Home Blog Page 84

சுயமரியாதை திருமணங்கள் நடப்பதை சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்டாமல் சதி செய்வது யார்?

தமிழ்நாட்டில்  1967  ல் இருந்து இந்து சுயமரியாதை திருமணங்கள் சட்ட பூர்வமாக்கப் பட்டு விட்டன.    அறிஞர் அண்ணா செய்த அரும்புரட்சி அது.

அது முதல் தமிழ் நாட்டில் நடைபெறும் திருமணங்களில் ஐம்பது சதத்துக்கு மேல் சுயமரியாதை திருமணங்கள் தான் நடை பெற்று வருகின்றன.

புரோகிதர்கள் சொல்லும் சமஸ்க்ரித மந்திரங்களின் பொருள் என்னவென்றே தெரியாமல் கண் மூடித்தனமாக சொல்வதை செய்து கடமையே என்று தாலி கட்டி திருமணம் செய்வதுதான் தமிழர் திருமணம் என்று கேவலமாக சொல்லிக்  கொண்டிருந்தனர்.

அந்த கேவலத்தை மாற்றியவர்கள்  பெரியாரும் அண்ணாவும்.

தமிழர் திருமணம் நடத்துவது எப்படி என்று  1937  லேயே மறைமலை அடிகள் வரையறை செய்து மணமக்கள் பெரியோர் முன்பு இறை நம்பிக்கையோடு உறுதி மொழி எடுத்துக் கொண்டு  மணமகன் மணமகள் கழுத்தில் மங்கல நாண் அணிவிப்பதை அமுல் படுத்தினார்கள்.

இன்று நாட்டிலேயே மாலை மாற்றிக்கொண்டு, மோதிரம் மாற்றிக்கொண்டு , உறுதி மொழி எடுத்துக் கொண்டு , தாலி கட்டிக்கொண்டு, என்று ஏதாவது ஒரு முறையில் சாட்சிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டால் சட்டப் படி செல்லும் என்று  சட்டம் இருப்பது தமிழ் நாட்டில் மட்டுமே.

சுயமரியாதை திருமணங்கள் என்பன நாத்திக திருமணங்கள் அல்ல.      இறை நம்பிக்கையோடு அவரவர் குடும்ப சடங்குகளை நடத்திக் கொண்டு முறையாக மங்கல நாண் அணிவித்து திருமணம் செய்வதுதான் தமிழர் திருமணம்.      எல்லா சாதிகளுக்கும் பொருந்தும் விதத்தில் ஒரு மண முறையை வகுத்துக் கொடுப்பது தமிழ் அறிஞர்களின்  தலையாய பணி.       அத்தகைய ஒரு அரசியல் , சாதி  சமயம் சாரா  பொது தமிழ் அறிஞர் அமைப்பை ஏற்படுத்துவது மிக மிக மிக அவசரம் அவசியம்.

இதே  சட்டத்தை நாடு முழுதும் அமுல் படுத்தும் முயற்சிகளை தி மு க தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறது.

பழந்தமிழர்கள்   தங்கள் வீடுகளிலேயே உறவினர்கள் முன்னிலையில் மங்கல நாண் அணிவித்து திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததை ஆரியர்கள் எப்படியோ மாற்றி விட்டார்கள்.

அதிலிருந்து மீண்டு மானமுள்ள மண முறைக்கு தமிழர் மாற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

நாம் கேட்கும் கேள்வி .    நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சுயமரியாதை நடை முறையை ஏன் சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்ட மறுக்கிறீர்கள்?      யார் தடுப்பது?     சதியா?   அறியாமையா?

இயக்குனர்களுக்கு நாட்டில் நடப்பது தெரியாதா?

தவிரவும் சுயமரியாதை திருமணங்களை எள்ளி நகையாடும் விதத்தில் கேவலமாக சித்தரிப்பதும் நடக்கும்.    அது நடந்தால் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும்?

இயக்குனர்கள் சிந்திக்கட்டும்!!!

 

புதிய ஆளுநர் அமித் ஷா முடிவை மீறி செயல் படுவார் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம் இல்லையா?

