Home Blog Page 85

கெளரி லங்கேஷ் சுட்டுக் கொலை ; காவிப் படையின் கைவேலையா ???

கர்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் இடது சாரி நாத்திக எழுத்தாளர்கள் திட்டமிடப் பட்டு கொல்லப்பட்டு வருகிறார்கள்.

எம் எம் கல்பர்கி . நரேந்திர தபோல்கர். கோவிந்த் பன்சாரே  என்று பட்டியல் நீளுகிறது.    அந்தப் பட்டியலில் கர்நாடகாவின் கெளரி லங்கேஷ் சேர்ந்திருக்கிறார்.       இரவு வீடு திரும்பும்போது வாசலில் வைத்து  சுட்டக் கொன்றிருக்கிறார்கள் .        55 வயதான கெளரி தனியே வாழ்ந்திருக்கிறார்.

எல்லாரும் நாத்திகர்கள்.     இடது சாரி  சிந்தனையாளர்கள்.     குறிப்பாக  பாசிச இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக கருத்து உருவாக்கம் வலிவு பெற போராடிக்கொண்டு இருந்தவர்கள்.

எல்லாருமே  7.65 எம் எம் பிஸ்டலை கொண்டுதான் சுடப் பட்டு இறந்திருக்கிறார்கள்.

இதை கர்நாடக காவல் துறை  விரைவில் துப்புத் துலக்கி விடை கண்டு பிடிக்கும் என்று நம்புகிறோம் .

அவர் நடத்தி வந்த கெளரி லங்கேஷ் பத்திரிகை பாசிச எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு மற்றும் நக்சல் ஆதரவு என்று இடது சாரி சிந்தனை மரபுடனேயே நடத்தப்  பட்டு வந்திருக்கிறது.

 

மாவோயிஸ்டு களை சரண் அடைய செய்து மாற்று பாதை காட்டும் பணியையும் அவர் செய்து வந்திருக்கிறார்.   ஏன் அவர்களே கூட இதை செய்திருக்க கூடாது என்றும் சிலர் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

துப்புக் கொடுப்பவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்திருக்கிறது மாநில அரசு.      முதல் முதலாக ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய அரசு முன்வந்திருக்கிறது. காங்கிரஸ் அரசு கண்டு பிடித்து விடும் என்று நம்பிக்கை இருக்கிறது.

பா ஜ க வை எதிர்ப்பவர்கள் என்ன ஆவார்கள் என்பதை காட்டி மிரட்டும் முயற்சியாக ஏன் இருக்க கூடாது என்பதுதான் பெரும்பான்மை கருத்து.

ஏனென்றால் நரேந்திர மோடியை இன்னும் ஆராண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது என்ற கருத்து பொதுவாக மக்கள்  மத்தியில் பரப்பப் பட்டு வருகிறது.

காரணம் மாற்றாக தன்னை காட்டிக்கொண்டு களமிறங்க வேண்டிய காங்கிரஸ் கோஷ்டிப் பூசல்களால் தவித்துப் போய் நிற்பதுதான்.

இந்து மதத்துக்குள் சாதிய அமைப்பை எதிர்ப்பவர்கள் இப்படித்தான்  கொல்லப் படுகிறார்கள்.

லிங்காயத் சமூகத்தில் பிறந்த கெளரி சாதி அமைப்பை எதிர்ப்பது அந்த சமூகத்துக்கே கூட ஒப்புதல் இருக்காது.     ஏனென்றால் அவர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல.  தனியான அடையாளம் உள்ளவர்கள்.    எங்களை லிங்காயதுக்கள் என்ற அடையாள த்தோடுதான் அழைக்க வேண்டும் என்பதே அவர்களில் குறிப்பிட்ட பிரிவினரின் கோரிக்கை.

உண்மை வெளிப்படும் போதுதான் மக்களுக்கு விழிப்புணர்வு பிறக்கும் என்பதால் மர்ம முடிச்சை  காவல் துறை அவிழ்க்கும் நாளை மக்கள் ஆவலோடு எதிர் பார்திருக்கிறார் கள்.

