Home Blog Page 93

அ.தி.மு.க வை மிரட்டுகிறதா மோடி அரசு? ராம் மோகன் ராவின் பேட்டி தரும் பொருள் என்ன?

வருமானத் வரித்  துறையின் நடவடிக்கைக்கு ஆளாகி இன்று பதவி இழந்து நிற்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் இன்று கொடுத்திருக்கும் பேட்டி தமிழக அரசியலில் ஒரு திருப்பம்.

ஸ்டாலின் சொன்னது போல் இதில் ஏதோ பெரிய மர்மம் இருப்பதைப்போல்தான் தெரிகிறது.

முப்பது லட்சம் பணம் ரொக்கம் தங்கக் கட்டிகள் என்றெல்லாம் வந்த செய்திகளுக்கு மாறாக இன்று ராம் மோகன் ராவ் தனது வீட்டில் கைப்பற்றியது வெறும் ஒரு லட்சம் ரூபாய்தான் என்றும் மனைவி அணிந்திருந்த நகைகள் மட்டும்தான் என்றும் சொல்லியிருப்பது சரியா என்று தமிழக மக்கள் குழம்பி இருக்கிறார்கள்.

ஓ பி எஸ் யும் மத்திய அரசையும் நேரடியாகவே வம்புக்கு இழுத்திருக்கிறார்.

தலைமை செயலாளரின் அறையில் நடந்த சோதனையை தடுத்து நிறுத்த அரசுக்கு தைரியம் வர வில்லை என்றும் என்னை இட மாற்றம் செய்யும் தைரியம் கூட மத்திய அரசுக்கு இல்லை என்றும் தெளிவாக சவால் விடுகிறார்.

நாளை ஓ பி எஸ் மற்றும் மத்திய அரசின் சார்பில் விளக்கம் கொடுத்தே ஆக வேண்டிய  அளவில் இவரது  பேட்டி இருக்கிறது.

நாளை  மறுநாள் சசிகலா அ தி மு க பொது செயலாளராக பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

ஒரு கோடிக்கு மேல் உறுப்பினர்களை கொண்ட கட்சி ,  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு , ஏதோ அனாதையாக கிடப்பதைப் போலவும் அதை ஏதாவது செய்து ஆதாயம் அடைய முடியுமா என்று தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பா ஜ க திட்டமிட்டு செயலாற்றி  வருகிறது.

ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடந்திருக்காது என்ற அவரது கூற்று உண்மையாக இருந்தாலும் அதை இவர் இப்போது சொல்வதற்கு காரணம் வேறு.      தன்  தவறுகளுக்கு அவரையும் கூட்டு சேர்க்கிறார்.

சசிகலா அனுமதி பெற்று பேசியிருப்பாரா அல்லது தானே தனது முடிவாக பேசினாரா என்பது தெரியவில்லை.

அரசியலுக்கு வரும் எண்ணமும் இருக்கும்போல்  தெரிகிறது.

எப்படி இருந்தாலும் ஓ  பி எஸ் சும் வருமான   வரித்துறையும் விளக்கம் கொடுக்காமல் இந்தப் பிரச்சினை  தீரப்  போவதில்லை.

முக்கிய இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழக அரசியல்.

வரும் நாட்களில்  வாணவேடிக்கை கோலோச்சும்.     அதில் தோலுரியப் போவது மத்திய அரசா அல்லது சசிகலாவின் அ தி மு கவா  என்பதும்  வெளிச்சமாகும் .

 

பார்ப்பனீய ஆதிக்க ஆபத்து அதிகரிப்பு! இந்து கடவுள்கள் திராவிட கொள்கைகளை தோற்கடித்து விட்டனர்- குருமூர்த்தி சொல்கிறார்??!!

பார்ப்பனீய ஆதிக்க ஆபத்து அதிகரிப்பு! இந்து கடவுள்கள் திராவிட கொள்கைகளை தோற்கடித்து விட்டனர்-   குருமூர்த்தி சொல்கிறார்??!!