பன்வாரிலால் புரோஹித் புதிய ஆளுநர் சட்ட பூர்வமாக செயல்பட்டு  தமிழ் நாட்டில் நிலவும் அசிங்கங்களை களைய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதும் வேண்டுவதும் மரபாக இருப்பதால்  திமுக செயல் தலைவர் தளபதி   அன்புமணி ராமதாஸ் உள்பட எல்லாரும் வேண்டுகோள் வைத்து விட்டனர்.

வித்யா சாகர் என்ன செய்தாரோ அதையே பன்வாரிலால் புரோஹித் செய்யப் போகிறார்.

தொடக்க முதலே சசிகலா-தினகரன் எதிர்ப்பு நிலையை அமித்ஷா-மோடி கூட்டணி எடுத்து விட்டது.

ஓ பி எஸ் -இ பி எஸ் இருவரும் போதும் . அவர்களிடம் ஐம்பது சதம் பேரம் பேசி இடம் வாங்கி காலூன்றி விடலாம் என்ற திட்டத்தில் இதுவரை எந்த மாற்றமும்  இல்லை.    சென்னையின் அறிவுஜீவி  ஆலோசனை தான் அங்கே ஒப்புக்கொள்ளப் பட்டு இங்கே இந்த அடிமைகளால் அமுல் படுத்தப் பட்டு வருகிறது .

எதிர்பாராத விதமாக தினகரன் இருவருக்கும் போட்டியாக ஒரு சமபலத்துடன் கூடிய அமைப்பை உருவாக்கி விடுவார் என்பது அவர்கள் எதிர்பாராத ஒன்றாக இருக்கலாம்.      ஐ டி   சி பி ஐ  என்று மிரட்டி அடக்கி விடலாம் என்ற நம்பிக்கை  இன்னமும்  அவர்கள் நடவடிக்கை களில் நன்றாக  தெரிகிறது.

நீதிமன்றம் ஒன்றே நம்பிக்கை தரும் அமைப்பாக இருந்தது.     அது நாளை என்ன செய்யும் என்று தெரிய வில்லையே?

தகுதி நீக்கம் ரத்து செய்யப் பட வேண்டும்.   அது உச்ச நீதி மன்றம் வரை செல்லும்..   திமுக உறுப்பினர்களின் உரிமைக்குழு முடிவு வேறு இருக்கிறது.

பெரும்பான்மை இல்லாத எடப்பாடி அரசு வெட்கமே இல்லாமல் சட்ட ஓட்டைகளை சாக்கு சொல்லி பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.

சிறுபான்மை எண்ணிக்கையில் இருந்து கொண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்று   ஆண்டவர்கள் உண்டு.       அதை சட்ட மன்றத்தில் நிருபித்து விட்டால் பிரச்னையே இல்லையே?    ஏன் தயங்குகிறீர்கள்?       சட்ட மன்றத்தில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்காமல் ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருந்த சிறுபான்மை  அரசு ஏதாவது உண்டா?

ஒரு கட்டத்தில் தி மு க – காங்கிரஸ்- முஸ்லிம் லீக் உறுப்பினர்கள்    98  பேரும் ராஜினாமா செய்தால்தான் சட்ட மன்ற மாண்பு காப்பாற்றப் படும் என்றால் அதையும் செய்ய அவர்கள் தயங்க  கூடாது. 

அப்போதும் கூட இந்த வெட்கம் கெட்ட அரசு பதவியில் எப்படியாவது ஓட்டிகொண்டிருக்க முயல்வார்கள்!

ஒன்று நீதிமன்றம் நியாயமான தீர்வை சொல்ல வேண்டும்.

அந்த நீதி மன்ற நீதி கிடைக்க காத்திருக்கும் காலம்தான் இந்த ஆட்சிக் கொள்ளையர்களுக்கு வேண்டும்.  அதை தவிர்ப்பது இயலாது.

அல்லது மக்கள் போராட்டம் நடத்தி  இனி பொது தேர்தல் நடத்தி தான் ஆள முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

இரண்டில் எது நடந்தாலும் அது விரைவில் நடக்க வேண்டும்.

                                  

 

பொய் சொன்னோம் என்று ஒப்புக் கொள்ளும் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சராக நீடிக்கலாமா?

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று பேசிய பேச்சு இது :

” அய்யா உங்களிடம் எல்லாம் பெரிய மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பல செய்திகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று இட்லி சாப்பிட்டார்கள் சட்னி சாப்பிட்டார்கள் என்று ஏதோ ஒரு பொய்யை சொன்னோம்.  ஆனால் உண்மையிலேயே அதை யாருமே பார்க்க வில்லை . இதுதான் உண்மை.”

