ஜ க வால் நியமிக்கப் பட்டவர்.    பா ஜ க வின் அரசியல் திட்டங்களுக்கு முட்டுக் கொடுப்பது அவர் கடமை.

அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துவோர் அவரது கொள்கைகளுக்கு வலு சேர்க்க வேண்டாமோ?

ஆட்டுக்குத் தாடி போன்று நாட்டுக்குத் தேவையில்லை ஆளுநர் என்பது அண்ணாவின் கூற்று.

ஆளவந்தோர் பதவியை காப்பாற்றிக் கொள்ள ஆளுநர் அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதை தடுத்திருக்க வேண்டும்.   ஆட்சேபித்து இருக்க வேண்டும்.

இவர்களால் முடியாது.    எனவேதான் எதிர்க்கட்சி அந்த வேலையை செய்கிறது.

மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுகிறார்கள்.

நாமக்கல்லில் கறுப்புக் கொடி காட்டியோர்  293  பேர் கைது செய்யப்பட்டு  சிறைக்கு அனுப்பப் பட்டிருக் கிறார்கள்.

எனவே இந்த அடக்கு முறையை கண்டித்து இன்று ஸ்டாலின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகி இருக்கிறார்.

அவர் கைதானதால் மாநிலம் முழுதும் தி மு க வினர் கைதாகி இருக்கிறார்கள்.

தூய்மை பணியை நாமக்கல் பஸ் நிலையத்தில் தொடங்க இருந்த ஆளுனர் எல்லா இடங்களிலும் சுத்தப் படுத்தி விட்டு இவர் சுத்தப் படுத்துவதற்காக  கொஞ்சம் இடத்தை குப்பையாக வைத்திருந்ததை கவனித்து விட்டு தொடங்காமலே திரும்ப வந்திருக்கிறார்.

இந்த போலித்தனம் தேவையா?

நாட்டில் எத்தனை மாநிலங்களில் ஆளுநர்கள் ஆய்வு நடத்துகிறார்கள்?

ஆளுமை வாய்ந்த முதல் அமைச்சர் இருக்கும் பட்சத்தில் ஒரு ஆளுநர் இப்படி அதிகாரம் செலுத்துவாரா?

சட்டப்படி ஆளுநர் செய்வது சரியில்லை என்பதுதான் உண்மை.

ஆளும் கட்சியே அமைதியாக இருக்கும் போது மற்றவர்கள் ஆட்சேபிக்கலாமா?   வேறு வழி?  உரிமையை விட்டுக் கொடுத்து விடலாமா?

மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி செய்வதை கொச்சை படுத்தும் வகையில் மறைமுகமாக யார் ஆள திட்டமிட்டாலும் அதை முறியடித்தே தீரவேண்டும்.

ஆளுனரை திரும்ப அழைத்துக்  கொள்ள வேண்டும் மத்திய அரசு.  பா ஜ க அதை செய்யாது.

பாலியல் புகாரில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி இன்னும் சிறையில்.    ஆளுநர் பெயர் அதில் அடிபட்டதே உண்மை என்ன?

பல்கலை கழகங்கள் நிர்வாகத்தில் ஆளுநர் வேந்தர் அடிப்படையில் தலையிடுவதில் கூட வரையறை இருக்க வேண்டும்.

பதவிக்கு பெருமை சேர்க்க வேண்டும் பன்வாரிலால்.     ஆனால் இதுவரை அப்படி  இல்லை.  இனியாவது சுய பரிசோதனை செய்வாரா?

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மாண்புமிகு நீதியரசர் அவர்களே !

18 எம் எல் ஏக்கள் தகுதி இழப்பு வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை என  மாண்புமிகு நீதியரசர் கிருபாகரன் அவர்கள் கேள்வியெழுப்பி காவல்துறை அறிக்கை கேட்டு உத்தரவிட்டுள்ளார்.

வரவேற்க வேண்டியதுதான்.    நீதிமன்ற மாண்பு காக்கப் பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

தங்க தமிழ்ச் செல்வன் மீது நடவடிக்கை கோரி ஒரு வழக்கறிஞர் முறையிட அதற்கும் விசாரணை வரலாம்.    விசாரிக்கட்டும்.   அவர் தவறு செய்திருந்தால் தண்டிக்கட்டும்.

