Home Blog Page 97

ஜெய் ஸ்ரீராம் கோஷம் பிரதமர் மோடி எழுப்பியது சரியா?

ராம்லீலா  கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதர் மோடி புதிய சர்ச்சையை கிளப்பினார்.

எப்போதும் டெல்லியில் கலந்துகொள்ளும் பிரதமர் அடுத்த ஆண்டு உ பி யில் வர இருக்கும் தேர்தலை மனதில் கொண்டு இந்த ஆண்டு லக்னோவில் கலந்து கொண்டார்.

”   ஜெய் ஸ்ரீராம் கோஷம் எல்லா வீடுகளுக்கும் சென்று அடைய வேண்டும். வீடு வீடாக செல்லுங்கள் ‘ என்றும் பிரச்சாரம் செய்தார்.

பிரதமர் ஒருவர் தன் இஷ்ட தெய்வத்தை வணங்க கூடாதா?     வணங்குவது வேறு? அதையே பிரச்சாரமாக செய்வது வேறு!

இதுவரை எந்த பிரதமரும் இம்மாதிரி மத கோஷங்கள் எழுப்பியதாக தெரியவில்லை.

உச்சநீதிமன்றத்தில் காவேரி ஆணையம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு சொல்ல அடுத்த ஆண்டு வர இருக்கும் கர்நாடக  பொது தேர்தல் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இப்படி அரசியலுக்கு மதத்தை பயன்படுத்துவதா என்ற கேள்வியை எழுப்பி கலைஞரும் ஒரூ அறிக்கையை வெளியிட்டார்.

உடனே கலைஞர் இந்து விழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்தது உண்டா  முஸ்லிம் கிறித்துவ விழாக்களுக்கு மட்டுமே வாழ்த்து சொல்கிறார் என்ற கண்டனமும் எழுந்தது.

உண்மைதான்   கலைஞர் நாத்திக இந்து. தன்மான இந்து.  சக பிராமணீய ஆதிக்கத்தில் அமிழ்ந்து கிடக்கிற இந்துக்களை அவர் எப்படி வாழ்த்த முடியும்?

சன்னி முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தை மட்டுமே இறுதி தூதராக ஏற்கிறார்கள்.     ஷியா முஸ்லிம்கள் நாயகம் அவர்களின் பேரன் இமாம் உசைன் அலியின் தியாகத்தை போற்றி முகரம் கொண்டாடுகிறார்கள்.     எனக்கு தெரிந்து முகரம் வாழ்த்து சொல்லும் சன்னி முஸ்லிம் இல்லை. ஏனெனில் அவர்களுக்குள் கொள்கை முரண்பாடு இருக்கிறது.

அதைப் போல்தான் இந்துக்களுக்குள் பார்ப்பனீய கொள்கைகளை ஏற்றுகொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்று இரண்டு வகை இருக்கிறார்கள்.   அதில் கலைஞர் போன்ற திமுக தொண்டர்கள் தன்மான நாத்திக இந்துக்கள்.

இவர்களுக்கு  எந்த சம்பிரதாயமும் இறுதி இல்லை. எந்த சடங்கு களும்   தேவையும்   இல்லை.     ஒன்றே குலம் ஒருவனே   தேவன் என்று  வாழ்பவர்கள்.

ஆனால் கிறிஸ்தவ முஸ்லிம்கள் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு வாழ்த்து சொல்வதில் எந்த மன மாச்சரியமும் இருக்காது.

இந்து என்றால்  திருடன் என்றார் என்றும் விமர்சிக்கிறார்கள்.  ஆமாம்.    பாரசீகத்தில் இந்து என்றால்  திருடன் என்று  ஒரு பொருள் இருக்கலாம்.   ஆனால் கலைஞர் சொன்ன பொருள் பிற்பட்ட தாழ்த்தப் பட்ட மக்களின் நலத்தை படிப்பை வளத்தை சுரண்டிய திருடர்கள் என்று தங்களை அழுத்தி வைத்திருந்த ஆதிக்க சக்திகளை அப்படி சொல்லி இருக்கலாம்.

