Home Blog Page 88

தமிழன் தலையில் மிளகாய் அரைக்க தயாராகிறார் ரஜினி ! கைக்கூலிகளும் தயார்!!!

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று இருபத்தி ஐந்து ஆண்டுகளாக கேள்வியை மட்டுமே எழுப்ப வைத்து கலைத்துறையில் சுப்பர் ஸ்டாராக வலம் வந்தது போதும் உண்மையிலேயே வந்து பார்த்தல் என்ன என்று சிந்திக்க த்துவங்கி விட்டார் அவர்.

அமித் ஷா சொல்றார் ரஜினி செய்றார் என்று புது வசனம் எழுத வேண்டியதுதான்.

தமிழருவி மணியன்  அர்ஜுன் சம்பத்  போன்ற புல்லுருவிகள் நீண்டு கொண்டே போகிறது. அதில் திருமாவும் சேர்ந்தால் கூட  ஆச்சரியமில்லை.

தலித் ஆதரவாளர் என்ற உருவாக்கம் கபாலி படம் முதல் உருவாகி விட்டது.

தலித், உயர் சாதி இந்துத்துவ சக்திகளின் ஆதரவு மற்றும் சிதறிக் கிடக்கும் அதிமுக  உதிரிகள் என்ற மூன்றின் கட்டமைப்பு வெற்றியைக் கொடுக்கும் என்ற திட்டம் உருவாகியிருக்கிறது .

எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை என்றாலும் மத்தியில் பா ஜ க ஆட்சியில் இன்னும் சில காலம் மோடியின் செல்வாக்கு குறையாது என்ற  மதிப்பீடு மற்ற பலன்களை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்திருக்கிறது.

முதல்வர் இல்லாவிட்டாலும் ராஜ்ய சபா உறுப்பினர் மத்திய அமைச்சர் என்று உத்தரவாதம் அளிக்க கூடும்.    ரஜினி மயங்க கூடும்.

விலைபோகும் அ தி மு க அணிகள்!!! திராவிட இயக்க தொண்டனே வெளியே வா !!!

எடப்பாடி அணி  தினகரன் அணி  அதற்குள் திவாகரன் அணி  ஓ   பி எஸ் அணி      தீபா அணி என்று எத்தனை அணிகள் திரண்டாலும் அத்தனை பேரும் ஒன்றில் மட்டும் வாய் பேசா மௌனிகளாகவே மாறிப் போகிறார்கள்.

அது பா ஜ க வுக்கு ஆமாம் சாமி போடுவது.    காலில் விழுந்து கிடப்பது. ஒரு வார்த்தை மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்காமல் இருப்பது.

மொத்தத்தில் அடித்தாலும் அழாமல் இருப்பது.

இந்த அடிமைகளில் யார் நல்லவர்கள் என்று ஏன் பார்க்க வேண்டும்?

எல்லாருமே  ஏதோ ஒரு வகையில் மத்திய அரசின் கழுகுப் பார்வையில் இருக்கிறார்கள்.

சி பி ஐ  வருமான வரித்துறை அமலாக்கத் துறை என்ற மூன்றும் பா ஜ க வின் அரசியல் வியூகங்களை அமுல் படுத்தும் அதிகார மையங்கள்.  எல்லாருமே இவற்றிற்கு அஞ்சுகிறவர்கள்.

இந்த நிலை நீடிப்பது நல்லதல்ல.

சட்ட மன்றத்தில் ஒட்டு வாங்க பண பேரம் பேசியதாக வந்த வழக்கில் வழக்கு  பதிவு செய்ய தேர்தல் கமிஷன் போட்ட உத்தரவை அமுல் படுத்த வில்லை.

தானாகவே அடித்துக் கொண்டு அழியப் போகும் ஆதாயக் கட்சியாக அ தி மு க மாறி விட்டது.

அது எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ நல்லது.

கொஞ்ச நஞ்சம் அந்த கட்சியில் ஒட்டிக கொண்டிருக்கும் திராவிட இயக்க பற்றாளர்கள் மறு பரிசீலனை செய்யுங்கள்.   இன்னும் ஏன் ஒட்டிக கொண்டிருக்க வேண்டும்.    எங்கே போக வேண்டுமோ அங்கே போகலாமே!!