 

மோடி கேபினட்டில் நால்வரில் ஒருவர் பார்ப்பனர்?! இதுதான் சமூக நீதியா?

சுஷ்மா ஸ்வராஜ் ,  பார்ப்பனர்

அருண் ஜைட்லி , பார்ப்பனர்

நிதின் கட்கரி,         பார்ப்பனர்

சுரேஷ் பிரபு ,         பார்ப்பனர்

மேனகா காந்தி ,பிறப்பால் சீக்கியர் மண உறவால் பார்ப்பனர்

அனந்தகுமார் ,       பார்ப்பனர்

பிரகாஷ் ஜவடேகர்,  பார்ப்பனர்

நிர்மலா சீதாராமன்    , பார்ப்பனர்

அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.      28  பேர் கொண்ட நரேந்திர மோடியின் காபினட் அமைச்சர்களில் இவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள்.

ஆனால் எந்த பத்திரிகையும் இவர்களது சாதி அடையாளத்தை எழுத மாட்டார்கள்.    ஒரு யாதவ்  , தலித் , ஜாட், மற்ற எந்த சாதியாக இருந்தாலும் எத்தனை பேர் அந்த  சாதியை சேர்ந்தவர்கள் என்று பட்டியல் இட்டு எழுதும் ஊடகங்கள் பார்ப்பன சாதியை மட்டும் பட்டியல் இட்டு ஏன் எழுதுவதில்லை. ?

மற்ற ராஜாங்க அமைச்சர்கள் எல்லாம் இவர்களுக்கு கீழேதான் வேலை பார்த்தாக வேண்டும்.   அதில் யார் இருந்தால் என்ன ? மற்றவர்களுக்கு அது போதாதா?

முந்தைய கேபிநெட்டில்  கூட இருபத்து நான்கு பேரில் பதினாறு பேர் பார்ப்பனர்கள்.

இன்னும் சொல்லப் போனால் முன்னேறிய முற்போக்கு சமுதாய மக்களுக்குத்தான் மோடி அரசில் அதிக பொறுப்புகள் கொடுக்கப் படுகின்றன.

கார்போரட்டுகளுக்கான ஆட்சி  என்று பேர் வாங்கிய மோடி அரசு மேல்தட்டு மக்களுக்கான அரசாகவும் பேர் வாங்கி இருக்கிறது .

அதிகாரிகளின் ஆட்சி எப்போது பொது மக்களுக்கான ஆட்சியாக மாறும் ?

 

தினகரனுக்கு ஆளுனரிடமும் குடியரசுத் தலைவரிடமும் நீதி கிடைக்குமா?

ஆளுநரும் குடியரசு தலைவரும் பா ஜ க வி ன் பிரதிநிதிகள்.       பா ஜ க வின் அரசியல் வியூகங் களுக்கு எதிராக இவர்கள்  எந்த முடிவையும் எடுப்பார்களா?

நடுநிலை யாக இருந்து எந்த முடிவையும்  எடுக்க வேண்டும் என்பது சட்ட பூர்வ நிலையாக இருக்கலாம்.    நடைமுறையில். ?

நீட் தொடர்பான பிரச்னையில் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பப் பட்டது கிடைத்ததா அதற்கு ஒப்புதல் அல்லது நிராகரித்தல் உத்தரவு பிறப்பிக்கப் பட்டதா என்ற தகவல் இன்றளவும் கிடைக்க வில்லை.    இதுதான் பா ஜ க அரசியல் முகம்.

பத்தொன்பது உறுப்பினர்கள் ஆதரவு வாபஸ் என்பது அ தி மு க வின் உட்கட்சி பிரச்னை என்று எதை வைத்து ஆளுநர் கூறுகிறார் ?     அதையே அதிகாரபூர்வமான பதிலாக ஏன் கூறவில்லை. ?

கூறினால் அது நீதி மன்ற விசாரிப்புக்கு உள்ளாகும் என்பதினால்தானே.

முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று மனு கொடுத்த   பத்தொன்பது பேரையும் தகுதி இழப்பு செய்து தி மு க வின் இருபத்தொரு பேரையும் குட்கா பிரச்னையில் தகுதி இழப்பு செய்து போலியாக  எடப்பாடி பெரும்பான்மை பெறும் வரையிலும் ஆளுநர் காத்திருப்பாரா ?

