Home தமிழக அரசியல் வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு மட்டும்தான் வெளிமாநிலத்தவரின் வேட்டைக்காடா?

வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு மட்டும்தான் வெளிமாநிலத்தவரின் வேட்டைக்காடா?

வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு மட்டும்தான் வெளிமாநிலத்தவரின் வேட்டைக்காடா?
unemployment-in-tamilnadu

தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தொண்ணூறு லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்துக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாகிக் கொடுக்க தமிழக அரசுக்கு மனமில்லை.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்காக நேரடித் தேர்வு அண்ணா பல்கலை கழகம் மூலமாக நடத்தப்பட்டது.

எழுத்துத் தேர்வு நேர்முக தேர்வு மூலம் உதவி மின் பொறியாளர்களாக 300 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். இவர்களில் 39 பேர் கர்நாடகம், ஆந்திரா, கேரளா, உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதைப்போல் ஒரு அக்கிரமம் இருக்க முடியுமா?

இதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களுக்குத்தான் அரசுப் பணி என்று சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே அது தமிழக அரசுக்கு தெரியுமா தெரியாதா? 

ஏன் அதேபோல் தமிழ்நாட்டிலும் ஒரு சட்டம் இயற்றிக் கொள்ள முடியாதா?

வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு மட்டும்தான் வெளிமாநிலத்தவரின் வேட்டைக் காடா?

தமிழர்களுக்கு வெளி மாநிலங்களில் வேலைவாய்ப்பு கொடுத்தால் மற்றவர்களுக்கு இங்கே வேலைவாய்ப்பு கொடுக்கலாம். தவறில்லை. ஆனால் அதிலும் ஒரு வரையறை இருக்க வேண்டும்.

அதேபோல் எல்லா மாநிலங்களும் ஒரு வரையறை ஏற்படுத்தில் கொண்டால் அதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இருக்காது.

இது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலர் கண்டனம் செய்திருக்கிறார்கள்.

ஆளும் கட்சி என்ன சொல்கிறது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here