காலம் தாழ்த்துவது கூட நாட்டிற்கு செய்யும் கேடு என்பதை உணருங்கள்.

ஓட்டுப்போட பணம் வாங்கியதாக எம் எல் ஏக்கள் மீது குற்றச்சாட்டு!! விசாரணை அவசியம் வேண்டும் !!!

இதுவரை இல்லாத வகையில் சசிகலா அணி அமைச்சரவை  மீது நம்பிக்கை வாக்கு பெற வேண்டிய சூழ்நிலையில் கூவத்துரில் தங்க வைக்கப் படுவதற்கு முன் எம் எல் ஏக்களுக்கு  இரண்டு முதல் பத்து கோடி வரை பேரம் பேசப் பட்டதாக இரண்டு எம் எல் ;ஏக்கள் பேசுவதாக இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் என்ற நடவடிக்கை வெளிப்படுத்தியது.

இன்று சட்ட மன்றம் கூடியபோது இது பற்றி விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார்.

அ தி மு க தரப்பு அமைதியாக அமர்ந்திருக்க தி மு க மட்டும் விவாதம் நடத்த கேட்டு போராடியது.

வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி சபாநாயகர் அனுமதி மறுத்தார்.      ஏன் அவர்களிடம் ஒரு வாக்குமூலம் பெறுவதைகூட தடுக்க வேண்டும்?

மூன்று அணியாக அ தி மு  க  மாறிய பிறகு அதன் ஸ்திரத் தன்மை வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது.

பா ஜ க வின் கைப்பாவையாக மாறிவிட்ட அ தி மு க அரசு எப்போது  வேண்டுமானாலும் கவிழலாம்.

கவிழ்கிறதோ ஆள்கிறதோ  பண ப்  பேரம் விசாரிக்கப் பட்டே ஆக  வேண்டும்.

அமித் ஷாவின் திமிர்ப்பெச்சு ! காந்தியடிகள் சாதுரிய பனியாவாம் ??!!

தேசத்தந்தை என்று நாடே போற்றினாலும் ஆளும் பா ஜ க வுக்கும் அதன் குரு ஆர் எஸ் எஸ் க்கும் அவர் என்றுமே ஆகாதவர்தான்.

கோட்சே இந்து  மத வெறியர் என்பதும் அதனால் ஆர் எஸ் எஸ் அமைப்பு அவர் மீது கரிசனம் கொள்வதும் இயற்கை.   இந்து மகா சபை வேறு நாங்கள் வேறு என்று எவ்வளவுதான் மறுத்தாலும் நம்புவதற்குத்தான் ஆள் இல்லை.

ரூபாய் நோட்டில் காந்தியடிகள் படத்துடன் இந்து மத குறியீடாக எதை புகுத்தலாம் என்பதுதான் இவர்கள் சிந்தனை.

சட்டிஸ்கர் நகரில் ஒரு விழாவில் பேசும்போது அமித் ஷா காந்தியடிகள் பற்றி குறிப்பிட்டார்.   வெறும் சுதந்திரம் பெறுவதற்காக மட்டுமே காந்தி உருவாக்கியதுதான் காங்கிரஸ் என்ற அமித் ஷா மேலும் பேசும்போது காந்திஜி ஒரு சாதுர்யமான பனியா என்று குறிப்பிட்டார்.

பனியா என்பது குஜராத்தில் ஒரு வணிக சாதிப்பெயர்.    தமிழ்நாட்டில் செட்டியார் என்பது மாதிரி .  நாடே போற்றி வணங்கும் ஒரு தலைவரை அவரது சாதிப் பெயரை குறிப்பிட்டு விமர்சிப்பது என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதை திமிர் வாதம் என்பதா? அதிகார போதை தந்த திமிர் என்பதா?