செல்வாக்கு இல்லாவிட்டாலும் தன் எடுபடாத கொள்கைகளை சொல்லிக்கொண்டே இருப்பது பார்பனீயம்.    என்றாவது வெல்வோம் என்ற நம்பிக்கையில்.

அதைப்போல் தான் சோ வுக்குப் பின் துக்ளக் ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி எடுபடாத வாதங்களை நம்புகிற மாதிரி முன் வைக்கிறார்.

ஒரு கோடி பேர் சபரிமலைக்கு செல்கிறார்களாம்.   மாதம் இரண்டரை லட்சம் பேர் பழனி போகிறார்களாம். மேல்மருவத்துருக்கு முப்பது லட்சம் பேர் செல்கிறார்களாம்.    இந்த இந்துக் கடவுள்கள் திராவிட கொள்கைகளை தோற்கடித்து விட்டார்களாம். தலைவர்களை விட கடவுள்களை தான் மக்கள் நம்புகிறார்கள். கடவுளைத்தான் தலைவராக பார்கிறார்கள். தலைவரை கடவுளாக பார்க்கவில்லை.   இதுதான் குருமூர்த்தியின் மதிப்பீடு.

குருமூர்த்தி சொல்லும் பக்தர்களில் எத்தனை பேர் பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை குருமூர்த்தி சொல்வாரா?

வாக்கெடுப்பு நடத்தத் தயாரா?     பக்தர்களிடம் பார்ப்பனீய ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பை நடத்த தயாரா?

தன் துன்பங்களில் இருந்து விடுபட  அப்பாவி பக்தன் வேறு வழியின்றி பார்ப்பான்  மணியாட்டி இறைத்தொண்டு செய்வதை ஏற்றுக் கொள்கிறானே தவிர மனப்பூர்வமாக அல்ல.

மாற்றங்களை கொண்டுவர அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கொள்கையை ஆதரிப்பவர்கள் தான் அனைவரும்.

ஒரு சத விகிதம் கூட பார்ப்பனீய ஆதிக்கத்தை ஒப்புக் கொள்பவர்கள் அல்ல.  சம்பிரதாயம் ,விதி என்று கட்டாயப் படுத்தப் பட்டே பார்ப்பனீய ஆதிக்கம் திணிக்கப் படுகிறது.

இதை வைத்து மீண்டும் அரசியல் ஆதிக்கம் செலுத்தலாம் என்று அவர்கள் திட்ட மிடுகிறார்கள்.

ராம் மோகன் ராவ் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டு இருக்கிறார். கிலோ கணக்கில் தங்கம் கோடிகோடியாக பணம் கைப்பற்றப் பட்டிருக்கிறது.  விசாரணை செய்து சிறையில் போடட்டும்.    ஆனால் தினமலர் அவரை பற்றி செய்தி வெளியிடும் போது அவன் இவன் என்று எழுதுகிறதே  எந்த பார்பானாவது மாட்டிக்கொண்டு சிறைக்குப் போனால் அப்போது அவனை அவன் இவன் என்று எழுதுவாயா?       காஞ்சி சங்கராச்சாரியார் கொலைக குற்றச்சாட்டில் சிறைக்குப் போனபோது அவன் இவன் என்று எழுதினாயா?

எப்போதையும் விட இப்போதுதான் பெரியார் தேவைப் படுகிறார்.    அவரது சிந்தனை தேவைப்  படுகிறது.

பெரியார் மற்றும் எம் ஜி ஆர்  நினைவு நாளான இன்று பார்ப்பனீய ஆதிக்கம் மீண்டும் வேருரான்றமல் விழிப்புடன் செயலாற்ற சூளுரைப்போம்.

 

ஷரியத் கவுன்சில் சட்ட விரோதம் என்ற உயர் நீதி மன்ற தீர்ப்பு சரியா?

ஷரியத் கவுன்சில் சட்ட விரோதம் என்ற உயர் நீதி மன்ற தீர்ப்பு சரியா?

