Home Blog Page 81

ஜெயலலிதாவின் மகள் சோபனாவா? அம்ருதாவா ? இருவருமே இல்லையா? உண்மை வெளிவருமா?

அம்ருதா என்ற பெண் தான் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி  ஜெயலலிதாவின் உடலை வெளியில் எடுத்து டி என் ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வைஷ்ணவ அய்யங்கார் மரபுபடி எரியூட்ட வேண்டும் என்றும் கோரி உச்சநீதி மன்றத்தில் மனுப்போட்டு அது தள்ளுபடியாகி விட்டது.     ஆனால் அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்று சொல்லி இருப்பதால் பிரச்னை முடியப் போவதில்லை.

ஜெயலலிதாவின் அப்பா ஜெயராமின் தங்கை  ஜெய்சிகாவின் மகள் லலிதா ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது உண்மைதான் என்றும் தனது பெரியம்மா தான் பிரசவம் பார்த்தார் என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார்.     வெளியே சொல்லக் கூடாது என்று சத்தியம் வேறு வாங்கியதாக வும் சொல்கிறார்.

1990 ல் நக்கீரன் பத்திரிகை ஷோபனா வேதவல்லி  என்ற குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டு அவர்தான் ஜெயலலிதாவின் மகள் என்று கட்டுரை வெளியிட்டது.       நூற்றுக்கணக்கான அவதூறு வழக்குகளை நக்கீரன் மீதுபோட்ட ஜெயலலிதா இந்த கட்டுரைக்காக நக்கீரன் மீது வழக்கு ஏதும் போடவில்லை என்பது புரியாத புதிர்.

அம்ருதா மீது வழக்கு தொடருவேன் என்று தீபா பேட்டி கொடுக்கிறார்.

சொத்துக் காகவா உரிமைக்காகவா என்பது போக போகத்தான் தெரியும்.

பிரபலமானவர்கள் மீது அவர்கள் மறைந்த பிறகு உரிமை கொண்டாடுவது என்பது வேறு சேற்றை வாரி இறைப்பது என்பது  வேறு.    இரண்டில் எது உண்மை என்பதை கண்டுபிடித்து போது மக்களுக்கு சொல்லும் கடமை காவல் துறைக்கு உள்ளது.    தவறாக உரிமை கொண்டாடி இருந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக குற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டாக வேண்டும்.    உண்மையாக இருந்தால்  அதையும் மக்களுக்கு சொல்லியாக வேண்டும்.

உச்சநீதி மன்றம் கூட இதை உயர்நீதி மன்றத்துக்கு தள்ளி விட்டிருக்காமல் தானே விசாரித்திருக்கலாமோ என்று கூட தோன்றுகிறது.    அல்லது வழக்கை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி இருக்கலாம்.

எல்லாம் தெரிந்த ஜெயலலிதா தன் சொத்துக்கள் பற்றி ஒரு உயில் கூட எழுதாமல்  விட்டிருப்பார் என்று நினைக்கக் கூட முடியவில்லை.

இறந்த பின் ஒருவரை இழுக்கு உண்டாகும் படி நடவடிக்கைக்கு உள்ளாக்கு வது அறமல்ல.     ஆனால் ஜெயலலிதா சாதாரண மானவர் அல்ல.

கோடிக்கணக்கான சொத்துக்களை விட்டு சென்றிருப்பவர்.     அதற்கான உண்மை வாரிசுகள் யார் என்பது பற்றி ஒரு விசாரணை நடத்தி கண்டு பிடிப்பது நியாயம் தானே. ?

அதுவும் முரண்பாடான செய்திகள் உலவி வரும் நிலையில் காவல் துறை கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதும்    அவர் பெயரில் ஆட்சி செய்பவர்கள் ஏதும் அறியாதது போல் மெளனமாக இருப்பதும் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தாதா?

தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் தெரியாத வேற்று மாநில விரிவுரையாளர்களை நியமிக்க அவசியம் என்ன? விதிகளை திருத்தியது யார்?

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்  1050  விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன.

அதை நிரப்ப சென்னையில் உள்ள டி பி ஐ ல் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது.

அதில் தமிழ் தெரியாத வேற்று மாநில விரிவுரையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தேர்வாகி இருப்பது தாமதமாக தெரிய வந்திருக்கிறது.

ஏற்கெனெவே  தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் வேற்று மாநிலத்தவர்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

இது எப்படி சாத்தியமானது?        தமிழ் தெரியாதவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதித்து இதை சாத்தியமாக்கி இருக்கிறார்கள்.