இந்த விசாரணை மற்றொரு கோணத்திலும் வரவேற்கப் பட வேண்டிய ஒன்று.

எல்லா பாமர மக்களுக்கும் ஏற்பட்ட சந்தேகம் இன்னும் தீர்க்கப் படவில்லை.

கொறடா உத்தரவை மீறி அரசை எதிர்த்து வாக்களித்த ஓ பன்னீர்செல்வம் அமைச்சராக அதே அமைச்சரவையில் தொடர்கிறார்.

முதல் அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனு கொடுத்த 19   எம் எல் ஏக்களில்    ஒருவர்   பின் வாங்கியதால் அவர் மட்டும் மன்னிக்கப் பட்டு மற்ற  18 பேரும் தகுதி இழக்கிறார்கள் என்று ஒரு தீர்ப்பு வருகிறது.

ஓ பி எஸ் உள்ளிட்டவர்களின் தீர்ப்பு வந்த போதே இந்த தீர்ப்பும் வந்திருக்கலாம்.    அது முதலில் வருகிறது.       தீர்ப்புக்கு ஒதுக்கப் பட்ட நாளில் இருந்து ஏறத்தாழ  ஐந்தரை மாதங்கள் கழித்து இந்த தீர்ப்பு வருகிறது.

இரண்டு தரப்பிலும் மெத்தப் படித்த வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்த  தீர்ப்பு இது.

தாமதித்து தீர்ப்பு வழங்கியதால் ஏற்பட்ட இழப்புகள் எத்தனை எத்தனை.   அதை யார் ஈடு கட்டுவது.?

அது நீதிமன்றங்களின் தனி உரிமை.     தாமதத்தை யாரும் கேள்வி கேட்க கூடாது.   நீதி மன்ற அவமதிப்பாகிவிடும்.    வேலைப் பளு போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.  அந்த இழப்புகளை  பொதுமக்களும் சம்பந்தப் பட்ட வர்களும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

பொதுவாக நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பது வேறு.     தீர்ப்பு சொன்ன பிறகு குறிப்பிட்ட நீதிபதி மீது உள்ளர்த்தம் கற்பித்து குற்றம் சுமத்துவது என்பது வேறு.

உணர்ச்சிப் பெருக்கில் குற்றம் சுமத்துவது சரியல்ல.    நீதிபதிகளை சந்தேகிப்பதும் உள்ளர்த்தம் கற்பித்து குற்றம் சாட்டுவதும் குற்றமே.   தங்க தமிழ்ச் செல்வன் கூறியது பற்றி அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.    ஆதாரமில்லாமல் , வழங்கப் பட்ட தீர்ப்பல்ல.  வாங்கப்பட்ட தீர்ப்பு என்றெல்லாம் பேசுவது தவறு.   அதற்கு ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும்.

அதற்காக ஊடகங்களில் கருத்து சொல்வோர் விவாதிப்போர் மீதெல்லாம் நடவடிக்கை என்று தொடங்கினால் கருத்து சுதந்திரம் என்ன வாகும் என்பதையும் நீதிபதிகள் கருத்தில் கொள்ள  வேண்டும்.

விமர்சனம் செய்வோரை பாதுகாக்கும் கடமை கொண்ட நீதிபதி ஒருவரே இத்தகைய உத்தரவை பிறப்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதே நேரத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு நீதிபதிகளை அவதூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.

இந்த வழக்கில் மறைந்திருக்கும் பல மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப் பட வில்லை.

இரண்டு  நீதிபதிகள்  கருத்து  மாறுபடுகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?   மாறுபட்ட பார்வை தானே?

மூன்றாவது நீதிபதி யின் பார்வைதான் இறுதி செய்யும்.  கட்டுப் படுத்தும்.

அதற்கும் மேலே உச்ச நீதி மன்றம் என்ன சொல்லப் போகிறதோ? எப்போது இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு  வருமோ?     அதற்குள் இந்த ஆட்சி தன் காலத்தை ஒட்டி விடும் என்பதுதானே நிதர்சனம்.