பெரும்பான்மை இழந்து விட்ட எடப்பாடி அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் ஓட்டிகொண்டிருக்க உரிமை இல்லை.

நீதி மன்றமும் மக்கள் மன்றமுமே ஒரே வழி !

இன்னமும் மத்திய அரசை நோக்கி குற்றம் சாட்டவோ போராடவோ தினகரன் தயாராகவில்லை.

அவரது உதவியாளர்கள் சொல்வதெல்லாம் அவருக்கு இருக்கும் அச்சத்தை மட்டுமே வெளிக்காட்டும்.

ஓ  பி எஸ் -இ பி எஸ் இருவருமே பா ஜ க வின் கூலிகள் என்றால் நான் மட்டுமே அ தி மு க வின் மரியாதையை மீட்க முடியும் என்றால் வெளிப்படையாக மத்திய மோடி  அரசுக்கு எதிராக குரல் கொடுக்க ஏன் தாமதம்?

நீதி மன்றம் தலையிட வேண்டும் . மக்கள் கிளர்ந்து  எழுந்து போராட வேண்டும்.

இதற்கு மாறாக  குற்றம் இழைப்பவர்களே நீதி வழங்கு வார்கள் என்று எதிர் பார்த்து காத்திருப்பது ஒருபோதும் பயனளிக்காது .

 

 

நீட்; மாணவி அனிதா தற்கொலை பாடம் புகட்டுமா ஆட்சியாளர்களுக்கு ?!

அரியலூர் மாவட்டம் அனிதா என்ற மாணவி  ப்ளஸ் டூ தேர்வில்  1176   மதிப்பெண்   பெற்று மருத்துவம் படிக்க தேவையான  கட் ஆப்   மார்க்  196.75 எடுத்தும் நீட் தேர்வில் குறைந்த மார்க் எடுத்ததால் இடம் கிடைக்க வில்லை.

காரணம் நீட் தேர்வில் சி பி எஸ் சி பாட திட்டத்தில் கேள்விகள் கேட்கப் பட்டதுதான்.

மாநில பாடத்திட்ட மாணவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்விக்கு இறுதிவரை விடையே கிடைக்க வில்லை

உச்சநீதி மன்றம் வரை சென்று முறையிட்டும் அவருக்கு நீதி கிடைக்க வில்லை.    தாழ்த்தப் பட்ட வகுப்பை சேர்ந்த அந்த பெண் விரக்தியில் தன் உயிரை மாய்த்துக் கொண்டது  மாநிலம் முழுமைக்கும் மாணவர்கள் மத்தியில் போராட்ட உணர்வை  தூண்டி விட்டிருக்கிறது.

அரசு அறிவித்திருக்கும் ஏழு லட்சம் உதவித் துகை பிரச்னைக்கு தீர்வா?  போதுமா?

தற்கொலை பிரச்னைக்கு தீர்வல்ல என்ற ஞானோபதேசம் இந்த நேரத்தில் பயன் தருமா?

கல்வி மாநில பட்டியலில் சேர்க்கப் படும் வரை இந்த பிரச்னை நீடிக்கும்.

இது வரை நீட் தேர்வு இல்லாமல் படித்து மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் தகுதி இல்லாதவர்களா?

ஒரே பாடத் திட்டம் ஒரே பயிற்சி தர முடியாதவர்கள் எதற்கு அகில இந்திய தேர்வு நடத்த வேண்டும் ?

உச்ச நீதி மன்றம் , மாநில அமைச்சர்கள்  . தவறான உத்தரவாதம் தந்த மத்திய அமைச்சர்கள் எனு அனைவருமே இந்த கொடுமைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

குறிப்பாக ஒரு ஆண்டுக்கு மட்டும் விலக்கு பெற்று தருவோம் என்ற மாநில அமைச்சர்கள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஒரு நிமிடம் கூட தொடர கூடாத அரசாக எடப்பாடி அரசு மாறி விட்டது.      பெரும்பான்மை இழந்த பின் உட்கட்சி பிரச்னை என்று காரணம் சொல்லி நீடிப்பது அநீதி.

