Home மதம் ரபேல் விமானத்துக்கு தேங்காய் உடைத்து எலுமிச்சை வைத்து பூசை செய்த ராணுவ அமைச்சர்?

ரபேல் விமானத்துக்கு தேங்காய் உடைத்து எலுமிச்சை வைத்து பூசை செய்த ராணுவ அமைச்சர்?

ரபேல் விமானத்துக்கு தேங்காய் உடைத்து எலுமிச்சை வைத்து பூசை செய்த ராணுவ அமைச்சர்?
rajnath-singh

பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற நமது ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல் ரபேல் விமானத்தை பெற்றுக்கொண்டார்.

அப்போது விமானத்துக்கு பூசைகள் செய்தார். அதுதான் இப்போது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

விமானத்தில் ஓம் என்று சமஸ்கிரிததில் எழுதுவதும் தேங்காய் உடைத்து எலுமிச்சை  பழங்களை நான்கு சக்கரங்கள் அடியிலும் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை செய்திருக்கிறார்.

இது இந்தியாவின் இந்துக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று நம்பியதால் அவர் அதை செய்திருக்கிறார்.

ஒரு மத சார்பற்ற அரசின் பிரதிநிதியாக தன்னை அவர் பார்க்கவில்லை.

அதை இந்துக்கள் மத்தியில் தன்னை ஆழமாக பதிய வைக்கும் என்று அவர் நம்பியதால் தான் அவர் இதை செய்திருக்கிறார்.

அரசு அலுவலகங்களில் மத சடங்குகள் கூடாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு  சொல்லி இருக்கின்றன. அது மதிக்கப்பட வேண்டாமா? அரசே சட்டத்தை மீறலாமா?

ராஜ்நாத் ஏன் தன் வீட்டில் தன் மத சடங்குகளை செய்கிறார் என்று யாரும் கேட்க வில்லை.

இதற்கு பதில் சொல்லும் வகையில் நிர்மலா சீதாராமன் முன்பு இருந்த வேற்று மத அமைச்சர் இதுபோன்று தன் மத சடங்கை செய்தபோது ஏன் யாரும் விமர்சிக்க வில்லை என்று கேட்டிருக்கிறார்.

ஒருவேளை அவர் ஏ கே அந்தோணியை மனதில் வைத்து கேட்டார் என்று வைத்துக் கொண்டாலும் யார் செய்திருந்தாலும் தவறுதான்.

அதற்காக நாங்களும் அந்த தவறை செய்வோம் என்பது எப்படி சரியாகும்.?

பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளுக்கு தீனி போடுவது மத வெறியை வளர்க்க மட்டும் தான் உதவும். நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு அது கேட்டையே தரும்.

அரசியல் சட்டத்தில் செகுலர் என்று இருப்பதை எடுத்துவிட்டு பின்பு பாஜக அரசு இதுபோன்ற காரியங்களை செய்யட்டும்.

முயன்றால் தெரியும் அதன் விளைவுகள் என்ன வென்று.?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here