Home தமிழக அரசியல் தினகரன் – சசிகலா உறவினர்கள் மீது ரெய்டு அரசியல் நடத்த வெட்கப் படாத மோடி அரசு?

தினகரன் – சசிகலா உறவினர்கள் மீது ரெய்டு அரசியல் நடத்த வெட்கப் படாத மோடி அரசு?

தினகரன் – சசிகலா உறவினர்கள் மீது ரெய்டு அரசியல் நடத்த வெட்கப் படாத மோடி அரசு?
ttv dinakaran sasikala

பா ஜ க போட்டது தப்புக் கணக்காகி விட்டது.

சசிகலா சிறையில்.    இரட்டை இலை முடக்கம்.  ஓ பி எஸ் -இ பி எஸ் இணைப்பு.  ஐ டி நடவடிக்கைகளில் சம்பத்தப் பட்ட வர்கள் தலைமையில் அதிமுக பா ஜ க வின் கைத்தடி அமைப்பாக மாறி விடும்.

இந்தக் கணக்கை தினகரன் பொய்யாக்கி விடுவார் என பா ஜ க எதிர்பார்க்க வில்லை.

நீதிமன்றம் தேர்தல் கமிஷன் என்று வழக்குகளை நீட்டித்து   பா ஜ க வின் அரசியல் கனவுகளை   தகர்த்து விட்டார்.

அ தி மு க வில் தினகரன் செல்வாக்கு அதிகரித்து வருவதை யாரும் எதிர்பார்க்கவில்லை. .

1800  அதிகாரிகள்    187    சசிகலா தினகரன் உறவினர்களின் கட்சிக்காரர்களின் வீடுகள் அலுவலகங்கள்   300  பாஸ்ட் டிராக் நிறுவன கார்கள் என இந்தியாவில் இதுவரை வேறு எங்குமே நடந்திராத வகையில் வருமான வரித்துறையின் சோதனைகள் நடந்து வருகின்றன.    பாஸ்ட் டிராக் நிறுவனம் ஓ பி எஸ் ஆதரவாளர் ரெட்சன் அம்பிகாபதிக்கு சொந்தமானதாம்.

இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை .   சாதாரண சோதனை அல்ல என  பா ஜ க   தவிர்த்த எல்லா அரசியல் கட்சிகளும் கருத்து சொல்லி இருக்கின்றன.

எதைப்பற்றியும்  வெட்கப் பட பா ஜ க தயாராக  இல்லை.

கரூர் அன்புநாதன் வீட்டில்    கைப்பற்றிய   புத்தம் புதிய இரண்டாயிரம் நோட்டுகள் முப்பதுகோடி எந்த வங்கியில் இருந்து அனுப்பப் பட்டது என்பது தெரியவில்லை  என்று ரிசர்வ் வங்கி சொன்னதே !!

சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்ற பட்ட கோடிகள் தங்கம் எல்லாம் என்ன வாயிற்று?

முன்னாள்  தலைமை செயலாளர் ராம் மோகன ராவின் வீட்டில் கைப்பற்ற பட்ட கோடிகள் தங்கம் என்ன ஆயிற்று?

அமைச்சர் விஜய பாஸ்கர் ஆர் கே நகர் தேர்தலில்  89  கோடி ரூபாயை இன்றைய முதல்வர் உள்பட அமைச்சர்கள் பலரிடம் கொடுத்து அவர்கள் மீது  வழக்கு பதிய தேர்தல் கமிஷனும் கோர்ட்டும் உத்தரவிட்டும் ஏன் நடவடிக்கை  இல்லை ?

அந்த ரெய்டுகளின் மீது என்ன நடவடிக்கை என்பதை வருமானத்துறை மக்களுக்கு அறிவிக்க வேண்டுமா இல்லையா?

இந்தக் கேள்விகளை எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் கேட்டு விட்டார்கள்.    பதில் சொல்லத்தான்  வருமான வரித்துறை  தயாராக இல்லை.

இரட்டை இலை சின்னம்  உள்பட எல்லாவற்றையும் மோடி பார்த்துக் கொள்வார் என்று வெட்கமில்லாமல் ராஜேந்திர பாலாஜி பேசுகிறார்.

இந்தப் பின்னணியில்தான் சசிகலா உறவினர்கள் மீதான வருமானத் துறை சோதனை நடவடிக்கையை ஆராய வேண்டும்.

சசிகலாவையும் தினகரனையும் அரசியலை விட்டு விரட்ட முடியாது எனத் தெரிந்து கொண்டு மிரட்டல் அரசியலை கையில் எடுத்திருக்கிறது மோடி அரசு என்ற உண்மை எல்லா தரப்பு மக்களையும் சென்று அடைந்து விட்டது.

சோதனையில் என்ன கிடைத்தது என்ன நடவடிக்கை என்பதை மக்களுக்கு வெளிப்படையாக வருமான வரித்துறை தெரிவிக்க வேண்டும்.    சம்பந்தப் பட்டவர்கள் தங்கள் உரிமைகளை நீதிமன்றங்களில் நிலைநாட்டிக்  கொள்ளட்டும்.

1500 கோடி சொத்துக்கள் பற்றி ஆவணங்கள் சிக்கின. தங்கம் கிலோ கணக்கில் சிக்கின. என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. அவை உண்மையா என்பதை அந்த துறைதான் விளக்க வேண்டும்.

தப்பு செய்திருந்தாலுமே அவர்களை தியாகிகள் ஆக்கியே தீருவது என்று பா ஜ க அரசு முடிவு கட்டி விட்டது போல் தெரிகிறது.

ஆட்களுக்கு தகுந்தாற்போல் நீதி மாறும் என்ற நிலை இருப்பது மிகவும் ஆபத்தானது.

ஆளும் கட்சியின் கைப்பாவையாக வருமான வரித்துரையும் இதர நிறுவனங்களும் இயங்குகின்றன என்ற இழிநிலை என்று மாறும்?

பா ஜ க வின் மீதான ஆத்திரம் மக்களுக்கு அதிகரிக்கும் என்பது வேறு.

பொதுவாகவே மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு,

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் அடைந்திருக்கும் எரிச்சல்

ஜி எஸ் டி நடவடிக்கையால் உருவான பொருளாதார வீழ்ச்சி, சாமானியர்களின் இழப்புகள் ,               இவைகளுடன் சேர்ந்து அரசியலிலும் பா ஜ க மேல்தட்டு வர்க்கத்தின் பிரதிநிதி ,

நான்காம் தர அரசியல் செய்யும் மலிவான அரசியல் கட்சி

என்ற பெயரையும் சம்பாதிப்பது மட்டும்தான்

இந்த ரெய்டு அரசியலில் பா ஜ க வுக்கு மிச்சமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here