மாநில அமைச்சர்களோடு பா ஜ  க மாநில நிர்வாகிகள் கூட்டாக கலந்து ஆலோசிப்பது அவர்களில் கூட்டு முடிவை உறுதி படுத்துகிறது.

மோடி அரசின் உண்மை சொரூபம் தமிழர் நெஞ்சில் நிலைத்து நிற்க வேண்டும். காலம் வரும்போது தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இரட்டை இலை சின்னம் ; தேர்தல் கமிஷன் அரசியல் செய்யுமா நடுநிலை வகிக்குமா ?

ஏழு லட்சம் அவிடவிட்டுகள் சசிகலா பொதுசெயலாளர் என்றும் தினகரன் துணை பொது செயலாளர் என்றும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

அது செல்லாது  என்றும் ஜெயலலிதா நியமித்த பொறுப்புகள் மட்டுமே செல்லும் என்றும் ஓ  பி எஸ் மூன்றரை லட்சம் அவிடவிட்டுகளை தாக்கல் செய்திருக்கிறார்.

இந்நிலையில் ஓ பி எஸ் அவிடவிட்டுகளை வாபஸ் பெற்றால் தினகரன் தரப்பு அவிடவிட்டுகள் மட்டுமே செல்லும்.   தினகரன்  தரப்பு பிரிந்தபின் எடப்பாடி தரப்பு முந்தைய அவிடவிட்டுகளை எப்படி வாபஸ் பெற முடியும்.?   ஆட்சேபணை தெரிவித்து தினகரன் தரப்பு மனுகொடுத்திருக்கும்  நிலையில்  தேர்தல் கமிஷன் எப்படி உடனடியாக முடிவெடுக்க முடியும்?

எல்லார் சார்பிலும் நான்கைந்து பேர் வாபஸ் பெற முடியுமா?

பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு என்று பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டும்.

தேர்தல் கமிஷன் பா ஜ க சொல்கிறபடி வேலை செய்கிறது என்பது பரவலான குற்றச்சாட்டு.

நடக்கும் நாடகம் அனைத்துமே பா ஜ க வின் அரசியல் சித்து விளையாட்டு.

கொஞ்ச காலத்தில்  எடப்பாடி  ஓ பி எஸ் அனைவருமே பா ஜ க வில் சங்கமம் ஆனால் கூட வியக்க ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு காரியங்கள் நடக்கின்றன.

இன்று வரை இரு தரப்பும்  தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்ய கூட தேர்தல் கமிஷனுக்கு நேரமில்லை.   எந்த முடிவையும் எடுக்கவுமில்லை.  .

தான் சுயமாக முடிவெடுக்கும் நிறுவனம் என்பதை தேர்தல் கமிஷன் நிரூபிக்க வில்லை.

எனவே பா ஜ க வுக்கு எது சாதகமோ அந்த முடிவைத்தான் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் தேர்தல் கமிஷன் எடுக்கும் .

தமிழகத்தின்  தலை எழுத்தை இந்திக்கார்கள்  நிர்ணயிக்கும் நிலை வந்ததே என்று நாணி தலை குனியும் நேரமிது.

குனிந்து பயனில்லை.   தலை நிமிர்ந்து சிந்திக்கட்டும் தமிழினம்.

நீட் தேர்வில் நம்பவைத்து கழுத்தறுத்த மத்திய அரசு ??!!

கடைசி வரை நம்பிக்கை தந்தார்கள்.  கடைசியில் கழுத்தறுத்தார்கள்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசு  ஓராண்டு விலக்குக்கு மட்டும் அவசர சட்டம் கொண்டு வந்தால் ஆதரிப்போம் என்றார்.  அவசர சட்டம் இயற்றினார்கள்.   ஒப்புதல் தரவில்லை குடியரசுத் தலைவர். இதுதான் பா ஜ க. அவர்கள் மாறமாட்டார்கள்.  நம்பும் நாம்தான் ஏமாற வேண்டும்.

