Home Blog Page 92

ஆளுநர் மூலம் காலூன்றப் பார்க்கும் காவிக் கட்சி

உத்தரகாண்ட் , அருணாச்சல பிரதேசம்               போன்ற வட மாநிலங்களில் நடந்தது எல்லாம் இப்போது தமிழகத்தில் நடக்கிறது.

என்னவெல்லாம் செய்து ஆட்சியை கைப்பற்ற பா ஜ க நாடகம் நடத்தியது என்பதை கவனித்தால் இங்கு நடப்பது ஒன்றும் ஆச்சரியம் தராது.

சசிகலா-ஓ பி எஸ் இவர்களில் யார் தகுதியானவர்கள் என்பது அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒன்று.

ஆளுநரின் நடத்தை யை மட்டும் விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டால் சதி வெளிவரும்.

ஒ பி எஸ்         ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன் ஆளுநர் என்ன செய்திருக்க வேண்டும்?   அடுத்து யார் ஆட்சி செய்ய அனுமதிப்பது என்பது மட்டுமே அவரது வேலை.      அனுமதி அளிக்கப்  பட்டவர் சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் .

ஆளுநர் செய்த தாமதத்தின் விளைவாக இரு தரப்பிலும் குதிரை பேரம் அதிகமாகி விட்டது.

ஆளுநர் மூத்த பா ஜ க தலைவர் என்பது அவர் யார் நன்மைக்காக பாடு படுவார் என்பதற்கு விடை தரும். இத்தனை நாள் அவர் காத்து வரும் மௌனம் உள் நோக்கம் கொண்டது .    பா ஜ க வின் திட்டத்திற்கு துணை போகும் நோக்கம் என்பது எல்லாருக்கும் புரிந்தே இருக்கிறது.

எது நடந்தாலும் அது  பா ஜ க காலூன்ற இடம் கொடுத்து விடக் கூடாது என்பது மட்டுமே நமக்கு கவலை.

தமிழகத்தில் ஆட்சி என்பது இருக்கிறதா என்பதே கேள்வியாகி விட்டது.

ஒருவழியாக ஜல்லிக்கட்டு நடத்தப் பட்டது என்பது மட்டுமே  ஆறுதல் அளிக்கும் செய்தி.

மெரினாவில் மாணவர்கள் நடத்திய , உலகமே அதிசயித்த , புரட்சிப் போராட்டம் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்த நிலையில் இப்போது நடக்கும் மல்லுக்கட்டு தமிழர்களுக்கு இழிவைத் தந்து விட்டது.

அவாள் கள் எல்லாம் ஒரே குரலில் பேசுகிறார்கள்.      அதிலிருந்தே புரிந்து விட்டது யார் விலை  போய் விட்டார்கள் என்று.      தேவைப் படும்போது அவர்கள் வெளியே வருவார்கள்.      அதுவரை சாது வேடம் போடுவார்கள்.

கரூர் அன்புநாதன் -சேகர் ரெட்டி தொடர்பான ஆயிரக்கணக்கான கோடிகள் சம்பத்தப்பட்ட வழக்கில் ஓ பி எஸ்  சேர்க்கப் படாதது மட்டுமல்ல , அவர்கள் மீதும் கூட நடவடிக்கை தீவிரமாக இல்லை.   நத்தம் விஸ்வநாதன்  தப்பி விட்டார்.    அருண் ஜெட்லி நன்றாகத்தான் மிரட்டி இருக்கிறார்.

ஏன் எட்டு மாதங்களாக தீர்ப்பு சொல்லாமல் இருந்தீர்கள் என்று யார் உச்ச நீதிமன்றத்தை கேட்பது    ?

தமிழகத்தில் நடக்கும் பல அரசியல் பிரச்னைகளுக்கு , தீர்ப்பு அப்போதே வந்திருந்தால் , தீர்வு கிடைத்திருக்கும்.

தமிழகத்தின் தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் தன்மை கொண்ட மிக முக்கியமான வழக்கில் உச்ச நீதி மன்றம் நடந்து கொள்வது சகிக்கவே முடியாத ஒன்று.      யார் கேட்பது?

மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதியை உச்ச நீதி மன்றம் இழந்து வருகிறது.     நாட்டுக்கே தலைகுனிவு.

நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும்  அமைப்புகள் எல்லாமே சுய நலமிகளாக இருக்கிறார்களே?

எது வேண்டுமாளாலும் செய்!  அதை உடனே செய்!  ஆளுநரே  தமிழகத்தை  வேட்டைக்காடாக்காதே!!!

ஜல்லிக்கட்டை நடத்துவதில் உறுதி என்கிறாரே ஓ பி எஸ் எப்படி நடத்துவார் ??

இன்னும்  மூன்று நாளில்  பொங்கல்.

உச்ச நீதி மன்ற தடை நீங்கவில்லை.  மத்திய அரசுக்கு மாநில அரசும் பல கட்சிகளும் வேண்டுகோள் வைத்து  விட்டார்கள்.

உச்ச நீதி  மன்றம்  தடையை விலக்கி கொள்ள தேவையான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு செய்யாமலேயே வெறும் வாய் மூலமான பொய் வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

காட்சிப் படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை விலக்க தயாராக இருப்பதாக கூறும்  மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை   ஏன் நீக்கவில்லை?

நீக்கி விட்டால் மட்டும் உச்ச நீதி மன்றம் தடையை விலக்குமா என்பது வேறு .      ஆனால் விலக்காமலேயே வெறும் அரசாணை மூலமே நடத்துவோம் என்று ஒரு நிலை  எடுக்க வேண்டிய காரணம் என்ன?

வஞ்சக மத்திய அரசு  சொல்வது  வேறு செய்வது வேறு ?      ஒரு பக்கம்  ஆதரவு மக்கள் வெறுப்பிலிருந்து தப்பிக்க.    மறுபுறம் நீதிமன்ற தடை நீடிக்க வகை செய்து எதிர்ப்பு.    இந்த இரட்டை  நிலை  தான் இப்போது பிரச்னை.

மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.      ஏக இந்தியாவில் தனித்த எதுவும் இயங்கக் கூடாது.    இதுதான் மத்திய அரசின் திட்டம்.

தடையை மீறி ஏறு தழுவல் என்ற பெயரில் விளையாட்டை நடத்த வீரர்கள் தயாராகிவிட்டார்கள்.

தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் கேள்வி?

ஏற்கெனெவே ஜல்லிக்கட்டு வேண்டாம்  என்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி  நடத்தி தன் இருப்பை காட்டிக் கொண்டிருக்கிறார் காவல் துறை கண்காணிப்பாளர் .

காவல் துறையை மீறி நடத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பாகி விடும்.     அதையும்  எதிர் கொன்வோம் என்ற நிலை எடுக்கலாம்.  அது நீதிமன்றத்தையே திணறடிக்கும்.      காவிரி நீரை திறக்க முடியாது .  நீதிமன்ற அவமதிப்பை சந்திக்கிறோம் என்று  சவால் விடுத்த கன்னட அமைப்பினர் மீது கர்நாடக அரசு மீது உச்ச நீதி  மன்றம் என்ன நடவடிக்கை எடுத்தது. ?

உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பிறகே ஜல்லிக்கட்டு குறித்து முடிவெடுக்கப்  படும் என்கிறார் மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே .           உச்ச நீதி  மன்றம் இப்போது எதுவும் தீர்ப்பு வழங்கப் போவதில்லை.

தமிழக அரசு என்ன செயப் போகிறது?    இதுதான் எல்லார் மனதிலும் உள்ள கேள்வி?

நடத்தி முடித்த பின் கைதா?         நடத்தும் முன்பே கைதா ?

நடத்த விட்டு மக்கள் மனதில் இடம் பிடிக்க போகிறதா?  கைது செய்து தானே வில்லனாகப் போகிறதா?

 

காலில் விழும் கலாசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த ஸ்டாலின் !!!

நீண்ட நாட்களாக தமிழர்கள் நெஞ்சை நெருடிக்கொண்டிருந்த கேள்விக்கு பதில் அளித்து  விட்டார் ஸ்டாலின்.    தி மு க வின் செயல் தலைவர்.

அ தி மு க வின் கலாச்சாராம் காலில் விழுவது என்பது கசப்பான உண்மை.    அதை அந்த தலைமை ரசித்தது கொடுமை.     ஊடகங்கள் அதை கண்டித்து எழுதாதது அதை விட கொடுமை.