தாமதிக்கப் பட்ட நீதிகள் விமர்சனத்துக்கு உள்ளாகத்தான் செய்யும்.  அந்த விமர்சனம் நியாயமாக இருக்க வேண்டும்.

என்ன நடந்தாலும் நீதி மன்றங்கள் தான் பாமர மக்களுக்கு கடைசி புகலிடம்.    அதை நாமும் மறக்கக் கூடாது.  நீதிமன்றங்களும் மறக்கக் கூடாது.

ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப் பட்ட பணத்தை சுருட்டிய தினகரன் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு?

கோபத்தில்தான் உண்மை வெளிவரும்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கடி சர்ச்சை பேச்சுக்களை அள்ளித் தெளிப்பவர்.

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம் என்றார்.

பணம் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றார்.

இப்போது வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் பேசும்போது ஜெயலலிதா கொள்ளையடித்து வைத்திருந்த பணத்தை தினகரன் சுருட்டிக் கொண்டு ஸ்டாலினை  முதல் அமைச்சர் ஆக்கவும் தான் துணை முதல்வர் ஆகவும் திட்டம் இடுவதாக பேசியிருக்கிறார்.

இதன் மூலம் ஜெயலலிதா கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்ட அமைச்சர் என்ற புகழையும் பெறுகிறார்.

சீனிவாசன் இன்னும் கொஞ்சம் மனம் திறந்து பேசினால் இன்னும் என்னவெல்லாம் வெளிச்சத்துக்கு வருமோ?

மன்சூர் அலி கான் கைதும் பியுஷ் மானுஷ் கைதும் ஒன்றா ??!!

சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்யச் சென்ற நடிகர் மன்சூர் அலி கான் ‘ மக்கள் எதிர்ப்பை மீறி பசுமை வழிச்சாலையை அமைத்தால் எட்டு பேரை  வெட்டிக் கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்வேன் ‘ என்று ஆவேசமாக பேசியதால் கைது செய்ய பட்டு  13 நாள் காவலில் சிறையில் இருக்கிறார்.

அப்படி பேசினாரா எண்ணம் இருந்ததா வெறும் ஆவேசத்தில் பேசியதா என்பதெல்லாம் விசாரணைக்கு உரியது.   எனவே அவரது கைதை யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை.

ஒன்று மட்டும் கேட்டார்கள்.    எஸ் வி சேகரை மட்டும் ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

இன்று எஸ் வி சேகர் நீதிமன்ற அழைப்பாணை ப்படி நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார் .    பிணை கிடைப்பதில் சலுகை காட்டக் கூடும்.

மன்சூர் அல் கானைப் பொறுத்த வரை உணர்ச்சி வசப் படுபவர்.   அதற்காக வார்த்தைகளை பொறுப்பின்றி உதிர்க்கக் கூடாது.

ஆனால் பியுஸ் மானுசைப் பொறுத்த வரையில் அவர் மக்களை திரட்டி போராடுபவர் மட்டும் தான்.   வன்முறைக்கு வித்திடுபவர் அல்ல.  அவரை கைது செய்து சிறையில் அடைத்தது ஏன்?

மக்களை திரட்டுவது குற்றமா?    கருத்து  சுதந்திரம் பறிக்கப் படுவது நல்லதல்ல.

அதேபோல் கல்லூரி மாணவி வளர்மதியும் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

இதை நீதிமன்றம் தட்டிக் கேட்காதா?

அரச பயங்கரவாதம் என்பது இதுதானோ?

மக்கள் போராட்டங்களை அடக்கும் எந்த அரசும் நீடித்ததாக வரலாறு இல்லை.

7 ஆயுள் கைதிகள் விடுவிப்பில் மத்திய அரசு காட்டும் வஞ்சனை! மாநில அரசு காட்டும் கையாலாகாத்தனம்??

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகள் ஏழு பேரை  27  ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பிறகும் விடுவிப்பதில் மத்திய மாநில அரசுகள் காட்டும் ஓரவஞ்சனையும் பாரபட்சமும் கையாலாகத் தனமும் எவரையும் துயரத்தில் தள்ளும் .

