Home தமிழக அரசியல் சாயம் வெளுத்த அழகிரி ? 1 லட்சம் 12000 ஆனது!

சாயம் வெளுத்த அழகிரி ? 1 லட்சம் 12000 ஆனது!

சாயம் வெளுத்த அழகிரி ? 1 லட்சம் 12000 ஆனது!

சிலர் பேசியே காணமல் போவார்கள்.
அந்த பட்டியலில் சேர்ந்து கொண்டார் அழகிரி.
ஒரு லட்சம் பேரை கூட்டி அமைதி ஊர்வலம் என்று அறிவித்து
இன்று கூடிய கூட்டம் 12000 என்று சத்தியம் தொலைக்காட்சி
வந்திருந்த வாகனங்கள் மக்கள் ஆகியோரை நேரில் அனுப்பி
ஆய்வு செய்து கணக்கு காட்டியது
பதினோரு மணிக்கு தொடங்கிய ஊர்வலத்தை அழகிரி
நடத்திய விதம் விநோதமானது.

பின்னால் நெருக்கிய தொண்டரை திரும்பி கையை ஓங்கித் தள்ளுகிறார்.
பிறகு ஒரு ஜீப்பில் தன் குடும்ப உறவுகளோடு
ஒரு சில பெயர் தெரிந்த நபர்களோடு
எந்த கட்டுப்பாடும் இன்றி விசில் அடித்துக் கொண்டு வந்தது கூட்டம்
கலைஞருக்கு இப்படியா மௌன அஞ்சலி செலுத்த வேண்டும்.
ஏதோ அறிவிப்பு வெளியிடுவார் என்று
எதிர்பார்த்த நிலையில் – கடைசியில்
இங்கே வந்திருக்கும் ஒன்றரை லட்சம் பேர் மீதும்
நடவடிக்கை எடுப்பார்களா என்று அங்கே சென்று கேளுங்கள் என்றார்.

வந்தவர்கள் திமுக தொண்டர்களா கூட்டி வரப்பட்ட கூலிகளா
என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
எதற்காக இந்த மௌன அஞ்சலி கூட்டம்
யாரை மிரட்ட – மிரட்டியா கட்சிப் பணி செய்ய முடியும்
உண்மையிலேயே கட்சிப்பணி செய்யும் எண்ணம் இருந்தால்
மௌனம் காக்க வேண்டும்.
ஒரு பெயர் தெரிந்த தலைவர் கூட கூட இல்லை
எல்லாரும் எதிர்பார்ப்பது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று
யார் அவர்கள் தெரியுமா திமுக தோற்க வேண்டும் என்று
அனுதினமும் அங்கப் பிரஷ்டம் செய்பவர்கள்
அவ்வளவு அக்கறை? இவர் நுழைய வேண்டும்
குடைச்சல் கொடுக்க வேண்டும்-

ஸ்டாலின் மனஅமைதி இழக்க வேண்டும்
எத்தனையோ சோதனைகளை தாண்டிய திமுக
இதையும் தாண்டும். அழகிரியின் தொண்டாற்றும்
ஆசையை பொறுத்த வரை
மற்றவர்கள் சொல்ல வேண்டும் இவர் சேவை தேவை என்று
அன்று வரை இவர் காத்திருந்தால்
ஒருவேளை அந்த வாய்ப்பு வரலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here