Home Blog Page 91

முஸ்லிம்களை விலக்கி ஆட்சியை பிடிக்க திட்டமிடும் பா ஜ க !!???

பொதுத் தேர்தல் நடைபெறும் உ பி யில் முஸ்லிகள் சராசரியாக இருபது சதம் இருக்கிறார்கள்.

மொத்த இடங்கள் 403.         சென்ற பாராளுமன்ற தேர்தலில்  எண்பது இடங்களில் எழுபத்து மூன்று இடங்களை வென்று  பா ஜ க வரலாறு படைத்தது.    வரலாறு வென்றதில்  மட்டுமல்ல.   ஒரு இடத்தில் கூட முஸ்லிம் வேட்பாளர்களை அது நிறுத்தவில்லை.

அந்த அனுபவம் சட்ட மன்ற தேர்தலிலும் வெளிப்படுகிறது.

முஸ்லிம் வேட்பாளர் இல்லாமலேயே சட்ட மன்ற தேர்தலிலும் வென்று விட முடியும் என்று அது நம்புகிறது .

இந்துக்கள் வாக்குகளை மட்டுமே குறி வைக்கும் பா ஜ க முஸ்லிம் வேட்பாளர்கள் வேண்டாம் என்று ஒதுக்குவதன் மூலம் ஒரு செய்தியை உரக்க சொல்கிறது.

முஸ்லிம்கள் ஆட்சி நிர்வாகத்தில் பங்கு வகிக்க வேண்டுமென்றால் அவர்கள் இந்து கட்சிகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்  கொள்ள வேண்டும் என்பதுதான் அது.

இப்படி மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி நிரந்தரமாக ஒரு செயற்கைப் பிரிவினையை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் ஒன்று சேரவே முடியாத நிலையை பா ஜ க உறுதிப்படுத்துகிறது.

இத்தகைய செயற்கைப் பிளவுகள்  தான் எதிர்காலத்தில் பிரிவினை க் குரலுக்கு வித்திடும் என்பதை மறந்து விடக் கூடாது.

நிரந்தரமாக ஒரு பிரிவினரை அடக்கி  ஆண்டு விட முடியாது.

மாயாவதியின் பி எஸ் பி யும் அகிலேஷின் சமாஜ்வாதியும் போட்டி போட்டுக் கொண்டு முஸ்லிம்களுக்கு இடங்கள் வழங்கி இருக்கிறார்கள்.

ஒரு பா ஜ க தலைவர் இது தொடர்பாக கூறும்போது ” தகுந்த வேட்பாளர் கிடைக்காத தால்தான் நாங்கள் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வில்லை”  என்று சமாதானம் கூறுகிறார்.

ஏற்கத் தக்கதா இந்த விளக்கம்.      மக்களிடயே பிளவு  மனப்   பான்மையை திட்டமிட்டு வளர்க்கும் பா ஜ க தான் இந்திய ஒற்றுமைக்கு மிகப் பெரிய ஆபத்து.

சபாநாயகரின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் – தி மு க வின் அடுத்த ஆயுதம்!

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஒப்புதல்  கேட்டு அவரிடமே மனு கொடுத் திருக்கிறது  திமுக.

ரகசிய வாக்கெடுப்பிற்கு  ஒப்புதல் தராமல் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி அரசை வெற்றி பெற வைத்ததுடன் இல்லாமல் தி மு  க மீது சாதி சார்ந்த குற்றச்சாட்டையும் சுமத்தியதால் திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கிறது.

அவரை அகற்றுவது மட்டுமல்ல நோக்கம்.     இந்த தீர்மானம் சபையில் விவாதத்துக்கு வரும்.   அப்போது எடப்பாடி ஆதரவு உறுப்பினர்கள் சபைக்கு வந்துதானே ஆகவேண்டும்.

இப்போதே தொகுதிக்கு செல்ல  முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அவர்கள் மீண்டும் ஒரு போராட்டத்தை சட்ட மன்றத்துக்கு உள்ளேயே நடத்த தயாராக வேண்டும்.

அப்போது என்னவெல்லாம் நடக்குமோ?