இன்று வரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்ட  நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்டம் என்ன ஆயிற்று என்பது பற்றி யாருக்கும் தெரியாது.

தமிழக பாடத் திட்டத்தில் படித்து  98 to 99.3 % மார்க் வாங்கிய மாணவர்கள் நீட் தேர்வில் போதிய மார்க் வாங்க முடியாமல் மருத்துவர் ஆகும் கனவு கலைந்து கலங்கி நிற்கிறார்கள்.

புதிது புதிதாக மோசடிகள் அரங்கேறுகின்றன.

இரட்டை இருப்பிட சான்றிதழ்கள் மூலம் வெளி மாநிலத்தவர் மருத்துவ படிப்பில் இடம் பெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

வரும் காலங்களில் பாடத்திட்ட மாற்றங்கள் பயிற்றுவிக்கும் முறையில் மாற்றங்கள் எல்லாம் இணைந்து நீட் தேர்வை எதிர் கொள்ளும் வகையில் நாம் மாணவர்களை பயிற்று விக்க வேண்டும்.

பா ஜ க அரசு தமிழர்களுக்கு எதிரானது என்பதற்கு நீட் விலக்கு தொடர்பாக மோடி அரசு நடந்து கொண்ட முறை சாட்சியாக நிலைத்து விட்டது.

 

 

கற்பழிப்பு சாமியார் ராம் ரகீம் சிங்குக்கு ஆதரவளித்த பா ஜ க ??!! தலித் அரசியல் காரணமா??

சீக்கியர்களிடையே  சாதி பிரிவினை அதிகம்.       ஜாட் பிரிவினர் பெரும்பான்மையாக உள்ள சமயம் அது.    பல சாதிகள் சீக்கிய மதத்தை தழுவினாலும் இன்னும் இந்து சாதிப் பிரிவினை சீக்கியர்களை விடவில்லை.

அடக்கப் பட்டு கிடந்த தலித் மக்கள் சீக்கியர்கள் ஆன பின்னும் சம உரிமை கிடைக்காமல் திணறினர்.

அவர்கள் சார்பில் முகிழ்த்த இயக்கம்தான் தேரா சச்சா சவுதா .     ஐந்து மாநில   தாழ்த்தப் பட்ட  மக்கள்  இதில் சேர்ந்தார்கள்.

வழக்கம் போல ஜாட் சீக்கியர்களை தோற்கடிக்க தலித் சீக்கியர்களின் ஆதரவை நாடி பா ஜ க படையெடுத்தது.     கிடைத்தவர் ராம் ரகீம் சிங்.

அவரது ஆதரவு கிடைத்ததால் தான் தேர்தலில் பா ஜ கவுக்கு வெற்றி கிடைத்தது.    இல்லையென்றால் பா ஜ க அமைச்சர்கள் ராம்பிலாஸ் சர்மா அனில் விஜி , குரோவர்  ஆகியோர் ஏன் ராம் ரஹீம சிங்குக்கு  1.12  கோடி  நிதி வழங்க வேண்டும்?

மாதா மாதம் ஹரியான  பா ஜ க வுக்கு சாமியார் கோடிக்கணக்கில் கப்பம் கட்டி வந்துள்ளார்.

அதனால்தான் தீர்ப்பு நாள் அன்று லட்சக் கணக்கில் தொண்டர்களை கூட அனுமதித்து இருப்பார்களா?

தடை உத்தரவு பிறப்பித்து  அமுல் படுத்தி இருந்தால் கலவரம் உருவாகி இருக்காது.    இன்று வரை   36  பேர் இறந்திருக்கிறார்கள்.    பல நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள்.

எல்லாம் முடிந்த பிறகு தலைமை யகத்தை  மூடி வைத்து என்ன பயன்.   ?     நீதி மன்றம் கடுமை காட்டிய பிறகு நஷ்டத்தை ஈடு கட்ட ஆசிரம சொத்துக்களை கையகப் படுத்த ஆலோசித்து வருகிறார்கள்.