முஸ்லிம்கள் தங்கள் சொத்து ,திருமண , பாக உரிமை போன்ற சிவில்  உரிமைகளை பொறுத்த வரை தங்கள் முஸ்லிம் சட்டப்படி நடந்து கொள்ளும் உரிமைபடைத் தவர்கள்.

இது தொடர்பான பிரச்னை வரும்போது மசூதிகளில் இயங்கும் ஷரியத் கவுன்சில் மூலம் தீர்த்துக் கொள்கிறார்கள்.

அப்துல் ரஹ்மான என்பவர்  தொடுத்த வழக்கில் தனது மனைவியை அண்ணா சாலை மசூதி ஷரியத் கவுன்சில் விவாக ரத்து செய்து மிரட்டி கையெழுத்து வாங்கியதாக வழக்கு தொடுத்தார்.

விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மசூதிக்குள் சட்ட விரோத நீதிமன்றம் இயங்குவதை அனுமதிக்க முடியாது என்று  சொல்லி விட்டு காவல் துறைக்கு நடவடிக்கை உத்தரவிட்டது.

காவல் துறையோ கவுன்சில் மசூதிக்குள் செயல் படுவதால் உள்ளே சென்று நடவடிக்கைஎடுக்க முடிய வில்லை என்று தெரிவித்தது.

வழிபாட்டு தலங்களில் வழிபாடுதான் நடக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் தனிச்சட்டத்தை அமுல்படுத்திக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருப்பதை அவர்கள் எப்படி நிறைவேற்றிகொள்ளுவார்கள்?

மசூதிக்கு வெளியேதான் ஷரியத்  கவுன்சில்  செயல்பட வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியுமா?

தனிச்சட்டம் என்ன சொல்கிறது என்பதை விளக்கும் ஒரு அமைப்பு செயல்படுவதை எப்படி எதிர்க்க முடியும்?

தனிச்சட்டம்  கூடாது என்பது வேறு  அதை அமுல் படுத்தும் அமைப்பு மசூதிக்குள் செயல் படக் கூடாது என்பது வேறு.

தனிச்சட்டம் தொடர்கிறவரையில் ஷரியத் கவுன்சில் செயல்படுவதை தடுக்க முனைவது சரியல்ல.

ஷரியத் கவுன்சில் எப்படி  எங்கே செயல்பட வேண்டும் அதற்கு  மேல்முறையீடு உண்டா என்பதை முஸ்லிம்களே தீர்மானத்துக் கொள்ள விட்டு விடலாம்.

வழக்கு தொடர்கிறது.    எனவே விளக்கம் வேண்டும்.      தமிழக அரசு தெளிவு படுத்த கடமைப் பட்டிருக்கிறது.

பாதிரியார் கன்னியாஸ்திரி சம்பள வருமான வரி விலக்கு சரியா?

வெள்ளைக்காரன் காலத்தில்   1944 ல் பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் வருமான வரி விலக்கு பெறும் விதத்தில் உத்தரவிடப்பட்டது.   அதை தொடர்ந்து  1977 ம் ஆண்டில் வரி  விதிப்பு வாரிய செயலாளர் ஒரு சுற்றரிக்கையும் வெளியிட்டார்.

காரணம் அவர்கள் வாழ்நாள் முழுதும் இறைபணிக்காக அர்பணித்து வாழ்பவர்கள்.    அவர்கள் சொத்து வாங்கவும் முடியாது.  வாங்கினாலும் பின்னர் தானாக திருச்சபைக்கு சொந்தமாகிவிடும் .     ஊதியத்தை கூட முழுவதையும் பயன் படுத்திக் கொள்ள முடியாது என்றெல்லாம் காரணம் சொல்லப் பட்டது.

அதை மீறி விலக்குப் பெற்றவர்கள் பட்டியலில் இவர்கள் இல்லை என்ற காரணம் காட்டி வரி விதித்ததை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் சுற்றறிக்கையை முதன்மை ஆணையர் மதித்து நடக்க வேண்டும் என்றும் வரி விதிப்பு ஆணையை  ரத்து செய்வதாகவும்   உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இந்த உத்தரவு எல்லா மதங்களுக்கும் பொருந்துமா என்பது விளக்கப் படவில்லை.