மத்திய புலனாய்வு நிறுவங்களால் தாக்கல் செய்யப் பட்ட வழக்குகளில் சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை விடுவிக்கும் முன்பு மத்திய அரசிடம் தகவல் தர வேண்டும் என்பதுதான் சட்டமே தவிர ஒப்புதல் பெற அவசியமில்லை என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாக இருந்தது.   இருக்கிறது.

ஆனால்  கு.ந ,சட்டம் பிரிவு  161  ன் படி முடிவு எடுப்பதற்கு அந்த அவசியம் கூட கிடையாது.

மாநில அரசே முடிவு எடுத்து அமுல் படுத்தலாம்.

இத்தனை ஆண்டு காலமாக விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இருந்தது எல்லாம் மத்திய அரசிடம் தகவலா ஒப்புதலா என்ற பிரச்னைதான்.

ஜெயலலிதா சட்ட மன்றத்திலேயே வீராவேசமாக ஒப்புதல் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும்  விடுதலை செய்வேன் என்று தேவை இல்லாமல் அறிவித்து மத்திய அரசு உச்ச நீதி மன்றம் சென்று தடை வாங்க உதவி செய்தார்.     அதாவது ஜெயலலிதாவுக்கு உண்மையில் அவர்களை விடுவிக்க மனம் இல்லை.

இருந்திருந்தால் பிரிவு 161ன் படி விடுதலை செய்து விட்டு வருவதை எதிர்கொள்ள தயாராகி இருப்பார்.

எல்லாம் நாடகம்.    இப்போதும் கூட மத்திய அரசிடம் மாநில அரசு விளக்கம் கேட்க  மத்திய அரசு தேவை இல்லாமல்  குடியரசுத் தலைவரிடம் கருத்து கேட்க அவர் மூலமாக மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்து தகவல் அளித்திருக்கிறதுமத்திய அரசு.

இதற்கு என் மகனை கருணை கொலை செய்து விடுங்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருக்கிறார்.

நாட்டில் நீதி எல்லாருக்கும் சமமும் இல்லை.        வஞ்சகத்தில் யாரும் சளைத்தவர்களும் இல்லை.

அவர்கள் அப்படி இருப்பதில்  வியப்பில்லை.  நம்மிலே இத்தனை அடிமைகளா?

தாமதத்தால் அநீதி இழைக்கும் நீதிமன்றங்கள்? 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு தீர்ப்பு எழுப்பும் கேள்விகள்?

18 எம் எல் ஏக்கள் தகுதியிழப்பு வழக்கில் தாமதத்தால் அநீதி இழைத்திருக்கின்றன நீதி மன்றங்கள்.

எது சரி எது தவறு என்ற வாதம் தாண்டி இந்த தாமதத்திற்கு என்ன விளக்கம் கூறப் போகின்றன நீதிமன்றங்கள்.

ஆயுளே ஐந்து வருடங்கள்.    அதில் வழக்கில் ஒரு வருடம் போனால் மக்கள் தீர்ப்புக்கு என்ன மதிப்பு?  ஐம்பது லட்சம் மக்களின் பிரதிநிதிகள் செயல் பட விடாமல் தடுக்கப் பட்டிருக்கின்றனர்.

தகுதி இழப்பு செல்லும் என்று தலைமை நீதிபதியும் செல்லாது என்று இன்னொரு நீதிபதியும் தீர்ப்பு அளித்து இருப்பதால் மூன்றாவது நீதிபதி தீர்ப்பு சொல்ல இன்னும் நான்கு மாதமாகலாம்.   அதன் மீது உச்ச நீதி மன்றம் சென்று எப்போது தீர்ப்பு வருமோ தெரியாது.

தீர்வைப் பெற தீர்ப்புகள் உதவாது என்பதுதான் நீதி போலிருக்கிறது.

நீதிமன்றங்கள் சுய பரிசீலனை செய்ய வேண்டும்.   மனசாட்சிப் படி தீர்ப்பு சொன்னால் மட்டும் போதாது.   அப்படித்தான் தீர்ப்பும் இருக்கிறது என்று மக்களும் நம்ப வேண்டும்.

தீர்ப்பு சொல்ல ஐந்தறைமாதங்கள் எடுத்துக் கொண்டால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் ?