இப்படி ஒரு விதி விலக்கு மற்ற மாநிலங்களில் இருக்கிறதா?

மற்ற மாநிலங்களில் இது போன்று அந்த மாநில நிறுவனங்களில் வேற்று மாநிலத்தவர் தேர்வு எழுதி அந்த மாநில மொழியை இரண்டு ஆண்டுகளுக்குள் கற்று கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன்  வேலையில் சேர முடியுமா?

அப்படி இல்லாத பட்சத்தில் தமிழகத்தில்  மட்டும் இந்த விதி விலக்கை கொண்டு வந்ததற்கு யார் காரணம்?

ஏற்கெனெவே தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் ஆயிரக்கணக்கில் இருக்கும் போது  இருக்கின்ற வேலை வாய்ப்பையும் வேற்று மாநிலத்தவர் களுக்கு தாரை  வார்க்கும் சதி நடந்திருப்பது இன்றைய ஆட்சியாளர் களுக்கு தெரிந்து நடந்ததா?     தெரியாமல் நடந்ததா?    அல்லது அதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லையா?

உடனடியாக வெளி மாநிலத்தவர் நியமனங்களை ரத்து செய்து விட்டு தமிழகத்தில் தமிழ் தெரிந்தவர்களுக்கே அந்த வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.

அதற்கு வழி செய்த அந்த விதி முறையை ரத்து செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் கூட விழிப்புணர்வுடன் போராட வேண்டி இருக்கிறதே?

போராடுபவர்களையும் கைது செய்ய மட்டும் ஆட்சியாளர்கள் தவறுவது இல்லை.

கோட்சேவுக்கு சிலை அமைத்த இந்து மகா சபை மீது தேச துரோக வழக்கு ஏன் பாயவில்லை?

மகாத்மா காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று மார் தட்டி சொல்கிறவர்கள் இந்து மகா சபை கூட்டம் .   நாதுராம் கோட்சே இந்து மகா சபையை சேர்ந்தவர் என்பதினால் அவரது நினைவு தினத்தை ஆண்டு தோறும் அனுசரிப்பவர்கள்.

நாதுராமிற்கு தூக்கு தண்டணை நிறைவேற்றப் பட்டாலும் அவரது சகோதரர் கோபால் கோட்செவுக்கு  14  ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு அவரை விடுதலை செய்தது காங்கிரஸ் கட்சி.

அந்தக் கொலைகாரனுக்கு சிலை எழுப்ப இடம் கேட்டு மத்திய பிரதேச அரசுக்கு இந்து மகா சபை கேட்க  அரசு மறுத்ததால் இந்து மகா சபை அலுவலகத்திலேயே  32  அங்குல உயர மார்பளவு சிலையை நிறுவி அதற்கு கும்பாபிஷேகம் வேறு நடத்தி இருக்கிறார்கள்.

இது  எங்கள் சொத்து என்பதால் யாரும் ஆட்சேபிக்க முடியாது என்பது அவர்களின் வாதம்.

இதற்கு காங்கிரசின் ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆட்சேபணை தெரிவித்து காந்தியை இழிவு படுத்தியவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆட்சி நடத்துவது பா ஜ க .    வெளிப்படையாக  சொல்ல மாட்டார்களே தவிர இந்து மகா சபைக்கும் அவர்களுக்கும் பெருத்த வேறுபாடு ஒன்றும் கிடையாது.

தேச தந்தை என போற்றப் படுகிற காந்தியை சுட்டவனுக்கு கோவில் கட்டி வழிபடுவோம் என்று சொல்லி அதை நிறைவேற்றி காட்டுகிறவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அதற்கு அவர்களும் உடந்தை என்றுதான் பொருள்.

கொலைகாரனுக்கு கோவில் கட்டியவனை விட அவனை விட்டு வைத்திருக்கிறவன் தான் கொலைகாரனை விட மோசமான குற்றவாளி.

கோட்சே சிலை இருக்கும் வரை அதை விட்டு வைத்திருக்கும் சக்திகளின் மீது மக்களின் கோபம் நிலைத்திருக்கும் .

மூக்கை துண்டிப்போம்; தீபிகா படுகோனேவுக்கு ராஜபுத்திர சேனா மிரட்டல்?!

பத்மாவதி பட கதாநாயகி தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மாவதியாக நடித்து இருக்கிறார்.

டெல்லி சுல்தான்  அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் கபூர் நடித்திருக்கிறார்.