எல்லா மதங்களிலும் தங்கள் வாழ் நாட்களை இறைப்பணி க்கு அர்ப்பணிப்பவர்கள்  இருக்கிறார்கள்.

தங்கள் சொத்துக்களை தங்களுக்கு பிறகு இறைப்பணிக்கு கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.    அவர்கள் வருமானத்திற்கு விலக்கு உண்டா?

எல்லா மதங்களையும் நாங்கள் சமமாக நடத்துகிறோம்  என்று அரசு சிந்திக்க  வேண்டும்.

வரைமுறைகளை வகுக்க வேண்டும்.

அது சரி .   இரண்டரை லட்சம் வரை இப்போது வருமான வரி கிடையாது. அதாவது மாதம் இருபதாயிரம்.    அதற்கும் மேலா பாதிரியார்கள் சம்பளம் பெறுகிறார்கள்?

பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.    அவர்கள் தேவைகளை தேவாலயமே ஏற்க வேண்டும் .

புத்த மதத்திலும் இதுபோலவே பிட்சுக்களின்  தேவைகளை மடமே ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது.

எந்த சட்டமும் மதங்களுக்கிடையே பார பட்சம் காட்டக் கூடாது.   அரசு விரிவான அறிக்கை தர வேண்டும்.  குழப்பத்தை தீர்க்க வேண்டும்.

நாத்திகத்தையும் மனித நேயத்தையும் வளர்க்க வாழ்நாளை அர்ப்பணிக்கும் அமைப்புகளுக்கும் தொண்டர்களுக்கும் இந்த விலக்கு உண்டா என்பதையும் தெளிவு  படுத்தினால் நலம் .

நிரந்தர நதி நீர் தீர்ப்பாயம் – மோடி அரசின் மற்றுமொரு மாய்மாலம் ??!!

நிரந்தர நதி நீர்  தீர்ப்பாயம் அமைக்க திட்டமிடுகிறது மோடி அரசு.

மூன்றாண்டுகளுக்குள் தீர்வைக்காண அது உதவும் என்று அரசு நம்புகிறது

ஆனால் கடந்த கால அனுபவம் எதையும் இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை என்பதையே இது காட்டுகிறது.

காவிரி நதி நீரைப் பெற்றுத் தருவதில் மத்திய அரசு காட்டி வரும் அருவருக்கத் தக்க அரசியல் இவர்கள் எதையும் செய்வார்கள் என்ற உருவத்தை ஏற்படுத்தி விட்டதே?

இன்று வரை கர்நாடகா  109 டி எம் சி நீர் தரவேண்டும் இறுதி தீர்ப்பின்  படி.      அது கிடைத்தால் இந்த ஆண்டு டெல்டா விவசாயிகள் பிழைத்துக் கொள்வார்கள்.       இன்று பயிர் காய்ந்து போய் செத்து மடிகிறார்கள்.

தீர்ப்பை அமுல்படுத்த மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் அமைப்பதில் மத்திய அரசு காட்டி வரும் தில்லு முல்லு தயக்கம் எதை காட்டுகிறது?     அரசியல் லாபம்தான் அவர்களுக்கு  முக்கியம் என்பதை  காட்ட வில்லையா?

இப்போது இருக்கும் எட்டு தீர்பாயங்கள் எல்லாம் நிரந்தர தீர்வை தந்து விட்டனவா?

எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் இது வரையிலான அனுபவம்.

ஒப்புக்கொள்ளப் பட்ட தீர்ப்புகளையே ஒவ்வொரு பத்து அல்லாத இருபது ஆண்டுகளுக்கு பிறகு மறு பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது.

எல்லாம் சரி.     மோடி அரசுக்கு நல்ல எண்ணம்தான் உள்ளது என்றால் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்து விட்டு எப்போது வேண்டுமானாலும் நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கட்டும்.

மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர்க்க இதை ஒரு சாக்காக பயன் படுத்தும் முயற்சியை ஒரு போதும் ஏற்க முடியாது.

