Home தமிழக அரசியல் கரை வேட்டிகளால் அரசியலில் கறை படிந்து விட்டதாம்? பாஜக சொன்னதை வழி மொழியும் கமல்ஹாசன்!

கரை வேட்டிகளால் அரசியலில் கறை படிந்து விட்டதாம்? பாஜக சொன்னதை வழி மொழியும் கமல்ஹாசன்!

கரை வேட்டிகளால் அரசியலில் கறை படிந்து விட்டதாம்? பாஜக சொன்னதை வழி மொழியும் கமல்ஹாசன்!
kamal

திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை ஒழிக்க ஐம்பதாண்டுகளாக சனாதன சக்திகள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன.

அதன் ஊது குழலாக கமல்ஹாசன் அவ்வப்போது ஏதாவது உளறிக் கொண்டுதான் இருக்கிறார்.

கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முயன்று தோற்றுப் போய் ஏதாவது ஒரு கழக புல்லுருவியை பற்றிக் கொண்டு கரை என்று தவித்துக் கொண்டிருக்கும் பாஜகவின் கோஷத்தை கமல் ஹாசன் எடுத்துக் கொண்டு கரை வேட்டிகளால் தமிழக அரசியல் கறை படிந்துவிட்டதாக லயோலா கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.

திமுக அதிமுக மட்டுமல்ல தேமுதிக, பாமக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சி பிரமுகர்களும் தங்கள்  கட்சிகளின் கரை வேட்டியைத்தான் கட்டுகிறார்கள்.

இதில் யாரை குறிப்பிட்டு பேசுகிறார் கமல். ?

சொல்வதும் புரியவில்லை. எதிலும் உறுதியும் இல்லை. எதிலும் பட்டும்படாமலும் பேசி வரும் கமலை தமிழக மக்கள் கண்டு கொள்ளாவிட்டாலும் பத்திரிகைகள் அவர் பேச்சை பெரிது படுத்துவதால் கருத்து சொல்ல வேண்டியிருக்கிறது.

மொழி ஒரு தொடர்பியல் கருவிதானாம். எனவே அதை வைத்து அரசியல் செய்ய கூடாதாம். இதைவிட ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத் தனம இருக்க முடியுமா?

தொடர்புக்குத்தான் மொழி. அதை மற்றவன் மீது திணிக்கும் போது கமல் வாய்  திறப்பதில்லையே?

தமிழுக்காக போராடாதே. அது ஒரு தொடர்பு மொழிதான் என்கிறாரா?

கமலைப் போன்றவர்கள் அரசியலுக்கு வந்ததால்தான் அரசியலில் கறை படிந்து விட்டது. கறைகளை துடைத்தெறிவோம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here