Home தமிழக அரசியல் மருத்துவர் ராமதாசின் நிதானத்தை இழந்த அநாகரிக மிரட்டல் ??!!

மருத்துவர் ராமதாசின் நிதானத்தை இழந்த அநாகரிக மிரட்டல் ??!!

0
மருத்துவர் ராமதாசின் நிதானத்தை இழந்த அநாகரிக மிரட்டல் ??!!
ramadoss

இத்தனை ஆண்டுகள் கட்டிக் காத்து வந்த நற்பெயரை இவ்வளவு விரைவில் மருத்துவர் ராமதாஸ் இழந்திருக்க வேண்டாம் .

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் யாரோ ஒருவர் மரம் வெட்டுவதைப் பற்றி கேட்டிருக்கிறார். தன்னை மரம் வெட்டி என்று பத்திரிகையாளர்கள் எழுதுவதை அவர் அறியாதவர் அல்ல.

இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது போக்குவரத்தை தடுக்க மரங்களை வெட்டி ரோட்டில் போட்டது வரலாற்று சிறப்பு மிக்கது.

அதற்குப் பிராயச் சித்தமாக லட்சக்கணக்கில் மரம் நடும் இயக்கத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பவர் அவர்.

அதிலெல்லாம் அவரை யாரும் குறை சொல்ல முடியாது.

சிலர் அவரை சீண்டுவதற்காகவே கூட வேண்டுமென்றே கேள்விகள்    கேட்டிருக்கலாம்.

நீ நூறு தடவை கேட்பாய் நான் அதையே பதிலாக சொல்ல வேண்டுமா? இனிமேல் மரம் வெட்ட மாட்டோம். கேட்பவனை வெட்ட வேண்டியதுதான். என்று பதில் சொல்வது அவருக்கு அழகா? 

இன்னும் மேலே போய் ஏண்டா நாய் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்.

அவருடைய வயதுக்கும் அனுபவத்துக்கும் இப்படி எல்லாம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுவது என்பது எந்த விதத்திலும் அவர்க்கு பெருமை சேர்க்காது.

எந்தப் பிரச்னை என்றாலும் முதலில் அறிக்கை வெளியிட்டு தனது அக்கறையை வெளிக்காட்டும் மருத்துவர் இப்படி தன்னையே இழந்து விட்டாரே என்ற வருத்தம் தமிழர்களுக்கும் இப்படி அவமானப்படுத்தி விட்டாரே என்ற கோபம் பத்திரிகை யாளர்களுக்கும் இனி நிரந்தரமாக இருக்கும்.

காயப்படுத்தியவர்தான் அதற்கு மருந்தும் போட வேண்டும். அதுதான் அவருக்கு அழகு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here