நிரந்தர அமைப்பு அமைய இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகுமென்றால் அது வரை இறுதி தீர்ப்பை பெற்றவர்கள் பொறுத்திருக்க வேண்டுமா?

தேசிய நதிநீர் கட்டமைப்பு மசோதா 2016,   National Water Framework Bill 2016   , தேசிய நதிநீர் கொள்கை   National Water Policy 2012    ஆகிய முயற்சிகளின் மூலம் நதிகளை தனியார்  மயமாக்கி மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து பன்னாட்டு கம்பெனிகளிடம் கொடுக்க திட்டமிடுகிறது மத்திய  அரசு.

மாநிலங்களின் அதிகார பறிப்பு,  மத்திய அதிகார குவிப்பு , பன்னாட்டு கம்பெனிகளிடம் ஒப்படைப்பு – இதுதான் மத்திய அரசின் நீண்டகால திட்டம்.

ஆட்சிமாறினால் தவிர காட்சி மாறாது.

 

சசிகலாவின் ஆளுமைத் திறன் – சாதிப்பாரா சறுக்குவாரா???!!!

சசிகலா-

ஜெயலலிதாவின் தோழி- கூடவே இருப்பவர்- கணவரை பிரிந்து  தோழியுடன் வாழ்பவர்- கிரிமினல் வழக்குகளில் ஜெயலலிதாவுடன் குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்- இதுவரை பொதுமேடைகளில் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளாதவர்-.

இவர் தகுதி என்ன என்பதை அ தி முக  தொண்டன் தான் தீர்மானிக்க் வேண்டும்.

மற்றவர்களுக்கு இவர் வேண்டும் வேண்டாம் என்று சொல்ல உரிமை இல்லை.

ஆனால் ராமதாஸ் சொல்வது போல் சட்டத்துக்கு  புறம்பான சக்தியாக அதிகாரம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வேண்டும் என்றால் சட்டப் படியான அதிகாரத்தை எடுத்துக் கொண்டு செயல் படலாம் .   அப்போதுதான் இவர் தகுதியாவர்தானா அல்லவா என்பது தெரியும்.

அதற்குள் பார்ப்பனீய சக்திகள் அவருக்கு எதிரான அம்புகளை ஏவி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனைதான் அவர்களின் அடிவருடிகளாக வாழ்ந்து வந்தாலும் அவர்களின் அதிகார  ;மையத்தை தடம் மாற்றி விட முனைந்தால் எதிர்ப்பார்கள்.    அதுதான் அவர்கள் குணம்.

ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றி எல்லா வகையான கற்பனை கதை கட்டுரைகளையும் இவர்கள் புனைந்து வருகிறார்கள்.

ஆளுநர், மத்திய அரசு, அப்போல்லோ மருத்துவ மனை  நிபுணர்கள், லண்டன் மருத்துவர், ஏய்ம்ஸ் மருத்துவர்கள் எல்லார் மீதும் கரை பூசும் முயற்சி இது.

கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க  முனைந்து முடியாது என்று தெரிந்ததும் இப்போது வேறு எல்லா வகைகளிலும் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கிறார்கள்.

தமிழ் நாட்டைமைனாரிட்டிகள் தான் ஆள வேண்டும் என்பது விதியா என்ன?

ஓ பி எஸ் தன் ஆளுமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைதிருக்கிறது.    எப்படி இயங்க போகிறார்  என்பது தெரியவில்லை.

இதுவரை தன்னை நிருபிக்காதவர் சசிகலா!

நிரூபிக்க வாய்ப்பு தரும் முன்பே தகுயில்லாதவர் என்று சான்றளிப்பது சரியல்ல.

சசிகலா வரட்டும்- தன்னை நிரூபிக்கட்டும்!!!   அதுவரை பொறுத்திருப்போம்!!!!

 

பிராமணீயத்தின் பிரதிநிதி சோ காலமானார்!!?? ஆன்ம சாந்தி கிடைக்கட்டும்!!!

சோ- ராமசாமி!