கிட்டத்தட்ட இவர்கள் இப்படித்தான் என்றாகி விட்ட நிலையில்  கலைஞரின் உடல் நலக குறைவுக்குப் பிறகு செயல் தலைவர் ஆகி விட்ட ஸ்டாலின் எவரும் இனி என் காலின் விழக் கூடாது என்று விடுத்துள்ள அறிக்கை தமிழர்கள் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறது.

இனி மற்றக் கட்சிகளிலும் மற்றவர்கள் இகழ்வார்களே என்பதற்காகவாவது காலில் விழும் கலாச்சாரத்தை பகிரங்கப் படுத்த மாட்டார்கள்  என்ற நம்பிக்கை பிறக்கிறது.

பெற்றோர்  பெரியவர் காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவது தமிழர் பண்பாடுதான்.

அதை வயது வித்தியாசம் பார்க்காமல் இடம் என்ன என்று கூட பார்க்காமல் காலில் விழுந்து அதற்கு மாற்றாக பலன்களை பேரும் நோக்கத்தோடு செயல்படுவது அடிமைத்தனம்.

யாராவது பேச மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் சரியான  நேரத்தில் பேசி ஒரு அவமானகரமான செயலுக்கு முற்றுப் புள்ளி வைத்த ஸ்டாலின் பாராட்டுக் குரியவர்.

மதம் ,இனம் , மொழி, சாதி பெயரில் வாக்குக்கேட்டால் செல்லாது-உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி அமுலாகும்???

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு  123 ( 3 ) ன் படி மதம் , சாதி , இனம், மொழி, அடிப்படையில் வேட்பாளரோ அவரது அங்கீகாரம் பெற்ற ஏஜெண்டோ வாக்குகளை கோரினால் அவரது செயல் ஊழல் எனப்படும் செயலாக கருதப் பட்டு அவரது தேர்தல்  செல்லாது என அறிவிக்கப் படும்  என்று உச்ச நீதி  மன்ற ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் நான்கு நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்பில் தீர்ப்பு வழங்கி யது.

இந்த தீர்ப்பு செல்லுமா என்பதை விட எப்படி அமுல்படுத்துவார்கள்    என்ற கேள்வி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

கட்சிகளே அப்படித்தான் இயங்குகின்றன.    அகாலி தளம் சீக்கியர்களை குறிக்கிறது.  கணக்கில் அடங்கா முஸ்லிம் கட்சிகள். அதே அளவில் கிறிஸ்தவ கட்சிகள். இந்து மகா சபா , இந்து  ஏக்தா  அந்தோலன் கட்சி , போன்ற மதத்தை பெயரிலேயே கொண்ட கட்சிகள் தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்றவை.

திராவிட ,வங்காள,மகாராஷ்டிரா  கன்னட  என்றெல்லாம் பிராந்தியங்களின் பெயர்களில் கட்சிகள்.

மிசோ,நாகா , தெலுகு தேசம் என்று பிரதேச கட்சிகள்.

இவைகளெல்லாம் இந்த தடை செய்யப் பட்ட பெயர்களிலேயே இயங்குகின்றன.   இவைகளை  தடை செய்ய தேர்தல் கமிஷனால் முடியுமா?

எந்த தேர்தல் வழக்கும் அடுத்த தேர்தல் முடியும் வரை முடிந்ததில்லை.

தேர்தல் வழக்குகள் எல்லாம் எந்த விளைவையும் இதுவரை ஏற்படுத்தியதில்லை.

ஒன்றிரண்டு இருந்தாலும் அவைகள் எல்லாம் காலத்தில் செய்யப் பட்டவை அல்ல.

நியாயம் என்றளவில் மட்டுமே இந்த தீர்ப்புக்கு மரியாதை இருக்கும்.   நியாயத்தை எப்படி அமுல்படுத்துவது என்பதே கேள்விக்குறி?

