Home Blog Page 79

பட்ஜெட்; மோடி அரசின் மாயா ஜால அறிவிப்புகள்; நடைமுறைக்கு வருமா??!!

முதல் முறையாக பட்ஜெட்டை ஆங்கிலத்திலும் இந்தியிலும் படித்ததுதான் அருண் ஜெட்லியின் சாதனை.       இந்தியை ஒருவழியாக பட்ஜெட் உரையில் திணித்தாகிவிட்டது.

இனி தொடரும் என்று உறுதி செய்யப் பட்டு விட்டது.     எதில் வேண்டுமானாலும் பேசி விட்டுப் போங்கள்.   அப்போதே மாநில மொழிகளில் பெயர்த்துச் சொல்லுங்கள்.     பிரச்னையே இல்லை.   அது வரும் வரை இந்த திணிப்பை எதிர்த்துக் கொண்டுதான் இருப்போம்.

வருமான வரி விலக்கை ஐந்து லட்சம் ஆக உயர்த்தப் படும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்  போனது.    மாத வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் நாற்பதாயிரம் நிரந்தர விலக்கு என்று ஆறுதல் தர முயன்றி ருக்கிறார்கள்.

நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு போதிய நிதி  ஒதுக்கப் பட வாய்ப்பில்லை. மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் 75,000 கோடி போதாது. தமிழகத்துக்கு என்று எந்த புதிய வாய்ப்பும் இல்லை.

250 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவங்களுக்கு மட்டும் ஐந்து சதம் வரி குறைப்பு செய்யப் பட்டிருக்கிறது.

பெரு நிறுவங்களுக்கு வழங்கப் படும் சிறப்பு சலுகைகள் நீடிக்கப் படும்.

வழக்கம் போல விவசாயம் சிறப்பு கவனம் பெறும் என்று சொல்லி விட்டு அதற்கான நிதி எங்கே இருந்து வரும் என்று சொல்லாமல் விட்டு விட்டார்கள்.

குறிப்பிடும் அறிவிப்பு வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்த பட்ச  ஆதரவு  விலை உற்பத்தி செலவில்  1.5  மடங்கு உயர்வு.        இதை எப்படி அமுல் படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்துதான் இதன் உண்மைத் தன்மை வெளிவரும்.

பயிர் காப்பீட்டு திட்டம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.      லாபகர  விலை ,  உத்தரவாதமான பயிர் காப்பீடு ,  இடைத்தரகர் இல்லா சுலப சந்தைப் படுத்தும் வசதி இருந்தாலே விவசாயிகளுக்கு வேறு எந்த சலுகைகளும்  தேவை இல்லை.

இந்த ஒரு அறிவிப்பை மட்டும் மோடி அரசு உறுதி செய்தால்   அது  விவசாயிகள் வாழ்வில்  பெரிய  மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

வெறும் வாய்ச்சவடால் என்பதே முந்தைய மோடியின் அறிவிப்புகளின் தன்மை.

எனவே நம்பகத் தன்மையை மோடி அரசு பெற வேண்டுமானால் எப்படி இந்த அறிவிப்புகளை அமுல் படுத்த போகிறார்கள் என்பதை வைத்தே எடை போடுவார்கள் மக்கள்.

இப்போது வந்திருக்கும் மூன்று பாராளுமன்ற இரண்டு சட்ட மன்ற இடைதேர்தல் களில்

பா ஜ க தோற்றிருப்பது மக்கள்  பா ஜ வை  நம்பத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.

இலங்கையின் அடாவடிச்சட்டமும் இந்தியாவின் கள்ள மௌனமும் ??!!

தமிழ் மீனவன் எவனும் இனி மீன் பிடிக்கக் கூடாது என்று இலங்கை முடிவெடுத்து விட்டது.

இந்தியாவும் அதற்கு ஒப்புதல் அளித்து விட்டது போல்தான் தோன்றுகிறது.

ஆம்.   இலங்கையின் புதிய சட்டப் படி கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்கும் தமிழ் மீனவர்களுக்கு ஐம்பது லட்சம் முதல் ஏழரை கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் கடுமையான வகையில்  தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப் பட்டிருக்கிறது.

Sri lanka Fisheries and Aquatic Resources Act 1960   – Fisheries ( regulation of Foreign Fishing Tawlers ) Act  dated 24.01.2018  ன் படி இனி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப் படும் தமிழ் மீனவர்கள் இனி ஐம்பது லட்சம் முதல் ஏழரை கோடி வரை அபராதம் செலுத்தி விட்டுத்தான் வர முடியும் என்ற சட்டம் இயற்றப்பட்டு விட்டது.     இது பற்றி இந்திய அரசு மௌனம் சாதிக்கிறது.    இது இலங்கை அரசு மட்டும் முடிவெடுக்கக் கூடிய பிரச்னையா?

கடல் எல்லை நிர்ணயம் கச்சதீவை தாரை வார்க்கப் பட்டபின் தமிழ் மீனவர்களுக்கு எதிராக இருக்கிறது.

தாரை வார்த்தது நியாயமா சட்டப்படி சரியா என்பது உச்ச நீதி மன்றத்தில்  இருக்கிறது.   ஆனால் எந்த தீர்வும் கிடைக்குமா என்பது ஐயமே?