எப்படி பார்த்தாலும் கலைஞர் சுட்டிக் காட்டியபடி பிரதமர் மோடி அவர்கள் அரசியலில் மதத்தை கலக்காமல்   . பார்த்துக் கொள்ள கடமைப் பட்டவர்.

 

புராண காலத்து சரஸ்வதி நதியை தேடும் பா ஜ க மத்திய அரசு??!!           

வேதங்கள்  மற்றும் மகாபாரதம் உள்ளிட்ட புராணங்கள் சரஸ்வதி நதி சட்லெஜ் நதிக்கு மேற்கில் பாய்ந்த தாகவும் காலபோக்கில் பாலைவனத்தில் வறண்டு விட்டதாகவும் மதவாதிகள் கூறி வருகின்றனர்.

அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் கண்ணுக்கு புலப்படாத வகையில் சரஸ்வதி நதி வந்து கலக்கிறது என்றும்  சொல்லி வருகிறார்கள்.

அதை நிரூபிக்க வேண்டி பாஜக அரசு பல ஆராய்ச்சிகளுக்கு பல கோடிகளை செலவிட்டு வருகிறது.

முன்பு 2002 ம் ஆண்டில் பா ஜ க அரசு மீட்பு திட்டம் ஒன்றை உருவாக்கி பல்வேறு பணிகள் நடந்தன.   காங்கிரஸ் அரசு அதை அறிவியலுக்கு முரணானது என்று கைவிட்டது குறிப்பிடத் தக்கது.

இப்போது மீண்டும்  பா ஜ க அரசு பேராசிரியர் வால்டியா  தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்து ஆறு மாத ஆய்வு அடிப்படையில் ஒரு அறிக்கையை பெற்று ‘   ஆமாம் சரஸ்வதி நதி இருந்தது உண்மைதான் . 4000   கி மீ நீளம் உள்ள அந்த நதி இப்போதைய பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதியும் இந்தியாவில் மூன்றில் இரண்டு பகுதியும் இருந்தது. அவை 5500  ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் ‘  என்று கூறத் தொடங்கி வுள்ளது.

உமாபாரதி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்கிறார்.

இதன் மூலம் பா ஜ க அரசு என்ன சொல்ல விரும்புகிறது.?

புராணங்களில் சொல்லப் பட்டவை எல்லாம் கற்பனையல்ல . உண்மைதான் . எனவே புராணங்களில் சொல்லப்பட்ட இதர விபரங்களும் உண்மைதான் என்று மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறது.

இந்த முயற்சிகளுக்கு மத சார்பற்ற அரசின் பொருள் விரயம் செய்யப் படுவது தேவையா என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்த பழந் தமிழகம் கடல் கொண்ட தாக வரலாறு சொல்கிறது.     இலங்கையும் இந்தியாவும் ஒருகாலத்தில் ஒன்றாக இருந்தது என்றும் சொல்கிறார்கள்.   அதைப் பற்றி ஆய்வு செய்ய எந்த அரசும் எந்த முயற்சியும் செய்ததாக தெரியவில்லை.

சேது சமுத்திர திட்டத்தை முறியடிக்க இல்லாத ராமர் பாலம் பயன்  படுத்தப் பட்டது.     வேறு பாதையில் அமுல் படுத்துவோம் என்ற உறுதி மொழியும் எப்போது அமுல் படுத்தப் படும் என்று தெரியவில்லை.

வேதங்களை படிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் .  நாங்கள் சொல்லும் விளக்கங்களை மட்டும் நீங்கள் நம்ப வேண்டும் என்பதுதனே  வேதங்கள் பொறுத்து பார்ப்பனர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

அவர்களின் ஆதிக்கம் நிலைக்க சான்றுகளை தேடும் முயற்சிக்கு அரசு செலவழிக்க வேண்டுமா??  சட்டம் இடம் கொடுக்கிறதா???

நீதிமன்றங்கள் தான் தீர்வைத் தர வேண்டும்.

ஹாஜி அலி தர்காவில் பெண்கள் மீண்டும் அனுமதி !! உச்சநீதி நீதி மன்றத்தில் தகவல்.

மும்பையில் ஹாஜி அலி தர்கா மிகவும் பிரபலம்.   அங்கே 2012 லிருந்து பெண்கள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டது தர்கா நிர்வாகம்..

