Home தமிழக அரசியல் பாம்பன் சுவாமிகள் கருவறை சமாதி; வழக்கு நடந்தால் சமாதியை மூட வேண்டுமா?

பாம்பன் சுவாமிகள் கருவறை சமாதி; வழக்கு நடந்தால் சமாதியை மூட வேண்டுமா?

பாம்பன் சுவாமிகள் கருவறை சமாதி; வழக்கு நடந்தால் சமாதியை மூட வேண்டுமா?
www.marvelmurugan.com

திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கருவறை சமாதி கடந்த
33 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்தது என்பது வருத்தற்குரிய செய்தி.\
அதற்கு நீதிமன்ற வழக்குகள் காரணம் என்பது கூடுதல் வருத்தம்.
காரணம் அதை நிறுவியவர் ஒரு தமிழர்- முருக பக்தர்
பாம்பன் கிராமத்தில் பிறந்ததால் அவர் பாம்பன் சுவாமிகள்
1850 ல் பிறந்து 1929 ல் சித்தியடைந்த அவர் இயற் பெயர் அப்பாவு
தந்தை பெயர் சாத்தப்ப பிள்ளை – மானசீக குருவாக
அருணகிரி நாதரை ஏற்றுக் கொண்டதால் – சேதுமாதவ அய்யர்
அவருக்கு முருகனின் சடாக்ஷர மந்திரம் கற்பிக்கிறார்

திருமணமாகி ஒரு மகன் இரண்டு மகள்கள்
1895 ல் சன்யாசம் பெற்று சென்னை வருகிறார்
குமரகுருதாச சுவாமியாகிறார்
6666 பாடல்கள் 1000 முருகன் பெயர்கள்
சண்முக கவசம்- பஞ்சாமிர்த வர்ணம் என்று
அவரது படைப்புகள் புகழ் பெறுகின்றன
வேலும் மயிலும் துணை என்பது மந்திரம் ஆகிறது
மகா தேஜோ மண்டலம் என்ற சபை துவக்கம்
அவரது சமாதி அவர் நிர்மாணித்த இரண்டரை ஏக்கர்
நிலத்திலேயே அமைகிறது.

அவரது சமாதி கடந்த 33 ஆண்டுகளாக
இந்து அறநிலையத்துறை வசம் இருந்தது.
இப்போது தீர்ப்பு வந்து கருவறை திறந்து
பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து விடப் பட்டிருக்கிறது.
தனி நீதிபதி ஒருவரின் தீர்ப்பால் திறந்துவிடப் பட்ட
சமாதியை இரண்டு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை
போட்டதால் மீண்டும் மூடம் சூழ்நிலை உருவாகி உள்ளது.
பிரச்னை பக்தர் சங்கம் வசம் சமாதி இருக்க வேண்டுமா?
அல்லது அறநிலையத் துறை வசம் இருக்க வேண்டுமா? என்பதே
யார் வசம் இருந்தாலும் சமாதி திறக்கப்பட்டு
பக்தர்கள் வழிபட மரியாதை செய்ய என்ன தடை?

சிலரின் நோக்கம் பாம்பன் சுவாமிகளின் சமாதி
வழிபடும் தலமாக ஆகி விடக் கூடாது என்பதாக இருந்தால்
அதற்கு நீதிமன்றம் ஒத்துப் போக வேண்டுமா ?
விரைவில் இது தொடர்பாக நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம்
முருகனின் புகழ் பாடும் எவரும் அருள் பெற்றவர் ஆவர்
மீண்டும் அறநிலையத்துறை வம்புக்கு வராமல்
பக்தர்களை வழிபட அனுமதிக்கட்டும்.
பக்தர் சபை வெளிப்படையான ஊழலற்ற
நிர்வாகத்துடன் பக்தியை பரப்பட்டும்.
சுவாமிகள் ஓரிறையை நம்பியவர்
அந்த ஓரிறை சிவன் – சிவன் அம்சம் முருகன்
வேறு சாதி பாகுபாட்டு கொள்கைகளை அவர்
பரப்பியதாக தெரியவில்லை. அதனாலேயே
அவர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் வழிபாட்டிற்கும் உரியவர் ஆகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here