Home உலக அரசியல் குடி உரிமை தருவதில் ஈழத் தமிழர்களுக்கு வஞ்சகம்?

குடி உரிமை தருவதில் ஈழத் தமிழர்களுக்கு வஞ்சகம்?

குடி உரிமை தருவதில் ஈழத் தமிழர்களுக்கு வஞ்சகம்?
amitsha

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கலாகி உள்ளது.

அதில் பங்களா தேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து 31/012/2014க்கு முன் இந்துக்கள் என்பதற்காக அடித்து விரட்டப்பட்ட அகதிகளுக்கு இந்தியக் குடிஉரிமை வழங்குவதற்கு இந்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

உலகநாடுகள் எதிர்க்கும் என்பதால் கிறிஸ்தவர்களுக்கு உரிமை கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களுக்கு இந்த உரிமை இல்லை. ஏன் என்றால் அவர்கள் மதத்தின் காரணமாக அந்த நாடுகளில் ஒடுக்கப்படவில்லையாம்.

ஈழத் தமிழர்கள் தொண்ணூறு சதம் பேர் இந்துக்கள் என்றாலும் அவர்களை இந்திய அரசு இந்துக்களாக கருதியதில்லை. தமிழர்கள் என்ற அடையாளத்தை அவர்கள் வலியுறுத்துவதால் அவர்கள் இந்துக்கள் என்றாலும் இந்துக்களாக பாவிப்பதில்லை.

ஏன் இந்த பாரபட்சம்? இந்தியாவில் இருக்கிறோம் என்பதால் தமிழர்கள் தங்கள் முடிவுகளை எடுப்பதில் இருந்து ஏன்  தடுக்கப்பட வேண்டும்?

தமிழர்கள் தொடர்புடைய பிரச்னை என்றால் அதை தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்க வேண்டும். அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஆனால் இந்திய வெளியுறவுக் கொள்கையை டெல்லியில் இருக்கும் உயர் அதிகாரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் உயர்சாதி செல்வாக்கு  மிக்கவர்களாக இருப்பதால் சாமானியர்கள் சொல் அங்கே அரங்கேறுவதில்லை.

இன்றைக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஏன் குடிஉரிமை வழங்கக் கூடாது என்று திமுக டி அர் பாலு கேட்கும் போது மற்றவர்கள் ஆட்செபிக்கிரர்கள்.

சட்ட பூர்வ அனுமதி பெறாமல் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு குடி உரிமை  கொடுக்க முடியாது என்று அமைச்சர் பதில்  கூறுகிறார்.

பங்களாதேசத்தில் இருந்தும் பாகிஸ்தான ஆப்கானிஸ்தானில் இருந்தும் வந்தவர்கள் அனுமதி பெற்று குடி வந்தவர்களா? அதிலும் இந்துக்களுக்கு மட்டுமே இந்த சலுகை என்றால் நாம் மத சார்பற்ற நாடு என்ற நிலையில் இருந்து மாறி விட்டோமோ?

இந்த மசோதா நிறைவேறினால் இந்தியாவின் பிம்பம் ஒரு மத வெறி நாடாகிப்போகும். அது நடவாது என்று நம்புவோம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here