சாதி பெயரை சொல்லி காந்தியடிகளை இழிவு படுத்துகிறார்கள்.      அவர் தலைவர் அல்ல. ஒரு சாதாரண வியாபார சமூக பிரமுகர் என்பது அவர்கள்  எண்ணம் .

பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அமித் ஷா வருத்தம் தெரிவிக்க மறுத்து விட்டார்.

நாடு முழுதும் கண்டன குரல்கள் எழுந்திருக்கின்றன.    ஆனால் அமித் ஷாக்கள் திருந்த மாட்டார்கள்.

சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்களால் காந்தி இழிவு படுத்தப் படுவது  இதுதான் முதல் முறை.

காங்கிரசை கலைக்க சொன்னார் காந்தி என்று சொல்லி விட்டு காங்கிரசை விமர்சிக்க ஒரு கருவியாக காந்தியை பயன்படுத்துவது மிக மோசமான நடத்தை.

காந்தியடிகளை பற்றி பா ஜ க கொண்டிருக்கும் கருத்துக்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் .   அவரை இழிவுபடுத்தும் உரிமயை யார் அவர்களுக்கு கொடுத்தது. ?

அமித் ஷா போன்றவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.   சங்கப் பரிவாரங்கள் எல்லாமே இப்படித்தான்.      மறைந்திருக்கும் உள் நோக்கத்தை வெளிக்காட்டாமல் செயல்படுவதில் வல்லவர்கள்.

அம்பேத்கரை போற்றிக் கொண்டே தலித்  சமூகத்தை எப்படி அடிமைப் படுத்திக் கொண்டே அவர்களை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பது என்பதை ஒரு கலையாகவே நடத்தி வருபவர்கள் ஆயிற்றே .

சுய ரூபத்தை வெளிப்படுத்திய வரை அமித் ஷாவிற்கு நன்றி .      அடையாளம் கண்டு கொள்ள மக்களுக்கு ஒரு வாய்ப்பு.

 

 

 

இந்திய அரசின் அறிவுரை இல்லாமல் மலேசியா வைகோவை திருப்பி அனுப்பி இருக்குமா?

விசா பெற்று ஒரு திருமண விழாவிற்கு சென்ற வைகோவை மலேசியா அரசு துணை பிரதமர் அலுவலக உத்தரவு என்று சொல்லி அனுமதிக்க மறுத்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறது.

ஒரு இந்தியருக்கு இழைக்கப் பட்ட அநீதியாக இந்திய அரசு நினைத்தால் உடனே நடவடிக்கை எடுத்திருக்கும்.

தமிழர்கள் அதிலும் ஈழ ஆதரவு தமிழர்கள் என்றாலே மோடியின் அரசுக்கு இரண்டாம் தர இந்தியராகத்தான் தெரிகிறது.

ஸ்டாலின் ,திருநாவுக்கரசு உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள் .

மத்திய அரசின் அங்கீகாரம் இல்லாமல் இது நடந்திருக்க முடியாது.    இலங்கையில் வழக்கு இருக்கிறது என்றால் ஏன் விசா வழங்க வேண்டும்?    அப்போது தெரியாதா வழக்கு இருப்பது?

இந்திய அரசு  தனக்கு ஏதும் தெரியாது என்று சொல்ல முடியுமா?

இந்தியாவில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்கள் ஆகி வருகிறார்கள் என்ற உணர்வு வலுவாகிக் கொண்டிருக்கிறது.

ஆமாம்.   தமிழக அரசு என்று ஒன்று இருக்கிறதே??!! எங்கே அது?

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக வை மிரட்டி பணிய வைக்கும் பா ஜ க ???!!!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா ஜ க வுக்கு வெறும் 22000 வாக்குகள் மட்டுமே தேவைப் படுகிற நிலையில் அ தி மு க வசம் உள்ள  59000 வாக்குகளை மிரட்டி வாங்க நினைக்கிறது பா ஜ க .

அதனால்தான் அ தி மு க  எங்களுக்கே வாக்களிக்கும் என்று பொன் ராதாகிருஷ்ணனும் இல. கணேசனும் பேட்டி கொடுக்கிறார்கள்.     அதி மு க தரப்பில் மறுப்பதற்கு கூட ஆளில்லை.