” நம்முடைய கட்சியின் ரகசியம் வெளியே பொய் விடக் கூடாது என்பதற்காக எல்லோரும் சேர்ந்து அன்றைக்கு பொய்களை சொன்னோம். இதுதான்  உண்மை.”

இது மாதிரியான ஆட்களை அமைச்சர்களாக வைத்திருக்கும் நாடு எப்படி உருப்படும்?

நேற்று பேசியது பொய் என்று இன்று பேசும் ஆள்   இன்று பேசியது பொய் என்று நாளை சொல்ல மாட்டார்  என்பது என்ன நிச்சயம்?

நாங்கள் பார்த்தால் ஜெயலலிதா உண்மையை சொல்லி விடுவார் என்று மறைத்தார்கள் என்று சொல்லும் சீனிவாசன்,  வார்டு பாய்கள், நர்சுகள்,    உள்நாட்டு வெளிநாட்டு மருத்துவர்கள் என்று பலரையும் ஜெயலலிதா பார்த்தபோது ஏன் சொல்லியிருக்க கூடாது என்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.?

சி பி ஐ விசாரிக்கட்டும்.    உண்மை வெளிவரட்டும் என்று பலரும் எதிர் பார்க்கிறார்கள்.

சந்தேகங்கள்  பல தீர்க்கப் பட வேண்டியது உள்ளது.    அது வேறு.   ஆனால் கூட இருந்தே அதிகாரத்தில் இருந்த பன்னீர்செல்வமும் , எடப்பாடியும்  மற்றவர்களும் தங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க முடியுமா?

மிரட்டி பணிய வைத்தார்கள் என்றால் நீங்கள் மிரட்டல்களுக்கு  அஞ்சுபவர்கள் என்று ஆகிறது.    இன்று எந்த மிரட்டலுக்கு அஞ்சுகிறீர்களோ?   மிரட்டும் ஆட்கள் தான் மாறி இருப்பார்கள்.    அது பா ஜ க என்று வெளிச்சமாகி விட்டதே?

மொத்தத்தில் ஆளும் அருகதை அற்றவர்கள் நீங்கள் என்பது நிருபிக்கப்  பட்டு  விட்டது.

 

 

திராவிடத்தை நீர்த்துப் போகச்செய்ய கமலை விட்டு ஆழம் பார்க்கும் பார்ப்பனீயம் ??!!

திராவிட இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது பார்ப்பனீயம் .

ரஜினிகாந்த் அதில் ஒரு பங்கு.    லதாவை திருமணம் செய்து பாதி பார்ப்பனர் ஆனவர் அவர்.    என்றைக்கும் திராவிட இயக்க கொள்கைகளை ஆதரித்து பேசியவர் அல்ல.      சினிமாவில்  கொடி கட்டி பறக்கும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில்  நீடிப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இருந்ததில்லை.     ரசிப்போம். கொண்டாடுவோம்.

ஜெயலலிதாவுக்கு எதிராக 1996  ல் குரல் கொடுத்தபோது ஊழலுக்கு எதிரான குரலாக இருந்ததால் எல்லாரும் வரவேற்றார்கள்.    அதற்கும் மேலே எந்த கொள்கைக்கும் சொந்தக்காரராக அவர் தன்னை அடையாளப் படுத்தவில்லை.

தமிழ்நாடு சார்ந்த காவிரி போன்ற பிரச்னைகளிலும் பெரிதாக குரல் கொடுத்ததில்லை.

இப்போது திடீரென்று அரசியல் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்.    போர் வந்தால் பார்ப்போம் என்கிறார்.

அடுத்தது கமல்ஹாசன்.

இன்று அவர் உதிர்த்த முத்துக்கள் இவை.

”  ‘   அரசியலுக்கு வந்து விட்டேன்.  கட்சியின் பெயர் முன்பே ஆலோசித்து இருக்கிறேன்.”

‘   திட்டங்கள் கொள்கைகள் குறித்து உடனே சொல்வதற்கு விரும்பவில்லை. இது  ஒரு சிறிய விஷயம்.”