இந்நிலையில் ஒரு கேள்விதான் மிச்சமிருக்கிறது.

தாரை வார்த்தபோதுதான் தமிழகத்தை கேட்கவில்லை.

அப்போது பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் செய்யப் பட்ட தாரை வார்த்தல் செல்லுமா செல்லாதா என்பது  இருக்கட்டும்.  பெருபாரி வழக்கில் அந்த இடத்தை வங்காள தேசத்துக்கு தாரை வார்த்தது செல்லாது என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பு கச்சதீவுக்கும் செல்லுமா செல்லாதா என்பதை உச்சநீதி மன்றம் தான் சொல்ல வேண்டும்.

அதற்கு பிறகு இரண்டு நாட்டு வெளி உறவு செயலாளர்களுக்கு இடையே செய்யப்  பட்ட ஒப்பந்தம் செல்லுமா செல்லாதா என்பதுதான் இப்போதைய கேள்வி.

அதன் படி தமிழ் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை இரு நாட்டு அரசுகளாலும் பாது காக்கப் படும் என்று செய்து கொண்ட ஒப்பந்தம் என்னவாயிற்று?

அந்த ஒப்பந்தத்தை இரு நாட்டு அரசுகளும் அமுல் படுத்துவதில்  உறுதியாக  இருந்தாலே  கச்சத்தீவு பிரச்னை எழவே வாய்ப்பு இல்லை.

உரிமைகள் பறிக்கப் படும்போது கடிதம் எழுதும் உரிமை மட்டுமே தான் நமக்கு  இருக்கிறது என்பது அவமானம்.   அதைவிட அவமானம் தமிழ் நாட்டு மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை  இந்திய அரசு அங்கீகரிக்க வில்லை என்பதுதான்.

சோடா பாட்டில் வீசவும் கல் எறியவும் எங்களால் முடியும் ; சடகோப ராமானுஜ ஜீயர் பேச்சு ??!!

ஆச்சரியமாக இருக்கிறதா?

ஸ்ரீ வில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் வைரமுத்து மன்னிப்பு கேட்க பிப்ருவரி மூன்றாம் தேதி கெடு வைத்திருக்கிறார்.

இல்லையென்றால் உண்ணாவிரத போராட்டம் இருப்பேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.

அப்படி பேசும்போதுதான் இறை நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால் எங்களால் சோடா பாட்டில் வீசவும் கல் எறியவும் முடியும் என்று பேசியிருக்கிறார்.   அதாவது நாத்திகம் பேசுவதே குற்றம் என்பது அவரது தெளிவான கருத்து.

இந்த திமிர் அவருக்கு எப்படி  வந்தது.?

தமிழர்கள் கொடுத்த இடம்.     தமிழர்களுக்கு எதிராக தமிழர்களையே தூண்டி விட அவர்களால் முடிகிறது.

இன்று மத்தியில் அவர்களது ஆட்சி.    மானிலத்தில் அவர்களுக்கு அடங்கிய ஆட்சி.    எனவே என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று துணித்து விட்டார்கள்.

அதே கெடு வைத்து திராவிடர்  கழக தலைவர் கி . வீரமணி  விஜயேந்திரர் மன்னிப்பு கேட்காவிட்டால் சங்கர மடங்களை முற்றுகை  இடுவோம் என்று எச்சரித்திருக்கிறார்.

இது எங்கே கொண்டு போய் விடும் என்று தெரியவில்லை.

ஒன்று மட்டும் தெரிகிறது.   பார்ப்பானுக்கு ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வான் .

வைரமுத்து பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது.    நீதிபதியே வைரமுத்து ஒரு கருத்தை மேற்கொள் காட்டியதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்.

தவறு என்று நீதிமன்றமே சொல்லாத போது .

செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  கோரும் சடகோப ராமானுஜ ஜீயரை கைது செய்ய வேண்டும் .   அவர் மீது சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதம் நடந்து கொண்டதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நியாயம் இருக்கிறதா இல்லையா?

விஜயேந்திரர் தமிழ்த்தாய் அவமதிப்பு செய்ததை எந்த பார்ப்பானும் தவறு என்று சொல்லவில்லை.

ஏதாவது சொல்லி நியாயப் படுத்தவே பார்க்கிறார்கள்.    கமல் உள்பட.

இன்னிலையில் ஒரு மடத்தின் பொறுப்பில் இருப்பவர் இப்படி வன்முறையை தூண்டும் விதமாக சோடா பாட்டில் வீசுவோம் என்று பேசுவது கேவலத்திலும் கேவலம்.

அந்தப் பொறுப்பில் இருக்க அவருக்கு தகுதி  இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆராய வேண்டும்.

உடனடியாக ஜீயர் மீது காவல் துறை தக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

கமலின் சங்கர மட பாசம்??!!

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு விஜயேந்திரர் ஏன் எழுந்து நிற்கவில்லை என்று தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்திருக்கிறது .

ஒரு பார்ப்பனர் கூட விஜயேந்திரர் செய்தது சரியில்லை  என்று சொல்லவில்லை.   .   அந்த பட்டியலில் கமலஹாசனும் சேர்ந்துகொண்டார்.