விவாதத்தை துணை சபாநாயகர் தலைமை தாங்கி நடத்த வேண்டும்.    அதற்குள் சபை நடவடிக்கைகளை தொலை காட்சியில் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும்.    இல்லாவிட்டால் அரசின் அனுமதி  பெற்று ஒரு தொலைகாட்சி மட்டும் வெளியிடும் காட்சிகளை மற்றவர்கள் ஒப்புக் கொள்ள மறுப்பார்கள்.

அதற்குள் யாரோ சில உறுப்பினர்களுக்கு மனமாற்றம் வந்து மாறி வாக்களித்தால் அது அரசின் மீதான நம்பிக்கையின்மையாக கருதப் படும்.

கட்டுப்பெட்டியான உறுப்பினர்கள் ஆதரவு நிலைத்தன்மை கொண்டதல்ல.

உள்ளாட்சி தேர்தல்கள் வேறு மே மாதத்திற்குள் நடத்தி முடிப்பதாக அரசு நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது.

ஊருக்குப் போக முடியாத அல்லது தன்னம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள் என்றைக்கு வேண்டுமானாலும் மாறுவார்கள்.

உண்மையில் நம்பிக்கையில்லா தீர்மானம் அரசுக்கு அடுத்த கண்டம்தான் .

 

முதல்வர் எடப்பாடி பழிநிசாமி அரசின் முதல் ஐந்து அறிவிப்புகள் !

எடப்பாடி பழனிசாமி பதிவிஏற்று முதல் முறையாக ஐந்து அறிவுப்புகளை வெளியிட்டு ஆணைகளை பிறப்பித்துள்ளார்.

ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு ஆண்டொன்றிற்கு ஐம்பது சதம் மானியம் அல்லது இருபதாயிரம் ரூபாய் இரு சக்கர வாகனம் வாங்க வழங்கப்படும்.  செலவு இருநூறு கோடி.

ஆண்டொன்றிற்கு ஆறு லட்சம் தாய்மார்கள் பயனடையும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி பனிரெண்டாயிரத்திலிருந்து பதிநெட்டாயிரமாக உயர்வு.   செலவு 360 கோடி.

மீனவர்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் செலவில் ஐந்தாயிரம் வீடுகள்.  செலவு  85 கோடி.

வேலை வாய்ப்பற்று இருக்கும் இளைஞர் களுக்கு மாதந்திர உதவித்தொகை உயர்வு.  இது தற்போது

55228 பேருக்கு வழங்கப் பட்டு வருகிறது. செலவு 31  கோடி .

மதுவிலக்கை அமுல்படுத்தும் நோக்கில் மேலும் ஐநூறு மதுக்கடைகள் மூடல்.

இன்று அறிவிக்கப் பட்ட திட்டங்களின் மூலம் அரசிற்கு மேலும் 676 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஆகும்.

ஏற்கனெவே  நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூட நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

வரவேற்கத் திட்டங்கள் என்றாலும் திணறிக் கொண்டிருக்கும் அரசாகவே எடப்பாடியின் அரசு மதிக்கப் படுகிறது.

சட்ட மன்ற உறுப்பினர்கள் விடுதியில் முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.   ஏன் அவர்கள் தங்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க தயங்குகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

கொரடா உத்தரவை எதிர்த்து வாக்களித்த உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய தயக்கம் காட்டுகிற அரசு பலவீனமான அரசாகவே கருதப் படும்.     செய்தால் மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டி வரும்.   இப்போது வெறும் ஆறு வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று ஆட்சி செய்து வரும் இந்த அரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

தொடர்ந்து எத்தனை பேர் ஆதரவை நீட்டிப்பார்கள்?    இடையில் எத்தனை பேர் அணி மாறுவார்கள்? உறுதியான கொள்கை முடிவுகளை இந்த அரசால் எடுக்க  முடியுமா?

முதல்வர் பழனிசாமி முதல் கையெழுத்தை இட்டு விட்டு நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நழுவி விட்டார்.

முதல்வர் தன் தகுதியை நிரூபிக்க வேண்டும்.      எந்த பிரச்னை என்றாலும் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை பற்றி விளக்கமாக கூற அவர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அமைச்சரவை கூட்டுப் பொறுப்பில் இயங்குகிறதா?   சிறையில் இருக்கும் சசிகலாவின் இயக்கத்தில்  இயங்குகிறதா என்ற கேள்வியை புறந்தள்ளி  விட முடியாது.