”   முதல் அமைச்சர் ஆக தயாராகவே இருக்கிறேன். கஜானாவை காலியாக வைத்துள்ளனர். மக்கள் பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. ஊழலுக்கு மக்களே பொறுப்பு.”

”   இப்போது தேர்தல் வந்தால் நானும் அதில்  களம் இறங்குவேன்.     ”

”    காவி எனது நிறம் அல்ல.   கருப்புக்குள் காவியும் அடக்கம். ‘

”     நான் பசு வதை எதிர்ப்பாளர்களுக்கு எதிரானவன்.”

”     நான் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவன்.    ஆனால் எந்த மதத்துக்கும் கடவுளுக்கும் எதிரானவன் அல்ல.   நல்லது செய்தால் காவி கட்சிகளுடன் கூட பேசுவேன். ”

”  மோடி நல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பண மதிப்பு ஒழிப்பு திட்டம் சிறந்த திட்டம்தான். நான் பொருளாதார நிபுணன் அல்ல. எனவே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ”

இப்படி பேசுபவர் பற்றி என்ன முடிவுக்கு மக்கள் வர முடியும். ?

சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல் நிலையை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பவர் தான் இப்படி  பேச முடியும்.

பா ஜ க கமலை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வதெல்லாம் நாடகம் என்பதை மக்கள்  அறிய மாட்டார்களா என்ன?

எம் ஜி யார் , ஜெயலலிதா, என்று பார்ப்பன ஆதரவாளர்களிடம் ஆட்சியை கொடுத்து                  திராவிட இயக்கத்தை பாதி ஒழித்து விட்டார்கள்.    மீதி இருப்பதை ரஜினி  , கமல்  என்று புகுத்தி ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

கமல் ஒரு தமிழ் பார்ப்பனர் என்பதால் மட்டும் நாம் இந்த கருத்தை சொல்ல வில்லை.   கமல் என்றாவது சாதி ஒழிப்பை பற்றி பேசி இருக்கிறாரா?      நாத்திகர் என்று சொல்லிக் கொள்கிறார் .  மகிழ்ச்சி.   அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற சட்டத்தை அமுல் படுத்த வேண்டும் என்று பேசி இருக்கிறாரா?     மதத்தில் சமத்துவம் நிலவ வேண்டும் என்று பேசி இருக்கிறாரா?     இந்து மதத்தில் சமநீதி வேண்டும் என்று பேசி இருக்கிறாரா?        பேசட்டும் . வரவேற்போம்?

கொள்கையையே சொல்லாமல் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என்கிறாரே என்ன  கொடுமை இது?      வெறும் சினிமா மோகத்தில்  தமிழ் முட்டாள்கள் ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கைதானே?

ஏற்கனெவே அதிமுக என்ற திராவிட இயக்கத்தை பா ஜ க ஊழல்  சிபிஐ. ஐடி  என்றெல்லாம் மிரட்டி பணிய வைத்திருக்கிறது.

இடது சாரி இயக்கத்தில் கூட மார்க்சிஸ்ட் கட்சியில் பிராமணர்  ஆதிக்கம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு  இருக்கிறதா இல்லையா?

தமிழ் நாட்டை தமிழர் தலைவர்களை  ஆள விடக்கூடாது என்று பார்ப்பனீயம் பல வித வேடங்களில் பாடு பட்டுக் கொண்டிருக்கிறது ?

அதற்குத் தகுந்தாற்போல் தகுதியான தமிழர் தலைவர்கள் உருவாக வில்லையே?     யாரை நொந்து கொள்வது?   அவர்களைப் பற்றி அடுத்துப்  பேசுவோம்.

நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் நற்பணி மன்றம் என்று ஊருக்கு ஊர் போர்டு வைத்து கொண்டாடும் இளைஞர் களை பெற்றோர் அடக்கி வைக்கும் நாள் வந்தே ஆக வேண்டும்.

தமிழர்களே கமலை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.!!!

 

எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களோடு மகாபுஷ்கர நீராடல்??!!

எடப்பாடி பழனிசாமி தன் அமைச்சரவை சகாக்களுடன் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடினார்.

சிதம்பரம் தியாகப்பா தீட்சிதர் வேதமந்திரங்கள் சொல்ல அதை இவர் திருப்பி சொல்ல ஆற்றில் இறங்கி புனித  நீராடினர்.    ஓ எஸ் மணியன் சம்பத்  கொறடா ராஜேந்திரன்  குடந்தை ராமநாதன் எல்லாரும் சேர்ந்து புனித நீராடினர்.