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மும்பை  உயர்நீதிமன்றம் இந்த தடையை விலக்கி உத்தரவிட்டது.  அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை இந்த தடை பறிக்கிறது என்பது உயர்நீதிமன்ற தீர்ப்பு.    பெண்கள் உரிமை மீட்புக்கான வெற்றியாக இது பார்க்கப்பட்டது.

இதை எதிர்த்து தர்கா டிரச்டு உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்தது.    அப்போது இரண்டு வார காலத்துக்கு மட்டும் தடை விதித்த நீதிபதிகள் தங்கள் கருத்துகளை வெளியிட்டனர்.

யாரையும் அனுமதிப்பதில்லை என்பது வேறு.    ஆண்களை மட்டும் அனுமதிப்போம். பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்பது வேறு. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுக்கும் இந்து கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கையோடு ஒப்பிட்ட    நீதிபதிகள் இதுபற்றி விசாலமாக சிந்தித்து நல்ல முடிவை தெரிவிக்க அவகாசம் தந்தனர்.

முற்போக்கு சிந்தனை ஆன்மிக வாதிகளிடம் அதிகரிக்க வேண்டும் என்பதைத்தான் இந்த சம்பவம் சுட்டிகாட்டுகிறது.

அதைவிட கொடுமை என்னவென்றால் ஒரு ஆண் துறவியின் கல்லறைக்குப் பக்கத்தில் பெண்கள் செல்வது இஸ்லாத்தில் பாவம் என்ற ட்ரஸ்ட்டின் நிலைப்பாடுதான்.

முதலில் இஸ்லாம் தர்கா வழிபாட்டை அனுமதிக்கிறதா??!!

நம்பிக்கை உள்ள இந்துக்களும்தான் வழிபாட்டுக்கு வருகிறார்கள்.   அவர்களையும் தடுப்பீர்களா ?

பெண்கள் வழிபடத்தானே வருகிறார்கள்.   அவர்களை தடுப்பது நியாயமில்லை. வழிபட வரும் பெண்களுக்கு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருவதுதான் தர்கா நிர்வாகத்தின் கடமை.

இப்போது தர்கா நிர்வாகம் பெண்களுக்கு அனுமதி அளிக்க என்ன விதிமுறைகளை வகுக்கலாம் என்று திட்டமிட்டு வருவதாக தர்கா வக்கீல் கோபால் சுப்ரமணியன் உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்தார்.

எனவே தர்காவில் பெண்கள் அனுமதி மீண்டும் தரப்படும என்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

அறிவு அரியணை ஏறட்டும்.

ஜெயலலிதா உடல்நிலை பற்றி பொய்ச்செய்தி வெளியிடுகிறதா தினத்தந்தி ??!!

லட்சக்கணக்கான    அதிமுக  தொண்டர்கள் நிர்வாகிகள்   கோவில் கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டு பலவிதமான பிரார்த்தனைகளை மேற்கொண்டு தங்கள் தலைவியின் உடல்நிலை சீராக வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே வதந்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.      அதை தடுக்க முயலாத அரசு ஒரு தனி படையே உருவாக்கி வதந்தி பரப்புவோர் மீது வழக்குகளை போட்டு வருகிறது.

அப்போலோ மருத்துவமனை ஒரு  வாரமாக  அறிக்கை  ஏதும் வெளியிட்டதாக தெரியவில்லை.

நக்கீரன் மட்டும் அவர் ஏதோ செயற்கை சுவாசத்தில் இருப்பதாகவும் உணவு கூட திரவ ரூபத்தில் தொண்டைகுழாய் மூலம் செலுத்தப் படுவதாகவும் எழுதுகிறது.

அவரை சந்திக்கும் யாரும் நேரில் பார்க்க வில்லை.     தொற்று நோய் பரவக் கூடும் என்ற அச்சத்தில் எவரையும் நிர்வாகம் பார்க்க அனுமதிக்க வில்லை என தெரிகிறது.

ஒன்றை மட்டும் புரிஞ்சு கொள்ள முடிகிறது.     மருத்துவ மனை நிர்வாகம் லண்டன் சிங்கப்பூர்  ஏய்ம்ஸ் மருத்துவமனை என்று பல இடங்களில் இருந்தும்  புகழ் பெற்ற நிபுணர்களை வரவழைத்து அவரது சிகிச்சையை அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறது , போராடுகிறது.