வரும் நாட்கள் தமிழர்களுக்கு சோதனை  நாட்களே.     ஏனெனில்  தன் முயற்சியில் தோல்வியடைந்த மோடி அரசு இவர்களை நிம்மதியாக ஆள விடும் என்று தோன்றவில்லை.

 

வாக்கு எண்ணிக்கை சரியே !!! தவறான செய்திகளால் குழப்பம்!!!

தவறான செய்திகளால் சில நேரங்களில் தவறான விமர்சனங்கள் எழுகின்றன.

சட்டமன்ற வாக்கெடுப்பில் உறுப்பினர் ஆறுமுகம் சிகிச்சையில் இருந்ததால் வரவில்லை என செய்திகள் பரவின.    ஆனால் அவர் டிஸ்சார்ஜ் ஆகி சபையில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்.   அவர் வாக்களித்த செய்தி ஊடகங்களில் வரவில்லை.

அதேபோல் மோத்த அ தி முக எண்ணிக்கை 134  என்ற செய்தியும் மாலைமலர் பத்திரிகையில் வந்தது.   உண்மையில்  அது  135 ஆக இருக்க வேண்டும்.

ஜெயலலிதா மறைவினால்  233  ஆக குறைந்த  மொத்த உறுப்பினர்களில் கலைஞர் வரவில்லை.

232

வெளியேறிய திமுக காங்கிரஸ் முஸ்லிம் லீக்  உறுப்பினர்கள்  97  .

மீதம் உள்ள  135  உறுப்பினர்களில்

பன்னீர்செல்வம் அணியில் எதிர்த்து வாக்களித்தோர்    11

வாக்களிக்காத   சபாநாயகரும் கோவை அருண்குமாரும்        2

மீதமுள்ள    122  அ திமுக உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தவறான செய்திகள் வெளியாவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் .     ஏனென்றால் அது தவறான விமர்சனங்களுக்கு வித்திடுகின்றன.

எச்சரிக்கை  ! எச்சரிக்கை !

 

கட்சி மாறி வாக்களித்தது யார்?

122      வாக்குகள் பெற்று எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார் என்றார் சபாநாயகர்.

எண்ணிக்கை  இடிக்கிறதே?

அ இ அ தி முக வாக்குகள் 134  – ஜெயலலிதா 1 =   133

ஓ பி  எஸ் அணி வாக்குகள்                             11

கோவை வடக்கு அருண்குமார்                 1

சபாநாயகர்                                                                1

சிகிச்சை பெற்றுவரும் ஆறுமுகம்                 1

கூடுதல்                                                14

133-14=119  ஆக பெற்று இருக்க வேண்டிய அ தி மு க வின் பழனிச்சாமியின் அணி 122 வாக்குகள் பெற்று வெற்றி  பெற்றதாக அறிவித்தார் சபாநாயகர்.

கூடுதல் வாக்குகள் மூன்று யார் போட்டது.?

காங்கிரஸ் கட்சி தி  மு க வோடு வெளியேறிவிட்டது என்றால் கூடுதல் மூன்று  ஒட்டு யார் போட்டது. ?

இரண்டாவது முறை நம்பிக்கை வாக்கு கோரியது செல்லாது என்றும் அதன் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பும் செல்லாது என்றும் நீதிமன்றத்தை நாட தி  மு க தயாராகி  வருகிறது.

தற்காலிக பொதுசெயலாளர் என்ற பதவியே அ தி மு க வில் இல்லை என்றும் அப்படி தற்காலிக      பொதுசெயலாளர் ஆக நியமிக்கப் பட்ட சசிகலாவின் நிமனமும் செல்லாது என்றும் கொடுக்கப்  பட்ட மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இடைப்பட்ட காலத்தில் , சட்ட மன்றத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக    அறிக்கை தரக் கோரி சட்டசபை செயலாளரை  ஆளுநர் கேட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில்   சொல்லப் பட்ட விபரங்களை வைத்து மத்திய அரசு மாநில அரசை கலைக்கவும் வாய்ப்பிருக்கிறது .

இந்தக் குழப்பங்களின் சூத்திரதாரி மத்திய அரசு .   தனது தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டார்கள் .     வாய்ப்புக்காக காத்திருந்து  கலைப்பார்கள்.