சுல்தான் பேரழகி பத்மாவதியை விரும்பி படை   எடுப்பதகவும் இறுதியில் பத்மாவதியை ஒரு கண்ணாடி மூலம் காட்டுவதாகவும் ஒரு கதை உலவுகிறது.     அத்துடன் சுல்தானிடம் சிக்காமல் இருப்பதற்காக ராணியும் அவரது தோழிகளும் ஆயிரக்கணக்கில் தீயில் தங்களை  மாய்த்துக் கொள்வதாகவும்  ஒரு கதை உண்டு .

ராஜ புத்திரர்கள் ராணியை  தங்கள் குல தாயாக வணங்கி வழிபடுவது உண்மைதான்.

ஆனால் அவரது கதையை சினிமாவாக எடுக்க கூடாது என்று எந்த தடையும் இல்லை.

ஏறத்தாழ  180  கோடி செலவில் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே பல இடங்களில் படப்பிடிப்பு நடந்த போது செட்டுகளை அடித்து நொறுக்கினார்கள்.

இப்போது டிசம்பர் ஒன்றாம்  தேதி படம் வெளியாக சென்சார் போர்டு அனுமதி அளித்து விட்டது.  விடமாட்டோம் ரஜ புத்திர அமைப்பான கர்னி சேனா மீண்டும் படத்தை தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரி மிரட்டுகிறார்கள்.    உச்சநீதி மன்றமும் தலையிட மறுத்து விட்டது.

இந்நிலையில் சேனா தலைவர் மகிபால் சிங் மக்ரானா நிருபர்களுக்கு பேட்டி அளித்து பன்சாலி க்கு துபாயில் இருந்து  நிதி  வந்துள்ளது. தீபிகா எங்களை அவமதிக்கும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார்.     சூர்ப்பனகையின் மூக்கை துண்டித்தது போல அவரது  மூக்கை துண்டிப்போம்.   சஞ்சய் லீலா பன்சாலி யின் தலையையும் துண்டிப்போம்.   துண்டிப்பவகளுக்கு ஐந்து கோடி சன்மானம் அளிப்போம் என்று பகிரங்கமாக பேட்டி அளித்திருக்கிறார்.

கொடுமை என்னவென்றால் இதற்கு பல பாஜ க தலைவர்கள் ஆதரவு அளித்திருப்பதுதான் .

மத்திய அமைச்சர் நிதின் கட்காரியே படம் தயாரிப்பவர்கள் யாருடைய உணர்வையும் புண்  படுத்தக் கூடாது என்கிறார்.    பிறகு எதற்கு தணிக்கை குழு வைத்திருக்கிறீர்கள்.?

அவர்கள்   அத்தனை  பெரும் தகுதி இல்லாதவர்களா?

அதிலும் மேல்முறையீடு அமைப்பு இருக்கிறது.   அதற்கு ஏன் இவர்கள் செல்லவில்லை?

சாதாரணமானவர்கள்  ஆக இருந்தால் அப்படித்தான் சொல்வார்கள்.    சொல்பவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதால் சட்டம் கையையும் வாயையும் மூடிக் கொண்டிருக்கிறது.

தீபிகா படுகோனே வின் மூக்கு தப்புமா?    சட்டம் இவர்களை விட பலம்  வாய்ந்தது என்பதை நிரூபிப்பார்களா ?

நடப்பது மோடியின் இந்து அரசாயிற்றே ??!!

ஆளுநர் ஆய்வு செய்வது குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு முன்னோட்டமா?!!

வரலாற்றில் இல்லாத புதுமையாக தமிழக ஆளுநர் கோவையில் மாவட்ட ஆட்சியர்  மற்றும் அதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.   கொடுமை என்னவென்றால் உள்ளாட்சி அமைச்சர் எஸ் பி வேலுமணி யும் இதில் கலந்து கொண்டு ஆளுநர் வந்ததை  பெருமையாக பேசியதுதான்.

ஆளுநர்   பன்வாரிலால் புரோஹித் அசாம் , மேகாலயாவில் தான் இப்படித்தான் அடிக்கடி ஆய்வு செய்ததாக வேறு  நியாயம் கற்பிக்கிறார். எந்த மாநிலத்திலும் இப்படி ஆளுநர்கள் ஆய்வு செய்வதாக வரலாறே இல்லை.