பா ஜ க யாரிடம் வேண்டுமானாலும் ஆதரவை கோரலாம்.   அது உரிமை.    அ தி  மு க கூட அதை பரிசீலிக்கலாம்.    ஏனென்றால் ஏற்கெனெவே தி  மு  க காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் எங்களுக்கு வேறு வழியில்லை என்று கூறலாம்.   ஆனால் இந்தியாவின் மூன்றாவது பெரிய இடத்தில் உள்ள ஒரு கட்சியை தன் தலைமை யாரிடம் உள்ளது என்பது தொடர்பாக பிரச்னையாக இருக்கும்போது பா ஜ க முந்திக் கொண்டு அவர்கள் ஆதரவு எங்களுக்குத்தான் என்றால் அவர்கள் எங்களை மீறி எதுவும் செய்ய முடியாது என்று பா ஜ க அறிவிக்கிறது என்றுதானே பொருள்.

நமது கவலையெல்லாம் நீ யாருக்காவது ஆதரவு தந்து விட்டுப் போ.

இந்தப் போக்கு சரிதானா?     இதே நிலை நீடித்தால் அ தி மு க அரசு அறிவிக்க வேண்டிய அனைத்தையும் பா ஜ க வே அறிவிக்கும் சூழ்நிலை வராது என்பதற்கு என்ன உத்தரவாதம். ?

நடப்பது பா ஜ க வின் அடிமைகளின் ஆட்சி என்பது போல் தோற்றம் உருவாகி விட்டது.

தமிழர்களின் உரிமைகள் பறிபோகும் என்ற அச்சம் உருவாகி விட்டது.

உட்கட்சி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அதி மு க தலைவர்களில் இது பற்றி சிந்திக்க ஒருவர் கூடவா இருக்க மாட்டார்?

நமக்கு கிடைத்த அடிமைகள் நல்லவர்கள் . வாயைத் திறந்து பேச மாட்டார்கள் என்ற கர்வத்தில் இருக்கிறது பா ஜ க .

போதாதற்கு பா ஜ க என்ன தீண்டத் தகாத கட்சியா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்கிறார்.    ஆக பாதை விரிக்க தயாராகி விட்டார்கள்.

நமக்குத்தான் அச்சமாக இருக்கிறது.     இன்னும் என்னவெல்லாம் பறிபோகுமோ ?

கடன் தள்ளுபடியும் நியாய விலையும் கேட்ட 5 விவசாயிகள் சுட்டுக் கொலை??!! பா ஜ க அரசின் பரிசு!!

” கூலி  உயர்வு கேட்டான்  அத்தான் – குண்டடி பட்டு செத்தான் அத்தான் ” என்று அந்தக் காலத்தில் கலைஞர்  எழுப்பிய திராவிட இயக்க வாசகம் இன்றும் பொருந்துகிறதே !

ம பி மாநில மாண்ட்சார் மாவட்டத்தில் விவசாய  விளைபொருள் களுக்கு லாப விலையும் கடன் தள்ளுபடியும் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.    எந்த அரசியல் சார்பும் இல்லாத போராட்டம்.

அதை சாதுர்யமாக கையாள தெரியாத பா ஜ க அரசு கண்மூடித் தனமாக சுட்டதில் ஐந்து விவசாயிகள் கொல்லப்பட்டு நூற்றுக் கணக்கானவர் காயமடைந்து தீவைப்பு கொள்ளை வன்முறை என்று கலவரத்தில் முடிந்திருக்கிறது.

அரசியல் தலைவர்கள் வருகைக்கு தடை போட்டும் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஒரு கோடி நிவாரணம் அளித்தும்  நிலைமையை சமாளிக்க சிவராஜ் சிங் அரசு முயற்சிக்கிறது.

உற்பத்தி செலவுக்கு மேல் லாப விலை நிர்ணயித்தால் எந்த விவசாயியும் நட்ட மடைய வாய்ப்பே இல்லை.

