narendra-modi-palaniswami-panneerselval
கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியை எடப்பாடியும் ஒபிஎஸ்ம் பணிவு காட்டி வரவேற்றனர்.
கறுப்புக் கொடி காட்ட நின்ற மதிமகவினர் வைகோ தலைமையில் திரண்டு முழக்கங்களை எழுப்பினர். மீனவர் பிரச்னை தொடங்கி பெற்றோலிய மண்டலம் அமைப்பது, மீத்தேன், எடுப்பது, இந்தி திணிப்பு என்று பலவகைகளிலும் தமிழர் பண்பாட்டை சிதைப்பதை கொள்கையாக கொண்டு செயல்படும் மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் நரேந்திர மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தை எதிர்த்து பாஜக-வினர் வைகோவை தாக்க முயற்சிக்க காவல்துறை தலையிட்டு மதிமுகவினரை கைது செய்து கொண்டு சென்றது.
எந்த அளவு அதிமுக பாஜகவிற்கு அடிமையாக மாறி விட்டது என்பதை காட்டும் விழாவாக கூட்டம் அமைந்து விட்டது.
தமிழக தலைவர்கள் யாரும் வட இந்திய தலைவர்களை ஜி போட்டு அழைக்க மாட்டார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஒபிஎஸ்சும் போட்டி போட்டுக் கொண்டு பிரதமரை மோடிஜி என்று பாசத்துடன் அழைத்தது தமிழ்க் கலாச்சாரத்துக்கு விடை கொடுக்க அவர்கள் தயாராகி விட்டதையே காட்டியது.
போகிற போக்கை பார்த்தால் மோடி வென்று ஆட்சி அமைத்தால் பாதி அதிமுக பாஜக-வில் கரைந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
திராவிட் இயக்க தோன்றல்களான அதிமுக தொண்டர்கள் சிந்திப்பார்களாக.
மோடி தனது உரையில் இந்தியாவின் முதல் பெண் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர் என்றார். நிர்மலாவுக்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு? இங்கு பிறந்தவர் என்பதை தவிர. ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டு வடக்கில் செட்டில் ஆகி அந்த தொடர்பில் மத்திய அமைச்சரானவர்.
எப்போதாவது தமிழகத்தில் மக்களோடு கலந்து பிரச்னைகளை தெரிந்து கொண்டவரா? கர்நாடக மாநிலத்தில் இருந்து மேலவைக்கு தேர்ந்தெடுக்க பட்டு காவிரிப் பிரச்னையில் அவர்களுக்கு ஆதரவாக பேசியவர் அல்லவா? ராஜாஜியை பற்றி பேசி தான் பிரதிநிதி என்பதையும் மோடி பறைசாற்றிகொண்டார். மீனவர்களுக்கு சாதனங்களை வழங்கியது பற்றி பேசிய மோடி ஏன் இன்னமும் இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை கைது செய்கிறது என்பது பற்றி வாய் திறக்க வில்லை.
நேற்று கூட இரண்டு இலங்கை மீனவர்களை எல்லை தாண்டியதாக இந்திய ரோந்துப் படை கைது செய்து விடுவித்திருகிறது. ஏன் தமிழ் மீனவர்கள் கைது செய்யப் படும்போது தலையிட்டு இதே ரோந்துப் படை தடுக்க வில்லை.?
நெருடலான பல பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் மோடியையும் பாஜக வையும் தமிழர்கள் கண்டு கொள்ளாமல் தான் இருப்பார்கள்.
This website uses cookies.