டெல்லி, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் தான் இப்படி லெப்டினென்ட் கவர்னருக்கு அதிகாரமா மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்கா  என்ற சர்ச்சை வளர்ந்து வருகிறது. இது எதில் கொண்டு போய் விடும்?    ஆளுநர் நாளை உத்தரவிட்டால் அதை நிறைவேற்றுவதும் அமைச்சர்களின் கடைமை என்றாகிவிடுமா?

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று நாளும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் இப்படி ஒரு அவலம் நடைபெறுவதை எப்படி சகித்துக் கொள்வது.?

ஆய்வு செய்தால் தானே பாராட்ட முடியும் என்று கூடுதல் விளக்கம் தருகிறார் ஆளுநர்.   தான் தமிழ் படித்து வருவதாகவும் தமிழிலேயே பேச போவதாகவும் கூறினர். தமிழில் பேசுவது அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்வதை நியாயப் படுத்தி விடுமா?

அரசியல் சட்ட பிரிவு  167 ன் படி  ஆளுநருக்கு  ஏதாவது தகவல் தேவைப்பட்டால் அதை முதல்வரிடம்தாம் கேட்டு பெற வேண்டும்,     தான் சொல்வது எதையும் முதல்வர் மூலம் தான் கையாள வேண்டுமே தவிர நேரடியாக எந்த அதிகாரியிடமும் தகவல் பெறவோ கட்டளை பிறப்பிக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.

ஆளுநர் பதவி என்பது ஆட்டுக்கு தாடி போல என்று அறிஞர் அண்ணா கூறியது எவ்வளவு பொருத்தம்.. ! தமிழகத்தின் கிரண் பேடியாக புரோஹித் நிச்சயம் உருவாக வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இங்கே இருப்பவர்கள் தான் ஆளுநர் செய்வது எல்லாமே சரி என்பவர்கள் ஆயிற்றே?

டேக் இட் ஈசி என்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்  எஸ் பி வேலுமணி  செல்லூர் ராசு உதயகுமார் என எல்லா அமைச்சர்களும் நாங்கள் அடிமைகள் என்று மட்டும் சொல்லவில்லை அதை தவிர ஒரு அடிமை என்னென்ன சொல்ல முடியுமோ அவைகள் அனைத்தையும் சொல்லி விட்டார்கள்.

அ தி மு க எம் பி அன்வர் ராஜா மட்டும்தான் இது அதிகார அத்துமீறல் என்கிறார். சென்ற ஆண்டு உச்சநீதி மன்றம் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மூலம் ஆளுநர்கள் அதிகாரம் பற்றி கொடுத்த தீர்ப்பு எல்லாரையும் கட்டுப் படுத்தக் கூடியது.

ஆனால் கேள்வி கேட்க வேண்டியவர்களே அடங்கிப் போனால் தீர்ப்பு இருந்து என்ன பயன். ?இதுவரை முதல்வர் பழனிசாமி வாய் திறக்க வில்லை. இதேபோல் ஆய்வை எல்லா மாவட்டங்களிலும் மேற்கொள்வேன் என்று ஆளுநர் அறிவித்து இருப்பதுதான் பிரச்னை. ஆங்காங்கே மக்கள் கிளர்ந்து எழுந்து தான் இந்த  அதிகார அத்து மீறலை தடுக்க முடியும் என்ற சூழலை ஆட்சியாளர்கள் ஏற்படுத்த கூடாது.

மோடியின் மத்திய அரசுக்கு தெரியாமல் இந்த அத்து மீறல் நடக்க வாய்ப்பில்லை என்பதால் இதற்கெல்லாம் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டி வரும்.

அதுவும் சென்னை உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம்  வாக்கெடுப்பு உட்பட  ஏழு வழக்குகள் விசாரணையை துவங்கி விட்ட நிலையில் வர இருக்கும் தீர்ப்பு அரசை அசைக்கலாம் என்ற நிலையில் ஆளுநர் இந்த அத்து மீறலை தொடங்கி இருப்பது குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப் படவேண்டிய  சூழ்நிலை எழுந்தால் எடுக்க நடவடிக்கை களை இப்போதே ஆளுநர் துவங்கி விட்டார் என்றுதான் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

தமிழ் இந்திய மீனவனை முன்பு சிங்களன் சுட்டான் ; இப்போது இந்தியனே சுடுகிறான் ??!!

முன்பு சிங்களன் சுட்டான் இப்போது இந்தியனே சுடுகிறான்.

என்ன கொடுமை இது ?

இந்திய தமிழ் மீனவர்களை சிங்கள கடற்படை சுடுவதும் படகுகளை கைப்பற்றுவதும் தொடர்கதையாக நீடிக்கிறது.

