மதம்

காவிக்கு மாறி விட்டதா அதிமுக? மழை வேண்டி யாகம் சொல்லும் செய்தி என்ன?

Share

முன்பே அறநிலையத்துறை ஆணையர் மழை வேண்டி யாகம் நடத்த உத்தரவிட்ட செய்தி ஆச்சரியத்தை அளித்தாலும் சரி ஏதோ இறைவனை வேண்டி மழை பெற்றால் சரி என்று பொதுமக்கள் அமைதி அடைந்தார்கள்.

மழை வரவில்லை. தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. திமுக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிராக பலத்த அதிருப்தி எழுந்து ஆட்சியாளர்களை பயமுறுத்துகிறது.

இதில் இருந்து தப்பிக்க இபிஎஸ் -ஒபிஎஸ் இருவருக்கும் வேறு வழி தோன்றவில்லை  போல் தெரிகிறது.

எனவேதான் அதிமுக சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப் பட வேண்டும் ஏறு ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்களாம் .

யாகம் நடத்துவதால் யாருக்கு லாபம். அதை நடத்தும் பார்ப்பனர்களுக்குத் தான் லாபம். சும்மாவா நடத்துகிறார்கள். ஏன் நாடு செழிக்க அவர்கள் சம்பாவனை வாங்காமல் வருகிறார்களா? வந்தாலும் வருவார்கள். திராவிட இயக்கத்துக்காரர்கள் யாகத்தை ஏற்றுக்கொண்டு வருவதை வேண்டாம் என்பார்களா?

ஏன் எல்லா மத குருமார்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கக் கூடாது?

வேண்டாம் என்று மேலே சொல்லி இருப்பார்களோ?

சொன்னவுடன் இன்று எல்லா அதிமுக நிர்வாகிகளும் எல்லா கோவில்களிலும் யாக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜெயகுமார் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை  என்று நம்புகிறோம் அதனால் பிரார்த்தனை செய்கிறோம் என்று பேட்டி  கொடுக்கிறார்.

கிரிஜா வைத்தியநாதன் சிரித்துக் கொண்டே எல்லாரையும் கும்பிடு போட வைத்துக் கொண்டிருக்கிறார். நடப்பது அதிகாரிகளின் ஆட்சியே என்று ஜூனியர் விகடன்  எழுதியிருக்கிறது. பதில் சொல்வார்களா?

இதுதான் பெரியார், அண்ணா வழி என்று கூட இனி இவர்கள் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

அதிமுகவின் நிறம் மாறிக் கொண்டிருக்கிறது.

This website uses cookies.