நிருபர்கள் கேட்கிறார்கள் சங்கராச்சாரி செய்தது சரியா என்று.   சரி அல்லது  தவறு என்று  சொல்லவேண்டும்.

கமல் சொல்கிறார்.   ‘ கண்ட இடத்தில்  பாடுவது தவறு.   ‘   நூல் வெளியீட்டு விழா கண்ட இடமா?    பின்னர் சினிமா தியேட்டர் என்றும் சொல்கிறார்.     விழாவும் தியேட்டரும் ஒன்றா?

ஏன் தியானத்தில்  இருந்தார் என்ற கேள்விக்கும் பதில் சொல்கிறார்.

‘ தியானம் செய்வது அவர் கடமை.   எழுந்து நிற்பது  என் கடமை.”

அப்படியென்றால் விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தவறில்லை என்பதுதானே கமலின் வாதம்.    அவர் கடமை தியானம்  என்றால் எழுந்து நிற்பது தவறில்லை என்பதுதானே அர்த்தம்.

உண்மையில் கடவுள் வாழ்த்து ஒன்று பாடப் பட்டு அதில் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்றால் கூட அது பிரச்னை ஆகி இருக்குமா என்பது  கேள்விக்குறி.

சமஸ்க்ரிதத்தில்  கடவுள் வாழ்த்து பாடல் ஒன்று  பாடி  உட்கார்ந்து கொண்டு விட்டு போயேன்?    யார் கேட்கிறார்கள்.?

தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது 1970  முதல் அரசாணை மூலம் கட்டாயம் ஆக்கப்பட்டது உங்களுக்கு ஏற்புடையது இல்லை என்று நினைத்தால் நீதிமன்றம் மூலம் அதை நீக்க முயற்சித்து இருக்க வேண்டும்.    ஆணை இருக்கும்போது அதை மதிப்பது தான் குடிமக்களின் கடமை.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப் படுத்த வேண்டும் என்று கிளம்பினால் எதிர்ப்பை சந்தித்து தான் ஆக வேண்டும்.

பார்ப்பானர் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது தெளிவு.

இந்த தெளிவு மற்றவர்களுக்கு இல்லை என்பது துயரம்.

வைரமுத்து சொன்னது போல் ரஜினியும் கமலும் இரு கண்கள் என்றார்.    கண்கள் பேசுவதில்லை என்றும் சொன்னார்.

தவறு. தேவைப்  படும்போது , இனம் என்று வரும்போது விட்டுக் கொடுக்காமல் பேசும் என்று நிரூபித்திருக்கிறார் கமல்.

அடையாளம் காட்டிக் கொண்டவரை நல்லது.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த சங்கரமட விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் ???!! கோரிக்கை வலுக்கிறது!!!

தமிழ் நீஷ பாஷை என்பது சங்கர மட கொள்கை.

அதனால்தான் பூஜை வேளையில் சங்கராச்சாரியார் நீச பாஷையில் பேச மாட்டார் என்று தமிழில் பேசாத தற்கு விளக்கம் தரப்பட்டது சந்திர சேகரேந்திரர் காலத்திலேயே.

தமிழில் குடமுழுக்கு நடத்த விட மாட்டார்கள்.

தமிழில் அர்ச்சனை செய்ய விட மாட்டார்கள்.

தமிழனை கர்ப்ப கிருகத்திற்குள் விட மாட்டார்கள்.

கும்பிடவும் காணிக்கை செலுத்தவும் மட்டுமே இவர்களுக்கு தமிழர்கள் வேண்டும்.

அதன் வழியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது உட்கார்ந்தே இருந்தார்.       அவருக்கு மட்டும் சற்று உயரமாக ஒரு மேடை.   அவருக்கும் கீழே உள்ள இருக்கை களில் ஆளுநர் , சாலமன் பாப்பையா , எச் ராஜா போன்றோர் அமர்ந்திருந்தார்கள்.

அந்த விழாவே எச் ராஜாவின் தகப்பனார் தமிழ்-சமஸ்க்ரிதம் பொருள் கூறும் நூலை எழுதியதை வெளியிடும் விழா.    அதில் தனது தாய் மொழி சமஸ்க்ரிததிற்கு தான் செய்யும் தொண்டு என்று அதன் ஆசிரியர் ஹரிஹரன் குறிப்பிடுகிறார்.

விழா முடிவில் தேசிய கீதம் பாடும்போது விஜயேந்திரர் எல்லாரையும் போலவே எழுந்து நின்றார்.

அடப்பாவி ! தமிழ்த்தாயை அவமதிக்க எப்படி இவருக்கு மனம் வந்தது?    இந்தக் கேள்வி எல்லா தரப்பிலும் எழுப்பப் பட்டு கண்டனம்  தெரிவிக்கப் பட்டு வருகிறது.

எதிர்ப்பு கிளம்பியவுடன் கடவுள் வாழ்த்து பாடும்போது அவர் தியானத்தில் இருந்தார் என்றும் அப்போது எழுந்து நிற்பது வழக்கம் இல்லை என்றும் சங்கர மடம் விளக்கம் சொல்கிறது.

