Home தமிழக அரசியல் கமலின் சங்கர மட பாசம்??!!

கமலின் சங்கர மட பாசம்??!!

கமலின் சங்கர மட பாசம்??!!
kamal-vijayndrasaraswati-sankara-madam

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு விஜயேந்திரர் ஏன் எழுந்து நிற்கவில்லை என்று தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்திருக்கிறது .

ஒரு பார்ப்பனர் கூட விஜயேந்திரர் செய்தது சரியில்லை  என்று சொல்லவில்லை.   .   அந்த பட்டியலில் கமலஹாசனும் சேர்ந்துகொண்டார்.

நிருபர்கள் கேட்கிறார்கள் சங்கராச்சாரி செய்தது சரியா என்று.   சரி அல்லது  தவறு என்று  சொல்லவேண்டும்.

கமல் சொல்கிறார்.   ‘ கண்ட இடத்தில்  பாடுவது தவறு.   ‘   நூல் வெளியீட்டு விழா கண்ட இடமா?    பின்னர் சினிமா தியேட்டர் என்றும் சொல்கிறார்.     விழாவும் தியேட்டரும் ஒன்றா?

ஏன் தியானத்தில்  இருந்தார் என்ற கேள்விக்கும் பதில் சொல்கிறார்.

‘ தியானம் செய்வது அவர் கடமை.   எழுந்து நிற்பது  என் கடமை.”

அப்படியென்றால் விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தவறில்லை என்பதுதானே கமலின் வாதம்.    அவர் கடமை தியானம்  என்றால் எழுந்து நிற்பது தவறில்லை என்பதுதானே அர்த்தம்.

உண்மையில் கடவுள் வாழ்த்து ஒன்று பாடப் பட்டு அதில் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்றால் கூட அது பிரச்னை ஆகி இருக்குமா என்பது  கேள்விக்குறி.

சமஸ்க்ரிதத்தில்  கடவுள் வாழ்த்து பாடல் ஒன்று  பாடி  உட்கார்ந்து கொண்டு விட்டு போயேன்?    யார் கேட்கிறார்கள்.?

தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது 1970  முதல் அரசாணை மூலம் கட்டாயம் ஆக்கப்பட்டது உங்களுக்கு ஏற்புடையது இல்லை என்று நினைத்தால் நீதிமன்றம் மூலம் அதை நீக்க முயற்சித்து இருக்க வேண்டும்.    ஆணை இருக்கும்போது அதை மதிப்பது தான் குடிமக்களின் கடமை.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப் படுத்த வேண்டும் என்று கிளம்பினால் எதிர்ப்பை சந்தித்து தான் ஆக வேண்டும்.

பார்ப்பானர் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது தெளிவு.

இந்த தெளிவு மற்றவர்களுக்கு இல்லை என்பது துயரம்.

வைரமுத்து சொன்னது போல் ரஜினியும் கமலும் இரு கண்கள் என்றார்.    கண்கள் பேசுவதில்லை என்றும் சொன்னார்.

தவறு. தேவைப்  படும்போது , இனம் என்று வரும்போது விட்டுக் கொடுக்காமல் பேசும் என்று நிரூபித்திருக்கிறார் கமல்.

அடையாளம் காட்டிக் கொண்டவரை நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here