வேட்பாளருக்கு சம்பந்தமில்லாமல் யாரோ ஒருவர் அப்படி பிரச்சாரம் செய்தால் அது எப்படி வேட்பாளரை பாதிக்கும் என்பதற்கும் விடையில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக   மதம்  சாதி இனம், மொழி போன்றவை மக்கள் மத்தியில் பயன்பாட்டில் உள்ளவை.     அவை  சம்பந்தமாக ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. அவைகளை விவாதிப்பதிலும் அவைகளுக்கான தீர்வுகளை முன் வைப்பதும் எப்படி தவறு ஆகும்?    அவைகளை நான் தீர்த்து  வைப்பேன் என்பதும் கூட அவை  சார்ந்த பிரச்சாரங்கள் தான். அது எப்படி ஊழல் ஆகும்?

இப்படி விடை கிடைக்காத , பல கேள்விகளை இந்த தீர்ப்பு எழுப்பியிருந்தாலும்  , அமுல் படுத்துவது பற்றிய சந்தேகங்களுக்கு விடை தெரியா விட்டாலும்  , இப்படி ஒரு தீர்ப்பு இருப்பது நல்லது என்பதே பெரும்பான்மை மக்களின் விருப்பம்.

இந்திய தண்டனை சட்டம் இருக்கும்போதுதானே இத்தனை குற்றங்களும் நடக்கின்றன.   அதற்காக சட்டம் வேண்டாம் என்று விட்டு விட முடியுமா?

அதைப்போலவே இந்த தீர்ப்பும் இருக்க வேண்டியதே!!!

 

தந்தையை விரட்டிய தனயன் அகிலேஷ் யாதவ் -அதிகார போட்டியில் உறவுகளுக்கு மதிப்பில்லை !

சமீபத்தில் நடந்த அதிகாரப்போட்டியில் யாரும் எதிர் பாராதது முலாயம் சிங் யாதவை அவரது மகனே வீழ்த்துவார்  என்பது.

கட்சியைக் காப்பாற்ற தந்தையை  விலக்கி வைத்து  உள்ளதாக நியாயம் கற்பித்தாலும் அது தொண்டர்கள் முன் எடுபடுமா என்பது இனித்தான் தெரிய வரும்.

உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கும் இந்த அரசியல் வரலாறு பலமுறை கண்டதுதான்.

மாமனார் என் டி ராமராவை தோற்கடித்து விட்டுதான் முதல்வரானார் சந்திரபாபு நாயுடு.

சொந்த சகோதரனை கொன்று விட்டுத்தான்  ஆட்சியை பிடித்தான் அவுரங்கசீப் .

ஆனாலும் சோஷலிச கருத்துக்களை அடி மட்டத் தொண்டன் முதல் வரை பாய்ச்சி வைத்திருக்கும் சமாஜ்வாடி கட்சி இந்த முறை  ஆட்சியை இழக்குமானால் அது பா ஜ க ஆட்சிக்கு வர வழி வகுக்கலாம் .

அது உள் கட்சி குழப்பங்களால்  தான் முடியும் என்பது  நிரூபணம் ஆகியிருக்கிறது.

 

 

வங்கிகளின் வாராக் கடன் 4.76 லட்சம் கோடி – யார் தலையில் மத்திய அரசு சுமத்தும்?

பெரு முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்து விட்டு அதை  சாமானியர்களின் தலையில் சுமத்தவே இந்த செல்லாக்காசு அறிவிப்பு என்று மத்திய அரசை குற்றம் சொல்லி வருகிறார்கள்.

அதை மெய்பிக்கும் வகையிலேயே மத்திய அரசின் அரசின் நடவடிக்கை இருக்கிறது.   ஆண்டுக்கு ஆண்டு வாராக் கடன்களின் மதிப்பு உயர்ந்து  கொண்டே போகிறது.

14 பொதுத்துறை வங்கிகள் கடந்த 2015-16  நிதியாண்டில் இழப்பை சந்தித்துள்ளன.    இழப்பை சரிக்கட்ட   கடன்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதால் நிலைமை எவ்வளவு சீராகும் என்பது          தெ ரியவில்லை.

மதிப்பீடுகளின் படி இந்த வராக்  கடன் அளவு அடுத்த ஆண்டில் இன்னும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.   2017 மார்ச்  மாதத்திற்குள்      9.8 % அளவு அதிகரிக்கும் என்று தெரிகிறது.

அடுத்த சில காலாண்டுகளில் பல பொதுத்துறை வங்கிகள் லாப பாதைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பு.