மகாமகத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் புனித நீராடிவிட்டு  அ தன்பின் நடந்த  அரசியல் அலங்கோலங்கள் நினைவுக்கு வருகிறது அல்லவா?

விசேஷமாக காஞ்சி ஜெயேந்திரர் விழா மலரை வெளியிட இவர்கள் பய பக்தியுடன் பெற்றுக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் யாரும் விதி விலக்கல்ல.  சபாநாயகர் தனபால் ,செங்கோட்டையன், வேலுமணி  காமராஜ் சேவூர் ராமச்சந்திரன், எல்லாரும் புனித நீராடி இருக்கிறார்கள்.

நீங்கள் பாவத்தை தொலைப்பதில் முனைப்பாக இருப்பதில் வியப்பில்லை.

இறைவன் அருள் உங்களுக்கு சித்திக்க நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

ஒரே ஒரு வேண்டுகோள்.

உங்கள் கட்சி பேனர்கள்  துண்டு அறிக்கைகள், விளம்பரங்கள்  கட்சியின் கொள்கை விளக்க குறிப்புகள் இவற்றில்

பெரியாரின் படத்தை தயவு செய்து எடுத்து விடுங்கள்.

தினகரனுக்கு திருச்சியில் கூடிய கூட்டம்!!!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தினகரன் திருச்சியில் ஒரு  பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை நடத்திக் காட்டி இருக்கிறார்.

அதிமுக ஆட்சியாளர்கள் நீட் தேர்வை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டு உருப்படியாக  எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , அனிதாவின் மரணம் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை தினகரன் நன்றாக  பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்.

அனிதா தாழ்த்தப் பட்ட வகுப்பை சேர்ந்தவர்.     அவர் மரணம் எல்லா சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவிகளையும் பாதித்திருக்கிறது .       முக்குலத்தோர், வன்னியர், கவுண்டர் , நாடார் , முத்தரையர் என்று சாதி வித்தியாசம் பாராமல்  அனிதாவின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து போராடி வருவது சாதி ஒழிப்பில் மாணவர்கள் நினைத்தால் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது .

அது மட்டும் அல்ல.     இ பி எஸ் -ஓ பி எஸ்  இவர்களை இணைத்தால் போதும் இவர்களை வைத்து மிரட்டி பாதி இடங்களை வாங்கி கூட்டு வைத்து தமிழகத்தில் கால் ஊன்றி  விடலாம் என்ற ம் பா ஜ க வின் கனவு தினகரனால் சிதைக்கப் பட்டு விட்டது.

அ தி மு க வில் ஒரு பலமான நிர்வாகிகளை கொண்ட ஒரு கட்டமைப்பை தினகரன் உருவாக்கி விட்டார்.

இனி இவர்களை தவிர்த்து அ தி  மு  க என்ற கட்சி வலுவுடன் இயங்குவது கடினம்.

எப்படியோ பா ஜ  க வின் கனவு தகர்ந்தால் நல்லதுதானே!

 

ஆளுநர் துணையோடு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர்வது அநீதியின் வெறியாட்டம் ?!

பெரும்பான்மை இழந்த எடப்பாடியின் ஆட்சி தொடர்வது மிகப் பெரிய அநீதி!

எப்படி இது சாத்தியம்?

பா ஜ க வின் ஆசியும் ஆளுநரின் தந்திரமும் இதை சாத்தியமாக்கி இருக்கிறது.

தினகரனின் ஆதரவாளர்கள் பதினெட்டு பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர்  தெரிந்தே இந்த தவறை செய்திருக்கிறார்.

சபாநாயகர் பதவி பாதி நீதிபதிக்கு சமம்.    கால அவகாசம்  கேட்டு வழக்கறிஞர் மூலம் முறையிட்டும் கூட அவகாசம் அளிக்காமல் அவசரம் அவசரமாக தகுதி நீக்கம் செய்ய என்ன காரணம்?

அவர்கள் கட்சி மாறினார்களா?    சட்ட மன்றத்தில் கொறடா உத்தரவை மீறி மாறி                            வாக்களித்தார்களா ?

