Connect with us

சீமானை கைது செய்ய முடியுமா? கே எஸ் அழகிரியின் கோரிக்கையில் வலு இல்லை?

seeman

தமிழக அரசியல்

சீமானை கைது செய்ய முடியுமா? கே எஸ் அழகிரியின் கோரிக்கையில் வலு இல்லை?

நெல்லை  கண்ணன் கைதை கண்டிக்க வந்த மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஏன் சீமானை கைது செய்யவில்லை என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

வன்மத்தை தவிர இந்த கேள்வியில் எந்த பொருளும் இல்லை.

ராஜீவ் காந்தி கொலையில் விசாரணை முடிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் புதிதாக குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்க என்ன முகாந்திரம் இருக்கிறது?

சீமான் நாங்கள்தான் ராஜீவ் காந்தியை கொன்று புதைத்தோம் என்று பேசினாரா என்பது ஒரு புறம் இருக்கட்டும். அப்படியே பேசியிருந்தாலும் அவரை ராஜீவ் கொலை குற்றவாளி என்று கைது செய்து தண்டிக்க முடியுமா?

ராஜீவ் செய்த செயல்களின் மீதான வெறுப்பின் சீமான் அப்படி பேசினார் என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமே தவிர கொலை குற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கு அவரது பேச்சு மட்டுமே போதுமா என்றால் போதாது என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும்.

இப்படி கேள்வி கேட்பதின் மூலமாக காங்கிரஸ் கட்சி தன்னை மீண்டும் மீண்டும் குற்றவாளிக் கூண்டில் தன்னையே நிறுத்திக் கொள்கிறது.

நெல்லை கண்ணனை கைது செய்திருப்பதற்கும் ராஜீவ் கொலைக்கும் என்ன தொடர்பு.?

கே எஸ் அழகிரி போன்றவர்கள் காங்கிரசை வளர்க்க இன்னும் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top