Connect with us

இந்தியாவின் தந்தை மோடியாம் – இந்தியர்களின் ஒட்டுக்களுக்காக டிரம்ப் வர்ணனை?

modi-trump

உலக அரசியல்

இந்தியாவின் தந்தை மோடியாம் – இந்தியர்களின் ஒட்டுக்களுக்காக டிரம்ப் வர்ணனை?

நமது பிரதமரை வெளிநாட்டு அதிபர் ஒருவர் அதிலும் பலம் வாய்ந்த அமெரிக்க அதிபர் புகழ்ந்தால் எந்த இந்தியனுக்கும் பெருமைதான் வரும். ஆனால் அந்த பெருமை டொனால்ட் டிரம்ப் நரேந்திரமோடியை இந்தியாவின் தந்தை என்று புகழ்ந்த போது வந்ததா என்றால் அது கேள்விக்குறிதான்.

தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் டிரம்பிற்கு இந்தியர்களின் நாற்பது லட்சம் வாக்குகள் மிக முக்கியம்.

அதுவும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் ஹூஸ்டனில் அம்பதாயிரம் இந்தியர்கள் கலந்து கொண்டு மோடிக்கு தெரிவித்த ஆதரவை கண்டபிறகு டிரம்பிற்கு இந்தியர்களின் வாக்கு மோடியிடம் இருக்கிறது என்ற உணர்வு வந்தேவிட்டது.

அதனால்தான் மோடி பயங்கரவாதத்தை காஷ்மீர் பிரச்னையை வெற்றிகரமாக எதிர்கொள்வார் என்று டிரம்ப் சான்று அளித்தார்.

இந்தியாவுடன் ஆன வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று குறிப்பிட்ட டிரம்ப் இதுவரை பிளவு பட்டு கிடந்த இந்தியாவை ஒன்றுபடுத் தியவர் மோடி என்று புகழாரம் சூட்டினரர்.

எல்லாம் பெருமைதான். ஆனால் இந்தியாவின் தந்தை மோடி என்றதைத்தான்  சீரணிக்க முடியவில்லை.

தேசத்தின் தந்தை காந்திக்கு முன் மோடியை ஒப்பிடலாமா? அது அவருக்கு செய்யும் அவமரியாதை இல்லையா?

மோடியின் தனித்துவம் பற்றி வேறு எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து பேசலாம். தவறு இல்லை. பிரம்மச்சரியம் காப்பவர். ஒழுக்கம் பேணுபவர். சொத்து சேர்க்காதவர். குடும்ப அரசியல் செய்யாதவர். அரசியலுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர். சாதனைகளை செய்ய துடிப்பவர். இதெல்லாம் நல்ல விடயங்கள்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரக். சனாதன தர்மத்தை தூக்கிப்பிடிப்பவர்.  பிராமணியத்தின் வேலையாள். கிறிஸ்தவ முஸ்லிம்களின் எதிரி. பெருமுதலாளிகளின் ஏஜென்ட். எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவதில் மூர்க்கமாக நிற்பவர். மொத்தத்தில் இட்லர், முசோலினி பாணி அதிகார வெறி பிடித்த தலைவர். இது எதிர்கட்சிகளின் விமர்சனம்.

இதில் எது சரி என்பதை இந்திய மக்கள் வாக்குப்போடும் சமயத்தில் தான் வெளிப்படுத்துவார்கள்.

இந்திய அரசியலில் டிரம்ப் தலையிடுவது சரிதானா?

உண்மையிலேயே மோடி இத்தகைய புகழ்ச்சிக்கு தகுதியானவராக வளர்ந்தால்  பொதுமேடை நிச்சயம் அகமகிழ்ந்து பாராட்டும். அந்த நாள் வருமா?

டிரம்ப் மீது எதிர்க்கட்சிகள் தேசத்துரோக குற்றச்சாட்டு வைத்திருக்கின்றன. (Impeachment) ஆம். தனது துணை அதிபரையே தேர்தலில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு. விசாரணை என்ன ஆகும் என்பது விரைவில் தெரியவரும்.

உண்மையிலேயே மோடி இந்தியாவின் தந்தை ஆகும் எண்ணம், தகுதி உள்ளவரா?

தேவைப்பட்டால் சங்கத்தை எதிர்ப்பாரா?

மகாத்மா காந்தி நல்ல இந்துவாக வாழ்ந்தார். ஒருபோதும் பிற மதங்களை வெறுத்ததில்லை. அதனாலேயே வெறி கொண்ட பார்ப்பனர் ஒருவர் அவரை கொலை செய்தார். அதை இன்றும்கூட பார்ப்பனர்கள் முழுவதுமாக கண்டிக்க வில்லை. இப்போது கூட காந்தியின் உருவபொம்மையை சுட்டு தங்கள் வெறியை காட்டிக் கொள்கிறார்களே?

அத்தகைய சக்திகளை மோடி கண்டிப்பாரா? அப்போது தெரியும்.

மோடி இந்தியாவின் தந்தையா? சங்கத்தின் வேலையாளா? என்பது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in உலக அரசியல்

To Top