Home தமிழக அரசியல் தலித் அர்ச்சகரை ஏற்றுக் கொண்ட திருச்சி புத்தூர் கிராமம் !!!

தலித் அர்ச்சகரை ஏற்றுக் கொண்ட திருச்சி புத்தூர் கிராமம் !!!

தலித் அர்ச்சகரை ஏற்றுக் கொண்ட திருச்சி புத்தூர் கிராமம் !!!
archagargal

கலைஞர் கொண்டு வந்த அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் வெற்றி பெறத் துவங்கி விட்டது.

திருச்சி புத்தூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் நாற்பதாண்டுகளாக பூட்டிக் கிடக்கிறது.    நாயுடு , வெள்ளாளர், முத்தரையர் ரெட்டி சாதி மக்களை அதிகமாக கொண்ட ஊரில் ய யார் இந்த கோவிலை நிர்வகிப்பது என்பதில் தகராறு.

அறநிலையத்துறை  யின்  கீழ் இந்த கோவில் இருக்கிறது.

கலைஞர் திட்டத்தில் ஓராண்டு சான்றிதழ்  பயிற்சி பெற்ற  206  பேரில் கரியமாணிக்கம் ஊரை சேர்ந்த தலித் இளைஞர் சிவசங்கரனும் ஒருவர்.    பட்டதாரி யான இவர் வேலையில்லாமல் இருந்து வந்தார்.

திருவரங்கம் கோவில் இணை ஆணையர் இவரை அழைத்து இந்த கோவிலில் மாதம் ரூபாய் முப்பதுக்கு வேலையில் அமர்த்தியிருக்கிறார் .

ஆறே மாதத்தில் உள்ளூர் இளைஞர்களையும் பெரியவர்களையும் சேர்த்துக் கொண்டு கோவிலை புதுப்பித்துக் கட்டியதுடன் நில்லாமல் குடமுழுக்கும் செய்திருக்கிறார்.

இடையில் இவர் தலித் என்று தெரிந்தவுடன் சிலர் இவரை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர்.   ஆனால் ஊரில் பெரும்பாலானவர்கள் இவர்க்கு ஆதரவு அளித்த துடன் அக்கம் பக்கத்து கிராம மக்களும் பெருமளவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டனர்.

பயிற்சி பெற்ற இதர 204  பேரையும்  தமிழக அரசு உடனே  அர்ச்சகர்கள் ஆக பணி அமர்த்துவதுடன்   தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும்.    அதில் தமிழ் அர்ச்சனைகள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்திய புத்தூர் இதர கிராமங்களுக்கும் பரவ வேண்டும்.

கோவிலில் தமிழ் பாசுரங்களை பாடுகிரார்களா என்று தெரிய வில்லை.

மாற்றங்கள் சிறிது சிறிதாக வாவது பரவட்டுமே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here