வாராக் கடன்களின் அளவுக்கும் செல்லாக் காசு நடவடிக்கைக்கும் தொடர்பு  இருக்கிறது.

பெருந்தொகை    கடன் காரர்கள் பட்டியலை அரசு வெளியிட்டால்தான் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.

தமிழக மீனவர் இந்தியர் இல்லை என்கிறதா இந்திய அரசு?

தமிழக மீனவர்களின் படகுகள் 119 ஐ  பறிமுதல் செய்து வைத்திருப்பதை அரசுடமை ஆக்கப் போவதாக  இலங்கை அமைச்சர் மஹிந்த சமர வீரா அறிவித்திருப்பது  மிகவும் கண்டனத்துக்கு உரியது .

தன் நாட்டு மீனவர்களை இலங்கை அரசு துன்புறுத்துவதை இந்திய அரசு பெரிதாக எடுத்துக் கொண்டதே  இல்லை.        பிரச்னை பெரிதானதால்     தலையிட்டு  இப்போதெல்லாம் சுட்டுக் கொல்லாமல் இருப்பதே தனது சாதனை என்று இந்திய அரசு கருதுகிறது.

ஆனால் படகுகளை பிடித்து வைத்து கொள்ளுங்கள் என்று சுப்ரமணியன் சாமி சொன்னார்.   அது அரசின் கருத்தல்ல என்று இந்திய அரசு மறுக்க வில்லை.

இந்திய மீனவர்கள் மீன்  பிடிப்பு தொழிலை கைவிட வேண்டும் என்றே இந்திய  அரசு விரும்புகிறது .

தனது மீனவர் எல்லை தாண்டக் கூடாது என்று சொல்கிற அரசு எப்படி எல்லையை கச்சதீவில்  தாரை வார்த்தது.?

அந்தக் கேள்விக்கு பதில் தராமல் இந்தப் பிரச்னைக்கு எப்படி விடை கிடைக்கும்.?

இந்திய மீனவர் படகுகளை இந்திய அரசு மீட்டுத் தர நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு இந்திய அரசும் உடந்தை என்றே பொருள்.

வரலாற்றில் இடம் பேரும் இந்த வஞ்சக செயலுக்கு விலை கொடுத்தே தீர வேண்டும்.

கட்சித் தாவலை ஊக்குவித்து ஆட்சியைப் பிடித்த பா ஜ க !!!

கட்சித் தாவலில் சாதனையே படைத்து விட்டது அருணாச்சல பிரதேசம்.

முதலில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது 42 சட்ட மன்ற உறுப்பினர்களுடன் .      அத்தனை பேரும் விலகி அருணாச்சல மக்கள் கட்சியில் சேர்ந்து பேமா கண்டு என்பவர் தலைமையில் ஆட்சியை அமைத்தார்கள்.

அந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இணைந்தது.     அருணாச்சல மக்கள்  கட்சி தேசிய  ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கட்சி தகம் பாரியோ என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்ததும் பா ஜ க திட்டமிட்டு தற்போதைய முதல்வர் பேமா கண்டுவை தன் பக்கம் இழுத்து அவருடன்  33  உறுப்பினர்களையும்  பா ஜ க வில் சேர்த்துக் கொண்டு  இப்போது பா ஜ க அரசாக மாறி விட்டது.

வட கிழக்கு மாநிலங்கள் எழில் இப்போது பா ஜ க அசாமிலும் அருணாச்சல பிரதேசத்திலும் ஆட்சியில் நேரடியாக  இருக்கிறது.     நாகாலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது.

தங்கள் உறுப்பினர்களை பா ஜ க கடத்தி சென்று விட்டதாக அருணாச்சல மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

2019 தேர்தலில் தங்களது நேரிடையான ஆட்சியை நிலை நாட்ட பாடுபட போவதாகவும் அறிவித்துள்ளது.

அரசியலில் நேர்மை என்று தம்பட்டம் அடிக்கும் பா ஜ க கட்சித் தாவலை ஊக்குவித்து ஆட்சியைப் பிடித்தது அதன் நம்பகத் தன்மையை குறைக்கவே செய்யும்.

அப்போல்லோ மருத்துவ மனை தெளிவு படுத்தட்டும் !