ஏன் தேசியகீதம் பாடிய போது த்யானத்தில் இல்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை.

அவை மரபு கருதி கூட தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் அவமரியாதை செய்திருக்கிறார் விஜயேந்திரர்.

1970  ல் கலைஞர் ஆட்சி காலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது உரிய மரியாதை செலுத்த அரசாணை பிறப்பிக்கப் பட்டது.

தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்க வேண்டுமென்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டபோது பல திரை அரங்குகளில் தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்காத பலர் மீது தாக்குதல் நடத்தப்  பட்டது குறிப்பிடத் தக்கது.     மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்காத போது கூட தாக்கப் பட்டனர்.   இப்போது தேசிய கீதம் இசைப்பது திரை அரங்குகளின் விருப்பம் என்று தீர்ப்பு மாற்றப் பட்டது.

மன்னிப்புக் கேட்டு தனது தவறுக்கு வருந்தி தமிழ் சமுதாயத்திடம் விஜயேந்திரர் பரிகாரம் தேட வேண்டும்.

சமுதாய நல்லிணக்கம் கருதி யாவது விஜயேந்திரர் தகுந்த விளக்கம் தந்து மன்னிப்புக் கேட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மறுத்தால் அல்லது பிடிவாதமாக நாங்கள் அப்படித்தான் என்று நின்றால் தமிழ் சமுதாயம் தனது எதிர்ப்பை அற வழியில் , அவர் உணரும் வண்ணம், திருந்தும் வண்ணம் காட்ட தயாராக வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு.

வைரமுத்துவின் கம்பீரமும் பார்ப்பனர்களின் சாக்கடைப் பேச்சுகளும் !!??

ஆண்டாள் சர்ச்சையில்  சாதி மத சண்டை களுக்கு முயற்சி செய்த பார்ப்பனீய சூழ்ச்சி தமிழகத்தில் மூக்கு உடை பட்டு நிற்கிறது.

ஆண்டாள் எனக்கும் தாய்தான் . எனக்குத் தமிழ்ப்பால் கொடுத்தவள். அவளை நான் அவதூறு செய்வேனா என்றும் தனது ஆராய்ச்சிக் கட்டுரைக்கு மூலம் இரண்டு பேராசிரியர்கள் எழுதிய கட்டுரைகள் என்றும் வைரமுத்து பேட்டி கொடுத்திருந்தார்.    அந்தப் பேராசிரியர்  நாராயணனை  தந்தி டி வி தொலைபேசியில் பேட்டி கண்ட போது ஆமாம் நான்தான் அந்த மேற்கோளை எழுதினேன் என்று அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.    மூலம் எழுதியவர் எந்த குற்றமும் செய்யாதவர் என்றால் அதை மேற்கொள் காட்டிய நான் எப்படி குற்றவாளியாவேன் என்ற வைரமுத்துவின் கேள்விக்கு எந்த புத்திசாலியும் பதில் சொல்ல முடியவில்லை.

ஆராய்ச்சி கட்டுரை என்பது அனைத்து அம்சங்களையும் கொண்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படை கூட புரியாதவர்களாக இவர்கள் இருக்க மாட்டார்கள்.    தெரிந்தே இதை வைத்து ஏதாவது செய்ய முடியாதா என்று ஏங்குபவர்க ளாகத்தான் தமிழ் சமூகம் பார்க்கிறது.

இன்னமும் தேவதாசி நடைமுறை தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களில் இருப்பதாகவும் அதை ஒழிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.     அதில் பாதிக்கப்  பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தலித்துகள்.

தமிழ் நாட்டில் தேவதாசி ஒழிப்பு சட்டம் வந்த போது சத்தியமூர்த்தி அய்யர்  எதிர்த்தார்.   முத்துலெட்சுமி ரெட்டி ஆதரித்து பேசி வேண்டும் என்றால் உங்கள் வீட்டுப் பெண்களையும் அதில் அந்த தேவ கைங்கரியத்தில் ஈடுபடுத்துங்களேன் என்று கேட்டதாகவும் சொல்வார்கள்.

இவர்கள்  வருத்தம் எல்லாம் அந்த தேவதாசி முறை இருந்ததா இல்லையா  என்பதை பற்றி எல்லாம் இல்லை.

அந்தப் படி இறைவனுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தவராக ஆண்டாள் வாழ்ந்தாரா இல்லையா என்பது என்பதே விவாதத்துக்கு கூட வரக்கூடாது என்றுதான் அவர்கள் வாதம் இடுகிறார்கள்.

வருத்தம் தெரிவித்தது கூட சக மனிதனை நான் நேசிக்கிறேன் என்பதற்காகத்தான் என்று தனது பெருந்தன்மையையும் அடிக்கோள்  இட்டு காட்டியிருக்கிறார் வைரமுத்து.    உண்மையில் தமிழர்களின் கௌரவத்தை நிலை நாட்டிய வைரமுத்து கொண்டாடப் பட வேண்டியவர்.

இத்தனைக்கும் அவர் அரசியல் வாதியல்ல.   தமிழுக்காக வாழ்பவர்.