இந்தக் குழப்பங்கள் எப்போது ஓய்வது? எப்போது இவர்கள் ஆட்சி  நடத்த துவங்குவார்கள்  என்று

மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 

 

 

 

 

 

வென்றால் போதுமா? எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நீடிக்குமா?

122 வாக்குகளை பெற்று எடப்பாடி பழனிசாமி வெற்று  பெற்று முதல்வர் பதவியை தக்க வைத்துக்  கொண்டார்.   தற்காலிகமாக.

சபாநாயகர் தனபால் ஏன் ரகசிய வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை ?

அப்படி நடத்தினால் கூவத்தூரில் இருந்து பத்திரமாக அழைத்து வந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் மாறி வாக்களிப்பார்கள் என்பது யாருக்குமே தெரியாது.

ஓ  பி  எஸ் அணியில் பதினோரு பேருக்கு மேல் தேறவில்லை.

மத்திய அரசின் , மோடி அரசின் , தோல்விதான் இது.      அவர்களால் அதற்கு மேல் ஓ பி எஸ் அணிக்கு ஆள் சேர்க்க முடியவில்லை.

ஸ்டாலின் நடத்திய போராட்டம் அவருக்கானது அல்ல.     பழனிச்சாமி தோற்றால் திமுக ஆட்சிக்கு வந்து விடுமா என்ன?

ஆனால் சசிகலா ஜெயிலில் இருந்து ஆட்சி செய்வார் என்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

இது பெருமை  தரக் தக்கதா?

கவுண்டர் ஒருவர் தமிழக முதல்வராக ஆக முடிந்தது  வேண்டுமானால் சாதனையாக பேசப் படலாம்.

அவர் யாரை பிரதிநிதித்துவப் படுத்துகிறார் என்பது முக்கியம் அல்லவா?

ஊழல் குற்றவாளி என்று உச்ச நீதி மன்றத்தால் உறுதி செய்யப்  பட்ட ஜெயலலிதாவின் ஆட்சியை  தொடர்வேன் என்கிறார் அவர்.

சசிகலா அணியாக இருந்தாலும் ஓ  பி எஸ் அணியாக இருந்தாலும் எல்லாரும் ஊழல் அணிதானே?

வரும் மாதங்களில் பழனிசாமி எடுக்கும் நடவடிக்கைகள் அவரது ஆட்சி தொடர வேண்டுமா அல்லது உடனே முடிக்கப் பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும்.

பழி வாங்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் வாய்ப்பை பயன் படுத்தி கொஞ்சமாவது நல்ல பெயர் வாங்க முயற்சித்தால் வரவேற்கலாம்.

அள்ளிக் குவித்தவர்கள் எப்படி உடனே நிறுத்துவார்கள்?

ஜானகி தோற்றபின் அரசியலை விட்டே ஒதுங்கினார்.     ஓ பி எஸ் ஒதுங்குவாரா?    கூட இருப்பவர்கள் ஒதுங்க விடுவார்களா?

ஓ பி எஸ் -தீபா கூட்டணி பெரிதும் சாதிக்கும் என்று சொல்லி திரிபவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

தமிழர்கள் நிலைமை கொஞ்சம் கவலைக்கிடம்தான் .

 

 

 

சட்டமன்ற வாக்கெடுப்பு சாதிக்கப் போவதென்ன?

எடப்பாடி  பழனிசாமி முதல்வராக நீடிப்பது இன்று நடக்கும் சட்ட மன்ற வாக்கெடுப்பில் தெளிவாகிவிடும்.

திமுக காங்கிரஸ் அணியின் 98  வாக்குகளும் ஓ பி  எஸ் அணியின்    11 வாக்குகளும் சேர்த்தும் கூட நம்பிக்கை வாக்கெடுப்பை தோற்கடிக்க தேவையான   117 வரவில்லையே?

வெற்றி பெற்றாலும் மத்திய அரசின் ஆதரவில்லாமல் முழு காலமும் பழநிசாமியால் ஆட்சி நடத்தி விட முடியுமா?

சசிகலா சிறையில் இருந்தவாறே ஆட்சி நடத்தி விட முடியாது.     பொதுச்செயலாளராக கூட தொடர்ந்திட சட்டம் இடம் தராது.