சிரிப்பு நடிகர் அறிமுகம்-   அப்போதே சமூக மாற்றங்களை கொண்டு வந்த திராவிட பிரதிநிதி களை கிண்டல் செய்வதையே முக்கிய கொள்கையாக கொண்டவர்.

சமூக நீதிக்கு எதிரான கொள்கை களுக்கு வலு சேர்க்கும் விதத்தில் தொடர்ந்து செயல் பட்டவர்.

கொஞ்சம் கூட வெட்கப் படாமல் சமூக நீதிக்கு  எதிராக தன் சமூகம் செய்த கொடுமைகளை   எப்போதுமே கண்டு கொண்டு கொண்டதில்லை.

வெற்றி கண்ட எல்லாரையும் சாதி அடையாளத்தோடு குறிப்பிட்டு விட்டு தான் சார்ந்த பார்ப்பன சாதனையாளர்களை விட்டு விடுவது.

அவர் எதையாவது  பாராட்டினால் உடனே முடிவுக்கு வந்து விடலாம் அது பிற்பட்ட தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரானது என்று.

வேண்டுமேன்றே தமிழ் மரபுக்கு எதிராக ஜ ஸ ஷ போன்ற வடசொற்களை பிடிவாதமாக துக்ளக்கில் பயன் படுத்தி வந்தவர்.

கலைஞரை வசை பாடிக்கொண்டே நட்பும் வைத்திருந்தவர்

தான் யாருக்கு எதிராக செயல்படுகிராரோ அவர்களில் சிலரை தன் ஆதரவாளராக மாற்றிக்கொள்ளும் திறன்  படைத்தவர்.

ஜெயலலிதாவின் வேண்டப் பட்ட நண்பர்.

யார் இறந்தாலும் அவரது நல்ல பண்புகளை மட்டுமே கொண்டு மற்றவற்றை மறப்பது தள்ளுவது தமிழ் மரபு என்ற  வகையில் அவரது துணிவு, நகைச்சுவை உணர்வு ,வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டியாக திகழும் என்பது உறுதி.

 

சேகர் ரெட்டியிடம் 120 கோடி பறிமுதல்!! ஓ பி எஸ் க்கு மிரட்டலா??!!

சேகர் ரெட்டி ஓ பி எஸ் சின் பினாமி என்று நம்பப் படுகிறார்.

திருப்பதி தேவஸ்தான டிரஸ்டியாகவும்  இவர் இருக்கிறார்.       தமிழ் நாட்டு அரசியலில் இவர் பெரிய அளவில் ஒப்பந்த வேலைகளை செய்து வருகிறார்.

வீராணம் ஏரி தூர வாரும் வேலையையும் இவர்தான் பார்த்து வருகிறாராம் .

இப்போது தமிழ் நாட்டு முதல்வர் ஆக  ஓ பி எஸ் பொறுப்பு எடுத்துக் கொண்டபிறகு கட்சியின் பொது செயலாளராக யார் வருவது என்ற பிரச்னையில் மத்தியில் ஆளும் பா ஜ க அரசு மிகவும் அக்கறை  எடுத்துக் கொண்டு தான்  விரும்பும் நபரே வர வேண்டும் என விரும்புகிறது.

சசிகலா வருவதை பா ஜ க விரும்பவில்லையாம்.       சங்கப் பரிவாரங்கள் விரும்ப வில்லை. ஆனால் ஓ பி எஸ் சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கிறாராம்.    எனவே அவரை மிரட்டி  பணிய வைக்க பா ஜ க அரசு முடிவு எடுத்து  அதன் விளைவுதான் ரைடு என்கிறார்கள்.

120  கோடி ரூபாய் பழைய நோட்டுகளும்  அதில்      10  கோடி ரூபாய்க்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளும்     100  கிலோ தங்கமும் பிடிபட்டிருக்கின்றன.

மோடியின் செல்லாத நோட்டு உத்தரவு வந்தபின் பணக்காரர்கள் எந்த துன்பமும் படாமல் புதிய நோட்டுகளை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நடுத்தர வர்க்கம்தான் வங்கிகளில் வரிசையில் நிற்கிறார்கள்.