அவரை கொச்சைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு எஸ் வி சேகர் என்ற பார்ப்பனர் வாய்க்கொழுப்போடு ‘ முட்டாள் தனமாக’ வைரமுத்து அறிக்கை கொடுத்திருப்பதாக பேட்டி கொடுக்கிறான்.    இன்னொரு பார்ப்பன ர் உபதேசம் செய்து பேசுகிறவர்  இவனெல்லாம் ஏதோவொரு சோழன் போல  புழுத்து சாவான் என்று சாபம் கொடுக்கிறான்.     வேளுக்குடி கிருஷ்ணன் ஓரளவு நிதானமாக பேச கூடியவர் என்று பேர் எடுத்தவர்.   அவர்கூட இது சரியில்லை என்று கூறுகிறார்.   எந்த ஒரு பார்ப்பனரும் வைரமுத்துவின் பக்கம் இருக்கும் நியாயத்தை பார்க்கக் கூட  தயாராக  இல்லை.

ராஜாஜி ஒரு பார்ப்பனர்.  அவர் தனது கட்டுரை ஒன்றில் திருப்பாவையை ஆண்டாள் எழுதியிருப்பாரா பெரியாழ்வாரே எழுதி ஆண்டாள் பெயரில் வெளியிட்டிருப்பாரா  என்ற சந்தேகத்தை எழுப்பியதாக சொல்கிறார்கள்.   அப்போது யாரும் ஆட்சேபிக்க வில்லையே?

எல்லாம் போகட்டும் இப்போது கூட கோவில்களில் தமிழர்களுக்கு என்ன இடம்.?

சூத்திரர்களாக , வெளியில் இருந்து வணங்கும் உரிமை மட்டுமே கொண்டவர்களாக , இழிவு படுத்துகிறார் களா இல்லையா?

கிராம கோவில்களில் கூட சாதி பிரிவினைகள் இருக்கின்றவே தவிர பார்ப்பன ஆதிக்கம் குறைந்திருக்கிறதா?

இவர்களை நாம் அடிமைப் படுத்தி வைத்திருந்தோம் இப்போது நம்மோடு இருக்கிறார்கள் அவர்களுக்கு உரிய உரிமைகளை கொடுத்து   விடுவோம் என்று பார்ப்பனர்கள் வருவார்களா?

சமத்துவம் தான் இந்துக் கோவில்களில் இனி கோலோச்சும்.    அங்கு பார்ப்பனர்களுக்கு தனி சலுகை இல்லை. வருவாய் இல்லை என்றால் ஒரு பார்ப்பானும் இந்துவாக இருக்க மாட்டான்.

பெரிய கோவில்களின் வருவாய்களை எப்படி பிரித்து கொள்கிறார்கள் என்பதை சாதாரண இந்து அறிவானா?

எப்படியோ, ஆண்டாள் சர்ச்சையில்

எல்லாத் தமிழர்களும் ஓரணியில்.

காட்டி கொடுத்து லாபம் பார்க்க நினைக்கும் நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் , தமிழிசை போன்ற பா ஜ க வில் தங்களை அடிமைப் படுத்திக் கொண்ட வர்கள் மட்டும் மறுபக்கம்.

இன்னும் தமிழன் சுயமரியாதை இழக்க வில்லை.

நீட் தேர்வு சூழ்ச்சி நடப்பு ஆண்டும் தொடரும்! சி.பி.எஸ்.இ போர்டு அறிவிப்பு!!??

மனித வள மேம்பாட்டு அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் சி பி எஸ் இ  நீட் தேர்வை அதன் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்துகிறது.

இதனால் மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப் படுவார்கள் என்பது சென்ற ஆண்டு சி பி எஸ் இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப் பட்ட நீட் தேர்வின் முடிவுகளில் நிரூபணம் ஆனது.

தமிழக மாணவர்கள் மருத்துவர்கள் ஆகும் வாய்ப்பை தட்டிப் பறித்தது  நீட் தேர்வு!

சி பி எஸ் இ பாடத்திட்டத்திற்கு இணையாக மாநில பாடத் திட்டத்தை மாற்றுவோம் என்றும் நீட் தேர்வை எதிர் கொள்ள பயிற்சி மையங்கள் அமைப்போம் என்றும் சொல்லி மக்களை ஏமாற்றும் நோக்கத்திலேயே மாநில அரசு இயங்கியது.

இவர்களை சமாதானப் படுத்தும் விதமாக மத்திய  அமைச்சர்  ஒருவர் இனி நீட் தேர்வு மாநில பாடத் திட்டங்களில் இருந்தும் இணைத்து நடத்தப் படும் என்று அறிவித்தார்.

இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக சி பி எஸ் இ ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது   ‘நீட் 2018  தேர்வின் பாடத்திட்டம் நீட் 2017 ஆண்டில் இருந்தது போலவே இருக்கும் ‘ என்று சொல்கிறது.    அதாவது இந்த ஆண்டும் சி பி எஸ் இ பாடத் திட்ட அடிப்படையிலேயே நீட் தேர்வு இருக்கும்.