திமுக உறுப்பினர்கள்  21  பேர் மீது குட்கா கொண்டு வந்த பிரச்னையில் உரிமை மீறல் காரணம் காட்டி பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்க தடை கேட்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறது.

அதேபோல் தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் பதினெட்டு பேர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க தடை கேட்டும் வழக்கு இருக்கிறது.  தலைவரை மாற்ற கோரி மனு கொடுப்பது தகுதி இழப்புக்கு காரணம் ஆகாது என்று தீர்ப்பு இருக்கிறது.

இந்த  39  பேரையும் பதவி நீக்கம் செய்து விட்டு வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை காட்டி  ஆட்சியல் தொடர திட்டமிட்ட  எடப்பாடியின் கனவு வாக்கெடுப்பு நடத்தக் கூடாது  என்ற நீதி மன்ற உத்தரவால் தகர்ந்து போய் இருக்கிறது.

இப்படி எல்லாம் மோசடிசெய்து பதவியில் நீடிக்க வேண்டுமா என்ன?

வெட்க உணர்வு மரத்துப் போய் விட்டதா?     நம்பிக்கை இருந்தால் தங்கள் மீது உள்ள நியாயத்தை சட்ட மன்றத்தில் வைத்து விவாதித்து வெற்றி பெற்று ஆட்சியில் தொடர்வது மட்டுமே நாணயமானவர்கள் செய்ய வேண்டிய வேலை.

எடப்பாடி யும் பன்னீர்செல்வமும் அதைப் பற்றியெல்லாம் கவலை படாமல் பதவியில் ஒட்டிக் கொள்ள எதையும் செய்யும்  மனநிலைக்கு வந்து விட்டார்கள்.

டெல்லி எஜமானர்கள் கதை வசனம் எழுதி நடத்தும் நாடகத்தில் ஒழுங்காக நடித்துக் கொண்டிருப்பது மட்டுமே இன்று இவர்கள் செய்யும் வேலை.

இவர்கள் கையில்  தமிழகம் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை.    தங்களையே விற்றவர்கள் நாட்டையா விற்க மாட்டார்கள்?

எஸ் ஆர் பொம்மை வழக்கில் உச்சநீதி மன்றம் எப்போதெல்லாம் ஆட்சி பெரும்பான்மை இழக்கிறதோ அப்போதெல்லாம் சட்ட மன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிருபித்து விட்டு மட்டுமே ஆட்சியில் தொடர வேண்டும் என்ற தீர்ப்பு இறுதியானது.

அந்த தீர்ப்பையே இன்று கேலிக் கூத்தாக்கு கிறார்கள்.

சட்ட மன்றத்தில் உடனடி நீதி  கிடைக்காது.

நீதிமன்றத்தில் நீதி கிடைக்க மாதக் கணக்கில் காத்துக் கிடைக்க வேண்டும்.

மக்கள்  புரட்சி ஒன்றே உடனடி மாற்றத்திற்கு வழி கிடைக்கலாம்.

வெடிக்குமா புரட்சி?

 

அ.தி.மு.க வுக்கு இரட்டைத் தலைமை; ஏற்குமா தேர்தல் ஆணையம்?? நிலைக்குமா ஏற்பாடு?

எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில்  அதிமுகவில்  இரட்டை தலைமை.

தலைமை ஒருங்கிணைப்பாளர்  ஓ பி எஸ்.    இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி.     இருவரும் சேர்ந்தே எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும்.     ஏதேனும் ஒரு சந்தர்பத்தில் ஒருவரே முடிவு எடுத்து அறிவித்தால் அதில் மற்றவருக்கு உடன்பாடு இல்லை என்றால் முடிவு எப்படி செல்லும்?

அதாவது ஒருவரின் கையில் மட்டும் முழு அதிகாரமும் கொடுக்கப் பட யாருக்கும் விருப்பம் இல்லை.    அல்லது நம்பிக்கை இல்லை.   இதுதான் தொடக்க முரண்பாடு .   முதல் கோணல்.

பொது செயலாளர் பொறுப்பையே எடுத்து விட்டு அது நிரந்தரமாக ஜெயலலிதாவுக்கு என்று அறிவித்தவர்கள்  தலைவரும் பொது செயலாளரும் இல்லாத ஒரு அரசியல் கட்சியை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்.