புதுவை வழக்கிலும் இப்படித்தான் தாமதம் ஆனது.   அது நியமன உறுப்பினர் விவகாரம் என்பதால் பிரச்னை இல்லை.    அதுவும் புதுவைக்கு ஒரு தீர்ப்பு தமிழகத்திற்கு ஒரு தீர்ப்பு என்றால் சாமானியன் குழம்பித்தான் போவான்.      எங்கோ தவறு நிகழ்கிறது.

ஆனால் இங்கு ஒன்பது மாதங்களாக ஒரு அரசின் மீது பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியுடன் விடை கிடைக்காமல் அரசு இயங்கி வருகிறது .    நம்பிக்கை வாக்கு கோராமலேயே எத்தனை காலம் முடியுமோ அத்தனை காலம் ஓட்ட இந்த அரசு நினைக்கிறது.

மத்திய அரசும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும்வரை இந்த தலையாட்டிகள் ஆட்சியை நீட்டிக்க விரும்புகிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல் படுத்தி  இந்த தலையாட்டிகளுடன் கூட்டு வைத்து காலூன்ற முயற்சிக்கும் மோடியின் அரசு.

அரசியல் கட்சிகள் சூதாட்டம் ஆடலாம்.

அதற்கு நீதிமன்றங்கள் துணை போகலாமா?

ஆர்.எஸ்.எஸ் முகாமுக்கு பிரணாப் முகர்ஜி சென்றதன் செய்தி என்ன?

ஆர் எஸ் எஸ் முகாமுக்கு ஒரு காங்கிரஸ் தலைவர் செல்கிறார் என்றால் அதற்கு ஒரே அர்த்தம் தான் உண்டு.    அவர் பாதை மாறத் தயாராகி விட்டார் என்பது தான் அந்த செய்தி.

சமய கொள்கை , மதம், வெறுப்பு சகிப்பின்மை இந்தியாவின் அடையாளம் அல்ல என்று பிரணாப்முகர்ஜி சொல்லித்தான் ஆர் எஸ் எஸ் காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?

அது தொடர்பாக நீண்ட நெடிய விவாதங்கள் எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இவர் போய் அவர்களை மாற்றி விட முடியுமா?

அந்த நம்பிக்கையில் இவரும் போகவில்லை.   அவர்களும்  எங்களுக்கு பாடம் எடுக்க வாருங்கள் என்று அழைக்க வில்லை.

ஆர் எஸ் எஸ் தீண்டத் தகாத இயக்கம் அல்ல என்பதை , மத வாத இயக்கம் அல்ல என்பதை   , எல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.    இதோ பாருங்கள் இப்போது காங்கிரஸ் தலைவர்களே எங்களை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

சரி. அதற்கு ஏன் பிரணாப் ஒத்துப் போக வேண்டும்.?

சுதந்திரப் போராட்டக் காலத்தில் சொல்வார்கள்.   காங்கிரஸ்  காரனை கீறிப் பார்.  ஒரு இந்து மகாசபை காரன் தெரிவான் என்று.

அதே போல் பார்ப்பனர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் சங்கத்துக்கு வேண்டியவர்களே.

காங்கிரஸ் கட்சியில்  இருந்தாலும் அவர்களுக்கு  சங்க பாசம் உள்ளே இருக்கும்.

பூனே சத்பவன் பிராமணர்கள் தான் சங்கத்தின் சர் சங் சாலக் ஆக வர முடியும் என்ற விதியை தளர்த்த தயாரா?

ஜோதிபாசு முப்பது ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கட்சி முதல்வர்.  பகவத் கீதையை படிக்கச் சொன்னார்.

நம்பூதிரி பாட் கேரள மூத்த மார்க்சிஸ்டு தலைவர்.   வர்ணாசிரம பெயரை விட்டுக் கொடுக்க வில்லையே.

சோம்நாத் சாட்டர்ஜி மார்க்சிஸ்ட் தலைவர். தான் ஒரு பார்பனர் என்பதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்டார்.     இப்போதும் மார்க்சிஸ்டுகள் பிராமண கட்சி காரர்கள் இந்திய கம்யுனிஸ்டுகள் பிராமணர் அல்லாத கம்யுனிஸ்டுகள் என்றும் தான் அறியப் படுகிறார்கள்.

