Home மதம் யூதர்கள் குல்லா அணியக் கூடாது என அறிவுறுத்திய ஆணையர்??!!

யூதர்கள் குல்லா அணியக் கூடாது என அறிவுறுத்திய ஆணையர்??!!

யூதர்கள் குல்லா அணியக் கூடாது என அறிவுறுத்திய ஆணையர்??!!
yutharkal

மதம் எப்படி எல்லாம் மனிதர்களை பிரித்து வைக்கிறது என்பதற்கு ஜெர்மனியில் நடக்கும் சம்பவங்கள் சமீபகால உதாரணம்.

ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களை கொன்று ஒழித்தான் என்று படித்திருக்கிறோம். ஆனால் இன்றும் அதேநிலை நீடிக்கிறது என்பது வரலாற்றில் இருந்து ஜெர்மானியர்கள் எதையுமே படிக்கவில்லை என்பதைத்தானே காட்டுகிறது.

சமீப காலமாக யூதர்கள் தாக்கப்படுவது இருபது சதம் அதிகரித்திருக்கிறதாம். அதை தடுப்பதற்கு என்று ஒரு ஆணையர் வேறு நியமிக்கப்படுகிறார்.

அவரே யூதர்கள் ஸ்கல் காப் எனப்படும் குல்லா அணிவதை யூதர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

ஐரோப்பியாவில் இந்த அளவு சகிப்பு தன்மை இல்லை என்பது ஹிட்லர் காலத்திலேயே நிருபிக்கப்பட்டதுதான். காலம் அவர்களை மாற்றவில்லையே .

மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே இறுதி முடிவாக இருக்க வேண்டும்.

கடவுள் நம்பிக்கைக்கும் மதத்துக்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் உணரவேண்டும் அல்லது உணர வைக்கப்பட வேண்டும்.

இல்லாவிடில் இப்படித்தான் மதம் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here