பிடிப்பதும் விடுவதும் என இந்திய சிங்கள அரசுகள் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆளை விட்டு விடுங்கள் படகுகளை வைத்துக் கொள்ளுங்க என்று சுப்பிரமணிய சாமி சொன்னார்.    அதை  இந்திய அரசு ஆமோதிப்பது போல் தான் அதன் செயல் பாடுகள் இருக்கின்றன.

முன்பே இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் பாது காக்க முடியாது என்று பேட்டியே கொடுத்திருந்தார்.

தமிழ் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை காப்போம் என்று ஒப்பந்தம் போட்டவர்கள்  கச்சத்தீவை தானம் கொடுத்தவர்கள் இப்போது கையை விரிக்கிறார்கள்.

ஏமாந்தவன் ஆகிப் போனான் தமிழன்.

இன்று இந்திய கடலோர காவல் படை கப்பலில் வந்த வீரர்கள் இந்திய கடல் பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள்.

ஜெபமாலை என்பவரின் படகில் இருந்த பிச்சை ஆரோக்கியதாஸ் ஜான்சன்   சான்றோ, நிசாந், ஆகியோரை  தாக்கி விட்டு சென்றிருக்கிறார்கள்.

அடிக்கும்போது தமிழில் பதில் சொன்னதால் இந்தியில் பேசுடா என்று அடித்திருக்கிறார்கள்.

தமிழக காவல் துறை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தெரிகிறது.

டெல்லி செய்வதை கண்டிக்க முடியாத அரசு ஆண்டு வரும் நிலையில் வழக்கு என்ன செய்யும்?

இது குறித்து உயர் நீதி மன்றமும் வரும் வெள்ளிகிழமை விசாரிக்க இருக்கிறது.

பாதுகாப்பு அளிக்க வேண்டிய இந்திய கடலோர காவல் படை இந்திய மீனவர்களையே சுடுகிறது என்றால் அது மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு அப்பால் நடந்திருக்கும் என்று நினைக்க முடியாது.

இரட்டை மடி வலையை தடை செய்யப் பட்டதை பயன் படுத்தினார்கள் என்றால் அதற்கு தண்டனை துப்பாக்கி சூடா?

இதே காரணத்தை சொல்லித்தான் சிங்கள கடற்படையும் சுட்டது.

தமிழன் மீன்பிடிதொழிலை விட்டு ஒழிய வேண்டும் என்று இந்திய மத்திய அரசு திட்டம் இடுகிறதா?

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மன்னிக்க முடியாத குற்றத்தை இந்திய கடலோர காவல் படை செய்திருக்கிறது.

சுடவில்லை என்று மத்திய பத்திரிகை தகவல் நிறுவனம் செய்தி வெளியிடுகிறது. விசாரணைக்காக நிறுத்தப் படாததால் விடப் பட்ட எச்சரிக்கையை திசை திருப்ப அப்படி ஒரு குற்றச்சாட்டை மீனவர்கள் சொல்லக் கூடும்  என்று விளக்கம் வேறு சொல்கிறார்கள் .

நம் நாட்டு கப்பல் படை மீது  நமது மீனவர்களே பொய் குற்றச்சாட்டு சொல்ல வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

சிங்கள சூழ்ச்சிக்கு இந்திய கடற்படை இரையாகி விட்டது என்ற அச்சம் உண்மையாகி விடக்கூடாது.

நீட் தேர்வில் மத்திய அரசோடு சேர்ந்து மாநில அரசும் மாணவர்களை ஏமாற்றுகிறது ?

நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக சட்ட மன்றம் நிறைவேற்றிய சட்டத்தையோ  ஓராண்டிற்கு விலக்களிக்கும் அவசர சட்டத்தையோ மத்திய அரசு கொஞ்சமும் மதிக்காமல் காலில் போட்டு மிதித்து விட்டது.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பதே தவறு.    முன்பு போல் மாநில பட்டியலுக்கு மாற்றப் பட வேண்டும் என்று கோரிக் கொண்டிருக்கும் நிலையில் மாநில அரசின் கருத்துக்களை மதிக்காமல் தான் மட்டுமே முடிவெடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்க வில்லை.

அனிதாவின் மரண தியாகம்  எந்த விளைவையும் இந்த மண்ணில் ஏற்படுத்த வில்லையா?