பா ஜ க பாராளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ் வெளிப்படையாகவே ராம் ரகீமுக்கு ஆதரவு அளித்து பேட்டி கொடுக்கிறார்.  ன் ” ஒரு பெண் மட்டும் சொல்வது சரியா ?  கோடிக்கணக்கான பக்தர்கள் சொல்வது சரியா ?”  என்று கேள்வி வேறு கேட்கிறார்.          இரட்டை வேடம் பா ஜ க வுக்கு புதிதா என்ன?
போலி சாமியார்கள்     வடக்கில்தான் அதிகம்.      ராம்    பால் ,  ஆசாராம் பாபு , பீமானந்த் ,

நிர்மல் பாபா, சுவாமி விகாசானந்த்  போன்ற சாமியார்கள் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு  தண்டணை அனுபவித்து வருபவர்கள்.

அரியானா முதல்வர் மனோஹர்லால் கட்டார் பதவியேற்ற பிறகு ராம் பால் கைதானபோது   6  பேரும்  ஜாட் கிளர்ச்சியின் பொது  30  பேரும் தற்போது      36 பேரும் உயிர் இழந்து இருக்கிறார்கள்.     பதவியில் தொடர இவருக்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது?

நம்மூர் பிரேமானந்தா இதே கற்பழிப்பு வழக்கில் சிக்கி இரண்டு ஆயுள் தண்டணை விதிக்கப் பட்டு சிறையிலேயே இறந்தார்.

தாழ்த்தப்  பட்ட  சமுதாயத்தின் பிரதிநிதிகள் ஆக ஆன்மிக துறைக்கு வருபவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளில் சிக்கி தான் சார்ந்த சமுதாயத்துக்கும் கெட்ட பெயர்  வாங்கி தருகிறார்கள்.

ராம் ரகீம் சிங்கின் நடவடிக்கைகள் ஒரு ஆன்மிக குரு  செய்யும்  வேலைகள்  அல்ல.

அவரை விட குற்றவாளிகள் அவருக்கு அங்கீகாரம் தந்து ஆதரவு அளித்த   பா ஜ க அரசியல்வாதிகள்.     அவரது ஆதரவு இருந்தால் வாக்குகள் கிடைக்கும் என்று தெரிந்த பிறகு அவரை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தார்கள்.    வெற்றி பெற்று ஆட்சியிலும் அமர்ந்தார்கள்.

அரசு ஆதரவு இருக்கும் தைரியத்தில் ஆட்டம் போட்டார் ராம் ரகீம்.     இப்போது சிறையில் அடைபட்டி ருக்கிறார்.

சாமியார்கள் ஒரு போதும் திருந்த போவதில்லை.    மக்கள் தான் திருந்த வேண்டும்.

வடக்கே ஒரு பெரியார் தோன்ற வேண்டும்.    அரியானா  பா ஜ க அரசு பதவி விலக வேண்டும்.

 

 

 

 

மைனாரிட்டி எடப்பாடி அரசை தாங்கிப்பிடிக்கும் மோடி அரசு?! நீடிக்குமா இந்த அநீதி??

தினகரன் அணியை சேர்ந்த   19  சட்ட மன்ற உறுப்பினர்கள் எடப்பாடி மீது தாங்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக ஆளுநர் வித்யா சாகரிடம் மனு கொடுக்கின்றனர்.

ஏற்கெனவே இருந்த  122  உறுப்பினர்களுடன்  ஓ பி எஸ் அணியை சேர்ந்த    11   பேரையும் சேர்த்தால்  வரும் 133  உறுப்பினர் களில்  19  பேர் ஆதரவு இல்லையென்றால்  114  ஆகிறது.      எனவே  தேவைப்படும்   117  உறுப்பினர் ஆதரவு இல்லை என்பதால் எடப்பாடி அரசு மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது.

ஆளுநர் உடனே சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை நிருபிக்க எடபாடிக்கு உத்தரவு இட்டிருக்க வேண்டும்.

வாங்கிக்கொண்டு எதுவும் கருத்துத் தெரிவிக்காமல் மும்பைக்கு பறந்து  விட்டார் ஆளுநர்.

தனது ஆதரவு உறுப்பினர்களை புதுச்சேரியில் தங்க வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தினகரன் ஆளானார்.