மற்ற மாநிலத்தவர்கள் மருத்துவர்கள் ஆக வாய்ப்பு மறுக்கும் இந்த  பார பட்ச நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது மட்டுமல்ல.    மாநில உரிமைகளுக்கு  எதிரானதும் கூட.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப் பட்டால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.

நமது மருத்துவர்களை நாமே உருவாக்கிக் கொள்ள முடிய வேண்டும்.    அதுவே மாநில உரிமை.

மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய பட்டியலுக்கு அவசர நிலையின் போது இந்திரா காந்தி மாற்றியது ஒரு துரோகம்.

மாநிலங்களுக்கு துரோகம் செய்து விட்டு ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டு உங்களை கொள்ளையடிப்போம் என்று சட்டப் படி வெளிப்படையாக கொடுமை செய்கிறார்கள்.

இதற்கு உச்ச நீதி மன்றம் கூட ஒரு விதத்தில் துணை போயிருக்கிறது.

நீட் பயிற்சி கொடுக்கிறோம் என்று கொள்ளையடிக்கும் கூட்டம் பெருகி வருவதுதான் நடக்கிறது.

பிறகு என்ன செய்யத்தான் இந்த பள்ளிகள் இயங்குகின்றன?  இவைகள்  நடத்தும் தேர்வில் தேறிய மாணவர்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது?

தொடரும் இந்த கொடுமையை தமிழக அரசியல் கட்சிகள் எவ்விதம் எவ்விதம் எதிர் கொள்ளப் போகின்றன?

ஆண்டாள் சர்ச்சை; பார்ப்பன சூழ்ச்சியை புரிந்து கொள்ளாத முட்டாள் தமிழர்கள் !!!???

மத உணர்ச்சியை தூண்டி தமிழர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு சாக வேண்டும். அதில் பா ஜ க வை வளர்க்க வேண்டும். இதுதான் எச் ராஜாவின் சூழ்ச்சி.    அது பலித்துக் கொண்டிருக்கிறது.

மருத்துவர் ராமதாஸ் வைரமுத்து பத்தாயிரம் முறை சிந்தித்து ஆண்டாளை பற்றி எழுதி இருக்க வேண்டும் என்கிறார்.   ஒரு வார்த்தையாவது வைரமுத்துவை தாசி மகன் என்றும் அவரது தலையை வெட்டுவோம் என்றும் பேசிய ராஜாவை கடுமையாக எச்சரிக்க வில்லை.

நயினார் நாகேந்திரன் வைரமுத்துவை கொல்ல  வேண்டுமா வேண்டாமா என்று கேட்டு அவரது நாக்கை வெட்டி வருவோருக்கு பத்து கோடி அல்லது பத்து லட்சம் என்று விலை  வைக்கிறார்.     அதிமுகவிலிருந்து பா ஜ க விருக்கு வந்து மாநில துணை தலைவர் பொறுப்பை  வாங்கிக்கொண்டு  மத்திய ஆளும் கட்சியின் செல்வாக்கை பயன் படுத்தும் திட்டத்தோடு இருக்கும் இவர் எப்போது இவர் இந்து தத்துவங்களை ஆராய்ந்திருக்கிறார்.  ?

தமிழ் எழுத்தாளார்கள் கூட்டமைப்பு வைரமுத்துவை மிரட்டுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்  என்று அறிக்கை.

எல்லா ஊடகங்களிலும் யார் மீது தவறு என்று விவாதங்கள்.

ஜீயர் ஒருவர் வைரமுத்து ஆண்டாள் சந்நிதிக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறார்.    காவல் துறை தலையிட்டு ஒத்தி வைத்து விட்டு காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் வராவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் என்று மிரட்டுகிறார்.

முடிந்த ஊர்களில் எல்லாம் பா ஜ க   வி எச் பி , இந்து முன்னணி அமைப்புகள் தூண்டுதலில் ஆர்ப்பாட்டங்கள் என்று கலவரத்தை தூண்ட முயற்சி.

பாரதிராஜா எங்களை ஆயுதம் தூக்க தூண்டாதே என்று எச்சரிக்கிறார்.   குற்ற பரம்பரை என்று சாதி அடையாளத்தை ஏன் குறிப்பிட வேண்டும்.?       இது சாதிப் பிரச்னையா/மதப் பிரச்னையா?

யாரும்  பிரச்னையின் மூலம் என்ன என்பதை பற்றி விவாதிக்க மறுக்கிறார்கள்.

வைரமுத்துவின் கட்டுரை மூலமா?    அதற்கு எச் ராஜா கொலை மிரட்டல் விடுத்தது மூலமா?

கட்டுரையையும் கொலைமிரட்டலையும் ஒன்றாக பார்க்கலாமா?

பெரியார் எழுதியது அத்தனையும் பார்ப்பனீயத்தை எதிர்த்துதான்.     இன்று   குல்பர்கியை கொலை செய்தது போல் அன்று அவர்களால் அதை செய்ய முடியவில்லை.  இன்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் அத்தனை புத்தகங்களையும் ஒழித்து விட முடியுமா உங்களால்?

வைரமுத்து கட்டுரையை வெளியிட்டது தினமணி நாளிதழ் .   பார்ப்பன நிர்வாகம் தான் என்பதால் உடனே மன்னிப்பு கேட்டு கட்டுரையை தன் வெப் சைட்டில் இருந்து எடுத்து விட்டது.

