Home மதம் தமிழ்நாடு சைத்தானின் ஆதிக்கத்தில்? கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு! வழக்கு பதிவு?

தமிழ்நாடு சைத்தானின் ஆதிக்கத்தில்? கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு! வழக்கு பதிவு?

தமிழ்நாடு சைத்தானின் ஆதிக்கத்தில்? கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு! வழக்கு பதிவு?
mohan-c-lazarus

இருக்கும் மத மோதல்கள் போதாது என்று கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி  லாசரஸ் புதிதாக ஒரு பிரச்னைக்கு வித்திட்டிருகிறார் .

காலூன்ற காத்திருக்கும் பா ஜ க உள்ளிட்ட சங்கப் பரிவாரங்களுக்கு பிரசாரம் செய்ய மக்களை தூண்டி விட்டு கலவரம் விளைவிக்க ஒரு காரணியாக ஒரு கிறிஸ்தவ போதகரின் பேச்சு அமைந்தது வருந்தத் தக்கது.

ஜீசஸ் ரிடீம்ஸ்  என்ற அமைப்பின் தலைவரான அவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?

அவர் பேசுவதை தொலைகாட்சியில் காட்டினார்கள்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான இடங்கள் கோவில்கள் சாத்தானின் ஆதிக்கத்தில் உள்ளன.   நான் கும்பகோணம் போனேன். அதற்கு ஆண்டவர்  அனுக்ரகம் பண்ணினார்.   நான் பார்த்தபோது இரண்டு பேர் இருந்தார்கள். யாகம் செய்தார்கள் .  அதில் பட்டு வேட்டிகள் சேலைகளை போட்டார்கள். அங்கே சாமி சிலைகள் இருந்தாலும் அந்த மனிதர்களைத்தான் கும்பிடுகிறார்கள். ”

இந்த விமர்சனத்தை ஒரு கிறிஸ்தவ போதகர் பேசுவது எதற்காக?. என்ன நோக்கத்திற்காக பேசினார்?  நம்பாதீர்கள் என்பதற்காகவா? அவரை சுற்றி இருப்பவர்கள் நம்பாதவர்கள்தானே?

காத்துக்கொண்டிருக்கும் பாஜக வினர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கம் பேணிப் பாதுகாக்கப் பட வேண்டும். அதற்கு ஊறு விளைவிக்கும் யாராக இருந்தாலும் கண்டிக்கப் படவேண்டும். தண்டிக்கப் பட வேண்டும்.

ஒருவேளை தன் பேச்சுக்கு விளக்கம் கொடுத்து அல்லது வருத்தம் தெரிவித்து பிரச்னையை சுமுகமாக முடிக்க லாசரஸ் தயாராக இருப்பாரா?

அல்லது அரசியல்வாதிகள் போல நான் அப்படி பேசவில்லை என்றோ அல்லது படத்தில் இருப்பது நான்தான் ஆனால் குரல் என்னுடையது அல்ல  என்று வாதிடப் போகிறாரா?

எச் ராஜாக்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்களே?

என்ன செய்யப் போகிறது காவல் துறை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here