மேலும் இரண்டு உறுப்பினர்கள் தினகரன் அணிக்கு ஆதரவு அளித்திருக்கின்றனர் .

இந்நிலையில் குதிரை பேரம் நடத்தவும் தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்கவும் எடபாடிக்கு அவகாசம் அளித்து ஆளுநர் மௌனம் காக்கிறார்.

நம்பிக்கை தீர்மானத்தில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ பி எஸ் ஆதரவு உறுப்பினர்கள் மீது ஏன் தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்க வில்லை?      அப்போது பிரச்னையை கிடப்பில்  போட்ட சபா நாயகர் இப்போது உடனே நோட்டிஸ் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

இது அப்பட்டமான சதி மட்டுமல்ல அரசியல் சட்ட மோசடி.

பா  ஜ க வின் சுய ரூபத்தை மக்கள் கண்டு கொள்ள வேண்டிய தருணம் இது.

பிளந்து கிடக்கும் அடிமைகளை மௌநிகளாக்கி அதிகாரத்தில் பங்கு போட பா ஜ க தயாராகி விட்டது.

தகுதி இழப்பு செய்தால் சட்டப்படி செல்லாது என்றாலும் அத்தகைய உத்தரவை பெற நீதி மன்றம் சென்று முறையிடவும் தீர்ப்பு பெறவும் ஆகும் கால அவகாசத்தில் எடப்பாடி தனது பண பலத்தை பயன் படுத்தி பதவியை தக்க வைத்துக்  கொள்ள  பா ஜ க மறைமுகமாக உதவுகிறது.

தமிழர்களை எப்படியும் ஆட்டி வைக்கலாம் என்பது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா ஜ க வுக்கு தெரிகிறது.

இத்தனை அடி வாங்கியும் பா ஜ க தான் தங்களை மிரட்டுகிறது  என்று தினகரன் இன்று வரை  வெளிப்படையாக குற்றம் சாட்ட தயாராக இல்லை.

நிலுவையில் இருக்கும் வழக்குகளில் தங்களை பழி வாங்கி  விடுவார்கள் என்ற பயம்தான் காரணம்.

அதனால்தான் பா ஜ க வின் முகமூடி கிழித்து அருமையாக கவிதை எழுதிய  மருது அழகுராஜை   நமது எம்ஜியார் பொறுப்பிலிருந்து கழட்டி விட்டனர்.

எல்லா வற்றையும் மீறி பொது மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்து விட்டனர்.

ஒரு நிமிடம் கூட தொடரக் கூடாத அரசாக எடப்பாடி அரசு மாறி விட்டது.

அ தி மு க வின் உட்கட்சி  பிரச்னையில் தேர்தல் கமிஷன் தலையிட்டு அரசியல் செய்ததுதான் எல்லா பிரச்னைகளுக்கும் மூல காரணம்.    தேர்தல் கமிஷன் தானாகவா  செய்தது?   பா ஜ க பின்புறத்தில்  இல்லையா?

மீண்டும்  தேர்தல் வந்து உண்மையான மக்கள் ஆட்சி  அமைந்தால் தான் தமிழ் நாட்டுக்கு விடிவு காலம்.

ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப் பட்டால் அங்கு ஊழல் சாதனைகளை பட்டியல் இடுவார்களா?

ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப் படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

அது சந்தியா பெயரில் ஜெயலலிதா வாங்கிய சொத்து.    பின்னர்  அதை தன் சொந்த செலவில் நூறு மடங்கு விலை மதிப்புள்ளதாக ஜெயலலிதா ஆக்கினார்.

சட்டப்படி அண்ணன் மகன் தீபக் மகள் தீபா இருவருக்கும் சொந்தமாக வேண்டியது.

அரசு எடுத்தால் கூட அவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டி வரும்.

யார் கேட்டார்கள் இந்த கோரிக்கையை?      யாரை திருப்தி படுத்த இந்த நடவடிக்கை?

ஏற்கனெவே ஜெயலலிதா என்ற நபர் மக்களால் பின் பற்ற தக்கவர் அல்ல  என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ஊழலின் ஊற்றுக்கண் அவர்.     நிர்வாகத் திறமை இருந்ததா என்பது  வேறு.