உ பி யில் முப்பத்தி ஆறாயிரம் கோடி நிவாரணம் அளித்துள்ள நிலையில் ம பி யிலும் அதே போன்ற அணுகு முறையை விவசாயிகள் எதிபார்த்திருக்கலாம் .

நாடு தழுவிய அளவில் மாநிலங்கள் தோறும விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

விளைபொருளுக்கு  லாப விலையும் அர்த்தமுள்ள காப்பீட்டு திட்டமும் மட்டுமே  விவசாயிகளை காப்பாற்றும் என்ற உணர்வு மத்திய மாநில அரசுகளுக்கு  வரும் நாளே பொன்னாள்!

என்று வரும் அந்நாள் ?

அரிசி சர்க்கரையில் பிளாஸ்டிக் கலக்கும் சமூக விரோதிகள்??!

உணவுகலப்படங்களில் பல வகைகள் இருக்கின்றன.

எடை கூடுவதற்காக உட்கொண்டாலும் பெரிதாக உடலுக்கு ஊறு விளைவிக்காத இதர பொருட்களை கலந்து லாபம் சம்பாதிப்பவர்கள்.    அரிசியில் கல் கலப்பதை கேள்விபட்டிருக்கிறோம்.    எடை கூட்டி விற்றாலும் கல் பொறுக்கும்    வேலை மட்டுமன்றி தவறி  உள்ளே போனால் பல உபாதைகளும் உருவாக்கும்.

சமீப காலமாக குற்றவியல் நீதிமன்றங்களில் உணவு கலப்பட வழக்குகள் பதிவாவதே இல்லை.   அரசு காட்டும் அலட்சியம் கலப்படகாரர் களுக்கு    ஊக்கம் தரும் வகையில் இருக்கிறது.

தவறு செய்பவர்களுக்கு பயம் காணாமல் போக அரசு காட்டும் அலட்சியம் மிக முக்கிய காரணம்.

அரிசியில் பிளாஸ்டிக் கலந்ததை நிரூபிக்கும் வகையில்  சமைத்த பிளாஸ்டிக் அரிசியை பந்தைபோல் \உருட்டி விளையாடும் காட்சி வலை தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தமிழ்நாட்டில் அரிசி கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லாததால் இங்கு பிளாஸ்டிக் அரிசி  பேச்சுக்கே இடமில்லை என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பேட்டி கொடுக்கிறார்            .

ஆந்திராவிலும் தெலுங்கானவிலும்  பிளாஸ்டிக் அரிசி விற்பனை குற்றச்சாட்டில் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப் பட்டு  விசாரிக்கப்  பட்டு வருகிறது.

கர்நாடகத்தில் சர்க்கரையில் பிளாஸ்டிக் கலந்து விற்பனை என்ற குற்றச்சாட்டு எழுந்து விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

சாதாரணமாக டீ , காப்பி பொடிகளில் கலப்படம்தான் இதுவரை அதிகம் பேசப் பட்டு வந்தது.   இப்போது அரிசி சர்க்கரையிலும் பேசப் படுவது கொடுமையின் உச்சகட்டம்.

அரசுகளின் மெத்தனப் போக்குதான் இந்த அவலங்களுக்கு முக்கிய காரணம்.

மக்களின்  விழிப்புணர்வும் மேலும் கூட வேண்டும்.

ஒன்று மணலுக்கு மாற்று தேடு அல்லது தமிழகத்தில் மட்டுமே பயன்படுத்த சட்டம் கொண்டு வா ??!!!

மணல் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே எடுக்க  முடியும் என்றும் அதற்குப் பிறகு நிறுத்தப் படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

இதில் ஏதாவது அறிவுடைமை இருக்கிறதா?

கேரள அரசு தன் ஆறுகளில் மணல் எடுப்பதில்லை.

தமிழ் நாட்டு  மணல்  மிகப் பெரும்பாலும் கேரளம் கர்நாடகம் ஆந்திர மாலத்தீவு மோரிஷஸ் அரபு நாடுகள் என்றெல்லாம் பயணிக்கிறது.