உச்சநீதி மன்றத்தால் குற்றவாளி இன்று தீர்ப்பளிக்கப் பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தையோ பெயரையோ இனி அரசால் அதிகாரபூர்வமாக அரசு அலுவலகங்களில் பயன்படுத்த முடியுமா?

ஜெயலலிதா வின் ஆட்சியை தொடர்வோம் என்று  சொல்பவர்கள் அவரது ஊழல் ஆட்சியை தொடர்வோம் என்று சொல்வதாகதானே பொருள்?

மீளாய்வு மனுவிலோ சீராய்வு மனுவிலோ தீர்ப்பு திருத்தப் பட்டால் தவிர ஜெயலலிதா என்பவர் ஊழல் குற்றவாளி.  அவருக்குத் துணை நின்றோர்தான் இன்று சிறையில்.     எனவே மூலக்  குற்றவாளியை விட துணை  நின்றோர் தான் அதிக குற்றம்  இழைத்தவர்கள்  என்று சொல்லி தப்பி விட முடியாது.

தோற்றால் எந்தக் கட்சியாலும் நிலையான ஆட்சியை தர முடியா நிலையில்  சட்ட மன்றத்தை கலைக்காமல் செயலற்ற நிலையில் வைத்து விட்டு தற்காலிகமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல் படுத்த மத்திய அரசு தயாராகும்.

அந்தக் கால கட்டத்தில் பா ஜ க ஏதோ ஒரு அ தி மு க அணியை கூட்டாக கொண்டு இங்கே காலூன்ற முயற்சிக்கும்.

ஓ பி எஸ் அறிவித்த வாக்காளர் கண்டன பேரணி எங்கும் நடைபெற்றதாக தெரியவில்லை. அவரது வீட்டிலும் கூட்டம் குறைந்து விட்டது.

தீபா   ஓ பி எஸ் வீட்டிற்கு சென்று ஆதரவு அளித்ததும் அவரது  வீட்டிலும் கூட்டம் குறைந்து விட்டது.    அவரை வைத்து அரசியல் செய்யலாம்  என்று நினைத்தவர்கள் ஒதுங்கி இருக்கலாம்.

சட்ட மன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாலும்  ஊழல் ஆட்சி நடத்தியவரின்   ஆட்சி நீடிப்பதாகத்தான் பொருள்.

தோற்றாலும் தற்காலிக குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற நிலையில் ,

செலவைப் பார்க்காமல் மீண்டும் தேர்தல் நடத்தி ஒரு நிலையான அரசை அமைக்க ஏன் முயற்சிக்கக் கூடாது?

இல்லாவிட்டால் மாற்று ஏற்பாடாக திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்து அதிமுக அதிருப்தியாளர்கள் வெளியில் இருந்து ஆதரிக்க வேண்டும்.

செய்வார்களா?   செய்வார்களா?

 

 

 

ஜெயலலிதாவும் சசிகலாவும் குற்றவாளிகள்! உச்ச நீதி மன்றம் தீர்ப்பு !!!

சிறைக்குப் போகிறார் சசிகலா!!

முதல்வர் கனவு கனவாகவே  போய் விட்டது.

ஜெயலலிதா இருந்திருந்தால் அவரும் சிறைக்குப் போயிருப்பார்.

எட்டு  மாதம்         கழித்து , தமிழக அரசியலில் ஒரு பிரச்னை உருவாகி, சசிகலா  முதல்வர் ஆக  தேர்வு செய்யப் பட இருந்த நிலையில், ஓ பி எஸ் தனி அணி கண்டு ராஜினாமாவை கட்டாயப் படுத்தி வாங்கினார்கள் என்று குற்றம் சாட்டிய நிலையில்   , உச்ச நீதி மன்றம்  ஜெயலலிதா , சசிகலா ,இளவரசி ,சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்று விசாரணை நீதி மன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்திருக்கிறது.

தீர்ப்பு பொதுவாக வரவேற்பை பெற்றாலும் தாமதம் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

விடுதலை செய்து தீர்பளித்த  நீதிபதி  குமாரசாமிக்கு  கண்டனம் தெரிவித்ததா என்று தெரிய வில்லை. கணக்கு தப்பு என்பது உண்மைதானா?

ஜெயலலிதா ஆட்சிக் காலம் என்பது ஊழல் ஆட்சிக் காலமே என்பது இதன் மூலம் உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

கொண்டாடப் பட வேண்டிய ஆட்சியை ஜெயலலிதா நடத்த வில்லை.