இது வழக்கமான ஐ டி ரைடு என்று எடுத்து கொள்ள முடியாது.

பா ஜ க என்னதான் விளக்கம் சொன்னாலும் மக்கள்  நம்ப  மாட்டார்கள்.

இனி வரும் தலைவர்கள் ஜெயலலிதா போல திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டே அதன் ஆணிவேரை வெட்டி எரியும் பணியில் யார் இறங்கத் தயாராக இருப்பார்கள் ?

அ தி மு  க தலைவர்கள்  துணிந்து நிற்பார்களா?     அல்லது பயந்து பா ஜ க விடம் பணிவார்களா ?

 

 

 

 

திராவிடர்களை வென்ற ஆரிய ராணி மறைந்தார்!!! கண்ணீர்க் கடலில் தமிழகம்!!!

ஜெயலலிதா  ………

திரையில் ஒளிவிட்டு மின்னிய நட்சத்திரம் .    சொகுசான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.      மெத்தப் படித்தவர்.

ஒளிவு மறைவின்றி தன் வாழ்க்கையை தன் விருப்பத்துக்கு அமைத்துக் கொண்டவர்.   சுய சிந்தனையாளர்.       எவரையும் ஏமாற்றாமல் தான் மட்டுமே ஏமாந்தவர்.

பிடிவாதக்காரர்.     தான் செய்வது சரியோ தவறோ தன்  மனதுக்கு சரி என்று பட்டால் தொடர்ந்து அதையே செய்பவர்.

எம்ஜியாரின் வாரிசாக தமிழக அரசியலில் நுழைந்தார். எம்ஜியார் திராவிட கட்சியின் உறுப்பினர்.  பார்ப்பனீய ஆதிக்கத்தை எதிர்ப்பதும் சுயமரியாதை கொள்கைகளை கடைப் பிடிப்பதும் அந்த இயக்கத்தின் கொள்கைகள் என்பதால் அதற்கு எதிராக எம்ஜியார் செயல்பட்டதில்லை .

பெரியார், அண்ணா  வழியில்தான் எம்ஜியார்  அரசியல் பயணம் அமைந்தது.

ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற கொள்கை கொண்ட திராவிட கட்சியில் பார்ப்பனீய  ஆன்மிகத்தை அரசல் புரசலாக பின்பற்றுவார்களே தவிர மிகவும் வெளிப்படையாக அல்ல.

ஆனால் எம்ஜியாரின் மறைவுக்குப்பின் திராவிட கட்சியின் தலைமைப் பீடத்தை பிடித்த ஜெயலலிதா பார்பனீய இந்துத்துவத்தை தன் அளவில் தீவிரமாக வெளிப்படையாக பின்பற்றினார்.       எனவே அவரின் ஆதரவு தேவைப்பட்ட தொண்டர்கள் அவரை பின்பற்றி அதையே வெளிப்படையாக பின்பற்றினார்கள்.     தோழி சசிகலாவும் அவர் வழியில் தீவிர பார்பனிய இந்துத்துவ பக்தரானார்.

பெரியார் பிறந்த நாளில் ஜெயலலிதா மாலை போட்டு  மரியாதை செய்வார்.      அண்ணா பிறந்த நாளில் விழா கொண்டாட அழைப்பு விடுப்பார்.        இட ஒதுக்கீட்டு கொள்கையை பார்ப்பனீயத்தின் விருப்பத்துக்கு மாறாக ஆதரிப்பார்.      கி வீரமணியே ‘ சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று  பட்டம் கொடுக்கும் அளவுக்கு இட ஒதுக்கீடு கொள்கையை அமுல்படுதினார்.

சாதி, சமய பாகுபாடுகளை தாண்டி விசுவாசம் ஒன்றையே அளவுகோலாக்கி அனைவரையும் அரவணைத்தார்.

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற நோக்கில் அரசின் கஜானாவை ஏழைகளையும் சாமானியர்களையும் நோக்கி திறந்து விட்டார்.