இணைப்பு என்பது எல்லா பிரச்சினை களுக்கும் முடிவு கட்டுவதாக இருந்தால் அதில் பயன் உண்டு.

இவர்கள் இருவரும் இணைந்ததன் பின்னணியில் பா ஜ க இருக்கிறது.      இவர்களை ஆட்டுவித்து  தமிழகத்தில் கால் ஊன்ற முயற்சிக்கிறது என்ற பின்னணியில் பார்த்தால் இந்த ஏற்பாட்டிற்கு       தேர்தல் ஆணையம் அங்கீகாரம் தந்து விடும் என்று இவர்கள்  எதிர் பார்க்கிறார்கள்.

ஐ டி , அமலாக்கத்துறை ,   சி பி ஐ  மூலம் தினகரனை அடக்கி விடலாம் என்று மத்திய பா ஜ க அரசு திட்டமிடலாம்..

ஆனாலும் தினகரன் கட்டமைத்துள்ள போட்டி அ தி  மு  க அமைப்பு செயல் படும் நிலையில் இந்த ஏற்பாடு என்ன பயனை அளிக்கப் போகிறது. ?         எது அசல் என்று மீண்டும் தீர்மானிக்கும் நிலைமைதான் தொடர்கிறது.

சட்ட மன்றத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்தால் நிலைமை  மாறும்.    அதற்காகத்தான் தினகரன் ஆதரவு உறுப்பினர்களை மிரட்டும் வேலையில் காவல் துறையை முடுக்கி விட்டிருக்கிறது எடப்பாடி அரசு.   தேர்தல் கமிஷன் என்ன செய்ய போகிறது என்பதை நாடு எதிர் நோக்கி இருக்கிறது.

இதுவரையிலுமே ஒன்றும் செய்ய வில்லை. இனி என்ன செய்ய போகிறார்கள் ?     தேர்தல் கமிஷனின் அணுகுமுறை கட்சிக்கு கட்சி வேறுபடுகிறது.    சமாஜ்வாதி கட்சியில் பிரச்னை ஏற்பட்டபோது அகிலேஷுக்கு ஆதரவாக முடிவு எடுக்க வில்லையா?

இரட்டை தலைமைக்கு இரட்டை சின்னம் கிடைக்குமா என்ற கேள்விக்கு எப்போது பதில் கிடைக்கும்?

ஜீரோக்கள் மட்டுமே தலைமை இடத்தில் இருந்தால்  அதற்கு என்ன மதிப்பு இருக்கும்?

ஏனென்றால் எவரையும் நம்பர் ஒன்றாக ஏற்க  யாருமே தயாராக இல்லையே?

 

 

நவோதயா பள்ளிகள் வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டியது அரசா நீதிமன்றமா?

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க தடை இல்லா சான்றிதழ்கள்  எட்டு வாரத்தில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேண்டுமா வேண்டுமா என்பதை தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க  வேண்டுமா  அல்லது  உயர்நீதிமன்றம் முடிவு  செய்ய முடியுமா?

அண்ணா தந்த  இரு மொழி கொள்கை அமுலில் உள்ள ஒரு மாநிலத்தில் மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும்    வேலையில் ஏன் உயர் நீதி மன்றம் இறங்க வேண்டும்?

தேவை இல்லை என்று தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அரசு என்ன செய்யபோகிறது.?

மேன் முறையீடு செய்ய போகிறதா?    அல்லது பா ஜ க அரசுக்கு அஞ்சி நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டது  நாங்கள் என்ன செய்வோம் என்று நவோதயா பள்ளிகளுக்கு திறப்பு விழா நடத்த போகிறதா?

நடப்பது அ தி  மு க ஆட்சி அல்ல  பா ஜ க வின் நிழல் ஆட்சிதான் என்பது வெளிப்படை.       இதுவரையில் எந்த பிரச்னையிலும் மத்திய அரசை கண்டிக்கவோ எதிர்க்கவோ ஆள்பவர்கள் தயாராக இல்லை.

பா ஜ க வுடன் கூட்டணி வைத்தால் என்ன என்று ராஜேந்திர பாலாஜி கேட்கிறார்.     கூட்டணி பற்றி பேசுவோம் என்று பழனிசாமி சொல்கிறார்.    எல்லா பேரத்தையும் முடித்து விட்டார்கள்.    கட்சியை அடகு வைப்பது அவர்கள் உரிமை.    தமிழக மக்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க இவர்கள் யார்?