ஆனால் தினத்தந்தியில் மட்டும் செயலலிதா மருத்துவர்களிடம் தண்ணீர் கேட்டு வாங்கி குடித்த தாகவும் சிறப்பான சிகிச்சை அளித்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டதாகவும் அவருக்கு திட  உணவாக வேக வைக்கப் பட்ட  ஆப்பிள் துண்டுகள் சாப்பிட கொடுக்கப் பட்டதாகவும் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அது உண்மையானால் தமிழகமே நிம்மதிப் பெருமூச்சு விடும்.      நிச்சயம் நல்லபடியாக மீண்டு எழுவார் என்று தொண்டர்களும்  தங்கள் பணிகளை தொடர்வார்கள்.

இடையே மூன்று தொண்டர்கள்  தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட கொடுமையும் நிகழ்ந்தது.

வதந்தி வழக்குகள் வரக்கூடாது.    தொண்டர்கள் தற்கொலை கூடாது. உண்மைச் செய்தி வரவேண்டும்.

தினத்தந்தி செய்தி உண்மையா பொய்யா என்பதை  ஏன் மருத்துவ மனை நிர்வாகம் தெளிவு படுத்தக் கூடாது?

மருத்துவ மனை நிர்வாகம் தெளிவு  படுத்தாத வரை தினத்தந்தி செய்தி உண்மையா பொய்யா என்ற கேள்வியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

 

ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் வக்கீல்களை நிரந்தர நீக்கம் செய்வது பிரச்னையை தீர்க்குமா வளர்க்குமா??!!

நீதிமன்ற விசாரணை அறை முன்பு  கோஷம் எழுப்பிய வழக்கில் அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவின்  தீர்ப்பு ஒரு  வக்கீலை மூன்று ஆண்டுகளுக்கு தொழில் செய்ய விடாமலும் இரண்டு வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய முடியாமலும் செய்திருக்கிறது.

இப்போது இந்த நடவடிக்கையை எதிர்த்து வக்கீல்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.    The remedy is worse than than disease.

இப்போது ஒழுங்கு  நடவடிக்கை குழு அளித்திருக்கும் தண்டனை இந்த வகையை சேர்ந்ததுதான்.

இப்போதுதான் வக்கீல்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை  எடுக்க துவங்கி இருக்கிறார்கள்.

இப்போதே இவ்வளவு கடுமை காட்ட வேண்டுமா?

நீண்ட நாட்களாக தூங்கி வழிந்த பார் கவுன்சில் இப்போது திடீரென்று  விழித்துக் கொண்டு மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டுமா?

முதலில் ஒரு ஆண்டு   இரண்டாவது குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் மூன்றாவது முறையும் குற்றம்  இழைத்தால் மூன்று ஆண்டுகள் நான்காவது முறை என்றால் நிரந்தர தடை என்று ஏதாவது ஒரு முறையில்  தண்டணை பற்றிய தெளிந்த வழிமுறை இருக்க வேண்டும்.

வழக்கறிஞர்கள் சமுதாயத்தின் பிரச்னைகளை தீர்க்க உதவுபவர்கள்.     முதலில் அவர்களின் பிரச்னையை அவர்களே    தீர்த்துக் கொள்ளட்டும்.

காவிரிப் பிரச்னையில் முகமிழந்த மோடி??!!

உச்சநீதி மன்றத்தில்   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில்  மோடி அரசு அடித்த அந்தர் பல்டி அவரது உண்மை முகத்தை உலகுக்கு காட்டி விட்டது.

மோடி ஏதோ புனிதர் என்ற மாயை உடைந்து விட்டது.      சாதாரண அரசியல்வாதிதான் அவர் என்ற நிதர்சனம் வெளிப்பட்டது.

மூன்று நாள் முன்பு உச்சநீதிமன்றத்தில் ஆணையம் அமைக்க ஒப்புக்கொண்டு நான்காம் நாள்  அந்த அதிகாரம் பாராளுமன்றத்து க்குத்தான் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றத்துக்கு அல்ல  என்றும்  வாதிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோகட்கி.