நாளை  தேவைப் படும் என்பதால் பிரணாப்பை சங்கம் குறி வைக்கிறது.

தலைமைக்கு வெற்றிடம் இருந்தால் அதை நிரப்ப முதலில்  தகுதி வாய்ந்த பார்ப்பனர், கிடைக்காத பட்சத்தில் பார்ப்பனீய அடிமை,  அடுத்து பார்ப்பனீய நட்பு பாராட்டுபவர், கடைசியில் பார்ப்பநீயத்துக்கு எதிராக வராதவர் , இதில் முதல் இடத்தில் பிரணாப் பொருந்துவார் என்பது ஒரு கணிப்பு.

எப்போதும் சங்கம் நான்கைந்து தேர்வுகள் வைத்திருக்கும்.

இதையும் பாராட்டுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நல்ல பண்பாடாம்.   ஏன் மார்க்சிச்டுகளிடம் போய் பேச வேண்டியதுதானே?      நக்சலைட்டு களிடம் பேச வேண்டியதுதானே?

சங்கம் தன்னை சுய பரிசோதனை செய்ய முன்வந்தால் நல்லதே?!

சிறுபான்மை , தலித் , பிற்பட்ட  மக்களின் உள்ளக் குமுறல்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க சங்கம் தயாரானால் நல்லதே?!

ஆனால் அது நடக்கும் என்று தோன்றவில்லை.

விட்டுக் கொடுக்க ஆரம்பித்தால் அது மதத்தில் தாங்கள் வைத்திருக்கும் ஆதிக்கத்தையும் தகர்த்து விடும் என்பது அவர்களுக்கு தெரியும்.

எனவே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

கடைசி வரை தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டவே முயற்சிப்பார்கள்.   முடியாவிட்டால் இந்து  அமைப்பே தகர்ந்தால் கூட கவலைப் பட மாட்டார்கள்.

இது ஆதிக்க மனோபாவம் கொண்ட எல்லாருக்கும் பொருந்தும்.

வேறு வழியில்லை என்ற நிலைக்கு அவர்களை கொண்டு வந்தால் மட்டுமே மாற்றங்களை  அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.   அதற்கு மற்றவர்கள் ஒற்றுமையுடன் பாடு படவேண்டும்.

காலம் அந்த மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புவோம்.

விவாதம் நடத்திய தொலைக்காட்சி மீது வழக்கு!? இது எடப்பாடி நீதி??!!

கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி, ‘தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா அரசியல் காரணங்களுக் காகவா’  என்ற தலைப்பில் விவாத மேடை நிகழ்ச்சி நடத்தியது.

எல்லா கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அதில் தனியரசு எம் எல் ஏ வும்  இயக்குனர் அமீரும் பேசும்போது பா ஜ க வினர் தகராறு செய்துள்ளனர்.

எல்லாம் வீடியோ எடுக்கப் பட்டுள்ளதால் யார் யார் என்னென்ன செய்தார்கள் என்பதை அதிலேயே பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வளவு வெளிப்படையாக நடந்த நிகழ்ச்சியில் ,

கலாட்டா செய்தவர்களை விட்டு விட்டு தொலைகாட்சி மீதும் இயக்குனர் அமீர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

சட்ட மன்றத்தில் முதல்வர் விசாரணை முடிவில் நடவடிக்கை என்று அறிவிக்கிறார்.

எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இப்படி படுகொலை செய்யப் படுகிறதே நீதி?

பா ஜ க வினர் தகராறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை கிடையாதா?

அமீர் பாரதிராஜா சீமானுடன் சென்று காவல் துறை தலைவரிடம் புகார் செய்திருக்கிறார்.

இவ்வளவு நடந்திருக்கிறதே ஏன் புதிய தலைமுறை நடந்ததை அப்படியே ஒளிப்பதிவு செய்யப் பட்டதை ஒளிபரப்பக் கூடாது?

எந்த சட்டம் அதை தவறு என்று சொல்லும்?

மக்களுக்கு உண்மை தெரிய வேண்டாமா?

யாருக்கு அஞ்சுகிறார்கள்?

ஊடகங்கள் தவறு செய்யலாமா ?