ஜெயலலிதா  மரணத்தில் மர்மம் இருப்பதாக பல முனைகளில் இருந்து கேள்விகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஏன் மாரடைப்பு வந்ததை தடுக்க வில்லை என்பதை தவிர எல்லா கேள்விகளையும் கேட்டு வருகிறார்கள்?

இதற்கான விடையை அப்போலோ மருத்துவமனை இன்னும் காலம் தாழ்த்துவதில் நியாயம் இல்லை.

சசிகலா புஷ்பா கட்சியிலிருந்து விலக்கப் பட்ட ராஜ்ய சபை உறுப்பினர்.        ஜெயலலிதாவை குற்றம் சுமத்தி பாராளுமன்றத்திலேயே பேசியவர்.

அவர் வழக்குப் போட்டிருக்கிறார் பொதுசெயலாளர் தேர்தலை நிறுத்தி வைக்க.       நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.

தொடர்ந்து மரணத்தில்  மர்மம் இருப்பதாக பேசி வருகிறார்.

நடிகை கௌதமி இதில் பிரதமர் தலையிட்டு விளக்கம் தர வேண்டும் என்று கோரி அவருக்கே கடிதம் எழுதினர்.    நினைவூட்டலும் எழுதினர்.   பதில்தான் இல்லை.

சோவின் இடத்துக்கு வந்திருக்கிற ஆடிட்டர் குருமூர்த்தியும் தன் பங்குக்கு  கேள்விகளை எழுப்பி வருகிறார்.     சசிகலா விலக வேண்டும் என்றும் அப்போதுதான் அ தி மு க பாதுகாக்கப் படும் என்றும் அ தி மு க உறுப்பினர் போலவே எழுதுகிறார்.   தேச விரோத திராவிட அரசியலைத் தகர்த்த கட்சி அ தி மு க என்றும் இந்த மாற்றத்தை எம்ஜியாரும் ஜெயலலிதா ஆகிய இருவரும் கொண்டு வந்தனர் என்று எழுதுகிறார்.   எப்போது அ தி மு க திராவிட கட்சி இல்லை என்று ஆனது என்பதை அவர் விளக்கவில்லை.      பெரியாரையும் அண்ணாவையும் தலைவர்களாக வழிகாட்டிகளாக ஏற்றுகொண்டுதான் இன்றும் அ தி மு க இயங்கி வருகிறது.         திராவிட இயக்க கொள்கைகளை பொறுத்த வரையில் இரண்டும் இரட்டை குழல் துப்பாக்கிகள்தான்.

ஹுசைனி என்ற கராத்தே வீரர் பல சலுகைகளை ஜெயலலிதாவிடம் இருந்து பெற்றவர்.    தன் இரத்தத்தால் ஜெயலலிதா உருவத்தை உருவாக்கி அவரிடம் பாராட்டு பெற்றவர்.    அவர் ஜெயலலிதா கொலை செய்யப்பட நடராஜன் பின்னணியில் இருந்து சதி செய்ததாக பேட்டி கொடுக்கிறார்.

இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விடுமுறை கால நீதிபதியான  வைத்தியநாதன் பெஞ்ச் முன்பாக வந்தபோது  எனக்கும் தனிப்பட்ட முறையில் இது சம்பந்தமாக சந்தேகம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.     தன்னிடம் இந்த  வழக்கு முன்பே வந்திருந்தால் வேறு நடவடிக்கைகள் எடுத்திருப்பேன் என்றும் சொல்லி அ தி மு க தொண்டர்கள் மத்தியில் பெருத்த விவாதத்தை உருவாக்கியிருக்கிறார்.    தேவைபட்டால் உடலை தோண்டி எடுத்து மறு ஆய்வு செய்ய உத்தரவிடுவேன் என்றும் சொல்லியிருக் கிறார்.

நக்கீரன் இதழ் ஜெயலலிதாவின் கால்களை காணோம் என்று புது செய்தி வெளியிடுகிறது.

பொதுமக்களை குழப்பத்தில்  ஆழ்த்தத் தான் இவை பயன்படும்.

ஜெயலலிதாவின் வாரிசு தீபா தான் என்று கருத்தாக்கத்தை உருவாக்க  தினமலர்  போன்ற பத்திரிக்கைகள் தீவிரமாக முயற்சிக் கிறார்கள்.      எல்லாம் தோற்றுப் போய் இன்று சசிகலா அ தி மு க பொதுக் குழுவில் ஏக மனதாக பொதுசெயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.    அது வேறு.