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா என்று கேட்டு விட்டு வைரமுத்து வருத்தம் கேட்டு விட்டதால் அப்படியே விட்டு விட வேண்டியது தான் என்கிறார்.

தளபதி ஸ்டாலின் ராஜாவின் பேச்சை கண்டித்திருக்கிறார்.   கம்யுனிஸ்டுகள் கண்டிக்கிறார்கள்.      வைரமுத்து  மீது  வழக்குகள் , ராஜா மீது வழக்குகள் என்று எதை அவர்கள் எதிர்பார்த்தார்களோ அது நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு பிரச்னை நீதிமன்றத்துக்கு வந்து விட்டது.    வைரமுத்துவின் கட்டுரையில் என்ன தவறு என்று ஆராயும்.  தீர்ப்புக்கு காத்திருப்போம்.

எப்போது பார்ப்பனர்கள் வீதிக்கு வந்திருக்கிறார்கள்?      தமிழர்கள் பிரச்னை எதற்காவது வந்திருக்கிறார்களா?

கொடுமை என்ன?      ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எல்லாரையும் வேதம் சொன்னது என்று வர்ண பேதத்தை ஏற்படுத்தி பெரும்பாலானவர்களை அடிமைப் படுத்தி வந்த ஒரு கூட்டம்  சாதி ரீதியாகவும் எல்லாரையும் பிரித்து வைத்து என்று சேர விடாமல் பார்த்துக் கொண்டு இன்னமும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு அடித்துக் கொள்ள வைக்கிறானே என்று  சிந்திக்க தமிழனுக்கு அறிவே இல்லையா?

ஆண்டாள் என் தாயைப் போன்றவர் . அவரை நான் தவறாக பேசுவேனா என்ற வைரமுத்துவின் சமீப கருத்து பிரச்னையை தீர்க்குமா?

இந்து என்பவன் யார் ? இந்து மதம் என்ற ஒன்றே இல்லாதபோது எப்படி இவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்?    எல்லாருக்கும் ஒரு அடையாளம் வேண்டி இருக்கிறது.      அறுவித நம்பிக்கைகளை  ஒன்றாக்கி இந்து என்றாக்கியிருக்கிறார்கள் .

நமக்கும் இதனால் பெரும்பான்மை என்ற பலம் கொடுப்பதால் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை.  ஆனால் ஒரு சிறுபான்மை அதிகாரம் செலுத்தி கொண்டிருக்கிறது.

தமிழர்கள் புத்தியை பயன் படுத்தி தங்களுக்குள் வன்முறையில் ஈடுபடாமல் அறிவாயுதம் ஏந்தி பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏமாந்தது போதும்.    அரசியல் ஆதாயத்துக்காக காட்டிக்  கொடுக்கும் கருங்காலிகள் உருவாகாமல் இருக்க அந்த இறைவனே நல்வழி காட்ட வேண்டும்.

ஆம்.  அந்த இறைவன் அருவ உருவமற்றவன். சாஸ்திர சம்பிரதாயங்களுக்குள் அடங்காதவன்.  எந்தப் பெயரும் அவனுக்கு இல்லை.  இத்தகைய நம்பிக்கை கொண்ட நான்கூட இந்துதான்.    இல்லையென்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை .

அந்த உரிமையில் சொல்கிறேன்.    தமிழர்களே பார்ப்பனீய சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள்!!!

 

 

 

அமித் ஷா வழக்கை விசாரித்த நீதிபதி மரண விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் தலையீடு இருந்ததா ?

சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டிருந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த சி பி ஐ நீதிமன்ற நீதிபதி லோயா 48 வயதில் திடீர் என இறந்தார்.       அவருக்குப் பின் வந்த நீதிபதி அமித் ஷா வையும் மற்றவர்களையும் வழக்கில் இருந்து விடுவித்தார்.      அது  லோயாவின் மரணத்தில் சந்தேகம் ஏற்படுத்தியது.

நீதிபதி மரணம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னிச்சையாக வழக்கத்துக்கு மாறாக இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றியது குறித்து  அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் நான்கு நீதிபதிகள்  வரலாற்றில் இல்லாத நிகழ்வாக பத்திரிகைகளை கூட்டி பேட்டி கொடுத்தார்கள்.

நீதிபதிகள் சலமேச்வர், ரஞ்சன கோகாய், மதன் லாகூர் ,குரியன் ஜோசப் ஆகிய நால்வரும், தலைமை நீதிபதியின் தன்னிச்சையான போக்கு நல்லதல்ல என்றும், லோயா சம்பத்தப் பட்ட வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றியது குறித்து தாங்கள் அவரிடம் பேசியது பலன் அளிக்க வில்லை என்றும் எனவே நாட்டுக்கு உண்மை நிலவரத்தை தெரிய படுத்த வேண்டி பேட்டி கொடுப்பதாகவும் கூறினார்கள்.