ஏன் ஒப்புக்கொண்டு  இப்போது மறுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு தவறு நிகழ்ந்துவிட்டது என்றார்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கர்நாடக பொது தேர்தலில் காங்கிரசுக்கும் பா ஜ கவுக்கும் தான் போட்டி.

காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கும் எந்த தீர்வை யார் கொடுத்தாலும்  அங்கே வெல்ல முடியாது என்ற அளவில் அந்த மக்களின்  மன நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா நதி நீர் பிரச்னைகளில் அந்தந்த மாநில முதல்வர்கள் சுமுகமாக பேசியே தீர்வு கண்டு  அதை இறுதிதீர்ப்பாக நீதிமன்ற மூலம்  தீர்ப்பாக பெற்றிருக்கிறார்கள்.

இன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பின் மீது மூன்று  மாநிலங்களும் செய்திருக்கும் மேன்முறையீட்டை  விசாரிக்கத்  தக்கதா என்று விசாரிக்கிறது.

அதன்  பின்தான் இறுதி தீர்ப்பை எப்படி அமுல் படுத்துவது என்று உத்தரவிடும்.

இதுவரை உச்சநீதி மன்றம் கொடுத்த எந்த உத்தரவையும் கர்நாடக முழுமையாக நிறைவேற்றியதில்லை.

அதற்கே உச்ச நீதி மன்றம் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

தீர்வை  நோக்கி நகரும் என்று நம்பப் பட்ட தீர்ப்பு இன்னும் தொங்கலில் நிற்கிறது.

உச்ச நீதி மன்றம் மட்டுமே இப்போது ஒரே நம்பிக்கை தரும் அமைப்பாக தமிழர்களுக்கு தெரிகிறது.

தன் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் பா ஜ க வும் தமிழ் நாட்டை  மறந்து விட வேண்டியதுதான்.

மாநில கட்சிகள் போதும் தேசிய கட்சிகள் வேண்டாம் என்ற முடிவுக்கு தமிழர்கள் வந்து வெகு கால மாகிவிட்டது.

அதற்காக தமிழகத்திற்கு துரோகம் செய்வோம் என்று அகில இந்திய கட்சிகள் முடிவு செயவார்களானால் அவர்கள் செயலால் பாதிக்கப் படப் போவது  தேசியம்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

உலகம் சுற்றி வந்து  காஷ்மீரில் பாகிஸ்தானோடு மோதி  நல்ல பெயர் வாங்கப் பார்க்கும் மோடி தமிழ் நாட்டில் பெயர்  கெட்டால் என்ன என்ற முடிவுக்கு வந்து விட்டாரா?

 

மானம் போகிறது , தீக்குளிக்காதே தமிழனே???!!!

ஜெயலலிதா மீண்டு வருவார்.   மீண்டும் வருவார்.    அரியணையில் மீண்டும் அமர்வார்.   மருத்துவர்கள் தரும் அறிக்கை அந்த நம்பிக்கையைத் தான் தருகிறது.

போதாது என்பவர்கள் வசதி உள்ளவர்கள் இல்லாதவர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப பலவிதமான வழிபாடுகளை  செய்து  அவைகளை பத்திரிகைகளில் செய்திகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பாவம் அப்பாவித் தொண்டர்கள்தான் தங்கள் தலைவியின் நிலைமையைப் பொறுத்துக்  கொள்ள முடியாமல் தங்களையே மாய்த்துக் கொண்டிருகிறார்கள்.

முன்பே பல சமயங்களில் ஜெயலலிதா சிறை சென்ற போதெல்லாம் தங்களை மாய்த்துக் கொண்ட குடும்பங்கள் படும் பாட்டை யார் ஆவணப் படுத்தி இருக்கிறார்கள். ?

ஜெயலலிதா சிறையிலிருந்து மீண்டு மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்.     உயிர்  கொடுத்த தொண்டர்களின் குடும்பங்கள் மூன்று லட்சம் நிவாரணத் தொகையை வாங்கி கொண்டு தற்காலிக உதவியுடன் நெடிய துன்பத்துக்கு ஆளாகி நின்றார்கள்.