நாம் குறிப்பிட விரும்புவது ஜெயலலிதா எழுபத்தி ஐந்து நாட்கள் அப்பலோ மருத்துவ மனையில் சிகிச்சை  பலனின்றி இறந்திருக்கிறார்.      அது தொடர்பாக பலரும் பல வித சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.   அதை விளக்கி சந்தேகத்தை போக்க வேண்டியது அப்போலோவின் கடமையா இல்லையா???

ஏய்ம்ஸ் மருத்துவர்கள் ,    லண்டன் மருத்துவர்கள்  ,   இங்கேயே பதினேழு மருத்துவர்கள் கொண்ட குழு,      பதினெட்டு  செவிலியர்கள் குழு என்று ஒரு படையே ஜெயலலிதாவை கூட இருந்து பார்த்துக் கொண்டிருந்திருக் கிறார்கள்.

ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த நான்கு துளைகள் போன்ற குறிகள் அவர் உடல் கெட்டு போகாமல் இருக்க எம்பாமிங் என்ற வகை  மருத்துவம் செய்ததால் வந்தது.   அவர்  இறந்தது முன்பே.    அறிவித்தது பின்பு என்றும் வேறு சொல்கிறார்கள்.

குற்றம் சுமத்துபவர்கள் உண்மையில் மருத்துவர்களைத்தான் குறி வைக்கிறார்கள்.   ஏதோ அவர்கள் ஒரு கொலைக்கு உடந்தையாக இருந்ததைப்போல.    எனவே விளக்கம் தர வேண்டியவர்கள் மருத்துவர்களும் மருத்துவ மனையும் தான்.

இன்று  வெங்கையா  நாயுடு எல்லாம் சரியாகத்தான் நடந்தது இதில் மர்மம் ஒன்றும் இல்லை என்று பேசியிருக்கிறார் .

ஒரு புகைப்படம் கூட ஏன் வெளியிடவில்லை?   ஏன் யாரையும் நேரில் அல்லது தூரத்தில் இருந்து பார்க்க அனுமதிக்க வில்லை இந்த இரண்டு கேள்விகள்தான் விடை தர அல்லது பெற வேண்டிய கேள்விகள்.

இரண்டிற்கும் வேறு யாரும் விடை தர முடியாது.    மருத்துவ மனைதான் தர வேண்டும்.      நீதிமன்றம் கேட்டால்தான் கொடுப்போம்  அல்லது நாங்கள் ஏன் விடை தர வேண்டும் என்று பதில் சொல்வதெல்லாம் பிரச்னையை வளர்க்கத் தான் பயன்படும்.

அப்போலோ மருத்துவமனை விளக்கம் தரட்டும்.

 

பழைய நோட்டுகளை வைத்திருந்தால் குற்றம்- மோடி அரசின் துக்ளக் தர்பார் சட்டம் ??!!

மார்ச் 31,2017 வரை செல்லாத ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு இப்போது அவசர சட்டம் மூலம் செல்லாத நோட்டுகளை வைத்திருந்தால் நான்கு வருட சிறை தண்டணை என்று துக்ளக் தர்பார் நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

உலகில் எங்காவது இப்படி ஒரு அறிவுக்கு பொருத்தமில்லாத சட்டம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

செல்லாத நோட்டு குப்பை காகிதம்.     அதை பயன்படுத்த  முடியாத  போது வைத்திருப்பது மட்டுமே எப்படி குற்றமாகும். ?     பத்து நோட்டுகளை வைத்திருக்கலாம்  நினைவுச் சின்னமாக என்று அரசு அனுமதிக்கிறது.

அதிகம் இருந்தால் அழித்து விடுங்கள் என்று அரசு சொல்கிறதா?    அப்படி வைத்திருப்பதில் எந்த பயனும் யாருக்கும் இல்லை.   யாருக்கும் நட்டமும் இல்லை.    யாருக்கும் நட்டமிழைக்க முடியாத நோட்டுகளால் என்ன ஆபத்து வந்து விடும்.      அப்படி வைத்திருக்க யாருக்கும் எந்த காரணமும் இல்லை.