அதிமுக என்பதே ஜெயலலிதாவின் கட்சிதான்.

எம்ஜியார் காலத்தில்தான் அது கலைஞர் எதிர்ப்பு கட்சியாக இருந்தது.    அதன் அடிப்படையில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதை தன் கட்சியாகவே வைத்திருந்தார்.

அவருக்குப்பின் கட்சி நீடிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு என்ன பதில்?

ஜானகி அணி ஜெயலலிதா அணி என்று பிரிந்து போட்டியிட்டவர்கள் தான் இவர்கள்.
ஆளுநர் தாமதம் செய்தார் என்ற குற்றச்சாட்டு தவறு என்றாகி விட்டது.   பதவி ஏற்றிருந்தால்  உடனே விலக வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கும்.

மீண்டும் ஒரு பொது தேர்தலை நோக்கி தமிழ் நாடு செல்கிறது தெரிகிறது.;

ஓ பி எஸ்  ஆதரவு அதிமுக இந்த தீர்ப்பை கொண்டாடுவதன் பொருள் என்ன.?     ஜெயலலிதாவிற்கு அவமானம் ஏற்பட்டாலும் பரவாயில்லை.  சசிகலா தடுக்கப் பட வேண்டும் .

விழிப்புணர்வு இல்லாத சமுதாயத்தில் அரசியல் எப்படி இருக்கும் என்பது இப்போது விளங்கிவிட்டது.

டெல்லி நினைத்தால் எந்த மாநிலத்திலும் தங்கள் விருப்பபடி அரசியலை மாற்று திசையில் திருப்ப முடியும் என்பது மீண்டும் நிருபணம் ஆகியிருக்கிறது.

பா ஜ க கால் பதிக்க தன் ஆட்சி அதிகாரத்தை பயன் படுத்தி வருகிறது.

விழிப்புணர்வு கொண்ட சமுதாயமாக மாறினால்தான் இந்த அவலங்களை தவிர்க்க முடியும்.

 

உச்சநீதி மன்றத்தை யார் கேட்பது? தீர்ப்பு தர எட்டு மாதம் தேவையா?

தமிழகத்தில் நிலவும் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் உச்ச நீதி மன்றம்.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு செய்திருந்த மேன் முறையீட்டில் வாதங்கள் முடிந்து தீர்ப்புக்கு ஒதுக்கி எட்டு மாதங்களாகி விட்டது.

தீர்ப்பு முன்பே வந்திருந்தால் தமிழக அரசியல் நிலவரம் முற்றிலும் மாறியிருக்கும்.

யார் கண்டது. ?    ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் போக்கையே அது மாற்றியிருக்க கூடும்.

கிழமை நீதிமன்றங்களுக்கு அறிவுரை சொல்லும் உச்ச நீதி மன்றத்துக்கு யார் அறிவுரை சொல்வது?

வழக்கு நடத்த பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடித்தார் ஜெயலலிதா.      குற்றவாளி தீர்ப்பு வந்து மேன்முறையீடு செய்து  அதை மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு சொல்ல உத்தரவிட உச்ச நீதி மன்றத்துக்கு முடிந்தது.

தன்னிடம் வந்த வழக்கில் மட்டும் தீர்ப்பு சொல்ல எட்டு மாதம் எடுத்துகொள்கிறது.

தீர்ப்பு முன்பே வந்திருந்தால் இன்று எழுந்திருக்கும் சசிகலா-ஓ பி எஸ் உடைசலே வந்திருக்காது.

உச்ச நீதி மன்றம் முதலில் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டட்டும்.

தீபா பேட்ரிக் மாதவன் அரசியலுக்கு வருகிறாராம் !!!

யார் வேண்டுமானாலும் தமிழக அரசியலில் நுழைந்து முதல்வர் ஆகி விடலாம் .

எம்ஜியார் – ஜெயலலிதா – இருவரின் பெயரை மட்டும் சொன்னால் போதும்.

தமிழர்களை எப்படி எடை போட்டிருக்கிறார்கள்?    மிகச்சரியாக.    இதுவரை  அப்படிதானே !!

அ தி மு க வில் தலைவர்களே  இல்லையா?