குடும்பத் தலைவனின் இழப்பை எந்த நிவாரணம்தான் ஈடு செய்ய முடியும்?

பாசமும் ஈடுபாடும் தலைவர்கள் மீது வைப்பது தவறல்ல.

நேற்று தீக்குளித்து இறந்த அ தி மு க தொண்டர் சற்குணம் வயது 31. மனைவியும் மகளும் இருக்கிறார்கள்.    எந்த நிவாரணம் அந்த தாயின் துயரத்தை மகளின் பரிதவிப்பை ஈடு செய்ய முடியும்.   ?    மோட்டார் சைக்கிளில் வந்து நடு ரோட்டில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக்  கொண்டு முதல் அமைச்சர் குணமடைய வேண்டும் என்று கத்திக்கொண்டே உயிர் இழந்திருக்கிறார்.

மதுரை உத்தபுரம் ராஜவேல் அதிமுக தொண்டர் 21  வயது. மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீவைத்து இறந்திருக்கிறார்.    அவர் குடும்பம் எந்த இழப்பீடால் நிவாரணம் அடையும்.?

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் போது உயிர் துறந்த 21  த மிழர்களின்

தியாகம் கையறு நிலையில் நிகழ்ந்தது.    அதுவே தவறுதான்.

திலீபன் நீர் கூட அருந்தாமல் உயிர்த்தியாகம் செய்தது ஒருவகை போராட்டம்.

இப்போது மிகச் சிறந்த மருத்துவர்கள் தீவிரமாக உழைத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

தொண்டர்களின் பிரார்த்தனைகள் வீண் போகாது.

எனவே நம்பிக்கையுடன் காத்திருப்பதே தொண்டர்கள் என்பதை தாண்டி தமிழர்கள் என்ற வகையில் நம் கடமை என்பதை அதிமுக தொண்டர்கள் நினைவில் கொன்வது.

ஆங்காங்கே உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களை கட்டுப் படுத்தும் கடமை இருக்கிறது.

எந்த நிலையிலும் போராட வேண்டும்.   பிரார்த்திக்க வேண்டும்.   நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும்.   அவர்களின் புகழுக்கு மாசு ஏற்படா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.

அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.     தங்கள் குடும்பம் என்ன பாடு படும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

தமிழர் மானத்தை காக்க வேண்டும் என்ற உணர்வும் வேண்டும்.

இறைவன்  எல்லாருக்கும்  நற்சிந்தனையை  நல்குவானாக???!!

மூன்று மாணவிகளை பலி வாங்கிய தண்ணீர் லாரி ?!!

சென்னை கிண்டியில் ஒரு குடிநீர் லாரி கட்டுபாட்டை இழந்து ரோட்டில் சென்று கொண்டிருந்த மூன்று மாணவிகளை பலி வாங்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு

உள்ளாக்கியிருக்கிறது.

சென்னை குடிநீர் வாரியம் ஒப்பந்த குடிநீர் லாரிகள் மூலமாக தினமும் 4000 -5000  நடைகள் இயக்கி 83 கோடி லிட்டர் குடிநீர் சென்னை மக்களுக்கு வழங்கி வருகிறது.

இவைகள் பெரும்பாலும் பகலிலேயே இயக்கப் படுகின்றன.

நிபந்தனைகள் பல விதிக்கப்  பட்டாலும் அவைகள் அனுசரிக்கப் படுகின்றனவா என்பது ஆய்வுக் குரியது.

நாற்பது கி மீ வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்ற விதிமுறை பெரும்பாலும் கடைப்பிடிக்கப்  படுவதில்லை.

அந்தப் பெண்களின் குடும்பத்தினர் கண்ட கனவுகள் சிதைக்கப் பட்டிருக்கின்றன.

எல்லா வாகன விபத்துக்களையும் போல இதையும் ஒன்றாக பாவிக்காமல் சிறப்பு கவனம் எடுத்து பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன் இனியாவது தண்ணீர் லாரிகளின் இயக்கத்தை கடுமையான கண்காணிப்பிற்கு ஆட்படுத்துவது அரசின் கடமை.

தாய்லாந்து மன்னர் பூமிபால் சொர்க்கம் சென்றார்- பிரதமர் அறிவிப்பு !!