இந்த ஆண்டு மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் ஐந்து பேருக்கு மட்டுமே இடம் கிடைத்த நிலையில் வரும் ஆண்டுகளில் அதுகூட கிடைக்குமா என்ற கேள்வி பூதாகாரமாக எழுந்து வருகிறது.

412  இடங்களில் நீட் மற்றும் ஐ ஐ டி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப் படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைத்திலும்  வீடியோ கான்பரன்சிங் முறையில் அரசுப் பள்ளிகளில் பயற்சி அளிக்கப் படுமாம்.   ஏன் அதற்கென தனியாக ஆசிரியர்களை நியமிக்க அரசுக்கு மனமில்லையா? நிதியில்லையா?

தனியார் பள்ளிகளில் இரண்டு லட்சம் கொடுத்து நேரடியாக பயிற்சி எடுக்கும் மாணவர்களோடு இவர்கள் போட்டி போட முடியுமா?

நீட் கோச்சிங் மையங்கள் பணம் கொழிக்கும் தொழிலாக மாறிவருகிறது.

அதற்கு மாநில மத்திய அரசுகளின் கொள்கைகள் தான் காரணம்.

ஏறத்தாழ இருபதாயிரம் மாணவர்கள் பங்கு பெற வாய்ப்புள்ள தேர்விற்கு தமிழ்நாட்டுக்கு ஆறு மையங்கள் தானாம்.    இந்த ஆறு மையங்களில் கலந்து  கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு ஓடிச்சென்று பங்கேற்க வேண்டும்?      ஏன் இந்த இழிநிலை?        போதுமான தேர்வு மையங்களை கூடவா மாநில அரசு ஏற்பாடு செய்ய முடியாது.?

நீட் தேர்வு கூடாது என்ற கொள்கையில் இருந்து தமிழக அரசு பின் வாங்கி விட்டதா?

பொதுப்பட்டியலில் இருந்தும் கூட மாநில அரசின் கருத்துகள் செல்லுபடியாகாது என்பது  அரசியல் அடிமைத்தனத்தை மாநில அரசு ஏற்றுக் கொண்டு விட்டது என்றே பொருள்.

என்று மாறும் இந்த அடிமைகள் ஆட்சி என்று மக்கள் கொந்தளிக்கும் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சமஸ்கிருதம் கட்டாயம் ;ராஜஸ்தானில் அமுல்படுத்துகிறது பாஜக அரசு ?

ராஜஸ்த்தான் மாநில கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி அரசுப் பள்ளிகளில் நான்காம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமஸ்கிருத மொழியை மூன்றாம் மொழியாக கற்க வேண்டியதை கட்டாயமாக்கப்  போவதாகவும் இதற்காக முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவிடமும் மத்திய அமைச்சர் பிரக்காஷ் ஜவடேகருடனும் கலந்து பேசி விரிவான திட்டத்தை வெளியிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இதுவரை மூன்றாம் மொழியாக சமஸ்கிருதம், பஞ்சாபி, குஜராத்தி , உருது , சிந்தி வங்காளி ஆகிய மொழிகள் தேர்ந்து எடுக்க முடியும் என்று இருந்தது.    அதை மாற்றி சமஸ்கிருதம் மட்டுமே கட்டாயம் என்று ஒரு அரசு திணிக்க முனைவது  என்ன நியாயம்?

இன்று ராஜஸ்தானில் கொண்டு வருபவர்கள் நாளை எல்லா மாநிலங்களிலும் இதை புகுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஐந்தாயிரம் சமஸ்கிருத   ஆசிரியர்களுக்கு வேலை  கிடைக்கும் என்பதுடன் இதே திட்டத்தை தனியார் பள்ளிகள் மீதும் திணிக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

நீதிமன்றங்கள் தான்  தலையிட்டு இந்த அதிகார அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் .

முதல் குற்றவாளி ஜெயலலிதாவின் பினாமிகள் சசிகலா உறவுகள் என்றுதானே தீர்ப்பு? பினாமிகளுக்கு தண்டணை குற்றவாளிக்கு இறந்தபின் மணிமண்டபமா ?

சசிகலாவின் உறவுகள் வைத்திருக்கும் சொத்துக்கள் சட்டப் படியானதா  வருமான வரி சட்டப்படி அவர்கள் குற்றவாளிகளா இல்லையா அவர்களுக்கு என்ன தண்டணை அல்லது நிவாரணம் என்பதெல்லாம் அரசு நீதிமன்ற விசாரணை களுக்கு பின்னால் தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள்.