தனது ரத்த சொந்தங்களை நெருங்க அனுமதிக்கவில்லை.     அதனால் அவர் எவ்வளவு சொத்து சேர்த்தாலும் எல்லாம் யாருக்காக என்று மக்களே கேட்க ஆரம்பித்தார்கள்.    அதை ஒரு பொருட்டாகவே மக்கள் பாவிக்க வில்லை.

ஆமாம் நான் பாப்பாத்திதான்  என்று சட்ட மன்றத்திலேயே அறிவித்தவர்.    ஆனால் அந்த அடிப்படையில் யாரையும் இழிவுபடுத்தாதவர்.

துணிவின் பிரதி பிம்பம் அவர்.    விளைவைப் பற்றி கவலைப்படாமல் முயற்சிகளை தொடர்ந்தவர்.

தாய்க்குலத்தின் அளப்பரிய அன்பைப் பெற்றவர்.      ஆணாதிக்க சமூகத்தில்  ஒரு பெண்ணால் அரசாள முடியும் என நிரூபித்தவர்.

அறுபத்தெட்டு வயதில் மறைவார் என யாரும் எதிபார்த்திருக்க மாட்டார்கள்.      எழுபத்து ஐந்து நாட்கள் போராட்டத்துக்கு பின் , அம்மா  , மறைந்து விட்டார்.

மறைவு  கேட்டு மரித்தவர்கள் பலர்.    அந்தளவு மக்கள் மனதில்  இடம்  பிடித்தவர்.

தனக்கென தனி இடம் பிடித்த அவரின் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது.

எதிர்காலம் என்னாகும்?     என்னவானாலும் ஆகட்டும். !

அம்மாவின் ஆன்ம சாந்திக்காக நாடே பிரார்த்திக்கிறது.

சாமியார் மடங்களில் கோவில்களில் கறுப்புப் பணம் மாற்றம் ??!! மோடி என்ன செய்வார்?

ஆறு சதம் மட்டுமே புழங்கும் கறுப்புப் பணத்தை மீட்கப் போகிறேன் என்று மோடி கொண்டுவந்த செல்லாக் காசு திட்டம் பணால் ஆகிக் கொண்டு இருக்கிறது.

ஏழை பாழைகளை கசக்கி  பிழிந்து கொடுமைப் படுதியதைத் தவிர வேறு எந்த சாதனையையும் இந்த திட்டம் சாதிக்கவில்லை.

ஏற்கேனவே ஜன்தன் திட்டத்தில் சேர்ந்தவர்களின் கணக்குகளில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் சேமிப்பு சேர்ந்திருக்கிறது.     இது எல்லாம் கருப்பு  பணம் என்றால் எப்படி அதை நிருபிக்க முடியும்?

பலவகைகளிலும் கருப்பு பணம் நல்ல பணமாக பதுக்க பட்டு விட்டது.

அதில் முக்கியமாக கோவில், மடங்கள் கருப்பு பணம் பதுக்க பாதுகாப்பான இடங்களாக மாறி வருகின்றன.

ஐம்பது சதம் கமிஷன் கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

பிரபல சாமியார்கள் முப்பந்தைந்து சதம் கமிஷனுக்கு மாற்றிக் கொடுக்கிறார்கள்.

திருப்பதி, திருச்செந்தூர் , பழனி, கேரளாவின் புகழ் பெற்ற பத்மநாப  சாமி கோவில் போன்றவற்றில் பல கோடி ரூபாய்கள் உண்டியலில் அதிக வருவாய் கிடைத்துள்ளன.   அதுவாவது கள்ளப்பணம் கோவில் காரியத்துக்கு போகட்டுமே என்று போடப் படுவதை ஏற்றுக்கொள்ளலாம்.   ஏனென்றால் எந்த தனி நபரும் ஆதாயம் அடையப் போவதில்லையே?

ஆனால் ஆன்மிக மையங்கள் கருப்பு பணம் மாற்றும் மையங்களாக மாறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?

பா ஜ க அரசு இந்து ஆதரவு அரசு என்பதால் கண்டு கொள்ளாமல் இருக்கிறதா?