மூன்றாண்டுகளுக்கு பிறகு முடியாது என்றால் இப்போதே நிறுத்தினால் என்ன?

தன் மாநிலத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதிப்பது சட்ட பூர்வமானதுதானே !

முழுவதும் சுரண்ட வேண்டும் என்பது விதியா?

மணலுக்கு மாற்று பற்றி  ஆராய்ந்து என்ன முடிவுக்கு வந்திருக்கிறது அரசு.?

இப்போதே திட்டமிடா விட்டால் மூன்று  ஆண்டுகளுக்கு பிறகு மணல் அள்ளுவது நிறுத்தப் படும் என்ற அறிவிப்பு எப்படி செயல் படுத்தப் படும்?

எப்படி பார்த்தாலும் அரிதான மணல் குறுகிய காலத்துக்கு மட்டுமே கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை  என்பதால் அந்த குறுகிய காலத்துக்கு நம் தேவைக்கு மட்டுமே பயன் படுத்த அனுமதித்து விட்டு அதன் பிறகு மணலுக்கு மாற்று தேடுவதே அறிவுடைமை.

ஆட்சியாளர்களுக்கு அந்த சிந்தனை வருமா?

பா ஜ க வின் ஆட்சிவேட்டை எப்போது தொடங்கும் ?

எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் , தினகரன் . திவாகரன் என்று வெளிப்படையாக நான்கு பிரிவுகளும் எப்போது வேண்டுமானாலும் மாற தயாராக இருக்கும் ஐந்தாவது பிரிவும் அதிமுக அரசை என்ன செய்ய போகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

யாரும் ஆட்சியை கவிழ்க்க தயாராக இல்லை.     நான்காண்டு காலமும் ஒட்டி விடுவதில்தான் குறியாக இருக்கிறார்கள். ஒபீஎஸ் கூட இன்று எங்களால் பழனிசாமி  கவிழாது என்கிறார்.

எந்த குற்ற உணர்வும் இல்லாமல் தமிழக அரசியலை குழப்பத்தில் ஆழ்த்தி பதவி சுகம் கண்டு வருகிறார்கள்.

பா ஜ க அரசை குற்றம் சொல்ல யாருமே தயாராக இல்லை.   பயம்.   மாநில உரிமைகள் எப்படி பாதுகாக்கப் படும்?

பொதுசெயலாளர் சசிகலா துணை பொது செயலாளர் தினகரன் என்று அவிடவிட்டு  தாக்கல் செய்து விட்டு இருவரையும் விலக்கி வைக்கிறோம் என்கிறார்கள்.

ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி எல்லாரையும் குழப்பத்தில் ஆழ்த்து கிறார்கள்.

தலைமை என்ற ஒன்று இல்லாமலே ஒரு கட்சி இயங்க முடியும் என்று அ தி மு க நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

பல குழுக்களை வைத்துக் கொண்டே ஒரு ஆட்சியை நடத்த முடியும் என்று பழனிசாமி நிரூபித்துள்ளார்.

நான்காண்டுகளும் இப்படித்தான் நகரும் என்பது சகிக்க முடியாத கொடுமை.

இந்த குழப்ப நிலை ஒரு முடிவுக்கு கொண்டுவரப் பட வேண்டும்.

தேர்தல் ஒன்றே இந்த குழப்பத்தை தீர்க்கும்.

வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகத்தில்  இருக்கும் தற்போதைய உறுப்பினர்கள் தேர்தல் கொண்டு வர தயாராக இருப்பார்களா?

இவர்களை மிரட்டி காலூன்ற நினைக்கும் பா ஜ க குடியரசுத்  தலைவர் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவந்து  தங்கள் மேற்பார்வையில் ஒரு ஆறு மாதம் ஆட்சி  நடத்தி இவர்களோடு கூட்டணி வைத்து  தேர்தலை கொண்டு வந்தால்தான் உண்டு என்ற நிலைதான் இப்போது.

பா ஜ க வின் ஆட்சி வேட்டை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்.

பார்க்கலாம்.        இடையில் ஏதாவது நடக்கலாம் அல்லவா ?