இந்த சொத்துக்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் உச்சநீதிமன்றம் ஜெயலலிதா குற்றவாளி என்றும் அவரின் பினாமிகள் இதர குற்றவாளிகள் என்றும்  தீர்ப்பு  சொல்லி தண்டனை வழங்கி இருக்கிறது.

எல்லா சொத்துக்களையும் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத் தில்தான் இவர்கள் வாங்கி இருக்கிறார்கள்.

16  ஆண்டுகள் முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முழு ஆதரவுடன்தான் சசிகலா உறவுகள் இத்தனை சொத்துக்களை சேர்த்திருக்க முடியும்.

அவருக்கு தெரியாமலோ ஏமாற்றியோ வாங்கி விட்டார்கள் என்று யாராவது சொன்னால் அவர்கள் தெரிந்தே பொய் சொல்கிறார்கள்  அரசியலுக்கு என்று தான் பொருள்.

ஜெயலலிதாவுக்கு வந்த ஊழல் பணத்தை இவர்கள் மூலம் முதலீடு செய்திருந்தால் முதல் குற்றவாளி யார்?

ஜெயலலிதாவா?   பினாமி சசிகலா வகையறாவா?   இரண்டு பேரும்தானே?

உயிரோடு இருப்பதால் சசிகலாவும் உறவுகளும் சிறையில் இருக்கிறார்கள்.

இறந்து விட்டதால் ஜெயலலிதா புனிதராக மாறி விட்டாரா?

வரிக்கு வரி முதல்வர் பழனிசாமி ‘ அம்மா  ஆட்சி அம்மா ஆட்சி ‘  என்று வாய் கூசாமல் எல்லா மேடைகளிலும் முழங்கு கிறாரே அவர் தெரிந்துதான் பேசுகிறாரா ?  அதன் பொருள் அம்மாவின் ஊழல் ஆட்சி யை நாங்கள் தொடர்கிறோம் என்பதுதானே?

மக்கள் முட்டாள்கள்.    எதை வேண்டுமானாலும் பேசலாம்   என்ற  அகந்தை தவிர வேறு காரணம் என்ன இருக்க முடியும்?

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை எட்டு மாத காலத்துக்கு மேலாக உச்ச நீதி மன்றம் தீர்ப்பை ஏன் தரவில்லை?   தப்புக் கணக்கு போட்டார் நீதிபதி குமாரசாமி என்று எல்லா பத்திரிக்கை களும் எழுதினவே அவருக்கு ஒரு கண்டனம் கூட இல்லையே?     மக்கள் எப்படி நீதி மன்றங்களை மதிப்பார்கள்?

சில மாதங்களுக்கு முன்பு  உச்ச நீதி மன்றம்  தீர்ப்பு  தந்திருந்தால் தமிழ் நாட்டின் அரசியல் போக்கே மாறி இருக்குமே?

அவசர அவசரமாக சசிகலா முதல்வர் ஆக வந்து விடுவார் என்ற நிலை உருவான உடன் திடீர் என தீர்ப்பு வருகிறது.

சட்டத்தை அரசே மீறுகிறது.    காவல் துறையே மக்களை மிரட்டுகிறது.    எங்கே இருக்கிறது  ஜனநாயகம்?

போராட முன்வரும் மக்களை அரசு தடுப்புக் காவல் என்ற பெயரால் கைது செய்யும் அடக்கு முறை ஒழிய வேண்டும்.

கண்ணுக்கு தெரிந்தே இத்தனை கொடுமைகளும் நடக்கின்றன.

ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் பெயர் எங்கு போற்றப் படுகிறதோ அங்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காலில்  போட்டு  மிதிக்கப் படுகிறது.

ஆட்சியில் இருந்தபோது அவர் செய்த பல நலத் திட்டங்கள் மக்களுக்கு நலம் பயக்கும் வகையில் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம்?

ஊழல் செய்து சொத்துக்களை பினாமிகள் மூலம் குவித்தார்  என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு சொல்லி பினாமிகளும் சிறையில் இருக்கும் நிலையில் குற்றவாளியை போற்றும் வகையில் ஒரு அரசு செயல் படுவது மிகப் பெரிய ஜனநாயகப் பிழை.

அவருக்கு மணி மண்டபம் அமைப்பது சட்ட மன்றத்தில் படம் திறப்பது என்றெல்லாம் மரியாதை செய்வது சட்ட பூர்வமாக சரியா என்பதை நீதிமன்றங்கள் தான்  தெளிவு படுத்த வேண்டும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கேள்விக்கு பதில் நிச்சயம் வேண்டும்?