ஆறு வகை பள்ளிகள் இயங்குவதே ஒரு அவமானம்.      ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் அரசு பள்ளிகள் சமச்சீர்  பாட  திட்ட மெட்ரிக் பள்ளிகள் அல்லாத பாடத்திட்ட மெட்ரிக் பள்ளிகள்  சி பி எஸ் சி பள்ளிகள் சர்வதேச பள்ளிகள் என்று கல்வியில் தொடங்குகிறது பாரபட்சம்.     அதுவே  வாழ்வின் அனைத்து துறைகளிலும் தொடர்கிறது.

இந்தியா முழுவதும் மாவட்டம் தோறும் நவோதயா பள்ளிகள் வந்து விட்டன என்பது உண்மைதான்.      காங்கிரஸ் கட்சி இதை வரவேற்று இருக்கிறது.  அவர்கள் மும்மொழி  கொள்கையை ஆதரிப்பவர்கள் தானே.

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் பாட திட்டம் இடம் பெறும் என்கிறார்கள்.     + 1 +2 வகுப்புகளில் விரும்பினால் படிக்கலாமாம் .    அதுவும் எந்த அளவு அமுல் படுத்தப் படும் என்பது தெளிவில்லை.

நீட் தேர்வில் செய்த மோசடியை நினைத்தால் இவர்கள் நம்மை ஏமாற்ற  எதையும் செய்வார்கள் என்ற அச்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

இந்தியை திணிக்கும் முயற்சியாகவே இதை பார்க்க வேண்டும்.

தமிழக அரசு என்ன செய்ய போகிறது?     விலை போய் விட்டார்களா என்பதன் உரை கல்லாகவே  அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை பார்க்கப் படும்.

 

இந்தியாவுக்கு ‘ஆதார் ‘ அட்டை போல தமிழகத்துக்கு ‘குடியாவணம்’ அட்டை ஏன் கூடாது?

மத்திய அரசின் பல திட்டங்களுக்கு பயன் படும் ஆவணமாக ஆதார் அட்டை பயன்பட்டு வருகிறது.

தவறில்லை.

இத்தனைக்கும் உச்சநீதிமன்றம் பல திட்டங்களுக்கு ஆதார் அட்டை கேட்க கூடாது என்று சொல்லியும் மத்திய அரசு பிடிவாதமாக பல திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டது.

அதேபோல் ஏன்   தமிழக அரசின் திட்டங்கள்  முறையாக அமுல் படுத்தப் பட தமிழகத்தில் வாழும் இந்தியக் குடிமகன் களுக்கு என தனியாக ஒரு ‘ குடியாவண ‘ அட்டை  திட்டத்தை தமிழக அரசு அமுல் படுத்தக் கூடாது என்ற கேள்வி வலுப் பெற்று வருகிறது.

தென் மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா , ஆந்திரா அரசுகள்  டிஜி லாக்கர்    ( DigiLocker ) என்ற  செய்முறை மூலம் ஒரு மென்பொருள் தயாரித்து அதை பல பெரிய திட்டங்களுக்கு செல்லுபடியாக்கும் வகையில் திட்டமிட்டு அதற்குள் கல்வி சான்றிதழ்கள் , நில உடமை ஆவணங்கள் , சமையல்  எரிவாயு உதவி துகை ,  வாகன ஓட்டும் உரிமை ஆவணம்  போன்ற பல வற்றையும் அமுல் படுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தமிழ் நாட்டில் வாழ்பவர்களுக்கு என தனியாக மாநில குடியாவணம் ஒன்றை உருவாக்குவதில் பல நன்மைகள் உண்டு.

ஆள்வோர் இதை விரிவாக  பரிசீலித்து

தமிழ் நாட்டில் வாழ்வோர்

அரசு நல திட்டங்களை பெற வசதியாகவும்

மாநிலத்தில் குடியிருப்போர் பட்டியலை

தயார் நிலையில்  பராமரித்து  அதை

பல் நோக்கு திட்டங்களுக்கு பயன் படும் வகையிலும்

மத்திய அரசுக்கு ஆதார்

தமிழ் நாட்டுக்கு குடியாவணம்

கொண்டு வருவது உடனடி தேவை .