இதில் பல பிரச்னைகள் அடங்கி இருக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.        செல்வாக்கு பயன் படுத்தப் படுகிறது.  எனவே என்னென்ன வழக்குகளில் இந்த செல்வாக்கு தவறாக பயன் படுத்தப் பட்டது என்பது ஊகங்களுக்கு உட்பட்டது.

அவர்களுக்குள் வழக்கறிஞர்கள் சங்கம் பேசி சமாதானம் செய்யலாம்.    ஆனால் உச்ச நீதிமன்றத்தின் நம்பகத் தன்மை அசைக்கப் பட்டு விட்டது.

எந்தெந்த வழக்குகளில் என்னென்ன நடந்ததோ என்று மக்கள் ஆராய வேண்டிய நிலைக்கு தள்ளியது யார்.?

இந்த நான்கு நீதிபதிகளும் போற்றுதலுக்கு உரியவர்கள்.   மனசாட்சிப் படி நடந்திருக்கிறார்கள் .

இப்படி நாலு பேர் இருப்பதால்தான் இன்னும் நம்பிக்கை மிச்சம் இருக்கிறது.

ஆண்டாள் பற்றி வைரமுத்து எழுதியது தவறா?

தினமணி பத்திரிகையில் கவிப்பேரரசு வைரமுத்து ‘ தமிழை ஆண்டாள் ‘ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தாராம்.

ஆண்டாளின் தமிழ் ஆளுமையை பல விதங்களில் போற்றி எழுதப் பட்ட கட்டுரையாம் அது.

எச் ராஜா , பா ஜ கவின் செயலாளர் வைரமுத்து தாசிக்குப் பிறந்தவன் , அவன் தலையை எடுக்க வேண்டும் என்று பேசி அது  யு டுபில் செய்தியாக  வந்த பிறகுதான் அவர் எழுதிய கட்டுரை வெளிச்சத்துக்கு வந்தது.

மத்தியில் ஆட்சி அதிகாரம் .   மாநிலத்தில் அடிமைகள் ஆட்சி.    எனவே எது வேண்டுமானாலும் பேசலாம் என்று தைரியம்.

கட்டுரையில் தவறு இருந்தால் மறுத்து கட்டுரை எழுதலாம்.   கண்டிக்கலாம்.    இத்தனைக்கும் தான் தனிப்பட்ட முறையில் ஆண்டாளை  குறித்து எதுவும் கருத்து சொல்ல வில்லை என்றும் பல்கலைக்கழக கட்டுரையில் இருந்ததை எடுத்து குறிப்பிட்டதால் யார் மனதாவது புண் பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாகவும் செய்தி வெளியிட்டு விட்டார்.

கொடுமை என்னவென்றால் அதில் என்னதான் இருக்கிறது என்று தினமணி பத்திரிகையை வெப் சயிட்டில் பார்க்கப் போனால் அது எடுக்கப் பட்டிருந்தது.    இருந்தால் தானே அதில் தவறு இருக்கிறதா என்று கருத்து சொல்ல முடியும்.?   இவ்வளவுதானா தினமணியின் நடுநிலை?

அமெரிக்காவின் இந்தியானா பல்கலை கழக சுபாஷ் சந்திரா மாலிக்  என்பவர் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.   அதில் ஆண்டாள் தேவதாசி வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம் என்று குறிப்பு இருக்கிறதாம்.   அதாவது இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்ட வாழ்க்கை.

ஆண்டாள் பனிரெண்டு ஆழ்வார்களில் ஒரு பெண் ஆழ்வார்.  திருப்பாவை தந்தவர்.   மார்கழியில் அவரது பாடல் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் பாடப் படுகிறது.

எவரையும் நிந்திக்கிறவர் அல்ல வைரமுத்து.   ஆண்டாளை நிந்திக்கும் நோக்கம் இருக்க எந்த காரணமும் இல்லை.

அதே நேரத்தில் சமணர்கள் இன்றும் தங்கள் குடும்பத்து பெண்களை துறவிகள் ஆக்குகிறார்கள்.    அதை பாக்கியமாக கருதுகிறார்கள்.

ஆந்திரா-தெலுங்கானா வில் எண்பதாயிரம் தேவதாசிகளும் அகில இந்திய  அளவில் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் பேரும் தேவதாசிகளாக இருப்பதாக தேசிய மனித உரிமை கமிஷன் சொல்கிறது.    அதில் பெரும்பாலோனோர் தலித்துகள்.

ஒரு பக்கம் இறை தொண்டு ஆற்ற அர்ப்பணிக்கப் பட்டவர்கள்.  மறு பக்கம் விலை மாதர் வாழ்க்கை.    இரண்டும் கடவுளின் பெயரால்.

எது எப்படி இருந்தாலும் எவரையும் புண் படுத்தும் நோக்கம் யாருக்கும் இருக்க கூடாது.     அதற்காக வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது மிகவும் கண்டிக்கத் தக்கது.

வைரமுத்துவை கண்டிப்பவர்கள் எச் ராஜாவையும் கண்டிக்க வேண்டும் அல்லவா?

எல்லை மீறி பேசியது ராஜாதான்.   வன்முறைக்கு வித்திட்டிருக்கிறார் எச் ராஜா.

பொறுமை காத்து பெருமை சேர்க்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு இருக்கிறது.