பா ஜ க வை துவைத்து எடுக்கும் சிம்புவின் பாடல் !! ஜி எஸ் டி கோல்மால் என கிண்டல் ??!!

சிம்பு முன்பு பாடலில் பிரபலம் ஆனது ‘ வேறு’ விதமான ஒன்று.

ஆனால் இப்போது கபிலன் வைரமுத்துவின் வரிகளில் பாடியிருக்கும் பணமதிப்பு ரத்து மற்றும் ஜி எஸ் டி பற்றிய பாடல் ஓராண்டில் ப ஜ க அரசின் இரண்டு கொள்கைகளும் நாட்டில் ஏற்படுத்தி இருக்கும் நாசத்தை விளக்கி கிண்டல் அடித்து மக்களிடையே பிரபலமாகி வருகிறது.

யாரும் கேட்காமலேயே அவரது வீட்டுக்கு போலிஸ் காவல் போடும் அளவுக்கு பா ஜ க வை துவைத்து எடுக்கிறது அந்த பாடல்.

இதோ அந்த ஆவேச வரிகள்;

காந்தி நோட்டு ரெண்டும்         அம்பேல் ஆகி போயாச்சு

வாழ்க்கை ஏ  டி எம்மில்            அஸ்கு புஸ்கு ஆயாச்சு

சோக்கா சொக்கா மாட்டி            நடுத்தெருவில் வந்தாச்சு

காத்துக் கிடந்த ஜனம்                  காக்கா கூட்டம் போலாச்சு

நடுத்தரத்த                                          நல்லா வச்சு செஞ்சாச்சு

சில்லரைக்குத்தான்                       டங்குவாறு அந்தாச்சு

மலை மலையா                              மோசம் செஞ்ச மூதேவிங்க

பாரினுதான்                                        போயாச்சு

நோ கேஷ்  கார்டை                        ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்

நோ கேஷ்    கேள்வி                       கேட்காம கொண்டாடலாம்

பண்ட பரிமாற்றம்                            பழகிக்கலாம்

கண்ணே தொறக்காம                  படம் பாக்கலாம்

பேக்கு நோட்டு போல்                    வாழ்க்கை மாறி போயாச்சு

ப்ரேகிங் நியூசை பாத்து                 லூசு மோஷன் ஆயாச்சு

வெள்ள  மனசு சேத்த பணம்       செல்லாமலே போயாச்சு

கருத்த மனசு சேத்த பணம்         வெள்ளை  கலர் ஆயாச்சு

குடிமகனா                                           ஒத்துழைப்பை தந்தாச்சு

கண்டபடிக்கு                                      நம்பிக்கையை வச்சாச்சு

வரிசையிலே பெரிசு சிறுசு        எல்லாருமே நின்னாச்சு

முடிஞ்சிதுன்னு நினைச்சாக்கா    ஜி எஸ் டி வந்தாச்சு

நோ கேஷ் கார்டை                         ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்

ஏழை வீட்டில் இருப்பதெல்லாம்    சிவப்பு பணமடா

குருவி போல சேத்த காசில்              கள்ளம் இல்லடா

நாட்ட மாத்த வேணு முனு               நீங்க நினைச்சா

கோட்டு போட்ட குண்டர்களின்      சங்கப் புடிங்கடா

நோ கேஷ்     கார்டை                         ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்

நோ கேஷ் கேள்வி                               கேட்காம கொண்டாடலாம்

டிமானிடைசேஷன்    டிமானிடைசேஷன்    டிமானிடைசேஷன்

மாறுமா நம்ம நேஷன்                    கேள்வி கேட்டா போலிஸ் ஸ்டேஷன்

இது கோலுமாலு                                  க்லோபலை சேஷன் ஆயாச்சு

இது கோலுமாலு                                  க்லோபலை சேஷன்

ஒரே  கன்பியுஷன்                             என்ன வாழ்க்கைடா இது

இந்த பாட்டு புதுமுகம்கள் நடித்துள்ள தட்றோம் தூக்குறோம் என்ற புதிய படத்தில் இடம் பெறுகிறதாம்.

பா ஜ க பெரிய   புத்தி  மனிதர்கள்   விஜயின் மெர்சல் படத்துக்கு    தங்கள் மொக்கை வசனங்களால் தாக்கி  தந்த விளம்பரத்தை இந்தப் படத்துக்கும் தரப் போகிறார்களா?

புத்திசாலித் தனமாக அடக்கி வாசிக்கப் போகிறார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்??!!