மிட்டா மிராசு ஜமீன்தார் மன்னர் காலமெல்லாம் மலையேறி விட்டாலும் ஜனநாயகத்திலும் வாரிசுகளை விட்டால் வேறு யாருமே தலைமை ஏற்க தகுதி படைத்தவர்கள் தேர்ந்தெடுக்கப் பட முடியாதா?

இது இனத்தின் இழிவு இல்லையா?

ஜல்லிகட்டு பிரச்னையில் தன்மான உணர்வைக் காட்டிய தமிழினம் இனி ஒவ்வொரு பிரச்னையிலும் அந்த உணர்வை வெளிக்காட்ட  வேண்டும்.

தீபா பெந்தேகொஸ்தே பிரிவை சேர்ந்த பாட்ரிக் மாதவனை திருமணம் செய்து கொண்டதால் தான் அய்யங்கார் பிரிவை சேர்ந்த ஜெயலலிதாவால் அதை ஏற்றுக்  கொள்ள முடியாமல் திருமணத்திலும் கலந்து கொள்ள வில்லை பின்னாலும் முக்கியத்துவம் கொடுக்க  வில்லை என்பது இப்போது  தெரிகிறது.

ஆனால் எதையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள தீபா தயாராக இல்லையே ஏன்?

\                     சசிகலா பொறுப்பு ஏற்றது தொண்டர்கள் மத்தியில் ஏற்றுக்  கொள்ளப் பட வில்லை என்ற பிரச்சாரம் செய்யப் படுகிறது.

அதிமு கவிற்கு யார் தலைமை என்பது அவர்கள் பிரச்னை.

ஆனால் எந்த கொள்கையை யும் முன்னிறுத்தாமல் தான் உறவுக்காரி என்ற உரிமையில் மட்டுமே ஒருவர் ஒரு அரசியல் தலைமை ஏற்க முன்வருவாரெயானால் அதை  ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஜானகி முதல்வரானதும் ஜெயலலிதா முதல்வரானதும் திராவிட இயக்க கொள்கைகள் அடிப்படையிலா?

அதுதான் தமிழகத்தின் தலைவிதியா?

தொண்டர்கள் அழைக்கிறார்கள் என்கிறார்கள்.  தொண்டர்கள் கண்களுக்கு வேறு அ தி மு க தலைவர்கள் யாருமே தெரியவில்லையா?

நாட்டை நாசப்படுத்தும் வேலையை போட்டி போட்டுகொண்டு முன்னெடுப்பவர்கள் இத்தனை பேர்களா?

இவர்களுக்குள் யாருமே தங்களுக்குள் ஒருவரை ஏன் தேர்ந்தெடுக்க முடியவில்லை. ?

தமிழன் என்று  சொல்லவே வெட்கப் படுகிற நிலையை உருவாக்காதீர்கள்!

தீபாவின் சகோதரர் தீபக்  சசிகலாவின் பக்கம் .   இவர் ஜெயலலிதா பெயரில் தனிக்கட்சியா?

தமிழரையும் தமிழ்நாட்டையும்  யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கலாம் என்ற நிலை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்?

ஓ பி எஸ் பிரிந்து வந்து தனி அணி கண்ட பிறகு தீபா மவுசு குறைந்திருக்கிறது.

தீபாவுக்கு அரசியலுக்கு வர உரிமை இல்லையா ? நிச்சயம் உண்டு.     அதற்கு கொள்கை ரீதியிலான காரணங்களை அவர் கூற வேண்டும்.

ஜெயலலிதா வழி என்று சொல்கிறாரே அது என்ன ஜெயலலிதா வழி?

ஊரை அடித்து உலையில் போட்டு லஞ்சம வாங்கி குவித்து வழக்குகளை சந்தித்து சிறைக்கு சென்று எல்லாரையும் அடிமைகள் ஆக்கி சர்வாதிகாரம் செய்வது தான் அரசியல் என்று கற்பித்து வாழ்ந்தவர் ஜெயலலிதா.                           அதே வழியில் யார் வந்தாலும் மக்கள் ஆதரவு கிடைக்காது!

மாணவர்களும் இளைஞர்களும் சேர்ந்து மெரினாவில் சாதித்து காட்டிய ஜல்லிக்கட்டு புகழை தீபாவை அழைத்து அழித்து விடாதீர்கள்.