மன்னராட்சிகள் மறைந்தாலும் இன்னும் சில நாடுகளில் மன்னராட்சி பெயரளவுக்கு தொடர்கிறது.  அதில்  முக்கியமான நாடு தாய்லாந்து.

70 ஆண்டுகள் நாட்டை ஒன்று படுத்திய சக்தியாக மன்னர் ஒருவர் திகழ்ந்தார் என்பதே அரிதான விடயம்.

மக்களாட்சியும் மன்னராட்சியும் எப்படி  இணைந்து செயல்  பட முடியும் என்பதற்கு தாய்லாந்து சாட்சி.

மன்னர் ஒன்பதாம் ராமர் என்பது அவர் அறியப் பட்ட அடையாளம்.

இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் உள்ள வரலாற்று பிணைப்பு மேலும் வலுவடையும் .

பிரதமர் கான் அறிக்கையில் இப்போது மன்னர் சொர்க்கத்தில் இருக்கிறார்.   அவர் அங்கிருந்தவாறு தாய்லாந்து மக்களை பார்த்துக்கொள்வார் என்று அறிவித்திருப்பதில் இருந்தே அவர்  மீது  மக்கள் வைத்திருக்கும் அன்பைப்  புரிந்து  கொள்ளலாம்.

ஆள்வோர் மீது மக்கள் காட்டும் அன்பு இயற்கையானது என்பதை எப்படி உணர்வது? அவர்கள் மறையும்போது மக்கள் காட்டும் இதயமார்ந்த அஞ்சலியே அதற்கு சாட்சி.

மக்கள்  ஆதரவு இருப்பதால்தான் அவரது  மகன் மகா வஜ்ர லோங்கோன் புதிய மன்னராக பதவியேற்கிறார்.

மக்கள் நல கூட்டணியில் இருந்து கம்யுனிஸ்டுகள் விலகலா?

காவிரிப் பிரச்னை தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் காங்கிரசு விவசாய சங்கங்களுடன்  வலது இடது  கம்யுனிஸ்டுகளும்  கலந்து கொண்டிருப்பது மக்கள் ந கூட்டணியில் இருந்து கம்யுனிஸ்டுகள் விலகி விட்டார்களா என்ற கேள்வியைஎழுப்பி இருக்கிறது.

மார்க்சிஸ்ட்  சார்பில் சண்முகமும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் துரைமாணிக்கம் மற்றும் குணசேகரன் கலந்து கொண்டிருக்கிறார்கள். பொது பிரச்சினையில் ஒற்றுமையை காட்டிக் கொள்வது நல்ல விஷயம்தான் .

ஆனால் இதற்கு விடுதலை சிறுத்தைகளும் வைகோவும் ஒப்புதல் கொடுத்தார்களா என்பதுதான் விவாதத்துக்குரியது.

இதற்கெல்லாம் ஒப்புதல் தேவையில்லை என்றால் மற்றவர்களுக்கும் இவர்களின் ஒப்புதல் தேவையில்லை என்றாகிவிடும்.

முதலில் வாசனும் பின்பு விஜயகாந்தும் கழன்று கொண்டது எதிபார்த்ததுதான் .

ஆனால் நாங்கள் ஒன்று பட்டு உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம் என்றும் ம ந கூ தொடரும் என்றும் அறிவித்தார்கள்.

அதற்குப் பிறகு எந்த பிரச்னை தொடர்பாகவும் பொது நடவடிக்கை எடுத்தார்களா என்பது தெரியவில்லை.  இப்போது காவிரி பிரச்னைதொடர்பாக தி மு க வே மாநில அரசு அனைத்துக்  கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று கோரி வரும் நிலையில் அவர்கள் கூட்டாததால் திமுக கூட்டிய கூட்டத்தில் வலது இடது கம்யுனிஸ்டுகள் கலந்து கொண்டிருக்கிறார்கள் .

வரவேற்க வேண்டிய மாற்றம் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்னும் தெளிவு படுத்தினால் நல்லதல்லவா?!

வைகோவின் வலையில் இருந்து விடுபட்டால் இனி நல்ல நேரம்தான்.

திருமாவளவன் சிந்திக்கட்டும்.