தேவையே இல்லாமல் ஒரு சட்டத்தை போடுவதால் இந்த அரசு என்ன சொல்ல நினைக்கிறது. ?

கருப்பு பண ஒழிப்பு, கள்ள பண ஒழிப்பு , தீவிரவாத குழுக்கள் ஒழிப்பு  எல்லாம் போய் இப்போது பணமில்லா பரிவர்த்தனை என்ற புதிய கோஷத்தை தூக்கிப் பிடிக்கிறது மோடி அரசு .

எதையும் யாரும் எதிர்க்க வில்லை.   திட்டமில்லாமல் பொதுமக்களை  வாட்டி வதைக்கும் இந்தசெல்லாத நோட்டு திட்டத்திற்கும்     பணமில்லா பரிவர்தனைக்கும் என்ன தொடர்பு?

கானா, நைஜீரியா , மியான்மர், சோவியத்யூனியன் ,      ஸைரே, ஜிம்பாப்வே, வட கொரியா, வெனிசூலா, போன்ற நாடுகள் இதே மாதிரி நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமால் தோல்வியடைந்தன.

ஐரோப்பா யூனியன் நாடுகள் பனிரெண்டு ஒன்று சேர்ந்து புதிய யுரோ நோட்டுகளை மூன்றாண்டுகள் திட்டமிட்டு அமுல்படுதியபோது அது வெற்றி யடைந்தது.    அதுமாதிரியான திட்டமிடல் இங்கு இல்லை.

பாகிஸ்தான் அடுத்த ஆண்டு முதல்  பழைய நோட்டுகளுக்கு பதில்  புதிய நோட்டுகளை  அச்சடித்து வைத்துக் கொண்டு அறிமுக படுத்த  இருக்கிறது.

கருப்பு பணம் ஒழிக்கவே முடியாத ஒன்று.        பழைய ஆயிரம் ரூபாய் கருப்பு பணம் இனி மேல் இரண்டாயிரம்  ரூபாய் கருப்பு  பணமாக மாறும்.

கள்ளப் பணமும் இனி இரண்டாயிரம் நோட்டுகளாக வரும்.     தொடர்ந்து போராடி அவைகளை ஒழிக்க முயற்சிப்பதே ஒரே வழி.

மொத்தம் 15.4  லட்சம் கோடி ஆயிரம் ஐநூறு நோட்டுகளில் இப்போது வங்கிகளில் டிபாசிட் செய்யப் பட்டிருப்பது   14  லட்சம் கோடி என்றால் மிச்சம் 1.4 லட்சம் கோடிதான் வரவேண்டும்.    வரலாம் அல்லது வராமல் போகலாம்.

வந்திருப்பதில் எவ்வளவு வெள்ளை பணம் எவ்வளவு  கருப்பு பணம் என்பதை எல்லா கணக்குகளையும் ஆராந்தால்தான் தெரியும் .

வருமான வரி சட்டத்திலேயே பெரிய துகைகள் கொண்ட பரிவர்த்தனைகளை காசோலை அல்லது வங்கி ஓலை மூலமாகவே மட்டுமே செய்ய முடியும் என்ற உள்ளதை அமுல் படுத்தினாலே இந்த செல்லாத நோட்டு அறிவுப்புக்கு தேவையே இருந்திருக்காது.

காபி குடிக்கவும் பூ வாங்கவும் பஸ் ரயில் டிக்கட்எடுக்கவும் கார்டு மூலமாக செய்ய என்ன அவசியம் இருக்கிறது. ?

போகிற போக்கை பார்த்தால் ஒரு நிலையில் மோடி அரசு தொடர்ந்து கேட்ட பெயர் வாங்கி கொண்டு  இருக்கிற நிலையில் ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடி நிலையை அவர் அமுல்படுத்தினாலும் ஆச்சரியப் பட முடியாது.

ஒருவேளை உச்ச நீதி மன்றம் குறிப்பிட்டதை போல் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில்  இறங்கினால் அரசியல் நெருக்கடி  நிலையை அமுல் படுத்த கூட மோடி தயங்க மாட்டார்.

மக்கள் படும் துயரங்களை உணர முடியாத அல்லது உணர விரும்பாத பிரதமரை நாம் பெற்றிருப்பது காலத்தின் கோலம.