பெரியாரின் கழகத்தை நீர்த்துப் போகச் செய்த உள் நோக்கம் கொண்ட பிராமணியத்தின் பிரதிநிதி என்று  பலராலும் புரிந்து கொள்ளப் பட்ட அரசியல்வாதி.

உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி ஜெயலலிதா முதல் குற்றவாளியாக இருந்தாலும் அவருக்கு அளிக்கப் பட்ட நான்காண்டு சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க முடியாமல் இறந்ததால் வழக்கு அற்றுப் போய் விட்டது..

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு என்ன இடத்தை அரசும் சமுதாயமும் கொடுக்க வேண்டும். ?

சமுதாயத்தின் அனைத்து மக்களும் அனைத்தும் பெற வேண்டும் என்று பல திட்டங்களை நிறைவேற்றி இருந்தாலும் அவைகள் மட்டும் போதுமா போற்றுவதற்கு?

அனைத்து மட்டத்திலும் ஊழலையும்  விதைத்தாரா இல்லையா?

ஊழலுக்கு பரிசு கொடுப்பதும் பாராட்டுவதும் போற்றுவதும் இந்த பாழாய்ப் போன நாட்டில் தான் நடக்கும்.

ஜெயலலிதாவை பாராட்டுவதும் ஊழலை ஊஞ்சல் போட்டு தாலாட்டுவதும் ஒன்றுதான்.

நினைவகம் சாதனை செய்தவர்களுக்கு மட்டும்தான்.      ஊழல் செய்தவர்களுக்குமா ?

 

 

ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ; என்ன நடக்கும்?

டெல்லி எஜமானர் தந்த உத்தரவை அப்படியே நிறைவேற்றி  விட்டார் முதல்வர் பழனிச்சாமி .

தினகரனை நீக்கியாகிவிட்டது.    ஜெயலலிதா மரணம் பற்றி ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி விசாரிக்க கமிஷன் அமைத்தாகிவிட்டது.

இனி என்ன  இணைப்பு நடக்க வேண்டியது தான்  . பா ஜ க உடன் கூட்டணி ஒப்பந்தம் போட வேண்டியதுதான்.

ஓ பி எஸ் அணியிலும் இனி பூசல்  ஆரம்பிக்கும். தினகரன் தூண்டி விட்டுத்தான் சண்டை போடுகிற மாதிரி நடித்து ஒப்புக்கு ஒரு கமிஷனை அமைக்க ஒப்புதல் தந்திருக்கிறார்கள் என சந்தேகிக்க இடம்  உண்டு.    ஏன் தினகரன் கமிஷன் வேண்டும் என்று கேட்க வேண்டும்?

சி பி ஐ விசாரணை மட்டுமே வேண்டும் என்று கூட கோரிக்கையை மாற்றலாம்.

மர்மம் விலகாத மரணமாகவே  ஜெயலலிதாவின் மரணம் தொடரும் சூழ்நிலை தான் இன்று வரை நிலவுகிறது.

கண் துடைப்பு விசாரணை  என்றும் காலம்  கடந்தது என்றும் விமர்சனம் எழலாம்.

ஒய்வு பெற்ற நீதிபதி யார் என்பது பல  கோடி கேள்விகளை உருவாக்கும்.

நீதிமன்றம் செல்லும் இந்த முடிவு.     தீர்ப்பு வர இன்னும் பல மாதங்கள் ஆகும்.   அதன் பின் தான் விசாரணை.

நேதாஜி பற்றிய விசாரணை இன்னும்  முடியவில்லை.

அப்போலோ மருத்துவமனை விசாரணையை வரவேற்றிருகிறது .

இனி ஓ பி எஸ் என்ன சொல்லி  தனி அணி தொடர்வார்.?    ஒரு வகையில் இது தினகரனுக்கு வெற்றிதான்.

ஓ பி எஸ்ஸின் தர்ம யுத்தம்  முடிவுக்கு வந்து விட்டதே?!

அதிகாரத்தை கையில் வைத்திருந்தால் யாரையும் எப்போதும் ஏமாற்றலாம் .